சென்ற பதிவுக்கு லைக், கமெண்ட்ஸ் அளித்த அனைவருக்கும் நன்றி......
டிரஸ்ஸிங் டேபிளின் முன்னால் அமர்ந்து தன் அணிகலன்கள் ஒவ்வொன்றாக கழட்டி மேஜையில் வைத்து கொண்டிருந்த சரோஜாவின் மனம் முழுவதும் சற்று நேரத்திற்கு முன்னர் நடந்த சம்பவங்களையே சுற்றி வந்தது.
வாஞ்சிநாதனைப் பார்த்து அதிர்ந்து போய் நின்ற சரோஜா அஜயின்
"சரோஜா...சரோஜா...." என்ற தோள் உலுக்கலிலேயே சுய நினைவுக்கு வந்தாள்.
எல்லோரும் சரோஜாவையே வித்தியாசமாக பார்த்து கொண்டிருக்க சமாளிப்பது போல எல்லோரையும் பார்த்து புன்னகத்து கொண்டவள்
"ஸாரி....ஸாரி....நான் வேறு ஒரு யோசனையில் இருந்துட்டேன்....ஸாரி...." என்று கூற மற்றவர்களும் புன்னகையோடு தங்கள் விடுபட்ட பேச்சை பேச ஆரம்பித்தனர்.
ஆனால் அஜய் மாத்திரம் சரோஜாவின் நடவடிக்கைகளை மனதில் குறித்து வைத்துக் கொண்டு அவளிடம் நேரடியாக எதுவும் கேட்காமல் அமைதியாக அவளை நோட்டம் விட்டு கொண்டு நின்றான்.
மேடையேறி வந்த பின்பும் சரோஜா சிந்தனை வயப்பட்டவளாக நிற்பதைப் பார்த்து குழப்பத்தோடு அவளைப் பார்த்தவன்
"வாஞ்சிநாதன் அங்கிளை முன்னாடியே உனக்கு தெரியுமா???" என்று கேட்டான்.
அஜயின் இந்த நேரடி கேள்வியில் அதிர்ச்சியாக அவனை திரும்பி பார்த்த சரோஜா
"எ..என்...என்ன கேட்டீங்க??" என தடுமாற்றத்துடன் வினவினாள்.
"அங்கிளை பார்த்ததில் இருந்து நீ ஏதோ யோசிச்சுட்டே இருக்க...ஏதோ சரி இல்லை....அவரை இதற்கு முன்னாடி எங்கேயாவது பார்த்து இருக்கியா?? ஏன் திடீர்னு இந்த சடன் சேஞ்ச்???" என அஜய் கேட்கவும்
சுற்றிலும் ஒரு முறை தன் பார்வையை சுழல விட்டவள்
"கடைசியாக திரு கூட ஒரு வயதான ஆளைப் பார்த்தேன்னு சொன்னேன் இல்லையா??? அது இவர் தான்..." என்று கூற
"என்ன???" என அதிர்ச்சியாக கேட்ட அஜய் வாஞ்சிநாதனை திரும்பி பார்த்தான்.
"ஆர் யூ ஸ்யூர்??? சரியாக தான் சொல்லுறியா சரோஜா???"
"ஹன்ரட் பெர்சன்ட் ஸ்யூர் அஜய்....இவரே தான்...நான் நேற்று நைட் கூட இவரைப் பற்றி தான் யோசித்துப் பார்த்தேன்...இவர் யார் என்னனு எனக்கு அப்போ தெரியல...இவரைப் பற்றி ஸார் கிட்ட சொல்லி இருந்தேன்...அடுத்த நாள் அதே ஏரியாவில் போய் அவரை பற்றி விசாரித்து பார்க்க இருந்தோம்...ஆனா அடுத்த நாள் திரு கொலை நடக்கவும் இது அப்படியே தள்ளி போயிடுச்சு....அகைன் ஒரு இரண்டு, மூணு நாள் கழித்து அந்த ஏரியாவுக்கு போய் விசாரித்து பார்த்தோம்...ஆனா இவரை பற்றி யாருக்கும் தெரியல...கடைசியாக கிடைச்ச சஸ்பெக்ட் இவர்...ஷோ இவரை மீட் பண்ணா எதுவும் தகவல் கிடைக்கலாம்னு இத்தனை நாளா தெரு தெருவா தேடி திரிந்தேன்....அவரை பார்த்தது நான் மட்டும் தானே...ஷோ வேற எப்படி விசாரித்து பார்க்குறதுனும் தெரியல....என்ன பண்ணுறதுனு தெரியாம இதை பென்டிங்ல வைச்சோம்...இப்போ இங்க இவரை பார்த்ததும் எனக்கு ரொம்ப ஷாக் ஆகிடுச்சு..." என சரோஜா கூறவும் அஜய் வாஞ்சிநாதனையும், சரோஜாவையும் மாறி மாறிப் பார்த்து கொண்டு நின்றான்.
"என்னாச்சு அஜய்???"
"எனக்கு சின்ன வயதிலிருந்தே அங்கிளைத் தெரியும்...அவர் மேல தப்பு இருக்கும்னு நான் நினைக்கல....அது தான் அவர் மேல உடனே சந்தேகப்படவும் முடியல...அவர் மற்ற அரசியல் வாதிகள் மாதிரி இல்ல...ரொம்ப நேர்மையாக இருந்தவர்....நல்ல விடயங்களுக்கு இந்த காலத்தில் அனுமதி இல்லையே....அதனால்தான் கட்சியில் இருந்தே அவரை விலக்கிட்டாங்க...."
"ஒஹ்....ஒரு வேளை கட்சியில் இருந்து விலக வேற ஏதாவது காரணமும் இருக்கலாம் இல்லையா??? எதற்கும் நாம நம்ம முறைப்படி இந்த கேஸை டீல் பண்ணுவோம்....மே பீ நீங்க சொல்ற மாதிரி அவர் உண்மையாகவே இந்த கேஸில் சம்பந்தப்படலேனா நாம வேற வழியை செலக்ட் பண்ணலாம்....சரியா??" என சரோஜா கேட்கவும் ஆமோதிப்பாக தலை அசைத்த அஜய்
"இரண்டு, மூணு நாள் போகட்டும்...நானே எல்லாம் பார்த்து சொல்லுறேன்..." என வாய் வார்த்தையாக கூறினாலும் அவன் மனதோ இரு பக்கமும் சாய முடியாமல் தவித்தது.
"இல்லை அங்கிள் அப்படி பண்ணக் கூடியவர் இல்லை...." என மனதிற்குள் நினைத்துக் கொண்ட அஜய் அதன் பின்பும் அதே சிந்தனையில் நின்று கொண்டிருந்தான்.
"சரோஜா, மாமா....என்ன இது??? இரண்டு பேரும் யாரோ ஒருத்தரோட கல்யாணத்துக்கு வந்த மாதிரி ஆளுக்கொரு பக்கம் யோசிச்சுட்டு இருக்கீங்க???" என கணேஷ் கேட்கவும்
"ஒண்ணும் இல்லை கணேஷ்...கேஸைப் பற்றி..." என்று ஒரு சேர அஜயும், சரோஜாவும் கூற சுற்றி நின்ற அனைவரும் சரோஜாவையும், அஜயையும் விநோதமாக பார்த்தனர்.
சரோஜா மற்றும் அஜய் கூட அவர்கள் இருவரும் ஒரே பதிலைக் கூறியதை எண்ணி ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள மேடையில் நின்று கொண்டிருந்த கனகாவோ அஜயின் அருகில் வந்து
"யப்பா கடமை கந்தசாமியோட பேரனே!!! இன்னைக்கு உனக்கு கல்யாணம் நடந்து இருக்குப்பா....இன்னைக்காவது உன் மூளையை கொஞ்சம் ஓய்வு எடுக்க விடுடா..." என்று கூற
அவர்கள் முன்னால் நின்ற கணேஷோ
"மாமாவோட தாத்தா பேர் கந்தசாமியா?? அது என்ன கடமை?? ஒரு வேளை அவங்க அப்பாவோட பேரா இருக்குமோ??" எனக் கேட்க அங்கு நின்ற அனைவரும் வாய் விட்டு சிரித்தனர்.
"நீ இவ்வளவு அறிவாளியாக இருக்கக்கூடாது கணேஷ்..." என சித்தார்த் கூறி சிரிக்க
எல்லோரையும் பார்த்து கையெடுத்து கும்பிட்டு
"நன்றி....நன்றி....நன்றி...." என்று கூறிய கணேஷ்
சரோஜாவின் புறம் திரும்பி
"அத்தை சொன்னது உனக்கும் சேர்த்து தான்...உன் கடமை
உணர்ச்சியை இன்னைக்கு மட்டும் அப்படி ஒரு ஓரமாக மூட்டை கட்டி வை....இப்போ எல்லோரும் வாங்க சாப்பிடலாம்....பசி உயிரை கொல்லுது...." என்று கூற புன்னகையோடு கணேஷை அனைவரும் பின் தொடர்ந்து சென்றனர்.
அதன் பிறகு கணேஷின் கலகலப்பான பேச்சிலும், அஜயின் சகோதரர்களின் கலாட்டாவிலும் அந்த வீடே சந்தோஷத்தில் நிறைந்து இருந்தது.
திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்கள் எல்லோரும் ஒவ்வொருவராக சென்று விட இறுதியாக அந்த வீட்டில் அஜயின் குடும்பத்தினரும், சரோஜாவின் குடும்பத்தினருமே எஞ்சி இருந்தனர்.
சரோஜாவிடம் விடைபெற்றுக் கொள்வதற்காக வித்யா அவளருகில் வர சரோஜா கண்கள் கலங்க தன் அன்னையைப் பார்த்து கொண்டு நின்றாள்.
வித்யாவும் கண்கள் கலங்கி சரோஜாவின் அருகில் நிற்க இருவருக்கும் நடுவில் வந்து நின்ற கணேஷ்
"ஆனாலும் நீங்க இவ்வளவு செண்டிமெண்டை பிழியக் கூடாதும்மா...ஒரே தெருவில் இடறி விழுற தூரத்தில் வீட்டை வைச்சுக்கிட்டு என்னவோ கண் காணாத நாட்டுக்கு சரோஜாவை அனுப்பி வைக்குற மாதிரி நிற்குறீங்க....இதெல்லாம் ரொம்ப தப்பும்மா...." என்று கூற
"போடா....." என்றவாறு அவன் தோளில் செல்லமாக தட்டிய வித்யா
"பக்கத்து வீடோ பக்கத்து தெருவோ என்ன இருந்தாலும் இத்தனை வருஷம் நம்ம கைக்குள்ள வைத்து வளர்த்த பிள்ளையை விட்டு பிரிந்து இருக்குறது எல்லாப் பெற்றவங்களுக்கும் வர்ற கஷ்டம் தான்......" என்று கூற
"அம்மா...." என்றவாறே கண்கள் நீரைத் துளிர்க்க வித்யாவை சரோஜா அணைத்துக் கொண்டாள்.
"இதற்கு தான் உங்களையும் எங்க கூடவே இதே வீட்டில் இருக்கச் சொன்னேன்....நீங்க தான் ஒத்துக்கவே இல்லை....உங்களுக்கு எங்க மேல எதுவும் கோபமோ தெரியல....." என குறைபட்டுக் கொண்டவாறு அவர்கள் அருகில் அஜய் வரவும்
அவனை பார்த்து புன்னகத்து கொண்ட வித்யா
"அதெல்லாம் ஒண்ணும் இல்லை மாப்பிள்ளை....என்ன இருந்தாலும் நம்ம வீட்டையும் நம்ம கவனிக்க தானே வேணும்....இங்க பக்கத்தில் தானே வீடு இருக்கு...நினைத்த நேரம் நான் வந்து பார்த்துட்டு போகப்போறேன்....அதில் என்ன இருக்கு?? நீங்க சரோஜாவோடு சந்தோஷமாக இருந்தா போதும்...." என்றவாறே சரோஜாவின் தலையை வருடிக் கொடுத்தார்.
"அப்போ நாங்க போயிட்டு வர்றோம்...." என்று விட்டு கணேஷ் மற்றும் வித்யா சென்று விட சரோஜா அவர்கள் சென்ற வழியையே பார்த்து கொண்டு நின்றாள்.
"சரோஜா போய் டிரஸ் மாத்திக்கோமா....இந்தா இந்த ஸாரியைக் கட்டிக்கோ...." என கனகா சரோஜாவின் கையில் லாவண்டர் நிற சில்க் ஸாரி ஒன்றை வைக்க
புன்னகையோடு
"சரிங்க அத்தை...." என்று அவரை பார்த்து தலை அசைத்தவள் தங்கள் அறையை நோக்கிச் சென்றாள்.
தற்காலிகமாக வாஞ்சிநாதன் பற்றிய எண்ணங்களை மறந்து இருந்த சரோஜா அறையில் தனிமையில் இருந்த நேரம் மீண்டும் அதை பற்றி யோசிக்க தொடங்கினாள்.
ஏனோ அவள் மனது வாஞ்சிநாதனுக்கும் இந்த கொலை சம்பவங்களுக்கும் சம்பந்தம் இருப்பது போல உணர்த்திக் கொண்டே இருக்க இந்த நிலையை எவ்வாறு கையாளுவது என்று அவள் மூளை பல்வேறு கோணங்களில் சிந்திக்கத் தொடங்கியது.
குளியலறையில் இருந்து முகத்தை துடைத்து கொண்டே சாதாரண டீசர்ட், பேண்டிற்கு மாறி இருந்த அஜய் சரோஜாவின் பின்னால் வந்து நின்றான்.
அஜய் வந்து நின்றது கூட தெரியாமல் சரோஜா யோசித்து கொண்டிருக்க
"என்ன இது??? மேடம் நம்ம வந்தது கூட தெரியாமல் யோசிச்சுட்டு இருக்காங்க....இது சரி இல்லையே...." என்று நினைத்துக் கொண்ட அஜயின் மனது தன் குறும்பு தனத்தை மெல்ல தலை தூக்க செய்தது.
கையில் இருந்த டவலை அருகில் இருந்த கதிரையில் வைத்தவன் மெல்ல சத்தம் எழுப்பாமல் நடந்து வந்து சரோஜாவின் இடையை வளைக்க இதை சற்றும் எதிர்பாராத சரோஜாவோ
"ஆஆஆஆஆஆஆ....." என்று கத்தி வைத்தாள்.
சரோஜாவை தன் புறமாக திருப்பி
"உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..." என்றவாறே சரோஜாவின் வாயை இறுக மூடிய அஜய்
"எப்படி ஐயாவோட ஷாக் என்ட்ரி???" என்று சிரித்துக் கொண்டே கேட்கவும்
கோபமாக அவன் கைகளை தட்டி விட்டவள்
"உங்களை....கொஞ்ச நேரத்தில் எனக்கு உயிரே போயிடுச்சு....பண்ணுறதையும் பண்ணிட்டு சிரிக்குறீங்களா??" என முறைத்து கொண்டு கேட்க அஜயோ ஒரே இழுப்பில் அவளை தன் கை வளைவுக்குள் கொண்டு வந்தான்.
"பின்ன வேற என்ன பண்ணுறது?? வெளியில் தான் எதையோ யோசிச்சுட்டு இருக்கேனு பார்த்தா ரூமுக்கு வந்த அப்புறமும் அதே மாதிரி இருக்க....அது தான் சின்னதாக ஒரு ஷாக்...."
"நல்ல ஷாக் கொடுத்தீங்க போங்க..."
"அதெல்லாம் இருக்கட்டும்...நான் காலையில் என்ன சொன்னேன்...இன்னைக்கு நைட் நம்ம மொட்டை மாடி கார்டனில் தானே இருக்கப் போறதா சொன்னேன்....ஆனா நீ இன்னும் டிரஸ் கூட சேஞ்ச் பண்ணாமல் இருக்க...." என அஜய் சற்று காட்டமாக கூற
நாக்கை கடித்து கொண்டு அவனைப் பார்த்து புன்னகத்து கொண்ட சரோஜா "ஸாரி...ஸாரி....அஜய்.....ஜஸ்ட் டென் மினிட்ஸ் வெயிட் பண்ணுங்க.. ரெடி ஆகிட்டு ஓடி வர்றேன்...." என்றவாறே குளியலறைக்குள் நுழைந்து கொள்ள அஜய் புன்னகையோடு தன் போனை பார்த்து கொண்டே அங்கிருந்த ஸோபாவில் சென்று அமர்ந்து கொண்டான்.
டிரஸ்ஸிங் டேபிளின் முன்னால் அமர்ந்து தன் அணிகலன்கள் ஒவ்வொன்றாக கழட்டி மேஜையில் வைத்து கொண்டிருந்த சரோஜாவின் மனம் முழுவதும் சற்று நேரத்திற்கு முன்னர் நடந்த சம்பவங்களையே சுற்றி வந்தது.
வாஞ்சிநாதனைப் பார்த்து அதிர்ந்து போய் நின்ற சரோஜா அஜயின்
"சரோஜா...சரோஜா...." என்ற தோள் உலுக்கலிலேயே சுய நினைவுக்கு வந்தாள்.
எல்லோரும் சரோஜாவையே வித்தியாசமாக பார்த்து கொண்டிருக்க சமாளிப்பது போல எல்லோரையும் பார்த்து புன்னகத்து கொண்டவள்
"ஸாரி....ஸாரி....நான் வேறு ஒரு யோசனையில் இருந்துட்டேன்....ஸாரி...." என்று கூற மற்றவர்களும் புன்னகையோடு தங்கள் விடுபட்ட பேச்சை பேச ஆரம்பித்தனர்.
ஆனால் அஜய் மாத்திரம் சரோஜாவின் நடவடிக்கைகளை மனதில் குறித்து வைத்துக் கொண்டு அவளிடம் நேரடியாக எதுவும் கேட்காமல் அமைதியாக அவளை நோட்டம் விட்டு கொண்டு நின்றான்.
மேடையேறி வந்த பின்பும் சரோஜா சிந்தனை வயப்பட்டவளாக நிற்பதைப் பார்த்து குழப்பத்தோடு அவளைப் பார்த்தவன்
"வாஞ்சிநாதன் அங்கிளை முன்னாடியே உனக்கு தெரியுமா???" என்று கேட்டான்.
அஜயின் இந்த நேரடி கேள்வியில் அதிர்ச்சியாக அவனை திரும்பி பார்த்த சரோஜா
"எ..என்...என்ன கேட்டீங்க??" என தடுமாற்றத்துடன் வினவினாள்.
"அங்கிளை பார்த்ததில் இருந்து நீ ஏதோ யோசிச்சுட்டே இருக்க...ஏதோ சரி இல்லை....அவரை இதற்கு முன்னாடி எங்கேயாவது பார்த்து இருக்கியா?? ஏன் திடீர்னு இந்த சடன் சேஞ்ச்???" என அஜய் கேட்கவும்
சுற்றிலும் ஒரு முறை தன் பார்வையை சுழல விட்டவள்
"கடைசியாக திரு கூட ஒரு வயதான ஆளைப் பார்த்தேன்னு சொன்னேன் இல்லையா??? அது இவர் தான்..." என்று கூற
"என்ன???" என அதிர்ச்சியாக கேட்ட அஜய் வாஞ்சிநாதனை திரும்பி பார்த்தான்.
"ஆர் யூ ஸ்யூர்??? சரியாக தான் சொல்லுறியா சரோஜா???"
"ஹன்ரட் பெர்சன்ட் ஸ்யூர் அஜய்....இவரே தான்...நான் நேற்று நைட் கூட இவரைப் பற்றி தான் யோசித்துப் பார்த்தேன்...இவர் யார் என்னனு எனக்கு அப்போ தெரியல...இவரைப் பற்றி ஸார் கிட்ட சொல்லி இருந்தேன்...அடுத்த நாள் அதே ஏரியாவில் போய் அவரை பற்றி விசாரித்து பார்க்க இருந்தோம்...ஆனா அடுத்த நாள் திரு கொலை நடக்கவும் இது அப்படியே தள்ளி போயிடுச்சு....அகைன் ஒரு இரண்டு, மூணு நாள் கழித்து அந்த ஏரியாவுக்கு போய் விசாரித்து பார்த்தோம்...ஆனா இவரை பற்றி யாருக்கும் தெரியல...கடைசியாக கிடைச்ச சஸ்பெக்ட் இவர்...ஷோ இவரை மீட் பண்ணா எதுவும் தகவல் கிடைக்கலாம்னு இத்தனை நாளா தெரு தெருவா தேடி திரிந்தேன்....அவரை பார்த்தது நான் மட்டும் தானே...ஷோ வேற எப்படி விசாரித்து பார்க்குறதுனும் தெரியல....என்ன பண்ணுறதுனு தெரியாம இதை பென்டிங்ல வைச்சோம்...இப்போ இங்க இவரை பார்த்ததும் எனக்கு ரொம்ப ஷாக் ஆகிடுச்சு..." என சரோஜா கூறவும் அஜய் வாஞ்சிநாதனையும், சரோஜாவையும் மாறி மாறிப் பார்த்து கொண்டு நின்றான்.
"என்னாச்சு அஜய்???"
"எனக்கு சின்ன வயதிலிருந்தே அங்கிளைத் தெரியும்...அவர் மேல தப்பு இருக்கும்னு நான் நினைக்கல....அது தான் அவர் மேல உடனே சந்தேகப்படவும் முடியல...அவர் மற்ற அரசியல் வாதிகள் மாதிரி இல்ல...ரொம்ப நேர்மையாக இருந்தவர்....நல்ல விடயங்களுக்கு இந்த காலத்தில் அனுமதி இல்லையே....அதனால்தான் கட்சியில் இருந்தே அவரை விலக்கிட்டாங்க...."
"ஒஹ்....ஒரு வேளை கட்சியில் இருந்து விலக வேற ஏதாவது காரணமும் இருக்கலாம் இல்லையா??? எதற்கும் நாம நம்ம முறைப்படி இந்த கேஸை டீல் பண்ணுவோம்....மே பீ நீங்க சொல்ற மாதிரி அவர் உண்மையாகவே இந்த கேஸில் சம்பந்தப்படலேனா நாம வேற வழியை செலக்ட் பண்ணலாம்....சரியா??" என சரோஜா கேட்கவும் ஆமோதிப்பாக தலை அசைத்த அஜய்
"இரண்டு, மூணு நாள் போகட்டும்...நானே எல்லாம் பார்த்து சொல்லுறேன்..." என வாய் வார்த்தையாக கூறினாலும் அவன் மனதோ இரு பக்கமும் சாய முடியாமல் தவித்தது.
"இல்லை அங்கிள் அப்படி பண்ணக் கூடியவர் இல்லை...." என மனதிற்குள் நினைத்துக் கொண்ட அஜய் அதன் பின்பும் அதே சிந்தனையில் நின்று கொண்டிருந்தான்.
"சரோஜா, மாமா....என்ன இது??? இரண்டு பேரும் யாரோ ஒருத்தரோட கல்யாணத்துக்கு வந்த மாதிரி ஆளுக்கொரு பக்கம் யோசிச்சுட்டு இருக்கீங்க???" என கணேஷ் கேட்கவும்
"ஒண்ணும் இல்லை கணேஷ்...கேஸைப் பற்றி..." என்று ஒரு சேர அஜயும், சரோஜாவும் கூற சுற்றி நின்ற அனைவரும் சரோஜாவையும், அஜயையும் விநோதமாக பார்த்தனர்.
சரோஜா மற்றும் அஜய் கூட அவர்கள் இருவரும் ஒரே பதிலைக் கூறியதை எண்ணி ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள மேடையில் நின்று கொண்டிருந்த கனகாவோ அஜயின் அருகில் வந்து
"யப்பா கடமை கந்தசாமியோட பேரனே!!! இன்னைக்கு உனக்கு கல்யாணம் நடந்து இருக்குப்பா....இன்னைக்காவது உன் மூளையை கொஞ்சம் ஓய்வு எடுக்க விடுடா..." என்று கூற
அவர்கள் முன்னால் நின்ற கணேஷோ
"மாமாவோட தாத்தா பேர் கந்தசாமியா?? அது என்ன கடமை?? ஒரு வேளை அவங்க அப்பாவோட பேரா இருக்குமோ??" எனக் கேட்க அங்கு நின்ற அனைவரும் வாய் விட்டு சிரித்தனர்.
"நீ இவ்வளவு அறிவாளியாக இருக்கக்கூடாது கணேஷ்..." என சித்தார்த் கூறி சிரிக்க
எல்லோரையும் பார்த்து கையெடுத்து கும்பிட்டு
"நன்றி....நன்றி....நன்றி...." என்று கூறிய கணேஷ்
சரோஜாவின் புறம் திரும்பி
"அத்தை சொன்னது உனக்கும் சேர்த்து தான்...உன் கடமை
உணர்ச்சியை இன்னைக்கு மட்டும் அப்படி ஒரு ஓரமாக மூட்டை கட்டி வை....இப்போ எல்லோரும் வாங்க சாப்பிடலாம்....பசி உயிரை கொல்லுது...." என்று கூற புன்னகையோடு கணேஷை அனைவரும் பின் தொடர்ந்து சென்றனர்.
அதன் பிறகு கணேஷின் கலகலப்பான பேச்சிலும், அஜயின் சகோதரர்களின் கலாட்டாவிலும் அந்த வீடே சந்தோஷத்தில் நிறைந்து இருந்தது.
திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்கள் எல்லோரும் ஒவ்வொருவராக சென்று விட இறுதியாக அந்த வீட்டில் அஜயின் குடும்பத்தினரும், சரோஜாவின் குடும்பத்தினருமே எஞ்சி இருந்தனர்.
சரோஜாவிடம் விடைபெற்றுக் கொள்வதற்காக வித்யா அவளருகில் வர சரோஜா கண்கள் கலங்க தன் அன்னையைப் பார்த்து கொண்டு நின்றாள்.
வித்யாவும் கண்கள் கலங்கி சரோஜாவின் அருகில் நிற்க இருவருக்கும் நடுவில் வந்து நின்ற கணேஷ்
"ஆனாலும் நீங்க இவ்வளவு செண்டிமெண்டை பிழியக் கூடாதும்மா...ஒரே தெருவில் இடறி விழுற தூரத்தில் வீட்டை வைச்சுக்கிட்டு என்னவோ கண் காணாத நாட்டுக்கு சரோஜாவை அனுப்பி வைக்குற மாதிரி நிற்குறீங்க....இதெல்லாம் ரொம்ப தப்பும்மா...." என்று கூற
"போடா....." என்றவாறு அவன் தோளில் செல்லமாக தட்டிய வித்யா
"பக்கத்து வீடோ பக்கத்து தெருவோ என்ன இருந்தாலும் இத்தனை வருஷம் நம்ம கைக்குள்ள வைத்து வளர்த்த பிள்ளையை விட்டு பிரிந்து இருக்குறது எல்லாப் பெற்றவங்களுக்கும் வர்ற கஷ்டம் தான்......" என்று கூற
"அம்மா...." என்றவாறே கண்கள் நீரைத் துளிர்க்க வித்யாவை சரோஜா அணைத்துக் கொண்டாள்.
"இதற்கு தான் உங்களையும் எங்க கூடவே இதே வீட்டில் இருக்கச் சொன்னேன்....நீங்க தான் ஒத்துக்கவே இல்லை....உங்களுக்கு எங்க மேல எதுவும் கோபமோ தெரியல....." என குறைபட்டுக் கொண்டவாறு அவர்கள் அருகில் அஜய் வரவும்
அவனை பார்த்து புன்னகத்து கொண்ட வித்யா
"அதெல்லாம் ஒண்ணும் இல்லை மாப்பிள்ளை....என்ன இருந்தாலும் நம்ம வீட்டையும் நம்ம கவனிக்க தானே வேணும்....இங்க பக்கத்தில் தானே வீடு இருக்கு...நினைத்த நேரம் நான் வந்து பார்த்துட்டு போகப்போறேன்....அதில் என்ன இருக்கு?? நீங்க சரோஜாவோடு சந்தோஷமாக இருந்தா போதும்...." என்றவாறே சரோஜாவின் தலையை வருடிக் கொடுத்தார்.
"அப்போ நாங்க போயிட்டு வர்றோம்...." என்று விட்டு கணேஷ் மற்றும் வித்யா சென்று விட சரோஜா அவர்கள் சென்ற வழியையே பார்த்து கொண்டு நின்றாள்.
"சரோஜா போய் டிரஸ் மாத்திக்கோமா....இந்தா இந்த ஸாரியைக் கட்டிக்கோ...." என கனகா சரோஜாவின் கையில் லாவண்டர் நிற சில்க் ஸாரி ஒன்றை வைக்க
புன்னகையோடு
"சரிங்க அத்தை...." என்று அவரை பார்த்து தலை அசைத்தவள் தங்கள் அறையை நோக்கிச் சென்றாள்.
தற்காலிகமாக வாஞ்சிநாதன் பற்றிய எண்ணங்களை மறந்து இருந்த சரோஜா அறையில் தனிமையில் இருந்த நேரம் மீண்டும் அதை பற்றி யோசிக்க தொடங்கினாள்.
ஏனோ அவள் மனது வாஞ்சிநாதனுக்கும் இந்த கொலை சம்பவங்களுக்கும் சம்பந்தம் இருப்பது போல உணர்த்திக் கொண்டே இருக்க இந்த நிலையை எவ்வாறு கையாளுவது என்று அவள் மூளை பல்வேறு கோணங்களில் சிந்திக்கத் தொடங்கியது.
குளியலறையில் இருந்து முகத்தை துடைத்து கொண்டே சாதாரண டீசர்ட், பேண்டிற்கு மாறி இருந்த அஜய் சரோஜாவின் பின்னால் வந்து நின்றான்.
அஜய் வந்து நின்றது கூட தெரியாமல் சரோஜா யோசித்து கொண்டிருக்க
"என்ன இது??? மேடம் நம்ம வந்தது கூட தெரியாமல் யோசிச்சுட்டு இருக்காங்க....இது சரி இல்லையே...." என்று நினைத்துக் கொண்ட அஜயின் மனது தன் குறும்பு தனத்தை மெல்ல தலை தூக்க செய்தது.
கையில் இருந்த டவலை அருகில் இருந்த கதிரையில் வைத்தவன் மெல்ல சத்தம் எழுப்பாமல் நடந்து வந்து சரோஜாவின் இடையை வளைக்க இதை சற்றும் எதிர்பாராத சரோஜாவோ
"ஆஆஆஆஆஆஆ....." என்று கத்தி வைத்தாள்.
சரோஜாவை தன் புறமாக திருப்பி
"உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..." என்றவாறே சரோஜாவின் வாயை இறுக மூடிய அஜய்
"எப்படி ஐயாவோட ஷாக் என்ட்ரி???" என்று சிரித்துக் கொண்டே கேட்கவும்
கோபமாக அவன் கைகளை தட்டி விட்டவள்
"உங்களை....கொஞ்ச நேரத்தில் எனக்கு உயிரே போயிடுச்சு....பண்ணுறதையும் பண்ணிட்டு சிரிக்குறீங்களா??" என முறைத்து கொண்டு கேட்க அஜயோ ஒரே இழுப்பில் அவளை தன் கை வளைவுக்குள் கொண்டு வந்தான்.
"பின்ன வேற என்ன பண்ணுறது?? வெளியில் தான் எதையோ யோசிச்சுட்டு இருக்கேனு பார்த்தா ரூமுக்கு வந்த அப்புறமும் அதே மாதிரி இருக்க....அது தான் சின்னதாக ஒரு ஷாக்...."
"நல்ல ஷாக் கொடுத்தீங்க போங்க..."
"அதெல்லாம் இருக்கட்டும்...நான் காலையில் என்ன சொன்னேன்...இன்னைக்கு நைட் நம்ம மொட்டை மாடி கார்டனில் தானே இருக்கப் போறதா சொன்னேன்....ஆனா நீ இன்னும் டிரஸ் கூட சேஞ்ச் பண்ணாமல் இருக்க...." என அஜய் சற்று காட்டமாக கூற
நாக்கை கடித்து கொண்டு அவனைப் பார்த்து புன்னகத்து கொண்ட சரோஜா "ஸாரி...ஸாரி....அஜய்.....ஜஸ்ட் டென் மினிட்ஸ் வெயிட் பண்ணுங்க.. ரெடி ஆகிட்டு ஓடி வர்றேன்...." என்றவாறே குளியலறைக்குள் நுழைந்து கொள்ள அஜய் புன்னகையோடு தன் போனை பார்த்து கொண்டே அங்கிருந்த ஸோபாவில் சென்று அமர்ந்து கொண்டான்.