ethirparatha kelvi?அவன் விரக்தியில் ஏதேனும் தவறாய் செய்து கொள்வானோ என்ற முன்னெச்சரிக்கை கொண்டே அவள் அப்படி நடந்து கொள்ள, எப்படியோ சாதுர்யமாய் சகோதிரியை சமாளித்துவிட்டு மகிழ்
சாரதா இல்லத்தை வந்தடைந்தான்.
அந்த இல்லமே சாக்ஷியின்
இறப்பால் சோகத்தில் மூழ்கியிருந்தது.
அவன் வேதனையோடும் வலியோடும் அந்த இல்லத்தை பார்வையிட்டபடி நடந்து வந்தான்.
அவன் வந்துக் கொண்டிருப்பதை மாயாவின் விழிகள் கண்டுக்கொள்ள, அவளுக்குள் அடக்கி வைத்திருந்த கோபமெல்லாம் ரௌத்திரமாய் எழ ஆரம்பித்தது.
அவனை நோக்கி சீற்றமாய் வந்தவள் அவனின் சட்டையை பிடித்து உலுக்கியபடி "சாக்ஷியை என்ன பண்ணிங்க மகிழ்? " என்று அழுகையோடு கேட்க,
அவன் அப்படியே அதிர்ந்து நின்றுவிட்டான்.
ஹாய் மக்களே,
போன அத்தியாயத்தில் உங்களின் கருத்துக்கும் ஆதரவிற்கும் என்னை உளமார்ந்த நன்றி.
எப்படி என்னவென்று புரியாத இந்த கதையின் ஓட்டம் மெல்ல மெல்ல உங்களுக்கு புலப்படும். கதாநாயகன் அல்லது நாயகிதான் கதையை நகர்த்தி செல்ல வேண்டுமா என்ன ?
இந்த கதைகளம் அதன் போக்கில் பயணிக்கும். நாமும் சேர்ந்து பயணிப்போம்.
அழுத்தமான சோகமான கதை என்று எண்ணாமல் இயல்புதன்மையோடு பயணிக்கும் கதை இது என்றெண்ணி படியுங்கள்.
இன்னும் இரண்டு மூன்று அத்தியாயங்களில் கதையின் போக்கே மாறும்.
மறவாமல் லைக்ஸ் மற்றும் உங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
Shalini View attachment 936