- Joined
- Jan 17, 2018
- Messages
- 1,547
- Reaction score
- 7,648
ஓடி போகலாம் 1
மலேஷியா கோலாலம்பூர் நகரத்தில் உள்ள ஒரு கிறிஸ்தவ ஆலயத்தில் ஷியாங் டுயாவிற்கும், நிஷா தேவிக்கும் திருமணம் அந்த ஆலயத்தை நடத்தி வரும் தந்தை பெர்னார்ட் நடத்தி வைத்தார்.
மணமக்களின் பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பூக்களை தூவி அவர்களை வாழ்த்தினர். மீடியா மக்கள் ஒரு புறம் அவர்களின் திருமணத்தை பதிவு செய்து, அதை நேரடியாக ஒளிபரப்பிக் கொண்டு இருந்தனர் மக்கள் அனைவரும் காண.
ஆம்! மக்கள் அனைவரும் காணும் அளவுக்கு அவர்களின் குடும்பம் பிரபலம் அங்கே. ஷியாங் டுயாவின் தந்தை மிகப் பெரிய தொழிலதிபர்.
இவர்களின் தொழில் கேசினோ, பார் மற்றும் சினிமா படத்திற்கு செட் அமைத்துக் கொடுப்பது. இவர்களின் கேசினோ இல்லாத இடமே இல்லை, உலகத்தில் உள்ள அனைத்து மூலைகளிலும் அவர்களின் கேசினோ தான் இன்று டாப்.
ஷியாங் இதில் சினிமா செட் அமைத்துக் கொடுக்கும் வேலையிலும், சினிமாவில் கதாநாயகனாகவும் புகழ் பெற்றவன். பெண்கள் கூட்டம் எப்பொழுதும் அவனை சுற்றி இருக்கும், அவன் அதை சிரித்தபடியே கடந்து விடுவான்.
நிஷாவின் குடும்பம் மிக பெரிய ஜமீன்தார் குடும்பம் மலேசியாவில் தற்பொழுது, தமிழ்நாட்டில் இருந்து ஆங்கிலேயர்களின்
அடிமைத்தனத்தில் இருந்து தப்பி இங்கே வந்தவர்கள் தான் இவர்கள்.
இங்கேயும், ஆங்கிலேயர்களின் ஆட்சி அப்பொழுது இருந்தாலும் சிறிது காலத்தில் அவர்களிடம் இருந்து விடுதலை கிடைத்தது. தங்களுக்கு என்று ஒரு இடத்தை பிடிக்க போராடி, அதன் பின் மலேஷிய தமிழர்கள் என்று அவர்களுக்கென்று பெயர் வரவும், அதன் பின் தான் நிம்மதியாக சுவாசித்தனர்.
அங்கே பதினைந்து சதவீதம் மலேஷிய தமிழர்கள் தான் இப்பொழுது, நிஷாவின் குடும்பம் ரியல் எஸ்டேட் பல செய்து அங்கே வெற்றிகரமாக நடத்திக் கொண்டு இருக்கின்றனர்.
இரு குடும்பத்துக்கும், இந்த இரண்டு வருடங்களாக தான் அறிமுகம் தொழில்முறை மூலம். அது இப்பொழுது பிள்ளைகளின் திருமணம் வரை கொண்டு வந்து இருக்கிறது.
அன்று காலையில் தான் மலேஷியா வந்து இறங்கிய நிஷாவிற்கு, இச்செய்தி அதிர்ச்சியை அளித்தது.
“அம்மா! என்னமா இது? அவங்களோட பிசினஸ் பண்ணுறது வேற, இப்படி கல்யாணம் பண்ணுறது வேற. பாட்டிக்கு தெரிஞ்சா முதல உங்களை தான் பிடிபிடின்னு பிடிப்பாங்க” என்று கூறிய மகளை பார்த்து சிரித்தார் ஜியா.
“ஐடியா கொடுத்ததே உங்க பாட்டி தான், நீ முதல குளிச்சிட்டு வா சடங்கு செய்யணும் உனக்கு இப்போ” என்று கூறிவிட்டு செல்லும் அன்னையை பார்த்து அவளால் முறைக்க மட்டுமே முடிந்தது.
தந்தை சிவலிங்க மூர்த்தியிடம் போய் இப்பொழுது இது வேண்டாம் என்றும் சொல்ல முடியாது, ஏனெனில் இதில் அவருடைய கௌரவமும் அடங்கி இருக்கிறது. சில பல மாதங்களுக்கு முன்னால் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில், இந்த இரு குடும்ப தலைவர்கள் மீதும் ஊழல் வழக்கு போடபட்டு இருந்தது.
அதன் தாக்கம் குறைய தான், நிஷாவின் பாட்டி காமாட்சி தேவி இந்த யோசனை கூறியது. அதன் விளைவே இத்திருமணம், கண்துடைப்பிற்காக.
“பாட்டி! உங்க கிட்ட இருந்து இதை நான் எதிர்பார்க்கல, நீங்க தான் கல்யாணம் அதன் புனிதம் என்னன்னு எல்லாம் சொல்லிக் கொடுத்தீங்க. இப்போ நீங்களே, இப்படி சும்மா கொஞ்ச நாளைக்கு அவனை சகிச்சிகோ அப்படினு சொன்னா என்ன அர்த்தம்?” என்று தனக்கு இது சுத்தமாக பிடிக்கவில்லை என்பதை கூறினாள்.
“அடியே உன் மனசுல வேற யாரும் இருக்குறாங்களா! அப்படி எதுவும் இருந்தா சொல்லிடு இப்போவே, இந்த கல்யாணத்தை நிறுத்திடலாம்” என்று அவர் சொல்லவும் அவள் அப்படி எல்லாம் யாரும் என் மனதில் இல்லை, ஆனால் திருமணம் இப்படி ஒரு காரணத்துக்காக வேண்டாம் என்றாள்.
“நீ ஏன் இதை இப்படி நினைக்கிற? இதான் கடவுள் உங்களுக்கு போட்ட முடிச்சு அப்படினு நினைச்சு, இந்த கல்யாணம் உண்மை அப்படினு நினை. நல்லபடியா அவன் கூட வாழ்ந்து ஜெய்ச்சு காட்டு முடிஞ்சா” என்று அவர் முடித்து விடவும், அவள் யோசிக்க தொடங்கினாள்.
“நாம ஏன் பாட்டி சொன்னது மாதிரி, இந்த கல்யாணத்தை அங்கீகரிச்சு அதை வாழ்ந்து ஜெய்ச்சு காட்ட கூடாது. அவன் படத்துல ஹீரோவா நடிச்சு இருக்கான் மட்டும் தான் தெரியும், அவனை பத்தி வேற எதுவும் தெரியாது நமக்கு”.
“செம திரில்லிங்கா இருக்கும் ஒவ்வொரு நாளும், அவனை பத்தி தெரிஞ்சுகிட்டு, நாம அவனுக்கு ஒவ்வொரு நாளும் நம்ம அன்பை செலுத்தலாம். அவனையும் நம்ம மேல அன்பு செலுத்த வைக்கலாம், கொஞ்சம் கஷ்டபடனும் பரவாலை, கஷ்டபட்டா தான் ஜெய்க்க முடியும்” என்று எண்ணிக் கொண்டு சந்தோஷமாகவே இந்த திருமணத்தை எதிர்கொள்ள தொடங்கினாள்.
சடங்கு செய்ய அங்கே பெரியவர்கள் கூடி இருக்க, கூடவே மணமகனின் தாயாரும் சில உறவு பெண்களும் அங்கே கூடி இருந்து அவளுக்கு கல்யாண சடங்கு செய்து அந்த விசேஷத்தை சிறப்பித்து அவளை ஆசிர்வதித்தனர்.
அன்று காலை சடங்கு முடிந்த பின், அவள் அயர்ந்து உறங்கி விட்டாள். அதன் பின் மாலை ஐந்து மணிக்கு அவளை எழுப்பிவிட்டு, சாப்பிட வைத்த பின் இரவு கிறிஸ்துவ முறைப்படி நடக்கும் திருமணத்திற்கு அவளை தயார் செய்ய தொடங்கினர்.
மலேஷியா கோலாலம்பூர் நகரத்தில் உள்ள ஒரு கிறிஸ்தவ ஆலயத்தில் ஷியாங் டுயாவிற்கும், நிஷா தேவிக்கும் திருமணம் அந்த ஆலயத்தை நடத்தி வரும் தந்தை பெர்னார்ட் நடத்தி வைத்தார்.
மணமக்களின் பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பூக்களை தூவி அவர்களை வாழ்த்தினர். மீடியா மக்கள் ஒரு புறம் அவர்களின் திருமணத்தை பதிவு செய்து, அதை நேரடியாக ஒளிபரப்பிக் கொண்டு இருந்தனர் மக்கள் அனைவரும் காண.
ஆம்! மக்கள் அனைவரும் காணும் அளவுக்கு அவர்களின் குடும்பம் பிரபலம் அங்கே. ஷியாங் டுயாவின் தந்தை மிகப் பெரிய தொழிலதிபர்.
இவர்களின் தொழில் கேசினோ, பார் மற்றும் சினிமா படத்திற்கு செட் அமைத்துக் கொடுப்பது. இவர்களின் கேசினோ இல்லாத இடமே இல்லை, உலகத்தில் உள்ள அனைத்து மூலைகளிலும் அவர்களின் கேசினோ தான் இன்று டாப்.
ஷியாங் இதில் சினிமா செட் அமைத்துக் கொடுக்கும் வேலையிலும், சினிமாவில் கதாநாயகனாகவும் புகழ் பெற்றவன். பெண்கள் கூட்டம் எப்பொழுதும் அவனை சுற்றி இருக்கும், அவன் அதை சிரித்தபடியே கடந்து விடுவான்.
நிஷாவின் குடும்பம் மிக பெரிய ஜமீன்தார் குடும்பம் மலேசியாவில் தற்பொழுது, தமிழ்நாட்டில் இருந்து ஆங்கிலேயர்களின்
அடிமைத்தனத்தில் இருந்து தப்பி இங்கே வந்தவர்கள் தான் இவர்கள்.
இங்கேயும், ஆங்கிலேயர்களின் ஆட்சி அப்பொழுது இருந்தாலும் சிறிது காலத்தில் அவர்களிடம் இருந்து விடுதலை கிடைத்தது. தங்களுக்கு என்று ஒரு இடத்தை பிடிக்க போராடி, அதன் பின் மலேஷிய தமிழர்கள் என்று அவர்களுக்கென்று பெயர் வரவும், அதன் பின் தான் நிம்மதியாக சுவாசித்தனர்.
அங்கே பதினைந்து சதவீதம் மலேஷிய தமிழர்கள் தான் இப்பொழுது, நிஷாவின் குடும்பம் ரியல் எஸ்டேட் பல செய்து அங்கே வெற்றிகரமாக நடத்திக் கொண்டு இருக்கின்றனர்.
இரு குடும்பத்துக்கும், இந்த இரண்டு வருடங்களாக தான் அறிமுகம் தொழில்முறை மூலம். அது இப்பொழுது பிள்ளைகளின் திருமணம் வரை கொண்டு வந்து இருக்கிறது.
அன்று காலையில் தான் மலேஷியா வந்து இறங்கிய நிஷாவிற்கு, இச்செய்தி அதிர்ச்சியை அளித்தது.
“அம்மா! என்னமா இது? அவங்களோட பிசினஸ் பண்ணுறது வேற, இப்படி கல்யாணம் பண்ணுறது வேற. பாட்டிக்கு தெரிஞ்சா முதல உங்களை தான் பிடிபிடின்னு பிடிப்பாங்க” என்று கூறிய மகளை பார்த்து சிரித்தார் ஜியா.
“ஐடியா கொடுத்ததே உங்க பாட்டி தான், நீ முதல குளிச்சிட்டு வா சடங்கு செய்யணும் உனக்கு இப்போ” என்று கூறிவிட்டு செல்லும் அன்னையை பார்த்து அவளால் முறைக்க மட்டுமே முடிந்தது.
தந்தை சிவலிங்க மூர்த்தியிடம் போய் இப்பொழுது இது வேண்டாம் என்றும் சொல்ல முடியாது, ஏனெனில் இதில் அவருடைய கௌரவமும் அடங்கி இருக்கிறது. சில பல மாதங்களுக்கு முன்னால் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில், இந்த இரு குடும்ப தலைவர்கள் மீதும் ஊழல் வழக்கு போடபட்டு இருந்தது.
அதன் தாக்கம் குறைய தான், நிஷாவின் பாட்டி காமாட்சி தேவி இந்த யோசனை கூறியது. அதன் விளைவே இத்திருமணம், கண்துடைப்பிற்காக.
“பாட்டி! உங்க கிட்ட இருந்து இதை நான் எதிர்பார்க்கல, நீங்க தான் கல்யாணம் அதன் புனிதம் என்னன்னு எல்லாம் சொல்லிக் கொடுத்தீங்க. இப்போ நீங்களே, இப்படி சும்மா கொஞ்ச நாளைக்கு அவனை சகிச்சிகோ அப்படினு சொன்னா என்ன அர்த்தம்?” என்று தனக்கு இது சுத்தமாக பிடிக்கவில்லை என்பதை கூறினாள்.
“அடியே உன் மனசுல வேற யாரும் இருக்குறாங்களா! அப்படி எதுவும் இருந்தா சொல்லிடு இப்போவே, இந்த கல்யாணத்தை நிறுத்திடலாம்” என்று அவர் சொல்லவும் அவள் அப்படி எல்லாம் யாரும் என் மனதில் இல்லை, ஆனால் திருமணம் இப்படி ஒரு காரணத்துக்காக வேண்டாம் என்றாள்.
“நீ ஏன் இதை இப்படி நினைக்கிற? இதான் கடவுள் உங்களுக்கு போட்ட முடிச்சு அப்படினு நினைச்சு, இந்த கல்யாணம் உண்மை அப்படினு நினை. நல்லபடியா அவன் கூட வாழ்ந்து ஜெய்ச்சு காட்டு முடிஞ்சா” என்று அவர் முடித்து விடவும், அவள் யோசிக்க தொடங்கினாள்.
“நாம ஏன் பாட்டி சொன்னது மாதிரி, இந்த கல்யாணத்தை அங்கீகரிச்சு அதை வாழ்ந்து ஜெய்ச்சு காட்ட கூடாது. அவன் படத்துல ஹீரோவா நடிச்சு இருக்கான் மட்டும் தான் தெரியும், அவனை பத்தி வேற எதுவும் தெரியாது நமக்கு”.
“செம திரில்லிங்கா இருக்கும் ஒவ்வொரு நாளும், அவனை பத்தி தெரிஞ்சுகிட்டு, நாம அவனுக்கு ஒவ்வொரு நாளும் நம்ம அன்பை செலுத்தலாம். அவனையும் நம்ம மேல அன்பு செலுத்த வைக்கலாம், கொஞ்சம் கஷ்டபடனும் பரவாலை, கஷ்டபட்டா தான் ஜெய்க்க முடியும்” என்று எண்ணிக் கொண்டு சந்தோஷமாகவே இந்த திருமணத்தை எதிர்கொள்ள தொடங்கினாள்.
சடங்கு செய்ய அங்கே பெரியவர்கள் கூடி இருக்க, கூடவே மணமகனின் தாயாரும் சில உறவு பெண்களும் அங்கே கூடி இருந்து அவளுக்கு கல்யாண சடங்கு செய்து அந்த விசேஷத்தை சிறப்பித்து அவளை ஆசிர்வதித்தனர்.
அன்று காலை சடங்கு முடிந்த பின், அவள் அயர்ந்து உறங்கி விட்டாள். அதன் பின் மாலை ஐந்து மணிக்கு அவளை எழுப்பிவிட்டு, சாப்பிட வைத்த பின் இரவு கிறிஸ்துவ முறைப்படி நடக்கும் திருமணத்திற்கு அவளை தயார் செய்ய தொடங்கினர்.