• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Nerungathe..Nerungiye Vilagathe -Promo

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Naemira

அமைச்சர்
SM Exclusive
Joined
Mar 21, 2018
Messages
2,761
Reaction score
11,533
Age
31
Location
Thovalai

ggg.jpg
1131efccd3a924006f698b190031f2b3.jpg

சூரியனின் வெப்பம் விழிகளை சுட்டெரிக்க ... மிகவும் சிரமப்பட்டு தன் இமைகளை பிரித்தெடுத்தவன் .... தொலைபேசியில் தொல்லையால் தன் உறக்கத்திற்கு விடைகொடுத்து .....

" ம்ம் " என்றபடி நெற்றியை நீவினான் .....

" பிரச்சனையை கைய மீறி போகுது "

" மீட்டிங் அரேஞ் பண்ணு "

" ரிஸ்க் எடுக்க வேண்டாம் ....நான் பார்த்துகிறேன் "

" கபீர் " அழுத்தத்துடன் கூறினான் ...

" முடிக்கணுமா "

" நைட் "

" ரந்தீர் நீ எதுக்கு .... நான் பார்த்துக்கறேன் "

" கபீர் சொன்னதை செய் " கட்டளையிட்டான் ......

அலைபேசியை மெத்தை மீது வீசியவன் ..... கருப்பு சட்டைக்குள் தன்னை புகுத்துக்கொண்டவன் ..... கண்ணாடியின் முன்பு நின்று கொண்டு தன் சிகையை சரி செய்து கொண்டிருந்தவன் .... கண்ணாடியின் தென்பட்ட பிம்பம் கண்டு ....

" நீயா " என்று அதிர்ச்சியோடு ...
பிம்பம் அவனை பார்த்து சிரிக்க .... கோபமுற்றவன் " கெட் லாஸ்ட் ...ப்ளீஸ் " என்று உரக்க கத்தினான் ...மீண்டும் சிரித்தது ....

" லீவ் மீ " சீறினான் ..... " என் வாழ்க்கைய என்னை வாழ விடு "
என்றபடி கோபத்தில் தன் கையில் கிடைத்த பொருளால் கண்ணாடியின் மீது வேகமாக வீச ..... அவன் வீசிய வேகத்தில் கண்ணாடி உடைந்து சில்லு சில்லாய் சிதறிப்போக ......
சிதறி கிடந்த ஒவ்வொரு துண்டுகளிலும் மீண்டும் அதே பிம்பம் தெரிய ....

" நீ இன்னும் போகலையா உன்னை " என்றபடி தன் கால்களால் அந்த பிம்பத்தை மறைப்பதாய் எண்ணி ... கண்ணாடி துண்டுகள் மீது தன் பாதத்தை வைக்க ...அவனது கால்கள் ரணமானது குருதி பெருக்கெடுத்து ஓடியது .....

சத்தம் கேட்டு உள்ளே வந்த கபீர் ," என்னாச்சி ரந்தீர் என்ன பண்ணி வச்சிருக்க "

" அவ தான் ... ஆஸ்க் ஹெர் டு கெட் அவுட் " என்றான் தன் விழிகளை மூடியபடி ...

" யாரை சொல்ற .... இங்க யாரும் இல்ல " விழிகளை திறந்தவனின் பார்வையையில் எந்த உருவமும் தெரியாமல் போக .....

" கபீர் இங்க இருந்து போ " சிடு சிடுக்க ....

" ரந்தீர் ஆர் யு ஒகே "

" ப்ளீஸ் லீவ் மீ அலோன் " கர்ஜித்தான் ...

" டேக் கேர் " என்றபடி கபீர் அங்கிருந்து செல்ல .....
தரையில் மண்டியிட்டபடி " ஸ்வாந்தித்தா... " என்று கதறினான் ..... சிதறிய குருதியில் தன் கரங்கள் நனைந்தபடி ....
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
நான்தான் First,
நெமிரா டியர்
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top