[
Thanks a lot padma ???super udi riha
Thanks a lot padma ???super udi riha
harini....?????Divi ka????...innum neenga thoongalaya ..eppadi irukeenga ka???
Naanum dhan padma...romba romba miss pannen..time allot panna mudiyama poiduchu..inime regular ah meet pannuvom???super udi riha
misssing u soooooo muchhhhh
hmmmmm ok da chlmNaanum dhan padma...romba romba miss pannen..time allot panna mudiyama poiduchu..inime regular ah meet pannuvom???
Ada yaaru pa idhu ennai kalakkanum ne vandha maari irukuYaruppa ithu engayoaaaaa ketta kuralaaaaa iruku
Hahaha...neenga eppavume crt entry dhan divi ka ????...harini....?????
Ippo than paiyankitta irundhu mob vanginen da... Correct time entry koduthurukken pola... Really happy da...
And thanks too... Ivalo busylayum engalukaga krish ah kuttitu vandhathuku....
அப்பொழுது அவனின் ஃபோன் ஒலிக்க , அதே வேகத்துடன் அழைப்பை எடுத்தான் ரஞ்சித் .
" இன்னும் ஒரு ஒன் மினிட்டுக்குள்ள என் கேபினுக்கு வா "
என்று அவனின் பதிலைக் கூட எதிர்பாராமல் வைத்துவிட்டான் கிருஷ் .
ஒட்டுமொத்த குரோதமும் கும்மியடிக்க , ரஞ்சித் வேகமாக சென்றான் .
கதவைக் கூடத் தட்டாமல் உள்ளே வந்த ரஞ்சித்தைக் கண்ட கிருஷ் ,
" இட்ஸ் ஒன் மினிட் அண்ட் 5 செகண்ட்ஸ் . கெட் அவுட் . நான் சொல்றப்போ கரெக்ட்டா திரும்ப வா . வரும்போது கதவை தட்டிட்டு வா. இல்லனா திரும்ப வெளிய போக வேண்டி இருக்கும் "
என்று சொல்லிவிட்டுத் தன் வேலையை கவனிக்கத் துவங்கினான் .
" டேய் , சாவடிச்சிடுவேன் பாத்துக்கோ . என்னடா ஆட்டிட்யூட் காட்டறியா ? ரொம்ப ஓவரா தான் பண்ணற . இதுக்கெல்லாம் சேர்த்து வெச்சு இருக்கு பாரு "
" நீ லேட் பண்ணற ஒவ்வொரு செகண்டும் உனக்கு தான் தம்பி லாஸ் "
அவனைப் பாராமலேயே கூறிய கிருஷை இயலாமையுடன் நோக்கியவன் இறுக்கத்துடன் வெளியேறினான் .
அடுத்த நொடியே ரஞ்சித்தை அழைத்த கிருஷ் ,
" இன்னும் 5 செகண்ட்ஸ்ல உள்ள வா . டோன்ட் டிலே "
என்று சொல்லிவிட்டு ரஞ்சித்தை சோதித்தான் .
இம்முறை சரியாக உள்ளே வந்துவிட்டான் ரஞ்சித் .
மெலிதாகப் புன்னகைத்த கிருஷ் , கால் மேல் கால் போட்டு அமர்ந்தான் .
ரஞ்சித் உட்கார ஒரு நாற்காலி கூட போடப்படவில்லை .
சுற்றும் முற்றும் திரும்பிப் பார்த்த ரஞ்சித்திடம் ,
" நேரா நில்லு , அப்பறமா சொல்லு . எதுக்கு என்னைப் பார்க்க வந்த ? "
டேபிளின் மேல் கையை ஊன்றியபடி நேராக கிருஷ்ஷை முறைத்த ரஞ்சித் ,
" ரொம்ப அவமானப் படுத்த நினைக்கற டா நீ . என்ன நடக்குதுன்னு உனக்குத் தெரியாதா?"
உறுமலாய் வினவ , அவனின் செய்கையை ரசித்தபடியே பின்னால் நன்கு சாய்ந்து அமர்ந்த கிருஷ் .
" ரொம்ப சூடா இருக்க போல . ஒரு சோடா சொல்லவா ! "
என்று சிரித்தான் .
கண்களை இறுக மூடி , கோபத்தை கட்டுக்குள் கொண்டு வரப் பார்த்தான் ரஞ்சித் . ஆனால் முடிந்தால் தானே ..
அவனை மேலும் படுத்தி எடுக்காமல் , ஒருவன் நாற்காலி போட வேண்டா வெறுப்பாக அதில் அமர்ந்தான் ரஞ்சித்.
" சரி , இப்ப நம்ம ஒரு கேம் ஆடலாம் . நீ வின் பண்ணிட்டா இனிமே உன் வழில நான் வர மாட்டேன் . நான் வின் பண்ணிட்டா உனக்கு வேற வழியே இல்லாம பண்ணிடுவேன் . டீலா !!"
கூர்மையான பார்வையை வீசிய கிருஷ்ஷின் எண்ணப்போக்கை உணர முடியாமல் தானாகத் தலையை ஆட்டினான் ரஞ்சித் .
அருகே இருந்த பெல்லை கிருஷ் அழுத்தியதும் ஒரு பெட்டியைக் கொண்டு வந்து ஒருவன் வைத்துவிட்டு சென்றான் .
" ஓபன் பண்ணு "
என்று சொல்லிவிட்டு அவனையே பார்த்துக் கொண்டிருந்தான் கிருஷ்.
ரஞ்சித் அதைத் திறந்து உள்ளே இருந்து அவர்கள் விளையாடப் போகும் ஆட்டத்தை எடுத்தான் .
" லூடோ வா ? "
ரஞ்சித் கேட்க ,
" பார்த்தா எப்படி இருக்கு ? லூடோ தான் . ஆனா கொஞ்சம் வேற மாதிரி ஆடப் போறோம் "
என்று கிருஷ் புன்னகைத்தான் .
" இப்ப இது ரொம்ப முக்கியமா உனக்கு ? நான் எவ்ளோ பெரிய பிரச்சனைல இருக்கேன் . நீ என்ன காமெடி பண்ணிட்டு இருக்க . வெட்டியா விளையாடவா நான் இங்க வந்தேன் ?"
ரஞ்சித் பொங்கினான் .
" லிசன் ரஞ்சித் . உன் பிரச்சனைய சரி பண்ண தான் இந்த கேம் . சொல்றபடி பண்ணு . இல்லன்னா உனக்குத்தான் கஷ்டம் "
பின்னந்தலையைக் கோதியபடியே கிருஷ் கூறினான் .
" சரி , இப்ப என்னதான் பண்ணனும் . சொல்லித்தொலை "
எரிச்சலுடன் மொழிந்த ரஞ்சித்தை ஏளனப் புன்னகையுடன் நோக்கிய கிருஷ் ,
" கேட்டுக்கோ ... எப்பவும் போல தான் இந்த லூடோவோட ரூல்ஸ் . ஆனா ,அதுல ஒரு செக் இருக்கு . உன்னோட ஒரு காய நான் வெட்டுனா , அடுத்த 10 நிமிஷத்துல உன்னோட பேங்க் அக்கௌன்ட்ல பல லட்சம் பிளாக் மணி டெபாசிட் ஆகும் . அடுத்த காய வெட்டுனா , உன் வீட்ல மூட்டை மூட்டையா தங்கம் , வைரம் எல்லாம் கூரையை பிச்சிட்டு கொட்டும் . அடுத்த காய்க்கு உன் ஆளுங்க எல்லாம் தானாவே வந்து நீ பக்கா கேடின்னு பேட்டி தருவாங்க . நாலாவது காய்க்கு நீ மொத்தமா காலி . கேம் ஓவர் "
என்று கூற , அவனை நம்பாத பார்வை பார்த்தான் ரஞ்சித் . ஆனாலும் , உண்மையாகவும் இருக்குமோ என்று மனதின் ஓரத்தில் பயந்தான் .
காரணம் , ஏற்கனவே கிருஷ் அவனை பந்தாடிக் கொண்டு தான் இருந்தான் . வைஷாலியால் முன்பே நடுத்தெருவுக்கு வந்திருந்த ரஞ்சித் , இப்பொழுது தான் மிகவும் கஷ்டப்பட்டு தனக்கென ஒரு நிறுவனத்தைத் தொடங்கியிருந்தான் . ஆனால் , இப்பொழுதெல்லாம் அவன் யாரிடம் டீலிங் பேசினாலும் சில நாட்களுக்குள் அவனை ஏமாற்றி நஷ்டத்தை ஏற்படுத்திவிட்டு அவர்கள் சென்றுவிடுகின்றனர் .
எவ்வளவு முன்ஜாக்கிரதையாக இருந்தாலும் , அவனால் ஈடுகொடுக்க முடியவில்லை . ஆதாரம் இல்லாத சேதாரம் அவனுக்கு ஏற்பட்டது . கருப்பு ஆடு அவனுடனே இருக்கின்றது . ஆனால் , யார் அது என்று தான் அவனுக்குப் புரியவில்லை . சமீபத்தில் தான் இதனைத்திற்கும் பின்னால் கிருஷ்ஷின் கைவண்ணம் இருப்பதைக் கண்டுபிடித்தான் .
ஆனால் சோதனையே அதன் பின்னர் தான். முன்பின் தெரியாத யாரோ அவனின் பிசினஸ் ரகசியங்களை வெளியிடத் துவங்கினர் . தினமும் , குறிப்பிட்டத் தொகை அவனின் கணக்கிலிருந்து குறையத் துவங்கியது . இதை ஆராயப் போனால் , போலி ஆவணங்கள் வைத்துப் பல கோடியில் சட்டத்திற்குப் புறம்பான தொழில் செய்வதாக இவனைப் பற்றி வதந்திகள் உலவின . அதைப் பொய்யென நிரூபிக்க இயலாமல் திணறிப் போனான் அவன்.
கடைசியில் , எந்தப் பக்கம் செல்வது என்றே புரியாமல் ரஞ்சித் கிருஷ்ஷிடமே வந்து சேர்ந்தான் . இங்கே பார்த்தால் , மேலும் மேலும் கிருஷ் அவனை சோதிக்க , ரஞ்சித் மூளை மரத்துப் போனான் .
" எதுக்கு டா இப்படி எல்லாம் பண்ணிட்டு இருக்க ? நேருக்கு நேர் மோதி பாருடா . இப்படி யாரையோ விட்டு அடிக்கற ?? "
ரஞ்சித் ஆற்றாமையில் வெடித்தான் .
" ஆஹா பெரிய வீரன் இவரு , விழுப்புண் விழாம பார்த்துக்கறாரு . அவ்ளோ தைரியம் இருந்தா எதுக்கு என் தங்கச்சியை யாருக்கும் தெரியாம வந்து கெடுக்கப் பார்த்த "
கிருஷ் எழுந்து நின்று டேபிளின் மேல் ஓங்கி குத்தினான் . அவன் கூறியதைக் கேட்டு ரஞ்சித் அதிர்ச்சியில் உறைந்தான் .
" உனக்கு .. எப்படி !! "
வார்த்தைகள் வராமல் சதி செய்ய , கோபத்தில் பளாரென ரஞ்சித்தை அரை விட்டான் கிருஷ் .
" அன்னிக்கு நல்லவேளை சூர்யா வந்து காப்பாத்திட்டான் . நீ தான் தப்பிச்சு ஓடிட்ட .ஆனா , எனக்கு நீ தான் அதுன்னு கண்டுபிடிக்க ஒரு மணிநேரம் தான் ஆச்சு . எந்த வேலை செய்யவும் ஒரு வேளை வரணும் தம்பி . அதான் பாம்பேல இருந்து இந்தப் பாம்பை பாம் வச்சு பிடிக்க வந்தேன் .தெரியாம தான் கேக்கறேன் , உங்க சங்காத்தமே வேணாம்னு தான இருக்கோம் நாங்க . அப்பறமும் என்னத்துக்கு நீ விடாம தொல்லை பண்ணற . சரி , உன் வெறி அடங்கணும்னா என்கூட மோது . பொண்ணுங்க கிட்ட கேவலமா நடந்துக்கப் பாக்கறியே , அசிங்கமா இல்லையா உனக்கு ??"
" அது ஏதோ அவசரப்பட்டு பண்ணிட்டேன் . இனிமே இந்தப் பக்கமே வர மாட்டேன் ராகவ் . எல்லாத்தையும் செட்டில் பண்ணிடலாம் "
உத்தம வேடமிட்டான் ரஞ்சித் . பக்கென சிரித்த கிருஷ் ,
" நீ ஷாலுவையும் என்னையும் பிரிக்கப் பார்த்தப்போவே உன்னை கிழிச்சு தொங்க விட்டுருக்கணும் . தப்பு பண்ணிட்டேன் டா " என்க ,
" அதையெல்லாம் எதுக்கு இப்ப பேசற . நான் தான் இனிமே உன் பக்கமே வரலன்னு சொல்றேனே . வேணும்னா நானே சரி பண்ணறேன் எல்லாத்தையும் . இப்ப மட்டும் ஹெல்ப் பண்ணு "
எப்படி இருந்த ரஞ்சித் , இப்படி கெஞ்சுவதைப் பார்க்க கிருஷ்ஷிர்கே பாவமாகத் தான் இருந்தது . ஆனால் , இது உயிர் பிச்சை கேட்கும் மானாக இல்லாமல் , குட்டையை குழப்பும் குள்ளநரியாக இருந்தால் !!
" அடி வாங்குனா திருப்பி அடிக்கணும் டா . அதுதான் நம்ம பாலிசி .லெட்ஸ் பிளே ரஞ்சித் . நீ வின் பண்ணிடு , நான் விடறேன் உன்னை . இல்லன்னா நீ டோட்டல் காலி "
இரு கைகளையும் பரபரவெனத் தேய்த்த கிருஷ் , ஒரு துள்ளலுடன் அமர்ந்தான் .
இது ஒன்றும் சகுனியின் சொக்கட்டான் அல்ல , தாயம் சொன்னபடி கேட்க . விளையாட்டுத் தனமாக விளையாடுவதற்கும் , விளையாடிப் பார்க்க விளையாடுவதற்கும் வித்தியாசம் உண்டு .
காலத்தின் கயிற்றால் கட்டப்பட்ட எவரும் , அதைத் தானே அவிழ்க்க முயன்றால் , மேலும் சிக்கிக் கொள்வர் . அதைப் போலவே தான் இதுவும் . காலத்தின் போக்கில் செல்லாமல் , சும்மா இருந்த கயிறைக் குறுக்கே இழுத்தால் ?? காலம் தான் பதிலையும் சொல்லும்.
சொக்கட்டான் பார்வை தொடரும் ...
Thank u very much geetha ka?????Superb update
கதை இனிமேதான் படிக்கணும்..ஹாய் மக்களே ...எல்லாரும் நலமா !! என்னடா இவ திடீன்னு காணாம போயிட்டு ஆடி அசைஞ்சு வந்து நலமான்னு கேட்டு நக்கல் பண்ணறான்னு தப்பா நினைக்காதீங்க பா . நடுல என்னோட அலைபேசி கொலை மோடுக்கு போயிடுச்சு . அதான் , ஃபோன் டெட் ஆகிடுச்சு . அதுனால என்ன லேப்டாப் நல்லா தான இருந்திருக்கும்னு கேக்கலாம் ..தப்பில்லை .. அது நலமா என்னோட வீட்ல இருந்துச்சு . நான் தான் கொஞ்சம் வெளியூர் போயிட்டேன் ஆடிட் வேலையா ...
இதெல்லாம் காரணமா சொல்லி ud போடாம இருந்தது தப்பு தான் . மன்னிச்சூ ...எனக்குமே விட்டு விட்டு போடறதுல உடன்பாடு இல்லை . இதுவே கடைசி முறையா இருக்கும் நான் இப்படி மன்னிப்பு கேட்கறதுல . தொடர்ச்சியா வாரத்துக்கு இனிமே 2 ud போட்டு சீக்கிரமே கதையை முடிப்போம் ...
கத்தை கத்தையா கதை படிக்கணும் . 2 வாரமா வரவே இல்லை . உள்பெட்டியில் , வெட்டவெளியில் தேடிய அனைவரின் அன்புக்கும் நன்றி . கோச்சுக்காம இந்த தடவை மட்டும் ரீ- கால் பண்ணி படிங்க தோழமைகளே .. இனிமே மிஸ் பண்ணாம மிஸ். Perfect மாதிரி வருவேன் .
அடுத்த ud இதோ... இது வராக நதிக்கரையோரம் ஒரு சொக்கட்டான் பார்வையின் தொடர்ச்சி .. அதுக்கு ரிப்ளை பண்ண முடியல . ஆனா , கமெண்ட்ஸ் எல்லாம் படிச்சேன் . காவ்யாவும் சொன்னா என்ன நடந்துச்சு கமெண்ட்லன்னு ... கமெண்ட் , லைக்ஸ் போட்ட அனைவர்க்கும் நன்றிகள் பல பல ... தனியா இது நாள் வரைக்கும் எல்லாரையும் சமாளிச்ச என் டார்லிங் காவ்யாவிற்கு தனி லவ்???...