அத்தியாயம் – 4
விமான நிலையத்தின் உள்ளே நுழைந்த கயல்விழி, அவளின் அன்னையின் பக்கம் திரும்பி, “அம்மா நீங்க கிளம்புங்க..” என்று அன்னையிடம் சொன்னவள்,
“அப்பா அம்மாவைப் பார்த்துக் கொள்ளுங்கள்.. நான் டெல்லி போயிட்டு உங்களுக்கு போன் செய்கிறேன்..” என்று சொல்ல,
“பார்த்து பத்திரமாக இருக்க வேண்டும் உன்னோட மீட்டிங் நல்ல படியாக முடித்துக்கொண்டு நேராக வந்துவிடும்மா..” என்று அமுதா அவளிடம் சொல்ல,
“அமுதா அவள் ஒன்னும் சின்னப்பெண் கிடையாது.. அவளுக்கு எல்லாம் தெரியும்..” என்று மனைவிக்கு சொன்னவர்,
“கயல் கொஞ்சம் ஜாக்கரதையாக இருக்க வேண்டும்..” என்று சொல்ல சரி என்று மட்டுமே கயல் தலை ஆட்டினாள்..
ஆனால் அவளின் விழிகள் மற்ற ஒரு முக்கியமான நபரின் வரவை எதிர்பார்த்து விமான நிலையம் முழுவதிலும் வலம் வந்தது.. ஆனால் அவள் எதிர்ப்பார்த்த நபர் மட்டும் கண்ணிலே படவே இல்லை..
“சரிம்மா செக்கிங் முடிந்து பத்திரமாகப் போ.. டெல்லி போய்விட்டு மறக்காமல் எனக்கு போன் பண்ணும்மா..” என்று கயலிடம் சொன்னவர், மனைவியை அழைத்துக்கொண்டு செல்ல அவர்கள் செல்வதைப் பார்த்துக் கொண்டே நின்ற கயல் அந்த இடத்தை தனது பார்வையால் சலித்து எடுத்தாள்..
ஆனாலும் அவள் தேடலில் பலன் பூஜ்யமே..! அவள் இதுவரை அவளின் அக்காவிடம் சொல்லாமல் எந்த காரியமும் செய்ததே இல்லை.. ஆனால் இன்று தான் அவளைப் பார்த்தே ஆகவேண்டும் என்ற பிடிவாதத்தில் இருந்தாள்..
அவள் அங்கே இல்லை என்று அறிந்த மறுநொடி, தனது அலைபேசியை எடுத்தவள் மதுவிற்கு அழைத்தாள்.. ஆனால் அவளின் அக்கா அந்த அழைப்பை எடுக்கவே இல்லை..
‘நீங்கள் அழைக்கும் நபர் தொடர்பு எல்லைக்கு வெளியே உள்ளார்.. தயவுசெய்து பிறகு முயற்சிக்கவும்..’ என்று அவளின் அழைப்பிற்கு பதில் வந்தது..
ஆனால் அதை ஒரு முயற்சியில் விட்டுவிட்டால் அவள் பெயர் கயல்விழி அல்லவே..! தொடர்ந்து முயற்சி செய்துக்கொண்டே இருந்தாள்..
அவள் எந்த இடத்தில் நிற்கிறாள்.. அவளைச் சுற்றி என்ன நடக்கிறது..?! மற்றவர்கள் கண்ணிற்கு தான் ஒரு காட்சி பொருளாகப் படுகிறோம் என்ற கவலை எல்லாம் அவளுக்கு இல்லை..
அவளுக்கு இப்பொழுது தேவை அவளின் அக்கா மட்டுமே..! வெறி பிடித்தவள் போல அலைபேசியை அழைத்துக் கொண்டிருந்த கயல்விழியின் அருகில் வந்தான் ஜீவானந்தம் என்கிற ஜீவா
“கயல்..?!” என்று ஜீவா அழைக்க, அவனைத் திரும்பிப் பார்த்தவள்,
“ஜீவா அவளுக்கு என்மேல் என்னடா கோபம்..?! நான் அவளை முழுவதுமாகத் தானே புரிந்து வைத்திருக்கிறேன்..?!” என்று கண்களில் கண்ணீர் வழிய அவள் கேட்க,
அவளின் கண்களில் கண்ணீரைப் பார்த்தவன்,“கயல் என்ன கயல் இப்படி பண்ணுகிறாய்..? கண்ணை முதலில் துடை..” என்று அவன் கண்டிக்க,
“டேய் நானே என் அக்காவைப் பார்க்க முடியலை என்ற கடுப்பில் இருக்கிறேன்.. நீயும் வந்து அட்வைஸ் பண்ணாதே.. உன்னோட அட்வைஸ் கேட்க நான் தயாராக இல்லை..” என்று அவளின் மொத்தக் கோபத்தை அவனிடம் காட்ட,
‘நீயெல்லாம் ஒரு பொண்ணு என்று பேசவந்தேன் பாரு.. என்னை என் காலில் இருப்பதைக் கலட்டி நானே தலை தலையாய் அடித்துக் கொள்ள வேண்டும்..’ என்று மனதிற்குள் புலம்பினான் ஜீவா
“நீ வருகிறாயோ இல்லையோ இப்பொழுது பிளைட் கிளம்பிவிடும்..” என்று சொன்ன ஜீவா உள்ளே செல்ல தன்னுடைய வலது காலைக் குழந்தை போல உதறிக்கொண்ட கயல் அவனைப் பின்தொடர்ந்தாள்.. அவள் சிறிய பெண்போல பண்ணுவதைப் பார்த்து ஜீவாவிற்கு சிரிப்புதான் வந்தது..!
ஜீவா அவளுடன் வேலை செய்யும் கம்பெனியில் அவனும் அவளுடன்தான் பணிபுரிகிறான்.. இப்பொழுது கம்பெனி மீட்டிங் விஷயமாக இருவரும் செல்கின்றனர்..
ஜீவாவிற்கு கயல் என்றாலே ஒரு விருப்பம்.. எது பற்றியும் கவலை கிடையாது.. தான் நினைக்கும் ஒன்றை நொடியில் சாதிப்பவள் அதுவும் அடம் என்ற பெயரில்..!
அவளை ஏன் பிடித்தது..?! எதுக்கு பிடித்தது..?! என்ற கேள்விகளுக்கு அவனிடம் பதில் கிடையாது..
எப்பொழுதும் சிரித்தவண்ணம் இருப்பவள், அவளின் அக்கா மதுவை நினைத்தால் மட்டுமே அவளின் கண்களில் கண்ணீர் வரும்!
ஆனால் ஜீவா இன்னும் மதுவைப் பார்த்தே கிடையாது.. அவளின் பெயரைத் தவிர எதுவும் தெரியாது.. ஆனால் அவளை ஒருமுறை பார்க்க வேண்டும் என்று மட்டும் ஜீவா அடிக்கடி நினைப்பது உண்டு.. காரணம் இந்த கயல்விழிதான்..
இப்படி சின்ன சின்ன விஷயத்தில் கயலை அவனுக்கு ரொம்ப பிடிக்கும்.. நான் வழக்கமாக பயன்படுத்தும் வாக்கியம் தான், ‘எல்லாம் இந்த காதல் படுத்தும் பாடு..’ என்பதேயாகும்!
அவளின் அக்கா திருமணத்திற்கு ஓகே சொன்னால் மட்டும் போதும் கயல்விழியைத் தூக்கிச் செல்லும் முயற்சியில் இருக்கிறான் ஜீவா..!
கயல்விழியை அனுப்பிவிட்டு வந்த அவளின் அன்னை அமுதாவிற்கு அவளின் மூத்த மகள் நினைவே வந்தது..
“ஒருத்தியை மதுரை அனுப்பி வைத்து அவள் செய்த காரியம் இன்னும் என்னோட மனதில் மாறாத ரணமாகவே இருக்கிறது.. இவள் இப்போ டெல்லி செல்கிறாள்..” என்று அமுதா ஆரமிக்கும் போதே,
அவரைத் தடுத்த சேகர், “அமுதா அவளைப் பற்றி பேசாதே.. அவள் செத்து போய் இரண்டு வருடம் ஆகிவிட்டது..” என்று உக்கிரமான கோபத்தில் சொன்னவர்,
தங்களின் காரை நோக்கிச் செல்ல கணவனின் கோபம் அறிந்த அமுதா அவரைப் பின்தொடர்ந்தார்.. தங்களின் காரில் ஏறி அமர்ந்த இருவரும், தங்களின் வீடு நோக்கிப் பயணம் செய்தனர்..
இங்கே இவர்களின் பயணம் எந்தவிதமான தடங்களும் இன்றி வீடு வந்து சேர, தஞ்சை வந்தவர்கள் பஸ் நிலையம் தாண்டி பிரிந்த மண் ரோட்டில் உள்ளே செல்ல, பசுமையான மரங்கள் இரண்டு பக்கமும் அணிவகுத்து நின்றது...
அதை வேடிக்கை பார்த்த வண்ணம் சுற்றி தெரிந்த விளைநிலங்களும் அந்த நெல் வயலுக்கு நடுவில் ஒற்றைக் காலில் நிற்கும் வெள்ளை நாரைகளும், காட்டு வேலை செய்யும் மனிதர்களையும் வேடிக்கைப் பார்க்க கீர்த்திக்கு மிகவும் பிடித்திருந்தது...
அந்த வீட்டை நோக்கி செல்ல வெளியே சுற்றியும் தோட்டம், உள்ளே செல்ல மண்வழிப்பாதை, அந்த வீட்டை சுற்றியும் இருந்த ஆறடி மதில் சுவர், உள்ளே சென்றதும் காரை நிறுத்த ஒரு இடம்! அந்த வீட்டின் முன்னே பலவகையான பூச்செடிகள் பூத்துக்குலுங்கிக் கொண்டிருந்தது! காரில் இருந்து முன்னே இறங்கிய கல்யாணி, ஆரத்திக் கரைத்துவர உள்ளே செல்ல,
விமான நிலையத்தின் உள்ளே நுழைந்த கயல்விழி, அவளின் அன்னையின் பக்கம் திரும்பி, “அம்மா நீங்க கிளம்புங்க..” என்று அன்னையிடம் சொன்னவள்,
“அப்பா அம்மாவைப் பார்த்துக் கொள்ளுங்கள்.. நான் டெல்லி போயிட்டு உங்களுக்கு போன் செய்கிறேன்..” என்று சொல்ல,
“பார்த்து பத்திரமாக இருக்க வேண்டும் உன்னோட மீட்டிங் நல்ல படியாக முடித்துக்கொண்டு நேராக வந்துவிடும்மா..” என்று அமுதா அவளிடம் சொல்ல,
“அமுதா அவள் ஒன்னும் சின்னப்பெண் கிடையாது.. அவளுக்கு எல்லாம் தெரியும்..” என்று மனைவிக்கு சொன்னவர்,
“கயல் கொஞ்சம் ஜாக்கரதையாக இருக்க வேண்டும்..” என்று சொல்ல சரி என்று மட்டுமே கயல் தலை ஆட்டினாள்..
ஆனால் அவளின் விழிகள் மற்ற ஒரு முக்கியமான நபரின் வரவை எதிர்பார்த்து விமான நிலையம் முழுவதிலும் வலம் வந்தது.. ஆனால் அவள் எதிர்ப்பார்த்த நபர் மட்டும் கண்ணிலே படவே இல்லை..
“சரிம்மா செக்கிங் முடிந்து பத்திரமாகப் போ.. டெல்லி போய்விட்டு மறக்காமல் எனக்கு போன் பண்ணும்மா..” என்று கயலிடம் சொன்னவர், மனைவியை அழைத்துக்கொண்டு செல்ல அவர்கள் செல்வதைப் பார்த்துக் கொண்டே நின்ற கயல் அந்த இடத்தை தனது பார்வையால் சலித்து எடுத்தாள்..
ஆனாலும் அவள் தேடலில் பலன் பூஜ்யமே..! அவள் இதுவரை அவளின் அக்காவிடம் சொல்லாமல் எந்த காரியமும் செய்ததே இல்லை.. ஆனால் இன்று தான் அவளைப் பார்த்தே ஆகவேண்டும் என்ற பிடிவாதத்தில் இருந்தாள்..
அவள் அங்கே இல்லை என்று அறிந்த மறுநொடி, தனது அலைபேசியை எடுத்தவள் மதுவிற்கு அழைத்தாள்.. ஆனால் அவளின் அக்கா அந்த அழைப்பை எடுக்கவே இல்லை..
‘நீங்கள் அழைக்கும் நபர் தொடர்பு எல்லைக்கு வெளியே உள்ளார்.. தயவுசெய்து பிறகு முயற்சிக்கவும்..’ என்று அவளின் அழைப்பிற்கு பதில் வந்தது..
ஆனால் அதை ஒரு முயற்சியில் விட்டுவிட்டால் அவள் பெயர் கயல்விழி அல்லவே..! தொடர்ந்து முயற்சி செய்துக்கொண்டே இருந்தாள்..
அவள் எந்த இடத்தில் நிற்கிறாள்.. அவளைச் சுற்றி என்ன நடக்கிறது..?! மற்றவர்கள் கண்ணிற்கு தான் ஒரு காட்சி பொருளாகப் படுகிறோம் என்ற கவலை எல்லாம் அவளுக்கு இல்லை..
அவளுக்கு இப்பொழுது தேவை அவளின் அக்கா மட்டுமே..! வெறி பிடித்தவள் போல அலைபேசியை அழைத்துக் கொண்டிருந்த கயல்விழியின் அருகில் வந்தான் ஜீவானந்தம் என்கிற ஜீவா
“கயல்..?!” என்று ஜீவா அழைக்க, அவனைத் திரும்பிப் பார்த்தவள்,
“ஜீவா அவளுக்கு என்மேல் என்னடா கோபம்..?! நான் அவளை முழுவதுமாகத் தானே புரிந்து வைத்திருக்கிறேன்..?!” என்று கண்களில் கண்ணீர் வழிய அவள் கேட்க,
அவளின் கண்களில் கண்ணீரைப் பார்த்தவன்,“கயல் என்ன கயல் இப்படி பண்ணுகிறாய்..? கண்ணை முதலில் துடை..” என்று அவன் கண்டிக்க,
“டேய் நானே என் அக்காவைப் பார்க்க முடியலை என்ற கடுப்பில் இருக்கிறேன்.. நீயும் வந்து அட்வைஸ் பண்ணாதே.. உன்னோட அட்வைஸ் கேட்க நான் தயாராக இல்லை..” என்று அவளின் மொத்தக் கோபத்தை அவனிடம் காட்ட,
‘நீயெல்லாம் ஒரு பொண்ணு என்று பேசவந்தேன் பாரு.. என்னை என் காலில் இருப்பதைக் கலட்டி நானே தலை தலையாய் அடித்துக் கொள்ள வேண்டும்..’ என்று மனதிற்குள் புலம்பினான் ஜீவா
“நீ வருகிறாயோ இல்லையோ இப்பொழுது பிளைட் கிளம்பிவிடும்..” என்று சொன்ன ஜீவா உள்ளே செல்ல தன்னுடைய வலது காலைக் குழந்தை போல உதறிக்கொண்ட கயல் அவனைப் பின்தொடர்ந்தாள்.. அவள் சிறிய பெண்போல பண்ணுவதைப் பார்த்து ஜீவாவிற்கு சிரிப்புதான் வந்தது..!
ஜீவா அவளுடன் வேலை செய்யும் கம்பெனியில் அவனும் அவளுடன்தான் பணிபுரிகிறான்.. இப்பொழுது கம்பெனி மீட்டிங் விஷயமாக இருவரும் செல்கின்றனர்..
ஜீவாவிற்கு கயல் என்றாலே ஒரு விருப்பம்.. எது பற்றியும் கவலை கிடையாது.. தான் நினைக்கும் ஒன்றை நொடியில் சாதிப்பவள் அதுவும் அடம் என்ற பெயரில்..!
அவளை ஏன் பிடித்தது..?! எதுக்கு பிடித்தது..?! என்ற கேள்விகளுக்கு அவனிடம் பதில் கிடையாது..
எப்பொழுதும் சிரித்தவண்ணம் இருப்பவள், அவளின் அக்கா மதுவை நினைத்தால் மட்டுமே அவளின் கண்களில் கண்ணீர் வரும்!
ஆனால் ஜீவா இன்னும் மதுவைப் பார்த்தே கிடையாது.. அவளின் பெயரைத் தவிர எதுவும் தெரியாது.. ஆனால் அவளை ஒருமுறை பார்க்க வேண்டும் என்று மட்டும் ஜீவா அடிக்கடி நினைப்பது உண்டு.. காரணம் இந்த கயல்விழிதான்..
இப்படி சின்ன சின்ன விஷயத்தில் கயலை அவனுக்கு ரொம்ப பிடிக்கும்.. நான் வழக்கமாக பயன்படுத்தும் வாக்கியம் தான், ‘எல்லாம் இந்த காதல் படுத்தும் பாடு..’ என்பதேயாகும்!
அவளின் அக்கா திருமணத்திற்கு ஓகே சொன்னால் மட்டும் போதும் கயல்விழியைத் தூக்கிச் செல்லும் முயற்சியில் இருக்கிறான் ஜீவா..!
கயல்விழியை அனுப்பிவிட்டு வந்த அவளின் அன்னை அமுதாவிற்கு அவளின் மூத்த மகள் நினைவே வந்தது..
“ஒருத்தியை மதுரை அனுப்பி வைத்து அவள் செய்த காரியம் இன்னும் என்னோட மனதில் மாறாத ரணமாகவே இருக்கிறது.. இவள் இப்போ டெல்லி செல்கிறாள்..” என்று அமுதா ஆரமிக்கும் போதே,
அவரைத் தடுத்த சேகர், “அமுதா அவளைப் பற்றி பேசாதே.. அவள் செத்து போய் இரண்டு வருடம் ஆகிவிட்டது..” என்று உக்கிரமான கோபத்தில் சொன்னவர்,
தங்களின் காரை நோக்கிச் செல்ல கணவனின் கோபம் அறிந்த அமுதா அவரைப் பின்தொடர்ந்தார்.. தங்களின் காரில் ஏறி அமர்ந்த இருவரும், தங்களின் வீடு நோக்கிப் பயணம் செய்தனர்..
இங்கே இவர்களின் பயணம் எந்தவிதமான தடங்களும் இன்றி வீடு வந்து சேர, தஞ்சை வந்தவர்கள் பஸ் நிலையம் தாண்டி பிரிந்த மண் ரோட்டில் உள்ளே செல்ல, பசுமையான மரங்கள் இரண்டு பக்கமும் அணிவகுத்து நின்றது...
அதை வேடிக்கை பார்த்த வண்ணம் சுற்றி தெரிந்த விளைநிலங்களும் அந்த நெல் வயலுக்கு நடுவில் ஒற்றைக் காலில் நிற்கும் வெள்ளை நாரைகளும், காட்டு வேலை செய்யும் மனிதர்களையும் வேடிக்கைப் பார்க்க கீர்த்திக்கு மிகவும் பிடித்திருந்தது...
அந்த வீட்டை நோக்கி செல்ல வெளியே சுற்றியும் தோட்டம், உள்ளே செல்ல மண்வழிப்பாதை, அந்த வீட்டை சுற்றியும் இருந்த ஆறடி மதில் சுவர், உள்ளே சென்றதும் காரை நிறுத்த ஒரு இடம்! அந்த வீட்டின் முன்னே பலவகையான பூச்செடிகள் பூத்துக்குலுங்கிக் கொண்டிருந்தது! காரில் இருந்து முன்னே இறங்கிய கல்யாணி, ஆரத்திக் கரைத்துவர உள்ளே செல்ல,