• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode Nizhalin Nijam - 07

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
சென்ற பதிவுக்கு லைக், கமெண்ட்ஸ் அளித்த அனைவருக்கும் நன்றி.....
கதையின் போக்கில் ஏதாவது நிறை, குறைகள் இருந்தாலும் சொல்லிடுங்க பிரண்ட்ஸ்......Bepannaah-91.jpg
காலையில் சோம்பல் முறித்துக் கொண்டே "அம்மா ஒரு கப் பூஸ்ட்......" அறையில் இருந்து வெளி வந்த கணேஷ் ஹாலில் தான் கண்ட காட்சியை நம்ப முடியாமல் தன் கண்களை கசக்கி கொண்டு மீண்டும் நன்றாக உற்றுப் பார்த்தான்.


தன் கையிலும் ஒரு முறை கிள்ளி பார்த்து கொண்டவன் வேகமாக அடுத்த அறையை சென்று பார்த்து விட்டு அதிர்ச்சியாக ஹாலுக்கு வந்து சேர்ந்தான்.


சரோஜா கன்னத்தில் கை வைத்து அமர்ந்திருக்க கடிகாரத்தையும், சரோஜாவையும் மாறி மாறி பார்த்தவன்
"நான் பார்க்குறது எல்லாம் உண்மை தானா??? இது என் ரத்தத்தின் ரத்தம் என்னுடைய பாசமிகு அக்கா சரோஜா தானா??? என்னால நம்ப முடியலயே......" என்று கூறவும் அவனை முறைத்து பார்த்த சரோஜா எதுவும் பேசாமல் மீண்டும் தலை குனிந்து அமைதியாக அமர்ந்திருந்தாள்.


"என்ன சவுண்ட் சரோஜா இவ்வளவு சைலண்ட் சரோஜாவா மாறிட்டா!!! என்ன நடந்திருக்கும்??? ஒரு வேளை அம்மா காலையிலேயே கிளாஸ் எடுத்துட்டாங்களோ....." என கணேஷ் கேட்கவும்


அவனது தோளில் தட்டிய சரோஜா
"கிளாஸ் எடுத்தாலும் பரவாயில்லை....ஆனா இவங்க காலங்கார்த்தாலேயே பெரிய இடியை என் தலையில் இறக்கிட்டாங்க....." எனவும்


"இடியா???" என்று குழப்பமாக கேட்டவன் நின்றவாறே சற்று எம்பி அவளது தலையை எட்டிப் பார்த்தான்.


கணேஷின் செய்கைகளைப் பார்த்து பல்லைக் கடித்து கொண்ட சரோஜா
"டேய்....மொக்கை காமெடிக்கு ட்ரை பண்ணாம போயிடு....நானே செம காண்டுல இருக்கேன்...." என்று கூறவும்


அவளின் எதிரில் சேரை இழுத்துப் போட்டு கொண்டு அமர்ந்தவன்
"காலையிலேயே டென்ஷன் ஆகுற அளவுக்கு என்ன ஆச்சு??? சொல்லு....." என்று உண்மையான கரிசனையோடு கேட்டான்.


"எல்லாம் அந்த தரகர்னால வந்த பிரச்சினை தான்....அது தான் அன்னைக்கு ஒரு குடும்பத்தை கூட்டி வந்து நம்மள அவங்க வாயால திட்டு வாங்க செஞ்சுட்டான் தானே.....அது போதாதுனு இன்னைக்கு ஈவ்னிங் மறுபுறம் ஒரு கும்பலை கூட்டிட்டு வரப் போறாங்களாம்....இப்போ எனக்கு கல்யாணம் வேணும்னு யார் அழுதா??? அம்மா கிட்ட சொன்னாலும் கேட்க மாட்டேங்குறாங்க.....தானா வர்ற நல்ல சம்பந்தத்தை அப்படி தட்டி கழிக்கக் கூடாதுனு சொல்றாங்க.....எனக்கு என்ன பண்ணுறதுனே புரியல...." என சரோஜா வருத்தமாக கூறவும் கணேஷ் அவளது கைகளை ஆதரவாக பற்றி கொண்டான்.


"என்ன உலக அதிசயம் ஒண்ணு அரங்கேறுது??? எலியும், பூனையும் ஒண்ணு கூடிப் பேசிட்டு இருக்கு....என்ன விஷயம்???" என்றவாறே வந்த வித்யாவைப் பார்த்து புன்னகத்து கொண்ட கணேஷ்


"ஏன்மா உனக்கு இது??? நாங்க சண்டை போட்டாலும் திட்டுற.....ஒண்ணா இருந்து பேசிட்டு இருந்தாலும் இப்படி சொல்லுற....அப்போ நாங்க என்ன தான் பண்ணுறது???" என்று கேட்கவும்


அவனது கையில் தான் கொண்டு வந்த டம்ளரை கொடுத்த வித்யா
"நீங்க இரண்டு பேரும் எது பண்ணாலும் கடைசியாக என் கிட்ட வந்து தானே ஒட்டிகிட்டு நிற்பீங்க....அது தான் முன்னாயத்தமாக இருந்துக்க ட்ரை பண்ணுறேன்....." என்று விட்டு செல்ல கணேஷ் சிரித்துக் கொண்டே சரோஜாவின் புறம் திரும்பினான்.


"சரோஜா....நாங்க பேசுனது காமெடி இல்ல தான் மா....அதுக்காக ஏதோ பேய் படம் பார்க்குற மாதிரி எங்களை இப்படி பார்க்குறது சரியா???" என கணேஷ் கேட்கவும்


சிரித்த வண்ணம் அவன் தலையில் தட்டியவள்
"அப்படி இல்லை டா....எப்படி அம்மா கிட்ட கல்யாணம் இப்போ வேணாம்னு சொல்றதுனு தான் யோசிக்குறேன்...." என்று கூற


அவளையே சிறிது நேரம் பார்த்து கொண்டிருந்த கணேஷ்
"ஏன் உனக்கு கல்யாணத்துல இன்ட்ரஸ்ட் இல்ல???" என்று கேட்டான்.


"எனக்கு கல்யாணம் இப்போ வேண்டாம்னு தான் சொல்றேனே தவிர எப்போவுமே வேண்டாம்னு சொல்லல.....லைஃப்ல பெரிசா ஏதாவது அச்சிவ் பண்ணணும்டா....ஒரு சிஸ்டமெடிக் லைஃப் வாழ எனக்கு இஷ்டம் இல்லை....நமக்கு பின்னாடி வர்ற ஜெனரேஷன் இப்படி ஒருத்தங்க இருந்தாங்களா?? அப்படினு அதிசயமாக கேட்குற மாதிரி இருக்க கூடாது.....இப்படி ஒருத்தர் எங்க பரம்பரையில் இருந்தாங்கனு பெருமையாக சொல்லணும்.....அது தான் எனக்கு வேணும்.....நான் இப்போ இருக்குற பீல்ட் அதுக்கு கரெக்டா இல்லையானு தெரியல....பட் அந்த பீல்ட்ல நான் என்னோட நோக்கத்தை அடையணும்....அதற்கு எனக்கு கொஞ்சம் டைம் ஆகும்லே.....அதற்காக தான் சொல்றேன்....நீயாவது அம்மா கிட்ட சொல்லி புரியவைடா....." என சரோஜா கூற கணேஷ் அவளை வியப்பாக பார்த்து கொண்டிருந்தான்.


"உனக்கு உள்ள இவ்வளவு விஷயம் இருக்கா??? இது தெரியாம நான் உன்னை எவ்வளவு கலாய்ச்சிட்டேன்.....ச்சுச்சுச்சுச்சுச்சு...." என்று கணேஷ் உச்சுக் கொட்டவும்


"ஏய்....." என்றவாறு அவனை முறைத்து பார்த்த சரோஜா


"என்ன நக்கலா???" என்று கேட்டாள்.


"சேச்சே....உண்மையாகவே உன்னை நினைச்சு நான் ரொம்ப பெருமைப்படுறேன்....ஐ யம் வெரி ப்ரவுட் ஆஃப் யூ....." என கணேஷ் கூற


அவனை பார்த்து சிரித்துக்கொண்டே தன் தலையில் அடித்துக் கொண்ட சரோஜா
"கணேஷ் னு பேரு வச்சதுக்காக பாசமலர் சிவாஜி கணேசனையே மிஞ்சிடுவ போல இருக்கே...." எனவும்


"இது தான் நம்ம சவுண்ட் சரோஜா....இப்படி கலகலப்பாக இருக்கணும்....இப்போ என்ன உனக்கு இப்போதைக்கு மேரேஜ் வேணாம் அது தானே உன் பிராப்ளம்....நீ ஏன் மேரேஜை ஒரே தடையா பார்க்குற??? கல்யாணம் பண்ணிட்டு சாதிச்சவங்க எத்தனை பேர் இருக்காங்க....நீ அந்த ஏங்கிள்ல யோசி....அது மட்டுமில்லாம ஒரு வயசு பொண்ணு எத்தனை நாள் தனியா இருக்க முடியும் சொல்லு....அம்மாவுக்கும் பேரன், பேத்தினு பார்க்க ஆசை இருக்காதா???" என கணேஷ் கூற சரோஜா எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள்.


"வேணும்னா இப்படி பண்ணலாம்.....ஈவ்னிங் அவங்க வரட்டும் எப்படியும் மாப்பிள்ளை உன் கிட்ட பேச டைம் கொடுப்பாங்க தானே அப்போ நீ ஓபனா எல்லாம் சொல்லிடு.....அவர் இதுக்கு சம்மதிச்சா அவரையே கல்யாணம் பண்ணிக்க...." என்று கணேஷ் கூறவும்


அவனை பாவமாக பார்த்த சரோஜா
"இப்போ ஓகே சொல்லிட்டு கல்யாணத்துக்கு அப்புறம் மாறிட்டாங்கனா என்ன பண்ணுறது????" என்று கேட்டாள்.


"அது உன் சாமர்த்தியம்....நீ தான் உனக்காக பேசணும்....இப்போ இருக்குற ஜெனரேஷன் புதுப் புது விஷயத்தை தான் எதிர்பார்க்குது....ஷோ எனக்கு என்னவோ வரப்போறவர் உனக்கு சப்போர்டா இருப்பார்னு தான் தோணுது...." என்று கணேஷ் கூற


"அப்படியும் இருக்கலாமோ...." என்ற சரோஜா சிறிது நேரம் யோசித்து பார்த்தாள்.


"சரி டா.....லைஃப்ல பர்ஸ்ட் டைம் நீ உருப்படியாக எனக்கு அட்வைஸ் பண்ணி இருக்க....பார்க்கலாம் என்ன நடக்குதுனு...." என்று சரோஜா கூற


அவள் கைகளை பற்றி குலுக்கிய கணேஷ்
"வெரி குட் இதே எனர்ஜியோட ஆபீஸ்க்கு கிளம்பு போ...." என்று கூறவும் மறுபடியும் சரோஜாவின் முகம் வாடிப் போனது.


"என்ன ஆச்சு???" என கணேஷ் கேட்கவும்


சமையலறை பக்கத்தில் திரும்பி பார்த்தவள் ஏக்கமாக பெருமூச்சு ஒன்றை விட்டு விட்டு கணேஷின் புறம் திரும்பி
"அம்மா இன்னைக்கு ஆபீஸ் போக தடா போட்டுட்டாங்க.....அன்னைக்கும் அப்படி போய் தான் பிரச்சனை ஆயிடுச்சாம்.....அதனால இன்னைக்கு ஆபீஸ் கோவிந்தா....." எனவும் கணேஷ் வாயை மூடிக்கொண்டு தன் சிரிப்பை மறைக்க அரும்பாடுபட்டு கொண்டு நின்றான்.


"டேய்....." என்று சரோஜா அதட்டலாக கூறவும்


அவளைப் பார்த்த கணேஷ்
"ஆனாலும் நீ இவ்வளவு பேசுனதுக்கு அப்புறமும் இப்படி ஆகும்னு சத்தியமாக நான் எதிர்பார்க்கல......" என்று விட்டு மீண்டும் சிரிக்க தொடங்க


"அப்படியா....நல்லா சிரி....எனக்கு மட்டும் இல்லை கண்ணா இன்னைக்கு லீவு உனக்கும் தான்...." என்று விட்டு சரோஜா சென்று விட


"என்ன???" என்று அதிர்ச்சியாக கேட்டவன் அவசரமாக தன் போனை எடுத்து பார்த்தான்.


"உன் மெயில் ஐடி, பாஸ்வோர்ட் எல்லாம் எனக்கும் தெரியும்....அது தான் ஒரு லீவு லெட்டர் அனுப்பி வைச்சேன்...." என்று விட்டு சரோஜா அவளது அறைக்குள் சென்று விட


"சரோஜா......." என்று கோபமாக கத்திய கணேஷ் தொப்பென்று அங்கிருந்த கதிரையில் அமர்ந்தான்.


ஸ்டேஷனுக்கு வந்து சேர்ந்த அஜய் பைக்கை நிறுத்தி விட்டு வழக்கம் போல தன் வேலைகளை கவனிக்க தொடங்கினான்.


அவன் மேஜை மீது வைக்கப்பட்டிருந்த கே.எஸ் விலாஸ் மேர்டர் என்ற பைலை பார்த்ததும் யோசனையோடு அதை கையில் எடுத்து கொண்டவன் அந்த பைலில் இருந்த ஒவ்வொரு தாள்களாக பார்த்து கொண்டு வந்தான்.


"எத்தனை வாட்டி இதே விஷயத்தை திரும்ப திரும்ப பார்க்குறது???" என்றவாறே சலிப்போடு அந்த பைலை மறுபடியும் மேஜை மீது போட்டவன் மறுபடியும் சென்று அவன் இருக்கையில் அமர்ந்து கொள்ள அவனது போன் அடித்தது.


போனை பார்த்த அஜய் யோசனையோடு போனை அட்டன்ட் செய்து காதில் வைத்தான்.


"சொல்லுங்க மருது.....ஏதாவது நியூஸ் கலெக்ட் பண்ணிட்டீங்களா???" என அஜய் கேட்கவும்


மறுமுனையில் இருந்த நபர்

"எஸ் ஸார் ஒரு முக்கியமான விஷயம்.....அது தான் உங்களுக்கு போன் பண்ணுணேன்.....இறந்து போன அந்த பொண்ணோட ஹஸ்பண்டை பாலோ பண்ணதுல அவர் நடவடிக்கைகள் கொஞ்சம் முரண்பாடானதா இருக்குது ஸார்....அவரோட வைஃப் இறந்து ஒரு மாசம் கூட ஆகல.....அந்த ஆளு இது நாள் வரைக்கும் ஒரு மூணு, நாலு பொண்ணுங்களோட வேற வேற இடத்தில் சுத்திட்டு இருக்காரு.....அப்போவே போய் அந்த ஆளு கிட்ட விசாரிச்சு இருப்போம்....எதுக்கும் அவங்க அந்த ஆளுக்கு தெரிஞ்சவங்களா இருக்கோமுனு தான் தூரத்தில் இருந்து கண்காணிச்சுட்டு வந்தோம்....ஆனா இப்போ தான் எங்களுக்கு டீடெய்ல்ஸ் வந்தது.....அந்த பொண்ணுங்க யாருமே அவங்களுக்கு முன்னாடியே பழக்கம் இல்லாதவங்களாம்......அதோட அந்த பொண்ணுங்க அட்ரஸை கண்டு பிடிச்சு நேரடியாக அவங்களை எல்லாம் மீட் பண்ணிகேட்ட இடத்தில் அவங்க சொன்னது என்னன்னா பர்ஸ்ட் டைம் இப்போ தான் அந்த திருவை மீட் பண்ணுறோம்னு சொன்னாங்க.....எல்லோரும் ரொம்ப பெரிய இடத்து பொண்ணுங்க மாதிரி இருக்காங்க.....இப்போ வெறும் விசாரணையோட நிறுத்தி வைச்சிருக்கோம்.....அடுத்து என்ன பண்ணுறதுனு நீங்க சொல்றத பண்ணுறோம் ஸார்...." என்று கூற அஜய் தன் நெற்றியை ஒரு கையால் நீவி விட்டபடி யோசித்து கொண்டிருந்தான்.
 




Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
"இப்போ எங்க இருக்கீங்க மருது???"


"நாங்க இப்போ பெஷன்ட் நகரில் இருக்கோம் ஸார்....."


"அங்கேயே இருங்க நான் ஒரு பத்து நிமிஷத்துல அங்கே வரேன்....." என்ற அஜய்


தன்னறைக்குள் இருந்து வெளியே வந்தவாறு
"சரவணன் வண்டியை எடுங்க...." என்று கூற சரவணன் வேகமாக ஓடிச்சென்று வண்டியை ஸ்டார்ட் செய்தார்.


சொன்ன படியே பத்து நிமிடங்களில் ஏனைய காவல்துறையினர் நின்று கொண்டிருந்த பகுதியை வந்தடைந்த அஜய் சுற்றிலும் அந்த இடத்தை நோட்டம் விட்டான்.


காலை நேர பரபரப்பு முற்றாக இன்னும் அந்த பகுதியில் அடங்கி இருக்கவில்லை.


ஒரு பெரிய நட்சத்திர ஹோட்டல் அதைச் சூழ சிறு சிறு அங்காடிகளும், பெட்டிக்கடைகளும், பிளாட்பாரம் கடைகளும் நிறைந்து இருந்தது.


"குட் மார்னிங் ஸார்....." என்றவாறு அஜயின் அருகில் வந்த நபர் ஒருவர் ஒரு பைலை அவனின் புறம் நீட்ட


தன் பார்வையை அந்த நபரின் புறம் திருப்பியவன்
"குட் மார்னிங் மருது...." என்றவாறே அந்த பைலை வாங்கிக் கொண்டான்.


அந்த பைலை பிரித்து படித்து பார்த்த அஜய் யோசனையாக
"அந்த திரு வெளியில் சுற்றி திரியுறத வைத்து மொத்தமாக நாம அவர் மேல பலியை போடமுடியாது மருது.....இப்போ அந்த ஹோட்டல் உள்ளே தானே திரு போய் இருக்கார்.....வெளியே வரட்டும் நம்மை கவனிச்சு என்ன மாதிரி ரியாக்ட் பண்ணுறார்னு பார்க்கலாம்.....அதற்கு அப்புறமாக மீதியை கவனிக்கலாம்....." என்றவன் அங்கு இருந்த ஒரு பெட்டிக்கடையின் முன்னால் அமர்ந்து கொண்டு தன் கையில் இருந்த பைலை மறுபடியும் புரட்டிப் பார்த்தான்.


சிறிது நேரத்தின் பின்பு ஒரு பெண்ணுடன் சிரித்துப் பேசிக் கொண்டே வந்த அந்த நபரை பார்த்ததும் தன் அருகில் நின்ற காவலர்களை அங்கேயே நிற்குமாறு சைகை செய்த அஜய் அந்த நபர்கள் இருவரையும் நோக்கி சென்றான்.


அஜயை பார்த்ததும் புன்னகையோடு அவனருகில் வந்த அந்த நபர்
"ஹலோ அஜய் ஸார்.....எப்படி இருக்கீங்க????" என்று கேட்கவும்


பதிலுக்கு அவனைப் பார்த்து தலையசைத்த அஜய்
"நான் நல்லா இருக்கேன் திரு....நீங்க எப்படி இருக்கீங்க???" என்று கேட்டான்.


''இருக்கேன் ஸார்....என்ன ஸார் இந்த பக்கம்?? ஏதாவது இன்விஸ்டிகேஷன் விஷயமாக வந்திங்களா??'' என திரு கேட்கவும்


''ஆமா திரு...ஒரு இன்விஸ்டிகேஷன் வேலையா வந்தேன்...இங்க உங்களை பார்த்ததும் பேசிட்டு போகலாம்னு வந்தேன்...ஆமா இவங்க...'' என கேள்வியாக திருவின் அருகில் இருந்த பெண்ணைப் பார்த்து அஜய் கேட்க


''ஓஹ் ஐ யம் ஸாரி ஸார்...உங்களை பார்த்ததும் இவங்களை மறந்தே போயிட்டேன்... இவங்க நித்யா...வன் ஆப் தி யங் சோஷியல் சர்வீஸர்...'' என்று திரு கூறினான்.


"அவங்க ஒரு அவசர வேலையாக போகணும்னு சொன்னாங்க...அவங்களை அனுப்பி வைக்கவா ஸார்??" என திரு தயக்கத்துடன் கேட்கவும்


"யா ஸ்யூர்....." என்று அஜய் கூற அந்த பெண் திருவையும், அஜயையும் பார்த்து கொண்டே தன் காரில் ஏறி புறப்பட்டு சென்றார்.


"ஸாரி ஸார் நீங்க பேசிட்டு இருக்கும் போது அவங்களை அனுப்பி வைச்சுட்டேன்....ஸாரி ஸார்..." என திரு கூற


"இட்ஸ் ஓகே திரு...." என்று கூறிய அஜய்


"அவங்கள எப்படி உங்களுக்கு தெரியும்??உங்க ரிலேஷன் இல்லை பிரண்ட்ஸா??" என்று கேட்டான்.


"இல்ல ஸார்....அவங்க கிட்ட எங்க பேபி டேக் கேர் அமைக்குறது சம்பந்தமாக டொனேஷன் பற்றி பேசலாம்னு வந்தேன்....." என்று திரு கூற


"பேபி டேக் கேரா?? ஆனா நீங்க கன்ஸ்ட்ரக்ஷன் பிஸ்னஸ் தானே பண்ணுறீங்க???" என்று அஜய் கேள்வியாக திருவைப் பார்த்தான்.


"என் வைஃப்புக்கு குழந்தைங்கனா ரொம்ப இஷ்டம்...அதனால நாங்க ஒரு பேபி டேக் கேர் ஆரம்பிக்குறதா இருந்தோம்....அதற்கு என் சேலரியை மட்டும் இன்வெஸ்ட் பண்ண போதாதுனு கொஞ்சம் ஹெல்ப் பண்ண கூடிய பிஸ்னஸ் பர்ஸன்ஸ் கிட்ட பேசலாம்னு இருந்தோம்....எல்லாம் சரியாக போயிட்டு இருக்கும் போது தான் திடீர்னு ப்ரியா இறந்துட்டா.....அவ இல்லேனாலும் அவ ஆசையை நிறைவேற்றனும்னு தான் இந்த இரண்டு, மூணு வாரமாக இந்த வேலை சம்பந்தமாக சுற்றிட்டு இருக்கேன்....." என்று திரு கூற அஜய் புருவங்கள் முடிச்சிட யோசனையாக அவனைப் பார்த்தான்.


"இந்த விஷயத்தை நீங்க ஏன் விசாரணை நேரத்தில் சொல்லல??" என அஜய் கேட்கவும்


"இந்த விஷயம் அந்த டைம் நாங்க ஸ்டார்ட் பண்ணல ஸஸார்....இப்போ ப்ரியா டெத்க்கு அப்புறம் ஸ்டார்ட் பண்ணுணது தான் ஸார்....அது தான் அப்போ சொல்லல...." என்று கூறிய திரு


"ஸார் நீங்க இந்த கேஸை எவ்வளவு சீக்கிரமாக கண்டு பிடிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரமாக கண்டு பிடிச்சு கொடுங்க ஸார்....என் ப்ரியா யாருக்கும் எந்த தீங்கும் நினைச்சது இல்லை....அவளுக்கு இப்படி ஒரு நிலைமைனா என்னால தாங்க முடியல ஸார்....." என்று கண்கள் கலங்க கூற


அவனது தோளில் ஆதரவாக கை வைத்த அஜய்
"டோன்ட் வொர்ரி திரு கூடிய சீக்கிரம் உங்க வைஃப்போட மேர்டர்ல இருக்குற சீக்ரெட்டை கண்டு பிடிச்சுடுவோம்....அதுக்கு நீங்களும் எங்களுக்கு ஹெல்ப்பா இருக்கணும்...." என்று கூற


"ஓகே ஸார் கண்டிப்பா...." எனக் கூறினான் திரு.


"அப்புறம் ஸார் நாங்க டிடெக்டிவ் கிட்ட போனதுல ஒரு பிரச்சினையும் இல்லை தானே??" என்று திரு கேட்கவும்


"அதெல்லாம் ஒரு பிரச்சினையும் இல்லை திரு...." என்ற அஜய்


"சரி திரு அப்புறமாக பார்க்கலாம்....எனக்கு இன்னொரு வேலை இருக்கு...." என்று விட்டு தன் ஜீப்பின் அருகில் வந்தவன் யோசனையோடு மீண்டும் திரும்பி திருவைப் பார்த்தான்.


அவன் முகத்தை பார்த்தோ, அவன் பேச்சை வைத்தோ எதையும் அஜயால் தீர்மானமாக கண்டு பிடிக்க முடியவில்லை.


"திரு என்ன சொன்னார் ஸார்??" என மருது கேட்கவும்


"நீங்க சொன்ன அதே விஷயத்தை தான் திருவும் சொன்னாரு....ஆனா அவர் முழு விவரத்தோடு சொன்னாரு மருது....எனக்கு என்னவோ இந்த கேஸை நாம தப்பான ரூட்ல கொண்டு போறோமோனு தோணுது....நான் அகைன் இந்த பைலை பார்க்கணும்னு நினைக்குறேன்....." என்று கூறிய அஜய் மீண்டும் அந்த பைலை பார்த்தான்.


நேரம் போய் கொண்டே இருக்கும் வேளை அஜய்க்கு ஏதோ ஒரு விடயம் பிடிபடத் தொடங்கியது.


"எஸ் ஐ காட் இட்...." என்றவாறே அந்த பைலை மூடிய அஜய் தன் அருகில் இருந்த மருதுவைப் பார்க்க அந்த நேரம் பார்த்து சரியாக அஜயின் போனும் அடித்தது.


"அம்மா....." என்று திரையில் ஒளிர்ந்த பெயரை பார்த்து யோசனையோடு தன் கையில் இருந்த கடிகாரத்தை திருப்பி பார்த்தவன்


"ஐயோ....." என்று தன் தலையில் கை வைத்தான்.


போனை அட்டன்ட் செய்து காதில் வைத்த அஜய்
"அம்மா ஸாரி மா.....வேலை விஷயமாக வெளியே வந்தேன்....அந்த வேலையில் சுத்தமாக உன் கிட்ட சொன்ன விஷயத்தை மறந்தே போயிட்டேன் ம்மா....ஸாரி ரியலி ஸாரி ம்மா...." எனவும் மறுமுனையில் கனகா அமைதியாக இருந்தார்.


"சரி உன் கோபம் போக நான் ஒரு வேளை பண்ணுறேன்....இன்னும் பத்தே நிமிஷம்....சரோஜா வீட்டுக்கு வந்து சேர்ந்துடுவேன்....நீங்க அங்க போய் பேசிட்டு இருங்க....நான் இப்போவே இங்க இருந்து கிளம்புறேன் சரியா???" என அஜய் கூறவும்


"டேய் அஜய்....அப்படியேவாடா வரப்போற???" எனக் கனகா அதிர்ச்சியாக கேட்க


"ஏன் இப்படியே வந்தா அவங்க வீட்டுக்கு உள்ளே என்னை சேர்க்க மாட்டாங்களா??? அதெல்லாம் நீ ஒண்ணும் யோசிக்காம சந்தோஷமா கிளம்புமா....நான் பக்காவா பத்து நிமிஷத்துல வந்து சேர்ந்துடுவேன்..." என்று விட்டு் போனை வைத்த அஜய் அங்கு நின்ற மற்றைய காவலர்களையும் அழைத்து கொண்டு ஜீப்பில் ஏறி புறப்பட்டான்.


ஸ்டேஷனுக்கு வந்து தன் பைக்கை எடுத்து கொண்டவன்
"சரோஜா கிட்ட கண்டிப்பாக இதை பற்றி கேட்டே ஆகணும்....." என்று நினைத்துக் கொண்டே சரோஜாவின் வீட்டை நோக்கி பயணம் செய்தான்.


மறுபுறம் சரோஜாவோ தன்னறைக்குள் இருந்து கொண்டு வெகு மும்முரமாக தன் நகத்தை கடித்து கொண்டு இருக்க அவளருகில் நின்று கொண்டிருந்த கணேஷ் சரோஜாவின் நடவடிக்கைகளை பார்த்து சிரித்துக் கொண்டு நின்றான்.


"சரோஜாவைக் கூட்டிட்டு வாடான்னு உன்னை அனுப்புனா இங்கே என்ன வேடிக்கை பார்த்துட்டு நிற்குற....." என்றவாறே அறைக்குள் நுழைந்த வித்யா கணேஷை கோபமாக பார்க்க


"அங்கே கொஞ்சம் பாரும்மா....." என்று சரோஜாவின் புறம் வித்யாவின் முகத்தை கணேஷ் திருப்பி விட வித்யாவும் சரோஜாவின் செய்கையைப் பார்த்து புன்னகத்து கொண்டார்.


"அவ டென்ஷன்ல இருந்தா இப்படி தான் நிற்பியா??? நீ பதட்டப்படாம வா சரோஜா.....அவங்க வெளியில் காத்துட்டு இருக்காங்க வா போகலாம்...." என்றவாறே வித்யா சரோஜாவின் தோள் தொட்டு அவளை எழுப்ப


பதட்டத்துடன் கணேஷின் கையை பற்றி கொண்ட சரோஜா
"எனக்கு ரொம்ப பயமா இருக்குடா கணேஷ்...." என கணேஷிற்கு மட்டும் கேட்குமாறு மெதுவாக கூறினாள்.


"எதுக்கு பயப்படுற??? பீ ஸ்ட்ராங்...." என்ற கணேஷ் அவள் கையில் இருந்த தன் கையை மெல்ல உருவி எடுத்துக் கொண்டு முன்னே சென்று விட சரோஜாவோ தடதடக்கும் இதயத்தோடு குனிந்த தலை நிமிராமல் வித்யாவைப் பின் தொடர்ந்து சென்றாள்.


"மாப்பிள்ளை செம்ம ஹாண்ட்ஷமா இருக்காரு....." எனக் கணேஷ் சரோஜாவின் காதில் கூற சரோஜாவோ அது எதையும் கேட்கும் மனநிலையில் இல்லை.


"சரோஜா எதையும் தைரியமாக பேஸ் பண்ணணும்....பீ ப்ரேவ்.....பீ ப்ரேவ்...." என தனக்குத்தானே கூறி கொண்டவள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு நிமிர்ந்து பார்த்தாள்.


அங்கே ராஜஷேகரின் அருகில் இருந்த வண்ணம் தன்னையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்த அஜயை பார்த்து சரோஜா அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றாள்.....
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
Nice update Husna... Ajaykum athirchikum etho link iruku pola... athaan eppa paarthaalum antha pillaiku athirchiyaa koduthitu irukaan
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top