ஹாய் பிரிண்ட்ஸ்,
நேற்றைய யூடியில் எல்லோரையுமே கதற வைத்துவிட்டேன்.. இனிமேல் மினியின் முடிவு என்னவாக இருக்கும் என்று நீங்க நினைக்கிறீங்கன்னு எனக்கு தெரியல.. பட் மதன் செய்த காரியத்தில் நால்வரின் வாழ்க்கையும் குறியானது உண்மை.. இதில் பிரபாவின் தவறு எதுவும் இல்லை என்பது என்னோட கருத்து.. நடந்தது ஒரு எதிர்பாராத விபத்து.. இதற்கு மேல் நான் என்ன சொல்றது.. நீங்கதான் சொல்லணும்..
சைலண்ட் ரீடர்ஸ் அண்ட் ப்ளீஸ் ஷேர் யுவர் கமெண்ட்ஸ்..
அத்தியாயம் – 32
அந்த அறையில் இருக்கும் சோபாவில் அமர்ந்து தூங்கும் அவனை கொலைவெறியுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.. அவளுக்கு போதை தெளிந்து எழுந்தும் நடப்பு புரிய தன்னுடைய உலகமே தலைகீழாக மாறிவிட்டதை உணர்ந்தவளுக்கு தலையே சுற்றியது..
ஆனால் நடந்த நிகழ்வை அவளின் மனம் ஏற்கமறுக்க, ‘அவன் வேண்டும் என்றே போதை மாத்திரையை தனக்கு கலந்து கொடுத்து கெடுத்துவிட்டான்..’ என்று நினைத்து அவன் விழிக்கும் வரை பொறுமையை இழுத்து பிடித்து சோபாவில் அமர்ந்திருந்தாள்..
முதல்நாள் இரவு தலைக்கு எறிய போதை கொஞ்சம் இறங்க தூக்கம் கலைந்து எழுந்த பிரபா முதலில் சென்று பாத்ரூம் சென்று முகம் கழுவிவிட்டு, “நேற்று என்ன நடந்தது..” என்று தீவிரமாக சிந்தித்தான்..
முதல் முறை என்பதாலோ என்னவோ அவனுக்கு முதல் நாள் இரவு நடந்தது ஏதும் நினைவு வரவில்லை.. ஆனால் மினியின் மீது தடுமாறி விழுந்தது மற்றும் இன்று உடலில் ஏற்பட்ட சில மாற்றங்கள் அவனின் நேற்று நடந்த நிகழ்வை உணர்த்தியது..
“போதைல என்ன காரியம் பண்ணி வெச்சிருக்கேன்..” என்று தலையில் அடித்துகொண்டு வேகமாக பாத்ரூம் விட்டு வெளியே வந்தான்..
அவன் எழுந்து பாத்ரூம் சென்று திரும்பும் வரையில் பொறுமையாக இருந்தவள், “ஏண்டா என்னை இப்படி செஞ்ச..” என்று அவனை பலமாகத் தாக்கினாள்..
அவளுக்கு இருந்த கொலைவெறியில் அவனை அடித்தே சாய்த்துவிட நினைத்தாள்.. அவனுக்கு கராத்தே தெரியும், அவளை திரும்ப தாக்க அவனுக்கு ஒரு நிமிடம் போதும்.. ஆனால் அவள் அடிப்பட்ட புலி என்ற ஒரே காரணத்திற்காக அவள் அடித்து முடிக்கும் வரையில் தன்னுடைய கரங்களை கட்டுப்பாட்டில் வைத்து பொறுமையாக நின்றான்..
“என்னடா செய்யறது எல்லாம் செஞ்சிட்டு மரம் மாதிரி நிற்கிற.. நான் நேற்றே உன்னிடம் சொன்னேன் இல்ல.. எனக்கு மதனைத்தான் பிடிச்சிருக்குன்னு.. அப்புறம் எதற்கு எனக்கு மாத்திரை கலந்து கொடுத்து இப்படி செஞ்ச..” என்றவள் அடிப்பட்ட புலியாக சீறினாள்..
அவள் வேறு எது சொல்லிருந்தாலும் பிரபா வாய் திருந்திருக்க மாட்டான்.. ஆனால் அவனின் மீது பலி போடுவதை அவனால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை..
“நான் உனக்கு மாத்திரை கலந்து கொடுக்கல.. எனக்கு அப்படி ஒரு அவசியமில்ல.. எனக்கு உன்மேல அந்த மாதிரி தாட் இல்ல.. அப்படி பார்த்த எனக்கும் யாரோ மாத்திரை போட்டு கொடுத்திருக்காங்க.. அதை பற்றியும் யோசி.. சும்மா என்மேல் பலி போடாதே..” என்றவன் உண்மையை அவள் உணர்த்திட அவளின் கை அடிப்பதை நிறுத்தியது..
“ஆமா நீ சொல்றதும் உண்மைதான்.. உன்னோட மனசில ஒரு பொண்ணு இருக்கும் பொழுது நீ இவ்வளவு கீழ்த்தரமாக நடந்து கொள்ள வேண்டிய அவசியம் உனக்கு இல்ல..” என்றவள் தீவிரமாக சிந்திக்க படுக்கையில் அமர்ந்தான்..
‘இப்படியொரு கேவலமான விஷயம் பண்ணிட்டு மதனோட முகத்தில் நான் எப்படி முழிப்பேன்..’ என்று நினைத்தவனுக்கு ஜெயாவின் முகம் நினைவு வர, ‘என்னோட மனசு நிறைய காதல் இருந்தும் உனக்கு மனசறிந்து நான் துரோகம் பண்ணல ஜெயா..’ என்றவனின் கண்கள் அவனையும் மீறி கலங்கியது..
இதுவரை தவறே செய்து தண்டனை வாங்கிய அனுபவம் அவனுக்கு இல்லை.. அதுவும் உயிருக்குள் இருக்கும் காதலியை மறந்து அந்த இடத்தில் வேறொரு பெண்ணை நினைக்க முடியாது என்று அவன் உணர்ந்தான்..
‘நான் ஏன் உன்னை முன்னாடியே சந்திக்க முடியாமல் போனதுக்கு காரணம்.. நீ எனக்கு கிடைக்க மாட்ட என்ற நிதர்சனத்தை உணர்த்தவா.. நான் உன்னை சந்திக்காமல் இருந்திருக்கலாம் ஜெயா.. இனிமேல் எந்த முகத்துடன் உன் முன்னாடி வந்து நிற்பேன்.. ஜெயா நீ என்னை மன்னிச்சிருடா.. நான் வேண்டும் என்று எதுவும் பண்ணல..’ என்று மனதார அவளிடம் மன்னிப்பு கேட்டான்..
அவனின் காதல் கொண்ட இதயம் வலியில் துடிக்க அவனையும் மீறி அவனின் கண்கள் கலங்கியது.. நேற்றுவரை மனதில் வைத்திருந்த காதல் இப்பொழுது கானல் நீராக மாறுவதை தடுக்க முடியாமல் மனதளவில் நொறுங்கி போனான் பிரபா.. உயிரை உருக்கும் வலியை மறக்க முடியாமல் நிதர்சனத்தை ஏற்கவும் முடியாமல் அவனின் மனம் ஊஞ்சலாடியது..
அதுவரை மதனின் நினைவு இல்லாமல் இருந்த மின்மினி சோபாவில் அமர்ந்து தீவிரமாக யோசிக்க அவளுக்கு எங்கோ பொறி தட்டியது.. நேற்று இரவில் இருந்து மதன் எங்கே போனான் என்ற சிந்தனையுடனே,
“நீ வேண்டும் என்று இந்த காரியத்தை செய்யல.. போதையில் இப்படி பண்ணிட்ட சரி.. நீ எனக்கு வேண்டும் என்றே மாத்திரை கலந்து கொடுக்கல.. அப்போ மதன் எங்கே..? அவன் எங்கே..?” என்று சிந்தனையுடன் பிரபாவின் முகம் பார்க்க, ‘எனக்கு தெரியாது..’ கையை மட்டும் அசைத்தான்..
“மகனே அவன் மட்டும் வரட்டும்.. நீ மாத்திரை கலந்து கொடுத்தாயா..? இல்ல அவனுக்கு நீ ஐடியா கொடுத்தாயா என்று தெரிஞ்சிரும்.. மினிதானே என்று சாதாரணமாக நினைச்சிட்டு இருந்தீங்களோ..” என்றவள் கொலைவெறியுடன் பேசிகொண்டிருக்க பிரபாவின் கவனம் அங்கில்லை..
அந்தநேரம் சுரேஷ் ரூமில் கண்விழித்த மதனுக்கு முதல்நாள் இரவு நடந்தது எல்லாம் நினைவு வர, “சுரேஷ்.. நான் இப்பொழுதே என்னோட ரூமிற்கு போகணும்..” என்றவன் சொல்ல, “டேய் இருடா..” என்றவன் தடுத்தான்..
“இல்லடா நான் இப்பொழுதே போகணும்..” என்றவன் நொடியும் தாமதிக்காமல் அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலின் அறைக்கு வந்தான்..
அப்பொழுது அவனின் எதிரே வந்த அந்த பேரர், “ஸார் ஸாரி ஸார்.. நேற்று குடி போதையில் ஆறு மாத்திரை கலந்து மூன்று பேருக்கும் கொடுத்துட்டேன்..” என்றதும், ‘அப்போ மூன்று பேருக்கும் போதை மாத்திரை போட்டு கொடுத்த பிரபா.. மினி..’ என்றவனின் சிந்தனைகள் எங்கோ சென்றது..
“இப்போ நான் என்ன செய்வேன்.. நான் என்ன நினைச்சேன்.. இப்போ என்ன நடந்ததோ..” என்று வெறி பிடித்தவன் போல செல்லும் அவனைப் பார்த்து, “என்ன இந்தாளு இப்படி எதுவும் பேசாமல் வெறி பிடித்தவன் போல போறான்..” என்று திட்டிவிட்டு தன்னுடைய வேலையைக் கவனிக்க சென்றான்..
அவன் நேராக சென்று மினி தங்கியிருந்த அறையின் கதவை தட்ட, “அவன்தான் வந்திருக்கான்..” என்று சுடிதாரின் துப்பட்டாவை இடுப்பில் கட்டிவிட்டு கைக்கு அடிக்க ஏதாவது கிடைக்குமா என்று தேடியவளின் விழிகளில் அங்கிருந்த வாக்கிங்ஸ்டிக் விழுந்தது..
நேற்று காலையில் யாரோ அதை மிஸ் பண்ணிவிட்டு செல்ல எடுத்து வைத்திருந்தாள்.. அது இப்பொழுது அவனுக்கு உதவியது.. அதை கையில் எடுத்துகொண்டே சென்ற மின்மினி வேகமாக கதவைத்திறந்து, “வாடா உன்னைத்தான் தேடுகிறேன்..” என்று அசடுவழிய சிரிக்க குழப்பத்துடன் அறைக்குள் நுழைந்தான் மதன்..
அங்கே பிரபாவை புரட்டிபோட்டு அடித்ததை அவனின் உடலில் இருந்த காயங்களே உணர்த்திட நடந்த விபரீதம் மதனுக்கு புரிந்தது.. நிதர்சனம் புரிந்ததும் அவனின் உலகமே தலைகீழாக மாறிவிட, ‘நான் செய்த செயலால் இவனோட வாழ்க்கை போச்சே..’ என்றவன் முன்னே வந்து நின்றாள் மின்மினி..
அவன் சிலையென நின்றிருக்க, “மதன் இந்நேரம் வரையில் நீ எங்கே போயிருந்த..” என்று சிரித்துக்கொண்டே கேட்டுவிட்டு, “டேய் அவன் என்னை போதையில் கெடுத்துட்டான்.. அவன் எனக்கு வேண்டும் என்று மாத்திரை கலந்து கொடுக்கல.. அப்போ எனக்கு போதை மாத்திரை கலந்து கொடுத்தது யாரு..” கொலைவெறியுடன் கேட்டாள்..
“நான்தான் கலந்து கொடுத்தேன்..” என்றவன் மனத்தைக் கல்லாக்கிக்கொண்டு உண்மையைச் சொல்ல, “எதுக்கு கலந்து கொடுத்த.. என்னை கெடுக்கவா..” என்று நேர்கொண்ட பார்வையுடன் இடது புருவத்தை கேள்வியாக உயர்த்தினாள் மின்மினி..
அவளின் குணம் அறியாத மதன், “நீ என்னிடம் விளையாடுகிறாயோ என்ற சந்தேகம் வந்தது.. உன்னோட மனசை தெரிஞ்சிக்க அப்படி பண்ணினேன்.. ஆனா..” என்றவன் நிறுத்திவிட, “உன்னை எல்லாம் சும்மாவே விட கூடாதுடா..” என்று அவனையும் அடி வெளுத்துவிட்டு சோபாவில் அமர்ந்தாள்..
அத்தனை அடியை வாங்கிய மதன் அமைதியாக இருக்க பிரபாவின் உயிர் அற்ற உடலாக அங்கே அமர்ந்திருக்க, “டேய் காதலிச்ச அவளிடம் நேரடிய சொல்ல வேண்டியது தானே.. அது என்னடா ஆசிட் ஊத்தறது.. அவளுக்கு போதை மாத்திரை கலந்து கொடுத்து கற்பழிக்கறது.. விருப்பம் இல்லன்னு சொன்ன ஊட ஓட துரத்தி வெட்டுவது.. ச்சீ நீங்க எல்லாம் என்ன மனுஷங்க..” என்று கோபத்துடன் கேட்டாள்..
“உனக்கு என்னை பிடிச்சிருந்தா என்னிடம் நேரடியாக வந்து சொல்ல வேண்டியதுதானே மதன்.. இப்போ அவனோட வாழ்க்கையும், உன்னோட வாழ்க்கையும், என்னோட வாழ்க்கையும் கேள்விகுறி.. இப்போ நீங்க இருவரும் ஆம்பளைங்க என்று சொல்லிட்டு போயிருவீங்க.. யாருக்குடா நஷ்டம்.. இங்கே என்னோட கற்புதான் போச்சுடா..” என்றவள் மட்டும் பேசிக் கொண்டிருந்தாள்..
“டேய் லூசுகளா வாயைத் திறந்து பேசுங்க..” என்றதும் மனத்தைக் கல்லாக்கிக்கொண்டு நிமிர்ந்த பிரபா, “மதன் என்னை மன்னிச்சிரு..” என்றதும் ஸ்டிக் எடுத்து அவன் தலையில் போட்டவள், “மன்னிப்பு கேட்காதே.. அது ஒருவார்த்தை இப்போ நடந்ததை மாறுமா.. என்னை கொலைகாரி ஆகிட்டாதே..” என்றவள் வெறியுடன் கூறினாள்..
மதன் அவனை நிமிர்ந்து பார்க்க முடியாமல் அமர்ந்திருக்க, “மினி நான்தான் தவறு செய்தேன்.. நானே உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்..” என்றதும் அவளுக்கு வந்த கோபத்தில் ஸ்டிக்கை கையில் எடுத்து அவனை மீண்டும் அடி வெளுத்துவிட்டாள்..
பிரபாவின் உடல் முழுவதும் ரத்தமென சிவக்க, “மின்மினியை நீ என்ன நினைச்ச.. மற்ற பொண்ணுங்க மாதிரி நீ என்ன செய்தாலும் பொறுமையாக தலையாட்டிவிட்டு உனக்கு கழுத்தை நீட்டுவேன் என்று நினைச்சியா..” என்றவளை மதன் நிமிர்ந்து பார்த்தான்..
“நான் மின்மினிடா.. எனக்கு நீ கொடுக்கிற வாழ்க்கை வேண்டாம்.. நான் எந்த தவறும் செய்யல.. கற்பு என்பது எனக்கு மனசில்தான் இருக்கு.. எனக்கு இந்த உடலைப்பற்றி எல்லாம் கவலையே இல்ல.. நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்க முடியாது..” என்றவளை நிமிர்ந்து பார்த்தான் பிரபா..
தன்னுடைய காதலை குழிதோண்டி புதைத்த பிரபா, “நீ என்ன முடிவு செய்தாலும் நான் அதற்கு கட்டுபடுகிறேன்.. என்னோட காதலை கூட தூக்கி எறிஞ்சிட்டு உன்னோட கழுத்தில் தாலிகட்ட நான்..” என்றவன் பேச முடியாமல் தவிப்பதை பார்த்த மதனுக்குதான் அதிகமாக வலித்தது..
நேற்றைய யூடியில் எல்லோரையுமே கதற வைத்துவிட்டேன்.. இனிமேல் மினியின் முடிவு என்னவாக இருக்கும் என்று நீங்க நினைக்கிறீங்கன்னு எனக்கு தெரியல.. பட் மதன் செய்த காரியத்தில் நால்வரின் வாழ்க்கையும் குறியானது உண்மை.. இதில் பிரபாவின் தவறு எதுவும் இல்லை என்பது என்னோட கருத்து.. நடந்தது ஒரு எதிர்பாராத விபத்து.. இதற்கு மேல் நான் என்ன சொல்றது.. நீங்கதான் சொல்லணும்..
சைலண்ட் ரீடர்ஸ் அண்ட் ப்ளீஸ் ஷேர் யுவர் கமெண்ட்ஸ்..
அத்தியாயம் – 32
அந்த அறையில் இருக்கும் சோபாவில் அமர்ந்து தூங்கும் அவனை கொலைவெறியுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.. அவளுக்கு போதை தெளிந்து எழுந்தும் நடப்பு புரிய தன்னுடைய உலகமே தலைகீழாக மாறிவிட்டதை உணர்ந்தவளுக்கு தலையே சுற்றியது..
ஆனால் நடந்த நிகழ்வை அவளின் மனம் ஏற்கமறுக்க, ‘அவன் வேண்டும் என்றே போதை மாத்திரையை தனக்கு கலந்து கொடுத்து கெடுத்துவிட்டான்..’ என்று நினைத்து அவன் விழிக்கும் வரை பொறுமையை இழுத்து பிடித்து சோபாவில் அமர்ந்திருந்தாள்..
முதல்நாள் இரவு தலைக்கு எறிய போதை கொஞ்சம் இறங்க தூக்கம் கலைந்து எழுந்த பிரபா முதலில் சென்று பாத்ரூம் சென்று முகம் கழுவிவிட்டு, “நேற்று என்ன நடந்தது..” என்று தீவிரமாக சிந்தித்தான்..
முதல் முறை என்பதாலோ என்னவோ அவனுக்கு முதல் நாள் இரவு நடந்தது ஏதும் நினைவு வரவில்லை.. ஆனால் மினியின் மீது தடுமாறி விழுந்தது மற்றும் இன்று உடலில் ஏற்பட்ட சில மாற்றங்கள் அவனின் நேற்று நடந்த நிகழ்வை உணர்த்தியது..
“போதைல என்ன காரியம் பண்ணி வெச்சிருக்கேன்..” என்று தலையில் அடித்துகொண்டு வேகமாக பாத்ரூம் விட்டு வெளியே வந்தான்..
அவன் எழுந்து பாத்ரூம் சென்று திரும்பும் வரையில் பொறுமையாக இருந்தவள், “ஏண்டா என்னை இப்படி செஞ்ச..” என்று அவனை பலமாகத் தாக்கினாள்..
அவளுக்கு இருந்த கொலைவெறியில் அவனை அடித்தே சாய்த்துவிட நினைத்தாள்.. அவனுக்கு கராத்தே தெரியும், அவளை திரும்ப தாக்க அவனுக்கு ஒரு நிமிடம் போதும்.. ஆனால் அவள் அடிப்பட்ட புலி என்ற ஒரே காரணத்திற்காக அவள் அடித்து முடிக்கும் வரையில் தன்னுடைய கரங்களை கட்டுப்பாட்டில் வைத்து பொறுமையாக நின்றான்..
“என்னடா செய்யறது எல்லாம் செஞ்சிட்டு மரம் மாதிரி நிற்கிற.. நான் நேற்றே உன்னிடம் சொன்னேன் இல்ல.. எனக்கு மதனைத்தான் பிடிச்சிருக்குன்னு.. அப்புறம் எதற்கு எனக்கு மாத்திரை கலந்து கொடுத்து இப்படி செஞ்ச..” என்றவள் அடிப்பட்ட புலியாக சீறினாள்..
அவள் வேறு எது சொல்லிருந்தாலும் பிரபா வாய் திருந்திருக்க மாட்டான்.. ஆனால் அவனின் மீது பலி போடுவதை அவனால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை..
“நான் உனக்கு மாத்திரை கலந்து கொடுக்கல.. எனக்கு அப்படி ஒரு அவசியமில்ல.. எனக்கு உன்மேல அந்த மாதிரி தாட் இல்ல.. அப்படி பார்த்த எனக்கும் யாரோ மாத்திரை போட்டு கொடுத்திருக்காங்க.. அதை பற்றியும் யோசி.. சும்மா என்மேல் பலி போடாதே..” என்றவன் உண்மையை அவள் உணர்த்திட அவளின் கை அடிப்பதை நிறுத்தியது..
“ஆமா நீ சொல்றதும் உண்மைதான்.. உன்னோட மனசில ஒரு பொண்ணு இருக்கும் பொழுது நீ இவ்வளவு கீழ்த்தரமாக நடந்து கொள்ள வேண்டிய அவசியம் உனக்கு இல்ல..” என்றவள் தீவிரமாக சிந்திக்க படுக்கையில் அமர்ந்தான்..
‘இப்படியொரு கேவலமான விஷயம் பண்ணிட்டு மதனோட முகத்தில் நான் எப்படி முழிப்பேன்..’ என்று நினைத்தவனுக்கு ஜெயாவின் முகம் நினைவு வர, ‘என்னோட மனசு நிறைய காதல் இருந்தும் உனக்கு மனசறிந்து நான் துரோகம் பண்ணல ஜெயா..’ என்றவனின் கண்கள் அவனையும் மீறி கலங்கியது..
இதுவரை தவறே செய்து தண்டனை வாங்கிய அனுபவம் அவனுக்கு இல்லை.. அதுவும் உயிருக்குள் இருக்கும் காதலியை மறந்து அந்த இடத்தில் வேறொரு பெண்ணை நினைக்க முடியாது என்று அவன் உணர்ந்தான்..
‘நான் ஏன் உன்னை முன்னாடியே சந்திக்க முடியாமல் போனதுக்கு காரணம்.. நீ எனக்கு கிடைக்க மாட்ட என்ற நிதர்சனத்தை உணர்த்தவா.. நான் உன்னை சந்திக்காமல் இருந்திருக்கலாம் ஜெயா.. இனிமேல் எந்த முகத்துடன் உன் முன்னாடி வந்து நிற்பேன்.. ஜெயா நீ என்னை மன்னிச்சிருடா.. நான் வேண்டும் என்று எதுவும் பண்ணல..’ என்று மனதார அவளிடம் மன்னிப்பு கேட்டான்..
அவனின் காதல் கொண்ட இதயம் வலியில் துடிக்க அவனையும் மீறி அவனின் கண்கள் கலங்கியது.. நேற்றுவரை மனதில் வைத்திருந்த காதல் இப்பொழுது கானல் நீராக மாறுவதை தடுக்க முடியாமல் மனதளவில் நொறுங்கி போனான் பிரபா.. உயிரை உருக்கும் வலியை மறக்க முடியாமல் நிதர்சனத்தை ஏற்கவும் முடியாமல் அவனின் மனம் ஊஞ்சலாடியது..
அதுவரை மதனின் நினைவு இல்லாமல் இருந்த மின்மினி சோபாவில் அமர்ந்து தீவிரமாக யோசிக்க அவளுக்கு எங்கோ பொறி தட்டியது.. நேற்று இரவில் இருந்து மதன் எங்கே போனான் என்ற சிந்தனையுடனே,
“நீ வேண்டும் என்று இந்த காரியத்தை செய்யல.. போதையில் இப்படி பண்ணிட்ட சரி.. நீ எனக்கு வேண்டும் என்றே மாத்திரை கலந்து கொடுக்கல.. அப்போ மதன் எங்கே..? அவன் எங்கே..?” என்று சிந்தனையுடன் பிரபாவின் முகம் பார்க்க, ‘எனக்கு தெரியாது..’ கையை மட்டும் அசைத்தான்..
“மகனே அவன் மட்டும் வரட்டும்.. நீ மாத்திரை கலந்து கொடுத்தாயா..? இல்ல அவனுக்கு நீ ஐடியா கொடுத்தாயா என்று தெரிஞ்சிரும்.. மினிதானே என்று சாதாரணமாக நினைச்சிட்டு இருந்தீங்களோ..” என்றவள் கொலைவெறியுடன் பேசிகொண்டிருக்க பிரபாவின் கவனம் அங்கில்லை..
அந்தநேரம் சுரேஷ் ரூமில் கண்விழித்த மதனுக்கு முதல்நாள் இரவு நடந்தது எல்லாம் நினைவு வர, “சுரேஷ்.. நான் இப்பொழுதே என்னோட ரூமிற்கு போகணும்..” என்றவன் சொல்ல, “டேய் இருடா..” என்றவன் தடுத்தான்..
“இல்லடா நான் இப்பொழுதே போகணும்..” என்றவன் நொடியும் தாமதிக்காமல் அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலின் அறைக்கு வந்தான்..
அப்பொழுது அவனின் எதிரே வந்த அந்த பேரர், “ஸார் ஸாரி ஸார்.. நேற்று குடி போதையில் ஆறு மாத்திரை கலந்து மூன்று பேருக்கும் கொடுத்துட்டேன்..” என்றதும், ‘அப்போ மூன்று பேருக்கும் போதை மாத்திரை போட்டு கொடுத்த பிரபா.. மினி..’ என்றவனின் சிந்தனைகள் எங்கோ சென்றது..
“இப்போ நான் என்ன செய்வேன்.. நான் என்ன நினைச்சேன்.. இப்போ என்ன நடந்ததோ..” என்று வெறி பிடித்தவன் போல செல்லும் அவனைப் பார்த்து, “என்ன இந்தாளு இப்படி எதுவும் பேசாமல் வெறி பிடித்தவன் போல போறான்..” என்று திட்டிவிட்டு தன்னுடைய வேலையைக் கவனிக்க சென்றான்..
அவன் நேராக சென்று மினி தங்கியிருந்த அறையின் கதவை தட்ட, “அவன்தான் வந்திருக்கான்..” என்று சுடிதாரின் துப்பட்டாவை இடுப்பில் கட்டிவிட்டு கைக்கு அடிக்க ஏதாவது கிடைக்குமா என்று தேடியவளின் விழிகளில் அங்கிருந்த வாக்கிங்ஸ்டிக் விழுந்தது..
நேற்று காலையில் யாரோ அதை மிஸ் பண்ணிவிட்டு செல்ல எடுத்து வைத்திருந்தாள்.. அது இப்பொழுது அவனுக்கு உதவியது.. அதை கையில் எடுத்துகொண்டே சென்ற மின்மினி வேகமாக கதவைத்திறந்து, “வாடா உன்னைத்தான் தேடுகிறேன்..” என்று அசடுவழிய சிரிக்க குழப்பத்துடன் அறைக்குள் நுழைந்தான் மதன்..
அங்கே பிரபாவை புரட்டிபோட்டு அடித்ததை அவனின் உடலில் இருந்த காயங்களே உணர்த்திட நடந்த விபரீதம் மதனுக்கு புரிந்தது.. நிதர்சனம் புரிந்ததும் அவனின் உலகமே தலைகீழாக மாறிவிட, ‘நான் செய்த செயலால் இவனோட வாழ்க்கை போச்சே..’ என்றவன் முன்னே வந்து நின்றாள் மின்மினி..
அவன் சிலையென நின்றிருக்க, “மதன் இந்நேரம் வரையில் நீ எங்கே போயிருந்த..” என்று சிரித்துக்கொண்டே கேட்டுவிட்டு, “டேய் அவன் என்னை போதையில் கெடுத்துட்டான்.. அவன் எனக்கு வேண்டும் என்று மாத்திரை கலந்து கொடுக்கல.. அப்போ எனக்கு போதை மாத்திரை கலந்து கொடுத்தது யாரு..” கொலைவெறியுடன் கேட்டாள்..
“நான்தான் கலந்து கொடுத்தேன்..” என்றவன் மனத்தைக் கல்லாக்கிக்கொண்டு உண்மையைச் சொல்ல, “எதுக்கு கலந்து கொடுத்த.. என்னை கெடுக்கவா..” என்று நேர்கொண்ட பார்வையுடன் இடது புருவத்தை கேள்வியாக உயர்த்தினாள் மின்மினி..
அவளின் குணம் அறியாத மதன், “நீ என்னிடம் விளையாடுகிறாயோ என்ற சந்தேகம் வந்தது.. உன்னோட மனசை தெரிஞ்சிக்க அப்படி பண்ணினேன்.. ஆனா..” என்றவன் நிறுத்திவிட, “உன்னை எல்லாம் சும்மாவே விட கூடாதுடா..” என்று அவனையும் அடி வெளுத்துவிட்டு சோபாவில் அமர்ந்தாள்..
அத்தனை அடியை வாங்கிய மதன் அமைதியாக இருக்க பிரபாவின் உயிர் அற்ற உடலாக அங்கே அமர்ந்திருக்க, “டேய் காதலிச்ச அவளிடம் நேரடிய சொல்ல வேண்டியது தானே.. அது என்னடா ஆசிட் ஊத்தறது.. அவளுக்கு போதை மாத்திரை கலந்து கொடுத்து கற்பழிக்கறது.. விருப்பம் இல்லன்னு சொன்ன ஊட ஓட துரத்தி வெட்டுவது.. ச்சீ நீங்க எல்லாம் என்ன மனுஷங்க..” என்று கோபத்துடன் கேட்டாள்..
“உனக்கு என்னை பிடிச்சிருந்தா என்னிடம் நேரடியாக வந்து சொல்ல வேண்டியதுதானே மதன்.. இப்போ அவனோட வாழ்க்கையும், உன்னோட வாழ்க்கையும், என்னோட வாழ்க்கையும் கேள்விகுறி.. இப்போ நீங்க இருவரும் ஆம்பளைங்க என்று சொல்லிட்டு போயிருவீங்க.. யாருக்குடா நஷ்டம்.. இங்கே என்னோட கற்புதான் போச்சுடா..” என்றவள் மட்டும் பேசிக் கொண்டிருந்தாள்..
“டேய் லூசுகளா வாயைத் திறந்து பேசுங்க..” என்றதும் மனத்தைக் கல்லாக்கிக்கொண்டு நிமிர்ந்த பிரபா, “மதன் என்னை மன்னிச்சிரு..” என்றதும் ஸ்டிக் எடுத்து அவன் தலையில் போட்டவள், “மன்னிப்பு கேட்காதே.. அது ஒருவார்த்தை இப்போ நடந்ததை மாறுமா.. என்னை கொலைகாரி ஆகிட்டாதே..” என்றவள் வெறியுடன் கூறினாள்..
மதன் அவனை நிமிர்ந்து பார்க்க முடியாமல் அமர்ந்திருக்க, “மினி நான்தான் தவறு செய்தேன்.. நானே உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்..” என்றதும் அவளுக்கு வந்த கோபத்தில் ஸ்டிக்கை கையில் எடுத்து அவனை மீண்டும் அடி வெளுத்துவிட்டாள்..
பிரபாவின் உடல் முழுவதும் ரத்தமென சிவக்க, “மின்மினியை நீ என்ன நினைச்ச.. மற்ற பொண்ணுங்க மாதிரி நீ என்ன செய்தாலும் பொறுமையாக தலையாட்டிவிட்டு உனக்கு கழுத்தை நீட்டுவேன் என்று நினைச்சியா..” என்றவளை மதன் நிமிர்ந்து பார்த்தான்..
“நான் மின்மினிடா.. எனக்கு நீ கொடுக்கிற வாழ்க்கை வேண்டாம்.. நான் எந்த தவறும் செய்யல.. கற்பு என்பது எனக்கு மனசில்தான் இருக்கு.. எனக்கு இந்த உடலைப்பற்றி எல்லாம் கவலையே இல்ல.. நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்க முடியாது..” என்றவளை நிமிர்ந்து பார்த்தான் பிரபா..
தன்னுடைய காதலை குழிதோண்டி புதைத்த பிரபா, “நீ என்ன முடிவு செய்தாலும் நான் அதற்கு கட்டுபடுகிறேன்.. என்னோட காதலை கூட தூக்கி எறிஞ்சிட்டு உன்னோட கழுத்தில் தாலிகட்ட நான்..” என்றவன் பேச முடியாமல் தவிப்பதை பார்த்த மதனுக்குதான் அதிகமாக வலித்தது..
Last edited: