• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

THAVAM 36

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
தோட்டத்தில் அமர்ந்து வானத்தை வெறித்து கொண்டு இருந்த நண்பனை கண்ட ஆல்வினுக்கும் ,பாலாஜிக்கும் --மதுராவை இன்னொரு முறை இழக்க நேரிட்டால், இழந்தால் அவன் உயிர் தங்குமா என்ற கேள்வியே அவர்கள் அடிமனதை அரித்து கொண்டு இருந்தது .ஒரு முறை அவனை மீட்டு வருவதற்குள் அவர்கள் உயிரே போய் விட்டது என்று சொன்னால் கூட மிகையல்ல .
Ilaya-Thalapathi-Vijay-HD-Photos3.jpg

முதல் முறை ட்ரெயின் வெடிகுண்டு புண்ணியம் கட்டி கொண்டது .இப்போ அவன் காதலித்த பெண்ணாலையே உயிர் போகும் மரண வலியில் துடித்து கொண்டு இருக்கிறான் .எங்கே அவனை இழந்து விடுவோமோ என்று கலங்கி நின்ற வேளையில் தான் மீண்டும் தேவதையாய் வந்து அவனை ,அவன் உயிரை ரெண்டாவது தடவையாக மீட்டு கொடுத்தாள் மதுரா.

கத்ரி நரசிம்மர் திருவிழா முடிந்து மதுராவின் கல்லுரியில் இருந்து வந்த மற்றவர்கள் கிளம்பி விட ,முகேஷ் ரெட்டி-- மேக்னாவின் அப்பா ஸ்பெஷல் பெர்மிஸ்ஸின் வாங்கி மதுரா ,விஜய் ,ஆல்வின் ,பாலாஜி ,சுபா ,ராமராஜு அவர்கள் குடும்பம் ,நரசிம்ம ரெட்டி,அவர் மனைவி ,மருமகள் ,மருமகன் என்று பலர் விசாகப்பட்டினம் போன்ற ஊர்களுக்கு சுற்றுலா சென்று விட்டு திரும்பி கொண்டு இருந்தனர் .

அவர்கள் ஏற்பாடு செய்து இருந்த கார் ரிப்பேர் ஆகி விட ,மகளின் ஆசையை மீற முடியாமல் கடைசி நொடியில் கோரோமண்டல் எக்ஸ்பிரஸ்சில் அனைவருக்கும் ராமராஜு டிக்கெட் புக் செய்தார் .பலரின் வாழ்வை முடிக்க ,பலரின் வாழ்வை அடியோடு தடம் மாற்ற அந்த கோரோமெண்டல் எக்ஸ்பிரஸ் வந்து சேர்ந்தது .


கதிரியில் இருந்து சூர்யா வேலை என்று கிளம்பி விட அது தான் அவனை மதுரா கடைசியாக பார்த்தது .அதன் பிறகு நான்கு வருடங்கள் கழித்து அவன் அலுவலகத்தில் தான் அவனை மறுமுறை அவள் கண்டது .வேலை என்று சொல்லி சென்ற அவன் வாழ்வில் விதி அவன் தந்தை மூலம் விளையாட ,சில வாரங்களில் இந்தியாவை விட்டே அவன் சென்று விட்டு இருந்தான் .நடந்த ரயில் விபத்தில் அவன் காதலி ,தோழர்கள் மாட்டியதை அவன் அறியவில்லை என்றே சொல்ல வேண்டும் .அவனுக்கு சொல்லும் நிலையிலும் யாரும் இல்லை .

விசாகப்பட்டினம் ரயில் நிலையம் :அன்று
VIZAG_Railway_station (1).jpg


"டேய் ...எங்கேடா போய் தொலைந்தே .....ட்ரெயின் கிளம்ப போகுது ......"என்றான் ஆல்வின் ஆடி அசைந்து வந்த விஜய் முதுகில் ஓங்கி ஒரு அடி வைத்து .

"ஹி ...ஹி ...."

"வழியாதே ........சகிக்கலை ...மேட்டருக்கு வா .......எதுக்கு பம்மரே ?'என்றான் ஆல்வின்

"இல்லைடா ஆல் .........ஸ்டேஷனுக்கு வெளியே ....நகை கடை பார்த்தேன்டா ....அதான் என் மதுக்கு ஒரு செயின் வாங்கலாம் என்று போனேன் ......."என்று அசடு வழிந்த விஜயை பார்த்து தலையில் அடித்து கொண்டனர் நண்பர்கள் இருவரும் .

((ஓஹ் ஆல்வின் வீட்டில் மதுரா கையில் கிடைத்த செயின் இப்படி தான் வாங்க பட்டதோ ?)

"ஏன் இதை குன்னூர் இல்லை சென்னையில் போய் வாங்கினா என்ன ........அங்கே எல்லாம் உன் முகரைக்கு விற்க மாட்டாங்களா ?"என்றான் பாலாஜி .

"இல்லைடா மில்க் பையா ......மதுரா என் மேல் கோபமா இருக்காடா ...அதான் இதை கொடுத்து லவ் சொல்லி ,அவளை கூல் செய்யலாம் என்று .....8 மணி நேரம் இருக்கு இல்லை .....அதான் ஒரு ரொமான்ஸ்சுக்காக .........."என்றான் விஜய் .

"வண்டியை நிறுத்து .............முதலில் அவ உன் மேல் கோபபடும் படி அப்படி என்னத்தை நீ செய்து தொலைச்சே ...........திருவிழாவில் இருந்து தான் உனக்கு நேரமே சரியில்லையே ...........எதையாவது செய்து அவ கோபத்தை கிளறி விட்டு இருப்பதே உனக்கு வேலையாக போச்சு ....அது போதாது என்று இப்போ என்ன செய்து வைச்சே ராசா நீயி ?"என்றான் ஆல்வின்

"சொல்லு டா ...கேட்கிறான் இல்லே ............தங்கச்சி கோப படும் படி என்ன லூசுத்தனத்தை செய்து வைத்தே .....உன் இஞ்சி தின்ன குரங்கு ரியாக்ஷன் பார்த்தா மவனே ஏதோ ஏடாகூடமா செய்து வைத்து இருக்கே ....என்னடா எருமை ?"என்றான் பாலாஜி .

"இல்லைடா கிளம்பும் முன் பேசி கொண்டு இருந்தேன் ....இருந்தேனா ......அப்போ ........நம்ம கூட ஏன் சூர்யா வரலை ...........உனக்கும் அவனுக்கும் என்ன பிரச்சனை ...........நீ அவனை லவ் செய்தாயா என்று கேட்டு வைத்தேன் ......பிசாசு மலை ஏறிடுச்சு ...........என்னம்மா அடிக்கறா ..........புத்தூர் கட்டு போட வேண்டும் போலெ இருக்கு .....ஜாக்கி சான் தங்கச்சி போல் இருக்கு ......ஐயோ அம்மா .........."என்றவன் ஸ்டேஷன் முழுவதும் ஓட அவனை விரட்டி ,விரட்டி மொத்தி எடுத்தனர் ஆல்வினும் ,பாலாஜியும் .

இதை பார்த்து தங்கள் கோச் அருகே கைகைளை கட்டி கண்களில் எரிமலை மின்ன முகத்தை திருப்பி நின்று இருந்தாள் மதுரா .

"ஏண்டா ...........தங்கச்சி இடத்தில நான் இருந்தேன் உன்னை சாவடிச்சி இருப்பேன் ....ஏதோ தங்கச்சியா இருக்க போய் அடியோடு விட்டுச்சு .........ஏண்டா நீயும் அந்த சூர்யாவும் என்ன சைக்கோவா ............அவன் எப்போ பார்த்தாலும் ,"நீ கருணாவை லவ் செய்யறியா ?"என்று கேட்கிறான் ...நீயும் அவனை மாதிரியே எப்போ பார்த்தாலும் ,"நீ சூர்யாவை லவ் செய்யறீயா ?"என்று கேட்டு வைக்கிறே .....லூசாடா நீங்க ரெண்டு பேரும் ????ஏன்டா அந்த புள்ளையை போட்டு மாத்தி மாத்தி படுத்தி எடுக்கறீங்க .....உங்களை எல்லாம் ஷோகேஸ்சில் தாண்டா வைக்கணும் .....திருமணம் செய்து ,இன்னும் புள்ளை குட்டி ,பேரன் ,பேத்தி எல்லாம் எடுத்த பிறகு கூட இந்த கேள்வியை நீ விட மாட்டே அப்படி தானே ....போடா .....வாயில் பச்சையா ஏதாவது வந்துட போகுது ......"என்றான் ஆல்வின் கடுப்பாக .

"இல்லைடா .............கேட்டது தப்பு தான்னு புரியது ...ஆனா அவனை பத்தியே பேசிட்டு இருக்காடா .....அந்த எருமையும் சொல்லாம கொள்ளாம எஸ்ஸாகி என் உயிரை வாங்குது ....போனை கூட சுவிட்ச் ஆப் செய்துட்டு அப்படி என்ன கழட்டறான் என்று புரியலை ..........இதுவும் அவனுக்கு என்ன ஆச்சோ ...ஏது ஆச்சோ என்று பக்கத்தில் நான் ஒருத்தன் உருகி உருகி லவ் செய்வதை கண்டுக்காம புலம்பிட்டு இருந்தா மனுசனுக்கு பிபி ஏறுமா ஏறாதா .....நீயே சொல்லு ............எனக்கு மட்டும் எங்கே இருந்து தான் விதம் விதமாய் ,ரகம் ரகமாய் வில்லன்கள் வருவானுங்க என்றே தெரிய மாட்டேங்குது ...அதான் அந்த கடுப்பில் வாயை விட்டேன் ...மேடம் முருங்கை மரம் ஏறிட்டாங்க ........கூல் செய்து லவ் சொல்லலாம் என்று தான் .........."என்றான் விஜய் அசடு வழிய .

"யாரு நீயி .....லவ் ....போய் மதுரா கிட்டே சொல்ல போறே ............படையப்பா படத்தில் ரஜினி லவ் லெட்டர் எழுதி ரமேஷ் கண்ணா கிட்டே கொடுத்து அனுப்புவார் ...........அவரும் கொடுப்பார் ,கொடுப்பார் .....கொடுக்க ட்ரை செய்துட்டே இருப்பார் ...........நீயும் அதே இனம் கண்ணா ............நானும் பாலாஜியும் ஒவ்வொரு முறையும் நீ இந்த டைலொகு விடும் போது எல்லாம் பெட் கட்டுவோம் .....அதில் ஜெயிப்பது என்னவோ நானாக தான் இருந்தேன் .........உன்னாலேயே நான் பணக்காரன் ஆகிடுவேன் ராசா ....."என்றான் ஆல்வின் .

"என்னடா செய்யறது ..........மச்சியை சிங்கத்து கூட சண்டை போட சொல்லு ,கடலை குடிக்க சொல்லு ,எரிமலையில் குதிக்க சொல்லு சும்மா அசால்ட்டா செய்துடுவான் .....நெனைச்சி பார்க்கும் போது பாட்டு அருவியா கொட்டுது ...அதை சொல்ல முயலும் போது தான் ....வார்த்தை .....தான் முட்டுது ....(கமல் வாய்ஸ் )....என்னப்பா குழந்தை செய்வான் ?'என்றான் பாலாஜி .

"லவ் செய்து பாருங்கடா அப்போ புரியும் அவனவன் அவஸ்தை ..........கிட்டே போற வரை எல்லாம் நல்லா தான் இருக்கு .......கிட்டே போய்ட்டா இதயம் உசைன் போல்ட் ரேஞ்சுக்கு ஓடுது ...அது ஓடும் ஸ்பீடில் வெளியே வந்துடுமோன்னு தோணுது ...........இதுக்கே இப்படி..........கிட்டே போய் அவ முகத்தை பார்த்தாலே எல்லாம் அவுட் ஆப் போகஸ் ஆகி போகுது ...............என்ன நடக்குதுன்னே புரிய மாட்டேங்குது ........."என்றவனை பார்த்து விழுந்து விழுந்து சிரித்தனர் ஆல்வினும் ,பாலாஜியும் .

அதற்குள் மரண யாத்திரைகாண விசில் ஊத்தப்பட்டு விட அனைவரும் ட்ரெயின் ஏற அதுவும் பலரை பலிவாங்க பயணத்தை ஆரம்பித்தது .

சென்னை ,கேரளா வெள்ளம் எல்லாம் ஒரு வெள்ளமா என்று பட்டி மன்றமே நடத்தும் அளவு விஜய் விட்ட ஜொள்ளில் அந்த ட்ரெயின் படகு போலெ மிதந்து தான் போனது .நள்ளிரவு வேளை வரை மதுராவின் கோபம் தணியவில்லை .கண்களில் எரிமலையை பொங்க விட்டு அவனை வறுத்து எடுத்து கொண்டு இருந்தாள் ..அவளை சமாதானம் செய்ய விஜய் செய்த எந்த முயற்சியும் பலன் அளிக்கவில்லை .அவன் படும் பாட்டை கண்டு தங்களுக்குள் சிரித்து கொண்டு இருந்தனர் அவன் நண்பர்கள் .
mqdefault (1).jpg


நடு இரவு ரெப்பிரேஷ் செய்ய மதுரா செல்ல அவள் பின்னேயே சென்றான் விஜய் .

"மது !..............ஐம் சாரி ...................அப்படி நான் பேசி இருக்க கூடாது ..........என்னை மன்னிச்சுடும்மா .....புத்தி கெட்டு போய் அப்படி பேசிட்டேன் .....ஏன் அப்படி பேசினேன் என்று உனக்கு புரியலையா ........எல்லாம் ஒரு உரிமையில் தான் ...என்னை விட அந்த சூர்யா உனக்கு உயர்ந்தவனாகி விட்டானா என்ற பொறாமையில் ........ச்சே சொல்ல வந்ததை விட்டுட்டு நான் பாட்டுக்கு ஏதேதோ பேசிட்டு போறேன் .........ஐ LOVE "என்று அவன் ஆரம்பித்த போது கணத்த சப்தத்துடன் சுமன் வைத்த வெடிகுண்டு வெடித்ததில் பாலத்தில் சென்று கொண்டு இருந்த அந்த ரயில் தடம் புரண்டது .
 




anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
பல பெட்டிகளில் நெருப்பு வேகமாய் பரவி தூங்கி கொண்டு இருந்தவர்களை தூக்கத்திலேயே பலி வாங்கி கொண்டது .மற்றொரு புறம் பல பெட்டிகள் பாலத்தில் இருந்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் விழுந்து மூழ்க ஆரம்பித்தது .
utkal-train-accident-759-copy.jpeg


ஒரு பக்கம் நெருப்பு ,இன்னொரு பக்கம் கரை புரண்டு ஓடும் தண்ணீர் .........ரெண்டிலும் மாட்டி வெளிவர முடியாமல் உயிர்கள் ஒவ்வொன்றாய் மரணிக்க ஆரம்பித்தது .எங்கும் மரண ஓலம் .வலியில் கதறி துடித்த மக்கள் .காப்பாற்ற யாராவது வர மாட்டார்களா என்ற உயிர் போகும் கடைசி நொடி போராட்டம் .பற்றி எறிந்துவாரு வெளி வந்து விழுந்தவர்கள் .கை கால் துண்டானவர்கள் .பார்க்க முடியாத கோராமை ஒரு கூட்டத்தின் வெறி செயலால் அரங்கேறி கொண்டு இருந்தது .

55970480982d6.jpg
மதுராவும் விஜய்யும் நின்று இருந்தது கதவின் பக்கம் என்பதால் ட்ரெயின் சாய ஆரம்பித்த உடனே மதுராவை தாங்கியவாறு அவன் வெளியே குதித்து விட்டு இருந்தான் .அதனால் அவர்களுக்கு எதுவும் அப்போதைக்கு ஆகவில்லை ...சுதாரித்து எழுந்து நின்ற அவர்களின் கண் முன்னே இருந்த பயங்கரம் அவர்களை தள்ளி இருக்கவிடவில்லை .

அத்தனை மரண ஓலங்கள் கேட்ட பிறகும் தனக்கு என்ன என்று நின்று இருந்தால் அவர்கள் மனிதர்கள் இல்லையே ....தங்களால் முடிந்த அளவூ மக்களை மீட்டு எடுத்து கொண்டு இருந்தனர் .நீச்சல் தெரிந்தவர்கள் தயங்காமல் ஆற்றில் குதித்து முழ்கிய பெட்டியில் இருந்தவர்களை காக்க போராடினார்கள் .
page-26.jpg

இந்த உயிர் -மரண போராட்டத்தில் விஜய்யும் மதுராவும் வெவ்வேறு பக்கம் பிரிந்து போனார்கள் .அந்த கூட்டத்தில் ,குழப்பத்தில் யார் எங்கு இருக்கிறார்கள் என்றே புரியாத நிலை .அதற்குள் விஷயம் கேள்வி பட்டு அக்கம் பக்கம் இருந்தவர்கள் ,ரயில்வே பாதுகாப்பு படை ,காவல் துறை போன்றோர் மீட்பு பணியில் ஈடுபட்டனர் .

கை கால் அடிபட்டு ஆல்வின் பாலாஜியுடன் கணக்கில் அடங்கா மக்களை விஜய் காப்பாற்றி நிமிர்ந்த போது தான் மதுராவின் நினைப்பே அவனுக்கு வந்தது .

"மதுவை பார்த்தாயா ஆல்வின் .......?"என்றான் இதயம் பயத்தில் துடிக்க ஆரம்பிக்க .

"இல்லையேடா ..........கடைசியா எப்போ பார்த்தேன்னு கூட நினைவுக்கு வரலையே ..........."என்றான் ஆல்வின் .அடுத்த நொடி ஆளுக்கு ஒரு புறம் அவள் பெயரை உரக்க கத்தி கொண்டே சென்றனர் .

இவர்கள் வந்த பெட்டிக்கு அருகே விஜய் வரும் சமயம் ,அந்தரத்தில் தொங்கி தீ பற்றி எரிந்து கொண்டு இருந்த அந்த பெட்டியில் இருந்து இவன் பெயரை உரக்க சொல்லி கூப்பிட்டாள் மதுரா .

"விஜய் !....ஸ்ரீக்கு முதுகில் பலத்த அடி ....என்னால் முடிந்த வரை கட்டை மேல் பெட் வைத்து கட்டி இருக்கேன் ....மயக்கத்தில் இருக்கா ...........மெல்ல அவளை மேலே இழுங்க ........."என்றவள் ஸ்ரீயை தூக்கி தர விஜய் அவளை மெல்ல கீழ் இறக்கி காத்து இருந்த டாக்டர்களிடம் ஒப்படைத்தான் .

"நீ கீழே இறங்கு மது ............நெருப்பு அதிகமா இருக்கு ....ட்ரெயின் இருக்கும் பொசிஷன் சரியில்லை .......ரிஸ்க் எடுக்காதே ...இறங்கு ......"என்றான் விஜய் .

"இரு விஜய் .....நரசிம்ம தாத்தா ,பாட்டி ...அங்கிள் ,ஆன்ட்டி எல்லாம் உள்ளே தான் மாட்டிட்டு இருக்காங்க ....அவங்களை எல்லாம் அப்படியே விட்டுட்டு வர சொல்றியா என்ன .....அவங்களை காப்பாத்தணும் ......."இரு இரு ...நீ ஏறாதே .......ட்ரெயின் ஆடுது .....நான் ஒவ்வொருத்தரையா கை பிடிச்சி தூக்கி விடுறேன் ........அவங்களை வெளியே இழுத்துக்கோ .........டைம் வேஸ்ட் செய்யாதே ..........."என்றவள் மெல்ல மெல்ல நரசிம்ம ரெட்டி குடும்பத்தை ,ராமராஜு வை கை பிடித்து வெளியே அனுப்பினாள் .

வெளியே வந்தவர்களுக்கு நன்றாக அடி பட்டு இருக்க ,அதிலும் தாத்தா நரசிம்மர் மயங்கி சரிய அவரை தூக்கி கொண்டு மருத்துவம் பார்க்கும் டென்டில் சேர்த்து விட்டு விஜய் திரும்பிய சமயம் ,அவர்கள் வந்த பெட்டி பலத்த சப்தத்துடன் வெடித்தது .இந்த தடவை இந்த பெட்டியில் வைக்க பட்டு இருந்த டைம் பாம் வெடிக்க அதனருகில் இருந்தவர்கள் தூக்கி வீச பட்டார்கள் .அப்படி தூக்கி வீச பட்டவர்களில் விஜய்யும் ஒருவன் .
vlcsnap-2019-02-04-14h03m52s817.png

என்ன நடந்தது என்று புரிந்து ,எழ முடியாமல் அவன் எழுந்து ,தள்ளாடி பல முறை விழுந்து ,அவன் ட்ரெயின் அருகே செல்வதற்குள் ட்ரெயின் முற்றிலும் எரிந்து கொண்டு இருந்தது .

"மது ..............மது.........."என்ற அவன் தீனமான அலறல் பெருங்குரலாக மாறி,தீ பற்றி எரியும் ட்ரைனிற்குள் அவன் பாய முயல அவனை இழுத்து பிடித்து தடுத்து நிறுத்தினார்கள் ஆல்வினும் ,பாலாஜியும் .
 




Last edited:

anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
"விடுங்க ....விடுங்கடா ............என் ...மது ..................மது .............அவளை காப்பாத்தணும் ..........சின்ன தூசு பட்டா கூட தாங்கா மாட்டடா என் மது ....நெருப்பு எரியுதுடா ....விடுங்கடா ....அவளை காப்பாத்தணும் ....ஐயோ விடுங்கடா ......மது ...............மது .........."என்று திமிறியவனை அடக்க அவர்களால் முடியவில்லை .
c2e6085935fc2795473ab36eb1dcd417.jpg

அவர்களை கீழே தள்ளி விட்டு தீ பற்றி எரியும் பெட்டியை நோக்கி ஓடியவனின் காலை பிடித்து இழுத்தது ஒரு பெண் கரம் .

"வி .........விஜி .............விஜய் ..........."என்று ஈன சுரத்தில் வெளிவந்த பெண்ணின் குரல் கேட்டு குனித்தவனின் இதயம் துடிப்பதை நிறுத்தி விட ,பொத்தென்று அவள் அருகே விழுந்தான் அந்த பெண்ணின் நிலை கண்டு .
vlcsnap-2019-02-02-01h56m03s026.png

"விஜி .............விஜி ...............விஜய் ...................."திக்கி திணறி வந்தது அவள் குரல் .

காண்பதை நம்ப முடியாதவனாய் நெஞ்சை பிடித்து கொண்டு இருந்தவன் அவள் கைகளில் இருந்த செயின் கண்டு அலறியே விட்டான் .அது அவன் மதுராவிற்காக வாங்கிய செயின் .

"மது .............மது ............பாருடா .........விஜய் டா .............கண்ணை திறமா ...........உனக்கு ஒன்றும் இல்லை மது ......"என்றவன் முற்றிலும் எறிந்த நிலையில் இருந்த அந்த பெண்ணை தூக்கி கொண்டு ஆம்புலன்ஸ் ஏறினான் .
maxresdefault (17).jpg

அழகான அவன்தேவதையை அந்த கோலத்தில் கண்டே விஜய் உயிர் பாதி போய் விட்டது என்று தான் சொல்ல வேண்டுமோ ......

அது பெரிய ஹாஸ்பிடல் தான் என்றாலும் ஒரே சமயத்தில் 5000 பேர் அடிபட்டு வந்து சேர்ந்தால் அதை சமாளிப்பதற்குள் டாக்டர்ஸ் திணறி விட்டனர் .சிகிச்சை செய்ய செய்ய மேலும் மேலும் மக்கள் ,உறவினர் கூட்டம் வந்து கொண்டே இருந்தது .

மறுநாள் மதியம் வரை போராடிய மதுராவின் உயிர் பிரிந்தது .அதை கேட்டு அழுது புரண்டவனை டாக்டர்ஸ் செடேடிவ் ஹெவி டோஸ் போட்டு தான் சமாளிக்க முடிந்தது .அவன் கதறிய கதறலை கண்டு அங்கு இருந்தவர்களும் சேர்ந்து தான் துடித்து போனார்கள் .
அவனை ஹாஸ்பிடல் வராண்டாவிலேயே படுக்க வைத்து இருக்க ,விஷயம் கேள்வி பட்டு அழுது கொண்டு வந்த மதுராவின் பெற்றோர் துணியால் சுத்த பட்டு இருந்த மகளின் பிணத்தை தான் வாங்கி சென்றனர் .

பின்னே சென்ற இவர்கள் மதுராவின் ஈமச்சடங்கு முடியும் வரை உடன் இருந்தனர் .மதுராவின் குடும்பத்தினர் யாரிடமும் பேசும் நிலையில் இல்லை ....மயங்கி மயங்கி விழுந்த பவானியை ,கதறி துடித்த சங்கரனை கண் கொண்டு பார்க்கவே முடியவில்லை ஏற்கனவே எரிந்து போன உடல் என்பதால் அதிக நேரம் வீட்டினில் வைக்க அவர்களாலும் முடியவில்லை . இவர்கள் தங்களை பற்றி யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் திரும்பி விட்டனர் .

மதுராவின் சிதைக்கு தீ வைத்ததை கண்ட விஜய் மயங்கி விழுந்தான் .எவ்வளவூ தண்ணீர் தெளித்தும் அவன் மயக்கம் நீங்கவில்லை என்றதும் ஆல்வினும் ,பாலாஜியும் பயந்து போய் நண்பனை ஹாஸ்பிடலில் சேர்த்தனர் .விஜய்க்கு மயக்கம் நீங்கவே மூன்று நாட்கள் ஆனது .மயக்கம் தெளிந்தவன் பிரமை போலே விட்டதை கண் கூட சிமிட்டாமல் வெறித்து கொண்டு இருந்தான் .மற்றவர் பேசும் மொழியே புரியாதவன் போலெ தண்ணீர் குடிக்க ,உணவூ சாப்பிட கூட மற்றவர்கள் கட்டாயப்படுத்த வேண்டி இருந்தது .

"மது ............மது ...........என்னை விட்டு போகாதே மது ........என்னையும் கூட்டி போ ...........நானும் வரேன் மது ...உன்னை பிரிந்து என்னால் இருக்க முடியவில்லை மது .............என் செல்லம்லே .........உனக்கு தான் என் பாட்டு பிடிக்குமே ..............பாடட்டா .........."என்று இல்லதவளை நினைத்து கற்பனை செய்து பேசி ,சிரித்து ,உளறி ,பாட ஆரம்பித்தான் .

தூக்கம் என்பதே இல்லாமல் அவள் புகைப்படத்தை கையில் வைத்து கொண்டு பேசி கொண்டு பைத்தியம் போல் நடந்து கொண்டு ,கொஞ்சம் கொஞ்சமாய் இறந்தவனின் நிலை அந்த நண்பர்களை வாய் மூடி கதற வைத்தது .நடு இரவில் "மது "என்று அலறியவாறே எழுபவன் பைத்தியம் போலெ பலமுறை ஹாஸ்பிடல் வராண்டாவில் ஓடி இருக்கிறான் .

அவன் நிலை புரிந்து கொண்ட ஒரே நபர் அங்கு டாக்டர்ராய் இருந்த மிருதுளா மட்டுமே ...மனோதத்துவம் படித்த அவள் ,விஜய்யால் மதுரா இறந்த அதிர்ச்சி தாங்க முடியாமல் ,இல்லாத ஒருத்தியை இருப்பதாக உருவகம் செய்து அவளோடு வாழ்ந்து கொண்டு இருப்பதை புரிந்து கொண்டு மெல்ல மெல்ல அவனை மீட்டாள் .ஒரு வருடம் ....நீண்ட நெடிய ஒரு வருடம் ...விஜய் தேற தேவை பட்டது ....அவனை ஓர் அளவிற்கு மீட்ட நண்பர்கள் அவனிடம் உயிர்ப்பை கொண்டு வரமுடியவில்லை .கண்ணாடி பாத்திரத்தை கையாள்வது போன்றே அவனை பாதுகாத்து கொண்டு இருந்தனர் .

இதற்கிடையில் ஆல்வின் உடன் சேர்ந்து தொழிலிலும் கவனம் செலுத்த ஆரம்பித்தான் விஜய் .சிரிப்பு ,பேச்சு ,உயிர்ப்பு எல்லாம் மிஸ்ஸிங் தான் என்றாலும் இப்படியே இருந்து விட்டாலே போதும் என்ற நிலையில்தான் நண்பர்கள் இருந்தார்கள் .

இதற்கிடையில் ஹாஸ்பிடலில் ஆல்வினுக்கும் மிருதுளாவிற்கும் காதல் ஏற்பட்டு அது திருமணத்தில் முடிந்தது .ஆல்வின் விஜய் செய்த ஆடை வடிவமைப்பு நிறுவனமும் நன்றாக முன்னேறி கொண்டு இருந்தது .அது போல் நடந்த ஒரு தொழில் துறை பார்ட்டியின் போது தான் விஜய் தலைவிதி மாறி போனது .
 




anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
வந்ததில் இருந்தே இவன் ஆண்மையில் ,இவன் அழகில் மயங்கி நின்ற சோனா வழக்கம் போல் தன் சாகஸத்தை காட்ட .மேல் மேல் விழுந்து பழகி ,மூன்றாம் பிறை சில்க் மாதிரி "பொன் மேனி உருகுதே "என்ற ரேஞ்சுக்கு ரத்தம் உறிஞ்சும் அட்டையாய் ஒட்ட ,ஏற்கனவே காதலியையை தவிர மனதால் கூட இன்னொரு பெண்ணை நினைக்காமல் ஏறக்குறைய 10 வருடமாய் வாழ்ந்து வரும் அவன் ருத்ரதாண்டவம் ஆடி விட்டான் .

அங்கு அவனுக்கு நாக்கில் சனி சேர் போட்டு அமர்ந்து கொண்டது ."உன்னை எல்லாம் ரோஷம் ,மானம் எந்த ஆம்பளையும் கட்ட மாட்டான் ."என்ற வார்த்தையை இவன் விட அதுவே அவனுக்கு வினையாகி அவனையே கட்டி தீருவது என்று சோனா சபதம் எடுத்து துப்பறிவாளர்களை கொண்டு இவன் ஹிஸ்டரி ,ஜாக்ராபிஹு எல்லாம் அலசி ஆராய்ந்து ,ரூபிணி கர்ப்பத்தை தனக்கு சாதகமாக்கி கொண்டாள் .

பணத்தால் திவகரின் குடும்பத்தை அடித்து ,ரூபிணி வாழ்வில் குளறுப்பிடி செய்து விஜய் கரம் பிடித்தாள் .திருமணம் முடிந்த ஒரே மணி நேரத்தில் அவள் நடத்திய கூத்து தான் எல்லோருக்கும் தெரியுமே .விஜய் அதை பத்தி எல்லாம் கவலை படவேயில்லை என்று தான் சொல்ல வேண்டும் .வழக்கம் போல் கனவூ உலகில் அவன் மதுராவோடு டூயட் பாடி கொண்டு இருந்தான் .

சோனாவுடன் தேனிலவூ செல்ல கஜா விஜய்க்கு tour ஏற்பாடு செய்து இருந்தார் .அதற்கு நண்பர்களுடன் கிளம்பி விட்டான் விஜய் .வெளியே தெரிந்தால் மானம் போகும் என்று கஜாவும் ஒரு சாட்சிக்காக -அதாவது விஜய்யும் ,சோனாவும் ஹனிமூன் போனார்கள் என்ற பிம்பத்தை உருவாக்கி விட்டார் .`

காஷ்மீர் ----பூலோக சுவர்க்கம் என்று அழைக்க படும் இடம் ....உண்மையில் அவனுக்கு சொர்க்கமாக தான் மாறி போனது அவன் தேவதையை கண்ட பின் .

ஆல்வின் ,மிருதுளா ,பாலாஜி ,சுபா ஹோட்டல் தோட்டத்தில் அமர்ந்து பேசி கொண்டு இருக்க ,விஜய் அவர்களுக்கு தனிமை கொடுத்து ,பாடல் கேட்ட படியே ,அதை பாடி கொண்டு மதுராவோடு வாக்கிங் செல்வதாக நினைத்து சென்று கொண்டு இருந்தான்

பாடல் பாடி முடித்து திரும்பினால் அந்த பாடலில் வருவது போல் பின்னால் நண்டு சிண்டு படையுடன் அவனை வெறுப்பேத்தி விட்டு ஓடி கண் சிமிட்டும் நேரத்தில் மறைந்து போனது மதுராவே தான் .ஒரு வேளை அவளையே நினைத்து கொண்டு இருப்பதால் இப்படி தோன்றுகிறது என்று நினைத்து தன்னை தானே சமாதானம் செய்து கொண்டான் அவன் .அவன் இருந்த மனநிலைக்கு எதிரே ஓடி போனவள் கனவின் பிம்பமாக தான் தோன்றினாள் .அவன் தான் எரிந்து போன அவள் உடலை ,உயிர் அற்ற அவன் உடலை கண்டவன் ஆச்சே .....பின் எதிரே ஓடி மறைந்தவள் கனவாக தானே இருப்பாள் .....இருக்க முடியும்


நடந்ததை இவன் நண்பர்களிடம் சொல்லி சிரிக்க இவன் மனநிலையை கண்டு அவர்கள் பதற ஆரம்பித்தனர் .வந்த இடத்தில் மூளை கலங்கி பைத்தியம் பிடித்து விட்டது என்றே முடிவுக்கு வந்தனர் .

ஆனால் அவன் பைத்தியமாக இன்னும் காலம் இருக்கு என்பதை ,மறுநாளே நடந்த சம்பவம் நிரூபித்தது .ஸ்விம்மிங் பூலில் நீச்சல் அடித்து கொண்டு இருந்தவன் ஸ்விம் செய்து முடித்து மேல் வர மீண்டும் நீச்சல் குளத்திற்குள்ளேயே விழுந்தான் அதுவும் ஓடி வந்து மோதிய பெண்ணோடு .

நீரில் அமிழ்ந்து எழுந்தவன் கோபத்தோடு திரும்ப ,அவன் மட்டும் இல்லை பூல் அருகே இருந்த அவன் நண்பர்களும் தண்ணீருக்குள் இருந்து விஜய் கை வளைவில் எழுந்த அவளை கண்டு ஸ்தம்பித்து போயினார்கள் .

இவர்கள் ஆணி அடித்தார் மாதிரி நிற்க ,பூல் கரையில் இருந்து நண்டு சிண்டுகளின் கோசம் இவர்களை நினைவுக்கு வர வழைத்து .குழந்தைகளின் மத்தியில் கார்த்திக் நின்று இவளை கேலி செய்து கொண்டு இருந்தான் .

"அப்பா ...அழுக்கு மூட்டை குளிச்சாச்சு ..........கோடிஜிலா இப்படி குளிச்சா தான் உண்டு .....அழுக்கு மூட்டை .....பூசணி மூட்டை ......ஹே ஹே ..."என்று குதித்தவனை இழுத்து ஸ்விம்மிங் பூலில் தள்ளி விட்ட மதுரா வேக வேகமாக சென்று விட்டாள் .

நண்பன் பேய் அறைந்தது போல் நிற்க முதலில் சுதாரித்த ஆல்வின் மேல் ஏறி கொண்டு இருந்த கார்த்திகை நிறுத்தினான் .

"ஹலோ ப்ரோ .....இப்போ போனது மதுராக்ஷி சங்கரன் தானே .."?"என்றான் .

"யெஸ் பாஸ் அதே பிசாசு தான் ...."என்றான் கார்த்திக் .

"அவங்க ட்ரெயின் விபத்தில் இறந்து ...நாங்க கூட வந்து இருந்தோம் .....இப்போ எப்படி ."என்றான் ஆல்வின் .

"நாங்களும் அப்படி தான் நினைத்தோம் பாஸ் .ஹாஸ்பிடலில் கூட இறந்துட்டான்னு உடலை வாங்கி வந்து எல்லா சடங்கும் செய்தோம் .....ஆனால் பாருங்க ஒரு வாரம் கழித்து "அம்மா "என்று வந்து நின்றவளை பார்த்து பேய் என்று நினைத்து எங்க ஆண்ட்டி பவானி மயக்கமே போட்டு விழுந்துட்டாங்க .....செத்தா கூட பேயாக வந்தாவது உங்களை எல்லாம் torture செய்வேன் என்று ஏற்கனவே சூல் உரைத்தவ அவ பாஸ் ......அல்லு உட்டுடுச்சு ......ராகவா லாரன்ஸை பேய் ஓட்ட கூப்பிடலாமா என்று கூட யோசித்தோம் ...கடைசியில் பார்த்தா ஆவி எல்லாம் இல்லை இந்த பாவி தான் உயிரோடு வந்து இருக்குன்னு தெரிஞ்சுது ....."என்றான் கார்த்திக் .

"எப்படீங்க இவங்க உயிரோடு இருக்கும் போது இறந்து விட்டதாக ஹாஸ்பிடல் சொன்னாங்க ....போய் கேட்கலையா ...?"என்றான் ஆல்வின் .

"கேட்கலையா ....சண்டையே போட்டோம் .....ஆனா அது அவங்க தப்பு இல்லைங்க ...இவ கூட இருந்த ஏதோ ஒரு லூசு ,அரை கிறுக்கு .....யாரோ ஒருத்தங்களை இவ தான் என்று நினைத்து ஹாஸ்பிடலில் "மதுராக்ஷி "என்ற பெயரில் சேர்த்து இருக்கு .....அவங்களும் நாங்க போய் கேட்டதும் இறந்து போன பெண் தான் மதுரா என்று நினைத்து உடலை எங்க கிட்டே கொடுத்து இருக்காங்க ....எரிந்து போன உடல் என்பதால் நாங்களும் துணியை எல்லாம் அகற்றாமலே எல்லா சடங்கும் செய்து முடித்தோம் .....ஒரு வாரம் கோமாவில் இருந்தவ ,"நான் யார் ...எங்கே இருக்கேன் "என்ற டைலொகு விட்டு ,ஹாஸ்பிடலை ஒருவழியாக்கி பின்னர் குன்னூருக்கு வந்து சேர்த்தா ....ஆன்ட்டி வேறு சென்டிமெண்டா பீல் செய்தாங்க அதனால் வீடு வேற வாங்கி குடி போய்ட்டாங்க ........ஏற்கனவே அரை கிறுக்கு அது ....அடிபட்டதில் முழு கிறுக்கு ஆகி சுத்திட்டு இருக்கு .....அதான் கொஞ்சம் இங்கே எல்லாம் கூடி வந்தால் பைத்தியம் தெளியும் என்று எவ்வளவூ ட்ரை செய்யறேன் ....எங்கே ..........அடங்க மாட்டேன் என்கிறாளே ..... "என்றான் கார்த்திக் .

"நீங்க அவங்களுக்கு என்ன வேண்டும் ?"என்றான் ஆல்வின் .

"நான் கட்டிக்க போற பொண்ணு சார் மதுரா .....எனக்கும் அவளுக்கும் தான் திருமணம் ஏற்பாடு ஆகி இருக்கு ...."என்றவன் தூரத்தில் இருந்து சங்கரன் கூப்பிட ,"ஒகே பாஸ் ...மாமா கூப்பிடறார் ....பார்க்கலாம் ..."என்றவன் சென்று விட்டான் .மயங்கி சரிந்தான் விஜய்

PENANCE WILL CONTINUE....
 




Geethaselvam

அமைச்சர்
Joined
Jul 28, 2018
Messages
1,082
Reaction score
2,230
Location
chennai
Superb update Ani ma nee idhula vijay Oda love ah soli iruka aana enna pandradhu nee yepo twist ah mudichitu madhura Jodi yaru nu confirm panuviyo adhu varaikum unaku kattai parcel ah than irukum
 




ugina

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
1,193
Reaction score
1,314
Ada ponga paa innum. Yevlo fb. Irukku
Kadupaa irukku
 




abhir

புதிய முகம்
Joined
Feb 23, 2018
Messages
13
Reaction score
23
Location
india
Enakku oru doubt. Madhura oda lover dhan, Madhura kooda tour polayae. vijay, Surya rendu paerum tourkku vandha Madhiri sollaringa. Appo rendu paerum Madhura lover illaya. Shappa, mudiyala ma Anitha..
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top