சாபஷ்????????நீ மஹா நான் உன் ஷ்யாம்
- கலங்காதே கண்மனி
- இதுவும் கடந்து போகும்
எல்லாம் என் தவறுதான்
உன்னை பார்த்தது தவறு
உன் பாட்டில் நான்
தொலைந்தது தவறு
உன்னை சிறையெடுத்தது தவறு
அதில் நானே சிக்கிக்
கொண்டது தவறு
காட்டில் அலைந்தது தவறு
அங்கு உன்னால் ஒரு உயிர்
உலகிற்கு வந்தபோது
நானும் புதிதாய் பிறந்தேனே
அது தவறு
உன்னை முத்தமிட்டது தவறு
அந்த முத்தத்தில் நான்
மொத்தமாய் வீழ்ந்தது தவறு
செய்திகள் நம்மை சிதறடித்தது தவறு
அப்போதும் உன்
நம்பிக்கைக்கு பாத்திரமானேனே
அதுவும் தவறு
திருமண அறிவிப்பு தவறு
அதற்கு உன்னை சம்மதிக்க
வைத்தது தவறு
எல்லா தவறும் என்னுடையது
தண்டனை உனக்கா?
கலங்காதே கண்மணி
காலம் வரும்
அந்த காதலே நம்மை காதலிக்கும்
அப்போது
வலி தந்த நானே
உன் வசந்தமாவேன்
கண்ணீர் தந்த நானே
உன் புன்னகையாவேன்
என் அன்பால் உன்னை ஆராதிப்பேன்
காத்திருப்பேன் அந்த காதல்
நம்மை காதலிக்கும் வரை
நீ மஹா நான் உன் ஷ்யாம்
லேட்டா வந்து படிப்பது என் தவறு
படு ஜோர இருக்கு உங்கள் கவி “தவறு”?????