Monisha
அமைச்சர்
- Joined
- Jan 17, 2018
- Messages
- 3,233
- Reaction score
- 58,772
ஹாய் மக்களே!
ஒரு வழியாய் VET முடிவுற்றது. உங்களின் பேராதரவால் மட்டுமே அது நிகழ்ந்தது என்றே சொல்ல வேண்டும். ஆம். உங்கள் கருத்து மட்டுமே என்னை அதன் முடிவை நோக்கி உந்தி தள்ளியது.
ஆதலால் ஒரு நன்றியுரையோடு நான் அவள் இல்லையை தொடங்குகிறேன்.
வாசகர்களுக்கு சிறு வேண்டுகோள். இந்த கதையை எந்தவித எதிர்பார்ப்புமின்றி படியுங்கள். VET போலவே இதுவும் உங்களை இந்த கவர்ந்திழுக்குமா என்பதை யாம் அறியோம்.
இந்த கதை முற்றிலும் வேறு மாதிரியான கதைகளம். உங்களுக்கான புது அனுபவமாய் இருக்கும். மற்றவை கதையில்...
***********
நிதர்சனம்
நடுநிசி இரவு!
சென்னை மாநகரமே இருளின் பிடியில் மூழ்கிக் கிடந்தது.
அகண்டு விரிந்த பெரிய சாலைகளில் அணிவகுத்து நின்ற போஸ்ட் கம்பங்கள் வெளிச்சத்தை பரப்பிக் கொண்டிருக்க, மாயஜாலமாய் அவ்வப் போது சில கனரக வாகனங்கள் விர்ரென அந்த சாலையில் பறந்துக் கொண்டிருந்தன.
இரவு நேரமென்பதால் கேட்பாரின்றி வாகனங்களெல்லாம் அதீத வேகத்தில் சென்றுக் கொண்டிருக்க, அந்த சாலையின் வழியே தன் கட்டுப்பாட்டை இழந்து வந்து கொண்டிருந்தது அந்த அதிநவீன பெஃரார்ரி கார்!
நிச்சயம் சில கோடிகளை அந்த கார் விழுங்கியிருக்கும்.
அத்தனை பிரம்மிப்பாய் அதன் முன்புறத் தோற்றம் இருக்க, பளபளத்து கொண்டிருந்தது அதன் சிவப்பு வர்ணம்.
அந்த காரின் ஓட்டம் அதிபயங்கரமாய் இருந்தது. தன் கட்டுப்பாட்டை மீறிக் கொண்டு செல்கிறது என்பது நன்றாகவே தெரிந்தது.
போக்கிடம் இல்லாமல் சாலையோரங்களில் படுத்துக்கிடந்தவர்களை எல்லாம் ஒரு நொடி அரண்டு போகச் செய்துவிட்டு அந்த கார் கடந்துச் செல்ல,
'இதெல்லாம் பணம் படைத்தவர்களுக்கு சகஜம்தானே!'
அவர்களின் மனோஎண்ணம்!
ஆம்! சகஜம்தான்.
ஆனால் அதன் ஓட்டமும் வேகமும் யாருடைய உயிரையோ காவு வாங்க காத்திருக்கிறது எனும் போது சகஜம்தான் என்று கடந்து சென்றுவிட முடியுமா?
எமனின் தூதுவனாய் வந்து கொண்டிருந்த அந்த காரின் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருந்தான் டேவிட் !
டேவிட் அந்தோனி.
பணக்கார மக்களின் தோற்றம்தான். இருபத்தைந்து வயதை தொட்டிருக்கும் என்றது அவனின் முகத்தோற்றம். சீரான தேகத்தோடு பளபளத்துக் கொண்டிருக்கும் அவனின் ஊதா நிற ஷர்ட்.
பவர் ஸ்டியரிங்கை திருப்பிக் கொண்டிருந்த அவன் கரங்களில் லூசாய் தொங்கிக் கொண்டிருந்த ரோலக்ஸ் வாட்ச்!
அவன் முகத்தின் நிறமும் சாயலும் அவனை அமுல் பேபி என்றுதான் சொல்ல வேண்டும். அந்த லேசான தாடிமட்டும் இல்லையென்றால்.
அந்த கார் அவன் கட்டுப்பாட்டில் இல்லை. அதனை கட்டுப்படுத்தும் நிலையிலும் அவன் இல்லை. மிதமிஞ்சிய போதை!
இத்தகைய சமயத்தில் காரை செலுத்துவது தவறென்று அவனுக்கு தெரிந்திருக்காதா என்ன?
ஆனால் அதை அவன் செய்தான். எரிமலையாய் குமுறிக் கொண்டிருந்த மனதிற்கு எதை செய்வது, எதை செய்யக் கூடாதென்ற விதிவிலக்கில்லை.
அதனால் ஏற்படும் மோசமான விளைவுகளை பற்றி அவன் மூளை அப்போதைக்கு யோசிக்கவும் இல்லை.
அவனுக்குள் கோப்பை கோப்பையாய் இறங்மியிருந்த விஸ்கியின் வேலை அது.
நல்லவனாயிருப்பது தவறா?
அவன் மனம் ஓயாமல் இந்த கேள்வியை எழுப்பிக் கொண்டிருந்தது. இன்று நேற்றல்ல. அவனுக்கு விவரம் தெரிந்த காலத்திலிருந்து!
ஆனால் இன்று அந்த எண்ணம் கொஞ்சம் அவனை அதீதமாய் பாதித்திருக்க, உலகத்தின் அந்த நிதர்சனம் அவனுக்கு இன்னும் பிடிப்படவேயில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
பணப்படைத்தவனாய் இருந்தால் நல்லவனாய் இருக்க கூடாது.
வியாபரியாய் இருந்தால்... அப்படி ஒரு சிந்தனையே வரக் கூடாது.
அதுவும் ஆளும் தொழிலதிபராய் இருந்துவிட்டால் நல்லவன் என்ற வார்த்தையே அவன் அகராதியில் இடம்பெற்றுவிடக் கூடாது.
அப்படி நல்லவனாய் இருக்க யத்தனித்தால் அடிமுட்டாள் என்று சொல்லிவிடுவார்கள். ஆழக் குழி தோண்டி புதைத்துவிடுவார்கள்.
அவன் தந்தை தாமஸ்அந்தோணி சொன்னது போல!
தமிழ் மொழியில் பிரசித்தி பெற்ற ஜே நெட்வொர்க்கின் எம்.டிதான் தாமஸ்!
உலகம் அறிந்த தமிழ் சேனல். முதியவர்களில் இருந்து சிறியவர்கள் வரை எல்லோருக்கும் அவரவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப சேனல்கள்.
ஜே நீயூஸ்,ஜே கிட்ஸ்,ஜே மூவிஸ், இப்படியாக பல.
அதனால்தான் வீட்டிற்கு ஒரு டீவி போதுவதில்லை.
பெருமளவில் லாபம் ஈட்டுக்கொண்டிருக்கும் அந்த சேனல்களை நிர்வகிக்கும் தாமஸின் ஒரே வாரிசுதான் டேவிட்.
கல்வி ஞானம் நிரம்பப் பெற்றவன்.
சிலமாதங்களுக்கு முன்புதான் ஜே நெட்வொர்க்கின் ஜே.எம் டியாக பொறுப்பேற்றுக் கொண்டான்.
அன்றிலிருந்து தொடங்கியது பிரச்சனை.
எல்லாவற்றிலும் அவன் கண்ணோட்டம் முற்றிலும் வேறாயிருந்தது.
தாமஸ் பொறுமையிழுந்து அன்று அவனிடம் இது குறித்து பேசினார்.
"இத பாரு டேவிட்... மீடியாங்கிற நீ நினைக்கிற மாதிரி இல்லை... இன்னும் நீ பார்க்க வேண்டியதும் கத்துக்க வேண்டியதும் நிறைய இருக்கு, அதுக்குள்ள நீ ரொம்ப பெரிய டெசிஷன்ஸ் எல்லாம் எடுக்க வேண்டாம்" என்றார் அதிகாரத்தொனியில்!
தந்தையின் வார்த்தை டேவிட்டை காயப்படுத்தியது. ஏற்கனவே அவனின் முடிவுகள் எல்லாம் ஏற்கப்படாமல் நிராகரிக்கப்பட்டு கொண்டுதான் இருந்தது. அவன் எது சொன்னாலும் அது சரிப்பட்டு வராது என தட்டுக்கழிக்கப்பட எதற்கு இந்த பதவி தமக்கு ?
அவனுக்குள் கோபமும் குமுறலும் பொங்கி கொண்டிருக்க, தனக்கு நிர்வாகத்திறமை இல்லையோ என்று சந்தேகத்தோடு தந்தையை நோக்கி,
"ஏன் டேட்? ... என்னதான் இஷு உங்களுக்கு... என் ஐடியாஸ் தாட்ஸ் க்ரியேட்டிவ்வா இல்லையா ? எதுவாயிருந்தாலும் நேரடியா சொல்லுங்க... நான் அதை அக்ஸ்பெட் பண்ணிக்கிறேன்" என்று அமர்த்தலாகவே கேட்டான்.
அவர் தயக்கத்தோடு தன் தாடையை தடவியபடி யோசிக்கலானார்.
டேவிட் மீண்டும் "சொல்லுங்க டேட்.. என்கிட்ட திறமை பத்தலயா? " என்று அழுத்தமாய் கேட்டான்
அவர் தன் யோசனையை விடுத்து நிமிர்வாய் அமர்ந்தவர்
"உன்கிட்ட புத்திசாலித்தனம் பத்தல டேவிட்" என்றார்.
"வாட்? " அதிர்வோடு பார்த்தான்.
"டேவிட்... உனக்கு மீடியாவோட பவர் என்னன்னு தெரியல... நம்ம வார்ல்ட் எவ்வளவு காம்பிட்டீட்டீவா மாறியிருக்குன்னு உனக்கு புரியல... நம்ம முதல் முதல்லா சேனல் ஆரம்பிக்கும் போது தமிழ்ல ஒரு இரண்டு சேனல் இருக்குமா? இன்னைக்கு மோர்தென் டூ ஹன்டிரன்ட் சேனல்ஸ்... இன்டிர்நேஷ்னல் சேனல்ஸ் எல்லாம் இந்தியாவில ஹிந்திக்கப்புறம் அடுத்ததா டார்க்கட் பண்ணி வர்றது தமிழ் லேங்குவேஜ்தான்... தெரியுமா? !" என்று கேட்டுவிட்டு மகனை கூர்ந்து அளவெடுத்தபடி பார்த்தார்.
டேவிட் பேக்கெட்டில் தன் கரங்களை நுழைத்தபடி "ஏன்னா பொழுதுபோக்கிற்கு தமிழ் மக்கள் அதிக முக்கியத்துவம் தருவாங்க... அதனால" என்று சொல்லி இயல்பாய் தோள்களை குலுக்கினான்.
"ரைட்... பட் மோர்தென் என்டர்டைன்மன்ட்... இட்ஸ் அ பொலிட்டிக்கல் பவர்... இட்ஸ் அ பிஸ்னஸ்... உலக சந்தையை தமிழ்நாட்டில கொண்டு வந்து நிறுத்திற பிஸ்னஸ்..." என்றார்.
"அப்போ மீடியா துறைங்கிறது மக்களுக்காக இல்ல... உலக சந்தையில இருக்கிற குப்பைகளை விற்கிறதுக்காக" இந்த வியாபார உலகின் மிகப் உண்மையை வெகு சாதாரணமாய் கேட்டுவிட்டான்.
அவர் உதட்டில் மெல்லிய புன்னகை இழையோடியது. "பரவாயில்லை டேவிட்... ஒரளவுக்கு புரிஞ்சிக்கிட்ட... பட் இது பத்தாது... இன்னும் நீ நிறைய தெரிஞ்சிக்க வேண்டியதிருக்கு" என்றார்.
அவன் முகமெல்லாம் கோபத்தால் சிவக்க தொடங்கியது.
அவன் கற்றக் கல்விக்கும் இவர் சொல்லும் விஷயங்களுக்கும் துளிக்கூட சம்பந்தமில்லை.
இப்படியான இருண்ட உலகம் எல்லாத்துறைகளில் இருக்கிறது. அதை மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டிய பொறுப்பில் இருப்பது மீடியாகக்கள்தான்.
ஆனால் மீடியாவே அப்படியொரு இருண்ட உலகின் பிரதிநிதியாய் செயல்ப்பட்டு கொண்டிருக்கிறது.
அதிர்ச்சியில் நின்றவனின் தோளில் கைப்போட்டபடி , "டேவிட்... இது ஒண்ணும் மக்கள் சேவை நிறுவனம் இல்ல... கார்ப்ரேட் கம்பனிஸோட கூடாரம்... எல்லோரும் எந்த மாதிரி உணவை சாப்பிடனும் ?.. என்ன படிப்பு படிக்கனும் ?... எந்த மாதிரி படங்களை பார்க்கனும்? .. என்ன ஸ்டைல்ல டிரெஸ் பன்னனும் ?... எப்ப சிரிக்கனும் ?... எப்ப அழனும்?... எந்த அரசியல்வாதி ஆட்சிக்கு வரனும் ?... எந்த அரசியல்வாதியை டம்மி பீஸாக்கனும்? .. எந்த நீயூஸை பெரிய நேஷ்னல் இஷுவாக்கனும் ?. எந்த நீயூஸை மக்கள் பார்வைக்கே வராம மறைக்கனும்னு? ..
இப்படி எல்லாத்தையும் டிசைட் பன்ற ரூலிங் பவரா நாம இருக்கனும்... நாம மட்டும் இருக்கனும்... அப்படி இருந்தா மட்டும்தான் இந்த காம்பட்டீட்டீவ் உலகத்தில நாம் நிற்க முடியும்..... அதைவிட்டுவிட்டு அறிவுப்பூர்வமான நிகழ்ச்சி நடத்திறேன்... மக்களுக்கு நல்லது செய்றேன்னு ஆரம்பிச்சா... இந்த கார்ப்ரேட் உலகம் நம்மல தூக்கி போட்டுட்டு போயிட்டே இருக்கும்... புரிஞ்சிக்கோ டேவிட்... இதான் பேஃக்ட்" என்றார்.
அந்த கசப்பான உண்மையை அவனால் இப்போதும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை
நம் சமுதாயத்தை நாமே குழித் தோண்டி புதைப்பதா ?
அவன் ஒரு நொடிக் கூட யோசிக்காமல் "ஸாரி டேட்... என்னால நீங்க சொல்றது எல்லாம் ஏத்துக்க முடியல... ஐ க்விட்" என்று சுருக்கமாய் சொல்லியவன் தன் தந்தையின் கரத்தை தோள் மீதிருந்து தட்டிவிட்டு அந்த அறையை விட்டு விறுவிறுவென வெளியேறினான்.
தாமஸ் அவனின் செயலில் கொஞ்சம் அரண்டு போனாலும் நிச்சயம் நிதர்சனத்தை புரிந்து தன்னிடம் திரும்பி வருவான் என எண்ணி அமைதியடைந்தார்.
கோபத்தில் புறப்பட்ட டேவிட் சென்ற பெராஃர்ரி கார் நின்றது ஒரு பெரிய பாரில்.
அவனின் மனம் ஆற்றமையால் வெதும்பிக் கொண்டிருந்தது.
அவன் சிறுவயதிலிருந்து படித்தது உதகைமண்டலத்தில் உள்ள ஒரு பெரிய கிறிஸ்துவப் பள்ளி. அதுவும் அங்கேயே தங்கி பயின்றான். அவனை பார்க்க எப்போதாவது அவன் தந்தை வருவார். அம்மாவோ சிறு வயதிலேயே விவாகரத்து கேட்டு பிரிந்து சென்றுவிட்டார். அதுவும் அவருக்கு சேர வேண்டிய ஜீவனாம்சம் எல்லாம் கணக்குப் போட்டு வாங்கிய பின்.
ஆனால் அவனை மட்டும் மறந்து தந்தையிடம் விட்டுச் சென்றுவிட அந்த கிரிஸ்த்துவ பள்ளியும் அங்கிருந்த சிஸ்டர்களுமே அவனுக்கு எல்லா உறவூகளுமாய் இருந்தனர்.
தாமஸிற்கு திருமணத்தின் மீதான பற்றுதல் அறுந்து போனது. மீண்டும் திருமணம் செய்து நஷ்டப்பட அவர் விரும்பவில்லை.
அதே நேரத்தில் பெண்களின் தொடர்பெல்லாம் இல்லாத உத்தமன் என்றும் இல்லை.
அதெல்லாம் தேவைக்கேற்பவும் விருப்பத்திற்கேற்பவும் ரகரகமாய் இருந்தது.
ஏனோ டேவிடிற்கு அதெல்லாம் பிடித்தம் இல்லை. லண்டனில் மேற்படிப்பு படிக்க சென்ற போது ப்ரீஸ்ட்டாகும் முயற்சியில் அவன் ஈடுபட்ட போது அவன் தந்தை உள்புகுந்து தடுத்துவிட்டார்.
அவனை விட்டால் அத்தனை சொத்திற்கும் யார் வாரிசாவது ? வேறுவழியில்லை. அவன் விரும்பினாலும் விரும்பாவிடிலும் அந்த மோசமான உலகிற்குள்தான் அவன் வாழ்க்கை.
இந்த உலகம் வஞ்சகமானது. சுயநலமானது. வியாபாரம் என்ற மாய விலங்கை மக்களின் கரங்களில் பூட்டி அவர்களே அறியாவண்ணம் அடிமைகளாக மாற்றியிருக்கிறது.
ஆனால் அவன் கற்றதெல்லாம் அந்த வியாபார உலகிற்கு பொருந்தாதவை.
பாரபட்சமின்றி எல்லோரிடத்திலும் அன்பு செலுத்த வேண்டும்.
எல்லோருக்கும் சேவை செய்ய வேண்டும்.
எந்த சூழ்நிலையிலும் யாருக்கும் தீங்கிழைக்க கூடாது.
ஒரு வழியாய் VET முடிவுற்றது. உங்களின் பேராதரவால் மட்டுமே அது நிகழ்ந்தது என்றே சொல்ல வேண்டும். ஆம். உங்கள் கருத்து மட்டுமே என்னை அதன் முடிவை நோக்கி உந்தி தள்ளியது.
ஆதலால் ஒரு நன்றியுரையோடு நான் அவள் இல்லையை தொடங்குகிறேன்.
வாசகர்களுக்கு சிறு வேண்டுகோள். இந்த கதையை எந்தவித எதிர்பார்ப்புமின்றி படியுங்கள். VET போலவே இதுவும் உங்களை இந்த கவர்ந்திழுக்குமா என்பதை யாம் அறியோம்.
இந்த கதை முற்றிலும் வேறு மாதிரியான கதைகளம். உங்களுக்கான புது அனுபவமாய் இருக்கும். மற்றவை கதையில்...
***********
நிதர்சனம்
நடுநிசி இரவு!
சென்னை மாநகரமே இருளின் பிடியில் மூழ்கிக் கிடந்தது.
அகண்டு விரிந்த பெரிய சாலைகளில் அணிவகுத்து நின்ற போஸ்ட் கம்பங்கள் வெளிச்சத்தை பரப்பிக் கொண்டிருக்க, மாயஜாலமாய் அவ்வப் போது சில கனரக வாகனங்கள் விர்ரென அந்த சாலையில் பறந்துக் கொண்டிருந்தன.
இரவு நேரமென்பதால் கேட்பாரின்றி வாகனங்களெல்லாம் அதீத வேகத்தில் சென்றுக் கொண்டிருக்க, அந்த சாலையின் வழியே தன் கட்டுப்பாட்டை இழந்து வந்து கொண்டிருந்தது அந்த அதிநவீன பெஃரார்ரி கார்!
நிச்சயம் சில கோடிகளை அந்த கார் விழுங்கியிருக்கும்.
அத்தனை பிரம்மிப்பாய் அதன் முன்புறத் தோற்றம் இருக்க, பளபளத்து கொண்டிருந்தது அதன் சிவப்பு வர்ணம்.
அந்த காரின் ஓட்டம் அதிபயங்கரமாய் இருந்தது. தன் கட்டுப்பாட்டை மீறிக் கொண்டு செல்கிறது என்பது நன்றாகவே தெரிந்தது.
போக்கிடம் இல்லாமல் சாலையோரங்களில் படுத்துக்கிடந்தவர்களை எல்லாம் ஒரு நொடி அரண்டு போகச் செய்துவிட்டு அந்த கார் கடந்துச் செல்ல,
'இதெல்லாம் பணம் படைத்தவர்களுக்கு சகஜம்தானே!'
அவர்களின் மனோஎண்ணம்!
ஆம்! சகஜம்தான்.
ஆனால் அதன் ஓட்டமும் வேகமும் யாருடைய உயிரையோ காவு வாங்க காத்திருக்கிறது எனும் போது சகஜம்தான் என்று கடந்து சென்றுவிட முடியுமா?
எமனின் தூதுவனாய் வந்து கொண்டிருந்த அந்த காரின் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருந்தான் டேவிட் !
டேவிட் அந்தோனி.
பணக்கார மக்களின் தோற்றம்தான். இருபத்தைந்து வயதை தொட்டிருக்கும் என்றது அவனின் முகத்தோற்றம். சீரான தேகத்தோடு பளபளத்துக் கொண்டிருக்கும் அவனின் ஊதா நிற ஷர்ட்.
பவர் ஸ்டியரிங்கை திருப்பிக் கொண்டிருந்த அவன் கரங்களில் லூசாய் தொங்கிக் கொண்டிருந்த ரோலக்ஸ் வாட்ச்!
அவன் முகத்தின் நிறமும் சாயலும் அவனை அமுல் பேபி என்றுதான் சொல்ல வேண்டும். அந்த லேசான தாடிமட்டும் இல்லையென்றால்.
அந்த கார் அவன் கட்டுப்பாட்டில் இல்லை. அதனை கட்டுப்படுத்தும் நிலையிலும் அவன் இல்லை. மிதமிஞ்சிய போதை!
இத்தகைய சமயத்தில் காரை செலுத்துவது தவறென்று அவனுக்கு தெரிந்திருக்காதா என்ன?
ஆனால் அதை அவன் செய்தான். எரிமலையாய் குமுறிக் கொண்டிருந்த மனதிற்கு எதை செய்வது, எதை செய்யக் கூடாதென்ற விதிவிலக்கில்லை.
அதனால் ஏற்படும் மோசமான விளைவுகளை பற்றி அவன் மூளை அப்போதைக்கு யோசிக்கவும் இல்லை.
அவனுக்குள் கோப்பை கோப்பையாய் இறங்மியிருந்த விஸ்கியின் வேலை அது.
நல்லவனாயிருப்பது தவறா?
அவன் மனம் ஓயாமல் இந்த கேள்வியை எழுப்பிக் கொண்டிருந்தது. இன்று நேற்றல்ல. அவனுக்கு விவரம் தெரிந்த காலத்திலிருந்து!
ஆனால் இன்று அந்த எண்ணம் கொஞ்சம் அவனை அதீதமாய் பாதித்திருக்க, உலகத்தின் அந்த நிதர்சனம் அவனுக்கு இன்னும் பிடிப்படவேயில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
பணப்படைத்தவனாய் இருந்தால் நல்லவனாய் இருக்க கூடாது.
வியாபரியாய் இருந்தால்... அப்படி ஒரு சிந்தனையே வரக் கூடாது.
அதுவும் ஆளும் தொழிலதிபராய் இருந்துவிட்டால் நல்லவன் என்ற வார்த்தையே அவன் அகராதியில் இடம்பெற்றுவிடக் கூடாது.
அப்படி நல்லவனாய் இருக்க யத்தனித்தால் அடிமுட்டாள் என்று சொல்லிவிடுவார்கள். ஆழக் குழி தோண்டி புதைத்துவிடுவார்கள்.
அவன் தந்தை தாமஸ்அந்தோணி சொன்னது போல!
தமிழ் மொழியில் பிரசித்தி பெற்ற ஜே நெட்வொர்க்கின் எம்.டிதான் தாமஸ்!
உலகம் அறிந்த தமிழ் சேனல். முதியவர்களில் இருந்து சிறியவர்கள் வரை எல்லோருக்கும் அவரவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப சேனல்கள்.
ஜே நீயூஸ்,ஜே கிட்ஸ்,ஜே மூவிஸ், இப்படியாக பல.
அதனால்தான் வீட்டிற்கு ஒரு டீவி போதுவதில்லை.
பெருமளவில் லாபம் ஈட்டுக்கொண்டிருக்கும் அந்த சேனல்களை நிர்வகிக்கும் தாமஸின் ஒரே வாரிசுதான் டேவிட்.
கல்வி ஞானம் நிரம்பப் பெற்றவன்.
சிலமாதங்களுக்கு முன்புதான் ஜே நெட்வொர்க்கின் ஜே.எம் டியாக பொறுப்பேற்றுக் கொண்டான்.
அன்றிலிருந்து தொடங்கியது பிரச்சனை.
எல்லாவற்றிலும் அவன் கண்ணோட்டம் முற்றிலும் வேறாயிருந்தது.
தாமஸ் பொறுமையிழுந்து அன்று அவனிடம் இது குறித்து பேசினார்.
"இத பாரு டேவிட்... மீடியாங்கிற நீ நினைக்கிற மாதிரி இல்லை... இன்னும் நீ பார்க்க வேண்டியதும் கத்துக்க வேண்டியதும் நிறைய இருக்கு, அதுக்குள்ள நீ ரொம்ப பெரிய டெசிஷன்ஸ் எல்லாம் எடுக்க வேண்டாம்" என்றார் அதிகாரத்தொனியில்!
தந்தையின் வார்த்தை டேவிட்டை காயப்படுத்தியது. ஏற்கனவே அவனின் முடிவுகள் எல்லாம் ஏற்கப்படாமல் நிராகரிக்கப்பட்டு கொண்டுதான் இருந்தது. அவன் எது சொன்னாலும் அது சரிப்பட்டு வராது என தட்டுக்கழிக்கப்பட எதற்கு இந்த பதவி தமக்கு ?
அவனுக்குள் கோபமும் குமுறலும் பொங்கி கொண்டிருக்க, தனக்கு நிர்வாகத்திறமை இல்லையோ என்று சந்தேகத்தோடு தந்தையை நோக்கி,
"ஏன் டேட்? ... என்னதான் இஷு உங்களுக்கு... என் ஐடியாஸ் தாட்ஸ் க்ரியேட்டிவ்வா இல்லையா ? எதுவாயிருந்தாலும் நேரடியா சொல்லுங்க... நான் அதை அக்ஸ்பெட் பண்ணிக்கிறேன்" என்று அமர்த்தலாகவே கேட்டான்.
அவர் தயக்கத்தோடு தன் தாடையை தடவியபடி யோசிக்கலானார்.
டேவிட் மீண்டும் "சொல்லுங்க டேட்.. என்கிட்ட திறமை பத்தலயா? " என்று அழுத்தமாய் கேட்டான்
அவர் தன் யோசனையை விடுத்து நிமிர்வாய் அமர்ந்தவர்
"உன்கிட்ட புத்திசாலித்தனம் பத்தல டேவிட்" என்றார்.
"வாட்? " அதிர்வோடு பார்த்தான்.
"டேவிட்... உனக்கு மீடியாவோட பவர் என்னன்னு தெரியல... நம்ம வார்ல்ட் எவ்வளவு காம்பிட்டீட்டீவா மாறியிருக்குன்னு உனக்கு புரியல... நம்ம முதல் முதல்லா சேனல் ஆரம்பிக்கும் போது தமிழ்ல ஒரு இரண்டு சேனல் இருக்குமா? இன்னைக்கு மோர்தென் டூ ஹன்டிரன்ட் சேனல்ஸ்... இன்டிர்நேஷ்னல் சேனல்ஸ் எல்லாம் இந்தியாவில ஹிந்திக்கப்புறம் அடுத்ததா டார்க்கட் பண்ணி வர்றது தமிழ் லேங்குவேஜ்தான்... தெரியுமா? !" என்று கேட்டுவிட்டு மகனை கூர்ந்து அளவெடுத்தபடி பார்த்தார்.
டேவிட் பேக்கெட்டில் தன் கரங்களை நுழைத்தபடி "ஏன்னா பொழுதுபோக்கிற்கு தமிழ் மக்கள் அதிக முக்கியத்துவம் தருவாங்க... அதனால" என்று சொல்லி இயல்பாய் தோள்களை குலுக்கினான்.
"ரைட்... பட் மோர்தென் என்டர்டைன்மன்ட்... இட்ஸ் அ பொலிட்டிக்கல் பவர்... இட்ஸ் அ பிஸ்னஸ்... உலக சந்தையை தமிழ்நாட்டில கொண்டு வந்து நிறுத்திற பிஸ்னஸ்..." என்றார்.
"அப்போ மீடியா துறைங்கிறது மக்களுக்காக இல்ல... உலக சந்தையில இருக்கிற குப்பைகளை விற்கிறதுக்காக" இந்த வியாபார உலகின் மிகப் உண்மையை வெகு சாதாரணமாய் கேட்டுவிட்டான்.
அவர் உதட்டில் மெல்லிய புன்னகை இழையோடியது. "பரவாயில்லை டேவிட்... ஒரளவுக்கு புரிஞ்சிக்கிட்ட... பட் இது பத்தாது... இன்னும் நீ நிறைய தெரிஞ்சிக்க வேண்டியதிருக்கு" என்றார்.
அவன் முகமெல்லாம் கோபத்தால் சிவக்க தொடங்கியது.
அவன் கற்றக் கல்விக்கும் இவர் சொல்லும் விஷயங்களுக்கும் துளிக்கூட சம்பந்தமில்லை.
இப்படியான இருண்ட உலகம் எல்லாத்துறைகளில் இருக்கிறது. அதை மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டிய பொறுப்பில் இருப்பது மீடியாகக்கள்தான்.
ஆனால் மீடியாவே அப்படியொரு இருண்ட உலகின் பிரதிநிதியாய் செயல்ப்பட்டு கொண்டிருக்கிறது.
அதிர்ச்சியில் நின்றவனின் தோளில் கைப்போட்டபடி , "டேவிட்... இது ஒண்ணும் மக்கள் சேவை நிறுவனம் இல்ல... கார்ப்ரேட் கம்பனிஸோட கூடாரம்... எல்லோரும் எந்த மாதிரி உணவை சாப்பிடனும் ?.. என்ன படிப்பு படிக்கனும் ?... எந்த மாதிரி படங்களை பார்க்கனும்? .. என்ன ஸ்டைல்ல டிரெஸ் பன்னனும் ?... எப்ப சிரிக்கனும் ?... எப்ப அழனும்?... எந்த அரசியல்வாதி ஆட்சிக்கு வரனும் ?... எந்த அரசியல்வாதியை டம்மி பீஸாக்கனும்? .. எந்த நீயூஸை பெரிய நேஷ்னல் இஷுவாக்கனும் ?. எந்த நீயூஸை மக்கள் பார்வைக்கே வராம மறைக்கனும்னு? ..
இப்படி எல்லாத்தையும் டிசைட் பன்ற ரூலிங் பவரா நாம இருக்கனும்... நாம மட்டும் இருக்கனும்... அப்படி இருந்தா மட்டும்தான் இந்த காம்பட்டீட்டீவ் உலகத்தில நாம் நிற்க முடியும்..... அதைவிட்டுவிட்டு அறிவுப்பூர்வமான நிகழ்ச்சி நடத்திறேன்... மக்களுக்கு நல்லது செய்றேன்னு ஆரம்பிச்சா... இந்த கார்ப்ரேட் உலகம் நம்மல தூக்கி போட்டுட்டு போயிட்டே இருக்கும்... புரிஞ்சிக்கோ டேவிட்... இதான் பேஃக்ட்" என்றார்.
அந்த கசப்பான உண்மையை அவனால் இப்போதும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை
நம் சமுதாயத்தை நாமே குழித் தோண்டி புதைப்பதா ?
அவன் ஒரு நொடிக் கூட யோசிக்காமல் "ஸாரி டேட்... என்னால நீங்க சொல்றது எல்லாம் ஏத்துக்க முடியல... ஐ க்விட்" என்று சுருக்கமாய் சொல்லியவன் தன் தந்தையின் கரத்தை தோள் மீதிருந்து தட்டிவிட்டு அந்த அறையை விட்டு விறுவிறுவென வெளியேறினான்.
தாமஸ் அவனின் செயலில் கொஞ்சம் அரண்டு போனாலும் நிச்சயம் நிதர்சனத்தை புரிந்து தன்னிடம் திரும்பி வருவான் என எண்ணி அமைதியடைந்தார்.
கோபத்தில் புறப்பட்ட டேவிட் சென்ற பெராஃர்ரி கார் நின்றது ஒரு பெரிய பாரில்.
அவனின் மனம் ஆற்றமையால் வெதும்பிக் கொண்டிருந்தது.
அவன் சிறுவயதிலிருந்து படித்தது உதகைமண்டலத்தில் உள்ள ஒரு பெரிய கிறிஸ்துவப் பள்ளி. அதுவும் அங்கேயே தங்கி பயின்றான். அவனை பார்க்க எப்போதாவது அவன் தந்தை வருவார். அம்மாவோ சிறு வயதிலேயே விவாகரத்து கேட்டு பிரிந்து சென்றுவிட்டார். அதுவும் அவருக்கு சேர வேண்டிய ஜீவனாம்சம் எல்லாம் கணக்குப் போட்டு வாங்கிய பின்.
ஆனால் அவனை மட்டும் மறந்து தந்தையிடம் விட்டுச் சென்றுவிட அந்த கிரிஸ்த்துவ பள்ளியும் அங்கிருந்த சிஸ்டர்களுமே அவனுக்கு எல்லா உறவூகளுமாய் இருந்தனர்.
தாமஸிற்கு திருமணத்தின் மீதான பற்றுதல் அறுந்து போனது. மீண்டும் திருமணம் செய்து நஷ்டப்பட அவர் விரும்பவில்லை.
அதே நேரத்தில் பெண்களின் தொடர்பெல்லாம் இல்லாத உத்தமன் என்றும் இல்லை.
அதெல்லாம் தேவைக்கேற்பவும் விருப்பத்திற்கேற்பவும் ரகரகமாய் இருந்தது.
ஏனோ டேவிடிற்கு அதெல்லாம் பிடித்தம் இல்லை. லண்டனில் மேற்படிப்பு படிக்க சென்ற போது ப்ரீஸ்ட்டாகும் முயற்சியில் அவன் ஈடுபட்ட போது அவன் தந்தை உள்புகுந்து தடுத்துவிட்டார்.
அவனை விட்டால் அத்தனை சொத்திற்கும் யார் வாரிசாவது ? வேறுவழியில்லை. அவன் விரும்பினாலும் விரும்பாவிடிலும் அந்த மோசமான உலகிற்குள்தான் அவன் வாழ்க்கை.
இந்த உலகம் வஞ்சகமானது. சுயநலமானது. வியாபாரம் என்ற மாய விலங்கை மக்களின் கரங்களில் பூட்டி அவர்களே அறியாவண்ணம் அடிமைகளாக மாற்றியிருக்கிறது.
ஆனால் அவன் கற்றதெல்லாம் அந்த வியாபார உலகிற்கு பொருந்தாதவை.
பாரபட்சமின்றி எல்லோரிடத்திலும் அன்பு செலுத்த வேண்டும்.
எல்லோருக்கும் சேவை செய்ய வேண்டும்.
எந்த சூழ்நிலையிலும் யாருக்கும் தீங்கிழைக்க கூடாது.