• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Odi pogalam 1

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

umadeepak25

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,547
Reaction score
7,648
ஓடி போகலாம் 1

மலேஷியா கோலாலம்பூர் நகரத்தில் உள்ள ஒரு கிறிஸ்தவ ஆலயத்தில் ஷியாங் டுயாவிற்கும், நிஷா தேவிக்கும் திருமணம் அந்த ஆலயத்தை நடத்தி வரும் தந்தை பெர்னார்ட் நடத்தி வைத்தார்.

மணமக்களின் பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பூக்களை தூவி அவர்களை வாழ்த்தினர். மீடியா மக்கள் ஒரு புறம் அவர்களின் திருமணத்தை பதிவு செய்து, அதை நேரடியாக ஒளிபரப்பிக் கொண்டு இருந்தனர் மக்கள் அனைவரும் காண.

ஆம்! மக்கள் அனைவரும் காணும் அளவுக்கு அவர்களின் குடும்பம் பிரபலம் அங்கே. ஷியாங் டுயாவின் தந்தை மிகப் பெரிய தொழிலதிபர்.
இவர்களின் தொழில் கேசினோ, பார் மற்றும் சினிமா படத்திற்கு செட் அமைத்துக் கொடுப்பது. இவர்களின் கேசினோ இல்லாத இடமே இல்லை, உலகத்தில் உள்ள அனைத்து மூலைகளிலும் அவர்களின் கேசினோ தான் இன்று டாப்.

ஷியாங் இதில் சினிமா செட் அமைத்துக் கொடுக்கும் வேலையிலும், சினிமாவில் கதாநாயகனாகவும் புகழ் பெற்றவன். பெண்கள் கூட்டம் எப்பொழுதும் அவனை சுற்றி இருக்கும், அவன் அதை சிரித்தபடியே கடந்து விடுவான்.

நிஷாவின் குடும்பம் மிக பெரிய ஜமீன்தார் குடும்பம் மலேசியாவில் தற்பொழுது, தமிழ்நாட்டில் இருந்து ஆங்கிலேயர்களின்

அடிமைத்தனத்தில் இருந்து தப்பி இங்கே வந்தவர்கள் தான் இவர்கள்.
இங்கேயும், ஆங்கிலேயர்களின் ஆட்சி அப்பொழுது இருந்தாலும் சிறிது காலத்தில் அவர்களிடம் இருந்து விடுதலை கிடைத்தது. தங்களுக்கு என்று ஒரு இடத்தை பிடிக்க போராடி, அதன் பின் மலேஷிய தமிழர்கள் என்று அவர்களுக்கென்று பெயர் வரவும், அதன் பின் தான் நிம்மதியாக சுவாசித்தனர்.

அங்கே பதினைந்து சதவீதம் மலேஷிய தமிழர்கள் தான் இப்பொழுது, நிஷாவின் குடும்பம் ரியல் எஸ்டேட் பல செய்து அங்கே வெற்றிகரமாக நடத்திக் கொண்டு இருக்கின்றனர்.

இரு குடும்பத்துக்கும், இந்த இரண்டு வருடங்களாக தான் அறிமுகம் தொழில்முறை மூலம். அது இப்பொழுது பிள்ளைகளின் திருமணம் வரை கொண்டு வந்து இருக்கிறது.

அன்று காலையில் தான் மலேஷியா வந்து இறங்கிய நிஷாவிற்கு, இச்செய்தி அதிர்ச்சியை அளித்தது.

“அம்மா! என்னமா இது? அவங்களோட பிசினஸ் பண்ணுறது வேற, இப்படி கல்யாணம் பண்ணுறது வேற. பாட்டிக்கு தெரிஞ்சா முதல உங்களை தான் பிடிபிடின்னு பிடிப்பாங்க” என்று கூறிய மகளை பார்த்து சிரித்தார் ஜியா.

“ஐடியா கொடுத்ததே உங்க பாட்டி தான், நீ முதல குளிச்சிட்டு வா சடங்கு செய்யணும் உனக்கு இப்போ” என்று கூறிவிட்டு செல்லும் அன்னையை பார்த்து அவளால் முறைக்க மட்டுமே முடிந்தது.

தந்தை சிவலிங்க மூர்த்தியிடம் போய் இப்பொழுது இது வேண்டாம் என்றும் சொல்ல முடியாது, ஏனெனில் இதில் அவருடைய கௌரவமும் அடங்கி இருக்கிறது. சில பல மாதங்களுக்கு முன்னால் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில், இந்த இரு குடும்ப தலைவர்கள் மீதும் ஊழல் வழக்கு போடபட்டு இருந்தது.
அதன் தாக்கம் குறைய தான், நிஷாவின் பாட்டி காமாட்சி தேவி இந்த யோசனை கூறியது. அதன் விளைவே இத்திருமணம், கண்துடைப்பிற்காக.

“பாட்டி! உங்க கிட்ட இருந்து இதை நான் எதிர்பார்க்கல, நீங்க தான் கல்யாணம் அதன் புனிதம் என்னன்னு எல்லாம் சொல்லிக் கொடுத்தீங்க. இப்போ நீங்களே, இப்படி சும்மா கொஞ்ச நாளைக்கு அவனை சகிச்சிகோ அப்படினு சொன்னா என்ன அர்த்தம்?” என்று தனக்கு இது சுத்தமாக பிடிக்கவில்லை என்பதை கூறினாள்.

“அடியே உன் மனசுல வேற யாரும் இருக்குறாங்களா! அப்படி எதுவும் இருந்தா சொல்லிடு இப்போவே, இந்த கல்யாணத்தை நிறுத்திடலாம்” என்று அவர் சொல்லவும் அவள் அப்படி எல்லாம் யாரும் என் மனதில் இல்லை, ஆனால் திருமணம் இப்படி ஒரு காரணத்துக்காக வேண்டாம் என்றாள்.

“நீ ஏன் இதை இப்படி நினைக்கிற? இதான் கடவுள் உங்களுக்கு போட்ட முடிச்சு அப்படினு நினைச்சு, இந்த கல்யாணம் உண்மை அப்படினு நினை. நல்லபடியா அவன் கூட வாழ்ந்து ஜெய்ச்சு காட்டு முடிஞ்சா” என்று அவர் முடித்து விடவும், அவள் யோசிக்க தொடங்கினாள்.

“நாம ஏன் பாட்டி சொன்னது மாதிரி, இந்த கல்யாணத்தை அங்கீகரிச்சு அதை வாழ்ந்து ஜெய்ச்சு காட்ட கூடாது. அவன் படத்துல ஹீரோவா நடிச்சு இருக்கான் மட்டும் தான் தெரியும், அவனை பத்தி வேற எதுவும் தெரியாது நமக்கு”.

“செம திரில்லிங்கா இருக்கும் ஒவ்வொரு நாளும், அவனை பத்தி தெரிஞ்சுகிட்டு, நாம அவனுக்கு ஒவ்வொரு நாளும் நம்ம அன்பை செலுத்தலாம். அவனையும் நம்ம மேல அன்பு செலுத்த வைக்கலாம், கொஞ்சம் கஷ்டபடனும் பரவாலை, கஷ்டபட்டா தான் ஜெய்க்க முடியும்” என்று எண்ணிக் கொண்டு சந்தோஷமாகவே இந்த திருமணத்தை எதிர்கொள்ள தொடங்கினாள்.

சடங்கு செய்ய அங்கே பெரியவர்கள் கூடி இருக்க, கூடவே மணமகனின் தாயாரும் சில உறவு பெண்களும் அங்கே கூடி இருந்து அவளுக்கு கல்யாண சடங்கு செய்து அந்த விசேஷத்தை சிறப்பித்து அவளை ஆசிர்வதித்தனர்.

அன்று காலை சடங்கு முடிந்த பின், அவள் அயர்ந்து உறங்கி விட்டாள். அதன் பின் மாலை ஐந்து மணிக்கு அவளை எழுப்பிவிட்டு, சாப்பிட வைத்த பின் இரவு கிறிஸ்துவ முறைப்படி நடக்கும் திருமணத்திற்கு அவளை தயார் செய்ய தொடங்கினர்.
 




umadeepak25

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,547
Reaction score
7,648

இங்கே இவள் கல்யாணத்திற்கு தயாராக, அங்கே ஷியாங் தன் தோழர்களோடு ஆடி பாடிக் கொண்டாடிக் கொண்டு இருந்தான், அவனின் பட வெற்றிக்காக.


“ஹே ஷியாங்! கம் ஆன் இட்ஸ் கெட்டிங் லேட், வீ் ஹவ் டூ கோ நௌ மேன். இன்னும் கொஞ்ச நேரத்தில் கல்யாணம் இவனுக்கு, அதை பத்தியே யோசிக்காம இங்க இப்படி ஜாலியா இருக்கான் பாரு” என்று அவனின் உயிர் நண்பன் டிசங் அவனை அழைத்துவிட்டு மனதிற்குள் புலம்பினான்.

“ஹே! ஐ நோ வாட் ஐ அம் டூயிங் மேன். இந்த கல்யாணமே ஜஸ்ட் ஒரு நாடகம் தான், இதை பத்தி நான் யோசிக்க என்ன இருக்கு?” என்று அவனை அறிந்தவனாக ஷியாங் பதில் கூறினான்.

டிசங், ஷியாங் இருவரும் பள்ளி பருவத்தில் இருந்தே நெருங்கிய நண்பர்கள். இவர்கள் இருவரையும் எப்பொழுதும் சேர்ந்தே காணலாம், அப்படி இணை பிரியாத தோழர்கள் இவர்கள்.

சீன மொழி தான் இவர்களின் தாய் மொழி, அதில் தான் அதிகம் உரையாடுவது இருவரும். எப்பொழுதாவது ஆங்கிலம் சரளமாக வந்துவிடும், அந்த அந்த இடத்தை பொறுத்து.

இப்பொழுது கூட இந்த வெற்றி கொண்டாட்டம், அங்கே பிரபலமான இவர்களின் பார் ஒன்றில் தான் நடந்து கொண்டு இருக்கிறது. எகபட்ட பெண் ரசிகைகள், அங்கே இவனை சுற்றி வட்டம் அடித்தாலும் இவன் யாரையும் கண்டு கொள்வது இல்லை.

ஒரு சிரிப்பு சிரித்து, அங்கு இருந்து நைசாக கழண்டு கொள்ளுவான். இந்த வெற்றி கொண்டாட்டம் கூட, அவனை பொறுத்த வரை ஒரு பிசினஸ் போல தான்.

இதை வைத்து, அங்கே விழாவிற்கு வரும் இயக்குனர்களை பிடித்து கதை கேட்டு, அவனுக்கு பிடித்து இருந்தால் உடனே ஓகே செய்து, அடுத்த படத்திற்கு கால்ஷீட் கொடுத்து விடுவான்.

அத்தோடு நிறுத்தாமல், அந்த படத்தில் அமைக்கப்படும் செட் இவனின் கை வரிசையில் தான் இருக்க வேண்டும் என்று ஸ்ட்ரிக்டாக பத்திரம் பதிவு செய்து வாங்கி விடுவான்.

அவனிற்கு அவனது தொழில் முதல் குழந்தை போல் தான். அதை எப்படி பராமரிக்க வேண்டும் என்பதை, அவன் நன்கு கற்று தேர்ந்து இருந்தான்.

டெங் லன் சீன நடிகர் போல் இருப்பவனை பார்க்க, எல்லோருக்கும் பிடிக்கும். அவனுக்கு பிடித்தது எல்லாம் தொழில், தொழில், தொழில் மட்டுமே. அதில் ஒரு சின்ன சறுக்கல் வந்தால் கூட, அவனால் அதை ஏற்றுக் கொள்ளவே முடியாது.

அப்படி சருகிய நாட்களில், கோபம் மட்டுமே அவனுடைய பிரதானம் முதலில். இரு வாரங்கள் முடிந்து தான் நிதானத்திற்கு வந்து, எங்கு தவறு செய்தோம் என்பதை யோசித்து அதன் பிறகு அதை சரிசெய்து விடுவான்.

இப்பொழுது இந்த கண்துடைப்பு திருமணம், அவனை பொறுத்த வரை அது விளையாட்டு விஷயம். படங்களில் நடிப்பது போல் நடித்துவிட்டு, அதன் பின் அவன் வேலையை பார்க்க செல்லலாம் என்று இப்பொழுது வரை நினைத்து கொண்டு இருக்கிறான்.

ஆனால் அங்கே நிஷா அவனை அப்படி விட போவது இல்லை என்று அவனுக்கு தெரிய வாய்ப்பு இல்லை. நண்பனுடன் வீட்டிற்கு வந்து சேர்ந்தான், திருமணத்திற்கு தயாராக.

“இது என்ன யார் வீட்டு கல்யாணமோ அப்படின்ற மாதிரி, நீ இவ்வளவு லேட்டா வருகிற. போகிறது உன் கல்யாணத்துக்கு, சீக்கிரம் கிளம்பி போகனும் அப்படினு தெரிய வேண்டாமா உனக்கு. இப்படி பொறுப்பில்லாமல் இருந்தால் என்ன அர்த்தம்?” என்று அவனின் தாத்தா சங் ஹுயா சிடுசிடுத்தார் அவனிடம்.

அவனோ அதை எல்லாம் கண்டுகொள்ளாமல், படு நிதானமாக கிளம்பி அங்கே வந்தான். அவனின் தந்தை ஹிங் ஜியான்க்கு அவனை பற்றி தெரியும் நன்றாக, எனவே தந்தையை கட்டுபடுத்த முயன்றார்.

“அப்பா! இப்போ அவன் கிட்ட எதுவும் வாய் கொடுக்காதீங்க, அப்புறம் கல்யாணம் வேண்டாம் அப்படினு போய் விட போறான். கல்யாணம் முடியட்டும் முதல அப்புறம் நிஷா பொண்ணே அவனை வழிக்கு கொண்டு வந்து விடுவாள்” என்று கூறிய பின் தான் சற்று நிதானித்தார்.

இருந்தாலும் பேரன் செய்த தவறை சுட்டிக் காட்ட வேண்டிய பொறுப்பு தனக்கு இருக்கிறது என்று கூறி, அவன் அவர் மீது கோபப்படாதவாறு பார்த்துக் கொண்டார்.

இப்படி ஷியாங் இங்கே எதை பற்றியும் கவலை படாது கிளம்ப, அங்கே நிஷா சிறு பரபரப்புடன் மணமகளுக்கே உரிய கலக்கத்தோடு கிளம்பினாள்.

இரு வீட்டாரும், அங்கே ஆலயத்தில் கூட முதலில் மணமகன் ஷியாங் தன் கம்பீர நடையோடு அங்கே போடபட்டு இருந்த மேடை முன் போய் நின்றான்.

சிறிது நேரத்தில், மணமகளின் வரவு என்று சபையில் அறிவிக்க நிஷா தன் தந்தை கை பிடித்துக் கொண்டு மெதுவாக மேடை முன் வந்தாள்.

அவளின் தந்தை அவளின் கையை, மணமகன் ஷியாங்கிடம் தாரை வார்த்து கொடுத்துவிட்டு ஒதுங்கிக் கொண்டார்.

தந்தை பெர்னார்ட், பைபிள் வசனம் கூறி மனதார கடவுளிடம் பிரார்த்தனை நடத்த ஜெபங்களை ஓத, அனைவரும் அவருடன் சேர்ந்து படித்தனர். அதன் பின் அவர் இருவரிடமும் திருமணத்திற்கு சம்மதம் கேட்க, இருவரும் சம்மதம் என்று கூறிய பின், மோதிரம் மாற்றிக் கொள்ள கூறினார்.

முதலில் ஷியாங் அவளுக்கு மோதிரம் அணிய, அப்பொழுது அவன் முகத்தை பார்த்த நிஷா அதிர்ந்தாள். எந்தவித உணர்ச்சியும் இல்லாமல், கல் போல் நின்று கொண்டு சொன்னதை செய்துக் கொண்டு இருக்கும் அவனை பார்த்து அதிர்ந்து தான் போனாள்.

“சுத்தம்! நிஷு பேபி இவன் கூட ஓடி போக பிளான் போட்டியே, இவனை முதல உன்னை பார்க்க வை அப்புறம் பிளான் பண்ணு” என்று மனசாட்சி செய்த கிண்டலில் சிலிர்த்து விட்டாள்.

“இந்த நிஷு தோற்க மாட்டா, ரெண்டு பேரும் ஒருத்தர் மேல ஒருத்தர் அன்பு செலுத்த தான் போறோம். அதுக்கு முன்னாடி இவன் கூட இன்னைக்கு நைட்டே ஓடி போக போறேன்”.

“டேய் ஷிபாங்! ஹையோ இல்லை ஷீஃபாங்கா? ச இப்படி பேர் கூட வாய்ல நுழைய மாட்டேங்குது. இது சரிப்படாது, இனி உன்னை மியாவ் அப்படினு தான் கூப்பிட போறேன்” என்று மனதிற்குள் இத்தனையும் நினைத்து விட்டாள் சில மணித்துளிகளில்.

அடுத்து, அவன் கை பிடித்து மோதிரம் அணியும் பொழுது, அவள் போடவே முடியவில்லை என்பது போல் அவனின் கையில் சற்று அழுத்தம் கொடுத்து கொடுத்து,. அவனுக்கு வலியை உண்டாக்கி விட்டாள்.

அதில் அவன் சற்று கடுப்பாகி, அவளை அப்பொழுது தான் நிமிர்ந்து பார்த்தான். பார்த்தவன், அவள் கண்களில் வழியும் குறும்பை கண்டுகொண்டான்.
இதழ் கடையோரம் அவன் சிரித்த சிரிப்பில், ஓரக்கண்ணால் அவனை பார்த்துக் கொண்டு இருந்த அவனின் சரிபாதி மயங்கி போனாள்.


“சிரிச்சா எவ்வளவு அழகா இருக்கான், அப்புறம் ஏன் அவன் அப்படி இறுக்கமா இருந்தான் அப்போ? எதோ சரியில்லையோ” என்று அவள் எண்ணி முடிப்பதற்குள் அவன் அடுத்து செய்த செயலில் அதிர்ந்து போனாள்.

கண்ணிமைக்கும் நேரத்தில், அவளின் உதட்டை இவன் உதட்டோடு பொருத்தி முத்தம் தந்து, அவளின் விரிந்த கண்ணை பார்த்து கண்ணடித்து மேலும் மயக்கினான்.

மங்கையவள், அதில் சற்று அதிர்ந்தாலும் தன் மணாளனின் குறும்பில் மயங்கி தான் போனாள். இப்படி இவள் மயங்கி இருப்பதை அறிந்தாலும், அதை பற்றி எல்லாம் கவலை கொள்ளாமல் அன்று இரவே பங்காக் செல்ல விமானம் ஏறி அமர்ந்தான்.

அவ்வளவு சீக்கிரம் அவன் தனியாக ஓடி போக அவனின் சரி பாதி விடுவாளா என்ன, பின்னாடியே அவனோடு ஓட அவனருகில் வந்து அமர்ந்தாள்.

தொடரும்..






 




umadeepak25

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,547
Reaction score
7,648
Hi friends,

Sorry for the delay.. time kidaikum poluthu thaan makkale ini epis kodukka mudiyum. Because me in amma Home for vacation. கண்டிப்பா உங்களுக்கு இந்த கதை பிடிக்கும், நிறைய சுவரசியம் இருக்கு இதில், போக போக உங்களுக்கே தெரியும்.

உங்க comments thaan en energy drink marakaama koduthu urchaagappaduthunga.

Seekiram Vara முயற்சி செய்கிறேன் அடுத்த pathivodu.

அன்புடன் ,
உமா தீபக்.
 




jeyalakshmigomathi

அமைச்சர்
Author
Joined
Jun 11, 2018
Messages
2,820
Reaction score
7,471
Location
Tirunelveli
hai uma ji

பாங்காங் சுத்தி பாக்க நாங்க ரெடி...

அழகா கல்யாணத்தில் ஆரம்பிச்சு ஹனீமூன் போக வேண்டிய ஜோடி இப்படி துரத்தி புடிச்சு கண்ணாமூச்சி விளையாட வைக்கீறீங்களே நியாயமா...

அந்த சப்ப மூக்கன் பேரு எனக்கும் வரல சோ... எனக்கும் அவன் மியாவ் தான் நிஷீ பேபி
 




Last edited:

Chitrasaraswathi

முதலமைச்சர்
Joined
Jan 23, 2018
Messages
11,505
Reaction score
29,240
Age
59
Location
Coimbatore
இரண்டு பேரும் தனித்தனியாக வந்து விமானம் வழியாக ஓடி போகிறார்கள்! நல்ல துவக்கம்
 




Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
Superb ud sis:love::love:
Kalyanam pannitu couples a odi pora mudhal jodi ivangalathn. Irukum pola;)
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top