அத்தியாயம் – 2௦
மாலை பொழுது மெல்ல மெல்ல மாறி இரவின் இருள் சூழ, நிலவின் ஒளியை மறைத்து கொண்டு வானில் கார் மேகங்கள் சூழ்ந்துக்கொள்ள அந்த இரவு பொழுதில் ரோஹித்தை எதிர்பார்த்து காத்திருந்தனர் ரோஹித் வீட்டில் இருந்த அனைவரும்..
மாலை பொழுதில் இருந்து ரோஹித்தைக் காணாமல் கீர்த்தி ஒரே யோசனையில் இருக்க அவளின் மனது மட்டும் ரஞ்சித் மேல் இருந்தது..
அவனிற்கு மனதில் பெரிய குழப்பம் சூழ்ந்து தலையைக் கைகளில் தாங்கிய வண்ணம் அமர்ந்திருக்க, கயல்விழி ஜீவாவை அழைத்துவர வெளியே சென்றிருக்க, காமாட்சி அபூர்வாவிற்கு சாதம் ஓட்டிக்கொண்டிருக்க, அவர்களையெல்லாம் ஒரு பார்வைப் பார்த்த கீர்த்தி..
“தாத்தா இங்கே என்ன நடக்குது கயல்விழி யார் என்று எனக்கு சொல்லவே இல்லையே..?” என்று மெல்லிய சிரிப்புடன் கேட்டாள் கீர்த்தி..
“உன்னிடம் யாருமே சொல்லவில்லையா..? கயல்விழி மதுவின் தங்கை..” என்று சொன்னவர் அவளைப் பார்த்து புன்னகை செய்தார்..
“அது சரிங்க தாத்தா இங்கே எங்கே என்ன பிரச்சனை நடக்கிறது..?” என்று மெல்ல அவரிடம் மெல்ல பேச்சுக் கொடுக்க, அவர் அவளின் முகத்தை அர்த்தத்துடன் பார்த்தார்..
“இங்கே வாடா..” என்று அவளை அருகில் அழைக்க அவளும் பயத்துடன் அருகில் சென்று அமர, “மதுமிதா ரோஹித் காதலித்த பெண் என்பதும், அவளிடம் வளரும் அபூர்வா சக்திவேல் குழந்தை என்று எனக்கு தெரியும் கண்ணா..” என்று இடியை அவளின் தலையில் இறக்கியவர், அவள் பதில் சொல்ல துணிவு இல்லாமல் அமைதியாக அதிர்ச்சியைத் தாங்கிக் கொண்டிருந்தாள்..
அவர் சொன்னதை கேட்டு நிமிர்ந்தவனின் மனதில் சூழ்ந்திருந்த குழப்ப மேகங்கள் விலகிச் செல்ல, ‘உனக்கு முன்னாடியே எனக்கு ரோஹித்தைத் தெரியும்..’ என்று சொன்னதின் அர்த்தம் இப்பொழுது அவனுக்கு புரிந்தது..
‘ரோஹித் மட்டும் தான் எதுவும் தெரியாமல் இருக்கிறனா..?! இல்லை அவனது அப்பா, அம்மாவிற்கும் உண்மை தெரியாதா..?! அபூர்வா இங்கே இருக்கிறாள் என்றால் அவளின் பெற்றோர் எங்கே..?! மதுமிதா இந்த குழந்தையை வளர்க்க காரணம் என்ன..?!’ மனதில் ஆயிரம் கேள்விகள் புடைசூழ அமைதியாக அமர்ந்திருந்தாள் கீர்த்தி..
“என்னம்மா பேச வார்த்தைகள் இல்லையா..? இந்த உண்மை இன்னமும் மதுவிற்கு தெரியாது.. அவளிற்கு உண்மை தெரிந்தால் அவளுடன் சேர்த்து அபூர்வாவையும் நாங்க இழக்க வேண்டும் கீர்த்தி..” என்று காமாட்சி கண்ணீரோடு சொல்ல கீர்த்திக்கும் கண்கள் கலங்கியது..
சின்ன வயது என்பதால் அபூர்வாவிற்கு இவர்கள் எது பற்றி பேசுகிறார்கள் என்று புரியாமல் டிவியில் சொட்ட பீம் பார்த்துக் கொண்டிருந்தாள்.. அவளிற்கு சாதம் ஒட்டிய காமாட்சி அவளிற்கு வாயைத் துடைத்துவிட்டு கையில் இருந்த கிண்ணத்தை சிங்கிள் போட்டார்..
“மதுவும் எங்களை விட்டு பிரிய கூடாது.. அபூர்வாவும் எங்களை விட்டு பிரிய கூடாது.. ஆனால் அவளின் மேல் ஏற்பட்ட கரையை போக்க வேண்டும்.. அவளை அவதூறாகப் பேசிய அனைவரும் அவளை மதிக்க வேண்டும்..” என்று அவளின் வாழ்க்கையை மனதில் வைத்து பேசினார்கள் பெரியவர்கள் இருவரும்!
“அதுக்கு அவளுக்கு திருமணம் தான் நடக்க வேண்டும் தாத்தா..” என்று கூறினான் ரஞ்சித்.. அவனின் மொழிக் கேட்டு நிமிர்ந்தார் சிவரத்தினம்..
“அவள் அதுக்கு சம்மதம் சொன்னால் அடுத்த முகூர்த்ததில் திருமணம் நடக்கும் ஆனால் அவள்தான் வேண்டாம்.. நான் இப்படியே இருக்கிறேன் என்று அடம் பிடிக்கிறாள்..” என்று சொல்ல,
“அவள் ரோஹித்தையும் வேண்டாம் என்கிறாளா..?!” என்று கேட்டான் ரஞ்சித்.. அவனது மனதில், ‘காதலித்தவனை வேண்டாம் என்று ஏன் சொல்கிறாள்..?!’ என்று யோசிக்க ஆரமித்தான்..
“என்னோட பேரன்கள் என்னை விட்டு எவ்வளவு தூரம் விலகி இருந்தாலும் கூட அவர்களின் விருப்பத்தை நான் அறிவேன்..” என்று சொல்ல, அவளின் மனதில் ஏக்கம் சூழ்ந்தது..
‘எனக்கும் இந்த மாதிரி ஒரு உறவு இல்லாமல் தனிமரமாக இருக்கிறேனே..!’ என்று மனதில் நினைக்க, அவளை அரவணைத்துக் கொண்டது சிவரத்தினத்தின் அன்பு கரங்கள்..
அவள் அதில் ஒரு பாதுகாப்பை உணர்ந்து கொள்ள கண்களில் கண்ணீர் சூழ அவரின் தோள்களில் சாய்ந்தவளைப் பார்த்துக் கொண்டிருந்த ரஞ்சித் கண்களுக்கு, அரவணைப்பு இல்லாத ஒரு ஆதரவு அற்ற ஒரு நான்கு வயது குழந்தை போலவே தெரிந்தாள்..
அவளை குழந்தை போல பார்த்தவன் கண்களுக்கு அவனின் சஞ்சனா தான் அவனின் கண்முன்னே தோன்றியது போல இருந்தது.. அவனது மனதில் ஒரு சிறிய சஞ்சலம் வந்தது..
“ரஞ்சித் உனக்கு இன்னமும் குழப்பம் தீரவில்லை.. கயல்விழியை எனக்கு எப்படி தெரியும்..?! என்று தானே யோசிக்கிறாய்..? நான் எங்கே இருந்தாலும் உங்களைச் சுற்றிலும் என்னோட பாதுகாப்பு வளையம் இருக்கும்..” என்று சொல்ல அவரின் அருகில் வந்து அவரின் மறுபக்கம் அமர்ந்துக் கொண்டான் ரஞ்சித்..
“மதுவும், அபூர்வாவும் உங்களோட பாதுகாப்பில் இருப்பது நான் ரொம்ப சந்தோசமாக இருக்கிறேன் தாத்தா..” என்று கண்கலங்க, அவன் கண்ணீர் அவளின் மனதில் சலனத்தை ஏற்படுத்தியது..
இவர்கள் அமர்ந்திருப்பதைப் பார்த்து காமாட்சி இடமிருந்து சிவரத்தினம் செல்லை வாங்கிக் கொண்டு அவர்களின் எதிரே வந்த அபூர்வா,
“பாட்டி நீங்க தாத்தாவின் பின்னாடி நில்லுங்க..” என்று கட்டளையிட அவளின் கட்டளைக்கிணங்க கணவரின் பின்னோடு வந்து நின்றார் காமாட்சி..
“ஸ்மைல் பிளீஸ்..!” என்று அவர்களை போட்டோ எடுத்தாள் அபூர்வா.. அதில் அனைவரின் முகமும் மலந்திருக்க, ரஞ்சித் – கீர்த்தி இணைந்த முதல் புகைப்படமாக சிவரத்தினம் செல்லில் பதிவானது அழகிய புகைப்படம்! இவர்களைப் பார்த்துக் கொண்டே உள்ளே நுழைந்தனர் கயல்விழியும், ஜீவாவும்..!
“சூப்பர் போஸ் தாத்தா..” என்று அவர்களைப் பாராட்ட, “தாங்க்ஸ் செல்லம்..!” என்று கோரஸாகச் சொன்னவர்கள் இருவரும் உள்ளே வருவதைப் பார்த்து காமாட்சி,
“இருவருக்கும் ரொம்ப நல்ல ஜோடி பொருத்தம்..!” என்று சொல்ல அப்பொழுதுதான் இருவரையும் திரும்பிப் பார்த்த கீர்த்தி, ‘ரொம்ப நல்ல ஜோடி..’ என்று மனதில் நினைத்தவள்,
“தாத்தா இவரு யாரு தாத்தா.. புது புது கேரக்டர் இன்றோ கொடுத்தா நான் எப்படி கண்டு பிடிப்பது..?” என்று அழுவது போல கேட்ட கீர்த்தியிடம் சிவரத்தினம்,
“உனக்கு மட்டும் இல்ல கீர்த்திமா.. எனக்கும் இவரு யார் என்று தெரியவில்லை.. நம்மளோட நிலையை விடவும் உன்னோட பாட்டியின் நிலையை நினைத்து பாரும்மா..” என்று அவரும் அழுகுரலில் சொல்ல, காமாட்சியைத் திரும்பிப் பார்த்தவள்,
“ஐயோ பாவம் தாத்தா பாட்டி..!” என்று அவளும் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு சொல்ல, அவர்கள் அருகில் இருந்த ரஞ்சித்,
“நல்ல தாத்தா! நல்ல பேத்தி!” என்று சர்டிபிகேட் கொடுத்தான் ரஞ்சித்!
“ஹலோ இஞ்சி இந்த கீர்த்தி பற்றி உனக்கு தெரியாது.. என்னோட இன்னொரு முகம் பற்றி ரோஹித் இடம் கேட்டுப் பாரு..” என்று மிரட்ட,
“நீ மட்டும் தான் என்னோட பெயரை கொலை செய்யாமல் இருந்தாய்.. இப்பொழுது நீயுமா..?” என்று அவனின் தலையைக் கைகளில் தாங்கியதைப் பார்த்து கலகலப்பாக சிரிக்க ஆரமித்தாள் கீர்த்தி..
அவளின் முகத்தில் புன்னகையைப் பார்த்த ரஞ்சித், ‘உன்னை பார்க்கும் போது எல்லாம் என்னோட சஞ்சனா முகம் என் கண்முன் வந்து போகும் காரணம் தான் என்ன..?’ என்று அவனின் மனதிடம் அவனே கேட்டுக் கொண்டான்..
அவனின் பார்வை தன் மேல் படிவத்தைக் கவனித்த கீர்த்தி, ‘என்ன..?!’ என்று அவனைப் பார்த்து ஒற்றை புருவத்தை மட்டும் உயர்த்த ‘ஒன்றுமில்லை!’ என்று தலையசைத்தான் ரஞ்சித்..!
இவர்களின் மனதில் இவர்களே அறியாமல் ஒரு அழகிய புரிதல் அழகாக மலர்ந்தது..! புரிதல் காதலின் முதல் படி அந்த படியில் விழிகளைத் துணையாகக் கொண்டு காதல் களத்தில் காலடி பதித்தனர் ரஞ்சித் – கீர்த்தி இருவரும்!
மாலை பொழுது மெல்ல மெல்ல மாறி இரவின் இருள் சூழ, நிலவின் ஒளியை மறைத்து கொண்டு வானில் கார் மேகங்கள் சூழ்ந்துக்கொள்ள அந்த இரவு பொழுதில் ரோஹித்தை எதிர்பார்த்து காத்திருந்தனர் ரோஹித் வீட்டில் இருந்த அனைவரும்..
மாலை பொழுதில் இருந்து ரோஹித்தைக் காணாமல் கீர்த்தி ஒரே யோசனையில் இருக்க அவளின் மனது மட்டும் ரஞ்சித் மேல் இருந்தது..
அவனிற்கு மனதில் பெரிய குழப்பம் சூழ்ந்து தலையைக் கைகளில் தாங்கிய வண்ணம் அமர்ந்திருக்க, கயல்விழி ஜீவாவை அழைத்துவர வெளியே சென்றிருக்க, காமாட்சி அபூர்வாவிற்கு சாதம் ஓட்டிக்கொண்டிருக்க, அவர்களையெல்லாம் ஒரு பார்வைப் பார்த்த கீர்த்தி..
“தாத்தா இங்கே என்ன நடக்குது கயல்விழி யார் என்று எனக்கு சொல்லவே இல்லையே..?” என்று மெல்லிய சிரிப்புடன் கேட்டாள் கீர்த்தி..
“உன்னிடம் யாருமே சொல்லவில்லையா..? கயல்விழி மதுவின் தங்கை..” என்று சொன்னவர் அவளைப் பார்த்து புன்னகை செய்தார்..
“அது சரிங்க தாத்தா இங்கே எங்கே என்ன பிரச்சனை நடக்கிறது..?” என்று மெல்ல அவரிடம் மெல்ல பேச்சுக் கொடுக்க, அவர் அவளின் முகத்தை அர்த்தத்துடன் பார்த்தார்..
“இங்கே வாடா..” என்று அவளை அருகில் அழைக்க அவளும் பயத்துடன் அருகில் சென்று அமர, “மதுமிதா ரோஹித் காதலித்த பெண் என்பதும், அவளிடம் வளரும் அபூர்வா சக்திவேல் குழந்தை என்று எனக்கு தெரியும் கண்ணா..” என்று இடியை அவளின் தலையில் இறக்கியவர், அவள் பதில் சொல்ல துணிவு இல்லாமல் அமைதியாக அதிர்ச்சியைத் தாங்கிக் கொண்டிருந்தாள்..
அவர் சொன்னதை கேட்டு நிமிர்ந்தவனின் மனதில் சூழ்ந்திருந்த குழப்ப மேகங்கள் விலகிச் செல்ல, ‘உனக்கு முன்னாடியே எனக்கு ரோஹித்தைத் தெரியும்..’ என்று சொன்னதின் அர்த்தம் இப்பொழுது அவனுக்கு புரிந்தது..
‘ரோஹித் மட்டும் தான் எதுவும் தெரியாமல் இருக்கிறனா..?! இல்லை அவனது அப்பா, அம்மாவிற்கும் உண்மை தெரியாதா..?! அபூர்வா இங்கே இருக்கிறாள் என்றால் அவளின் பெற்றோர் எங்கே..?! மதுமிதா இந்த குழந்தையை வளர்க்க காரணம் என்ன..?!’ மனதில் ஆயிரம் கேள்விகள் புடைசூழ அமைதியாக அமர்ந்திருந்தாள் கீர்த்தி..
“என்னம்மா பேச வார்த்தைகள் இல்லையா..? இந்த உண்மை இன்னமும் மதுவிற்கு தெரியாது.. அவளிற்கு உண்மை தெரிந்தால் அவளுடன் சேர்த்து அபூர்வாவையும் நாங்க இழக்க வேண்டும் கீர்த்தி..” என்று காமாட்சி கண்ணீரோடு சொல்ல கீர்த்திக்கும் கண்கள் கலங்கியது..
சின்ன வயது என்பதால் அபூர்வாவிற்கு இவர்கள் எது பற்றி பேசுகிறார்கள் என்று புரியாமல் டிவியில் சொட்ட பீம் பார்த்துக் கொண்டிருந்தாள்.. அவளிற்கு சாதம் ஒட்டிய காமாட்சி அவளிற்கு வாயைத் துடைத்துவிட்டு கையில் இருந்த கிண்ணத்தை சிங்கிள் போட்டார்..
“மதுவும் எங்களை விட்டு பிரிய கூடாது.. அபூர்வாவும் எங்களை விட்டு பிரிய கூடாது.. ஆனால் அவளின் மேல் ஏற்பட்ட கரையை போக்க வேண்டும்.. அவளை அவதூறாகப் பேசிய அனைவரும் அவளை மதிக்க வேண்டும்..” என்று அவளின் வாழ்க்கையை மனதில் வைத்து பேசினார்கள் பெரியவர்கள் இருவரும்!
“அதுக்கு அவளுக்கு திருமணம் தான் நடக்க வேண்டும் தாத்தா..” என்று கூறினான் ரஞ்சித்.. அவனின் மொழிக் கேட்டு நிமிர்ந்தார் சிவரத்தினம்..
“அவள் அதுக்கு சம்மதம் சொன்னால் அடுத்த முகூர்த்ததில் திருமணம் நடக்கும் ஆனால் அவள்தான் வேண்டாம்.. நான் இப்படியே இருக்கிறேன் என்று அடம் பிடிக்கிறாள்..” என்று சொல்ல,
“அவள் ரோஹித்தையும் வேண்டாம் என்கிறாளா..?!” என்று கேட்டான் ரஞ்சித்.. அவனது மனதில், ‘காதலித்தவனை வேண்டாம் என்று ஏன் சொல்கிறாள்..?!’ என்று யோசிக்க ஆரமித்தான்..
“என்னோட பேரன்கள் என்னை விட்டு எவ்வளவு தூரம் விலகி இருந்தாலும் கூட அவர்களின் விருப்பத்தை நான் அறிவேன்..” என்று சொல்ல, அவளின் மனதில் ஏக்கம் சூழ்ந்தது..
‘எனக்கும் இந்த மாதிரி ஒரு உறவு இல்லாமல் தனிமரமாக இருக்கிறேனே..!’ என்று மனதில் நினைக்க, அவளை அரவணைத்துக் கொண்டது சிவரத்தினத்தின் அன்பு கரங்கள்..
அவள் அதில் ஒரு பாதுகாப்பை உணர்ந்து கொள்ள கண்களில் கண்ணீர் சூழ அவரின் தோள்களில் சாய்ந்தவளைப் பார்த்துக் கொண்டிருந்த ரஞ்சித் கண்களுக்கு, அரவணைப்பு இல்லாத ஒரு ஆதரவு அற்ற ஒரு நான்கு வயது குழந்தை போலவே தெரிந்தாள்..
அவளை குழந்தை போல பார்த்தவன் கண்களுக்கு அவனின் சஞ்சனா தான் அவனின் கண்முன்னே தோன்றியது போல இருந்தது.. அவனது மனதில் ஒரு சிறிய சஞ்சலம் வந்தது..
“ரஞ்சித் உனக்கு இன்னமும் குழப்பம் தீரவில்லை.. கயல்விழியை எனக்கு எப்படி தெரியும்..?! என்று தானே யோசிக்கிறாய்..? நான் எங்கே இருந்தாலும் உங்களைச் சுற்றிலும் என்னோட பாதுகாப்பு வளையம் இருக்கும்..” என்று சொல்ல அவரின் அருகில் வந்து அவரின் மறுபக்கம் அமர்ந்துக் கொண்டான் ரஞ்சித்..
“மதுவும், அபூர்வாவும் உங்களோட பாதுகாப்பில் இருப்பது நான் ரொம்ப சந்தோசமாக இருக்கிறேன் தாத்தா..” என்று கண்கலங்க, அவன் கண்ணீர் அவளின் மனதில் சலனத்தை ஏற்படுத்தியது..
இவர்கள் அமர்ந்திருப்பதைப் பார்த்து காமாட்சி இடமிருந்து சிவரத்தினம் செல்லை வாங்கிக் கொண்டு அவர்களின் எதிரே வந்த அபூர்வா,
“பாட்டி நீங்க தாத்தாவின் பின்னாடி நில்லுங்க..” என்று கட்டளையிட அவளின் கட்டளைக்கிணங்க கணவரின் பின்னோடு வந்து நின்றார் காமாட்சி..
“ஸ்மைல் பிளீஸ்..!” என்று அவர்களை போட்டோ எடுத்தாள் அபூர்வா.. அதில் அனைவரின் முகமும் மலந்திருக்க, ரஞ்சித் – கீர்த்தி இணைந்த முதல் புகைப்படமாக சிவரத்தினம் செல்லில் பதிவானது அழகிய புகைப்படம்! இவர்களைப் பார்த்துக் கொண்டே உள்ளே நுழைந்தனர் கயல்விழியும், ஜீவாவும்..!
“சூப்பர் போஸ் தாத்தா..” என்று அவர்களைப் பாராட்ட, “தாங்க்ஸ் செல்லம்..!” என்று கோரஸாகச் சொன்னவர்கள் இருவரும் உள்ளே வருவதைப் பார்த்து காமாட்சி,
“இருவருக்கும் ரொம்ப நல்ல ஜோடி பொருத்தம்..!” என்று சொல்ல அப்பொழுதுதான் இருவரையும் திரும்பிப் பார்த்த கீர்த்தி, ‘ரொம்ப நல்ல ஜோடி..’ என்று மனதில் நினைத்தவள்,
“தாத்தா இவரு யாரு தாத்தா.. புது புது கேரக்டர் இன்றோ கொடுத்தா நான் எப்படி கண்டு பிடிப்பது..?” என்று அழுவது போல கேட்ட கீர்த்தியிடம் சிவரத்தினம்,
“உனக்கு மட்டும் இல்ல கீர்த்திமா.. எனக்கும் இவரு யார் என்று தெரியவில்லை.. நம்மளோட நிலையை விடவும் உன்னோட பாட்டியின் நிலையை நினைத்து பாரும்மா..” என்று அவரும் அழுகுரலில் சொல்ல, காமாட்சியைத் திரும்பிப் பார்த்தவள்,
“ஐயோ பாவம் தாத்தா பாட்டி..!” என்று அவளும் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு சொல்ல, அவர்கள் அருகில் இருந்த ரஞ்சித்,
“நல்ல தாத்தா! நல்ல பேத்தி!” என்று சர்டிபிகேட் கொடுத்தான் ரஞ்சித்!
“ஹலோ இஞ்சி இந்த கீர்த்தி பற்றி உனக்கு தெரியாது.. என்னோட இன்னொரு முகம் பற்றி ரோஹித் இடம் கேட்டுப் பாரு..” என்று மிரட்ட,
“நீ மட்டும் தான் என்னோட பெயரை கொலை செய்யாமல் இருந்தாய்.. இப்பொழுது நீயுமா..?” என்று அவனின் தலையைக் கைகளில் தாங்கியதைப் பார்த்து கலகலப்பாக சிரிக்க ஆரமித்தாள் கீர்த்தி..
அவளின் முகத்தில் புன்னகையைப் பார்த்த ரஞ்சித், ‘உன்னை பார்க்கும் போது எல்லாம் என்னோட சஞ்சனா முகம் என் கண்முன் வந்து போகும் காரணம் தான் என்ன..?’ என்று அவனின் மனதிடம் அவனே கேட்டுக் கொண்டான்..
அவனின் பார்வை தன் மேல் படிவத்தைக் கவனித்த கீர்த்தி, ‘என்ன..?!’ என்று அவனைப் பார்த்து ஒற்றை புருவத்தை மட்டும் உயர்த்த ‘ஒன்றுமில்லை!’ என்று தலையசைத்தான் ரஞ்சித்..!
இவர்களின் மனதில் இவர்களே அறியாமல் ஒரு அழகிய புரிதல் அழகாக மலர்ந்தது..! புரிதல் காதலின் முதல் படி அந்த படியில் விழிகளைத் துணையாகக் கொண்டு காதல் களத்தில் காலடி பதித்தனர் ரஞ்சித் – கீர்த்தி இருவரும்!