அத்தியாயம் – 27
மதுமிதாவின் வீட்டின் முன்னே ஸ்கூட்டியை நிறுத்தியவள், மதுமிதா இன்னமும் இறங்காமல் அமர்ந்திருப்பதுப் பார்த்து, “மதும்மா உன்னோட கனவில் இருந்து வெளியே வா..” என்று கூறவும், அவளின் வண்டியை விட்டு இறங்கினாள் மதுமிதா..
அவள் வீட்டிற்குள் செல்ல இவள் தயங்கமாக அவர்களின் வீட்டின் முன்னே நிற்க, அவள் தயங்குவதைக் கண்டு, “ஹலோ மேடம் என்ன தயக்கம் உள்ளே வா..” என்று வராதவளை பிடித்து வீட்டிற்குள் அழைத்துச் சென்றாள்..
அவர்களின் பின்னோடு வந்த ரஞ்சித், “என்ன தயக்கம் மது, எங்கள் இருவரையும் விட நீதான் பக்கத்தில் இருக்க, ஏதாவது பிரச்சனை என்றால் எங்களுக்கு சொல்ல ஆள் வேண்டாமா வா..” என்று உள்ளே அழைத்துச் சென்றான்..
வீட்டிற்குள் இருந்த சக்திவேல், ராதிகா இருவருக்கும் வந்திருக்கும் அந்த புதிய நபர் யார் என்ற எதிர்பார்ப்பில் வாசலுக்கு விரைய, சஞ்சனா, ரஞ்சித்துடன் உள்ளே நுழைந்தாள் மதுமிதா..
அவளைப் பார்த்தும் சக்திவேல், “இந்த பொண்ணு இங்கே எப்படி..?!” என்று ரஞ்சித்தியின் காதை கடித்தான்..
“அதை அவனிடம் கேட்டு என்ன பயன்..?! இதோ நிற்கிறாளே இவளையே கேளுங்கள்..” என்று சொன்னவன்,
“ராதி அண்ணி எனக்கு செம பசி அண்ணி.. என்ன சமையல் அண்ணி..?” என்று கேட்டுக் கொண்டே சென்று சோபாவில் அமர்ந்தான்..
ராதியோ, “சஞ்சனா இவங்களை எங்கே பார்த்தாய்..? இப்பொழுது இங்கே எதுக்கு அழைத்து வந்தாய்..?” என்று கேட்டதும்,
“இவளுக்கு மரியாதை எல்லாம் வேண்டாம் அக்கா.. இவள் என்னோட உயிர் தோழி.. திருச்சியில் இருந்து வேலைக்காக இங்கே வந்திருக்கிறாள்.. உங்களின் பக்கத்துவீட்டு தங்கி இருக்கிறாள்..” என்று சொன்னதும்,
“எங்களை இங்கே வீட்டை பார்த்து வைக்கும் பொழுதே காவலுக்கு ஒரு ஆளையும் ரெடி செய்கிறேன் என்று சொன்னதை செய்துவிட்டாயா..?” என்று சக்திவேல் தலையில் கையை வைத்து சோபாவில் அமர,
“என்ன நீங்க இருவரும் வந்த எங்களை வாசலில் நிற்க வைத்தே பேசி அனுப்பும் எண்ணத்தில் இருக்கீங்களா..?” என்று இடையில் கையூன்றி முறைத்தவளை, “நீ உள்ளே வாடா..” என்று அழைக்க, “நீயும் வாடா..” என்று மதுவையும் அழைத்தனர் சக்திவேலும், ராதிகாவும்..
வீட்டிற்குள் நுழைந்ததும் ரஞ்சித் அருகில் சென்று அமர்ந்தாள் சஞ்சனா.. சக்தியும், ராதியும் ஒரு சோபாவில் அமர்ந்துக் கொள்ள, மதுமிதா மட்டும் ஒரு சோபாவில் அமர்ந்தாள்..
“அக்கா இவள் மதுமிதா..” என்று அவளின் பெயரை சொல்லி அறிமுகம் செய்து வைத்தவள், “உங்களைப் பற்றி அவளுடம் சொல்லிவிட்டேன்.. நாங்கள் இருவரும் இல்லாத அல்லது வரமுடியாத சூழலில் அவள் உங்களைப் பார்த்துக் கொள்வாள்..” என்று தெளிவாக கூறினாள்.. ரஞ்சித் எதுவும் சொல்லாமல் நடப்பதை மட்டும் கவனித்தான்..
அவள் சொன்னதை கேட்டு ராதிகாவின் முகம் மாறியது.. அவளின் அருகில் சென்று அமர்ந்த சஞ்சனா, “அக்கா பிரிண்ட்ஷிப் குள்ள ஒளிவு மறைவு வரக்கூடாது.. நான் அவளிடம் சொல்லிவிட்டேன்.. அது என்னோட தப்பு என்றால் என்னை திட்டுங்கள்.. அதுவே அவளும் நம்மில் ஒருத்தி என்று நினைத்தால் என்ன செய்ய இஷ்டமோ செய்ங்க..” என்று சொல்லவும் கணவனைத் திரும்பிப் பார்த்த ராதிகா,
“நான் இன்னைக்கு சமையல் செய்திருக்கேன்.. வாங்க நால்வரும் சாப்பிடலாம்..” என்று அழைத்தவள் நின்று, “இன்னைக்கு நான் சமையல் நாளை உன்னோட சமையல் இங்கே வந்துவிட வேண்டும் மது..” என்று அவளை மிரட்ட,
அதுவரை அமைதியாக இருந்தவள், “ஐயோ அக்கா எனக்கு சமைக்கவே தெரியாது..” என்று உதட்டை பிதுக்கவும், ராதிக்கும் சக்திக்கும் பாவமாக இருக்க, ரஞ்சித் ‘இதில் ஏதாவது உள் குத்து இருக்குமோ..?!’ என்று யோசனையில் இருக்க, சஞ்சனவோ ‘நடத்துமா நடத்து..’ என்று பார்வையால் சொன்னாள்..
அவளின் பார்வையின் பொருள் உணர்ந்த ரஞ்சித், “அடுத்து இவங்க இருவரையும் வைத்து உங்களின் விளையாட்டை ஆரமித்துவிட்டீங்களா..?” என்று கேட்ட ரஞ்சித்,
“அண்ணி அந்த லூசு பொய் சொல்லுது நம்பாதீங்க..” என்று சொல்லவும், மதுவின் முகத்தைப் பார்த்த ராதிகா, “இந்த முகத்தைப் பார்த்தால் உனக்கு பொய் சொல்வது போல இருக்கிறதா..?” என்று கேட்டது..
“அப்படி சொல்லுங்க அக்கா..” என்று சொன்னவளின் முகத்தில் குறும்புக் கூத்தாடா, “ஐயோ அண்ணி விழுந்துட்டீங்களே..?!” என்று சொன்னதும், மதுமிதா, சஞ்சனா இருவரும் சிரிக்க, சக்திவேல் ஒன்றும் புரியாமல் மனைவியைப் பார்க்க அவளும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்..
“இதுகளின் பால் வடியும் முகத்தை வைத்து நல்ல பிள்ளைகள் என்று நம்பாதீங்க.. இது இரண்டும் ஊரையே வித்துவிட்டு வந்துவிடும்..” என்று சொல்லவும்,
“வருகிற வழியில் இவனை விற்காமல் வந்தது தப்பாகப் போய்விட்டது..” என்று மதுமிதா சொல்லவும், அவளுக்கு ஹை – பை கொடுத்தாள் சஞ்சனா..
அதை பார்த்தும் ரஞ்சித், “நான் சொன்னனே கேட்டிங்களா..?!” என்று கேட்டவன், காலையில் நடந்ததை விளக்கமாக விளக்க, சக்தியும், ராதியும் சிரித்துவிட்டனர்..
“ஒரே நாளில் இவ்வளவு நடந்திருக்கிறதா..?!” என்று கேட்ட சக்திவேல், மதுவின் முகத்தைப் பார்த்து ராதிகாவிடம், “என்னோட தம்பியைப் போலவே குறும்புத்தனம் செய்கிறாள்.. அவனுக்கு சரியான ஜோடி இவள் தான்..!” என்று சொன்னான்..
“சரி எல்லோரும் எழுந்து சாப்பிட வாங்க..” என்று அழைக்க மதுமிதா இன்னமும் தயக்கமாக நிற்க, அவளின் அருகில் வந்த ராதிகா, “எனக்கு அக்கா, தங்கை யாருமே இல்லை மது! உன்னை என்னோட தங்கையாய் நினைக்கிறேன்.. உன்னோட வீட்டில் சாப்பிட நீ இப்படித்தான் தயங்குவியா..?!” என்று கேட்டது,
மதுவிற்கு இருந்த தயக்கம் மாறி அனைவரும் கேலியும் கிண்டலுமாக சாப்பிட்டு முடித்து ரஞ்சித், சஞ்சனாவும் கிளம்பவும், மது அவளின் வீட்டிற்கு வந்தாள்..
அந்த வீட்டில் அவள் இதுவரை இல்லாத நிறைவை உணர்ந்தாள்.. இப்படி காலையில் அலுவலகத்தில் வேலை ப்ளஸ் கேலி, கிண்டல் என்று செல்ல, சக்தியும் ஒரு அலுவலகத்தில் மேனேஜர் வேலைக்கு சென்றான்..
மாலையில் அனைவரும் சந்தோசமாக பேசி சிரித்து பொழுது அழகாக கழியும்.. மதுவிற்கு தன்னுடைய அப்பா அம்மா இருப்பதே மறந்து போனது இவர்களின் நட்பால்!
அவளின் தங்கை கயல்விழி மட்டும் அடிக்கடி போன் செய்து பேசுவாள்.. அதனால் அந்த குடும்பத்தில் புதிய வரவாக கயல்விழியும் சேர்க்கப்பட்டாள்..!
இவள் மதுரை வந்து ஒரு மாதம் சென்றபின் சேகர் அழைத்தார்.. அப்பா போன் செய்கிறார் என்றதும் முகம் மாறியபடி எழுந்து சென்ற சமதுவின் முகத்தை கவனித்தாள் சஞ்சனா..
‘அப்பா போன் செய்தாள் இவளின் முகம் ஏன் மாறுகிறது..?’ என்ற யோசனையில் தனது வேலையைத் தொடர்ந்தாள்.. அப்பாவின் அழைப்பை எடுத்தவள்,
“ஹலோ அப்பா எப்படி இருக்கீங்க..? அம்மா எப்படி இருக்காங்க..?” என்று கேட்டாள்..
“நாங்கள் நல்ல இருக்கிறோம் மதும்மா.. நீ எப்படி இருக்கிறாய்..?” என்று கேட்டார் சேகர்..
“ம்ம் நல்ல இருக்கிறேன் அப்பா..” என்று பதில் சொன்னவள், “என்னப்பா விஷயம் ஆபீஸ் டைமில் கூப்பிடு இருக்கீங்க..?” என்று கேட்டாள்..
“உன்னை பெண் பார்த்துவிட்டு போனவங்க சீக்கிரம் திருமணம் வைக்கலாம் என்று சொல்றாங்க மதும்மா என்ன பண்ணலாம்..?” என்று மகளிடமே கேட்டார் சேகர்..
அவர் சொன்னதை கேட்டு அதிர்ச்சி அடையாமல், “அப்பா எனக்கு அந்த மாப்பிள்ளை பிடிக்கவில்லை.. எனக்கு இந்த திருமணத்தில் இஸ்டம் இல்லப்பா..” என்று நேரடியாக சொன்னாள்..
அவளிடம் இருந்து இந்த பதிலை எதிர்பார்க்காத சேகர், “சரிம்மா உனக்கு பிடிக்கவில்லை என்றால் வேண்டாம்.. நாங்க வேற மாப்பிள்ளை பார்க்கிறோம்..” என்று சொல்லவும் அவள் அமைதியாக இருந்தாள்..
“சரிம்மா நீ வேலையைப் பாருடா.. நான் அப்புறம் பேசுகிறேன்..” என்று இணைப்பை துண்டித்தார் சேகர்.. அவர் போனை வைத்தும் அதையே பார்த்தவள் முன்னே வந்து நின்றாள் சஞ்சனா..
மதுமிதாவின் வீட்டின் முன்னே ஸ்கூட்டியை நிறுத்தியவள், மதுமிதா இன்னமும் இறங்காமல் அமர்ந்திருப்பதுப் பார்த்து, “மதும்மா உன்னோட கனவில் இருந்து வெளியே வா..” என்று கூறவும், அவளின் வண்டியை விட்டு இறங்கினாள் மதுமிதா..
அவள் வீட்டிற்குள் செல்ல இவள் தயங்கமாக அவர்களின் வீட்டின் முன்னே நிற்க, அவள் தயங்குவதைக் கண்டு, “ஹலோ மேடம் என்ன தயக்கம் உள்ளே வா..” என்று வராதவளை பிடித்து வீட்டிற்குள் அழைத்துச் சென்றாள்..
அவர்களின் பின்னோடு வந்த ரஞ்சித், “என்ன தயக்கம் மது, எங்கள் இருவரையும் விட நீதான் பக்கத்தில் இருக்க, ஏதாவது பிரச்சனை என்றால் எங்களுக்கு சொல்ல ஆள் வேண்டாமா வா..” என்று உள்ளே அழைத்துச் சென்றான்..
வீட்டிற்குள் இருந்த சக்திவேல், ராதிகா இருவருக்கும் வந்திருக்கும் அந்த புதிய நபர் யார் என்ற எதிர்பார்ப்பில் வாசலுக்கு விரைய, சஞ்சனா, ரஞ்சித்துடன் உள்ளே நுழைந்தாள் மதுமிதா..
அவளைப் பார்த்தும் சக்திவேல், “இந்த பொண்ணு இங்கே எப்படி..?!” என்று ரஞ்சித்தியின் காதை கடித்தான்..
“அதை அவனிடம் கேட்டு என்ன பயன்..?! இதோ நிற்கிறாளே இவளையே கேளுங்கள்..” என்று சொன்னவன்,
“ராதி அண்ணி எனக்கு செம பசி அண்ணி.. என்ன சமையல் அண்ணி..?” என்று கேட்டுக் கொண்டே சென்று சோபாவில் அமர்ந்தான்..
ராதியோ, “சஞ்சனா இவங்களை எங்கே பார்த்தாய்..? இப்பொழுது இங்கே எதுக்கு அழைத்து வந்தாய்..?” என்று கேட்டதும்,
“இவளுக்கு மரியாதை எல்லாம் வேண்டாம் அக்கா.. இவள் என்னோட உயிர் தோழி.. திருச்சியில் இருந்து வேலைக்காக இங்கே வந்திருக்கிறாள்.. உங்களின் பக்கத்துவீட்டு தங்கி இருக்கிறாள்..” என்று சொன்னதும்,
“எங்களை இங்கே வீட்டை பார்த்து வைக்கும் பொழுதே காவலுக்கு ஒரு ஆளையும் ரெடி செய்கிறேன் என்று சொன்னதை செய்துவிட்டாயா..?” என்று சக்திவேல் தலையில் கையை வைத்து சோபாவில் அமர,
“என்ன நீங்க இருவரும் வந்த எங்களை வாசலில் நிற்க வைத்தே பேசி அனுப்பும் எண்ணத்தில் இருக்கீங்களா..?” என்று இடையில் கையூன்றி முறைத்தவளை, “நீ உள்ளே வாடா..” என்று அழைக்க, “நீயும் வாடா..” என்று மதுவையும் அழைத்தனர் சக்திவேலும், ராதிகாவும்..
வீட்டிற்குள் நுழைந்ததும் ரஞ்சித் அருகில் சென்று அமர்ந்தாள் சஞ்சனா.. சக்தியும், ராதியும் ஒரு சோபாவில் அமர்ந்துக் கொள்ள, மதுமிதா மட்டும் ஒரு சோபாவில் அமர்ந்தாள்..
“அக்கா இவள் மதுமிதா..” என்று அவளின் பெயரை சொல்லி அறிமுகம் செய்து வைத்தவள், “உங்களைப் பற்றி அவளுடம் சொல்லிவிட்டேன்.. நாங்கள் இருவரும் இல்லாத அல்லது வரமுடியாத சூழலில் அவள் உங்களைப் பார்த்துக் கொள்வாள்..” என்று தெளிவாக கூறினாள்.. ரஞ்சித் எதுவும் சொல்லாமல் நடப்பதை மட்டும் கவனித்தான்..
அவள் சொன்னதை கேட்டு ராதிகாவின் முகம் மாறியது.. அவளின் அருகில் சென்று அமர்ந்த சஞ்சனா, “அக்கா பிரிண்ட்ஷிப் குள்ள ஒளிவு மறைவு வரக்கூடாது.. நான் அவளிடம் சொல்லிவிட்டேன்.. அது என்னோட தப்பு என்றால் என்னை திட்டுங்கள்.. அதுவே அவளும் நம்மில் ஒருத்தி என்று நினைத்தால் என்ன செய்ய இஷ்டமோ செய்ங்க..” என்று சொல்லவும் கணவனைத் திரும்பிப் பார்த்த ராதிகா,
“நான் இன்னைக்கு சமையல் செய்திருக்கேன்.. வாங்க நால்வரும் சாப்பிடலாம்..” என்று அழைத்தவள் நின்று, “இன்னைக்கு நான் சமையல் நாளை உன்னோட சமையல் இங்கே வந்துவிட வேண்டும் மது..” என்று அவளை மிரட்ட,
அதுவரை அமைதியாக இருந்தவள், “ஐயோ அக்கா எனக்கு சமைக்கவே தெரியாது..” என்று உதட்டை பிதுக்கவும், ராதிக்கும் சக்திக்கும் பாவமாக இருக்க, ரஞ்சித் ‘இதில் ஏதாவது உள் குத்து இருக்குமோ..?!’ என்று யோசனையில் இருக்க, சஞ்சனவோ ‘நடத்துமா நடத்து..’ என்று பார்வையால் சொன்னாள்..
அவளின் பார்வையின் பொருள் உணர்ந்த ரஞ்சித், “அடுத்து இவங்க இருவரையும் வைத்து உங்களின் விளையாட்டை ஆரமித்துவிட்டீங்களா..?” என்று கேட்ட ரஞ்சித்,
“அண்ணி அந்த லூசு பொய் சொல்லுது நம்பாதீங்க..” என்று சொல்லவும், மதுவின் முகத்தைப் பார்த்த ராதிகா, “இந்த முகத்தைப் பார்த்தால் உனக்கு பொய் சொல்வது போல இருக்கிறதா..?” என்று கேட்டது..
“அப்படி சொல்லுங்க அக்கா..” என்று சொன்னவளின் முகத்தில் குறும்புக் கூத்தாடா, “ஐயோ அண்ணி விழுந்துட்டீங்களே..?!” என்று சொன்னதும், மதுமிதா, சஞ்சனா இருவரும் சிரிக்க, சக்திவேல் ஒன்றும் புரியாமல் மனைவியைப் பார்க்க அவளும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்..
“இதுகளின் பால் வடியும் முகத்தை வைத்து நல்ல பிள்ளைகள் என்று நம்பாதீங்க.. இது இரண்டும் ஊரையே வித்துவிட்டு வந்துவிடும்..” என்று சொல்லவும்,
“வருகிற வழியில் இவனை விற்காமல் வந்தது தப்பாகப் போய்விட்டது..” என்று மதுமிதா சொல்லவும், அவளுக்கு ஹை – பை கொடுத்தாள் சஞ்சனா..
அதை பார்த்தும் ரஞ்சித், “நான் சொன்னனே கேட்டிங்களா..?!” என்று கேட்டவன், காலையில் நடந்ததை விளக்கமாக விளக்க, சக்தியும், ராதியும் சிரித்துவிட்டனர்..
“ஒரே நாளில் இவ்வளவு நடந்திருக்கிறதா..?!” என்று கேட்ட சக்திவேல், மதுவின் முகத்தைப் பார்த்து ராதிகாவிடம், “என்னோட தம்பியைப் போலவே குறும்புத்தனம் செய்கிறாள்.. அவனுக்கு சரியான ஜோடி இவள் தான்..!” என்று சொன்னான்..
“சரி எல்லோரும் எழுந்து சாப்பிட வாங்க..” என்று அழைக்க மதுமிதா இன்னமும் தயக்கமாக நிற்க, அவளின் அருகில் வந்த ராதிகா, “எனக்கு அக்கா, தங்கை யாருமே இல்லை மது! உன்னை என்னோட தங்கையாய் நினைக்கிறேன்.. உன்னோட வீட்டில் சாப்பிட நீ இப்படித்தான் தயங்குவியா..?!” என்று கேட்டது,
மதுவிற்கு இருந்த தயக்கம் மாறி அனைவரும் கேலியும் கிண்டலுமாக சாப்பிட்டு முடித்து ரஞ்சித், சஞ்சனாவும் கிளம்பவும், மது அவளின் வீட்டிற்கு வந்தாள்..
அந்த வீட்டில் அவள் இதுவரை இல்லாத நிறைவை உணர்ந்தாள்.. இப்படி காலையில் அலுவலகத்தில் வேலை ப்ளஸ் கேலி, கிண்டல் என்று செல்ல, சக்தியும் ஒரு அலுவலகத்தில் மேனேஜர் வேலைக்கு சென்றான்..
மாலையில் அனைவரும் சந்தோசமாக பேசி சிரித்து பொழுது அழகாக கழியும்.. மதுவிற்கு தன்னுடைய அப்பா அம்மா இருப்பதே மறந்து போனது இவர்களின் நட்பால்!
அவளின் தங்கை கயல்விழி மட்டும் அடிக்கடி போன் செய்து பேசுவாள்.. அதனால் அந்த குடும்பத்தில் புதிய வரவாக கயல்விழியும் சேர்க்கப்பட்டாள்..!
இவள் மதுரை வந்து ஒரு மாதம் சென்றபின் சேகர் அழைத்தார்.. அப்பா போன் செய்கிறார் என்றதும் முகம் மாறியபடி எழுந்து சென்ற சமதுவின் முகத்தை கவனித்தாள் சஞ்சனா..
‘அப்பா போன் செய்தாள் இவளின் முகம் ஏன் மாறுகிறது..?’ என்ற யோசனையில் தனது வேலையைத் தொடர்ந்தாள்.. அப்பாவின் அழைப்பை எடுத்தவள்,
“ஹலோ அப்பா எப்படி இருக்கீங்க..? அம்மா எப்படி இருக்காங்க..?” என்று கேட்டாள்..
“நாங்கள் நல்ல இருக்கிறோம் மதும்மா.. நீ எப்படி இருக்கிறாய்..?” என்று கேட்டார் சேகர்..
“ம்ம் நல்ல இருக்கிறேன் அப்பா..” என்று பதில் சொன்னவள், “என்னப்பா விஷயம் ஆபீஸ் டைமில் கூப்பிடு இருக்கீங்க..?” என்று கேட்டாள்..
“உன்னை பெண் பார்த்துவிட்டு போனவங்க சீக்கிரம் திருமணம் வைக்கலாம் என்று சொல்றாங்க மதும்மா என்ன பண்ணலாம்..?” என்று மகளிடமே கேட்டார் சேகர்..
அவர் சொன்னதை கேட்டு அதிர்ச்சி அடையாமல், “அப்பா எனக்கு அந்த மாப்பிள்ளை பிடிக்கவில்லை.. எனக்கு இந்த திருமணத்தில் இஸ்டம் இல்லப்பா..” என்று நேரடியாக சொன்னாள்..
அவளிடம் இருந்து இந்த பதிலை எதிர்பார்க்காத சேகர், “சரிம்மா உனக்கு பிடிக்கவில்லை என்றால் வேண்டாம்.. நாங்க வேற மாப்பிள்ளை பார்க்கிறோம்..” என்று சொல்லவும் அவள் அமைதியாக இருந்தாள்..
“சரிம்மா நீ வேலையைப் பாருடா.. நான் அப்புறம் பேசுகிறேன்..” என்று இணைப்பை துண்டித்தார் சேகர்.. அவர் போனை வைத்தும் அதையே பார்த்தவள் முன்னே வந்து நின்றாள் சஞ்சனா..