• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Nesitha Iru Nenjangal - 27

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அத்தியாயம் – 27

மதுமிதாவின் வீட்டின் முன்னே ஸ்கூட்டியை நிறுத்தியவள், மதுமிதா இன்னமும் இறங்காமல் அமர்ந்திருப்பதுப் பார்த்து, “மதும்மா உன்னோட கனவில் இருந்து வெளியே வா..” என்று கூறவும், அவளின் வண்டியை விட்டு இறங்கினாள் மதுமிதா..

அவள் வீட்டிற்குள் செல்ல இவள் தயங்கமாக அவர்களின் வீட்டின் முன்னே நிற்க, அவள் தயங்குவதைக் கண்டு, “ஹலோ மேடம் என்ன தயக்கம் உள்ளே வா..” என்று வராதவளை பிடித்து வீட்டிற்குள் அழைத்துச் சென்றாள்..

அவர்களின் பின்னோடு வந்த ரஞ்சித், “என்ன தயக்கம் மது, எங்கள் இருவரையும் விட நீதான் பக்கத்தில் இருக்க, ஏதாவது பிரச்சனை என்றால் எங்களுக்கு சொல்ல ஆள் வேண்டாமா வா..” என்று உள்ளே அழைத்துச் சென்றான்..

வீட்டிற்குள் இருந்த சக்திவேல், ராதிகா இருவருக்கும் வந்திருக்கும் அந்த புதிய நபர் யார் என்ற எதிர்பார்ப்பில் வாசலுக்கு விரைய, சஞ்சனா, ரஞ்சித்துடன் உள்ளே நுழைந்தாள் மதுமிதா..

அவளைப் பார்த்தும் சக்திவேல், “இந்த பொண்ணு இங்கே எப்படி..?!” என்று ரஞ்சித்தியின் காதை கடித்தான்..

“அதை அவனிடம் கேட்டு என்ன பயன்..?! இதோ நிற்கிறாளே இவளையே கேளுங்கள்..” என்று சொன்னவன்,

“ராதி அண்ணி எனக்கு செம பசி அண்ணி.. என்ன சமையல் அண்ணி..?” என்று கேட்டுக் கொண்டே சென்று சோபாவில் அமர்ந்தான்..

ராதியோ, “சஞ்சனா இவங்களை எங்கே பார்த்தாய்..? இப்பொழுது இங்கே எதுக்கு அழைத்து வந்தாய்..?” என்று கேட்டதும்,

“இவளுக்கு மரியாதை எல்லாம் வேண்டாம் அக்கா.. இவள் என்னோட உயிர் தோழி.. திருச்சியில் இருந்து வேலைக்காக இங்கே வந்திருக்கிறாள்.. உங்களின் பக்கத்துவீட்டு தங்கி இருக்கிறாள்..” என்று சொன்னதும்,

“எங்களை இங்கே வீட்டை பார்த்து வைக்கும் பொழுதே காவலுக்கு ஒரு ஆளையும் ரெடி செய்கிறேன் என்று சொன்னதை செய்துவிட்டாயா..?” என்று சக்திவேல் தலையில் கையை வைத்து சோபாவில் அமர,

“என்ன நீங்க இருவரும் வந்த எங்களை வாசலில் நிற்க வைத்தே பேசி அனுப்பும் எண்ணத்தில் இருக்கீங்களா..?” என்று இடையில் கையூன்றி முறைத்தவளை, “நீ உள்ளே வாடா..” என்று அழைக்க, “நீயும் வாடா..” என்று மதுவையும் அழைத்தனர் சக்திவேலும், ராதிகாவும்..

வீட்டிற்குள் நுழைந்ததும் ரஞ்சித் அருகில் சென்று அமர்ந்தாள் சஞ்சனா.. சக்தியும், ராதியும் ஒரு சோபாவில் அமர்ந்துக் கொள்ள, மதுமிதா மட்டும் ஒரு சோபாவில் அமர்ந்தாள்..

“அக்கா இவள் மதுமிதா..” என்று அவளின் பெயரை சொல்லி அறிமுகம் செய்து வைத்தவள், “உங்களைப் பற்றி அவளுடம் சொல்லிவிட்டேன்.. நாங்கள் இருவரும் இல்லாத அல்லது வரமுடியாத சூழலில் அவள் உங்களைப் பார்த்துக் கொள்வாள்..” என்று தெளிவாக கூறினாள்.. ரஞ்சித் எதுவும் சொல்லாமல் நடப்பதை மட்டும் கவனித்தான்..

அவள் சொன்னதை கேட்டு ராதிகாவின் முகம் மாறியது.. அவளின் அருகில் சென்று அமர்ந்த சஞ்சனா, “அக்கா பிரிண்ட்ஷிப் குள்ள ஒளிவு மறைவு வரக்கூடாது.. நான் அவளிடம் சொல்லிவிட்டேன்.. அது என்னோட தப்பு என்றால் என்னை திட்டுங்கள்.. அதுவே அவளும் நம்மில் ஒருத்தி என்று நினைத்தால் என்ன செய்ய இஷ்டமோ செய்ங்க..” என்று சொல்லவும் கணவனைத் திரும்பிப் பார்த்த ராதிகா,

“நான் இன்னைக்கு சமையல் செய்திருக்கேன்.. வாங்க நால்வரும் சாப்பிடலாம்..” என்று அழைத்தவள் நின்று, “இன்னைக்கு நான் சமையல் நாளை உன்னோட சமையல் இங்கே வந்துவிட வேண்டும் மது..” என்று அவளை மிரட்ட,

அதுவரை அமைதியாக இருந்தவள், “ஐயோ அக்கா எனக்கு சமைக்கவே தெரியாது..” என்று உதட்டை பிதுக்கவும், ராதிக்கும் சக்திக்கும் பாவமாக இருக்க, ரஞ்சித் ‘இதில் ஏதாவது உள் குத்து இருக்குமோ..?!’ என்று யோசனையில் இருக்க, சஞ்சனவோ ‘நடத்துமா நடத்து..’ என்று பார்வையால் சொன்னாள்..

அவளின் பார்வையின் பொருள் உணர்ந்த ரஞ்சித், “அடுத்து இவங்க இருவரையும் வைத்து உங்களின் விளையாட்டை ஆரமித்துவிட்டீங்களா..?” என்று கேட்ட ரஞ்சித்,

“அண்ணி அந்த லூசு பொய் சொல்லுது நம்பாதீங்க..” என்று சொல்லவும், மதுவின் முகத்தைப் பார்த்த ராதிகா, “இந்த முகத்தைப் பார்த்தால் உனக்கு பொய் சொல்வது போல இருக்கிறதா..?” என்று கேட்டது..

“அப்படி சொல்லுங்க அக்கா..” என்று சொன்னவளின் முகத்தில் குறும்புக் கூத்தாடா, “ஐயோ அண்ணி விழுந்துட்டீங்களே..?!” என்று சொன்னதும், மதுமிதா, சஞ்சனா இருவரும் சிரிக்க, சக்திவேல் ஒன்றும் புரியாமல் மனைவியைப் பார்க்க அவளும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்..

“இதுகளின் பால் வடியும் முகத்தை வைத்து நல்ல பிள்ளைகள் என்று நம்பாதீங்க.. இது இரண்டும் ஊரையே வித்துவிட்டு வந்துவிடும்..” என்று சொல்லவும்,

“வருகிற வழியில் இவனை விற்காமல் வந்தது தப்பாகப் போய்விட்டது..” என்று மதுமிதா சொல்லவும், அவளுக்கு ஹை – பை கொடுத்தாள் சஞ்சனா..

அதை பார்த்தும் ரஞ்சித், “நான் சொன்னனே கேட்டிங்களா..?!” என்று கேட்டவன், காலையில் நடந்ததை விளக்கமாக விளக்க, சக்தியும், ராதியும் சிரித்துவிட்டனர்..

“ஒரே நாளில் இவ்வளவு நடந்திருக்கிறதா..?!” என்று கேட்ட சக்திவேல், மதுவின் முகத்தைப் பார்த்து ராதிகாவிடம், “என்னோட தம்பியைப் போலவே குறும்புத்தனம் செய்கிறாள்.. அவனுக்கு சரியான ஜோடி இவள் தான்..!” என்று சொன்னான்..

“சரி எல்லோரும் எழுந்து சாப்பிட வாங்க..” என்று அழைக்க மதுமிதா இன்னமும் தயக்கமாக நிற்க, அவளின் அருகில் வந்த ராதிகா, “எனக்கு அக்கா, தங்கை யாருமே இல்லை மது! உன்னை என்னோட தங்கையாய் நினைக்கிறேன்.. உன்னோட வீட்டில் சாப்பிட நீ இப்படித்தான் தயங்குவியா..?!” என்று கேட்டது,

மதுவிற்கு இருந்த தயக்கம் மாறி அனைவரும் கேலியும் கிண்டலுமாக சாப்பிட்டு முடித்து ரஞ்சித், சஞ்சனாவும் கிளம்பவும், மது அவளின் வீட்டிற்கு வந்தாள்..

அந்த வீட்டில் அவள் இதுவரை இல்லாத நிறைவை உணர்ந்தாள்.. இப்படி காலையில் அலுவலகத்தில் வேலை ப்ளஸ் கேலி, கிண்டல் என்று செல்ல, சக்தியும் ஒரு அலுவலகத்தில் மேனேஜர் வேலைக்கு சென்றான்..

மாலையில் அனைவரும் சந்தோசமாக பேசி சிரித்து பொழுது அழகாக கழியும்.. மதுவிற்கு தன்னுடைய அப்பா அம்மா இருப்பதே மறந்து போனது இவர்களின் நட்பால்!

அவளின் தங்கை கயல்விழி மட்டும் அடிக்கடி போன் செய்து பேசுவாள்.. அதனால் அந்த குடும்பத்தில் புதிய வரவாக கயல்விழியும் சேர்க்கப்பட்டாள்..!

இவள் மதுரை வந்து ஒரு மாதம் சென்றபின் சேகர் அழைத்தார்.. அப்பா போன் செய்கிறார் என்றதும் முகம் மாறியபடி எழுந்து சென்ற சமதுவின் முகத்தை கவனித்தாள் சஞ்சனா..

‘அப்பா போன் செய்தாள் இவளின் முகம் ஏன் மாறுகிறது..?’ என்ற யோசனையில் தனது வேலையைத் தொடர்ந்தாள்.. அப்பாவின் அழைப்பை எடுத்தவள்,

“ஹலோ அப்பா எப்படி இருக்கீங்க..? அம்மா எப்படி இருக்காங்க..?” என்று கேட்டாள்..

“நாங்கள் நல்ல இருக்கிறோம் மதும்மா.. நீ எப்படி இருக்கிறாய்..?” என்று கேட்டார் சேகர்..

“ம்ம் நல்ல இருக்கிறேன் அப்பா..” என்று பதில் சொன்னவள், “என்னப்பா விஷயம் ஆபீஸ் டைமில் கூப்பிடு இருக்கீங்க..?” என்று கேட்டாள்..

“உன்னை பெண் பார்த்துவிட்டு போனவங்க சீக்கிரம் திருமணம் வைக்கலாம் என்று சொல்றாங்க மதும்மா என்ன பண்ணலாம்..?” என்று மகளிடமே கேட்டார் சேகர்..

அவர் சொன்னதை கேட்டு அதிர்ச்சி அடையாமல், “அப்பா எனக்கு அந்த மாப்பிள்ளை பிடிக்கவில்லை.. எனக்கு இந்த திருமணத்தில் இஸ்டம் இல்லப்பா..” என்று நேரடியாக சொன்னாள்..

அவளிடம் இருந்து இந்த பதிலை எதிர்பார்க்காத சேகர், “சரிம்மா உனக்கு பிடிக்கவில்லை என்றால் வேண்டாம்.. நாங்க வேற மாப்பிள்ளை பார்க்கிறோம்..” என்று சொல்லவும் அவள் அமைதியாக இருந்தாள்..

“சரிம்மா நீ வேலையைப் பாருடா.. நான் அப்புறம் பேசுகிறேன்..” என்று இணைப்பை துண்டித்தார் சேகர்.. அவர் போனை வைத்தும் அதையே பார்த்தவள் முன்னே வந்து நின்றாள் சஞ்சனா..
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
“என்ன மதுமிதா முகம் எல்லாம் ஒரு மாதிரி இருக்கிறது..” என்று கேட்டது, அவளைப் பார்த்து சிரித்தவள், “யாருக்கு எனக்கா..?” என்று கேலியாக கேட்டவண்ணம் சமாளிக்க,

“என்னடி சமாளிக்கிறாய்..? என்ன விஷயம் சொல்லு..” என்று கேட்டது, அவளை நிமிர்ந்து பார்த்தவள்,

“ஒன்றும் இல்ல சஞ்சனா..” என்று அவளை விட்டு விலகி நடக்க, அவளின் எதிரே வந்து வழியை மறித்தாள் சஞ்சனா..

“என்ன என்பதை என்னிடம் சொல்லிவிட்டு போ..” என்று அவளிடம் கேட்கவும், அவளைக் கட்டியணைத்து அழுதுவிட்டாள் மதுமிதா..

திடீரென தன்னுடைய தோழி தோளில் சாய்ந்து அழுகவும், அவளை தோளில் சாய்த்து அமைதிப்படுத்தியவள், ஆபீசிற்கு லீவ் சொல்லிவிட்டு வந்து வண்டியை எடுத்தவள் பூங்காவின் முன்னே வண்டியை நிறுத்தினாள்..

அவளை அழைத்து சென்று ஒரு மரத்தின் அடியில் இருந்த சிமிண்ட் பெஞ்சில் அமர்ந்து அவளையே பார்க்க, அவள் அவளின் காலடியில் சிதறிக்கிடக்கும் பூக்களை பார்த்த வண்ணம் அமைதியாக அமர்ந்திருந்தாள்..

“மதுமிதா எதுக்கு அப்படி அழுதாய்..?” என்று மெல்ல அவளிடம் கேட்டாள்.. அவள் அமைதியாக இருக்கவும்,

“உனக்கு அந்த திருமணத்தில் இஸ்டம் இல்லையா..? நீ வேற யாரையாவது விரும்புகிறாயா..?” என்று கேட்டதும் அவளின் முதல் கேள்விக்கு இல்லை என்று தலையடைத்தவள், அவளின் இரண்டாவது கேள்விக்கு ஆம் என்று தலையசைத்தாள்..

அவள் அப்படி தலையசைத்ததும், “எனக்கு கூட தெரியாமல் யாரை நீ காதலித்தாய்..?அவரின் பெயர் என்ன..?” என்று நேரடியாகக் கேட்டாள்..

அதுவரை அமைதியாக இருந்தவள், “ரோஹித்..” என்று சொல்லவும், அவளின் முகத்தைப் பார்த்து, “அவர் இப்பொழுது எங்கே இருக்கிறார்...?” என்று கேட்டாள்..

அவளும் இங்கு வந்த நாளில் இருந்து அவளின் செல்லிற்கு வரும் போன் செய்யும் நபர்கள் அவளின் குடும்பம் மற்றும் அவளுடன் வேலை செய்த இரண்டு மூன்று பிரிண்ட்ஸ் மட்டுமே..

மற்ற நேரங்களில் அவள் அதிகம் இருப்பது இவர்களுடன் தான்..! இவள் காதலிக்கிறேன் என்று சொல்வதை அவளால் நம்பகூட முடியவில்லை..!

“சரிடி நீயும் அவரும் எப்பொழுது காதலிக்க ஆரமித்தீர்கள்..?!” என்று கேட்டது மதுவின் முகத்தில் புன்னகை தானாக மலர்ந்தது!

“காலேஜ் படிக்கும் பொழுதா..?” என்று அவளின் புன்னகை பார்த்துக் கேட்டாள் சஞ்சனா..

அவளின் கேள்விக்கு இல்லை என்று தலையசைத்தவள், “நான் பத்தாம் வகுப்பு படிக்கும் பொழுது நாங்கள் காதலிக்க ஆரமித்தோம்..” என்று சொல்ல,

“என்னது பத்தாவது படிக்கும் பொழுதா..?!” என்று நம்பாமல் கேட்டவள், “அப்பொழுது நான் திருச்சியில் தானே இருந்தேன்..?!” என்று சொன்னவள்,

“நான் அவரை பார்த்தே இல்லையே..?” என்று கேட்டாள்.. அவர்களின் காதலைச் சொல்ல விழிவிரிய கேட்ட சஞ்சனா, “ஒரு மாதத்திலேயே பிரிந்து விட்டீர்களா..?” என்று கேட்டவள்,

“சரிம்மா அப்பொழுது அவரை பற்றி வீட்டில் சொல்ல வேண்டியது தானே..?” என்று சந்தேகமாக கேட்டாள் சஞ்சனா.. அவளின் கேள்விக்கு அவளைப் பார்த்து கசந்த புருவல் மட்டும் மதுவின் முகத்தில் தோன்றி மறைந்தது..

“அவர் என்னிடம் வேண்டும் என்றே சண்டை போட்டு பிரிந்து செல்லவில்லை சஞ்சனா.. நான் தவறாக பேசியிருந்தாலும் இரண்டு அடித்து கூட எனக்கு புரிய வைத்திருக்கலாம் அவர்..” என்று வருத்தத்துடன் கூறியவளின் முகத்தைப் பார்த்தாள் சஞ்சனா..

“ஆனால் அவர் அதை செய்யாமல், நானே உண்மையை உணர வேண்டும் என்று என்னை விட்டு விலகி சென்றுவிட்டார்.. அவர் உடன் இருந்திருந்தால் அவரை விட்டு நான் பிரியும் சூழல் கூட வந்திருக்கும்.. ஆனால் அதையெல்லாம் அவர் முதலிலேயே யோசித்தார் போல..” என்று சொன்னவளின் கண்கள் கலங்கியது..

“என்ன நடந்தது என்று எனக்கு தெளிவாக சொல்லு..” என்று அவளிடம் கேட்டாள் சஞ்சனா..

“நானும் அவரும் முதல் நாள் ஹோஸ்பிடலில் சந்தித்து அப்பாவிற்கு தெரிந்து என்னை கண்காணித்து இருக்கிறார்.. அதன் பிறகு நான் அவருடன் வெளியே சென்றதை என்னோட அம்மா பார்த்திருக்காங்க..” என்று சொன்னவள் நிறுத்த,

“அடியே அப்புறம் என்ன நடந்தது..?” என்று கேட்டாள் சஞ்சனா..

‘;அதன்பிறகு அவரை சந்தித்து பேசவும், அவர் எங்களின் படிப்பு முடிந்ததும் வீட்டில் சொல்லி வீட்டில் வந்து பெண் கேட்பதாக சொல்லியிருக்கிறார்..’ என்று சொன்னதும் என்னோட அப்பா, அம்மா இருவரும்,

“இதே முடிவை முதலில் எடுத்த நாங்களே கடையில் சேரமுடியாத நிலையில் வீட்டை விட்டு ஓடிவந்து திருமணம் செய்தோம்.. இவளை என்னோட வீட்டில் யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை.. நாங்க கடைசியில் திருமணம் செய்து திருச்சி வந்துவிட்டோம்.. அதன்பிறகு சிலவருடம் குழந்தை இல்லாமல் இருந்து நாங்கள் பெற்ற பெண்தான் மதுமிதா..” என்று சொல்லவும்,

‘இப்பொழுது என்ன சொல்ல வரீங்க..?’ என்று நேரடியாக கேட்டிருக்கிறார்..

“உங்களின் வீட்டில் முதலில் உங்களுக்காக சம்மதித்தாலும் கடைசியில் திருமணம் ஆனபிறகு என்னோட பெண்ணை கொடுமைதான் படுத்துவாங்க.. அதனால் இந்த காதலை விட்டுவிட்டு, என்னோட பெண்ணை என்னிடம் ஒப்படைத்துவிட்டு நீ செல்லலாம்..” என்று சொல்லவும்,

“காதலை விட என்னோட குடும்பம் தான் எனக்கு முக்கியம் என்று சொல்வாள்.. ஏன் சொல்கிறேன் என்றால் அவள் என்னோட பொண்ணு..” என்று சொல்லவும்,

‘அவள் அப்படி சொல்ல மாட்டாள்..’ என்று சொல்லியிருக்கிறார்.. அதன்பிறகு நாங்கள் சந்தித்த சந்திப்பில், நான் அவரின் நம்பிக்கையை உடைத்து விட்டேன்.. நானும் அதையே சொல்லவும், ‘உன்னோட அப்பா, அம்மா பற்றி நீயே ஒருநாள் தெரித்துக் கொள்வாய்..’ என்று சொல்லிவிட்டு போய்விட்டார்..

“அவர் சொன்னது எனக்கு இப்பொழுது தான் புரிகிறது.. ஆனால் அவர் பிரிந்த நாளில் இருந்து என்னோட மனது அவரிடம் தான் இருக்கிறது.. நான் அவரை உயிராக நேசிக்கிறேன்.. என்னால் வேறு நபரை ஏற்றுக்கொள்ள முடியாது என்று இங்கே வந்துவிட்டேன்..” என்று கண்ணீர் விட்டவளை தோளோடு அணைத்துக் கொண்டாள் சஞ்சனா..

“அவர் உன்னை பிரிந்த இந்த ஏழு வருடத்தில் அவரின் மனதில் வேறு பெண் இடம் பிடித்திருந்தால்..?” என்று கேட்டாள் சஞ்சனா..

“இல்ல சஞ்சனா..?! அவர் அப்படி கிடையாது.. என்னோட பழகிய அந்த ஒருமாதம் உங்களுக்கு சாதாரணம்.. ஆனால் அவர் மனதில் இன்னொரு பெண் இடம் பிடிக்கவே முடியாது.. அவர் இன்னும் எத்தனை வருடம் சென்றாலும் என்னை தேடி வருவார்.. அவர் வரும் நாள் எதிர்பார்த்து நான் காத்திருப்பேன்..” என்று சொல்லவும்,

‘அவர்களின் சுயநலத்திற்கு இவளின் வாழ்க்கையை கேள்விக்குறியாக மாற்றிவிட்டனர்’ என்று மனதில் நினைத்தாள் சஞ்சனா...

‘அவர்களுக்கு நடந்தது தான் மற்றவருக்கும் நடக்கும் என்று நினைப்பது அவளுக்கே முட்டாள் தனமான காரியமாக தெரிந்தது.. அவளின் காதலும் அவளின் காத்திருப்பும் கைகூட வேண்டும்’ என்று தெய்வத்தை வேண்டிக்கொண்டாள் சஞ்சனா..

அதன் பிறகு அவளை தேற்றி அவளை அவளின் வீட்டில் கொண்டு போய் விட்டு விட்டு சென்றாள் சஞ்சனா.. அவள் தன் நம்பிக்கையை உடைக்காமல் காத்திருக்கிறாள் என்னை நேரில் பார்க்கும் அந்த நாளுக்காக! அதை படித்தவன் கண்கள் கண்ணீர் நிறைந்தது..

‘அவளின் காதலியின் காத்திருப்பு கைகூடும் வேளையில் இப்படி ஒரு சோதனை வரவேண்டுமா..?!’ என்று கேட்டது அவனின் மனம்..!
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சந்தியா ஸ்ரீ டியர்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top