காலையில் சூரிய வெளிச்சம் தன் முகத்தில் பட கண்களை சுருக்கி தன் முகத்தை மறைத்தவாறே எழுந்து அமர்ந்து கொண்ட சரோஜா தன் இரு கைகளையும் தேய்த்து முகத்தை துடைத்து கொண்டு மெல்ல தன் கண்களை திறந்து பார்த்தாள்.
அவளருகில் அஜய் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருக்க மெல்ல சத்தம் எழுப்பாமல் கட்டிலில் இருந்து இறங்கிக் கொண்டவள் அஜயின் தூக்கத்தை தொந்தரவு செய்யாமல் மெல்ல குளியலறைக்குள் நுழைந்து கொண்டாள்.
சிறிது நேரத்தில் தயாராகி வந்தவள் அஜயை எழுப்பலாம் என்று நினைத்துக் கொண்டே அவனருகில் செல்ல அந்த நேரம் பார்த்து அவளின் போனும் அடித்தது.
"கார்த்திகா....இந்த நேரத்தில் எதுக்கு போன் பண்ணுறா???" என போனை பார்த்து கொண்டு யோசித்தவள் அஜய் தூக்கத்தில் இருந்து எழும்புவது போல இருக்கவும் அவனை தொந்தரவு செய்ய கூடாது என நினைத்து கொண்டு அவசரமாக பால்கனியை நோக்கிச் சென்றாள்.
"ஹலோ கார்த்திகா....என்ன இந்த காலங்கார்த்தாலேயே போன் பண்ணி இருக்க?? ஏதாவது பிரச்சினையா??"
"ஹலோ சரோஜா....நவீனை நேற்று நைட்ல இருந்து காணோமாம்....இப்போ தான் பாஸ்கர் போன் பண்ணி நவீன் உங்க கிட்ட ஏதாவது சொன்னானு கேட்டாங்க....எனக்கு என்ன பண்ணுறதுனே தெரியலடி....எனக்கு ரொம்ப பயமாக இருக்கு சரோஜா...நவீன் எங்கே போயிட்டாரோ தெரியல....உன் கிட்ட ஏதாவது சொன்னாரா??" என பதட்டமாக கார்த்திகா கேட்கவும் என்ன பதில் சொல்வது எனப் புரியாமல் சரோஜா விழித்து கொண்டு நின்றாள்.
"சரோஜா....ஹலோ...ஹலோ...சரோஜா....நான் பேசுறது கேட்குதா???"
"ஹான்....கேட்குதுடி....நவீன் என் கிட்ட எதுவும் சொல்லல....ஸாரி...."
"நீ எதுக்கு ஸாரி சொல்லுற?? நவீன் எங்கே போனாரோ தெரியல....சரி நான் வேற யாருக்கும் எடுத்து கேட்குறேன்....உனக்கு ஏதாவது தகவல் தெரிந்தால் எனக்கு சொல்லு சரியா???" என்று விட்டு கார்த்திகா போனை வைத்து விட சரோஜா தயக்கத்துடன் போனைப் பார்த்து கொண்டு நின்றாள்.
"நவீனுக்கு ஏதாவது ஆபத்தா?? தேவை இல்லாமல் நான் நவீனை இதில் சிக்க வைச்சுட்டேனோ...." என யோசித்து பார்த்த சரோஜா உடனே தன் போனை எடுத்து நவீனுக்கு அழைப்பை மேற்கொண்டாள்.
பலமுறை அழைத்தும் மறுமுனையில் சுவிட்ச் ஆஃப் என்றே வர சரோஜாவை பதட்டம் தொற்றிக் கொண்டது.
"இப்போ நான் என்ன பண்ணுறது?? சரியாக எவிடன்ஸ் இல்லாமல் இந்த விஷயத்தை எதற்கு செய்தீங்கனு மாமா கேட்டால் நான் என்ன சொல்லுவேன்???" என சரோஜா புலம்பிக் கொண்டு நிற்க
"எதை மாமா கிட்ட சொல்லணும்???" என்றவாறே அஜய் அவளது முன்னால் வந்த நின்றான்.
அஜயை அங்கு எதிர்பார்க்காத சரோஜா அதிர்ச்சியாக அவனைப் பார்த்துக் கொண்டு நிற்க அஜய் அவள் முகத்தின் முன்னால் சொடக்கிட்டு
"மாமா கிட்ட யாரைப் பற்றி என்ன சொல்லணும்???" என்று கேட்டான்.
"அது..அது...ஆஹ் நேற்று நைட் கீழே தோட்டத்தில் ஏதோ சத்தம் கேட்டது...அதை தான் எப்படி சொல்றதுனு யோசித்து பார்த்தேன்...." என சரோஜா கூறவும்
"அப்படியா? எனக்கு ஒரு சத்தமும் கேட்கலயே...அப்படியே சத்தம் கேட்டாலும் என் கிட்ட சொல்லாம அதை ஏன் நேரடியாக அப்பா கிட்ட சொல்லணும்??" என அஜய் சரோஜாவை கூர்மையாக பார்த்து கொண்டே கேட்டான்.
"அது...ஐ யம் ஸாரி அஜய்...நான் உங்க கிட்ட ஒரு உண்மையை மறைச்சுட்டேன்..." என தலை குனிந்து நின்றவாறு சரோஜா கூறவும்
"உண்மையா?? என்ன உண்மை??" என அஜய் குழப்பமாக கேட்டான்.
"நேற்று ஈவ்னிங் ரிசப்சன் நடந்துட்டு இருக்கும் போது வாஞ்சிநாதன் வந்து இருந்தார் இல்லையா?? அவரைப் பார்த்து நான் உங்க கிட்ட எல்லாம் சொன்னேன் தானே...அதற்கு அப்புறம் கணேஷ் வந்து பேசி எல்லோரையும் சாப்பிட கூட்டிட்டு போனான்....ஆனா எனக்கு அதற்கு அப்புறமும் அதை பற்றியே யோசனையாக இருந்தது....அப்போ நவீன் அந்த பக்கமாக வந்தாரு...." என்றவள் நேற்று நடந்த சம்பவத்தை விவரிக்க தொடங்கினாள்.
சரோஜா தனியாக நின்று யோசித்து கொண்டிருக்க அந்த வழியாக வந்த நவீன் சரோஜாவை யோசனையாக பார்த்து விட்டு அவளருகில் வந்து நின்றான்.
"சரோ...." என்ற நவீனின் அழைப்பில் திரும்பி பார்த்த சரோஜா நவீனைப் பார்த்து மெலிதாக புன்னகத்தாள்.
"என்ன ஆச்சு சரோ??? ஏதாவது பிரச்சினையா?? ரொம்ப டல்லா இருக்குற மாதிரி இருக்கு...." என நவீன் கேட்கவும்
தன் தயக்கத்தை மறைத்து கொண்டு அவனைப் பார்த்து புன்னகத்த சரோஜா
"சே...சே...அதெல்லாம் ஒண்ணும் இல்லை....சும்மா வேடிக்கை பார்த்துட்டு இருந்தேன்..." என்றவளின் பார்வை அவர்களை கடந்து சென்ற வாஞ்சிநாதனின் மேல் நிலை குத்தி நின்றது.
சரோஜாவின் பார்வை சென்ற திசையை திரும்பிப் பார்த்த நவீன் வாஞ்சிநாதனைப் பார்த்து விட்டு மீண்டும் சரோஜாவின் புறம் திரும்பி
"என்ன ஆச்சு சரோ??? ஏதாவது பிரச்சினையா??" என்று கேட்டான்.
நவீனிடம் சொல்வதா? வேண்டாமா? என்று யோசித்து பார்த்தவள்
"நம்ம கூட வேலை பார்க்குறவர் தானே நவீன்...எவ்வளவு கேஸ்ல நமக்கு உதவி பண்ணி இருக்காங்க...ஷோ நம்பி சொல்லுவோம்...." என நினைத்து கொண்டே தன் மனதிற்குள் வாஞ்சிநாதன் பற்றி இருந்த சந்தேகம் முழுவதையும் ஒரே மூச்சில் கூறி முடித்தாள்.
சரோஜா கூறி முடிக்கும் வரை நவீன் எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டு கொண்டு நின்றான்.
"ஷோ அந்த பீச் ஹவுஸ் ஏரியாவில் நீ பார்த்தது இவரை தான் இல்லையா???" என நவீன் கேட்கவும் சரோஜா ஆமோதிப்பாக தலை அசைத்தாள்.
"நம்ம திருவை பாலோ பண்ணதில் மிஸ் ஆகி இருந்த ஒரு டீடெய்லும்
இப்போ நமக்கு கிடைச்சாச்சு...சரோ யூ டோன்ட் வொர்ரி....நீங்க திரும்ப வேலைக்கு வரும் போது இவர் பற்றிய முழு விவரமும் நம்ம கிட்ட இருக்கும் ஓகே வா???"
"ஓகே நவீன்...பட் எதற்கும் கொஞ்சம் கேர்புல்லா டீல் பண்ணுங்க...." என சரோஜா கூறவும் சரியென்று விட்டு சென்ற நவீனைப் பார்த்து சரோஜா பெருமூச்சு விட்டு கொண்டாள்.
எல்லாவற்றையும் கூறி விட்டு சரோஜா அஜயை நிமிர்ந்து பார்க்க அஜயின் முகமோ பாறையென இறுகி இருந்தது.
"அஜய்..." என தயக்கமாக சரோஜா அஜயின் கையைத் தொட அவள் கையில் இருந்து தன் கையை மெல்ல விலக்கி எடுத்து கொண்டவன் எதுவும் பேசாமல் கைகளை கட்டி கொண்டு சரோஜாவை கூர்மையாக பார்த்தான்.
"அப்போ இவ்வளவு நடந்து இருக்கு...இதை பற்றி ஒரு வார்த்தை கூட நீங்க இரண்டு பேரும் யாரு கிட்டயும் சொல்லல அப்படி தானே???" என அஜய் கேட்கவும் சரோஜா அமைதியாக அஜயை பார்த்து கொண்டு நின்றாள்.
"சரி நான் உங்க வேலை சம்பந்தமாக உங்க கூட பேசுறது உனக்கு பிடிக்காமல் என் கிட்ட இதை பற்றி சொல்லல....பரவாயில்லை....அப்பா கிட்ட கூட நீங்க இதை பற்றி சொல்லல இல்லையா??"
"அப்படி இல்லை அஜய்...வெறும் டீடெய்ல்ஸ் தானே அப்புறம் சொல்லிக்கலாம்னு இருந்தேன்...ஆனா இப்படி நடக்கும்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல...."
"அப்படி என்ன ஆச்சு??"
"நவீனை நேற்று நைட்ல இருந்து காணோமாம்....கார்த்திகா இப்போ தான் போன் பண்ணி சொன்னா....இப்போ தான் நான் அவசரப்பட்டு தப்பு பண்ணிட்டேனோனு தோணுது...." என்றவாறே சரோஜா தன் தலையில் கை வைத்து கொள்ள அதே நேரம் அவர்களது அறைக் கதவு தட்டப்படும் சத்தமும் கேட்டது.
அஜய் தன் முகத்தை அழுந்த துடைத்து கொண்டு சென்று கதவைத் திறக்க அங்கே கனகா நின்று கொண்டிருந்தார்.
"மணி பத்து ஆகப்போகுதுடா....காலை டிபன் சாப்பிட ஐடியா இருக்கா இல்லையா??? நானும் நீங்க வருவீங்கனு காத்துட்டே இருக்கேன்....இரண்டு பேரும் வர்ற மாதிரி இல்ல...அது தான் என்ன நடந்தாலும் சரினு நான் மேலே வந்துட்டேன்..." என கனகா கூறவும்
"பத்து மணியா???" என்று ஆச்சரியமாக திரும்பி சுவற்றில் இருந்த கடிகாரத்தை பார்த்தவன்
தன் தலையில் தட்டி கொண்டே
"ஸாரி மா...கொஞ்சம் லேட் ஆயிடுச்சு....சரோஜா ரெடி ஆகிட்டா...பால்கனியில் இருக்கா நீங்க போய் அவகிட்ட பேசிட்டு இருங்க..நான் ஒரு பத்து நிமிஷத்தில் வந்துடுறேன்...." என்று விட்டு குளியலறைக்குள் நுழைந்து கொள்ள கனகா புன்னகத்து கொண்டே சரோஜாவை தேடி சென்றார்.
கனகா வருவதைப் பார்த்ததும் தன் முகத்தை சரி செய்து கொண்டு அவரைப் பார்த்து புன்னகத்து கொண்ட சரோஜா
"ஸாரி அத்தை...ஒரு கால் வந்தது...அதை பேசிட்டு அப்படியே நின்னுட்டேன்...ஸாரி..." என்று கூற
அவள் தலையை வருடிக் கொடுத்த கனகா
"அதெல்லாம் நான் ஒண்ணும் தப்பாக எடுத்துக்கலமா....மத்தியானம் ஆகப்போகுது....இன்னும் காலையில் டிபன் சாப்பிடலயேனு தான் கூட்டிட்டு போக வந்தேன்...சரி நீ வா நம்ம முதல்ல போகலாம்....அஜய் ரெடி ஆகிட்டு வரட்டும்..." என்று விட்டு செல்ல சரோஜா அவரைப் பின் தொடர்ந்து சென்றாள்.
வீடு முழுவதும் அஜயின் குடும்பத்தினர் நிறைந்து இருக்க சரோஜாவிற்கு அதைப் பார்க்கவே வியப்பாக இருந்தது.
"இந்த காலத்திலும் கூட்டுக் குடும்பமாக இருக்க எவ்வளவு பேருக்கு மனசு வரும்???" என நினைத்து கொண்டே படியிறங்கி வந்தவள் எல்லோரையும் பார்த்து புன்னகத்து கொண்டே அங்கு அமர்ந்து கொண்டாள்.
வெளியில் புன்னகையோடு இருப்பதை போல தன்னை காட்டிக் கொண்டாலும் அவள் மனதோ நவீனுக்கு எதுவும் ஆகி விடக்கூடாது என்று பிரார்த்தனை செய்து கொண்டு இருந்தது.
அஜய் தயாராகி வந்ததும் கனகா சரோஜாவையும் சாப்பிட அழைக்க அஜயின் எதிரில் அமர்ந்து கொண்ட சரோஜாவை அஜய் நிமிர்ந்தும் பார்க்கவில்லை.
சரோஜாவிற்கோ அஜயின் இந்த முகத் திருப்பல் மனதை வலிக்கச் செய்தது.
வேகமாக சாப்பிட்டு விட்டு கையை கழுவி விட்டு எழுந்து கொண்டவன்
"அம்மா ஒரு சின்ன வேலை இருக்கு...போயிட்டு வந்துடுறேன்..." என்று விட்டு நிற்காமல் சென்று விட
"அஜய் இவ்வளவு அவசரமாக எங்கே டா போற???" என்று கனகா கேட்டு முடிப்பதற்குள் அவன் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தான்.
"கல்யாணம் ஆகி முழுதாக ஒரு நாள் முடியல....அதற்கிடையில் வேலை....என்ன பையனோ!!!" என்ற கனகா சரோஜாவை திரும்பி பார்க்க அவளோ தட்டில் இருந்த சாப்பாட்டை அளைந்து கொண்டு இருந்தாள்.
"என்னம்மா சாப்பிடலயா??" என கனகா சரோஜாவின் தோளில் கை வைக்க கலங்கிய தன் கண்களை யாரும் அறியாமல் துடைத்து கொண்டு அவரை நிமிர்ந்து பார்த்தவள்
"எனக்கு போதும் அத்தை....அது தான்..." என்று தயக்கத்துடன் இழுக்கவும்
"நல்ல பொண்ணு மா நீ....இதற்கா இவ்வளவு யோசிச்ச...போதும்னா சொல்ல வேண்டியது தானே...அதற்கு ஏன் இவ்வளவு தயக்கம்???சரி போதும்னா விடு...நீ போய் கையை கழுவிக்கோ...." என்றவாறே அவள் தட்டை எடுத்து கொள்ளப் போக
அவசரமாக அவர் கை பிடித்து தடுத்த சரோஜா
"பரவாயில்லை அத்தை நான் இதை சுத்தம் பண்ணுறேன்...