அத்தியாயம் – 45
இரண்டு ஜோடிகளுக்கும் திருமணம் முடிந்ததும், திருமண மண்டபத்தில் எஞ்சி இருந்தது இந்த மூன்று குடும்பம் மட்டுமே.. கயல்விழி – ஜீவா இருவரையும் சென்னை அழைத்துச் செல்ல வீட்டில் உள்ள எல்லோரிடமும் சொல்லிவிட்டுச் செல்ல வந்தனர் இருவீட்டு பெரியவர்களும்...
திருமணம் முடிந்து வந்தவர்கள் சென்னை செல்ல ரோஹித் வீட்டில் உள்ள அனைவரிடமும், “நாங்க கிளம்புகிறோம்..” என்று சொல்லிவிட்டு மதுவிடம் வந்த சுசீலா, அவளின் நெற்றியில் முத்தமிட்டு,
“வீட்டுக்கு கண்டிப்பாக மூவரும் வரணும்.. அவங்க மட்டும் புது ஜோடி இல்ல நீங்களும் புதுஜோடிதான்..” என்று ரோஹித்தையும் மதுவையும் அழைத்தனர் ஜீவாவின் பெற்றோர்..
அவர்கள் அப்படி சொல்லவும் மதுமிதா ரோஹித்தைப் பார்க்க, அவனும் சரியென்று தலையசைக்க, இருவரையும் பார்த்த பெரியவர்கள் மனம் மகிழ்ந்தது..
அப்பொழுது அங்கே வந்த அபூர்வாவை அழைத்த மதுமிதா அவளைத் தூக்கிக்கொண்டு, “அபூக்குட்டி பாட்டி, தாத்தாவிற்கு பாய் சொல்லுங்க..” என்று சொல்ல மதுவையும், அவர்களையும் பார்த்தவள்,
“அம்மா கொஞ்சம் என்னை கொஞ்சம் இறக்கிவிடுங்க..” என்று சொல்ல அவளும் இறக்கிவிட்டதும், “அப்பா..” என்று அழைத்துக்கொண்டு ரோஹித்திடம் ஓடியவள்,
“அப்பா பாட்டி தாத்தாவைக் கூப்பிடுங்க..” என்று சொல்ல அவளைப் பார்த்தவன், “எதுக்கு பூமா..” என்று புரியாமல் கேட்டான்,
“கூப்பிடுங்க..” என்று சொன்னவள் அங்கே இருந்த மதுவின் பெற்றோர், ரோஹித் பெற்றோர், ரோஹித் தாத்தா பாட்டி, ரஞ்சித் – கீர்த்தி, ஜீவா – கயல்விழி அனைவரையும் அழைத்து வந்தாள்..
அவள் செய்வதை அனைவரும் புரியாமல் பார்க்க மதுவும், ரோஹித்தும் ‘இவள் ஏதோ பெரிதாக பிளான் பண்ணுகிறாள்..’ என்று நினைத்து கணவனும் மனைவியும் பார்வையைப் பரிமாறிக்கொள்ள,
தனது தந்தையிடம் வந்து, “அப்பா என்னைத் தூக்குங்க..” என்று சொல்ல, ஜீவா கயலின் காதில், “இன்னைக்கு என்ன கேள்வி கேட்டு மற்றவரைக் குழப்ப போகிறாளோ..” என்ற புலம்பினான்.. கயல்விழி மெல்ல சிரித்தாள்..
“அப்பா இந்த அம்மா யாரைப் பார்த்தாலும் பாட்டி, தாத்தா என்று சொல்றாங்க.. அப்படி என்றால் என்னோட ஒரிஜினல் தாத்தா பாட்டி யாரு..?” என்று கேட்டதும், அங்கிருந்த அனைவரும் ஒருநிமிடம் திகைத்து நின்று அடுத்த நிமிடமே சிரிக்க ஆரமித்தனர்..
ஜீவா கயலிடம், “எப்படி குழப்புகிறாள் பாரு..” என்று சொல்ல, “கொஞ்சம் சும்மா இருங்க..” என்று அவனை மிரட்டினாள் கயல்விழி..
ரஞ்சித் கீர்த்தியிடம், “இந்த மது அவளைக் கெடுத்து வைத்திருக்கிறாள்.. பாரு எப்படி மானத்தை வாங்குகிறாள் பாரு..” என்று மெதுவாகச் சொல்ல,
“எல்லாம் நீங்க கொடுத்த ட்ரைனிங் தான்.. சரியாக வேலை செய்யுது வானரங்களா..! நீ, மது, சஞ்சனாவின் மறுபதிவு அவள்..” என்று கீர்த்தி சொல்ல, அவளை முறைத்தான் ரஞ்சித்..
“இதுதான் உன்னோட குழப்பமா..?” என்று ரோஹித் அபூர்வாவிடம் கேட்டதும், ஆமாம் என்று தலையை மேலும் கீழும் அசைத்தாள் அபூர்வா..
“எல்லோருமே உன்னோட தாத்தா, பாட்டிதான்..” என்று சொல்லவும், “லூசாப்பா நீ..?” என்று கேட்டதும் ஜீவா மனதில், ‘அடித்தால் பயபுள்ள சிக்ஸரு..’ என்று நினைக்க, மதுவோ, ‘மானத்தை வாங்குகிறாளே..’ என்று நினைத்துக்கொண்டு ரோஹித்தை நிமிர்ந்த்துப் பார்க்க, அவனோ அவளிடம் எப்படி புரிய வைப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தான்..
“என்ன வாய் பேசுகிறாள்..?” என்று மேகநாதனும், சுசீலாவும் பேசிக்கொள்ள, “அப்படியே மது மாதிரியே சொல்கிறாள் பாரு அமுதா..” என்று மதுவின் பெற்றோர் தங்களுக்குள் பேசிக்கொள்ள, மாணிக்கமும் கல்யாணியும் பேத்தியின் பேசுவதைக் கேட்டு புன்னகைத்த வண்ணம் இருக்க, ரோஹித் தாத்தா – பாட்டி இருவரும் அவளின் விளையாட்டு கண்டு தங்களுக்குள் புன்னகைத்துக்கொண்டிருந்தனர்..
அபூர்வா ஏதோ சொல்ல மற்றவர்கள் அவளைக் கேள்வியாகப் பார்க்க, “அப்பா இவங்க யாருப்பா..?” என்று சிவரத்தினத்தையும், காமாட்சியையும் காட்டிக் கேட்டாள்..
“இவங்க என்னோட தாத்தா, பாட்டி..” என்று சொல்லவும், “எனக்கும் தாத்தா, பாட்டி.. உங்களுக்கும் தாத்தா, பாட்டியா..?” என்று ரோஹித்தை எதிர்கேள்விக் கேட்டாள்..
“ம்ம் நீ அவங்களுக்கு கொள்ளு பேத்தி..” என்று அவன் விளக்கம் சொல்ல, அங்கிருந்த அனைவருமே சிரிப்பை அடக்க முடியாமல் பல்லைக் கடித்துக் கொண்டு நின்றிருந்தனர்...
“அப்போ இவங்க..?” என்று மாணிக்கம், கல்யாணியைக் கேட்டாள்.. “அவங்க என்னோட அப்பா, அம்மா உனக்கு பாட்டி, தாத்தா..” என்று சொல்ல,“அப்போ இவங்க..?” என்று மதுவின் பெற்றோரைக் கைகாட்டினாள்..
ஜீவா, ‘ஸ்ஸ் அப்பா முடியலைடா சாமி..’ என்று நினைத்துக்கொண்டு அமைதியாக நிற்க, கயல்விழி கலகலவென்று சிரித்தாள்..
“இது அம்மாவோட அப்பா, அம்மா..” என்று சொல்ல, “எனக்கு தாத்தா, பாட்டி..” என்று அபூர்வா சொல்ல, “ஹப்பாடா புரிஞ்சிருச்சா..?!” என்று பெருமூச்சு ஒன்றை வெளியிட்டான் ரஞ்சித்..
“இவளுக்கு விளக்கம் சொல்வது நான்.. பெருமூச்சு விடுவது நீயா..?” என்று ரஞ்சித்தை முறைத்தான் ரோஹித்.. இவர்கள் சின்னபிள்ளை போல சண்டை போட, பெரியவர்கள் அபூர்வாவின் விளையாட்டை ரசித்தனர்..
“அதெல்லாம் சரிப்பா..” என்று சொல்ல, “இன்னும் என்னம்மா..?” என்று பாவமாகக் கேட்ட ரோஹித்தைப் பார்த்து அனைவருமே வாய்விட்டுச் சிரித்தனர்.. அவர்கள் அனைவரும் சிரிப்பதைப் பார்த்து, “உங்களுக்கு எல்லாம் என்னைப் பார்த்தால் எப்படி தெரிக்கிறது..?” என்று கேட்டு முறைக்க,
“விளக்கம் சொல்ல சரியான ஆள் என்று தெரியுது..” என்று கீர்த்தியும், மதுவும் கோரஸ் பாட, கயல் இருவருக்கும் ஹை – பை கொடுக்க, ஜீவாவும் ரஞ்சித்தும், “மூவரும் ஒண்ணு கூட்டிடாங்க..” என்று சொல்ல அங்கே சிரிப்பலை அடங்க கொஞ்ச நேரம் ஆனது..
“இவங்க எனக்கு எப்படி தாத்தா, பாட்டி..?” என்று ஜீவாவின் பெற்றோரை கைகாட்டி கேட்டாள்.. அவள் கேட்டதும், ஜீவா, ‘மறுபடியும் முதலில் இருந்தா..?’ என்று நினைத்தான்.. “இவங்க உனக்கு யாரு..?” என்று ஜீவா, கயலைக் கைகாட்டி கேட்டான் ரோஹித்..
“இது தித்தி, தித்தப்பா..” என்று சொல்ல, “சித்தப்பாவோட அப்பா, அம்மா உனக்கு யாரு..?” என்று கேட்டதும், “எனக்கு பாட்டி தாத்தா..” என்று சொல்ல ரோஹித் பெருமூச்சு விட்டான்..
அவன் செய்கை கண்டு அங்கே இருந்த அனைவரும் சிரிக்க, அங்கே சிரிப்பலை அடங்க கொஞ்ச நேரம் ஆனது.. அதன்பிறகு அனைவரும் கிளம்ப அவர்களைத் தடுத்த மாணிக்கம்,
“நீங்க எல்லாம் இங்கேயே தங்க வேண்டியது தானே..?” என்று கேட்டதும் அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு, “இல்லங்க நாங்க சென்னை கிளம்புகிறோம்..” என்று அமுதா சொல்ல அவர்களை தடுத்தவர்,
“இன்று எல்லோரும் எங்களின் வீட்டில் தங்கி இருங்க.. நாளை எல்லோரும் சென்னை போகலாம்..” என்று சொல்ல, அவர்கள் வேண்டாம் என்று சொல்லிவிட்டு, எல்லோரிடமும் சொல்லிவிட்டு சென்னை செல்ல, அமுதா சேகர் இருவரும் மகளைப் பார்க்க அவள் பேசவே இல்லை.. ரோஹித் எடுத்துச் சொல்லியும் அவள் பேசவே இல்லை..
கயலிடம், “நீ சந்தோசமாக போடா.. அக்கா உன்னை அங்கு வந்துப் பார்க்கிறேன்..” என்று சொல்லவும் மதுவைக் கட்டியணைத்துக் கொண்டு அழுதாள்.. அவளை சமாதானம் செய்வதற்குள் அவளிற்கு போதும் போதும் என்றானது..
அவர்கள் கிளம்பிச் செல்ல, ரஞ்சித் – கீர்த்தியை ரோஹித்தின் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர் பெரியவர்கள்.. பெரியவர்கள் ஒரு காரிலும் சிறியவர்கள் ஒரு காரிலும் வந்தனர்.. ஆனால் வழியிலேயே, “ரோஹித் நாங்க நேராக எங்களின் வீட்டிற்கு போகிறோம்..” என்று கீர்த்தி கூறினாள்..
அதுவரை அமைதியாகவே வந்த ரோஹித், அவள் கூறியதில் இருந்த காரணத்தை உணர்ந்த ரோஹித் காரை ரஞ்சித் வீட்டின் முன்னே நிறுத்த, அவர்கள் பின்னோடு வந்த காரை நிறுத்தி இறங்கியவர்கள் வீட்டிற்குள் சென்று ஆரத்தி கரைத்து எடுத்து வந்து மதுவின் கையில் கொடுக்க அவள் அவர்களுக்கு ஆரத்தி எடுத்தாள்..
அடுத்தடுத்த வேலைகளை முடித்துவிட்டு இரவு அவர்கள் இருவரையும் அங்கேயே தனியாக விட்டுவிட்டு ரோஹித் வீட்டினர் கிளம்பினர்..
இரவு நேரத்தில் ஜன்னல் வழியாக வெளியே வேடிக்கை பார்த்தவள் அருகில் வந்து அணைத்துக் கொண்டான் ரஞ்சித்.. அவனின் அணைப்பில் அடங்கியவள்,
“எனக்கு எல்லாம் கனவு போலவே இருக்கிறது..” என்று சொல்ல, அவளின் முகத்தைப் பார்த்தவன், “கனவு கிடையாது செல்லம்.. இது நிஜம் தான்..” என்று சொல்லி அவளைத் தன் பக்கம் திருப்பிய ரஞ்சித் அவளின் கண்களில் கலக்கம் கண்டு, “என்னம்மா ஏன் இப்படி இருக்கிறாய்..?” என்று கேட்டான்..
“ரஞ்சித் நீ என்னைக் கீர்த்தியாகப் பார்க்கிறாயா..? இல்ல சஞ்சனவாகவா..?” என்று கேட்டதும் அவளின் மனநிலை புரிந்த ரஞ்சித், “ஒன்றை மட்டும் புரிந்துக்கொள் கீர்த்தி.. சஞ்சனா நம்முடைய காதலின் அஸ்திவாரம்.. அவள் இல்லை என்றால் நான் உன்னைக் காதலித்திருக்க மாட்டேன்.. ஆனால் உன்னைக் காதலித்த பிறகு சஞ்சனா பற்றிய நினைவுகளை சேமித்த என்னுடைய இதயம் இப்பொழுது உனக்காக துடிக்கிறது.. உனக்கு ஒன்று என்றால் என்னால் தாங்க முடியாது.. அதனால் இறந்த காலத்தையும், நிகழ் காலத்தையும் குழப்பாதே..” என்று அவளிற்கு தெளிவாக எடுத்துரைக்க அவளின் மனம் தெளிந்து அவனை நிமிர்ந்து பார்த்து சிரித்தாள்..
அவளின் புன்னகை முகம் கண்டவன், “இப்பொழுது நன்றாக சிரி..” என்று அவளின் மூக்கைப் பிடித்து ஆட்டினான்.. “ஸ்ஸ் வலிக்குதுடா எருமை..” என்று சொல்ல,
“தாலி கட்டிய கணவனுக்கு நல்ல மரியாதை..” என்று அவன் அவளைக் கிண்டல் செய்ய, அவள் அவனை முறைத்தாள்.. அவளின் முறைப்பை ஒரு முத்தம் வைத்து சமாதானம் செய்தான் ரஞ்சித்..
அப்படியே அவனின் மார்பில் சாய்ந்த கீர்த்தி, “ரஞ்சி எனக்காக ஒரு பாட்டு பாடும்மா..” என்று சொல்ல, “நான் பாடனும் என்றால் ஒரு கண்டிசன் நீ என்னுடன் பாட வேண்டும்..” என்று சொல்ல சிரித்தவள், “ம்ம் சரிம்மா..” என்று சொல்ல, அவனும் பாட ஆரமித்தான்.. அவனின் பாடல் வரிகள் கேட்டு அவனின் காதலில் மனம் கசிந்துருக அவளும் பாட ஆரமித்தாள்..
“உன்னை சேர்வதற்கு யுத்தம் செய்யவில்லை
ஆனாலும் நீ கிடைத்தாய்..
எங்கு எங்கோ சுற்றி வந்த என்னை நிற்கவைத்து
அடையாளம் நீ கொடுத்தாய்..
உன்னைச் சேரும் அந்த நாளை எண்ணி எண்ணி
பத்து விரல் நான் மடிப்பேன்
புது மஞ்சத் தாலி மின்ன மெட்டி கேலி பண்ண
பக்கத்தில் நான் கிடப்பேன்
கண்ணில் மீனை வச்சி புத்தும் புதுத் தூண்டில்
போட்டது நீயல்லவா
கள்ளத்தனம் இல்லா உன் வெள்ளை உள்ளம் கண்டு
விழுந்தது நான் அல்லவா
உலகமே காலடியில் கரைந்ததே ஓர் நொடியில்
உன்னருகே நான் இருந்தால்
தினம் உன்னருகே நான் இருந்தால்” என்று இருவரும் சேர்ந்து பாட பாடலை பாடி முடித்ததும் அவளைத் தூக்கிக்கொண்டு படுக்கை அறைக்குள் சென்றவன் அவனின் காதலை வேறு விதத்தில் அவளுக்கு உணர்த்த அவளும் அவனிடம் பாடம் கற்றாள்..
இரண்டு ஜோடிகளுக்கும் திருமணம் முடிந்ததும், திருமண மண்டபத்தில் எஞ்சி இருந்தது இந்த மூன்று குடும்பம் மட்டுமே.. கயல்விழி – ஜீவா இருவரையும் சென்னை அழைத்துச் செல்ல வீட்டில் உள்ள எல்லோரிடமும் சொல்லிவிட்டுச் செல்ல வந்தனர் இருவீட்டு பெரியவர்களும்...
திருமணம் முடிந்து வந்தவர்கள் சென்னை செல்ல ரோஹித் வீட்டில் உள்ள அனைவரிடமும், “நாங்க கிளம்புகிறோம்..” என்று சொல்லிவிட்டு மதுவிடம் வந்த சுசீலா, அவளின் நெற்றியில் முத்தமிட்டு,
“வீட்டுக்கு கண்டிப்பாக மூவரும் வரணும்.. அவங்க மட்டும் புது ஜோடி இல்ல நீங்களும் புதுஜோடிதான்..” என்று ரோஹித்தையும் மதுவையும் அழைத்தனர் ஜீவாவின் பெற்றோர்..
அவர்கள் அப்படி சொல்லவும் மதுமிதா ரோஹித்தைப் பார்க்க, அவனும் சரியென்று தலையசைக்க, இருவரையும் பார்த்த பெரியவர்கள் மனம் மகிழ்ந்தது..
அப்பொழுது அங்கே வந்த அபூர்வாவை அழைத்த மதுமிதா அவளைத் தூக்கிக்கொண்டு, “அபூக்குட்டி பாட்டி, தாத்தாவிற்கு பாய் சொல்லுங்க..” என்று சொல்ல மதுவையும், அவர்களையும் பார்த்தவள்,
“அம்மா கொஞ்சம் என்னை கொஞ்சம் இறக்கிவிடுங்க..” என்று சொல்ல அவளும் இறக்கிவிட்டதும், “அப்பா..” என்று அழைத்துக்கொண்டு ரோஹித்திடம் ஓடியவள்,
“அப்பா பாட்டி தாத்தாவைக் கூப்பிடுங்க..” என்று சொல்ல அவளைப் பார்த்தவன், “எதுக்கு பூமா..” என்று புரியாமல் கேட்டான்,
“கூப்பிடுங்க..” என்று சொன்னவள் அங்கே இருந்த மதுவின் பெற்றோர், ரோஹித் பெற்றோர், ரோஹித் தாத்தா பாட்டி, ரஞ்சித் – கீர்த்தி, ஜீவா – கயல்விழி அனைவரையும் அழைத்து வந்தாள்..
அவள் செய்வதை அனைவரும் புரியாமல் பார்க்க மதுவும், ரோஹித்தும் ‘இவள் ஏதோ பெரிதாக பிளான் பண்ணுகிறாள்..’ என்று நினைத்து கணவனும் மனைவியும் பார்வையைப் பரிமாறிக்கொள்ள,
தனது தந்தையிடம் வந்து, “அப்பா என்னைத் தூக்குங்க..” என்று சொல்ல, ஜீவா கயலின் காதில், “இன்னைக்கு என்ன கேள்வி கேட்டு மற்றவரைக் குழப்ப போகிறாளோ..” என்ற புலம்பினான்.. கயல்விழி மெல்ல சிரித்தாள்..
“அப்பா இந்த அம்மா யாரைப் பார்த்தாலும் பாட்டி, தாத்தா என்று சொல்றாங்க.. அப்படி என்றால் என்னோட ஒரிஜினல் தாத்தா பாட்டி யாரு..?” என்று கேட்டதும், அங்கிருந்த அனைவரும் ஒருநிமிடம் திகைத்து நின்று அடுத்த நிமிடமே சிரிக்க ஆரமித்தனர்..
ஜீவா கயலிடம், “எப்படி குழப்புகிறாள் பாரு..” என்று சொல்ல, “கொஞ்சம் சும்மா இருங்க..” என்று அவனை மிரட்டினாள் கயல்விழி..
ரஞ்சித் கீர்த்தியிடம், “இந்த மது அவளைக் கெடுத்து வைத்திருக்கிறாள்.. பாரு எப்படி மானத்தை வாங்குகிறாள் பாரு..” என்று மெதுவாகச் சொல்ல,
“எல்லாம் நீங்க கொடுத்த ட்ரைனிங் தான்.. சரியாக வேலை செய்யுது வானரங்களா..! நீ, மது, சஞ்சனாவின் மறுபதிவு அவள்..” என்று கீர்த்தி சொல்ல, அவளை முறைத்தான் ரஞ்சித்..
“இதுதான் உன்னோட குழப்பமா..?” என்று ரோஹித் அபூர்வாவிடம் கேட்டதும், ஆமாம் என்று தலையை மேலும் கீழும் அசைத்தாள் அபூர்வா..
“எல்லோருமே உன்னோட தாத்தா, பாட்டிதான்..” என்று சொல்லவும், “லூசாப்பா நீ..?” என்று கேட்டதும் ஜீவா மனதில், ‘அடித்தால் பயபுள்ள சிக்ஸரு..’ என்று நினைக்க, மதுவோ, ‘மானத்தை வாங்குகிறாளே..’ என்று நினைத்துக்கொண்டு ரோஹித்தை நிமிர்ந்த்துப் பார்க்க, அவனோ அவளிடம் எப்படி புரிய வைப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தான்..
“என்ன வாய் பேசுகிறாள்..?” என்று மேகநாதனும், சுசீலாவும் பேசிக்கொள்ள, “அப்படியே மது மாதிரியே சொல்கிறாள் பாரு அமுதா..” என்று மதுவின் பெற்றோர் தங்களுக்குள் பேசிக்கொள்ள, மாணிக்கமும் கல்யாணியும் பேத்தியின் பேசுவதைக் கேட்டு புன்னகைத்த வண்ணம் இருக்க, ரோஹித் தாத்தா – பாட்டி இருவரும் அவளின் விளையாட்டு கண்டு தங்களுக்குள் புன்னகைத்துக்கொண்டிருந்தனர்..
அபூர்வா ஏதோ சொல்ல மற்றவர்கள் அவளைக் கேள்வியாகப் பார்க்க, “அப்பா இவங்க யாருப்பா..?” என்று சிவரத்தினத்தையும், காமாட்சியையும் காட்டிக் கேட்டாள்..
“இவங்க என்னோட தாத்தா, பாட்டி..” என்று சொல்லவும், “எனக்கும் தாத்தா, பாட்டி.. உங்களுக்கும் தாத்தா, பாட்டியா..?” என்று ரோஹித்தை எதிர்கேள்விக் கேட்டாள்..
“ம்ம் நீ அவங்களுக்கு கொள்ளு பேத்தி..” என்று அவன் விளக்கம் சொல்ல, அங்கிருந்த அனைவருமே சிரிப்பை அடக்க முடியாமல் பல்லைக் கடித்துக் கொண்டு நின்றிருந்தனர்...
“அப்போ இவங்க..?” என்று மாணிக்கம், கல்யாணியைக் கேட்டாள்.. “அவங்க என்னோட அப்பா, அம்மா உனக்கு பாட்டி, தாத்தா..” என்று சொல்ல,“அப்போ இவங்க..?” என்று மதுவின் பெற்றோரைக் கைகாட்டினாள்..
ஜீவா, ‘ஸ்ஸ் அப்பா முடியலைடா சாமி..’ என்று நினைத்துக்கொண்டு அமைதியாக நிற்க, கயல்விழி கலகலவென்று சிரித்தாள்..
“இது அம்மாவோட அப்பா, அம்மா..” என்று சொல்ல, “எனக்கு தாத்தா, பாட்டி..” என்று அபூர்வா சொல்ல, “ஹப்பாடா புரிஞ்சிருச்சா..?!” என்று பெருமூச்சு ஒன்றை வெளியிட்டான் ரஞ்சித்..
“இவளுக்கு விளக்கம் சொல்வது நான்.. பெருமூச்சு விடுவது நீயா..?” என்று ரஞ்சித்தை முறைத்தான் ரோஹித்.. இவர்கள் சின்னபிள்ளை போல சண்டை போட, பெரியவர்கள் அபூர்வாவின் விளையாட்டை ரசித்தனர்..
“அதெல்லாம் சரிப்பா..” என்று சொல்ல, “இன்னும் என்னம்மா..?” என்று பாவமாகக் கேட்ட ரோஹித்தைப் பார்த்து அனைவருமே வாய்விட்டுச் சிரித்தனர்.. அவர்கள் அனைவரும் சிரிப்பதைப் பார்த்து, “உங்களுக்கு எல்லாம் என்னைப் பார்த்தால் எப்படி தெரிக்கிறது..?” என்று கேட்டு முறைக்க,
“விளக்கம் சொல்ல சரியான ஆள் என்று தெரியுது..” என்று கீர்த்தியும், மதுவும் கோரஸ் பாட, கயல் இருவருக்கும் ஹை – பை கொடுக்க, ஜீவாவும் ரஞ்சித்தும், “மூவரும் ஒண்ணு கூட்டிடாங்க..” என்று சொல்ல அங்கே சிரிப்பலை அடங்க கொஞ்ச நேரம் ஆனது..
“இவங்க எனக்கு எப்படி தாத்தா, பாட்டி..?” என்று ஜீவாவின் பெற்றோரை கைகாட்டி கேட்டாள்.. அவள் கேட்டதும், ஜீவா, ‘மறுபடியும் முதலில் இருந்தா..?’ என்று நினைத்தான்.. “இவங்க உனக்கு யாரு..?” என்று ஜீவா, கயலைக் கைகாட்டி கேட்டான் ரோஹித்..
“இது தித்தி, தித்தப்பா..” என்று சொல்ல, “சித்தப்பாவோட அப்பா, அம்மா உனக்கு யாரு..?” என்று கேட்டதும், “எனக்கு பாட்டி தாத்தா..” என்று சொல்ல ரோஹித் பெருமூச்சு விட்டான்..
அவன் செய்கை கண்டு அங்கே இருந்த அனைவரும் சிரிக்க, அங்கே சிரிப்பலை அடங்க கொஞ்ச நேரம் ஆனது.. அதன்பிறகு அனைவரும் கிளம்ப அவர்களைத் தடுத்த மாணிக்கம்,
“நீங்க எல்லாம் இங்கேயே தங்க வேண்டியது தானே..?” என்று கேட்டதும் அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு, “இல்லங்க நாங்க சென்னை கிளம்புகிறோம்..” என்று அமுதா சொல்ல அவர்களை தடுத்தவர்,
“இன்று எல்லோரும் எங்களின் வீட்டில் தங்கி இருங்க.. நாளை எல்லோரும் சென்னை போகலாம்..” என்று சொல்ல, அவர்கள் வேண்டாம் என்று சொல்லிவிட்டு, எல்லோரிடமும் சொல்லிவிட்டு சென்னை செல்ல, அமுதா சேகர் இருவரும் மகளைப் பார்க்க அவள் பேசவே இல்லை.. ரோஹித் எடுத்துச் சொல்லியும் அவள் பேசவே இல்லை..
கயலிடம், “நீ சந்தோசமாக போடா.. அக்கா உன்னை அங்கு வந்துப் பார்க்கிறேன்..” என்று சொல்லவும் மதுவைக் கட்டியணைத்துக் கொண்டு அழுதாள்.. அவளை சமாதானம் செய்வதற்குள் அவளிற்கு போதும் போதும் என்றானது..
அவர்கள் கிளம்பிச் செல்ல, ரஞ்சித் – கீர்த்தியை ரோஹித்தின் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர் பெரியவர்கள்.. பெரியவர்கள் ஒரு காரிலும் சிறியவர்கள் ஒரு காரிலும் வந்தனர்.. ஆனால் வழியிலேயே, “ரோஹித் நாங்க நேராக எங்களின் வீட்டிற்கு போகிறோம்..” என்று கீர்த்தி கூறினாள்..
அதுவரை அமைதியாகவே வந்த ரோஹித், அவள் கூறியதில் இருந்த காரணத்தை உணர்ந்த ரோஹித் காரை ரஞ்சித் வீட்டின் முன்னே நிறுத்த, அவர்கள் பின்னோடு வந்த காரை நிறுத்தி இறங்கியவர்கள் வீட்டிற்குள் சென்று ஆரத்தி கரைத்து எடுத்து வந்து மதுவின் கையில் கொடுக்க அவள் அவர்களுக்கு ஆரத்தி எடுத்தாள்..
அடுத்தடுத்த வேலைகளை முடித்துவிட்டு இரவு அவர்கள் இருவரையும் அங்கேயே தனியாக விட்டுவிட்டு ரோஹித் வீட்டினர் கிளம்பினர்..
இரவு நேரத்தில் ஜன்னல் வழியாக வெளியே வேடிக்கை பார்த்தவள் அருகில் வந்து அணைத்துக் கொண்டான் ரஞ்சித்.. அவனின் அணைப்பில் அடங்கியவள்,
“எனக்கு எல்லாம் கனவு போலவே இருக்கிறது..” என்று சொல்ல, அவளின் முகத்தைப் பார்த்தவன், “கனவு கிடையாது செல்லம்.. இது நிஜம் தான்..” என்று சொல்லி அவளைத் தன் பக்கம் திருப்பிய ரஞ்சித் அவளின் கண்களில் கலக்கம் கண்டு, “என்னம்மா ஏன் இப்படி இருக்கிறாய்..?” என்று கேட்டான்..
“ரஞ்சித் நீ என்னைக் கீர்த்தியாகப் பார்க்கிறாயா..? இல்ல சஞ்சனவாகவா..?” என்று கேட்டதும் அவளின் மனநிலை புரிந்த ரஞ்சித், “ஒன்றை மட்டும் புரிந்துக்கொள் கீர்த்தி.. சஞ்சனா நம்முடைய காதலின் அஸ்திவாரம்.. அவள் இல்லை என்றால் நான் உன்னைக் காதலித்திருக்க மாட்டேன்.. ஆனால் உன்னைக் காதலித்த பிறகு சஞ்சனா பற்றிய நினைவுகளை சேமித்த என்னுடைய இதயம் இப்பொழுது உனக்காக துடிக்கிறது.. உனக்கு ஒன்று என்றால் என்னால் தாங்க முடியாது.. அதனால் இறந்த காலத்தையும், நிகழ் காலத்தையும் குழப்பாதே..” என்று அவளிற்கு தெளிவாக எடுத்துரைக்க அவளின் மனம் தெளிந்து அவனை நிமிர்ந்து பார்த்து சிரித்தாள்..
அவளின் புன்னகை முகம் கண்டவன், “இப்பொழுது நன்றாக சிரி..” என்று அவளின் மூக்கைப் பிடித்து ஆட்டினான்.. “ஸ்ஸ் வலிக்குதுடா எருமை..” என்று சொல்ல,
“தாலி கட்டிய கணவனுக்கு நல்ல மரியாதை..” என்று அவன் அவளைக் கிண்டல் செய்ய, அவள் அவனை முறைத்தாள்.. அவளின் முறைப்பை ஒரு முத்தம் வைத்து சமாதானம் செய்தான் ரஞ்சித்..
அப்படியே அவனின் மார்பில் சாய்ந்த கீர்த்தி, “ரஞ்சி எனக்காக ஒரு பாட்டு பாடும்மா..” என்று சொல்ல, “நான் பாடனும் என்றால் ஒரு கண்டிசன் நீ என்னுடன் பாட வேண்டும்..” என்று சொல்ல சிரித்தவள், “ம்ம் சரிம்மா..” என்று சொல்ல, அவனும் பாட ஆரமித்தான்.. அவனின் பாடல் வரிகள் கேட்டு அவனின் காதலில் மனம் கசிந்துருக அவளும் பாட ஆரமித்தாள்..
“உன்னை சேர்வதற்கு யுத்தம் செய்யவில்லை
ஆனாலும் நீ கிடைத்தாய்..
எங்கு எங்கோ சுற்றி வந்த என்னை நிற்கவைத்து
அடையாளம் நீ கொடுத்தாய்..
உன்னைச் சேரும் அந்த நாளை எண்ணி எண்ணி
பத்து விரல் நான் மடிப்பேன்
புது மஞ்சத் தாலி மின்ன மெட்டி கேலி பண்ண
பக்கத்தில் நான் கிடப்பேன்
கண்ணில் மீனை வச்சி புத்தும் புதுத் தூண்டில்
போட்டது நீயல்லவா
கள்ளத்தனம் இல்லா உன் வெள்ளை உள்ளம் கண்டு
விழுந்தது நான் அல்லவா
உலகமே காலடியில் கரைந்ததே ஓர் நொடியில்
உன்னருகே நான் இருந்தால்
தினம் உன்னருகே நான் இருந்தால்” என்று இருவரும் சேர்ந்து பாட பாடலை பாடி முடித்ததும் அவளைத் தூக்கிக்கொண்டு படுக்கை அறைக்குள் சென்றவன் அவனின் காதலை வேறு விதத்தில் அவளுக்கு உணர்த்த அவளும் அவனிடம் பாடம் கற்றாள்..