- Joined
- Jan 17, 2018
- Messages
- 1,547
- Reaction score
- 7,648
ஓடி போகலாம் 2
நிஷா அரக்க பறக்க மலேஷியா klia ஏர்போர்ட் வந்து செக் இன், இமிகரேஷன் எல்லாம் முடித்துக் கொண்டு வேகமாக அவள் ஏற வேண்டிய விமானத்தில் ஏறி அமர்ந்தாள்.
பக்கத்தில் அமர்ந்து இருந்த அவளின் மணாளன் ஷியாங், இவளை அங்கே அப்பொழுது எதிர்பார்க்கவில்லை. மோதிரம் மாற்றும் நேரம் தான் இவளை கவனித்து பார்த்து இருந்தான், அதன் பின் அவளின் குறும்பு புரிந்து அவள் எதிர்பாராத நேரம் முத்தம் கொடுத்தான் அவளின் இதழில்.
அதுவும் முத்தம் கொடுக்கும் எண்ணம் அதுவரை இல்லாமல் இருந்தவன், அவளின் குறும்புதனத்தில் கொடுக்க எண்ணி கொடுத்தானா, இல்லை அவளின் செர்ரி உதடை சுவைக்க எண்ணி முத்தம் கொடுத்தானா என்பதை அவனும் அறியவில்லை.
ஆனால் இந்த குறுகிய நேரத்திற்குள் அவளின் முகம் அவனின் மனதில் அப்பட்டமாக பதிந்து இருப்பதை, அவனால் அதிர்ச்சியோடு அதை உள் வாங்க முடிந்தது.
அவனின் போன் அலறிய பின் தான், இன்னும் தன் செல்பேசியை ஸ்விட்ச் ஆப் செய்யவில்லை என்பதை உணர்ந்தான். உடனே யார் என்று பார்த்தவன், அவனின் தாத்தா தான் அழைத்து இருந்தார்.
“அறிவுகெட்டவனே! என்னதான் இது கண்துடைப்பு கல்யாணம் அப்படினாலும் அது நமக்கு மட்டும் தான். மீடியாகாரன், இந்த கல்யாணத்தை உலகம் முழுதும் பரப்பிட்டான்”.
“கல்யாணம் முடிஞ்ச கையோட, தனியா கிளம்பி போனால் எல்லோரும் என்ன நினைப்பாங்க? கொஞ்சம் கூட அறிவே இல்லை உனக்கு, எல்லாத்தையும் நானே சொல்லிக் கொடுக்கணுமா என்ன?” என்று சிடுசிடுத்தார்.
“என்ன தான் பிரச்சினை உங்களுக்கு? ஏன் இப்படி என் உயிரை வாங்குறீங்க?” என்று அவருக்கு மேல் இவன் கத்தினான்.
“உன் உயிரை வாங்கி நான் என்ன செய்ய போறேன்? உன்னை மாதிரியே இருப்பா போல உன் பொண்டாட்டி, அவளும் எங்க போறா அப்படினு சொல்லாம, கிளம்புறேன் பை சொல்லிட்டு கிளம்பி போய்ட்டா”.
“இந்த காலத்து பிள்ளைங்க ரொம்ப மோசம், எப்போ தான் எங்க பேச்சை கேட்பீங்களோ? முதல உன் பொண்டாட்டியை தேடி கண்டுபிடிச்சு, அவ கூட ஹனிமூன் போன மாதிரி பில்ட் அப் பண்ணு புரியுதா!” என்று சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டு போனை வைத்தார்.
அதற்குள் விமான பணிப்பெண் வந்து, அவனின் செல்பேசியை அனைத்து வைக்குமாறு கூறவும் அவன் உடனே முதல் வேலையாக அதை செய்து முடித்தான்.
அவளை அவன் பார்க்க அவளோ அவனை பார்க்காது, கையோடு கொண்டு வந்து இருந்த பொன்னியின் செல்வன் கதையை படித்துக் கொண்டு இருந்தாள்.
இதுவரை அவனின் பார்வைக்காக, அவனின் ஒற்றை சிரிப்புகாக தவமாக காத்து கொண்டு இருந்த பெண்களையே பார்த்து பழகியவன், முதல் முறையாக ஒருத்தியை திருமணம் புரிந்து அவளுக்கு முத்தமும் கொடுத்து, அதில் அவள் மயங்கி இருந்ததையும் பார்த்துவிட்டு இப்பொழுது அதற்கு நேர்மாறாக இவனை யார் என்றே தெரியாது என்பது போல் அமர்ந்து இருந்தவளை பார்த்து எரிச்சல் வந்தது.
“பாவி! நானாவது சொல்லிட்டு வந்தேன் ஷுட்டிங் போறேன் அப்படினு, இவ கிளம்புறேன் மட்டும் சொல்லிட்டு எங்க போறேன் அப்படினு சொல்லாம வந்து இருக்கா”.
“இவளை தண்ணி தெளிச்சு விட தான் ஒரு வேளை, இவங்க வீட்டுல என்னோட இவளை கோர்த்து விட்டாங்களா?” மனதிற்குள் அவளை பற்றி மட்டுமே நினைத்துக் கொண்டு இருந்தான்.
இதை தானே நிஷாவும் எதிர்பார்த்தாள், அவளைப் பற்றி மட்டுமே அவன் நினைக்க வேண்டும் என்று. அதற்கு தானே அவள் ஒவ்வொரு காயாக, நகர்திக் கொண்டு இருக்கிறாள்.
இங்கு நிஷாவோ அவன் அருகில் அமர்ந்து கொண்டு, தன் பாட்டி கூறியதை தான் நினைத்துக் கொண்டு இருந்தாள்.
“இங்க பாரு நிஷா உனக்கு அவர் மேலயும், அவருக்கு உன் மேலயும் அன்பு மட்டும் இருந்தா போதாது, புரிதல் வேண்டும்.
கணவன்,மனைவி உறவுகுள்ள அன்பு மட்டும் இருந்தா பத்தாது, ஒருத்தருடைய மரியாதையை எங்கும் விட்டுக் கொடுக்காமல் இருக்கவும் தெரியணும், விட்டுக் கொடுத்து வாழவும் தெரியணும்”.
“சில திருமணங்கள் ஜெய்கிறது இல்லை, காரணம் அங்க புரிதல் இல்லை. உன் திருமணம் ஜெய்க்கணும் அப்படினா நீயும் உன் சரிபாதியை புரிஞ்சிக்கனும், உன் சரிபாதியும் உன்னை புரிந்து வைத்து இருக்கணும்” என்று அவள் பாட்டி கூறியதை தான் தீவிரமாக யோசித்துக் கொண்டு இருந்தாள்.
அவளை பொறுத்தவரை ஒரு தடவை தான் தன் மகன் திருமணம், அதை வாழ்ந்து ஜெய்க்க தன்னால் ஆன எல்லா முயற்சியும் செய்து விடுவது.
அதற்கு முதல்படியாக தான் அவள் அவன் தாத்தாவை, அவனிடம் அப்படி பேச வைத்தது. அவனும் அதற்கு ஏற்றார் போல், இவளை தான் நோட்டம் விட்டுக் கொண்டு இருந்தான்.
“இவன் கூட ஓடி போக எவ்வளவு பண்ண வேண்டி இருக்கு, அதுவும் கல்யாணம் பண்ணிகிட்டு ஓடி போக ரொம்ப கஷ்டப்பட வேண்டி இருக்கு. ஆண்டவா! எங்களை நீ தான் காப்பாத்தனும்” என்று கடவுளிடம் வேண்டுதல் வைத்துக் கொண்டு இருந்தாள்.
கண் மூடி வேண்டுதல் வைத்துக் கொண்டு, அலைச்சல் காரணமாக சரியாக தூங்காததால் நன்றாக உறங்கிக் கொண்டு இருந்தாள் நிஷா. உறங்கும் பொழுது, அவளின் சோர்ந்த முகம் அவளின் களைப்பை அப்பட்டமாக எடுத்து காட்டியது அவனுக்கு.
நிஷா அரக்க பறக்க மலேஷியா klia ஏர்போர்ட் வந்து செக் இன், இமிகரேஷன் எல்லாம் முடித்துக் கொண்டு வேகமாக அவள் ஏற வேண்டிய விமானத்தில் ஏறி அமர்ந்தாள்.
பக்கத்தில் அமர்ந்து இருந்த அவளின் மணாளன் ஷியாங், இவளை அங்கே அப்பொழுது எதிர்பார்க்கவில்லை. மோதிரம் மாற்றும் நேரம் தான் இவளை கவனித்து பார்த்து இருந்தான், அதன் பின் அவளின் குறும்பு புரிந்து அவள் எதிர்பாராத நேரம் முத்தம் கொடுத்தான் அவளின் இதழில்.
அதுவும் முத்தம் கொடுக்கும் எண்ணம் அதுவரை இல்லாமல் இருந்தவன், அவளின் குறும்புதனத்தில் கொடுக்க எண்ணி கொடுத்தானா, இல்லை அவளின் செர்ரி உதடை சுவைக்க எண்ணி முத்தம் கொடுத்தானா என்பதை அவனும் அறியவில்லை.
ஆனால் இந்த குறுகிய நேரத்திற்குள் அவளின் முகம் அவனின் மனதில் அப்பட்டமாக பதிந்து இருப்பதை, அவனால் அதிர்ச்சியோடு அதை உள் வாங்க முடிந்தது.
அவனின் போன் அலறிய பின் தான், இன்னும் தன் செல்பேசியை ஸ்விட்ச் ஆப் செய்யவில்லை என்பதை உணர்ந்தான். உடனே யார் என்று பார்த்தவன், அவனின் தாத்தா தான் அழைத்து இருந்தார்.
“அறிவுகெட்டவனே! என்னதான் இது கண்துடைப்பு கல்யாணம் அப்படினாலும் அது நமக்கு மட்டும் தான். மீடியாகாரன், இந்த கல்யாணத்தை உலகம் முழுதும் பரப்பிட்டான்”.
“கல்யாணம் முடிஞ்ச கையோட, தனியா கிளம்பி போனால் எல்லோரும் என்ன நினைப்பாங்க? கொஞ்சம் கூட அறிவே இல்லை உனக்கு, எல்லாத்தையும் நானே சொல்லிக் கொடுக்கணுமா என்ன?” என்று சிடுசிடுத்தார்.
“என்ன தான் பிரச்சினை உங்களுக்கு? ஏன் இப்படி என் உயிரை வாங்குறீங்க?” என்று அவருக்கு மேல் இவன் கத்தினான்.
“உன் உயிரை வாங்கி நான் என்ன செய்ய போறேன்? உன்னை மாதிரியே இருப்பா போல உன் பொண்டாட்டி, அவளும் எங்க போறா அப்படினு சொல்லாம, கிளம்புறேன் பை சொல்லிட்டு கிளம்பி போய்ட்டா”.
“இந்த காலத்து பிள்ளைங்க ரொம்ப மோசம், எப்போ தான் எங்க பேச்சை கேட்பீங்களோ? முதல உன் பொண்டாட்டியை தேடி கண்டுபிடிச்சு, அவ கூட ஹனிமூன் போன மாதிரி பில்ட் அப் பண்ணு புரியுதா!” என்று சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டு போனை வைத்தார்.
அதற்குள் விமான பணிப்பெண் வந்து, அவனின் செல்பேசியை அனைத்து வைக்குமாறு கூறவும் அவன் உடனே முதல் வேலையாக அதை செய்து முடித்தான்.
அவளை அவன் பார்க்க அவளோ அவனை பார்க்காது, கையோடு கொண்டு வந்து இருந்த பொன்னியின் செல்வன் கதையை படித்துக் கொண்டு இருந்தாள்.
இதுவரை அவனின் பார்வைக்காக, அவனின் ஒற்றை சிரிப்புகாக தவமாக காத்து கொண்டு இருந்த பெண்களையே பார்த்து பழகியவன், முதல் முறையாக ஒருத்தியை திருமணம் புரிந்து அவளுக்கு முத்தமும் கொடுத்து, அதில் அவள் மயங்கி இருந்ததையும் பார்த்துவிட்டு இப்பொழுது அதற்கு நேர்மாறாக இவனை யார் என்றே தெரியாது என்பது போல் அமர்ந்து இருந்தவளை பார்த்து எரிச்சல் வந்தது.
“பாவி! நானாவது சொல்லிட்டு வந்தேன் ஷுட்டிங் போறேன் அப்படினு, இவ கிளம்புறேன் மட்டும் சொல்லிட்டு எங்க போறேன் அப்படினு சொல்லாம வந்து இருக்கா”.
“இவளை தண்ணி தெளிச்சு விட தான் ஒரு வேளை, இவங்க வீட்டுல என்னோட இவளை கோர்த்து விட்டாங்களா?” மனதிற்குள் அவளை பற்றி மட்டுமே நினைத்துக் கொண்டு இருந்தான்.
இதை தானே நிஷாவும் எதிர்பார்த்தாள், அவளைப் பற்றி மட்டுமே அவன் நினைக்க வேண்டும் என்று. அதற்கு தானே அவள் ஒவ்வொரு காயாக, நகர்திக் கொண்டு இருக்கிறாள்.
இங்கு நிஷாவோ அவன் அருகில் அமர்ந்து கொண்டு, தன் பாட்டி கூறியதை தான் நினைத்துக் கொண்டு இருந்தாள்.
“இங்க பாரு நிஷா உனக்கு அவர் மேலயும், அவருக்கு உன் மேலயும் அன்பு மட்டும் இருந்தா போதாது, புரிதல் வேண்டும்.
கணவன்,மனைவி உறவுகுள்ள அன்பு மட்டும் இருந்தா பத்தாது, ஒருத்தருடைய மரியாதையை எங்கும் விட்டுக் கொடுக்காமல் இருக்கவும் தெரியணும், விட்டுக் கொடுத்து வாழவும் தெரியணும்”.
“சில திருமணங்கள் ஜெய்கிறது இல்லை, காரணம் அங்க புரிதல் இல்லை. உன் திருமணம் ஜெய்க்கணும் அப்படினா நீயும் உன் சரிபாதியை புரிஞ்சிக்கனும், உன் சரிபாதியும் உன்னை புரிந்து வைத்து இருக்கணும்” என்று அவள் பாட்டி கூறியதை தான் தீவிரமாக யோசித்துக் கொண்டு இருந்தாள்.
அவளை பொறுத்தவரை ஒரு தடவை தான் தன் மகன் திருமணம், அதை வாழ்ந்து ஜெய்க்க தன்னால் ஆன எல்லா முயற்சியும் செய்து விடுவது.
அதற்கு முதல்படியாக தான் அவள் அவன் தாத்தாவை, அவனிடம் அப்படி பேச வைத்தது. அவனும் அதற்கு ஏற்றார் போல், இவளை தான் நோட்டம் விட்டுக் கொண்டு இருந்தான்.
“இவன் கூட ஓடி போக எவ்வளவு பண்ண வேண்டி இருக்கு, அதுவும் கல்யாணம் பண்ணிகிட்டு ஓடி போக ரொம்ப கஷ்டப்பட வேண்டி இருக்கு. ஆண்டவா! எங்களை நீ தான் காப்பாத்தனும்” என்று கடவுளிடம் வேண்டுதல் வைத்துக் கொண்டு இருந்தாள்.
கண் மூடி வேண்டுதல் வைத்துக் கொண்டு, அலைச்சல் காரணமாக சரியாக தூங்காததால் நன்றாக உறங்கிக் கொண்டு இருந்தாள் நிஷா. உறங்கும் பொழுது, அவளின் சோர்ந்த முகம் அவளின் களைப்பை அப்பட்டமாக எடுத்து காட்டியது அவனுக்கு.