ஏப்ரல் -13-பைசாகி தினம்/அறுவடை திருநாள் .விவசாயிகளின் உயிர் மூச்சான பண்டிகை .ஒட்டுமொத்த பஞ்சாப் மாநிலம் விழாக்கோலம் பூண்டு இருந்தது .அதிலும் பதிந்தாவில் அர்ஜுன் தலைமையில் கொண்டாட்டம் என்றால் சொல்லவும் வேண்டுமோ ?"Jatta aai Baisakhi"என்ற குரல் எங்கும் ஒலிக்க ,பாங்க்ரா,GIDDA நடனங்கள் அந்த மைதானத்தையே அதிர வைத்து கொண்டு இருந்தது.
நகரின் மையத்தில் அமைந்து இருந்தது பிரமாண்டமான ஹோட்டல் ---"ஹோட்டல் comfort inn tulip" .ஹோட்டலின் பின் உள்ள பறந்து விரிந்த மைதானத்தில் இருந்து தான் பெரும் சத்தம் வந்து கொண்டு இருக்கிறது.மேளா தாளம் முழங்க 3000 மேற்பட்டோர் குவிந்து உள்ளனர்.
புத்தாடை அணிந்து 22 கிராம மக்களும் அந்த மைதானத்தில் உற்சாகத்துடடன் ஆடி பாடி கொண்டு இருக்கின்றர்.குதிரை ஓட்டம் -ஓடும் மூன்று குதிரைகள் மேல் கயிற்றை பிடித்து கொண்டு நிற்பது,குதிரை ஹாக்கி,குதிரை ரேக்ளா,வாள் யுத்தம்,ஒட்டக டான்ஸ்,பாங்க்ரா,வாள்,வில் வித்தை என்று கோடி கண்கள் தேவை.எதை பார்க்க எதை விட என்று குழம்பி தான் போவோம்.
அந்த பக்கம் இரு டிராக்டர் ஒன்றோடு ஒன்று இணைக்க பட்டு வெவேறு திசைகளில் இழுக்கும் போட்டியாம்.அட அந்த இரு டிராக்டர் இணைப்பில் நின்று போஸ் கொடுப்பது யாரு-நம்ம ஹீரோ "ஹரிஓம் அர்ஜுன் ரப்தார் பாட்டியா" (hari om arjun raftaar bahtia ).
(இவ்வளவூ பெரிய பெயரை சொல்லி முடிப்பதற்குள் நாக்கு தள்ளுது...இனிமேல் அர்ஜுன் என்றே அழைப்போம் )
அர்ஜுன் அசப்பில் நம்ம அக்ஷய் குமார் --அதான் பா padman பட ஹீரோ."khiladi பாய்" என்று கூப்பிடுவாங்களே.
(ஐந்து படம்" கிலாடி" என்ற பெயரில் நடித்து எல்லாமே சூப்பர் டூப்பர் ஹிட்...அதனால் இந்த பெயர்...நம்ம நடிகர் சூர்யாவிற்கு இவர் தான் குரு போலெ இருக்கு....சிங்கம் 1,2,3).
உயரம் 5அடி 11 அங்குலம்.80 கிலோ வெயிட்.42-32-16 அளவூ.ஆழந்த பிரவுன் நிற கண்கள். கோதுமை நிறம் .வெண்ணை பூசியது போலெ அப்படி ஒரு மினுமினுப்பு .உழைப்பால் வந்த கம்பீரம் .சிரித்தால் கணத்தில் விழும் குழி . பல கன்னியரின் மனதை கொள்ளை அடிக்கும் மன்மதன்
படித்தது குரு நானக் காலேஜ் -விவசாயம்.தொழில் -விவசாயம்,ஏற்றுமதி,ஹோட்டல்,’பஞ்சாப் சுற்றுலா’ வைத்து நடத்துவது.பல்துறை வல்லுனன்.உயர்தர மத்திய விவசாய குடும்பம்.20-30 பேர் உள்ள மிக பெரிய கூட்டு குடும்பம்.
(என்னது 20-30 பேர் ஒரே வீட்டிலா ?அவ்வளவூ பெரிய கூட்டு குடும்பமா ....?)
இவன் கொள்ளு தாத்தா தரஞ்சீத் bhatiya- 20 இவன் தாத்தா உபிந்தர் bhatiya -12,இவன் அப்பா யதுவீர் bhatiya -7.இது என்ன நம்பர் ஏன்று பார்க்கறீங்களா...இவங்க குழந்தைங்க கணக்கு பா .
(என்னது இத்தனை குழந்தைங்களா? )
கூட்டு குடும்பம் என்றால் மருமகள் -மாமியார் இந்தியா -பாகிஸ்தான் யுத்தம்,மருமகன் -மாமனார் கோல்டு வார்,நாத்தனார் wwf எல்லாம் கேள்வி பட்டு இருப்போம் .அது தான் ஒன்றுக்கு 10 டிவி சீரியல் எப்படி குடும்பங்களை குலைப்பது என்று மஹா ,மெஹா தொடர் என்று கிளாஸ் எடுக்கறாங்களே ....போதாதா ?அர்ஜுன் வீட்டில் அந்த வீணா போன தொடர் எல்லாம் பார்ப்பது இல்லை போல் இருக்கு.இங்கே 20-50 பேர் ஒரே குடும்பமாய் இருப்பார்கள் .மாமியாரின் மாமியாரின் மாமியார் வரை எல்லோரும் ஒரே சமையல்,ஒரே வீடு.எங்கே செல்வதாய் இருந்தாலும் லாரியில் தான் செல்ல முடியும்.....எலெக்ஷன் மீட்டிங்க்கு இல்லை பா !
இங்கு குடும்பத்திற்கு மதிப்பு கொடுக்க படுகிறது. இவர்கள் வாழ்க்கை முறை “கூட்டு குடும்பத்திற்கு” இன்றளவும் மிக சிறந்த உதாரணம் என்பதை மறுக்க முடியாது.
அர்ஜுன் வீட்டில் அனைவரும் அவன் தொழிலுக்கு உதவி செய்து கொண்டு இருக்கிறார்கள் .அவன் தம்பி தீப் ஹோட்டல் கவனித்து கொள்கிறான் .வீட்டினர் விவசாயத்தில் உதவுகிறார்கள் .தேவை இல்லை என்றால் வெளி வேலைகளுக்கு இவர்கள் செல்வதே இல்லை .தேவைக்கு மேல் வருமானம் வருகிறது .ஒரே வீடு ,ஒரே சமையல் என்பதால் எல்லோரும் எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்வதால் செலவும் குறைகிறது .
அடுத்த தலைமுறை குழந்தைகளுக்கு நிறைய தாத்தா ,பாட்டி ,மாமா ,மாமி ,அத்தை ,பெரியம்மா ,பெரியப்பா ,சித்தப்பா ,சித்தி ,கொள்ளு தாத்தா என்று பலதலைமுறைகளின் வழிகாட்டுதல் இங்கு உண்டு .
‘வேலைக்கு செல்கிறேன்’ என்று போகும் பெற்றோருக்கு தூணாய் ,இளைய தலைமுறையின் பொறுப்பை மூத்த தலைமுறை ஏற்கிறது .எல்லா குழந்தைகளும் ஒன்றாய் வளரும் போது போட்டி ,பொறாமை இல்லாமல் ,விட்டு கொடுத்து வளரும் மனப்பக்குவம் ,மத்த உயிரை தன் உயிராய் மதிக்கும் குணம் இயற்கையாக வளர்கிறது .
சாப்பாட்டை கொடுத்து விட்டு கூடவே கையில் போன்,TV எடுக்கும் பழக்கம் குழந்தைகளிடம் இல்லை .சின்ன வயதில் இருந்து இவர்கள் விளையாட்டு தளம் வயல்வெளிகள் ,மண் என்றே இருப்பதால் அதன் பெருமை ,அருமை அறிந்து வளர்கிறார்கள் .