snehasree
SM Exclusive
சக்திபுரம் கோட்டைக்குள் நுழைந்த ஏழு பேரும் அங்கு மக்கள் நிறைய இருப்பதை கண்டார்கள்.
கோட்டையின் பெரும் பகுதிகள் காலத்தால் அழிக்கப்பட்டு எஞ்சிய சிதிலங்களாக சுவர்கள் மட்டும் இருந்தன. பழங்கால பாரம்பரியத்தின் எச்சங்களாக இருந்த அந்த பாறை கற்களால் ஆன சுவர்கள் வலுவான நிலையில் இருந்து வந்தன.
கிராம மக்களுக்கு அங்கிருந்த அம்மன் சிலைகளை வழிபட வேண்டும் என்பதால் அம்மன் சன்னதி முன்னே பெரும் கூட்டம் நின்றிருந்தது.
அன்று அம்மனுக்கு புத்தாடை அணிவித்து சிறப்பு அபிசேகஷம், பூஜைகள் செய்து அலங்காரம் செய்து வழிபட்டனர்.
சந்தியா, திவ்யாவுடன் ஐவரும் அம்மனை வழிபட்டுவிட்டு அங்கிருந்து சென்று கோட்டை வாசல் வழியே சென்று அங்கு இருந்த அம்மனை வழிபட்டு விட்டு பின்னர் மறுபடியும் கோட்டைக்குள் வந்தார்கள்.
கோட்டையை சுற்றி சுற்றி பார்த்த ஐந்து வாண்டுகளும் சுவர்களை பார்த்து வியந்த வண்ணம் இருந்தார்கள்.
சந்தியாவும், திவ்யாவும் மிக கவனமாக அவர்கள் அருகிலே நடந்து வந்தபடி பார்த்தார்கள்.
ஐவர் அணி அவர்களுக்கு அதிகம் தொல்லை தராமல் அமைதியாக நடந்து வந்தார்கள்.
இறுதியாக ஒரு இடத்தில் ஐந்து குட்டீஸ் அமர்ந்து கொள்ள அவர்களின் இருபக்கத்தில் சந்தியாவும் திவ்யாவும் அமர்ந்து கொண்டார்கள்.
"தங்கம்ஸ்... கோட்டையை நன்றாக பார்த்து விட்டீர்களா?" என்றாள் சந்தியா.
"பார்த்துட்டோம் மிஸ் ஆனால் எங்களுக்கு திருப்தி இல்லை" என்றாள் ஹரிணி.
"ஆமாம் மிஸ். நாங்கள் நிறைய இமேஜின் செய்து வந்தோம். இங்கே எதுவும் இல்லை மிஸ்" என்றாள் காவ்யா.
"சுவர்தான் இருக்கு மிஸ். அது கூட ஸ்டராங்கா இல்லை. இங்கே சிலை, டிராயிங் எதுவும் இல்லை." என்றாள் பிரதீபா.
"அம்மன் சாமியை வழிபட மட்டும்தான் முடிந்தது மிஸ்" என்றாள் ஜெயலட்சுமி.
"மிஸ் இங்கே ராஜா ராணி எல்லாம் இருந்ததாக கதையில் சொல்கிறார்கள். நாங்கள் பார்த்த சினிமா படங்களில் நிறைய காட்டினார்கள். இங்கே வந்து பார்த்தால் அதற்கான எந்த அடையாளமும் தெரியவே இல்லை" என்றாள் சந்தோஷி.
குழந்தைகள் கண்ணாடி போன்ற மனம் உடையவர்கள். அதில் கள்ளம், கபடம் எதுவும் இருக்காது. அவர்கள் மனதில் பட்டதை அப்படியே பேசி விடுவார்கள். அவர்கள் மனதை முகம் பிரதிபலிக்கும்.
அவர்களின் கவலையை மாற்ற எண்ணம் கொண்டாள் திவ்யா.
"செல்லம்ஸ்... இங்கே எல்லாம் இருந்ததிக்கும்டா... அதெல்லாம் கால போக்கில் பூகம்பம், புயல், வெள்ளம், மழை, அந்தியர் படை எடுப்பில் இடிக்கபட்டது என்று பல காரணங்களால் அழிந்து விட்டது. மீதம் இருக்கும் இந்த கோட்டை சுவர்கள் அதன் வரலாற்றை சொல்லி கொண்டு இருக்கிறது" என்றாள் திவ்யா.
"ஆமா தங்கம்ஸ் திவ்யா மிஸ் கரெக்டா சொல்லிட்டாங்க. இங்கே நந்தவனம். அரச சபை, குளம். மாளிகைகள், ஆயத கிடங்கு, குதிரை லாயம், வசந்த மண்டபம், கஜானா, தானிய கிடங்குகள் என்று எல்லாம் இருந்திருக்கும். வரலாற்று புத்தகங்களில் இதைபற்றி சொல்லி இருக்கிறார்கள். கதைகள், படங்கள் இதை வைத்து எழுதி இருக்கிறார்கள். மிஸ் சொன்னமாதிரி அழிந்து விட்டது." என்றாள் சந்தியா.
"மிஸ்... நாங்களும் அதை எல்லாம் அருந்ததி, பாகுபலி மாதிரி சினிமா படங்களில் பார்த்திருக்கோம். அதை பார்த்து அதுமாதிரி இருக்குமா என்று பார்க்க வந்தோம். இங்கே அப்படி எதுவும் இல்லை" என்று சோக கூறினாள் சந்தோஷி.
ஹரிணி எல்லோரும் பேசுவதை கவனித்து கொண்டே அருகில் இருந்த மண்ணில் கையை வைத்து கிளறி கொண்டும் இருந்தாள்.
"ஆமா தோஷி... எனக்கும் உன் பீலீங்க்தான்" என்றாள் பிரதீபா.
"செல்லம்ஸ்... எனக்கும் சேம் பீலீங்ஸ்" என்றாள் சந்தியா.
மண்ணை கிளறி கொண்டிருந்த ஹரிணி கையில் ஏதோ ஒரு பொருள் சிக்கியது. அது ஒரு சிறிய உருளை வடிவிலான குச்சி மாதிரி இருந்தது. அதை கையில் எடுத்து பார்த்தாள்.
மேஜிக்காரர்களின் கைகளில் இருக்கும் மேஜிக் வாண்ட் அளவில் இருந்தது. மண்ணை தட்டிவிட்டு கையில் வைத்து கொண்டாள்.
"மிஸ்... டைம் மெசின் மாதிரி ஏதாவது நம்மிடம் இருந்தால் நாம் அதன் மூலம் அந்த காலத்திற்கு போய் இந்த கோட்டை அப்பொழுது எப்படி இருந்ததது என்று பார்த்து வரலாம்" என்றாள் காவ்யா.
"நம்மிடம் மேஜிக் வாண்ட் இருந்தால் உடனே அதை பயன்படுத்தி போய் விடலாம்" என்றாள் ஜெயலட்சுமி.
"ஆமா ஜெய் சொல்றது சரிதான் ஆனால் நம்மிடம் எதுவும் இல்லை. நாம் என்ன செய்வது? இப்படி பேசத்தான் முடியும்" என்றாள் சந்தோஷி.
"தோஷி! இந்தா நீ கேட்ட மேஜிக் வாண்ட். பிடித்து கொள்" என்று ஹரிணி வீச சந்தோஷி பிடித்து கொண்டாள்.
சந்தோஷி அதை பார்த்து விட்டு, "ஏய் ஹரிணி... இது உனக்கு மேஜிக் வாண்டா" என்றாள்.
"சும்மா நினைத்து கொள்ளுடி... எங்கே மந்திரம் போட்டு அந்த காலத்துக்கு போக வை" என்றாள் ஹரிணி.
Message…
கோட்டையின் பெரும் பகுதிகள் காலத்தால் அழிக்கப்பட்டு எஞ்சிய சிதிலங்களாக சுவர்கள் மட்டும் இருந்தன. பழங்கால பாரம்பரியத்தின் எச்சங்களாக இருந்த அந்த பாறை கற்களால் ஆன சுவர்கள் வலுவான நிலையில் இருந்து வந்தன.
கிராம மக்களுக்கு அங்கிருந்த அம்மன் சிலைகளை வழிபட வேண்டும் என்பதால் அம்மன் சன்னதி முன்னே பெரும் கூட்டம் நின்றிருந்தது.
அன்று அம்மனுக்கு புத்தாடை அணிவித்து சிறப்பு அபிசேகஷம், பூஜைகள் செய்து அலங்காரம் செய்து வழிபட்டனர்.
சந்தியா, திவ்யாவுடன் ஐவரும் அம்மனை வழிபட்டுவிட்டு அங்கிருந்து சென்று கோட்டை வாசல் வழியே சென்று அங்கு இருந்த அம்மனை வழிபட்டு விட்டு பின்னர் மறுபடியும் கோட்டைக்குள் வந்தார்கள்.
கோட்டையை சுற்றி சுற்றி பார்த்த ஐந்து வாண்டுகளும் சுவர்களை பார்த்து வியந்த வண்ணம் இருந்தார்கள்.
சந்தியாவும், திவ்யாவும் மிக கவனமாக அவர்கள் அருகிலே நடந்து வந்தபடி பார்த்தார்கள்.
ஐவர் அணி அவர்களுக்கு அதிகம் தொல்லை தராமல் அமைதியாக நடந்து வந்தார்கள்.
இறுதியாக ஒரு இடத்தில் ஐந்து குட்டீஸ் அமர்ந்து கொள்ள அவர்களின் இருபக்கத்தில் சந்தியாவும் திவ்யாவும் அமர்ந்து கொண்டார்கள்.
"தங்கம்ஸ்... கோட்டையை நன்றாக பார்த்து விட்டீர்களா?" என்றாள் சந்தியா.
"பார்த்துட்டோம் மிஸ் ஆனால் எங்களுக்கு திருப்தி இல்லை" என்றாள் ஹரிணி.
"ஆமாம் மிஸ். நாங்கள் நிறைய இமேஜின் செய்து வந்தோம். இங்கே எதுவும் இல்லை மிஸ்" என்றாள் காவ்யா.
"சுவர்தான் இருக்கு மிஸ். அது கூட ஸ்டராங்கா இல்லை. இங்கே சிலை, டிராயிங் எதுவும் இல்லை." என்றாள் பிரதீபா.
"அம்மன் சாமியை வழிபட மட்டும்தான் முடிந்தது மிஸ்" என்றாள் ஜெயலட்சுமி.
"மிஸ் இங்கே ராஜா ராணி எல்லாம் இருந்ததாக கதையில் சொல்கிறார்கள். நாங்கள் பார்த்த சினிமா படங்களில் நிறைய காட்டினார்கள். இங்கே வந்து பார்த்தால் அதற்கான எந்த அடையாளமும் தெரியவே இல்லை" என்றாள் சந்தோஷி.
குழந்தைகள் கண்ணாடி போன்ற மனம் உடையவர்கள். அதில் கள்ளம், கபடம் எதுவும் இருக்காது. அவர்கள் மனதில் பட்டதை அப்படியே பேசி விடுவார்கள். அவர்கள் மனதை முகம் பிரதிபலிக்கும்.
அவர்களின் கவலையை மாற்ற எண்ணம் கொண்டாள் திவ்யா.
"செல்லம்ஸ்... இங்கே எல்லாம் இருந்ததிக்கும்டா... அதெல்லாம் கால போக்கில் பூகம்பம், புயல், வெள்ளம், மழை, அந்தியர் படை எடுப்பில் இடிக்கபட்டது என்று பல காரணங்களால் அழிந்து விட்டது. மீதம் இருக்கும் இந்த கோட்டை சுவர்கள் அதன் வரலாற்றை சொல்லி கொண்டு இருக்கிறது" என்றாள் திவ்யா.
"ஆமா தங்கம்ஸ் திவ்யா மிஸ் கரெக்டா சொல்லிட்டாங்க. இங்கே நந்தவனம். அரச சபை, குளம். மாளிகைகள், ஆயத கிடங்கு, குதிரை லாயம், வசந்த மண்டபம், கஜானா, தானிய கிடங்குகள் என்று எல்லாம் இருந்திருக்கும். வரலாற்று புத்தகங்களில் இதைபற்றி சொல்லி இருக்கிறார்கள். கதைகள், படங்கள் இதை வைத்து எழுதி இருக்கிறார்கள். மிஸ் சொன்னமாதிரி அழிந்து விட்டது." என்றாள் சந்தியா.
"மிஸ்... நாங்களும் அதை எல்லாம் அருந்ததி, பாகுபலி மாதிரி சினிமா படங்களில் பார்த்திருக்கோம். அதை பார்த்து அதுமாதிரி இருக்குமா என்று பார்க்க வந்தோம். இங்கே அப்படி எதுவும் இல்லை" என்று சோக கூறினாள் சந்தோஷி.
ஹரிணி எல்லோரும் பேசுவதை கவனித்து கொண்டே அருகில் இருந்த மண்ணில் கையை வைத்து கிளறி கொண்டும் இருந்தாள்.
"ஆமா தோஷி... எனக்கும் உன் பீலீங்க்தான்" என்றாள் பிரதீபா.
"செல்லம்ஸ்... எனக்கும் சேம் பீலீங்ஸ்" என்றாள் சந்தியா.
மண்ணை கிளறி கொண்டிருந்த ஹரிணி கையில் ஏதோ ஒரு பொருள் சிக்கியது. அது ஒரு சிறிய உருளை வடிவிலான குச்சி மாதிரி இருந்தது. அதை கையில் எடுத்து பார்த்தாள்.
மேஜிக்காரர்களின் கைகளில் இருக்கும் மேஜிக் வாண்ட் அளவில் இருந்தது. மண்ணை தட்டிவிட்டு கையில் வைத்து கொண்டாள்.
"மிஸ்... டைம் மெசின் மாதிரி ஏதாவது நம்மிடம் இருந்தால் நாம் அதன் மூலம் அந்த காலத்திற்கு போய் இந்த கோட்டை அப்பொழுது எப்படி இருந்ததது என்று பார்த்து வரலாம்" என்றாள் காவ்யா.
"நம்மிடம் மேஜிக் வாண்ட் இருந்தால் உடனே அதை பயன்படுத்தி போய் விடலாம்" என்றாள் ஜெயலட்சுமி.
"ஆமா ஜெய் சொல்றது சரிதான் ஆனால் நம்மிடம் எதுவும் இல்லை. நாம் என்ன செய்வது? இப்படி பேசத்தான் முடியும்" என்றாள் சந்தோஷி.
"தோஷி! இந்தா நீ கேட்ட மேஜிக் வாண்ட். பிடித்து கொள்" என்று ஹரிணி வீச சந்தோஷி பிடித்து கொண்டாள்.
சந்தோஷி அதை பார்த்து விட்டு, "ஏய் ஹரிணி... இது உனக்கு மேஜிக் வாண்டா" என்றாள்.
"சும்மா நினைத்து கொள்ளுடி... எங்கே மந்திரம் போட்டு அந்த காலத்துக்கு போக வை" என்றாள் ஹரிணி.
Message…