சென்ற பதிவுக்கு லைக், கமெண்ட்ஸ் அளித்த அனைவருக்கும் நன்றி.....
முல்லை பந்தலின் கீழ் நின்று கொண்டிருந்த சரோஜா சேலை நுனியை கையில் வைத்து சுருட்டுவதும், விரிப்பதுமாக இருக்க அஜய் அங்கிருந்த ஒரு கம்பத்தின் மேல் சாய்ந்து நின்று சரோஜாவையே பார்த்து கொண்டு நின்றான்.
"இது சரிப்பட்டு வர்ற மாதிரி எனக்கு தெரியல...." எனத் தனக்குள்ளேயே கூறி கொண்டவன் சரோஜாவின் முன்னால் வந்து நின்றான்.
திடீரென அஜய் தன் முன்னால் வந்து நிற்கவும் சரோஜா பதட்டத்துடன் இரண்டு அடி பின்னோக்கி நகர்ந்தாள்.
"ஹேய்....கூல்....நான் மனுஷன் தான்மா....பேயோ, பிசாசோ இல்ல....எதுக்கு இவ்வளவு பதட்டம்???" என அஜய் கேட்கவும் நிமிர்ந்து அவனைப் பார்த்த சரோஜா சட்டென்று தன் பார்வையை தாழ்த்திக் கொண்டாள்.
"நான் கூட லாஸ்டா நீ என் கூட பேசுனதை பார்த்து நெக்ஸ்ட் டைம் ஒரு பெரிய சண்டையே போடுவேன்னு நினைச்சேன்....ஆனா இங்க நடக்குறது நான் சுத்தமாக எதிர்பார்க்காத ஒண்ணா இருக்கே...." என சரோஜாவை ஓரக் கண்ணால் பார்த்து கொண்டே யோசிப்பது போல அஜய் பாவனை செய்யவும்
"அட ஆமா....நெக்ஸ்ட் டைம் இவரைப் பார்த்தா சண்டை போடணும்னு தானே இருந்தேன்....இப்போ பேசாமல் இப்படி ஆஃப் ஆகி நிற்குறேனே....நோ சரோஜா நோ....தைரியமாக பேசிடு.....ரெடி வன்...டூ...த்ரீ...." என்று மனதிற்குள் கூறி கொண்டவள்
"என்ன மிஸ்டர்.அஜய்ராஜ் திமிரா???" என்று கேட்டாள்.
"வாவ்....சரோஜா பேசிட்டாங்க....." எனக் கை தட்டியவாறு அஜய் கூறவும்
அவனை முறைத்து பார்த்தவள்
"ஹலோ...போதும்...ஓவரா ஆக்ட் பண்ணாதீங்க தாங்கல....ஆமா என்ன ஸார் நினைச்சுட்டு இருக்கீங்க உங்க மனசுல?? ஆக்சிடெண்ட் பண்ணிட்டு ஒரு ஸாரி கூட சொல்லாம தலைமறைவாகிட்டீங்க....ஆக்சிடெண்ட் பண்ணதுக்காக நான் கம்ப்ளெயிண்ட் எதுவும் பண்ணிடுவேன்னு பயந்து தான் எனக்கு எல்லா ஹெல்ப்பும் நீங்க பண்ணுணீங்கனு எனக்கு தெரியும்....ஏ.சி.பி னா தப்பு பண்ணலாமா??? சொல்லுங்க ஸார்...." எனக் கேட்க அஜய் அமைதியாக நின்றான்.
"சரோஜா ஆக்சிடெண்ட் விஷயம் தப்பு தான்....நான் அக்செப்ட் பண்ணிக்குறேன்....ஆனா அந்த டைம் நான் என்னோட பக்க நியாயத்தை பற்றி பேசாமல் போனதும் ஒரு வகையில் தப்பான விஷயம் தான்....ஏற்கனவே வேலையில் பிரஷர் ஜாஸ்தி....அதோட இதுவும் சேர்ந்தா என் பாடு திண்டாட்டம் ஆகி இருக்கும்....ஷோ அதுக்காக நான் ஸாரி கேட்க ரெடி....ஐ யம் எக்ஸ்ட்ரீம்லி ஸாரி...." என அஜய் மன்னிப்பு கேட்டு சரோஜா வாயடைத்துப் போய் நின்றாள்.
"என்ன இப்படி ஒரேயடியாக சரண்டர் ஆகிட்டாரு???" என சரோஜா யோசித்த வண்ணம் நிற்க
அவள் முகத்தின் முன்னால் சொடக்கிட்டு அவளை நனவுக்கு கொண்டு வந்தவன்
"அப்புறம் உங்க கிட்ட எனக்கு ஒரு ஹெல்ப் ஆகணும்...." என்று கூறவும்
வியப்பாக அவனைப் பார்த்த சரோஜா
"ஹெல்ப்பா??? என் கிட்டயா??? என்ன ஹெல்ப்???" எனக் கேட்டாள்.
"ஆமா....லாஸ்டா ஒரு ஹவுஸ்ல நாம மீட் பண்ணுணோம் தானே...அங்கே நீ ஒரு ரூமுக்குள்ள போய் எதையோ எடுத்துட்டு வந்த...."
"இல்ல...அது வந்து...."
"நான் சொல்லி முடிச்சதுக்கு அப்புறம் நீ பேசு....நீ எடுக்கலேனு எல்லாம் சொல்லாதே....நீ எதையோ எடுத்த எனக்கு தெரியும்....அது இந்த கேஸோட ரொம்ப ரிலேடட் ஆனதுனு என் மைண்ட்க்கு படுது....அப்பா கிட்ட நான் இதை பற்றி பேசல....ஏன்னா அப்பாவோட வேலையில் நான் தலையிட மாட்டேன்....அது என் பாலிஸி....." என அஜய் கூறவும்
"நல்ல பாலிஸி...." என சரோஜா முணுமுணுத்துக் கொண்டாள்.
"என்ன???" என்று அஜய் கேட்கவும்
"ஒண்ணும் இல்லை மேல சொல்லுங்க...." என சரோஜா கூறவும்
"ஓகே....நான் என்ன சொல்ல வர்றேன்னா நீ அந்த ரூமுக்குள்ள போய் எடுத்த அந்த கிஃப்ட் இப்போ எங்க இருக்கு??? அதை ஏன் எங்க கிட்ட காமிக்காமல் கொண்டு போன???" என அஜய் கேட்க
"கிஃப்டா??? கிஃப்ட எங்க நான் எடுத்தேன்???" எனக் குழப்பமாக கேட்டாள் சரோஜா.
"ஹேய் சரோஜா விளையாடாதே..."
"நான் ஏன் உங்க கூட விளையாடப் போறேன்??? அன்னைக்கு நீங்க நார்மலா பேசி இருந்தா நான் இதை சொல்லி இருப்பேன்...நீங்க ஓவரா என்னை சீண்டிப் பார்த்தீங்களா அது தான் நானும் கோபமாக நடந்துட்டேன்....அன்னைக்கு நான் ரூமுக்குள்ள போய் ஒரு பொருளை எடுத்தது உண்மை தான்...ஆனா நீங்க சொல்லுற மாதிரி கிஃப்ட் எல்லாம் இல்ல...ஒரு கிஃப்ட் ராப்பிங் பேப்பர் அதோட ஒரு வெள்ளை பேப்பர்...அந்த வெள்ளை பேப்பர்ல 'ஃபார் மை லவ்' அப்படினு ஒரு வசனம் அவ்வளவு தான்....இருந்தாலும் அது இந்த கேஸ்க்கு யூஸ் ஆகும்னு தோணுச்சு....ஷோ அதை நான் அன்னைக்கு ஈவ்னிங்கே ஸார் கிட்ட கொடுத்துட்டேன்....அது இப்போ அனலைஸிங் பொரசஸ்ல இருக்கு...இன்னும் இரண்டு, மூணு நாள்ல அதோட ரிஸல்ட்டும் வந்துடும்....." என சரோஜா கூறவும்
"கிஃப்ட் உன் கிட்ட இல்லையா???" என அஜய் ஆச்சரியமாக கேட்டான்.
"கிஃப்டும் இல்ல ஒரு மண்ணும் இல்ல....ஏன் என்னாச்சு???" என சரோஜா கேட்கவும்
"ஒண்ணும் இல்ல....வேற ஒரு யோசனை...." எனக் கூறியவன் கண்களை மூடி தலையை ஒரு முறை அழுந்தக் கோதிக் கொண்டான்.
"கிஃப்ட் வந்த வரைக்கும் திரு சொன்னாரே....ஒரு வேளை வீட்ல தான் எங்கேயும் அந்த கிஃப்ட் இருக்குமோ...." என யோசித்தவன் உடனே தன் போனை எடுத்து ஒரு எண்ணிற்கு அழைப்பை மேற்கொண்டான்.
"ஹலோ மருது....நீங்க உடனே திருவோட வீட்டுக்கு போங்க....அங்க அந்த ரூம்ல நான் சொல்ற மாதிரி ஒரு ஸ்டச்சு இருக்கானு பாருங்க....." என்ற அஜய் சிறிது நேரம் அதை பற்றி விளக்கமாக கூறி விட்டு சரோஜாவை நிமிர்ந்து பார்த்தான்.
"ஏதாவது பிராப்ளமா???" என சரோஜா கேட்கவும்
"பிராப்ளம் எல்லாமஎ இல்ல....ஒரு சின்ன க்ளூ...தட்ஸ் இட்..." என்று கூற
"உங்க கிட்ட ஒரு விஷயம் கேட்கலாமா???" என சரோஜா கேட்டாள்.
"என்ன கேளு???"
"அது வந்து....உங்க அப்பா கிட்ட நீங்க கேஸ் பற்றி பேசவே மாட்டிங்களா???" என சரோஜா கேட்கவும் அமைதியாக நின்ற அஜய் ஒரு முறை கண்களை இறுக மூடித் திறந்து கொண்டு பேசத் தொடங்கினான்.
"அப்பா இந்தியாவில் இருந்த டைம் வர நான் எல்லாம் டிஸ்கஸ் பண்ணுவேன்...பட் அது சில பேருக்கு பிடிக்கல....நான் அப்பா பின்னாலேயே இன்னமும் தங்கி இருக்குறேன்னு சொல்ல ஆரம்பிச்சாங்க....அப்பாவுக்கும் இதெல்லாம் கேட்டு கஷ்டமாகிடுச்சு....ஷோ என் திறமை எல்லோருக்கும் புரியணும்னு அப்பா எனக்கு ஸ்பேஸ் கொடுத்துட்டு இந்த வேலைகளை எல்லாம் தனபால் அங்கிள்கிட்ட கொடுத்துட்டுப் போனாங்க....ஆனா அம்மாவுக்கு இதில் இஷ்டம் இல்ல....எப்படியோ அம்மாவை சமாளித்து ஐந்து வருஷம் அங்க இருந்துட்டு வந்தாங்க....இப்போ இந்த கேஸ்ல நீங்க உள்ளே வந்தது மறுபடியும் எனக்கு பிரச்சினை ஆகலாம்...ஆனா நான் என் கடமையை செய்வேன்....அந்த கிஃப்ட் இந்த கேஸோட முக்கியமான எவிடன்ஸ்...அதை நீ எடுத்து இருப்பேன்னு தான் நான் இன்னைக்கு இங்க வந்ததே....நீ அதை பொரசஸ்க்கு கொடுத்து இருப்பேன்னு எல்லாம் நான் யோசிக்கல....உன் கிட்ட இருக்குற அந்த கிஃப்ட்டை வாங்கிட்டுப் போகலாம்னு தான் வந்தேன்...." என அஜய் கூறவும் அத்தனை நேரம் அவனை எண்ணி வியந்து நின்றவள் இறுதியாக அவன் கூறிய வார்த்தைகளைக் கேட்டு கலங்கி போனாள்.
"அப்போ இவர் விருப்பப்பட்டு இங்க வரலயா???" என யோசித்தவள் தன் சிந்தனை போகும் போக்கை எண்ணி அச்சம் கொண்டவளாக அந்த சிந்தனையை தற்காலிகமாக ஒதுக்கி வைத்தாள்.
சூழ்நிலையை சகஜமாக்க
"அய்யோ....பேச வந்த விஷயத்தை தவிர மற்ற எல்லாவற்றையும் நாம பேசிட்டு இருக்கோமே....." என்று சரோஜா கூறவும்
"அட ஆமா...." என்ற அஜய்
"சொல்லுங்க நீங்க என்ன சொல்ல வந்திங்க என் கிட்ட???" என்று கேட்டான்.
"அது....அது....." என்று இழுத்தவள் ஆழ்ந்த மூச்சுக்களை எடுத்து விட்டு தன்னை சமன் செய்து கொண்ட பின் அஜயை நேராக பார்த்து பேசத் தொடங்கினாள்.
"எனக்கு இப்போ கல்யாணம் பண்ணிக்குறதுல சுத்தமாக இஷ்டம் இல்லை....அம்மாவோட வார்த்தைக்காக தான் நான் இன்னைக்கு இந்த பொண்ணு பார்க்குற சம்பிரதாயத்துக்கு ஒத்துக்கிட்டேன்....எனக்கு லைப்ல ஒரு லட்சியம் இருக்கு....எதாவது பெரிதா சாதிக்கணும்....மத்தவங்களுக்கு முன் மாதிரியாக ஒரு ரோல் மாடலாக இருக்கணும்....ஷோ அது வரை கல்யாணம் பண்ணிக்க கூடாதுனு தான் இருந்தேன்...ஆனா என் தம்பி என் மனசை மாத்திட்டான்....கல்யாணம் பண்ணிட்டும் சாதிக்கலாம் வரப்போற ஹஸ்பண்ட் துணையாக இருந்தா மட்டும்னு அவன் சொன்னதும் எனக்கு கரெக்ட்னு பட்டது....அது தான் உங்க கிட்ட இதை சொல்றேன்....கல்யாணம் நடந்தாலும் நான் என் வேலையில் முழு ஈடுபாட்டுடன் தான் இருப்பேன்...என் முழு கான்ஸன்ட்ரேஷனும் என்னோட அய்ம்ல தான் இருக்கும்.....இப்போ ஏன் இதை சொல்லுறேன் இங்க நீங்க ஓகே சொல்லிட்டு பின்னாடி அதையே ஒரு பிரச்சினையாக ஆக்க கூடாது இல்லையா??? இதற்கு உங்களுக்கு சம்மதம்னா எனக்கும் இந்த மேரேஜ்ல நோ ஆப்செக்சன்ஸ்...." என்ற சரோஜா அவன் இதற்கு சாதகமாக ஏதாவது கூறமாட்டானா என்று ஆவலுடன் பார்த்துக் கொண்டு நின்றாள்.
"அய்யோ...." என்று தன் நெஞ்சில் அஜய் கை வைத்து கொள்ள
"என்ன??? என்னாச்சு???" எனப் பதட்டத்துடன் சரோஜா கேட்டாள்.
"உங்க பேச்சை கேட்டு பீல் ஆகிட்டேன்...." என அஜய் கூறவும் சரோஜா அவனை முறைத்து பார்த்தாள்.
"சரி சரி விளையாட்டு வேண்டாம்...நான் உன்னை பொண்ணு பார்க்க வந்ததே அந்த பொருள் விஷயமாக பேசணும்னு தான்...அதை நான் உன் கிட்ட வேற இடத்தில் மீட் பண்ணியும் கேட்டு இருக்கலாம்....பட் இது தானாக அமைஞ்ச சிட்டுவேஸன் ஷோ அதை நான் எனக்கு சாதகமாக யூஸ் பண்ணிட்டேன்....ஐ யம் ஸாரி...." என அஜய் கூறவும்
"ஓஹ்.....இட்ஸ் ஓகே...." எனக் கூறிய சரோஜாவின் குரலில் அத்தனை உயிர்ப்பு இருக்கவில்லை.
சரோஜாவின் முக மாற்றங்களை பார்த்து அஜயின் மனம் வாடினாலும் அதற்கான காரணம் அவனுக்கு புரியாமல் இல்லை.
"நான் வந்தது என்னவோ அந்த கேஸ் விஷயமாக பேசத் தான்...ஆனா இப்போ என் மனசு என்கிட்ட இல்லையே.."
என்று நினைத்துக் கொண்டவன் சரோஜாவை நிமிர்ந்து பார்த்தான்.
முல்லை பந்தலின் கீழ் நின்று கொண்டிருந்த சரோஜா சேலை நுனியை கையில் வைத்து சுருட்டுவதும், விரிப்பதுமாக இருக்க அஜய் அங்கிருந்த ஒரு கம்பத்தின் மேல் சாய்ந்து நின்று சரோஜாவையே பார்த்து கொண்டு நின்றான்.
"இது சரிப்பட்டு வர்ற மாதிரி எனக்கு தெரியல...." எனத் தனக்குள்ளேயே கூறி கொண்டவன் சரோஜாவின் முன்னால் வந்து நின்றான்.
திடீரென அஜய் தன் முன்னால் வந்து நிற்கவும் சரோஜா பதட்டத்துடன் இரண்டு அடி பின்னோக்கி நகர்ந்தாள்.
"ஹேய்....கூல்....நான் மனுஷன் தான்மா....பேயோ, பிசாசோ இல்ல....எதுக்கு இவ்வளவு பதட்டம்???" என அஜய் கேட்கவும் நிமிர்ந்து அவனைப் பார்த்த சரோஜா சட்டென்று தன் பார்வையை தாழ்த்திக் கொண்டாள்.
"நான் கூட லாஸ்டா நீ என் கூட பேசுனதை பார்த்து நெக்ஸ்ட் டைம் ஒரு பெரிய சண்டையே போடுவேன்னு நினைச்சேன்....ஆனா இங்க நடக்குறது நான் சுத்தமாக எதிர்பார்க்காத ஒண்ணா இருக்கே...." என சரோஜாவை ஓரக் கண்ணால் பார்த்து கொண்டே யோசிப்பது போல அஜய் பாவனை செய்யவும்
"அட ஆமா....நெக்ஸ்ட் டைம் இவரைப் பார்த்தா சண்டை போடணும்னு தானே இருந்தேன்....இப்போ பேசாமல் இப்படி ஆஃப் ஆகி நிற்குறேனே....நோ சரோஜா நோ....தைரியமாக பேசிடு.....ரெடி வன்...டூ...த்ரீ...." என்று மனதிற்குள் கூறி கொண்டவள்
"என்ன மிஸ்டர்.அஜய்ராஜ் திமிரா???" என்று கேட்டாள்.
"வாவ்....சரோஜா பேசிட்டாங்க....." எனக் கை தட்டியவாறு அஜய் கூறவும்
அவனை முறைத்து பார்த்தவள்
"ஹலோ...போதும்...ஓவரா ஆக்ட் பண்ணாதீங்க தாங்கல....ஆமா என்ன ஸார் நினைச்சுட்டு இருக்கீங்க உங்க மனசுல?? ஆக்சிடெண்ட் பண்ணிட்டு ஒரு ஸாரி கூட சொல்லாம தலைமறைவாகிட்டீங்க....ஆக்சிடெண்ட் பண்ணதுக்காக நான் கம்ப்ளெயிண்ட் எதுவும் பண்ணிடுவேன்னு பயந்து தான் எனக்கு எல்லா ஹெல்ப்பும் நீங்க பண்ணுணீங்கனு எனக்கு தெரியும்....ஏ.சி.பி னா தப்பு பண்ணலாமா??? சொல்லுங்க ஸார்...." எனக் கேட்க அஜய் அமைதியாக நின்றான்.
"சரோஜா ஆக்சிடெண்ட் விஷயம் தப்பு தான்....நான் அக்செப்ட் பண்ணிக்குறேன்....ஆனா அந்த டைம் நான் என்னோட பக்க நியாயத்தை பற்றி பேசாமல் போனதும் ஒரு வகையில் தப்பான விஷயம் தான்....ஏற்கனவே வேலையில் பிரஷர் ஜாஸ்தி....அதோட இதுவும் சேர்ந்தா என் பாடு திண்டாட்டம் ஆகி இருக்கும்....ஷோ அதுக்காக நான் ஸாரி கேட்க ரெடி....ஐ யம் எக்ஸ்ட்ரீம்லி ஸாரி...." என அஜய் மன்னிப்பு கேட்டு சரோஜா வாயடைத்துப் போய் நின்றாள்.
"என்ன இப்படி ஒரேயடியாக சரண்டர் ஆகிட்டாரு???" என சரோஜா யோசித்த வண்ணம் நிற்க
அவள் முகத்தின் முன்னால் சொடக்கிட்டு அவளை நனவுக்கு கொண்டு வந்தவன்
"அப்புறம் உங்க கிட்ட எனக்கு ஒரு ஹெல்ப் ஆகணும்...." என்று கூறவும்
வியப்பாக அவனைப் பார்த்த சரோஜா
"ஹெல்ப்பா??? என் கிட்டயா??? என்ன ஹெல்ப்???" எனக் கேட்டாள்.
"ஆமா....லாஸ்டா ஒரு ஹவுஸ்ல நாம மீட் பண்ணுணோம் தானே...அங்கே நீ ஒரு ரூமுக்குள்ள போய் எதையோ எடுத்துட்டு வந்த...."
"இல்ல...அது வந்து...."
"நான் சொல்லி முடிச்சதுக்கு அப்புறம் நீ பேசு....நீ எடுக்கலேனு எல்லாம் சொல்லாதே....நீ எதையோ எடுத்த எனக்கு தெரியும்....அது இந்த கேஸோட ரொம்ப ரிலேடட் ஆனதுனு என் மைண்ட்க்கு படுது....அப்பா கிட்ட நான் இதை பற்றி பேசல....ஏன்னா அப்பாவோட வேலையில் நான் தலையிட மாட்டேன்....அது என் பாலிஸி....." என அஜய் கூறவும்
"நல்ல பாலிஸி...." என சரோஜா முணுமுணுத்துக் கொண்டாள்.
"என்ன???" என்று அஜய் கேட்கவும்
"ஒண்ணும் இல்லை மேல சொல்லுங்க...." என சரோஜா கூறவும்
"ஓகே....நான் என்ன சொல்ல வர்றேன்னா நீ அந்த ரூமுக்குள்ள போய் எடுத்த அந்த கிஃப்ட் இப்போ எங்க இருக்கு??? அதை ஏன் எங்க கிட்ட காமிக்காமல் கொண்டு போன???" என அஜய் கேட்க
"கிஃப்டா??? கிஃப்ட எங்க நான் எடுத்தேன்???" எனக் குழப்பமாக கேட்டாள் சரோஜா.
"ஹேய் சரோஜா விளையாடாதே..."
"நான் ஏன் உங்க கூட விளையாடப் போறேன்??? அன்னைக்கு நீங்க நார்மலா பேசி இருந்தா நான் இதை சொல்லி இருப்பேன்...நீங்க ஓவரா என்னை சீண்டிப் பார்த்தீங்களா அது தான் நானும் கோபமாக நடந்துட்டேன்....அன்னைக்கு நான் ரூமுக்குள்ள போய் ஒரு பொருளை எடுத்தது உண்மை தான்...ஆனா நீங்க சொல்லுற மாதிரி கிஃப்ட் எல்லாம் இல்ல...ஒரு கிஃப்ட் ராப்பிங் பேப்பர் அதோட ஒரு வெள்ளை பேப்பர்...அந்த வெள்ளை பேப்பர்ல 'ஃபார் மை லவ்' அப்படினு ஒரு வசனம் அவ்வளவு தான்....இருந்தாலும் அது இந்த கேஸ்க்கு யூஸ் ஆகும்னு தோணுச்சு....ஷோ அதை நான் அன்னைக்கு ஈவ்னிங்கே ஸார் கிட்ட கொடுத்துட்டேன்....அது இப்போ அனலைஸிங் பொரசஸ்ல இருக்கு...இன்னும் இரண்டு, மூணு நாள்ல அதோட ரிஸல்ட்டும் வந்துடும்....." என சரோஜா கூறவும்
"கிஃப்ட் உன் கிட்ட இல்லையா???" என அஜய் ஆச்சரியமாக கேட்டான்.
"கிஃப்டும் இல்ல ஒரு மண்ணும் இல்ல....ஏன் என்னாச்சு???" என சரோஜா கேட்கவும்
"ஒண்ணும் இல்ல....வேற ஒரு யோசனை...." எனக் கூறியவன் கண்களை மூடி தலையை ஒரு முறை அழுந்தக் கோதிக் கொண்டான்.
"கிஃப்ட் வந்த வரைக்கும் திரு சொன்னாரே....ஒரு வேளை வீட்ல தான் எங்கேயும் அந்த கிஃப்ட் இருக்குமோ...." என யோசித்தவன் உடனே தன் போனை எடுத்து ஒரு எண்ணிற்கு அழைப்பை மேற்கொண்டான்.
"ஹலோ மருது....நீங்க உடனே திருவோட வீட்டுக்கு போங்க....அங்க அந்த ரூம்ல நான் சொல்ற மாதிரி ஒரு ஸ்டச்சு இருக்கானு பாருங்க....." என்ற அஜய் சிறிது நேரம் அதை பற்றி விளக்கமாக கூறி விட்டு சரோஜாவை நிமிர்ந்து பார்த்தான்.
"ஏதாவது பிராப்ளமா???" என சரோஜா கேட்கவும்
"பிராப்ளம் எல்லாமஎ இல்ல....ஒரு சின்ன க்ளூ...தட்ஸ் இட்..." என்று கூற
"உங்க கிட்ட ஒரு விஷயம் கேட்கலாமா???" என சரோஜா கேட்டாள்.
"என்ன கேளு???"
"அது வந்து....உங்க அப்பா கிட்ட நீங்க கேஸ் பற்றி பேசவே மாட்டிங்களா???" என சரோஜா கேட்கவும் அமைதியாக நின்ற அஜய் ஒரு முறை கண்களை இறுக மூடித் திறந்து கொண்டு பேசத் தொடங்கினான்.
"அப்பா இந்தியாவில் இருந்த டைம் வர நான் எல்லாம் டிஸ்கஸ் பண்ணுவேன்...பட் அது சில பேருக்கு பிடிக்கல....நான் அப்பா பின்னாலேயே இன்னமும் தங்கி இருக்குறேன்னு சொல்ல ஆரம்பிச்சாங்க....அப்பாவுக்கும் இதெல்லாம் கேட்டு கஷ்டமாகிடுச்சு....ஷோ என் திறமை எல்லோருக்கும் புரியணும்னு அப்பா எனக்கு ஸ்பேஸ் கொடுத்துட்டு இந்த வேலைகளை எல்லாம் தனபால் அங்கிள்கிட்ட கொடுத்துட்டுப் போனாங்க....ஆனா அம்மாவுக்கு இதில் இஷ்டம் இல்ல....எப்படியோ அம்மாவை சமாளித்து ஐந்து வருஷம் அங்க இருந்துட்டு வந்தாங்க....இப்போ இந்த கேஸ்ல நீங்க உள்ளே வந்தது மறுபடியும் எனக்கு பிரச்சினை ஆகலாம்...ஆனா நான் என் கடமையை செய்வேன்....அந்த கிஃப்ட் இந்த கேஸோட முக்கியமான எவிடன்ஸ்...அதை நீ எடுத்து இருப்பேன்னு தான் நான் இன்னைக்கு இங்க வந்ததே....நீ அதை பொரசஸ்க்கு கொடுத்து இருப்பேன்னு எல்லாம் நான் யோசிக்கல....உன் கிட்ட இருக்குற அந்த கிஃப்ட்டை வாங்கிட்டுப் போகலாம்னு தான் வந்தேன்...." என அஜய் கூறவும் அத்தனை நேரம் அவனை எண்ணி வியந்து நின்றவள் இறுதியாக அவன் கூறிய வார்த்தைகளைக் கேட்டு கலங்கி போனாள்.
"அப்போ இவர் விருப்பப்பட்டு இங்க வரலயா???" என யோசித்தவள் தன் சிந்தனை போகும் போக்கை எண்ணி அச்சம் கொண்டவளாக அந்த சிந்தனையை தற்காலிகமாக ஒதுக்கி வைத்தாள்.
சூழ்நிலையை சகஜமாக்க
"அய்யோ....பேச வந்த விஷயத்தை தவிர மற்ற எல்லாவற்றையும் நாம பேசிட்டு இருக்கோமே....." என்று சரோஜா கூறவும்
"அட ஆமா...." என்ற அஜய்
"சொல்லுங்க நீங்க என்ன சொல்ல வந்திங்க என் கிட்ட???" என்று கேட்டான்.
"அது....அது....." என்று இழுத்தவள் ஆழ்ந்த மூச்சுக்களை எடுத்து விட்டு தன்னை சமன் செய்து கொண்ட பின் அஜயை நேராக பார்த்து பேசத் தொடங்கினாள்.
"எனக்கு இப்போ கல்யாணம் பண்ணிக்குறதுல சுத்தமாக இஷ்டம் இல்லை....அம்மாவோட வார்த்தைக்காக தான் நான் இன்னைக்கு இந்த பொண்ணு பார்க்குற சம்பிரதாயத்துக்கு ஒத்துக்கிட்டேன்....எனக்கு லைப்ல ஒரு லட்சியம் இருக்கு....எதாவது பெரிதா சாதிக்கணும்....மத்தவங்களுக்கு முன் மாதிரியாக ஒரு ரோல் மாடலாக இருக்கணும்....ஷோ அது வரை கல்யாணம் பண்ணிக்க கூடாதுனு தான் இருந்தேன்...ஆனா என் தம்பி என் மனசை மாத்திட்டான்....கல்யாணம் பண்ணிட்டும் சாதிக்கலாம் வரப்போற ஹஸ்பண்ட் துணையாக இருந்தா மட்டும்னு அவன் சொன்னதும் எனக்கு கரெக்ட்னு பட்டது....அது தான் உங்க கிட்ட இதை சொல்றேன்....கல்யாணம் நடந்தாலும் நான் என் வேலையில் முழு ஈடுபாட்டுடன் தான் இருப்பேன்...என் முழு கான்ஸன்ட்ரேஷனும் என்னோட அய்ம்ல தான் இருக்கும்.....இப்போ ஏன் இதை சொல்லுறேன் இங்க நீங்க ஓகே சொல்லிட்டு பின்னாடி அதையே ஒரு பிரச்சினையாக ஆக்க கூடாது இல்லையா??? இதற்கு உங்களுக்கு சம்மதம்னா எனக்கும் இந்த மேரேஜ்ல நோ ஆப்செக்சன்ஸ்...." என்ற சரோஜா அவன் இதற்கு சாதகமாக ஏதாவது கூறமாட்டானா என்று ஆவலுடன் பார்த்துக் கொண்டு நின்றாள்.
"அய்யோ...." என்று தன் நெஞ்சில் அஜய் கை வைத்து கொள்ள
"என்ன??? என்னாச்சு???" எனப் பதட்டத்துடன் சரோஜா கேட்டாள்.
"உங்க பேச்சை கேட்டு பீல் ஆகிட்டேன்...." என அஜய் கூறவும் சரோஜா அவனை முறைத்து பார்த்தாள்.
"சரி சரி விளையாட்டு வேண்டாம்...நான் உன்னை பொண்ணு பார்க்க வந்ததே அந்த பொருள் விஷயமாக பேசணும்னு தான்...அதை நான் உன் கிட்ட வேற இடத்தில் மீட் பண்ணியும் கேட்டு இருக்கலாம்....பட் இது தானாக அமைஞ்ச சிட்டுவேஸன் ஷோ அதை நான் எனக்கு சாதகமாக யூஸ் பண்ணிட்டேன்....ஐ யம் ஸாரி...." என அஜய் கூறவும்
"ஓஹ்.....இட்ஸ் ஓகே...." எனக் கூறிய சரோஜாவின் குரலில் அத்தனை உயிர்ப்பு இருக்கவில்லை.
சரோஜாவின் முக மாற்றங்களை பார்த்து அஜயின் மனம் வாடினாலும் அதற்கான காரணம் அவனுக்கு புரியாமல் இல்லை.
"நான் வந்தது என்னவோ அந்த கேஸ் விஷயமாக பேசத் தான்...ஆனா இப்போ என் மனசு என்கிட்ட இல்லையே.."
என்று நினைத்துக் கொண்டவன் சரோஜாவை நிமிர்ந்து பார்த்தான்.