snehasree
SM Exclusive
ஏழுபேரும் தூங்கி எழுந்த உடன் வீட்டை விட்டு வெளியே வந்து நின்றார்கள்.
சக்தி ஆறு வழக்கம் போல் சீறி பாய்ந்து ஒடிக் கொண்டிருக்க அதை பார்த்த குட்டீஸ் முகம் எல்லாம் ஆனந்தம்.
"மிஸ்... இந்த ஆற்றில் தண்ணீர் எவ்வளவு வேகமாக போகுது பாருங்க. இந்த தண்ணீரில் போட்டில் போனால் சூப்பராக இருக்கும்" என்றாள் ஹரிணி.
"மிஸ்... அங்கே பாருங்க... எவ்வளவு கலர் கலராக மீன்கள் போகுது. மீன்கள் எவ்வளவு அழகாக இருக்கிறது" என்றாள் ஜெயலட்சுமி.
"மிஸ்... இந்த ஆற்றில் முதலில் குளிக்கனும் மிஸ். இந்த மாதிரி அழகான ஆற்றில் குளிக்க சானஸ் கிடைக்கிறப்ப மிஸ் செய்ய கூடாது." என்று காவ்யா மற்றவர்கள் ஆமோதித்தார்கள்.
"எங்களுக்கு அதே ஐடியாதான். வாங்க கொஞ்சம் மிதமாக தண்ணீர் ஒடுகிற இடத்தில் சென்று குளிப்போம்" என்று திவ்யா சொல்ல சந்தியா அதை ஆமோதித்தாள்.
ஏழுபேரும் எங்கே ஆறு சற்று மிதமாக ஒடுகிறது என்று தேடி நடக்க ஆரம்பித்தார்கள்.
சிறிது நேர நடைக்குபின் ஒரு இடத்தில் ஆற்றின் வேகம் குறைந்து இருப்பதை கண்டு அங்கே ஏழு பேரும் ஆற்றில் குளிக்க இறங்கினார்கள்.
"மிஸ்... தண்ணீர் ஜில்லுன்னு செம சூப்பராக இருக்கிறது. இங்கே இப்படியே குளித்து கொண்டே இருக்கலாம் போல் இருக்கிறது" என்றாள் பிரதீபா.
"மிஸ்... இந்த மீன்கள் எல்லாம் என்னை சுற்றி சுற்றி வருகிறது. அது என்னை கிஸ் பன்னுகிறது" என்றாள் சந்தோஷி.
தங்களை சுற்றி வரும் மீன்கள் நடுவில் ஆனந்தமாய் குளித்து விளையாடினார்கள்.
சக்தி ஆற்றில் நீர் நிலையில் மாற்றம் ஏற்பட தீடீரென்று வெள்ளம் பெருக்கெடுக்க ஏழு பேரும் நிலை குலைந்தார்கள்.
என்ன செய்வதென்று புரியாமல் குட்டீஸ்கள் காவ்யா,பிரதீபா, சந்தோஷி சந்தியாவை பிடித்து கொண்டு விட்டார்கள்.
ஹரிணி, ஜெயலட்சுமி உடனே திவ்யாவை பிடித்து கொள்ள அவர்களை தாங்கியபடி இரண்டு பேரும் தத்தளித்த வேலை நாணல் புற்கள் காவ்யாவின் கண்ணில் பட்டது.
"மிஸ்... அங்கே பாருங்க... நாணல் அதை பிடித்தால் நாம் தப்பித்து விடலாம்" என்று காவ்யா சொல்ல அதுவே சரி என்று அவர்களுடன் நீந்தி சென்று நாணலை பிடித்து இருவரும் பிடித்து கொண்டு விட்டார்கள்.
குட்டிஸ்கள் ஆளுக்கொரு நாணல் புல்லை உடனே பிடித்து கொண்டு விட்டார்கள்.
இரு மிஸ்களுடன் மற்றவர்கள் கரை ஏற ஹரிணி, ஜெயலட்சுமி மட்டும் அதை பிடித்தபடி கரை ஏறாமல் இருந்தார்கள்.
"மிஸ்... ஹரிணியும், ஜெய்யும் என்ன பன்றாங்க பாருங்க" என்றாள் காவியா.
சந்தியா பார்க்க அவர்கள் கரை ஏறாமல் பிடித்து கொண்டு இருப்பதை பார்த்து,
"ஹரிணி! ஜெய்! என்ன செய்து கொண்டு இருக்கீங்க" என்றாள்.
"மிஸ்... இப்படி பிடித்தபடி தண்ணியில் ரொம்ப ஜாலியாக இருக்கிறது. நீங்களும் வாங்க" என்று சிரித்தபடி இருவரும் கூறினார்கள்.
"உங்களை" என்றபடி சந்தியா அவர்களை செல்ல கோபத்துடன் முறைக்க இருவரும் உடனே சமர்த்தாக கரை ஏறிவிட்டார்கள்.
"இப்பொழுதுதான் நீங்கள் என் தங்கம்ஸ்" என்று சந்தியா சிரித்தபடி கூறினாள்.
"ஆபத்து சமயத்தில் இப்படிதான் சமயோசிதமாக காவியா மாதிரி யோசிக்க வேண்டும்" என்று திவ்யா பாராட்டினாள்.
"இவளுக்கு மட்டும் எப்படித்தான் நாணல் கண்ணில் படுகிறது என்று தெரியவில்லை. அதை வைத்து எல்லோரிடமும் நல்ல பேரு வாங்கி விடுகிறாள்" என்று ஹரிணி சொல்ல "ஆமாப்பா" என்றாள் ஜெயலட்சுமி.
சக்தி ஆற்றில் சிறிது நேரத்தில்
அமைதி ஏற்பட அனைவரும் உடனே ஆற்றில் குளிக்க இறங்கினார்கள்
ஏழு பேரையும் ஏதோ ஒரு சக்தி உள்ளே இழுக்க நீருக்கு அடியில் செல்ல தொடங்கினார்கள்.
சில நொடிகளில் ஆற்றில் நீரின் அடியில் தரையை தொட்டு நின்றார்கள்.
அங்கே நிறைய அழகான வண்ண வண்ண மீன்கள் நீந்தி கொண்டிருக்க அதை பார்த்து மிகவும் ஆச்சரியமாக பார்த்து ரசித்தார்கள்.
"மிஸ்... நாம் தண்ணிக்கடியில் வந்துவிட்டோம். இந்த இடம் செமையாக இருக்கிறது" என்றாள் ஜெயலட்சுமி.
"நாம் எப்படி இங்கே வந்தோம். நம்மை இழுத்த சக்தி எது?" என்றாள் பிரதீபா.
"எதுவென்றாலும் அந்த சக்தி வாழ்க! அது இழுக்கவில்லை என்றால் இவ்வளவு அழகான இடத்திற்கு நாம் வந்திருக்க முடியுமா" என்றாள் சந்தோஷி.
மீன்கள், பாசிகள், கூழாங்கற்கள், குடை காளான்கள், செடிகள் என்று அழகாக அந்த இடம் இருக்க அதை பார்த்தபடி அனைவரும் நடந்தார்கள்.
"எங்களை காப்பாற்றுங்கள்! எங்களை காப்பாற்ற யாராவது வாங்க!" என்ற பெண்களின் அபய குரல் அவர்களுக்கு கேட்க ஆரம்பித்தது.
"மிஸ்... யாரோ உதவி கேட்டு கத்தறாங்க. அவர்களுக்கு நாம் உதவி செய்ய வேண்டும்" என்றாள் ஹரிணி.
"மிஸ்... சத்தம் கூட நமக்கு எதிரில் இருந்த வருகிறது" என்றாள் ஜெயலட்சுமி.
ஏழுபேரும் சத்தம் எங்கே இருந்து வருகிறது என்று பாறைகளின் அருகில் நின்று கேட்க ஆரம்பித்தார்கள் Message…
சக்தி ஆறு வழக்கம் போல் சீறி பாய்ந்து ஒடிக் கொண்டிருக்க அதை பார்த்த குட்டீஸ் முகம் எல்லாம் ஆனந்தம்.
"மிஸ்... இந்த ஆற்றில் தண்ணீர் எவ்வளவு வேகமாக போகுது பாருங்க. இந்த தண்ணீரில் போட்டில் போனால் சூப்பராக இருக்கும்" என்றாள் ஹரிணி.
"மிஸ்... அங்கே பாருங்க... எவ்வளவு கலர் கலராக மீன்கள் போகுது. மீன்கள் எவ்வளவு அழகாக இருக்கிறது" என்றாள் ஜெயலட்சுமி.
"மிஸ்... இந்த ஆற்றில் முதலில் குளிக்கனும் மிஸ். இந்த மாதிரி அழகான ஆற்றில் குளிக்க சானஸ் கிடைக்கிறப்ப மிஸ் செய்ய கூடாது." என்று காவ்யா மற்றவர்கள் ஆமோதித்தார்கள்.
"எங்களுக்கு அதே ஐடியாதான். வாங்க கொஞ்சம் மிதமாக தண்ணீர் ஒடுகிற இடத்தில் சென்று குளிப்போம்" என்று திவ்யா சொல்ல சந்தியா அதை ஆமோதித்தாள்.
ஏழுபேரும் எங்கே ஆறு சற்று மிதமாக ஒடுகிறது என்று தேடி நடக்க ஆரம்பித்தார்கள்.
சிறிது நேர நடைக்குபின் ஒரு இடத்தில் ஆற்றின் வேகம் குறைந்து இருப்பதை கண்டு அங்கே ஏழு பேரும் ஆற்றில் குளிக்க இறங்கினார்கள்.
"மிஸ்... தண்ணீர் ஜில்லுன்னு செம சூப்பராக இருக்கிறது. இங்கே இப்படியே குளித்து கொண்டே இருக்கலாம் போல் இருக்கிறது" என்றாள் பிரதீபா.
"மிஸ்... இந்த மீன்கள் எல்லாம் என்னை சுற்றி சுற்றி வருகிறது. அது என்னை கிஸ் பன்னுகிறது" என்றாள் சந்தோஷி.
தங்களை சுற்றி வரும் மீன்கள் நடுவில் ஆனந்தமாய் குளித்து விளையாடினார்கள்.
சக்தி ஆற்றில் நீர் நிலையில் மாற்றம் ஏற்பட தீடீரென்று வெள்ளம் பெருக்கெடுக்க ஏழு பேரும் நிலை குலைந்தார்கள்.
என்ன செய்வதென்று புரியாமல் குட்டீஸ்கள் காவ்யா,பிரதீபா, சந்தோஷி சந்தியாவை பிடித்து கொண்டு விட்டார்கள்.
ஹரிணி, ஜெயலட்சுமி உடனே திவ்யாவை பிடித்து கொள்ள அவர்களை தாங்கியபடி இரண்டு பேரும் தத்தளித்த வேலை நாணல் புற்கள் காவ்யாவின் கண்ணில் பட்டது.
"மிஸ்... அங்கே பாருங்க... நாணல் அதை பிடித்தால் நாம் தப்பித்து விடலாம்" என்று காவ்யா சொல்ல அதுவே சரி என்று அவர்களுடன் நீந்தி சென்று நாணலை பிடித்து இருவரும் பிடித்து கொண்டு விட்டார்கள்.
குட்டிஸ்கள் ஆளுக்கொரு நாணல் புல்லை உடனே பிடித்து கொண்டு விட்டார்கள்.
இரு மிஸ்களுடன் மற்றவர்கள் கரை ஏற ஹரிணி, ஜெயலட்சுமி மட்டும் அதை பிடித்தபடி கரை ஏறாமல் இருந்தார்கள்.
"மிஸ்... ஹரிணியும், ஜெய்யும் என்ன பன்றாங்க பாருங்க" என்றாள் காவியா.
சந்தியா பார்க்க அவர்கள் கரை ஏறாமல் பிடித்து கொண்டு இருப்பதை பார்த்து,
"ஹரிணி! ஜெய்! என்ன செய்து கொண்டு இருக்கீங்க" என்றாள்.
"மிஸ்... இப்படி பிடித்தபடி தண்ணியில் ரொம்ப ஜாலியாக இருக்கிறது. நீங்களும் வாங்க" என்று சிரித்தபடி இருவரும் கூறினார்கள்.
"உங்களை" என்றபடி சந்தியா அவர்களை செல்ல கோபத்துடன் முறைக்க இருவரும் உடனே சமர்த்தாக கரை ஏறிவிட்டார்கள்.
"இப்பொழுதுதான் நீங்கள் என் தங்கம்ஸ்" என்று சந்தியா சிரித்தபடி கூறினாள்.
"ஆபத்து சமயத்தில் இப்படிதான் சமயோசிதமாக காவியா மாதிரி யோசிக்க வேண்டும்" என்று திவ்யா பாராட்டினாள்.
"இவளுக்கு மட்டும் எப்படித்தான் நாணல் கண்ணில் படுகிறது என்று தெரியவில்லை. அதை வைத்து எல்லோரிடமும் நல்ல பேரு வாங்கி விடுகிறாள்" என்று ஹரிணி சொல்ல "ஆமாப்பா" என்றாள் ஜெயலட்சுமி.
சக்தி ஆற்றில் சிறிது நேரத்தில்
அமைதி ஏற்பட அனைவரும் உடனே ஆற்றில் குளிக்க இறங்கினார்கள்
ஏழு பேரையும் ஏதோ ஒரு சக்தி உள்ளே இழுக்க நீருக்கு அடியில் செல்ல தொடங்கினார்கள்.
சில நொடிகளில் ஆற்றில் நீரின் அடியில் தரையை தொட்டு நின்றார்கள்.
அங்கே நிறைய அழகான வண்ண வண்ண மீன்கள் நீந்தி கொண்டிருக்க அதை பார்த்து மிகவும் ஆச்சரியமாக பார்த்து ரசித்தார்கள்.
"மிஸ்... நாம் தண்ணிக்கடியில் வந்துவிட்டோம். இந்த இடம் செமையாக இருக்கிறது" என்றாள் ஜெயலட்சுமி.
"நாம் எப்படி இங்கே வந்தோம். நம்மை இழுத்த சக்தி எது?" என்றாள் பிரதீபா.
"எதுவென்றாலும் அந்த சக்தி வாழ்க! அது இழுக்கவில்லை என்றால் இவ்வளவு அழகான இடத்திற்கு நாம் வந்திருக்க முடியுமா" என்றாள் சந்தோஷி.
மீன்கள், பாசிகள், கூழாங்கற்கள், குடை காளான்கள், செடிகள் என்று அழகாக அந்த இடம் இருக்க அதை பார்த்தபடி அனைவரும் நடந்தார்கள்.
"எங்களை காப்பாற்றுங்கள்! எங்களை காப்பாற்ற யாராவது வாங்க!" என்ற பெண்களின் அபய குரல் அவர்களுக்கு கேட்க ஆரம்பித்தது.
"மிஸ்... யாரோ உதவி கேட்டு கத்தறாங்க. அவர்களுக்கு நாம் உதவி செய்ய வேண்டும்" என்றாள் ஹரிணி.
"மிஸ்... சத்தம் கூட நமக்கு எதிரில் இருந்த வருகிறது" என்றாள் ஜெயலட்சுமி.
ஏழுபேரும் சத்தம் எங்கே இருந்து வருகிறது என்று பாறைகளின் அருகில் நின்று கேட்க ஆரம்பித்தார்கள் Message…