Monisha
அமைச்சர்
- Joined
- Jan 17, 2018
- Messages
- 3,233
- Reaction score
- 58,772
இசை நிகழ்ச்சி
அவன் செவியில் ஓயாமல் அந்த கவிதை ஒலித்துக் கொண்டே இருந்தது. அதுவும் அவளின் குரலில்...
பாரதியின் விரல்நுனியில் உதித்த வரியின் மாயமா அல்லது தேமதுரமாய் இனித்த அவளின் குரலின் மாயமா? !
ஒரு பெண்ணை பார்த்து ஈர்ப்பு வருவது இயல்பு. அவளின் குரலிலும் பேசிய விதத்திலும் கூட ஈர்ப்பு வருமா!
அப்போது அவனுக்கு வள்ளுவனின் குரல் ஒன்று நினைவுக்கு வந்தது.
"கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள."
ஒரு பெண்ணால் மட்டுமே ஐந்து புலன்களுக்கும் இன்பம் நல்க முடியுமாம்.
வள்ளுவர் அனுபவமபூர்வமாய் உணர்ந்தே எழுதியிருப்பார் போல.
கடைசியாய் அவள் சொன்னதை நினைவுப்படுத்திப் பார்த்தான்.
'உங்களை மாதிரி ஒருத்தரா இருந்தா காதலிக்கலாமே!'
அந்த வார்த்தைகள்தான் அவளை பார்க்க வேண்டுமென்ற ஆவலை தூண்டிற்று. அவள் அழைத்த எண்ணை வைத்தே அவளிடம் பேசிவிடலாம். மனம் ஏனோ அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. அது
தவறும் கூட. ஆனால் அந்த குரலையும் அவள் பேசியதையும் மறக்கவும் முடியவில்லை.
அவன் அலுவலகம் முழுக்க 'சாக்ஷி சாக்ஷி சாக்ஷி' என்று அவள் பெயரே ஒலித்துக் கொண்டிருந்தது.
ரேடியோ ஸ்கை அலுவலகத்தின் அப்போதைய ஹாட் டாபிக் சாக்ஷிதான் !
அந்தளவுக்கு மகிழ் தன் அலுவலகம் முழுக்க அவளை பற்றியே பேசினான்.
அவளை பார்க்க வேண்டும். மீண்டும் அவள் குரலைக் கேட்க வேண்டுமென்ற ஆர்வம் நாளடைவில் அவனுக்கு அதிகரித்துக் கொண்டே போனது.
ஒவ்வொரு முறை அவன் நிகழ்ச்சி தொகுக்கும் போதும், மீண்டும் அவள் தன்னிடம் பேசமாட்டாளா? என்ற எதிர்பார்போடு தொடங்கி ஏமாற்றமாய் முடிந்தது அவனுக்கு.
அனுபவத்திராத பார்க்காத விஷயங்களிலில்தான் ஈர்ப்பும் ஆர்வமும் அதிகம் என்ற அவனின் வார்த்தையே அவனுக்குள் எதிரொலித்தது.
அவளை பார்த்துவிட்டால் இந்த ஈர்ப்பும் ஆர்வமும் அடங்கிவிடலாம் என்று தோன்றியது.
அதே நேரத்தில் அவனை சுற்றியிருந்த நண்பர்களும் அந்த முடிவிற்கு தூண்டுதலாய் அமைந்திருந்தனர்.
கொஞ்சம் ரசனையோடும் அளவிடமுடியாத கற்பனைகளோடும் அவளை தேடும் முயற்சியில் தீவிரமாய் இறங்கினான் மகிழ்.
சென்னையில் நிகழும் அத்தனை கச்சேரிகளின் பட்டியலும் ரேடியோ ஸ்கையில் குவிந்திருந்தது.
சுலபமான தேடலாக இல்லையெனினும் அது சுவராஸ்மாகத்தான் இருந்தது.
அவனுடைய அலுவலகத் தோழி ஷாலினி நேரடியாக இதுப்பற்றி அவனிடம் கேட்டுவிட்டாள்.
"யாரு என்னன்னு தெரியாத அந்த பொண்ணுக்காக இவ்வளவு சீன் தேவையா? ஜஸ்ட் லீவ் திஸ் மேட்டர்.. மகிழ்" என்றாள் ஷாலினி.
"முடியல ஷாலு... அவ கிட்ட நான் பேசி ஒன் மன்த் ஆயிடுச்சு... அதுக்கப்புறம் எவ்வளோ ஷோஸ்ல எத்தனையோ நேயர்கள்கிட்ட பேசிட்டேன்... ஆனா அவ வாய்ஸ்... அவ கூட பேசினதை என்னால மறக்கவே முடியல... ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுது... அவ வாய்ஸ்ல ஏதோ மேஜிக் இருக்குனு தோணுது" என்றவனின் முகத்தில் வெளிப்பட்ட தவிப்பை ஷாலினி உற்றுக் கவனித்தாள்.
அவன் அவளை பற்றிப் பேசும் போதெல்லாம் ஏதோ விளையாட்டுத்தனமாக பேசிக் கொண்டிருக்கிறான் என்றே எண்ணியிருந்தாள்.
ஆனால் இத்தனை ஆழமாய் அவனுக்குள் அவள் பதிந்திருப்பாள் என்பதை ஷாலினியால் நம்பவேமுடியவில்லை.
அருகாமையில் இருந்தும் தான் அவன் மனதை ஈர்க்காமல் போனதன் காரணம் என்ன?
இந்த கேள்வி அவள் மனதை துளைத்தெடுத்தது.
மகிழை பார்த்த முதல் நாளிலயே ஷாலினிக்கு அவன் மீது ஈர்ப்பு ஏற்பட்டிருந்தது.
அவன் பேசினாலோ கேட்டுக் கொண்டே இருக்கலாம் என்ற வசீகரம்.
என்னதான் ஒருவன் ஆண் அழகனாய் இருந்தாலும் அவனோடு பொருந்தும் ஆண்மை நிறைந்த குரல்நயம் அவனை இன்னும் ஆளுமையோடு காட்டுமே !
அதோடு அல்லாமல் அவன் கண்ணியமாய் பழகும் விதமும் கலகலப்பாய் பேசும் விதமும் என எல்லாப் பெண்களையும் அவன் கவரும் குணவியல்பு கொண்டவன்.
அந்த அலுவலகத்தின் கண்ணன் என்று கூட சொல்லலாம். அங்கே இருந்த எல்லாப் பெண்களுக்கும் அவன் மீது ஈர்ப்பு!
ஆனால் அவன் பழகியவிதத்தில் ஷாலினிக்கு எப்போது அவன் மீதான ஈர்ப்பு காதலாய் உருவெடுத்தது என்று அவளுக்தே தெரிந்திருக்கவில்லை.
ஆனால் ஏனோ காதலை சொல்ல முடியாமல் தயங்கியிருந்தாள். அவனுடனான நட்புறவு பறிப் போய்விடுமோ என்ற பயம்.
ஆனால் ஒரே ஒரு முறை பேசிவிட்டு யாரென்றே தெரியாத பெண் அவள் காதலனை தட்டிப் பறிக்கப் பார்க்கிறாள்.
பார்க்காமலே சாக்ஷி என்ற பெண்ணின் மீதும் அந்த பெயரின் மீதும் அதீத வெறுப்பு ஏற்பட்டிருந்தது ஷாலினிக்கு!
இத்தனை விதமான யோசனையில் ஆழ்ந்திருந்த ஷாலினியின் தோள்களை பிடித்து உலுக்கினான் மகிழ்.
"என்னாச்சு ஷாலு ?"
அவனை நிமிர்ந்து பார்த்து சுதாரித்தவள் "நத்திங்.." என்றாள்.
யோசனையோடு அவளை பார்த்தவன் பின் இயல்பு நிலைக்கு திரும்பி
அவளிடம் தன் கையிலிருந்த டிக்ட்ஸை காண்பித்தான்.
"என்ன மகிழ் இது ?" என்று வியப்பாக அவள் கேட்க
"கச்சேரி டிக்ட்ஸ்... ஆனிதா ராமக்கிருஷ்ணன் கச்சேரி... சாக்ஷின்னு ஒரு பொண்ணு இந்த கச்சேரில வீணை வாசிக்கிறதா நம்ம சரண் விசாரிச்சி டிக்ட்ஸ் வாங்கிட்டு வந்து தந்தான்"
ஷாலுவிற்கு இதை கேட்டு இடியே விழுந்தது தலையில். சரண் மட்டும் இப்போது கையில் சிக்கினால் அதோகதிதான். மனதிற்குள்ளேயே அவனை வறுத்து எடுத்தபடி மீண்டும் மௌனமானாள்.
"ஏ ஷாலு... என்ன பிரச்சனை உனக்கு... நான் பேசிட்டே இருக்கேன்... நீ பாட்டுக்கு பேட்டரி காலியான போஃன் மாதிரி தானே ஆஃபாயிடிற... என்ன விஷயமாயிருந்தாலும் வாயை திறந்த சொல்லித் தொலை... எதுக்கு இப்படி மைன்ட் வாய்லயே பேசிட்டிருக்க ?!" அவள் முகம் பாவனையாலும் மௌனத்தாலும் எரிச்சலாக கேட்டவனை அப்பாவியை பார்த்தவள்,
"அதில்ல மகிழ் ? நீ தேடிற சாக்ஷி அந்த பொண்ணாதான் இருக்குமான்னு யோசிச்சிட்டிரூந்தேன்"
"அதை வாய் திறந்த சொல்லி இருக்கலாம் இல்ல... இதுல என்ன உனக்கு மைன்ட் வாய்ஸ் ?" என்றவன் சற்று நிதானித்து "நீ கேட்கிறதிலயும் பாயின்ட் இருக்கு... ஆனா நான் அந்த பொண்ணுக்கிட்ட பேசினா கண்டிப்பா கண்டுபிடிச்சிருவேன்... அவ வாய்ஸ் நல்லா எனக்கு ஞாபகம் இருக்கு... " என்று அவன் சொல்லி முடிக்க அவள் உள்ளுக்குள் காயப்பட்டு நின்றாள்.
ஆனால் அவனிடம் அதனை காண்பித்து கொள்ளவில்லை.
பொறுமையாய் அவன் முகத்தை ஏறிட்டவள் "நான் கேட்கிறனேன்னு தப்பா எடுத்துக்காதே மகிழ்... நீ அவளை லவ் பன்றியா ?!" என்றதும்
மகிழ் இயல்பாய் புன்னகையித்து
"சே... இல்ல... ஜஸ்ட் ஒரு க்யூர்யாஸிட்டி... அவளை பார்க்கனும் அவ்வளவுதான்" என்றான்.
"அவ்வளவுதானா ??"
"ஹ்ம்ம்ம்" என்று தோள்களை குலுக்கினான். ஷாலினியின் மனதின் பாரம் முற்றிலுமாய் இறங்கியது.
அவன் தெளிவாகத்தான் இருக்கிறான்.
தான்தான் குழம்புகிறோம் என்று எண்ணியவள் நிம்மதியடைந்து "ஒகே... போய் பார்த்துட்டு வா... குட் லக்" என்றாள்.
"என்ன விளையாடிறியா? நீயும் என் கூட வர" என்றான் அதிகாரமாக!
"நானா?" என்று விழிகள் அகல விரிய ஷாலினி பார்க்க மகிழ் தீர்க்கமாய்
"எஸ்... நாளைக்கு ஈவினிங் பைஃவ் ஓ க்ளார்க்... உன் வீட்டிலயே வந்தே பிக்அப் பண்ணிக்கிறேன்... ரெடியா இரு" என்று சொல்லியபடி வெளியேறியவன் மீண்டும் கதவருகில் நின்று "ஷாலு மறந்திராதே ... நாளைக்கு ஈவனிங்" என்றான்.
"ஹ்ம்ம்" என்று ஆர்வமாய் தலையை அசைத்தாள்.
அவனுடன் வெளியே செல்லப் போகிறோம் என்று அவள் மனம் குதுகலித்திருந்தது.
நாளைய அந்த சந்திப்பு அவள் மகிழ் மீது கொண்ட காதலின் ஆணிவேறையே அசைத்துப் பார்க்கும் என்று எதிர்பார்த்திருப்பாளா? !
********