சென்ற பதிவுக்கு லைக், கமெண்ட்ஸ் அளித்த அனைவருக்கும் நன்றி.....
அன்னை இல்லத்தின் முன்னால் போலீஸ் வாகனமும், மீடியா வாகனங்களும் குவிந்து நிற்க அஜய் மற்றும் சரோஜா அந்த இடத்தை வந்து சேர்ந்தனர்.
ராஜஷேகர் யோசனையோடு ஒவ்வொரு இடமாக பார்த்து கொண்டு வர சரோஜா அஜயை பின் தொடர்ந்து சென்றாள்.
லலிதாவின் அறையில் கதிரையில் அமர்ந்த நிலையிலேயே லலிதா இறந்து கிடக்க அங்கிருந்த குழந்தைகள் எல்லோரையும் காவல்துறையினர் அந்த அறைக்குள் நுழைய விடாமல் மற்றைய புறமாக அழைத்து கொண்டு சென்றனர்.
லலிதா இறந்து கிடந்த நிலையை பார்த்து சரோஜாவிற்கு தலை சுற்றுவது போல இருக்கவே அஜயின் கைகளை பற்றி கொண்டவள் அஜயுடன் சேர்ந்து லலிதாவின் உடலின் அருகில் சென்றாள்.
அஜய் கையை முன்னே நீட்டுவதற்காக தன் கையை எடுக்கப் பார்க்க அவனது கையை எதுவோ பலமாக பற்றி இருந்தது.
அஜய் குழப்பமாக திரும்பி பார்க்க சரோஜா ஒரு கையால் அவனது கையை இறுக்கமாக பற்றி கொண்டு மறு கையால் மேஜை மேல் எதையோ மும்முரமாக பார்த்து கொண்டு நின்றாள்.
"க்கும்....." என அஜய் தொண்டையை செரும
அவனை நிமிர்ந்து பார்த்த சரோஜா
"என்ன தண்ணீர் வேணுமா???" என்று கேட்டாள்.
அஜய் குனிந்து தன் கைகளை பற்றி இருந்த சரோஜாவின் கையை பார்க்கவும் நாக்கை கடித்து கொண்டு சமாளிப்பாக அவனை பார்த்து புன்னகத்தவள் மெல்ல அவன் கையில் இருந்த தன் கையை விலக்கி எடுத்தாள்.
அந்த அறையிலும் தடயங்கள் சேகரிப்பு பணி தொடங்கி விட அஜய் விசாரணைக்காக அங்கே இருக்கும் வாட்ச்மேனைத் தேடி சென்றான்.
லலிதாவின் உடலின் அருகிலேயே சுற்றி வந்த சரோஜா அவரது கை இறுக மூடி இருப்பதை பார்த்து அதை திறக்க முயற்சி செய்தாள்.
சிரமப்பட்டு அவரது கையை திறந்தவள் அதனுள் இருந்த பொருளை பார்த்து அதிர்ச்சியாகி நிற்க மறுபுறம் அஜய் வாட்ச்மேனை துருவி துருவி விசாரித்துக் கொண்டு நின்றான்.
வாட்ச்மேன் தனக்கு தெரிந்த விடயங்கள் எல்லாவற்றையும் ஒன்று விடாமல் அவற்றை எல்லாம் குறித்து கொண்ட அஜய் மீண்டும் லலிதாவின் ஆபீஸ் அறையை நோக்கி சென்றான்.
சரோஜாவின் அருகில் வந்த கார்த்திகா அவளது தோளில் தட்டவும் திடுக்கிட்டு அவளைத் திரும்பி பார்த்த சரோஜா லலிதாவின் கையை நோக்கி தன் கையை காட்டினாள்.
"என்ன இது??? டாலர் மாதிரி இருக்கு??" எனக் கேட்ட கார்த்திகா உடனடியாக ராஜஷேகரை அழைத்து கொண்டு வந்தாள்.
அவர்கள் அருகில் வந்த ராஜஷேகர் லலிதாவின் கையில் இருந்த டாலரை எடுத்து பார்த்தார்.
"இது அந்த கொலைகாரனோட டாலராக இருக்கலாம்னு நினைக்குறேன்....தன்னை காப்பாற்றிக் கொள்ளுவதற்காக இவங்க சண்டை போடும் போது வந்து இருக்கலாம்...." என ராஜஷேகர் கூறவும்
"ஆனா அவ்வளவு ஈஸியாக அந்த கொலை காரன் தடயங்களை விட்டுட்டு போறவன் இல்லையே...." என்றவாறே அஜய் அவரின் முன்னால் வந்து நின்றான்.
"எதை வைத்து நீ அப்படி சொல்லுற அஜய்???"
"சாதாரண கிஃப்ட் ராப்பிங் பேப்பரில் கூட கை ரேகை படாமல் கொடுத்து விட்டவன் இப்படி தடயத்தை விட்டு போக கூடுமா??? ஆனா இருந்தாலும் நமக்குன்னு ஒரு நடைமுறை இருக்கே....ஷோ நீங்க இதை மேற்கொண்டு என்ன செய்யணுமோ அதை பண்ணுங்க...." என்று விட்டு திரும்பி நடந்தவன் ஏதோ நினைவு வந்தவனாக மீண்டும் ராஜஷேகரின் அருகில் வந்தான்.
தன் பேண்ட் பாக்கெட்டில் இருந்து ஒரு கவரை எடுத்து ராஜஷேகரிடம் கொடுத்தவன்
"இது திருவோட வீட்டில் எனக்கு கிடைச்சது....இதையும் பொரசஸ்க்கு அனுப்பி விடுங்க....ரிசல்ட் கொஞ்சம் அவசரமாக கிடைக்குற மாதிரி பண்ணுங்க...." என்று விட்டு சென்று விட ராஜஷேகர் அடுத்த கட்ட வேலைகளை தன் பணியாளர்களோடு சேர்ந்து திட்டமிடத் தொடங்கினார்.
ஸ்டேஷனுக்கு வந்த அஜய் தன் தலையை இரு கைகளாலும் தாங்கிக் கொண்டு எதிரில் இருந்த மேஜையை வெறித்துப் பார்த்து கொண்டு இருந்தான்.
"எந்த ஒரு கேஸும் இவ்வளவு தலைவலியை எனக்கு தந்தது இல்லை.....இந்த ஒரு கேஸ் ஏன் இவ்வளவு மர்மமாக இருக்கு??? இதற்கு எல்லாம் காரணம் யாரு??? அவங்க நோக்கம் என்ன??? சே.....ஒரு சின்ன ஐடியா கூட வரலயே....." என அஜய் தனக்குள்ளேயே கேள்வி கேட்டு கொண்டிருக்க மறுபுறம் சென்னை விமான நிலையத்தில் லண்டனில் இருந்து வந்த விமானம் தரையிறங்குவதற்கான அறிவிப்பு அறிவிக்கப்பட்டது.
கையில் அசாதாரணமாக கிடந்த கோர்ட்டை எடுத்து மறு கையில் போட்டு கொண்டே சட்டையில் மாட்டி இருந்த கூலிங் கிளாஸை எடுத்து அணிந்து கொண்டு ஒற்றை கையால் காற்றில் அலை பாய்ந்த முடியை கோதி விட்டுக் கொண்டே தன் லக்கேஜ்களை எடுத்துக் கொண்டு வேகமாக படியிறங்கி வந்தவனைப் பார்த்து
"ஹலோ சித்தார்த்....." என வேகமாக கையசைத்தார் முன்னாள் எம்.எல்.ஏ வாஞ்சிநாதன்.
"ஹாய் டாட்...." என்றவாறே அவரின் அருகில் வந்து அவரை அணைத்துக் கொண்டவன்
"ஹவ் ஆர் யூ டாட்??? மாம் வரலயா???" எனக் கேட்டான்.
"அவ இங்க வந்தா அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி ஒரு வழி பண்ணிடுவா....அது தான் நான் மட்டும் வந்தேன்....நீ எப்படி டா இருக்க???"
"ம்ம்ம்ம்ம்ம்....நீங்களே சொல்லுங்க நான் எப்படி இருக்கேன்???" என்று கேட்ட சித்தார்த்தைப் பார்த்த வாஞ்சிநாதன் கூட ஒரு கணம் பெருமை பட்டு கொண்டார்.
ஆறடிக்கும் சற்று அதிகமான உயரத்தில் கட்டுக்கோப்பாக வைத்திருந்த உடல் வாக்கோடு முகம் நிறைந்த புன்னகையோடு நிற்கும் தன் மகனின் தோளில் தட்டி
கொடுத்த வாஞ்சிநாதன்
"உனக்கு என்னப்பா??? ராஜா வீட்டுக் கன்னுக்குட்டியாட்டம் அம்சமாக இருக்கே..." எனவும்
"அய்யோ....இந்த வசனம் மட்டும் சித்ரா காதில் விழுந்ததுனா வீட்டை இரண்டாக்கிடுவா....அவன் மட்டும் தானா உங்களுக்கு பிள்ளையானு கேட்டு காதை பஞ்சராக்கிடுவா....." என்று சிரித்துப் பேசிக் கொண்டே சித்தார்த்தும், வாஞ்சிநாதனும் கார் பார்க்கிங் அருகில் வந்து சேர்ந்தனர்.
"டிரைவர் இந்த லக்கேஜ் எல்லாம் எடுத்து வை...." என்று கட்டளையிட்ட வாஞ்சிநாதனைப் பார்த்து புன்னகத்து கொண்டே சித்தார்த் வண்டியில் ஏற சிறிது நேரத்தில் ஒரு அரண்மனை போன்ற வீட்டின் முன்னால் அந்த கார் சென்று நின்றது.
"சித்து கண்ணா....." என்று சந்தோஷமாக கூறிய வண்ணம் வீட்டிற்குள் இருந்து வெளியே வந்த தன் அன்னை ருத்ராவை பார்த்ததும் சித்தார்த் ஓடி வந்து அவரை அணைத்துக் கொண்டான்.
"ம்மா.....எப்படி ம்மா இருக்க??"
"நான் ரொம்ப நல்லா இருக்கேன்டா கண்ணா....நீ தான் ரொம்ப இளைச்சு போயிட்ட பாரு....."
"ஹா ஹா ஹா.....எந்த பிள்ளை ஊரில் இருந்து வந்தாலும் அம்மா எல்லோரும் சொல்லுற இந்த வசனம் மட்டும் இன்னும் மாறவே இல்லை....இல்லையாப்பா???" என்றவாறு சித்தார்த் திரும்பி வாஞ்சிநாதனைப் பார்க்க அவர் மும்முரமாக போனில் யாரிடமோ பேசி கொண்டு நின்றார்.
"உங்க அப்பா போன் பேச தொடங்கிட்டாரு....இனி அவருக்கு சாப்பாடு, தண்ணீர் எதுவுமே தேவை இல்லை....நீ வாடா கண்ணா நாம உள்ளே போகலாம்...." என்று விட்டு ருத்ரா சித்தார்த்தின் கை பிடித்து அழைத்து செல்ல
"எங்க நம்ம வீட்டு அல்லிராணி??? காலேஜ் போயிட்டாளா???" என்று தன் அன்னையுடன் பேசிக் கொண்டே சித்தார்த் வீட்டிற்குள் சென்றான்.
"ஒரு வேளை உருப்படியாக பண்ணத் தெரியல....உங்களை எல்லாம் இன்னும் வேலைக்கு வைத்திருக்கேனே என்னை சொல்லணும்....போனை வை....ஈவ்னிங் வந்து பேசுறேன்....." என்ற வாஞ்சிநாதன் கோபமாக தன் போனை கட் செய்து விட்டு வீட்டினுள் சென்ற தன் மகனையும், மனைவியையும் பார்த்து கொண்டு நின்றார்.
வாஞ்சிநாதன் முன்னாள் எம்.எல்.ஏ.
பதவியில் இருந்த காலத்தில் எல்லோராலும் பாராட்டப்பட்ட ஒரு உயர்ந்த மனிதர்.
பல விதமான சேவைகளை மக்களுக்காக செய்து கொடுத்து மக்களின் நன் மதிப்பையும், ஆதரவையும் பெற்றவர் என்றால் மிகையாகாது.
சித்தார்த் மற்றும் சித்ரா தான் அவரது சகல விதமான சொத்துக்களுக்கும் ஏக போக வாரிசுகள்.
வாஞ்சிநாதன் தன் கட்சியில் ஏற்பட்ட உட்பூசல் காரணமாக அரசியல் வாழ்க்கையை முழுக்குப் போட்டு விட்டு அவரது பரம்பரை சொத்துக்களைக் கண்காணிக்கும் பொறுப்புகளை கையில் எடுத்தார்.
சித்தார்த் லண்டனில் எம்.பி.ஏ முடித்து விட்டு இந்தியாவில் இருக்கும் அவர்களது பரம்பரை சொத்தான ஸ்டீல் பக்டரியை பொறுப்பு எடுக்க தற்போது இங்கே வந்துள்ளான்.
சித்தார்த் மற்றும் வாஞ்சிநாதனின் வருகை இங்கே நன்மைக்காகவா?? தீமைக்காகவா?? காலம் வைத்திருக்கும் மர்மம் எதுவோ???
எம்.ஆர் டிடெக்டிவ்ஸ் என்றும் இல்லாமல் அன்று வெகு மும்முரமாக இயங்கிக் கொண்டிருந்தது.
சரோஜா மற்றும் கார்த்திகா இந்த கொலை வழக்கு சம்பந்தமாக மும்முரமாக
கலந்துரையாடிக் கொண்டிருக்க நவீன் அவர்கள் இருவருக்கும் அருகில் வந்து நின்றான்.
கார்த்திகா நவீனைப் பார்த்து விட்டு தன் முகத்தை திருப்பிக் கொள்ள சரோஜா நவீனை பாவமாக பார்த்து கொண்டு இருந்தாள்.
சவரம் செய்யப்படாத முகத்தோடு கண்களின் கீழ் சுருக்கமும், கருவளையமும் சூழ்ந்து ஒரு கணம் இது நவீன் தானா என்று யோசித்து பார்க்கும் அளவுக்கு நின்றவனைப் பார்க்க சரோஜாவிற்கு என்னவோ போல் ஆனது.
"என்ன....என்னாச்சு நவீன்???" என சரோஜா கேட்கவும்
கார்த்திகாவின் புறம் இருந்து தன் பார்வையை சிரமப்பட்டு சரோஜாவின் புறம் திருப்பிய நவீன்
"அந்த கேஸ் பைலை கொஞ்சம் தர முடியுமா?? சில டீடெய்ல்ஸ் பார்க்கணும்..."
"யா...ஸ்யூர்....இந்தாங்க...."
"தாங்க்ஸ்...." என்றவன் அவர்களை திரும்பியும் பார்க்காமல் சென்று விட சரோஜா கார்த்திகாவை திரும்பி பார்த்தாள்.
"நவீன் போயிட்டார்....." என சரோஜா கூறவும் அவளை நிமிர்ந்து பார்த்த கார்த்திகாவின் கண்கள் இரண்டும் கலங்கி இருந்தது.
"ஹேய்....என்னாச்சு????" என சரோஜா கேட்கவும்
அவள் கைகளை பற்றி கொண்ட கார்த்திகா
"எனக்கு கில்டியா இருக்கு சரோஜா....என்னால தானே நவீன் இப்படி ஆகிட்டாரு....யார் கூடவும் பேசாமல் எதையோ பறி கொடுத்த மாதிரி இருக்காரு....." என்று கூற
"ஓஹ்.....அப்படியா விஷயம்?????" என சரோஜா கேட்க கார்த்திகா அவளை முறைத்து பார்த்தாள்.
"நீ நினைக்குற மாதிரி எதுவும் இல்லை....நான் போறேன் போ...." என்று விட்டு கார்த்திகா எழுந்து செல்ல
"எத்தனை நாள் இப்படி ஓடி ஒளியுறேன்னு பார்க்குறேன்...." என்று சிரித்துக் கொண்ட சரோஜா மீண்டும் தன் வேலைகளில் மூழ்கி போனாள்.
நாட்கள் அதன் பாட்டில் கால்களில் சக்கரத்தை கட்டி கொண்டவாறு வெகு வேகமாக ஓடிக்கொண்டிருக்க அனைவரும் அதன் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் தட்டுத் தடுமாறி ஓடி கொண்டிருந்தனர்.
அன்னை இல்லத்தின் முன்னால் போலீஸ் வாகனமும், மீடியா வாகனங்களும் குவிந்து நிற்க அஜய் மற்றும் சரோஜா அந்த இடத்தை வந்து சேர்ந்தனர்.
ராஜஷேகர் யோசனையோடு ஒவ்வொரு இடமாக பார்த்து கொண்டு வர சரோஜா அஜயை பின் தொடர்ந்து சென்றாள்.
லலிதாவின் அறையில் கதிரையில் அமர்ந்த நிலையிலேயே லலிதா இறந்து கிடக்க அங்கிருந்த குழந்தைகள் எல்லோரையும் காவல்துறையினர் அந்த அறைக்குள் நுழைய விடாமல் மற்றைய புறமாக அழைத்து கொண்டு சென்றனர்.
லலிதா இறந்து கிடந்த நிலையை பார்த்து சரோஜாவிற்கு தலை சுற்றுவது போல இருக்கவே அஜயின் கைகளை பற்றி கொண்டவள் அஜயுடன் சேர்ந்து லலிதாவின் உடலின் அருகில் சென்றாள்.
அஜய் கையை முன்னே நீட்டுவதற்காக தன் கையை எடுக்கப் பார்க்க அவனது கையை எதுவோ பலமாக பற்றி இருந்தது.
அஜய் குழப்பமாக திரும்பி பார்க்க சரோஜா ஒரு கையால் அவனது கையை இறுக்கமாக பற்றி கொண்டு மறு கையால் மேஜை மேல் எதையோ மும்முரமாக பார்த்து கொண்டு நின்றாள்.
"க்கும்....." என அஜய் தொண்டையை செரும
அவனை நிமிர்ந்து பார்த்த சரோஜா
"என்ன தண்ணீர் வேணுமா???" என்று கேட்டாள்.
அஜய் குனிந்து தன் கைகளை பற்றி இருந்த சரோஜாவின் கையை பார்க்கவும் நாக்கை கடித்து கொண்டு சமாளிப்பாக அவனை பார்த்து புன்னகத்தவள் மெல்ல அவன் கையில் இருந்த தன் கையை விலக்கி எடுத்தாள்.
அந்த அறையிலும் தடயங்கள் சேகரிப்பு பணி தொடங்கி விட அஜய் விசாரணைக்காக அங்கே இருக்கும் வாட்ச்மேனைத் தேடி சென்றான்.
லலிதாவின் உடலின் அருகிலேயே சுற்றி வந்த சரோஜா அவரது கை இறுக மூடி இருப்பதை பார்த்து அதை திறக்க முயற்சி செய்தாள்.
சிரமப்பட்டு அவரது கையை திறந்தவள் அதனுள் இருந்த பொருளை பார்த்து அதிர்ச்சியாகி நிற்க மறுபுறம் அஜய் வாட்ச்மேனை துருவி துருவி விசாரித்துக் கொண்டு நின்றான்.
வாட்ச்மேன் தனக்கு தெரிந்த விடயங்கள் எல்லாவற்றையும் ஒன்று விடாமல் அவற்றை எல்லாம் குறித்து கொண்ட அஜய் மீண்டும் லலிதாவின் ஆபீஸ் அறையை நோக்கி சென்றான்.
சரோஜாவின் அருகில் வந்த கார்த்திகா அவளது தோளில் தட்டவும் திடுக்கிட்டு அவளைத் திரும்பி பார்த்த சரோஜா லலிதாவின் கையை நோக்கி தன் கையை காட்டினாள்.
"என்ன இது??? டாலர் மாதிரி இருக்கு??" எனக் கேட்ட கார்த்திகா உடனடியாக ராஜஷேகரை அழைத்து கொண்டு வந்தாள்.
அவர்கள் அருகில் வந்த ராஜஷேகர் லலிதாவின் கையில் இருந்த டாலரை எடுத்து பார்த்தார்.
"இது அந்த கொலைகாரனோட டாலராக இருக்கலாம்னு நினைக்குறேன்....தன்னை காப்பாற்றிக் கொள்ளுவதற்காக இவங்க சண்டை போடும் போது வந்து இருக்கலாம்...." என ராஜஷேகர் கூறவும்
"ஆனா அவ்வளவு ஈஸியாக அந்த கொலை காரன் தடயங்களை விட்டுட்டு போறவன் இல்லையே...." என்றவாறே அஜய் அவரின் முன்னால் வந்து நின்றான்.
"எதை வைத்து நீ அப்படி சொல்லுற அஜய்???"
"சாதாரண கிஃப்ட் ராப்பிங் பேப்பரில் கூட கை ரேகை படாமல் கொடுத்து விட்டவன் இப்படி தடயத்தை விட்டு போக கூடுமா??? ஆனா இருந்தாலும் நமக்குன்னு ஒரு நடைமுறை இருக்கே....ஷோ நீங்க இதை மேற்கொண்டு என்ன செய்யணுமோ அதை பண்ணுங்க...." என்று விட்டு திரும்பி நடந்தவன் ஏதோ நினைவு வந்தவனாக மீண்டும் ராஜஷேகரின் அருகில் வந்தான்.
தன் பேண்ட் பாக்கெட்டில் இருந்து ஒரு கவரை எடுத்து ராஜஷேகரிடம் கொடுத்தவன்
"இது திருவோட வீட்டில் எனக்கு கிடைச்சது....இதையும் பொரசஸ்க்கு அனுப்பி விடுங்க....ரிசல்ட் கொஞ்சம் அவசரமாக கிடைக்குற மாதிரி பண்ணுங்க...." என்று விட்டு சென்று விட ராஜஷேகர் அடுத்த கட்ட வேலைகளை தன் பணியாளர்களோடு சேர்ந்து திட்டமிடத் தொடங்கினார்.
ஸ்டேஷனுக்கு வந்த அஜய் தன் தலையை இரு கைகளாலும் தாங்கிக் கொண்டு எதிரில் இருந்த மேஜையை வெறித்துப் பார்த்து கொண்டு இருந்தான்.
"எந்த ஒரு கேஸும் இவ்வளவு தலைவலியை எனக்கு தந்தது இல்லை.....இந்த ஒரு கேஸ் ஏன் இவ்வளவு மர்மமாக இருக்கு??? இதற்கு எல்லாம் காரணம் யாரு??? அவங்க நோக்கம் என்ன??? சே.....ஒரு சின்ன ஐடியா கூட வரலயே....." என அஜய் தனக்குள்ளேயே கேள்வி கேட்டு கொண்டிருக்க மறுபுறம் சென்னை விமான நிலையத்தில் லண்டனில் இருந்து வந்த விமானம் தரையிறங்குவதற்கான அறிவிப்பு அறிவிக்கப்பட்டது.
கையில் அசாதாரணமாக கிடந்த கோர்ட்டை எடுத்து மறு கையில் போட்டு கொண்டே சட்டையில் மாட்டி இருந்த கூலிங் கிளாஸை எடுத்து அணிந்து கொண்டு ஒற்றை கையால் காற்றில் அலை பாய்ந்த முடியை கோதி விட்டுக் கொண்டே தன் லக்கேஜ்களை எடுத்துக் கொண்டு வேகமாக படியிறங்கி வந்தவனைப் பார்த்து
"ஹலோ சித்தார்த்....." என வேகமாக கையசைத்தார் முன்னாள் எம்.எல்.ஏ வாஞ்சிநாதன்.
"ஹாய் டாட்...." என்றவாறே அவரின் அருகில் வந்து அவரை அணைத்துக் கொண்டவன்
"ஹவ் ஆர் யூ டாட்??? மாம் வரலயா???" எனக் கேட்டான்.
"அவ இங்க வந்தா அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி ஒரு வழி பண்ணிடுவா....அது தான் நான் மட்டும் வந்தேன்....நீ எப்படி டா இருக்க???"
"ம்ம்ம்ம்ம்ம்....நீங்களே சொல்லுங்க நான் எப்படி இருக்கேன்???" என்று கேட்ட சித்தார்த்தைப் பார்த்த வாஞ்சிநாதன் கூட ஒரு கணம் பெருமை பட்டு கொண்டார்.
ஆறடிக்கும் சற்று அதிகமான உயரத்தில் கட்டுக்கோப்பாக வைத்திருந்த உடல் வாக்கோடு முகம் நிறைந்த புன்னகையோடு நிற்கும் தன் மகனின் தோளில் தட்டி
கொடுத்த வாஞ்சிநாதன்
"உனக்கு என்னப்பா??? ராஜா வீட்டுக் கன்னுக்குட்டியாட்டம் அம்சமாக இருக்கே..." எனவும்
"அய்யோ....இந்த வசனம் மட்டும் சித்ரா காதில் விழுந்ததுனா வீட்டை இரண்டாக்கிடுவா....அவன் மட்டும் தானா உங்களுக்கு பிள்ளையானு கேட்டு காதை பஞ்சராக்கிடுவா....." என்று சிரித்துப் பேசிக் கொண்டே சித்தார்த்தும், வாஞ்சிநாதனும் கார் பார்க்கிங் அருகில் வந்து சேர்ந்தனர்.
"டிரைவர் இந்த லக்கேஜ் எல்லாம் எடுத்து வை...." என்று கட்டளையிட்ட வாஞ்சிநாதனைப் பார்த்து புன்னகத்து கொண்டே சித்தார்த் வண்டியில் ஏற சிறிது நேரத்தில் ஒரு அரண்மனை போன்ற வீட்டின் முன்னால் அந்த கார் சென்று நின்றது.
"சித்து கண்ணா....." என்று சந்தோஷமாக கூறிய வண்ணம் வீட்டிற்குள் இருந்து வெளியே வந்த தன் அன்னை ருத்ராவை பார்த்ததும் சித்தார்த் ஓடி வந்து அவரை அணைத்துக் கொண்டான்.
"ம்மா.....எப்படி ம்மா இருக்க??"
"நான் ரொம்ப நல்லா இருக்கேன்டா கண்ணா....நீ தான் ரொம்ப இளைச்சு போயிட்ட பாரு....."
"ஹா ஹா ஹா.....எந்த பிள்ளை ஊரில் இருந்து வந்தாலும் அம்மா எல்லோரும் சொல்லுற இந்த வசனம் மட்டும் இன்னும் மாறவே இல்லை....இல்லையாப்பா???" என்றவாறு சித்தார்த் திரும்பி வாஞ்சிநாதனைப் பார்க்க அவர் மும்முரமாக போனில் யாரிடமோ பேசி கொண்டு நின்றார்.
"உங்க அப்பா போன் பேச தொடங்கிட்டாரு....இனி அவருக்கு சாப்பாடு, தண்ணீர் எதுவுமே தேவை இல்லை....நீ வாடா கண்ணா நாம உள்ளே போகலாம்...." என்று விட்டு ருத்ரா சித்தார்த்தின் கை பிடித்து அழைத்து செல்ல
"எங்க நம்ம வீட்டு அல்லிராணி??? காலேஜ் போயிட்டாளா???" என்று தன் அன்னையுடன் பேசிக் கொண்டே சித்தார்த் வீட்டிற்குள் சென்றான்.
"ஒரு வேளை உருப்படியாக பண்ணத் தெரியல....உங்களை எல்லாம் இன்னும் வேலைக்கு வைத்திருக்கேனே என்னை சொல்லணும்....போனை வை....ஈவ்னிங் வந்து பேசுறேன்....." என்ற வாஞ்சிநாதன் கோபமாக தன் போனை கட் செய்து விட்டு வீட்டினுள் சென்ற தன் மகனையும், மனைவியையும் பார்த்து கொண்டு நின்றார்.
வாஞ்சிநாதன் முன்னாள் எம்.எல்.ஏ.
பதவியில் இருந்த காலத்தில் எல்லோராலும் பாராட்டப்பட்ட ஒரு உயர்ந்த மனிதர்.
பல விதமான சேவைகளை மக்களுக்காக செய்து கொடுத்து மக்களின் நன் மதிப்பையும், ஆதரவையும் பெற்றவர் என்றால் மிகையாகாது.
சித்தார்த் மற்றும் சித்ரா தான் அவரது சகல விதமான சொத்துக்களுக்கும் ஏக போக வாரிசுகள்.
வாஞ்சிநாதன் தன் கட்சியில் ஏற்பட்ட உட்பூசல் காரணமாக அரசியல் வாழ்க்கையை முழுக்குப் போட்டு விட்டு அவரது பரம்பரை சொத்துக்களைக் கண்காணிக்கும் பொறுப்புகளை கையில் எடுத்தார்.
சித்தார்த் லண்டனில் எம்.பி.ஏ முடித்து விட்டு இந்தியாவில் இருக்கும் அவர்களது பரம்பரை சொத்தான ஸ்டீல் பக்டரியை பொறுப்பு எடுக்க தற்போது இங்கே வந்துள்ளான்.
சித்தார்த் மற்றும் வாஞ்சிநாதனின் வருகை இங்கே நன்மைக்காகவா?? தீமைக்காகவா?? காலம் வைத்திருக்கும் மர்மம் எதுவோ???
எம்.ஆர் டிடெக்டிவ்ஸ் என்றும் இல்லாமல் அன்று வெகு மும்முரமாக இயங்கிக் கொண்டிருந்தது.
சரோஜா மற்றும் கார்த்திகா இந்த கொலை வழக்கு சம்பந்தமாக மும்முரமாக
கலந்துரையாடிக் கொண்டிருக்க நவீன் அவர்கள் இருவருக்கும் அருகில் வந்து நின்றான்.
கார்த்திகா நவீனைப் பார்த்து விட்டு தன் முகத்தை திருப்பிக் கொள்ள சரோஜா நவீனை பாவமாக பார்த்து கொண்டு இருந்தாள்.
சவரம் செய்யப்படாத முகத்தோடு கண்களின் கீழ் சுருக்கமும், கருவளையமும் சூழ்ந்து ஒரு கணம் இது நவீன் தானா என்று யோசித்து பார்க்கும் அளவுக்கு நின்றவனைப் பார்க்க சரோஜாவிற்கு என்னவோ போல் ஆனது.
"என்ன....என்னாச்சு நவீன்???" என சரோஜா கேட்கவும்
கார்த்திகாவின் புறம் இருந்து தன் பார்வையை சிரமப்பட்டு சரோஜாவின் புறம் திருப்பிய நவீன்
"அந்த கேஸ் பைலை கொஞ்சம் தர முடியுமா?? சில டீடெய்ல்ஸ் பார்க்கணும்..."
"யா...ஸ்யூர்....இந்தாங்க...."
"தாங்க்ஸ்...." என்றவன் அவர்களை திரும்பியும் பார்க்காமல் சென்று விட சரோஜா கார்த்திகாவை திரும்பி பார்த்தாள்.
"நவீன் போயிட்டார்....." என சரோஜா கூறவும் அவளை நிமிர்ந்து பார்த்த கார்த்திகாவின் கண்கள் இரண்டும் கலங்கி இருந்தது.
"ஹேய்....என்னாச்சு????" என சரோஜா கேட்கவும்
அவள் கைகளை பற்றி கொண்ட கார்த்திகா
"எனக்கு கில்டியா இருக்கு சரோஜா....என்னால தானே நவீன் இப்படி ஆகிட்டாரு....யார் கூடவும் பேசாமல் எதையோ பறி கொடுத்த மாதிரி இருக்காரு....." என்று கூற
"ஓஹ்.....அப்படியா விஷயம்?????" என சரோஜா கேட்க கார்த்திகா அவளை முறைத்து பார்த்தாள்.
"நீ நினைக்குற மாதிரி எதுவும் இல்லை....நான் போறேன் போ...." என்று விட்டு கார்த்திகா எழுந்து செல்ல
"எத்தனை நாள் இப்படி ஓடி ஒளியுறேன்னு பார்க்குறேன்...." என்று சிரித்துக் கொண்ட சரோஜா மீண்டும் தன் வேலைகளில் மூழ்கி போனாள்.
நாட்கள் அதன் பாட்டில் கால்களில் சக்கரத்தை கட்டி கொண்டவாறு வெகு வேகமாக ஓடிக்கொண்டிருக்க அனைவரும் அதன் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் தட்டுத் தடுமாறி ஓடி கொண்டிருந்தனர்.