சென்ற பதிவுக்கு லைக், கமெண்ட்ஸ் அளித்த அனைவருக்கும் நன்றி
சரோஜா மற்றும் அஜயின் நிச்சயதார்த்த நாள் இனிதே விடிந்தது.
சரோஜாவின் வீட்டில் கணேஷ் மற்றும் வித்யா அவர்களது உறவினர்களுடன் சேர்ந்து மும்முரமாக வேலைகளை பார்த்து கொண்டிருக்க கார்த்திகாவும், இன்னும் சில பெண்களும் சேர்ந்து சரோஜாவை அலங்கரித்து கொண்டிருந்தனர்.
எல்லோர் முகத்திலும் சந்தோஷம் பரவி இருக்க சரோஜா மாத்திரம் எங்கோ ஓர் மூலையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
"சரோஜா.....சரோஜா....." என்று கார்த்திகா சரோஜாவின் தோள் தொட்டு உலுக்க
கனவில் இருந்து விழிப்பது போல பார்த்தவள்
"என்ன....என்ன ஆச்சு???" என்று கேட்டாள்.
"சரி தான்....பொண்ணு இப்போவே கல்யாணக் கனவு காண ஆரம்பிச்சுட்டா போல..." என்றவாறு சரோஜாவை சுற்றி நின்ற பெண்கள் கூறி சிரிக்க சரோஜாவோ அமைதியாக தன் கையில் இருந்த வளையல்களைப் பார்த்து கொண்டு இருந்தாள்.
கார்த்திகா சரோஜாவின் முகத்தை பார்த்து குழப்பத்தோடு மெதுவாக அவள் நெற்றிச்சுட்டியை சரி செய்வது போல குனிந்து அவள் காதில்
"உனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லையா???" என்று கேட்கவும்
அதிர்ச்சியாக அவளைப் பார்த்த சரோஜா
"அடிப்பாவி அப்படி எதுவும் வெளியில் போய் சொல்லிடாதே....இது வேறு யோசனை....அந்த மேர்டர் கேஸ் பற்றி யோசிச்சுட்டு இருக்கேன்...." என்று கூறவும் கார்த்திகா அவளை விசித்திரமாக பார்த்தாள்.
"இன்னைக்கு உனக்கு நிச்சயதார்த்தம்.....இப்போவும் வேலையை பற்றி தானா யோசிக்கணும்?? உன் கடமை உணர்ச்சி எல்லை மீறி போகுது பார்த்துக்கோ.....அந்த, இந்த யோசனை எல்லாம் தூக்கி போட்டுட்டு சந்தோஷமாக சிரிச்ச முகமாக வெளியே வந்து உட்காரணும்....இது மாதிரி பேமிலி, பிரண்ட்ஸ் கூட இருக்க இனி நேரம் கிடைக்குமோ??கிடைக்காதோ?? ஷோ லெட்ஸ் என்ஜாய் மா..... சரியா???" என கார்த்திகா கேட்கவும்
சிரித்துக் கொண்டே சரியென்று தலை அசைத்த சரோஜா அதன் பிறகு அவள் முகத்தில் இருந்த அந்த புன்னகையை மறைய விடவில்லை.
"அஜய் சீக்கிரம் வாடா நேரமாகுது....." என்று கனகா அஜயின் அறைக் கதவை தட்டி கொண்டு நிற்க அஜயோ கண்ணாடியில் தன் முகத்தை பார்த்து சிரித்துக் கொண்டு நின்றான்.
"அஜய்....டேய் அஜய்...." என்று கனகா சற்று சத்தமாக அதட்டலாக அழைக்கவும்
சலித்து கொண்டே கதவைத் திறந்தவன்
"என்னம்மா ஆச்சு இப்போ??? கொஞ்ச நேரம் ரெடி ஆக விடாமல் இப்படி பண்ணுற???" என்று கேட்கவும்
அவனை மேலிருந்து கீழாக ஆச்சரியமாக பார்த்த கனகா
"என் பையன் அஜயா இது??? என் கண்ணே பட்டுடும் போல இருக்கே...." என்றவாறே திருஷ்டி கழித்தார்.
மெரூன் நிற சர்ட் மற்றும் சந்தன நிற பேண்ட் அணிந்து, கட்டுக்கு அடங்காமல் அலை பாய்ந்த கேசத்தை ஜெல் இட்டு வாரி, இத்தனை நாட்களாக வெளிக்காட்டி கொள்ளாமல் மறைத்து வைத்திருந்த தன் வசீகர புன்னகையோடு ஆண்மகனுக்கே உரிய கம்பீரத்தோடு நின்ற தன் மகனை பார்த்து கனகா கண் கலங்கி நின்றார்.
"அம்மா லேட் ஆகுதுனு சத்தம் போட்டுட்டு இப்போ இப்படி வந்து நிற்குற....என்ன ஆச்சு மா உனக்கு???" என்று அஜய் கேட்கவும்
சிரித்துக் கொண்டே அவனைப் பார்த்த கனகா
"ஒண்ணும் இல்லை....நேரம் ஆகுது... வா போகலாம்..." என்று விட்டு முன்னே செல்ல அஜய் தன் தோளை குலுக்கி கொண்டு அவரைப் பின் தொடர்ந்து சென்றான்.
கடந்த ஒரு வாரமாக நிச்சயதார்த்த வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்க அஜய் தன் தேடுதல் பணியை கை விடவில்லை.
சிறு சிறு விடயத்தை கூட நுணுக்கமாக, உன்னிப்பாக ஆராய்ந்து அதில் ஒவ்வொரு விடயத்தையும் சேகரித்த வண்ணம் சரோஜா ஒரு புறம் இருக்க அஜயோ தோல்விகளைக் கண்டு பின் வாங்காமல் தன் பணியில் முழு மூச்சாக செயல்பட்டுக் கொண்டிருந்தான்.
சாண் ஏறினால் முழம் சறுக்குவது போல ஒவ்வொரு தடயங்களும் சிறிது நேரத்திலேயே ஒன்றும் இல்லாமல் ஆகி விடும் மர்மம் மாத்திரம் தொடர்ந்து அரங்கேறிக் கொண்டே இருந்தது.
வேலை ஒரு பக்கம் போய்க்கொண்டிருக்க நிச்சயதார்த்த நாளை எண்ணி இருவர் மனமும் சந்தோஷம் கொள்ளாமல் இல்லை.
அன்று சரோஜாவோடு கோபமாக பேசி விட்டு சென்ற பின் அஜயும், சரோஜாவும் பேசிக் கொள்ளவில்லை என்பதை விட இருவருக்கும் பேசுவதற்கான சந்தர்ப்பம் அமையவில்லை என்பது தான் உண்மை.
அன்றைய சம்பவத்தை இருவரும் மறந்து போய் நிச்சயதார்த்தத்திற்காக தயாராகி கொண்டிருக்க அடுத்து விதி அவர்களுக்காக வைத்திருப்பது என்னவோ????
சரோஜாவின் வீட்டின் முன்னால் அஜயின் கார் வந்து நிற்க கணேஷ் முன்னால் வந்து எல்லோரையும் உள்ளே அழைத்து கொண்டு சென்றான்.
"மாப்பிள்ளை நம்ம சரோஜாவுக்கு ரொம்ப பொருத்தமாக இருக்காரு...."
"நம்ம சரோஜாவைக் கட்டிக்கப் போற தம்பி இவர் தானா???"
"மாப்பிள்ளை பார்க்க அம்சமாக இருக்காரு....." என சுற்றி நின்ற ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பேசிக் கொண்டு இருக்க சரோஜாவை கார்த்திகா மற்றும் வித்யா ஹாலுக்கு அழைத்து கொண்டு வந்தனர்.
கடல் நீல நிற பட்டு சேலை அணிந்து, வெண்ணிற முத்து மாலை, முத்து கம்மலோடு, மல்லிகை பூ நிறைத்த ஒற்றை ஜடையை முன்னால் எடுத்து விட்டு தலை குனிந்து சிறிது வெட்கமும், அச்சமும் மனதில் எழ மெல்ல நடந்து வந்த தன் மனதிற்கினிய தேவதையை அஜய் விழி எடுக்காமல் ரசித்து கொண்டிருந்தான்.
ஏனோ சரோஜாவை காணும் போதெல்லாம் அஜயின் மனம் துள்ளிக் குதித்து பரவசமடையும்.
இன்றும் அதே பரவச நிலையில் சரோஜாவை அஜய் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தான்.
ஏற்கனவே பேசியது போல நிச்சயதார்த்தம் மிக எளிமையாக நடத்த தீர்மானித்து இருந்ததால் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சூழ அஜய் மற்றும் சரோஜாவின் நிச்சயதார்த்த வைபவம் ஆரம்பித்தது.
அஜயை நேரில் காணும் வரை அன்றைய சம்பவத்தை மறந்து போய் இருந்த சரோஜா அஜயை கண்டதும் கோபமாக தன் முகத்தை திருப்பிக் கொண்டாள்.
அஜய் ஆசையாக சரோஜாவின் முகத்தை பார்த்து கொண்டு இருக்க அவளது இந்த திடீர் முகத் திருப்பல் அவன் மனதை வாடச் செய்தது.
பெரியவர்கள் தாம்பூலத் தட்டை பரிமாறிக் கொள்ள சரோஜா மற்றும் அஜயின் நிச்சயதார்த்தப் பத்திரிகை வாசிக்கப்பட்டது.
அஜய் நொடிக்கு ஒரு தடவை சரோஜாவின் முகத்தையே பார்த்து கொண்டு இருக்க சரோஜாவோ வேண்டுமென்றே அஜயை தவிர்த்து மற்ற எல்லா இடங்களிலும் தன் பார்வையை செலுத்தினாள்.
"எனக்கே விளையாட்டு காட்டுறியா???இருக்கட்டும் பார்த்துக்குறேன்....." என மனதிற்குள் நினைத்துக் கொண்ட அஜய் அடுத்த நிகழ்வை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தான்.
"இரண்டு பேரும் மோதிரத்தை மாற்றிக்கோங்க...." என்று கனகா கூறவும் சட்டென்று சரோஜா அஜயை நிமிர்ந்து பார்க்க அஜயோ சரோஜாவைப் பார்த்து உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான்.
"இப்போ எப்படி என்னை அவாய்ட் பண்ணுவ???" என மனதிற்குள் நினைத்துக் கொண்டு சரோஜாவின் அருகில் அஜய் சென்று நிற்க சரோஜாவோ தலை குனிந்து நின்றாள்.
"சரோஜா இப்போ நீ என்னை நிமிர்ந்து பார்க்கலேனா நான் இந்த மோதிரத்தை போட்டு விடமாட்டேன் பரவாயில்லையா???" என மெல்லிய குரலில் அஜய் கேட்கவும்
சரோஜா தன் தலையை நிமிர்த்தாமலேயே
"ஆமா இப்போ மட்டும் பாசமாக சிரிச்சு சிரிச்சு பேசுவாரு....வெளியே பார்த்தா அப்படியே தலைகீழாக மாறி எரிந்து விழுந்து பேசுவாரு....இவர் மாறி மாறி பேசுனா நாங்களும் அப்படியே பின்னாலேயே வந்துடனுமோ....." என்று மெதுவாக அதே நேரம் அஜய்க்கு மட்டுமே கேட்கும் வகையில் கூற அஜய்க்கு அப்போது தான் அவளது கோபத்திற்கான காரணம் புரிந்தது.
சிரித்துக் கொண்டே அவளது முகத்தை பார்த்தவன் ஏதோ கூற வாய் திறக்க
"மோதிரத்தை மாற்ற இவ்வளவு நேரமா??? யப்பா சாமி முடியல....கேமரா மேன் அதற்குள்ள வேறொரு கல்யாண வீட்டுக்கும் போயிட்டு வந்துட்டாரு.....பாவம்யா அந்த மனுஷன்....." என்று கணேஷ் கூறவும்
நாக்கை கடித்து கொண்டு அவர்களை பார்த்து சமாளிப்பாக சிரித்துக் கொண்ட அஜய்
"ஸாரி...ஸாரி கைஸ்...." என்றவாறே சரோஜாவின் கையை பற்றினான்.
சரோஜா வெட்கத்தோடு அவனை நிமிர்ந்து பார்க்க போக அவளது மனமோ
"நோ சரோஜா....கெத்தை மெயிண்டைண்ட் பண்ணு...." என்று அவளை கட்டி போட்டது.
கையை பிடித்த பின்னராவது சரோஜா நிமிர்ந்து பார்க்க கூடும் என்று அஜய் நினைத்து இருக்க அப்போதும் சரோஜா நிமிர்ந்து பார்க்காமல் இருக்க அஜய் அவளது பிடிவாதத்தை பார்த்து ரசித்து சிரித்தான்.
"ச.....ரோஜா....." என்று அஜய் அழைக்கவும் விழி இரண்டும் அகல ஆச்சரியமாக சரோஜா அவனை நிமிர்ந்து பார்க்க அந்த நொடி அவள் மிருதுவான விரல்களில் அஜய் மோதிரத்தை அணிவித்தான்.
சரோஜா நிமிர்ந்து பார்த்ததும் கண்ணடித்து அவளைப் பார்த்து சிரித்துக் கொண்ட அஜய் தன் கையை அவள் புறமாக நீட்டினான்.
கார்த்திகா சரோஜாவின் கையில் மோதிரத்தை கொடுக்க அதை வாங்கி கொண்டவள்
"இந்த ராஜாவுக்கு ஏற்ற ரோஜா யாரோ???" என்றவாறே அவன் விரலில் மோதிரத்தை மாட்டி விட இம்முறை அஜய் அவளை ஆச்சரியமாகப் பார்த்தான்.
அவள் கூறிய வசனத்தையே அஜயின் மனம் மீண்டும் மீண்டும் எண்ணிப் பார்த்தது.
"ராஜா...ரோஜா ஒரே ரைமிங் தான்...." என்று கூறி அஜய் சிரிக்கவும் அவனைப் பார்த்து சரோஜாவும் புன்னகைக்க நிச்சயதார்த்த நிகழ்வு இனிதே சிறப்பாக நிறைவுற்றது.
அடுத்த மாதம் முதலாவதாக வரும் நல்ல நாளில் அஜய் மற்றும் சரோஜாவின் திருமணத்திற்கு தேதி குறிக்கப்பட மறுபுறம் ஒரு இளவட்டக் கும்பல் சேர்ந்து சரோஜா மற்றும் அஜயை ஒரு வழி செய்து விட்டே விலகினர்.
எல்லோரும் சந்தோஷமாக பேசி கொண்டிருக்க நவீன் மாத்திரம் ஒரு மூலையில் நின்று சரோஜா மற்றும் அஜயை ஒரு வெற்றுப் பார்வை பார்த்து விட்டு வெளியேறி செல்ல அஜயின் கண்கள் அதை கண்டு கொண்டது.
சரோஜா மற்றும் அஜயின் நிச்சயதார்த்த நாள் இனிதே விடிந்தது.
சரோஜாவின் வீட்டில் கணேஷ் மற்றும் வித்யா அவர்களது உறவினர்களுடன் சேர்ந்து மும்முரமாக வேலைகளை பார்த்து கொண்டிருக்க கார்த்திகாவும், இன்னும் சில பெண்களும் சேர்ந்து சரோஜாவை அலங்கரித்து கொண்டிருந்தனர்.
எல்லோர் முகத்திலும் சந்தோஷம் பரவி இருக்க சரோஜா மாத்திரம் எங்கோ ஓர் மூலையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
"சரோஜா.....சரோஜா....." என்று கார்த்திகா சரோஜாவின் தோள் தொட்டு உலுக்க
கனவில் இருந்து விழிப்பது போல பார்த்தவள்
"என்ன....என்ன ஆச்சு???" என்று கேட்டாள்.
"சரி தான்....பொண்ணு இப்போவே கல்யாணக் கனவு காண ஆரம்பிச்சுட்டா போல..." என்றவாறு சரோஜாவை சுற்றி நின்ற பெண்கள் கூறி சிரிக்க சரோஜாவோ அமைதியாக தன் கையில் இருந்த வளையல்களைப் பார்த்து கொண்டு இருந்தாள்.
கார்த்திகா சரோஜாவின் முகத்தை பார்த்து குழப்பத்தோடு மெதுவாக அவள் நெற்றிச்சுட்டியை சரி செய்வது போல குனிந்து அவள் காதில்
"உனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லையா???" என்று கேட்கவும்
அதிர்ச்சியாக அவளைப் பார்த்த சரோஜா
"அடிப்பாவி அப்படி எதுவும் வெளியில் போய் சொல்லிடாதே....இது வேறு யோசனை....அந்த மேர்டர் கேஸ் பற்றி யோசிச்சுட்டு இருக்கேன்...." என்று கூறவும் கார்த்திகா அவளை விசித்திரமாக பார்த்தாள்.
"இன்னைக்கு உனக்கு நிச்சயதார்த்தம்.....இப்போவும் வேலையை பற்றி தானா யோசிக்கணும்?? உன் கடமை உணர்ச்சி எல்லை மீறி போகுது பார்த்துக்கோ.....அந்த, இந்த யோசனை எல்லாம் தூக்கி போட்டுட்டு சந்தோஷமாக சிரிச்ச முகமாக வெளியே வந்து உட்காரணும்....இது மாதிரி பேமிலி, பிரண்ட்ஸ் கூட இருக்க இனி நேரம் கிடைக்குமோ??கிடைக்காதோ?? ஷோ லெட்ஸ் என்ஜாய் மா..... சரியா???" என கார்த்திகா கேட்கவும்
சிரித்துக் கொண்டே சரியென்று தலை அசைத்த சரோஜா அதன் பிறகு அவள் முகத்தில் இருந்த அந்த புன்னகையை மறைய விடவில்லை.
"அஜய் சீக்கிரம் வாடா நேரமாகுது....." என்று கனகா அஜயின் அறைக் கதவை தட்டி கொண்டு நிற்க அஜயோ கண்ணாடியில் தன் முகத்தை பார்த்து சிரித்துக் கொண்டு நின்றான்.
"அஜய்....டேய் அஜய்...." என்று கனகா சற்று சத்தமாக அதட்டலாக அழைக்கவும்
சலித்து கொண்டே கதவைத் திறந்தவன்
"என்னம்மா ஆச்சு இப்போ??? கொஞ்ச நேரம் ரெடி ஆக விடாமல் இப்படி பண்ணுற???" என்று கேட்கவும்
அவனை மேலிருந்து கீழாக ஆச்சரியமாக பார்த்த கனகா
"என் பையன் அஜயா இது??? என் கண்ணே பட்டுடும் போல இருக்கே...." என்றவாறே திருஷ்டி கழித்தார்.
மெரூன் நிற சர்ட் மற்றும் சந்தன நிற பேண்ட் அணிந்து, கட்டுக்கு அடங்காமல் அலை பாய்ந்த கேசத்தை ஜெல் இட்டு வாரி, இத்தனை நாட்களாக வெளிக்காட்டி கொள்ளாமல் மறைத்து வைத்திருந்த தன் வசீகர புன்னகையோடு ஆண்மகனுக்கே உரிய கம்பீரத்தோடு நின்ற தன் மகனை பார்த்து கனகா கண் கலங்கி நின்றார்.
"அம்மா லேட் ஆகுதுனு சத்தம் போட்டுட்டு இப்போ இப்படி வந்து நிற்குற....என்ன ஆச்சு மா உனக்கு???" என்று அஜய் கேட்கவும்
சிரித்துக் கொண்டே அவனைப் பார்த்த கனகா
"ஒண்ணும் இல்லை....நேரம் ஆகுது... வா போகலாம்..." என்று விட்டு முன்னே செல்ல அஜய் தன் தோளை குலுக்கி கொண்டு அவரைப் பின் தொடர்ந்து சென்றான்.
கடந்த ஒரு வாரமாக நிச்சயதார்த்த வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்க அஜய் தன் தேடுதல் பணியை கை விடவில்லை.
சிறு சிறு விடயத்தை கூட நுணுக்கமாக, உன்னிப்பாக ஆராய்ந்து அதில் ஒவ்வொரு விடயத்தையும் சேகரித்த வண்ணம் சரோஜா ஒரு புறம் இருக்க அஜயோ தோல்விகளைக் கண்டு பின் வாங்காமல் தன் பணியில் முழு மூச்சாக செயல்பட்டுக் கொண்டிருந்தான்.
சாண் ஏறினால் முழம் சறுக்குவது போல ஒவ்வொரு தடயங்களும் சிறிது நேரத்திலேயே ஒன்றும் இல்லாமல் ஆகி விடும் மர்மம் மாத்திரம் தொடர்ந்து அரங்கேறிக் கொண்டே இருந்தது.
வேலை ஒரு பக்கம் போய்க்கொண்டிருக்க நிச்சயதார்த்த நாளை எண்ணி இருவர் மனமும் சந்தோஷம் கொள்ளாமல் இல்லை.
அன்று சரோஜாவோடு கோபமாக பேசி விட்டு சென்ற பின் அஜயும், சரோஜாவும் பேசிக் கொள்ளவில்லை என்பதை விட இருவருக்கும் பேசுவதற்கான சந்தர்ப்பம் அமையவில்லை என்பது தான் உண்மை.
அன்றைய சம்பவத்தை இருவரும் மறந்து போய் நிச்சயதார்த்தத்திற்காக தயாராகி கொண்டிருக்க அடுத்து விதி அவர்களுக்காக வைத்திருப்பது என்னவோ????
சரோஜாவின் வீட்டின் முன்னால் அஜயின் கார் வந்து நிற்க கணேஷ் முன்னால் வந்து எல்லோரையும் உள்ளே அழைத்து கொண்டு சென்றான்.
"மாப்பிள்ளை நம்ம சரோஜாவுக்கு ரொம்ப பொருத்தமாக இருக்காரு...."
"நம்ம சரோஜாவைக் கட்டிக்கப் போற தம்பி இவர் தானா???"
"மாப்பிள்ளை பார்க்க அம்சமாக இருக்காரு....." என சுற்றி நின்ற ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பேசிக் கொண்டு இருக்க சரோஜாவை கார்த்திகா மற்றும் வித்யா ஹாலுக்கு அழைத்து கொண்டு வந்தனர்.
கடல் நீல நிற பட்டு சேலை அணிந்து, வெண்ணிற முத்து மாலை, முத்து கம்மலோடு, மல்லிகை பூ நிறைத்த ஒற்றை ஜடையை முன்னால் எடுத்து விட்டு தலை குனிந்து சிறிது வெட்கமும், அச்சமும் மனதில் எழ மெல்ல நடந்து வந்த தன் மனதிற்கினிய தேவதையை அஜய் விழி எடுக்காமல் ரசித்து கொண்டிருந்தான்.
ஏனோ சரோஜாவை காணும் போதெல்லாம் அஜயின் மனம் துள்ளிக் குதித்து பரவசமடையும்.
இன்றும் அதே பரவச நிலையில் சரோஜாவை அஜய் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தான்.
ஏற்கனவே பேசியது போல நிச்சயதார்த்தம் மிக எளிமையாக நடத்த தீர்மானித்து இருந்ததால் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சூழ அஜய் மற்றும் சரோஜாவின் நிச்சயதார்த்த வைபவம் ஆரம்பித்தது.
அஜயை நேரில் காணும் வரை அன்றைய சம்பவத்தை மறந்து போய் இருந்த சரோஜா அஜயை கண்டதும் கோபமாக தன் முகத்தை திருப்பிக் கொண்டாள்.
அஜய் ஆசையாக சரோஜாவின் முகத்தை பார்த்து கொண்டு இருக்க அவளது இந்த திடீர் முகத் திருப்பல் அவன் மனதை வாடச் செய்தது.
பெரியவர்கள் தாம்பூலத் தட்டை பரிமாறிக் கொள்ள சரோஜா மற்றும் அஜயின் நிச்சயதார்த்தப் பத்திரிகை வாசிக்கப்பட்டது.
அஜய் நொடிக்கு ஒரு தடவை சரோஜாவின் முகத்தையே பார்த்து கொண்டு இருக்க சரோஜாவோ வேண்டுமென்றே அஜயை தவிர்த்து மற்ற எல்லா இடங்களிலும் தன் பார்வையை செலுத்தினாள்.
"எனக்கே விளையாட்டு காட்டுறியா???இருக்கட்டும் பார்த்துக்குறேன்....." என மனதிற்குள் நினைத்துக் கொண்ட அஜய் அடுத்த நிகழ்வை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தான்.
"இரண்டு பேரும் மோதிரத்தை மாற்றிக்கோங்க...." என்று கனகா கூறவும் சட்டென்று சரோஜா அஜயை நிமிர்ந்து பார்க்க அஜயோ சரோஜாவைப் பார்த்து உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான்.
"இப்போ எப்படி என்னை அவாய்ட் பண்ணுவ???" என மனதிற்குள் நினைத்துக் கொண்டு சரோஜாவின் அருகில் அஜய் சென்று நிற்க சரோஜாவோ தலை குனிந்து நின்றாள்.
"சரோஜா இப்போ நீ என்னை நிமிர்ந்து பார்க்கலேனா நான் இந்த மோதிரத்தை போட்டு விடமாட்டேன் பரவாயில்லையா???" என மெல்லிய குரலில் அஜய் கேட்கவும்
சரோஜா தன் தலையை நிமிர்த்தாமலேயே
"ஆமா இப்போ மட்டும் பாசமாக சிரிச்சு சிரிச்சு பேசுவாரு....வெளியே பார்த்தா அப்படியே தலைகீழாக மாறி எரிந்து விழுந்து பேசுவாரு....இவர் மாறி மாறி பேசுனா நாங்களும் அப்படியே பின்னாலேயே வந்துடனுமோ....." என்று மெதுவாக அதே நேரம் அஜய்க்கு மட்டுமே கேட்கும் வகையில் கூற அஜய்க்கு அப்போது தான் அவளது கோபத்திற்கான காரணம் புரிந்தது.
சிரித்துக் கொண்டே அவளது முகத்தை பார்த்தவன் ஏதோ கூற வாய் திறக்க
"மோதிரத்தை மாற்ற இவ்வளவு நேரமா??? யப்பா சாமி முடியல....கேமரா மேன் அதற்குள்ள வேறொரு கல்யாண வீட்டுக்கும் போயிட்டு வந்துட்டாரு.....பாவம்யா அந்த மனுஷன்....." என்று கணேஷ் கூறவும்
நாக்கை கடித்து கொண்டு அவர்களை பார்த்து சமாளிப்பாக சிரித்துக் கொண்ட அஜய்
"ஸாரி...ஸாரி கைஸ்...." என்றவாறே சரோஜாவின் கையை பற்றினான்.
சரோஜா வெட்கத்தோடு அவனை நிமிர்ந்து பார்க்க போக அவளது மனமோ
"நோ சரோஜா....கெத்தை மெயிண்டைண்ட் பண்ணு...." என்று அவளை கட்டி போட்டது.
கையை பிடித்த பின்னராவது சரோஜா நிமிர்ந்து பார்க்க கூடும் என்று அஜய் நினைத்து இருக்க அப்போதும் சரோஜா நிமிர்ந்து பார்க்காமல் இருக்க அஜய் அவளது பிடிவாதத்தை பார்த்து ரசித்து சிரித்தான்.
"ச.....ரோஜா....." என்று அஜய் அழைக்கவும் விழி இரண்டும் அகல ஆச்சரியமாக சரோஜா அவனை நிமிர்ந்து பார்க்க அந்த நொடி அவள் மிருதுவான விரல்களில் அஜய் மோதிரத்தை அணிவித்தான்.
சரோஜா நிமிர்ந்து பார்த்ததும் கண்ணடித்து அவளைப் பார்த்து சிரித்துக் கொண்ட அஜய் தன் கையை அவள் புறமாக நீட்டினான்.
கார்த்திகா சரோஜாவின் கையில் மோதிரத்தை கொடுக்க அதை வாங்கி கொண்டவள்
"இந்த ராஜாவுக்கு ஏற்ற ரோஜா யாரோ???" என்றவாறே அவன் விரலில் மோதிரத்தை மாட்டி விட இம்முறை அஜய் அவளை ஆச்சரியமாகப் பார்த்தான்.
அவள் கூறிய வசனத்தையே அஜயின் மனம் மீண்டும் மீண்டும் எண்ணிப் பார்த்தது.
"ராஜா...ரோஜா ஒரே ரைமிங் தான்...." என்று கூறி அஜய் சிரிக்கவும் அவனைப் பார்த்து சரோஜாவும் புன்னகைக்க நிச்சயதார்த்த நிகழ்வு இனிதே சிறப்பாக நிறைவுற்றது.
அடுத்த மாதம் முதலாவதாக வரும் நல்ல நாளில் அஜய் மற்றும் சரோஜாவின் திருமணத்திற்கு தேதி குறிக்கப்பட மறுபுறம் ஒரு இளவட்டக் கும்பல் சேர்ந்து சரோஜா மற்றும் அஜயை ஒரு வழி செய்து விட்டே விலகினர்.
எல்லோரும் சந்தோஷமாக பேசி கொண்டிருக்க நவீன் மாத்திரம் ஒரு மூலையில் நின்று சரோஜா மற்றும் அஜயை ஒரு வெற்றுப் பார்வை பார்த்து விட்டு வெளியேறி செல்ல அஜயின் கண்கள் அதை கண்டு கொண்டது.