Vijiya lakshmi jagan
மண்டலாதிபதி
- Joined
- Jan 17, 2018
- Messages
- 193
- Reaction score
- 4,743
அது என்னவோ சந்திரா ஆண்குழந்தை பெத்து கொடுத்து விட்டதாலோ…? இல்லை தன் உறவுக்கு சாட்சி எதுவும் இல்லாது இருக்க வேண்டும் என்று நினைத்தானோ….? தேவிக்கு விருப்பம் இல்லா விட்டாலும் கருகலைப்பு செய்து விட்டான்.
என்ன தான் தைரியாமாக எல்லாம் செய்தாலும் நாரயணன் மீதும். இப்போது முழுஇளைஞனுக்குண்டான வளர்ச்சியில் இருக்கும் சூர்ய பிரகாஷை நினைத்தும் கொஞ்சம் பயந்தே இதுவும் தன்னுடைய வாரிசு தானே என்று உள் மனது அடித்துக் கொண்டாலும் அதை ஒதுக்கி வைத்து செய்தான்.
உமா சந்தரின் இந்த அதிகபடியான கோபத்துக்கு காரணமும் அதுவாக தான் இருந்தது. இந்த வீட்டில் சூர்யாவோடு தன் மகனுக்கு தான் அதிக உரிமை இருக்க வேண்டும் என்று நினைத்தான்.
அதனால் தான் சூர்யா தான் தனியாக போகிறேன் என்றதுக்கு நாரயணன், ரேவதி தயங்க. சந்திரா தன் முழு எதிர்ப்பை தெரிவிக்க.
உமா சந்தர் தான்…”அவன் எங்கு போக போகிறான் பக்கம் தானே…?” என்று சமாதானம் செய்வது போல் செய்து அந்த வீட்டின் அடுத்த வாரிசு தன் மகன் தான் என்று அடுத்த அடுத்த அடியாக எடுத்து வைத்ததின் விளைவு தான்.
நாரயணம் தன் அரசியல் வாரிசு தன் பேரன் என்று பத்திரிகையில் பேட்டி கொடுக்கும் அளவுக்கு வந்தது. அந்த பத்திரிக்கை பார்த்து உமா சந்தர் எவ்வளவு சந்தோஷப்பட்டான் என்று கேட்டால் அவனுக்கே தெரியாது. அந்த அளவுக்கு மகிழ்ச்சியில் திளைத்தான்என்று தான் சொல்ல வேண்டும்.
ஆனால் பாவம் அப்போது தெரியாது அந்த பத்திரிக்கை தான் தன் மகனின் அழிவுக்கு உண்டான முதல் படியை எடுத்து வைத்தது என்று…
நாரயணனுக்கு வந்த தகவலை படிக்க படிக்க….ஆத்திரம் எல்லையை கடக்க. “எவ்வளவு தைரியம் இருந்தா….? என்னையே இத்தனை வருஷம் ஏமாத்தி இருப்பான்.” என்று கத்தியவர்.
“வீரா….” என்று குரல் கொடுக்க. எப்போதும் அவர் பாதுகாப்புக்கு என்று இருக்கும் வீரா…”என்ன அய்யா….” என்ற குரல் கொடுத்து கொண்டே அந்த இடத்துக்கு வர.
“உமா எங்கு இருந்தாலும் தூக்கி போட்டு நம்ம குடோனுக்கு கொண்டு வந்துடுங்க.” என்று சொன்னதும்.
அவர்களில் உமா சங்கர் என்பவன் வேலை பாக்குறான். அவன் தான் என்று நினைத்து. “எதுக்கு அய்யா அவனை தூக்கி போடுட்டு போகனும். பைய்யன் அங்கு தான் இப்போ இருக்கான். ஒரு வேலையா நான் தான் அனுப்பி வெச்சேன்.” என்ற அவன் பேச்சிலேயே…
அவன் எந்த உமாவை நினைத்து சொல்கிறான் என்று புரிந்துக் கொண்டவர்.....”ஏய் நா மாப்பிள்ளை என்ற பெயரில் எனக்கு கொல்லி கட்டையா கொண்டு வந்தேனே அவனை சொல்றேன்.” என்றதும்.
வாய் அடைத்து நின்றது ஒரு நொடி தான். பின் “சரி அய்யா.” என்று வார்த்தையோடு போய் விட்டான். சொல்வதை செய்வது தானே அவன் வேலை.
வீரா சென்ற உடன்… “அப்பா நீங்க ரொம்ப அவசர படுறிங்கலோன்னு தோனுது.” என்று சொன்ன மகனை பார்த்து.
“அவனை பத்தி தெரிஞ்சிக்கவே இவ்வளவு காலம் தாழ்த்திட்டோம்.இதுவே ரொம்ப லேட் இனி அவனை விட்டு வெச்சா….சந்திராவுக்கும் தான் ஆபாத்து, அந்த பெண் வீட்டில் இன்னும் ஏதேதோ,,,, செய்து உன் திருமணத்தை நடத்த விடாம செய்ய பார்ப்பான்.” என்று சொல்லி விட்டதால் அதற்க்கு மேல் சூர்யா ஒன்றும் சொல்லாது அமைதியாகி விட்டான்.
------------------------------------------------------------“”ஏய் நான் யாருன்னு தெரியுமா…?” தன் மேல் விழுந்த அடியை தடுத்துக் கொண்டே கத்திக் கொண்டு உமா சந்தரிடம். அப்போது தான் அந்த இடத்துக்கு வந்த நாரயணன்.
“ஆ தெரியுமே...நீ ஒரு செல்லா காசு. என் மகள் சந்திர கலாவின் கணவன் என்ற அந்தஸ்த்தோடு சுத்தி கொண்டு இருந்தவன்னு இங்கு இருக்கும் எல்லோருக்கும் தெரியும்.” என்று சொன்னதும்.
“மாமா….” என்று அதிர்வுடன் பார்க்க.
“அந்த உறவு சொல்லி கூப்பிடும் அருகதை உனக்கு இல்ல. இனி இந்த மாமா, மச்சான் உறவு சொல்லிட்டு இருந்த அர உயிரா தான் ஆக்க சொல்லி இருக்கேன். அடுத்து உன் வாயில் மாமான்னு வந்தது முழூ உயிரையும் எடுக்க சொல்லிடுவேன்.” இத்தனை வருட பழக்கத்தில் நாரயணன் பற்றி நன்கு அறிந்து இருந்த உமா சந்தர் அதற்க்கு அடுத்து உறவு முறை சொல்லி அழைக்காது.
“சந்திரா நான் இல்லேன்னா இருக்க மாட்டா….” தன் மனைவி தன் மேல் வைத்திருக்கும் காதலின் ஆழத்தின் நம்பிக்கையில் பேச.
“அவ தான் சொன்னதே….” என்ற சொல்லில் அதிர்ச்சியாகி நாரயணனை பார்க்க. அந்த பார்வை அவர் சொன்னது உண்மை என்று தான் அவனுக்கு பறைச் சாற்றியது.
“என்ன பாக்குற...உன் சாயம் வெளுத்து போச்சிடா...எந்த ஒரு பொண்ணும் தன் கணவன் தனக்கு உண்மையா இருக்க வரை தான் அவனுக்கு மதிப்பு. நீ தேவியோடு நடத்திய குடித்தனத்தை பத்தி தெரிஞ்ச உடனே உன்னை தூக்கி போட்டுட்டா….
நீ செஞ்ச காரியத்துக்கு உன்னை கொன்னு போட்டு இருப்பே...அவ தான் வேண்டாம் அவ வாழனும். ஆனா முடமான்னு சொன்னதால தான் விட்டேன்.” என்று சொல்லோடு வீராவிடம் ஒரு கண் ஜாடையில் அந்த இடத்தை விட்டு செல்லும் போது கடைசியில்...உமா சந்தரின்…
“அய்யோ …” என்ற அலரல் சத்தம் கேட்டது.
இன்னும் சுடருக்கு தன் திருமணம் முடிந்து விட்டது என்பதில் சந்தேகமாகவே இருந்தது. எப்படி ஒரு மாதத்திலேயே நடத்தி முடித்து விட்டான்.
அதுவும் தன் பலத்த எதிர்ப்பு தெரிந்தும் தன் தந்தையின் மூலம் சாதித்துக் கொண்டானே….அதுவும் சூர்ய கலாவை நினைக்க, நினைக்க, ஒரு பக்கம் ஆத்திரமாகவும் இன்னொரு பக்கம் ஆச்சரியமாகவும் அவளுக்கு இருந்தது.
சும்மாவா சொன்னாங்க….பூனை மாதிரி இருக்குறவங்களை நம்பக் கூடாதுன்னு. அது எப்படி வில்லனை பாத்து காதல் வரும். சினிமாவில் காட்டுவது இது வரை சும்மா என்று தானே நினைத்துக் கொண்டு இருந்தாள். சூர்ய கலா அது உண்மை என்று ஆக்கி விட்டாளே…
ஆம் சூர்ய கலாவுக்கு விக்ரம் மேல் லவ். அதுவும் அவள் வாயால் சொல்ல கேட்டதும் சுடர் மயக்கம் போட்டு விழாது இருப்பதே அதிசயம் என்பது போல் விக்கித்து நின்று விட்டாள்.
என்ன தான் தைரியாமாக எல்லாம் செய்தாலும் நாரயணன் மீதும். இப்போது முழுஇளைஞனுக்குண்டான வளர்ச்சியில் இருக்கும் சூர்ய பிரகாஷை நினைத்தும் கொஞ்சம் பயந்தே இதுவும் தன்னுடைய வாரிசு தானே என்று உள் மனது அடித்துக் கொண்டாலும் அதை ஒதுக்கி வைத்து செய்தான்.
உமா சந்தரின் இந்த அதிகபடியான கோபத்துக்கு காரணமும் அதுவாக தான் இருந்தது. இந்த வீட்டில் சூர்யாவோடு தன் மகனுக்கு தான் அதிக உரிமை இருக்க வேண்டும் என்று நினைத்தான்.
அதனால் தான் சூர்யா தான் தனியாக போகிறேன் என்றதுக்கு நாரயணன், ரேவதி தயங்க. சந்திரா தன் முழு எதிர்ப்பை தெரிவிக்க.
உமா சந்தர் தான்…”அவன் எங்கு போக போகிறான் பக்கம் தானே…?” என்று சமாதானம் செய்வது போல் செய்து அந்த வீட்டின் அடுத்த வாரிசு தன் மகன் தான் என்று அடுத்த அடுத்த அடியாக எடுத்து வைத்ததின் விளைவு தான்.
நாரயணம் தன் அரசியல் வாரிசு தன் பேரன் என்று பத்திரிகையில் பேட்டி கொடுக்கும் அளவுக்கு வந்தது. அந்த பத்திரிக்கை பார்த்து உமா சந்தர் எவ்வளவு சந்தோஷப்பட்டான் என்று கேட்டால் அவனுக்கே தெரியாது. அந்த அளவுக்கு மகிழ்ச்சியில் திளைத்தான்என்று தான் சொல்ல வேண்டும்.
ஆனால் பாவம் அப்போது தெரியாது அந்த பத்திரிக்கை தான் தன் மகனின் அழிவுக்கு உண்டான முதல் படியை எடுத்து வைத்தது என்று…
நாரயணனுக்கு வந்த தகவலை படிக்க படிக்க….ஆத்திரம் எல்லையை கடக்க. “எவ்வளவு தைரியம் இருந்தா….? என்னையே இத்தனை வருஷம் ஏமாத்தி இருப்பான்.” என்று கத்தியவர்.
“வீரா….” என்று குரல் கொடுக்க. எப்போதும் அவர் பாதுகாப்புக்கு என்று இருக்கும் வீரா…”என்ன அய்யா….” என்ற குரல் கொடுத்து கொண்டே அந்த இடத்துக்கு வர.
“உமா எங்கு இருந்தாலும் தூக்கி போட்டு நம்ம குடோனுக்கு கொண்டு வந்துடுங்க.” என்று சொன்னதும்.
அவர்களில் உமா சங்கர் என்பவன் வேலை பாக்குறான். அவன் தான் என்று நினைத்து. “எதுக்கு அய்யா அவனை தூக்கி போடுட்டு போகனும். பைய்யன் அங்கு தான் இப்போ இருக்கான். ஒரு வேலையா நான் தான் அனுப்பி வெச்சேன்.” என்ற அவன் பேச்சிலேயே…
அவன் எந்த உமாவை நினைத்து சொல்கிறான் என்று புரிந்துக் கொண்டவர்.....”ஏய் நா மாப்பிள்ளை என்ற பெயரில் எனக்கு கொல்லி கட்டையா கொண்டு வந்தேனே அவனை சொல்றேன்.” என்றதும்.
வாய் அடைத்து நின்றது ஒரு நொடி தான். பின் “சரி அய்யா.” என்று வார்த்தையோடு போய் விட்டான். சொல்வதை செய்வது தானே அவன் வேலை.
வீரா சென்ற உடன்… “அப்பா நீங்க ரொம்ப அவசர படுறிங்கலோன்னு தோனுது.” என்று சொன்ன மகனை பார்த்து.
“அவனை பத்தி தெரிஞ்சிக்கவே இவ்வளவு காலம் தாழ்த்திட்டோம்.இதுவே ரொம்ப லேட் இனி அவனை விட்டு வெச்சா….சந்திராவுக்கும் தான் ஆபாத்து, அந்த பெண் வீட்டில் இன்னும் ஏதேதோ,,,, செய்து உன் திருமணத்தை நடத்த விடாம செய்ய பார்ப்பான்.” என்று சொல்லி விட்டதால் அதற்க்கு மேல் சூர்யா ஒன்றும் சொல்லாது அமைதியாகி விட்டான்.
------------------------------------------------------------“”ஏய் நான் யாருன்னு தெரியுமா…?” தன் மேல் விழுந்த அடியை தடுத்துக் கொண்டே கத்திக் கொண்டு உமா சந்தரிடம். அப்போது தான் அந்த இடத்துக்கு வந்த நாரயணன்.
“ஆ தெரியுமே...நீ ஒரு செல்லா காசு. என் மகள் சந்திர கலாவின் கணவன் என்ற அந்தஸ்த்தோடு சுத்தி கொண்டு இருந்தவன்னு இங்கு இருக்கும் எல்லோருக்கும் தெரியும்.” என்று சொன்னதும்.
“மாமா….” என்று அதிர்வுடன் பார்க்க.
“அந்த உறவு சொல்லி கூப்பிடும் அருகதை உனக்கு இல்ல. இனி இந்த மாமா, மச்சான் உறவு சொல்லிட்டு இருந்த அர உயிரா தான் ஆக்க சொல்லி இருக்கேன். அடுத்து உன் வாயில் மாமான்னு வந்தது முழூ உயிரையும் எடுக்க சொல்லிடுவேன்.” இத்தனை வருட பழக்கத்தில் நாரயணன் பற்றி நன்கு அறிந்து இருந்த உமா சந்தர் அதற்க்கு அடுத்து உறவு முறை சொல்லி அழைக்காது.
“சந்திரா நான் இல்லேன்னா இருக்க மாட்டா….” தன் மனைவி தன் மேல் வைத்திருக்கும் காதலின் ஆழத்தின் நம்பிக்கையில் பேச.
“அவ தான் சொன்னதே….” என்ற சொல்லில் அதிர்ச்சியாகி நாரயணனை பார்க்க. அந்த பார்வை அவர் சொன்னது உண்மை என்று தான் அவனுக்கு பறைச் சாற்றியது.
“என்ன பாக்குற...உன் சாயம் வெளுத்து போச்சிடா...எந்த ஒரு பொண்ணும் தன் கணவன் தனக்கு உண்மையா இருக்க வரை தான் அவனுக்கு மதிப்பு. நீ தேவியோடு நடத்திய குடித்தனத்தை பத்தி தெரிஞ்ச உடனே உன்னை தூக்கி போட்டுட்டா….
நீ செஞ்ச காரியத்துக்கு உன்னை கொன்னு போட்டு இருப்பே...அவ தான் வேண்டாம் அவ வாழனும். ஆனா முடமான்னு சொன்னதால தான் விட்டேன்.” என்று சொல்லோடு வீராவிடம் ஒரு கண் ஜாடையில் அந்த இடத்தை விட்டு செல்லும் போது கடைசியில்...உமா சந்தரின்…
“அய்யோ …” என்ற அலரல் சத்தம் கேட்டது.
இன்னும் சுடருக்கு தன் திருமணம் முடிந்து விட்டது என்பதில் சந்தேகமாகவே இருந்தது. எப்படி ஒரு மாதத்திலேயே நடத்தி முடித்து விட்டான்.
அதுவும் தன் பலத்த எதிர்ப்பு தெரிந்தும் தன் தந்தையின் மூலம் சாதித்துக் கொண்டானே….அதுவும் சூர்ய கலாவை நினைக்க, நினைக்க, ஒரு பக்கம் ஆத்திரமாகவும் இன்னொரு பக்கம் ஆச்சரியமாகவும் அவளுக்கு இருந்தது.
சும்மாவா சொன்னாங்க….பூனை மாதிரி இருக்குறவங்களை நம்பக் கூடாதுன்னு. அது எப்படி வில்லனை பாத்து காதல் வரும். சினிமாவில் காட்டுவது இது வரை சும்மா என்று தானே நினைத்துக் கொண்டு இருந்தாள். சூர்ய கலா அது உண்மை என்று ஆக்கி விட்டாளே…
ஆம் சூர்ய கலாவுக்கு விக்ரம் மேல் லவ். அதுவும் அவள் வாயால் சொல்ல கேட்டதும் சுடர் மயக்கம் போட்டு விழாது இருப்பதே அதிசயம் என்பது போல் விக்கித்து நின்று விட்டாள்.