ஹாய் டியர்ஸ்.. எல்லாரும் எப்படி இருக்கீங்க... அடுத்த எபி கொண்டு வந்திருக்கேன்... சாரி பிரண்ட்ஸ் விண்பாவை எழிலனால் காப்பாத்த முடியவில்லை .... சித்தர் அவளை சிலையில் அடைத்து விட்டாரா என்று இந்த எபி படித்து தெரிந்துக் கொள்ளுங்க.. படித்து உங்க கமெண்ட்ஸ் சொல்லுங்க... படிக்குறவங்க லைக் போட்டா ரொம்ப நன்னா இருக்கும. ?நன்றி...?
கட்டு – 14
View attachment 3252
எழிலன் சித்தரை நோக்கி செல்லவும் அக்ரதாவும் (மகரிஷி) இவன் பின்னே வந்தான்.. அதை எழிலன் கவனிக்கவே இல்லை.... விண்பா, துரோகம்என்று அவர்கள் பேசவும்... ஒரு நிமிடம் கண்ணை மூடினான் அவன், நடந்ததை அறிய... அப்பொழுது தான் நேற்று பாதியில்விண்பா சிலை கண்கள் கட்டப்பட்டது நினைவு வந்தது.. எல்லாத்துக்கும் காரணம் இவர்கள் தான் என்று அறிந்துக் கொண்டார்....
இவர்கள் செயலை எப்படியாவது அவளுக்கு உணர்த்த வேண்டும் என்று எண்ணிக் கொண்டு இருக்கவும் விண்பா அவளின் கோட்டையை விட்டு வெளியில் வந்தாள்... கோவிலைப் பார்த்துக் கொண்டு வரவும். அவள் அக்ரதாவைப் பார்த்தாள்.. அக்ரதாவைப் பார்க்கவும் அவன் “ மெதுவாக வா “ என்று செய்கை செய்யவும் “ அவன் ஏதோ விளையாடுகிறான் என்று எண்ணி அவனை நோக்கி பூனை பாதம் எடுத்து வைத்து மெதுவாக வந்தாள்....
வந்தவள் அவர்கள் பேச்சை கேட்டு அப்படியே நின்று விட்டாள்.... அந்த கரங்கள் எழிலனா என்று என்னும் பொழுது அவளுக்கு சந்தோசமாக இருந்தது.. அப்பொழுது தான் அவள் உணர்ந்தாள்.. “ எழிலன்தன் மனதில் வந்துவிட்டான் என்று... அதே உணர்வை அக்ரதாவும் உணர்ந்தான்.. விண்பா மனதில் எழிலன் இருக்கிறான் என்று... அது அவனுக்கு பெரும் கோபத்தை வரவைத்தது....
அவள் எழிலன் நினைவில் நிற்கவும் ‘ குட்டிம்மா எப்படி அவனுக்கு உங்களை ஏமாற்ற நினைப்பு வந்தது “ என்று இவன் ஏற்றி விடவும் அதை பற்றிக் கொண்ட அவளும் அவனை கோபமாக முறைத்தாள்...
அதே கோபத்தோடு அவளின் அறை நோக்கி சென்றாள்... அவள் அறைக்கு அவள் செல்லவும், அக்ரதாகாட்டை நோக்கி சென்றான்...
சென்றவன் மிக தீவிரமாக ஒரு யாகத்தை ஆரம்பித்தான்.... மதியத்தில் இருந்து ஆரம்பித்த யாகம் இரவு வரை தொடர்ந்தது..... அவன் இன்று விண்பாவை கனவில் தொல்லை செய்யவே இல்லை....
ஆனால் சாமுண்டி, மகரிஷியின் யாகம் அறியாமல் இன்றும் விண்பாவையும், எழிலனையும் கனவில் சேர்க்கும் வழியை ஆரம்பித்தார்.....இந்த இடத்தில மகரிஷி சாமர்த்தியமாக செயல்பட்டார்... சாமுண்டி முட்டாளாக்கப்பட்டார்...
பகலில்விண்பா எழிலன் கண் அருகிலையே இருப்பதால், இரவு மட்டும் ஒரு இரண்டு வரி மந்திரத்தை கூறி இருந்தார் சாமுண்டி சித்தர்..
நேற்றுகனவில் விண்பா வந்ததுப் போல், இன்று வரவேண்டும்... அவளிடம் தன் காதலை கூற வேண்டும் என்று எண்ணினான்.. சாமுண்டி கூறிய மந்திரத்தை கூறிக் கொண்டு படுத்திருந்தான்...
அதே நேரம் சாமுண்டி, அவளை அவன் கனவில் வர மந்திரத்தை கூறினார்..
“இன்று எப்படியாவது அவளை இங்கு அழைத்து வரவேண்டும்” அக்ரதாஅவளுக்கான யாகத்தை செய்துக் கொண்டு இருந்தான்...
சிறிது நேரத்தில் எழிலன் அழகான ஏரிக்கரையோரம் நடந்து செல்ல,அவனுக்கு முன்னே அங்கு அவனின் பிங்கி.. மனம் மகிழ்ச்சியில் துள்ளியது... கண்டிப்பாக இன்று தன் மனதை அவளுக்கு உணர்த்த வேண்டும்..
மெதுவாக நடந்து சென்று அவள் அருகில் அமர செல்ல..” அவளுக்கு தன்முகத்தை இன்னும் காட்டவில்லை “ என்று அப்பொழுது தான் நினைவு வர,
அப்படியே பின்னால் நகர்ந்த அவன் அவள் கண்ணை மூடினான்...அவன் கைகளில் கண்ணீரின் ஈரம்..,
பதறி துடித்த எழிலன் “ பிங்கி“ என அழைக்க...
“ எழில்என்னை யாரோ.., எங்கோ உன்னை விட்டு தூரமா, அழைச்சுட்டு போன மாதிரி இருக்கு.., அதே போல தான் நீயும் என்னை ஏமாற்றிவிட்டாய் ” என இன்று நிஜத்தில் நடந்ததை கூறினாள் அவள்... முதல் முறையாக கனவு என்று இல்லாமல் நிஜத்தில் வீட்டில் நடந்ததை பேசுகின்றனர் இருவரும்...
இருவர் மனமும் ஒன்றாகிபோனதை அறிந்த சாமுண்டி தான் மந்திரம் உச்சரிப்பதை நிறுத்தி விட்டார்...
அவளின் வேதனை அவனை தாக்க “ அவளுக்கான பிரச்சனையை அவளிடம் கூற எண்ணினான் அவன்.. நிஜத்தில் நடந்ததை கனவில் பேசுவதால் அவர்கள் மனதளவில் ஒன்றாகி விட்டார்கள் என்று எழிலன் எண்ணினான்...
சாமுண்டி அன்றே கூறி இருந்தார்... “நிஜத்தில் நடந்ததை என்று விண்பா உன்னிடம் கூறுகிறாளோ அன்று அவளுக்கான ஆபத்தை கூறி விடு “ என கூறி இருந்தார்...
அவளை கொஞ்ச நேரம் அப்படியே பார்த்துக் கொண்டு இருந்தான் எழிலன்... அவள் அருகில் நெருங்கி அமர்ந்து அவளை தன் மேல் சாய்த்து தோளோடு அணைத்து கொண்டான்... அந்த ஒற்றை அணைப்பு அவளுக்கு போதுமானதாக இருந்தது...
“ நிஜத்தில் தானே தனக்கு ஆபத்து உள்ளது.., இப்படியே இருந்தால் என்ன “ என்று அவளின் மனது நினைப்பதை அறிந்த அவன் தன் அணைப்பை மேலும் இறுக்கினான்...
“ பிங்கி., நீ நினைப்பது போல நாம கனவிலையே வாழமுடியாது.. உனக்கு நானும், எனக்கு நீயும் என்று அந்த கோட்டைத்தாய் முடிச்சு போட்டுட்டா... நம்மளை யாராலும் பிரிக்க முடியாது “ என்று கூறி அவள் நெற்றியில் ஆழ்ந்த முத்தமிட்டான்....
அவள், அவன் நெஞ்சோடு சாய்ந்து அவன் சட்டையை இறுக்க பிடித்துக் கொள்ளவும் அவன் நெஞ்சில் உள்ள 3 நட்சத்திர மச்சத்தை கண்டு மென்மையாக வருட... அவள் வருடல் அவனை ஏதோ செய்ய.. சுகமாக அந்த உணர்வில் நனைந்தான் அவன்...
அந்த மஞ்சத்தை வருட அவள் மனதில் அந்த மச்சம் கல்வெட்டாக பதிந்துப் போனது.. பதிய வைத்தாள் கோட்டைத்தாய்...
அந்த மச்சத்தை வருடிய கைகளை விலக்கி, அந்த மச்சத்தில் முத்தமிட. அந்த செயல் அவனை எங்கோ அழைத்து சென்றது... அவன் கைகள் மெதுவாக அவள் இடையை அழுத்த, மேலும் அவன் நெஞ்சில் சாய்ந்துக் கொண்டாள்...
இருவர் மனதும் ஒன்றிப் போனதால் அவர்களுக்கு நான் உனக்கு, நீ எனக்கு என்று மனதால் இணைந்தனர்.... அவன்கைகள் அவள் இடையில் விளையாடிய படியே.. அவளுக்கான ஆபத்தைக் கூறினான்...
அவன் மாயாஜால செயலில் அவள் மயங்கி இருந்தாளே தவிர அவன் கூறியதை அவள் கேட்கவே இல்லை... ஆனால்“ ம்ம்“ மட்டும் கொட்டிக் கொண்டு இருந்தாள்...
அவள்“ ம்ம் “ கொட்டுவதை கேட்ட அவன் “ பிங்கி தூங்கிட்டியா “ என “ கேட்க
“ இல்ல நீ சொல்லு “ என சாதாரணமாக அவள் கூற..,
அவளை முறைத்த அவன் “ பிங்கி... நான்உனக்கு வர ஆபத்தை சொல்லுறேன் “
“ அது தான் என்னை காப்பாற்ற கோட்டைத்தாய் உன்னை எனக்கு தந்திருக்காளே“ என்று கண்களில் காதல் பொங்க கூற...
அவள் மேல் மீண்டும் காதல் பெருக்கெடுத்தது... “ இப்படி ஒரு அன்பை தனக்கு இவள் தர தான் தகுதியானவனா “ என மனதில் நினைக்க..
“ நீ. மட்டும் தான் எனக்கு தகுதியானவன்டா“ என்று பதில் கூறினாள் அவள்...
அருகில் இருந்துக் கொண்டே அவன் மனதில் நினைப்பதை இவள் கூற.., இவள் நினைப்பதை அவன் கூற என்று மிக சந்தோசமாகவும், செல்ல சீண்டலாகவும் இவர்கள் பேசிக் கொண்டிருக்க...
“ பிங்கி இப்போ நான் நினைகிறதை.. நீ சரியா சொல்லு பார்போம் “ என்று அவன் கள்ளப் பார்வையுடன் அவளை சீண்ட..
“ என்கிட்டவே சவால் விடுற.. நீ நினை நான் உடனே சொல்லுறேன் “ என்று இவளும் இல்லாத காலரை தூக்கி விட...
“ நினைப்பேன் பிங்கி.. அப்புறம் நீ அழகூடாது “ என சீண்ட..
“ நான் என்ன அழுகுனியாடா... இதுக்காகவே இந்த விண்பா சரியா சொல்லுவாடா, நீ நினை “ என மீண்டும் கெத்துக் காட்ட...
“ வசமா மாட்டுன தங்கமே “ எனஅவளிடம் கூறி நினைத்தான் அவன்...
அவன் நினைப்பதை அறிந்த அவளின் முகம் செங்கொழுந்தானது...
“ அடேய்..திருட்டு ராஸ்கல் இப்படியாடா நினைப்ப..” என அவனிடம் பொய் கோபம் காட்ட..
“ எதுனாலும் நினைக்கலாம் பிங்கி.. இப்போ நான் நினைச்சதை சொல்லு. இல்லைன்னா, நான் நினைச்சதை இங்க செய்து காட்டுவேன் “ எனகண் சிமிட்ட...
அவன் செயல் அவளுக்கு பல உணர்வுகளை எழுப்ப “ டேய்... எரும.. நீ கண்டதையும் நினைப்ப அத நான் என் வாயால சொல்லணுமா.. ? என கேட்டுக் கொண்டே அவனை அடிக்க வர..
கட்டு – 14
View attachment 3252
எழிலன் சித்தரை நோக்கி செல்லவும் அக்ரதாவும் (மகரிஷி) இவன் பின்னே வந்தான்.. அதை எழிலன் கவனிக்கவே இல்லை.... விண்பா, துரோகம்என்று அவர்கள் பேசவும்... ஒரு நிமிடம் கண்ணை மூடினான் அவன், நடந்ததை அறிய... அப்பொழுது தான் நேற்று பாதியில்விண்பா சிலை கண்கள் கட்டப்பட்டது நினைவு வந்தது.. எல்லாத்துக்கும் காரணம் இவர்கள் தான் என்று அறிந்துக் கொண்டார்....
இவர்கள் செயலை எப்படியாவது அவளுக்கு உணர்த்த வேண்டும் என்று எண்ணிக் கொண்டு இருக்கவும் விண்பா அவளின் கோட்டையை விட்டு வெளியில் வந்தாள்... கோவிலைப் பார்த்துக் கொண்டு வரவும். அவள் அக்ரதாவைப் பார்த்தாள்.. அக்ரதாவைப் பார்க்கவும் அவன் “ மெதுவாக வா “ என்று செய்கை செய்யவும் “ அவன் ஏதோ விளையாடுகிறான் என்று எண்ணி அவனை நோக்கி பூனை பாதம் எடுத்து வைத்து மெதுவாக வந்தாள்....
வந்தவள் அவர்கள் பேச்சை கேட்டு அப்படியே நின்று விட்டாள்.... அந்த கரங்கள் எழிலனா என்று என்னும் பொழுது அவளுக்கு சந்தோசமாக இருந்தது.. அப்பொழுது தான் அவள் உணர்ந்தாள்.. “ எழிலன்தன் மனதில் வந்துவிட்டான் என்று... அதே உணர்வை அக்ரதாவும் உணர்ந்தான்.. விண்பா மனதில் எழிலன் இருக்கிறான் என்று... அது அவனுக்கு பெரும் கோபத்தை வரவைத்தது....
அவள் எழிலன் நினைவில் நிற்கவும் ‘ குட்டிம்மா எப்படி அவனுக்கு உங்களை ஏமாற்ற நினைப்பு வந்தது “ என்று இவன் ஏற்றி விடவும் அதை பற்றிக் கொண்ட அவளும் அவனை கோபமாக முறைத்தாள்...
அதே கோபத்தோடு அவளின் அறை நோக்கி சென்றாள்... அவள் அறைக்கு அவள் செல்லவும், அக்ரதாகாட்டை நோக்கி சென்றான்...
சென்றவன் மிக தீவிரமாக ஒரு யாகத்தை ஆரம்பித்தான்.... மதியத்தில் இருந்து ஆரம்பித்த யாகம் இரவு வரை தொடர்ந்தது..... அவன் இன்று விண்பாவை கனவில் தொல்லை செய்யவே இல்லை....
ஆனால் சாமுண்டி, மகரிஷியின் யாகம் அறியாமல் இன்றும் விண்பாவையும், எழிலனையும் கனவில் சேர்க்கும் வழியை ஆரம்பித்தார்.....இந்த இடத்தில மகரிஷி சாமர்த்தியமாக செயல்பட்டார்... சாமுண்டி முட்டாளாக்கப்பட்டார்...
பகலில்விண்பா எழிலன் கண் அருகிலையே இருப்பதால், இரவு மட்டும் ஒரு இரண்டு வரி மந்திரத்தை கூறி இருந்தார் சாமுண்டி சித்தர்..
நேற்றுகனவில் விண்பா வந்ததுப் போல், இன்று வரவேண்டும்... அவளிடம் தன் காதலை கூற வேண்டும் என்று எண்ணினான்.. சாமுண்டி கூறிய மந்திரத்தை கூறிக் கொண்டு படுத்திருந்தான்...
அதே நேரம் சாமுண்டி, அவளை அவன் கனவில் வர மந்திரத்தை கூறினார்..
“இன்று எப்படியாவது அவளை இங்கு அழைத்து வரவேண்டும்” அக்ரதாஅவளுக்கான யாகத்தை செய்துக் கொண்டு இருந்தான்...
சிறிது நேரத்தில் எழிலன் அழகான ஏரிக்கரையோரம் நடந்து செல்ல,அவனுக்கு முன்னே அங்கு அவனின் பிங்கி.. மனம் மகிழ்ச்சியில் துள்ளியது... கண்டிப்பாக இன்று தன் மனதை அவளுக்கு உணர்த்த வேண்டும்..
மெதுவாக நடந்து சென்று அவள் அருகில் அமர செல்ல..” அவளுக்கு தன்முகத்தை இன்னும் காட்டவில்லை “ என்று அப்பொழுது தான் நினைவு வர,
அப்படியே பின்னால் நகர்ந்த அவன் அவள் கண்ணை மூடினான்...அவன் கைகளில் கண்ணீரின் ஈரம்..,
பதறி துடித்த எழிலன் “ பிங்கி“ என அழைக்க...
“ எழில்என்னை யாரோ.., எங்கோ உன்னை விட்டு தூரமா, அழைச்சுட்டு போன மாதிரி இருக்கு.., அதே போல தான் நீயும் என்னை ஏமாற்றிவிட்டாய் ” என இன்று நிஜத்தில் நடந்ததை கூறினாள் அவள்... முதல் முறையாக கனவு என்று இல்லாமல் நிஜத்தில் வீட்டில் நடந்ததை பேசுகின்றனர் இருவரும்...
இருவர் மனமும் ஒன்றாகிபோனதை அறிந்த சாமுண்டி தான் மந்திரம் உச்சரிப்பதை நிறுத்தி விட்டார்...
அவளின் வேதனை அவனை தாக்க “ அவளுக்கான பிரச்சனையை அவளிடம் கூற எண்ணினான் அவன்.. நிஜத்தில் நடந்ததை கனவில் பேசுவதால் அவர்கள் மனதளவில் ஒன்றாகி விட்டார்கள் என்று எழிலன் எண்ணினான்...
சாமுண்டி அன்றே கூறி இருந்தார்... “நிஜத்தில் நடந்ததை என்று விண்பா உன்னிடம் கூறுகிறாளோ அன்று அவளுக்கான ஆபத்தை கூறி விடு “ என கூறி இருந்தார்...
அவளை கொஞ்ச நேரம் அப்படியே பார்த்துக் கொண்டு இருந்தான் எழிலன்... அவள் அருகில் நெருங்கி அமர்ந்து அவளை தன் மேல் சாய்த்து தோளோடு அணைத்து கொண்டான்... அந்த ஒற்றை அணைப்பு அவளுக்கு போதுமானதாக இருந்தது...
“ நிஜத்தில் தானே தனக்கு ஆபத்து உள்ளது.., இப்படியே இருந்தால் என்ன “ என்று அவளின் மனது நினைப்பதை அறிந்த அவன் தன் அணைப்பை மேலும் இறுக்கினான்...
“ பிங்கி., நீ நினைப்பது போல நாம கனவிலையே வாழமுடியாது.. உனக்கு நானும், எனக்கு நீயும் என்று அந்த கோட்டைத்தாய் முடிச்சு போட்டுட்டா... நம்மளை யாராலும் பிரிக்க முடியாது “ என்று கூறி அவள் நெற்றியில் ஆழ்ந்த முத்தமிட்டான்....
அவள், அவன் நெஞ்சோடு சாய்ந்து அவன் சட்டையை இறுக்க பிடித்துக் கொள்ளவும் அவன் நெஞ்சில் உள்ள 3 நட்சத்திர மச்சத்தை கண்டு மென்மையாக வருட... அவள் வருடல் அவனை ஏதோ செய்ய.. சுகமாக அந்த உணர்வில் நனைந்தான் அவன்...
அந்த மஞ்சத்தை வருட அவள் மனதில் அந்த மச்சம் கல்வெட்டாக பதிந்துப் போனது.. பதிய வைத்தாள் கோட்டைத்தாய்...
அந்த மச்சத்தை வருடிய கைகளை விலக்கி, அந்த மச்சத்தில் முத்தமிட. அந்த செயல் அவனை எங்கோ அழைத்து சென்றது... அவன் கைகள் மெதுவாக அவள் இடையை அழுத்த, மேலும் அவன் நெஞ்சில் சாய்ந்துக் கொண்டாள்...
இருவர் மனதும் ஒன்றிப் போனதால் அவர்களுக்கு நான் உனக்கு, நீ எனக்கு என்று மனதால் இணைந்தனர்.... அவன்கைகள் அவள் இடையில் விளையாடிய படியே.. அவளுக்கான ஆபத்தைக் கூறினான்...
அவன் மாயாஜால செயலில் அவள் மயங்கி இருந்தாளே தவிர அவன் கூறியதை அவள் கேட்கவே இல்லை... ஆனால்“ ம்ம்“ மட்டும் கொட்டிக் கொண்டு இருந்தாள்...
அவள்“ ம்ம் “ கொட்டுவதை கேட்ட அவன் “ பிங்கி தூங்கிட்டியா “ என “ கேட்க
“ இல்ல நீ சொல்லு “ என சாதாரணமாக அவள் கூற..,
அவளை முறைத்த அவன் “ பிங்கி... நான்உனக்கு வர ஆபத்தை சொல்லுறேன் “
“ அது தான் என்னை காப்பாற்ற கோட்டைத்தாய் உன்னை எனக்கு தந்திருக்காளே“ என்று கண்களில் காதல் பொங்க கூற...
அவள் மேல் மீண்டும் காதல் பெருக்கெடுத்தது... “ இப்படி ஒரு அன்பை தனக்கு இவள் தர தான் தகுதியானவனா “ என மனதில் நினைக்க..
“ நீ. மட்டும் தான் எனக்கு தகுதியானவன்டா“ என்று பதில் கூறினாள் அவள்...
அருகில் இருந்துக் கொண்டே அவன் மனதில் நினைப்பதை இவள் கூற.., இவள் நினைப்பதை அவன் கூற என்று மிக சந்தோசமாகவும், செல்ல சீண்டலாகவும் இவர்கள் பேசிக் கொண்டிருக்க...
“ பிங்கி இப்போ நான் நினைகிறதை.. நீ சரியா சொல்லு பார்போம் “ என்று அவன் கள்ளப் பார்வையுடன் அவளை சீண்ட..
“ என்கிட்டவே சவால் விடுற.. நீ நினை நான் உடனே சொல்லுறேன் “ என்று இவளும் இல்லாத காலரை தூக்கி விட...
“ நினைப்பேன் பிங்கி.. அப்புறம் நீ அழகூடாது “ என சீண்ட..
“ நான் என்ன அழுகுனியாடா... இதுக்காகவே இந்த விண்பா சரியா சொல்லுவாடா, நீ நினை “ என மீண்டும் கெத்துக் காட்ட...
“ வசமா மாட்டுன தங்கமே “ எனஅவளிடம் கூறி நினைத்தான் அவன்...
அவன் நினைப்பதை அறிந்த அவளின் முகம் செங்கொழுந்தானது...
“ அடேய்..திருட்டு ராஸ்கல் இப்படியாடா நினைப்ப..” என அவனிடம் பொய் கோபம் காட்ட..
“ எதுனாலும் நினைக்கலாம் பிங்கி.. இப்போ நான் நினைச்சதை சொல்லு. இல்லைன்னா, நான் நினைச்சதை இங்க செய்து காட்டுவேன் “ எனகண் சிமிட்ட...
அவன் செயல் அவளுக்கு பல உணர்வுகளை எழுப்ப “ டேய்... எரும.. நீ கண்டதையும் நினைப்ப அத நான் என் வாயால சொல்லணுமா.. ? என கேட்டுக் கொண்டே அவனை அடிக்க வர..