• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

THAVAM FINAL--THE END

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
"அதே சமயம் ஹாக்கி ஸ்டிக் வைத்து விஜய் துரத்தி கொண்டு இருந்தாள் மதுரா பிருந்தாவனம் சென்னை வீட்டில் .

"ஏய் உன் மாமு பாவம் டீ .....ப்ளீஸ் ப்ளீஸ் செல்ல குட்டி இல்லை ...."என்று கெஞ்சி கொண்டு இருந்தான் விஜய் .

முகத்தை தூக்கி வைத்து கொண்டு அமர்ந்த மதுராவின் கையை பிடித்து கொண்டு ,"எனக்கு மட்டும் வேண்டுதலா என்னடீ .....உன்னை பிரிந்து இருக்கணும் என்று ..நான் பாடும் போது பின்னால் பிள்ளைகளுடன் நின்று வெறுப்பேத்திட்டு போனியே அப்போ எப்படி இருந்தது தெரியுமா ...அன்னைக்கு மட்டும் நீ வரவில்லை என்றால் அங்கு இருந்த மலையில் இருந்து குதித்து விடலாம் என்று தான் முடிவில் இருந்தேன் .....நீ ஸ்விம்மிங் பூல் என் கரங்களில் வந்து விழுந்தியே அப்போ எப்படி இருந்தது தெரியுமா ....அன்றைக்கு ரோடு அச்சிடேன்டில் என் உயிரை காப்பாத்திய நீயே தான் மீண்டும் உயிரோடு வந்து எனக்கு உயிர் கொடுத்தது ....உன்னை அப்படியே கைக்குள் வைத்து கொள்ள வேண்டும் என்று வெறியே வந்தது ...உன் கண்களில் எனக்கான தேடல் இல்லை ....உன் காதல் இல்லை ..அப்போ தான் உன் அம்மா கார்த்திக் அம்மா கிட்டே உனக்கு அம்னீஷியா என்று பேசிட்டு இருந்தாங்க .....என்னை நீ மறந்துட்டே என்றதும் மீண்டும் நான் செத்துட்டேன் .....உன்னை அப்படியே தூக்கி போகலாம் என்று வரும் போது தான் அந்த சோனா பிசாசு வந்துச்சு அந்த ஹோட்டலுக்கு ....கூடவே நம்ம கூட படிச்ச ரெண்டு பெண்களை இது ஒரு வழி ஆகிடுச்சு என்று news ....நான் இருப்பது நரகம் .....புதைகுழி .ஜஸ்ட் காதல் ,infactuation அதற்கே ரெண்டு பெண்களை நாசம் செய்தவள் ,நீ என் முதல் மனைவி என்று தெரிந்தால் ......நீயாவது நல்லா இருக்கணும் என்று தான் உன்னை கார்த்திக்க்கு விட்டு கொடுப்பது என்று முடிவூ செய்தேன் ....."என்றான் விஜய் கண்ணீருடன் .

"ஆமா அப்படியே சிலை வைக்கிறேன் ..."என்றாள் மதுரா கோபம் நீங்காதவளாய் .

"ச்சூ புரிஞ்சிக்கோடீ ......உன்னை இழப்பது என்பது என் உயிர் போவதற்கு சமம் ......சோனா ,சொர்ணா ,கஜா ,சுமன் கிட்டே இருந்து உன்னை காப்பாத்துவது தான் ரொம்ப முக்கியமாய் தோணியது ....அந்த பிசாசு பிளான் போட்டு உன்னை ஆஃபீஸ்க்கே கொண்டு வரும் போது ஒரு பக்கம் வானத்தில் பறந்தேன் ...மறுபக்கம் உன்னை திட்டணும் ..உன்னை திட்டிட்டு நான் தாண்டி ரொம்ப கஷ்ட பட்டேன் ...ஆனா பொண்டாட்டியை அவள் அறியாமல் சைட் அடிப்பது செம் போதைடீ .....உன்னை லவ் செய்யும் போது கூட அவ்வளவூ கிக் இல்லை .....திருட்டு மாங்காய் மாதிரி உன்னை உனக்கே தெரியாமல் அடிச்ச சைட் தான் செம ....."என்றவனை அவள் மொத்த, அவளை இழுத்து தன் மடியில் வைத்து கொண்டவன் ,திட்டிய அவள் இதழ்களை சிறை பிடித்து வெகு நேரம் கழித்தே விட்டான்

(சந்தில் சிந்து பாடறான் மது உஷார் )

"அப்போ தான் சுமன் என்ட்ரி ஆனான் ...அவன் கை கால் உடைத்து பார்சல் செய்தேன் ....ரித்திகாவை அவன் படுத்திய கொடுமை தான் அவனை எதிர்த்து போராட செய்தது .கார்த்திக் உடன் உன் திருமணம் என்று நான் முடிவூ செய்தால் நீ "அண்ணா "என்று பாச பறவையை பறக்க விட்டு என் வயத்தில் மில்க் ஊத்தினே ....அதற்கு முன் அந்த வளைகாப்பிற்கு வந்தியே ,அப்போ சேது அப்பா வேற ,'கரண் மாதிரி அசைந்தாடும் காற்றுக்கும் "என்று வெறுப்பு ஏத்தினார் ....நொந்து நூடுல்ஸ் ஆகிட்டேன் ..பூரணி வந்து புண்ணியம் கட்டிக்கிட்டா ....ரொம்ப வருஷம் கழிச்சி கிட்டே வந்தியா கண்ட்ரோல் டோடல் காலி ....."

"எனக்கும் அன்று தான் நீங்க நடிக்கறீங்க என்று முழுமையா புரிஞ்சது ...சோனா போன் செய்து சுமன் கிட்டே இருந்து எப்படி தப்பினே என்று கேட்டு வைத்தாள் ...அப்போ தான் சுபாவும் பாலாஜியும் உங்களை பத்தி நீங்க ஒரு வருசமாய் என்னை காப்பாத்துவது எல்லாம் சொன்னாங்க ....உக்கார்ந்து யோசித்து பார்த்தேன் ....உங்க நடவடிக்கை என்னிடம் மட்டும் நோர்மல்லாய் இல்லை என்பது புரிந்தது .சோனா ட்ரக் எடுத்துட்டு ஆபீஸ் அறைக்கு வந்த போது உங்க ரியாக்ஷன் என்னை ரொம்ப குழப்ப ஆரம்பித்தது .அப்போ இருந்த நிலையில் அதை யோசிக்க தோணலை ...பிறகு யோசித்தா கிடைச்ச பதில் என்னை மிரட்டியது ....அப்போ கூட நீங்க என்னை லவ் செய்யறீங்க என்று தான் நினைத்தேன் ...ஆனா நாம லவ் செய்தோம் என்று விளங்களை ....உங்களை முதல் முறை ஆபீஸ் பார்த்த போது ஏதோ விட்டகுறை தொட்ட குறை மாதிரி உங்க பக்கத்தில் இருக்கும் போது எல்லாம் ஒரு நிறைவூ ,பாதுகாப்பு பீல் .அந்த வளைகாப்பு வீட்டில் தான் உங்க முகமூடி தெறிஞ்சது ...சரி பிள்ளையை தள்ளி போய் என்னன்னு விசாரிப்போம் என்று பார்த்தா அப்படி லூசு தனமாவாய் உளறி வைப்பே .... "என்றாள் மதுரா கோபமாய்
 




Last edited:

anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
"இதுல என்னை கடத்திட்டு போய்ட்டு "உனக்கும் எனக்கும் என்ன உறவூ என்று கேள்வி வேறு ...மனுஷன் இருக்கும் நிலை புரியாம .புடவையில் வேறு இருந்தியா குஷி ,மிட்னயிட் மசாலா எல்லாம் ஓட ஆரம்பித்தது .ஒரு மனுஷன் எவ்வளவூ நேரம் தான் கட்டுப்பாடு உடன் இருக்க முடியும் ...அதுவும் நீ என் பொண்டாட்டி ....லைசென்ஸ் இருக்கு என்று .அதான் கிஸ் அடிச்சேன் ...நீ மயங்கிட்டே என்றதும் மீண்டும் உனக்கு என்னவோ ஏதோன்னு பயந்து போய்ட்டேன் ."என்ற விஜய் அன்றைய நினைவில் தவித்தவனாய் மதுராவை மீண்டும் அணைத்து கொண்டான் .

"நீங்க அப்படி செய்தது தான் என்னை தெளிய வைத்தது ....நீங்க கிட்டே நெருங்கிய உடன் .....பழைய நினைவுகள் நாம நெருக்கமாய் இருந்தது எல்லாம் ....என்னால் அந்த ஸ்ட்ரெஸ் தாங்க முடியலை ...நினைவும் ,நிஜமும் என்னை ஒருவழியாக்கி விட்டது என்று தான் நினைக்கிறன் ....அப்புறம் ஹாஸ்பிடலில் குழந்தை ஆல்வின் வீட்டில் உங்க அறையை காட்டினா ...அங்கு இருந்து உங்க டைரி எல்லாம் சுட்டுட்டு வந்தேன் ....படிச்சி பார்த்தேன் ....."என்றாள் மதுரா

"அப்புறம் சூர்யா என்ட்ரி கொடுத்ததும் என்னால் உன்னை விடவும் முடியலை ...அவனுக்கு தாரை வார்க்க மனமும் இல்லை .....அவனை அப்படியே அடிச்சே கொல்லணும் என்ற அளவிற்கு வெறி ....அவன் ஆஃபீஸ்க்கு போக போறே என்றதும் என்னால் தூங்க முடியலை .....நீ அவன் ஆஃபீஸ்ச்சில் மயங்கிட்டே என்றதும் மீண்டும் உயிர் போய்டுச்சு ....செம கோபம் அதான் அவன் மேல் பாஞ்சிட்டேன் ....நடுவில் உங்க அம்மா ருத்ராவிற்கு உன்னை கேட்டதும் எனக்கு வாழ்க்கையே வெறுத்து போச்சு ....நல்லவேளை ராஜி புண்ணியம் கட்டிக்கிட்டா ....கோயிலில் நீ காணொம் என்றதும் கிடைத்தவனை எல்லாம் தொம்சம் செய்துட்டேன் ...."என்றான் விஜய் .

"ஹர்ஷா ,மேக்னா கோயிலில் பார்த்த உடன் தான் எனக்கு கதிரி கோயில் ,ட்ரெயின் அச்சிடேன்ட்,உங்களுடன் படித்தது எல்லாம் தெளிவூ ஆச்சு ....உங்களை காதலித்ததையும் ,நமக்கு அங்கு திருமணம் நடந்ததையும் ....நமக்கு நடுவே நிறைய தடை ..அது எல்லாத்தையும் நீக்கினால் தான் உங்களுடன் சேர முடியும் என்று புரிந்து விட்டது ..நடுவே மேக்னாவின் சூர்யா காதல் வேறு ....முதலில் ரூபிணி வழி வழிக்கு கொண்டு வர திவாகரை தூக்கினோம் .(ரூபிணி விளக்கமாத்தோடு வந்ததை சொன்னாள்,திவாகர் குடும்பத்தை தூக்கி சூர்யா பந்தாடியதையும் )....மேக்னா சோனாவை கொல்ல அவங்க அப்பா கிட்டே சொல்லிட்டா ....சோனாவை குழப்பி ,உங்களின் பொறாமை தூண்டி ,டைவோர்ஸ் நீட்டினா தங்கச்சி என்றதும் நீங்க ஓடிட்டிங்க ....அப்போ தான் முடிவூ செய்தோம் ...நீங்க உங்க வாயில் என்னை உங்க மனைவி என்று சொல்லும் வரை எல்லா வித reverse psycology யூஸ் செய்வது என்று ....பொறாமையை தூண்டிட்டே இருந்தோம் ...நானும் சூர்யாவும் .....உங்களை அந்த பக்கம் வெறுப்பேத்தி அனுப்பிட்டு மீண்டும் சோனாவிற்கு போன் செய்து உங்களை இம்சை கொடுக்க செய்தது நான் தான் .....நம்மளை கண்காணிக்க ஆள் இருப்பது தெரியும்....எப்படியும் ஹாஸ்பிடல் வீடியோ வைத்து உங்களை பிளாக்மெயில் செய்வா என்று எதிர் பார்த்து தான் காத்து இருந்தோம் .அவளும் வந்தா நீங்களும் வந்துடீங்க ....அதுவரை சூர்யா புலம்பல் நிற்கவேயில்லை .....ஏற்கனவே அவனுக்கு தான் திருமணம் ஆகி விட்டதே ....அதனால் தான் recpetion அப்போ கூட மணமகன்கள் தனி மேடையிலும் ,நாங்க தனி மேடையிலும் அமர்ந்தோம் ....திடீர் என்று மாங்கல்யம் கழன்று விட்டது இல்ல அதற்கு தான் சுமங்கலி பூஜை எல்லாம் தோஷ நிவர்த்திக்காக செய்தேன் ."என்றாள் மதுரா .

ஆமா சூர்யா என்ன தீடீர் என்று மேக்னா மனைவி என்கிறான் .க்ரிஷ் ,சுபத்ரா அவன் குழந்தைங்க என்கிறான் .?"என்றான் விஜய் .

"ஆமா உங்களுக்கு உங்க லவ்வே தெரியாது ..இதில் அடுத்தவன் லவ் தான் புரிஞ்சுக்க முடியுமாக்கும் "என்றவள் கன்னத்தை நோகாமல் கடித்தான் விஜய் .

".அந்த மேக்னா லூசு நினைவூ தெரிந்த நாளாய் சூர்யாவை தான் விரும்பி இருக்கு .....பேமிலி friends ...அதான் இவன் குன்னூர் வந்து இருக்கான் என்று தெரிந்து உங்க கூட ஸ்டுடென்ட்ஸ் exchange ப்ரோக்ராம் வந்தது ,அங்கு நான் உங்களை நினைத்து பாடினால் ,அந்த லூசு சூர்யாவிற்காக படுகிறேன் என்று ஸ்டேஜ் ஏறி பாடி வைத்தது அந்த மேடம் பீலிங்ஸ் கொட்றாங்களாம் ......நடுவே அவனை பின் தொடர்ந்து போறேன் ன்னு போய் ,நான் தான் பைக்கில் காப்பாத்தி கொண்டு வந்தேன் ...மீதம் உங்களுக்கே தெரியும் ?"என்றாள் மதுரா .

"ஆமா அது எப்படிடீ அந்த லேப்பில் உடனே லவ் சொன்னே ...புருஷன்னு சொல்லிட்டே ....."என்றான் விஜய் .

(ஆமா எவ்வளவூ சீக்கிரமா டவுட் கேக்கறான் பாரு கேனை .)

"ஹ்ம்ம் ....மறந்தா தானே நினைப்பதற்கு மாமு ....உன்னை ஹாஸ்பிடலில் என் மாமா என்று அட்மிட் செய்ததில் இருந்து உன் நினைவூ தான் ....ஏதோ பாதிப்பு ....அந்த வயசில் அது என்னன்னு புரியலை ...ஆனா அப்பவே நீ எனக்கு மாமு ஆகிட்டே ....ஏதாவது ஒரு சந்தோஷமான விஷயம் நடந்தால் உடனே உன் நியாபகம் வந்து விடும் ...அங்கே காலேஜ் வந்த ஆல்வின் அண்ணாவை தானே முதலில் பார்த்தேன் ...அவ்வளவூ சந்தோசம் ....நீ வந்து இருக்கே என்று அவர் ரெஜிஸ்டர் செய்யும் போதே தெரிந்து கொண்டேன் ....."என்றாள் மதுரா .

"அடிப்பாவி உன்னை தேடி குன்னூர் ரோட்டில் அலைந்து கொண்டு இருந்தேனடி அப்போ ...ஆல்வின் போன் செய்து கண்டேன் உன் சீதையை என்றான் பாரு ....பத்தாவது நிமிஷம் அங்கே வந்தேன் ...உன்னை தேடி தான் காலேஜ் முழுக்க அலைஞ்சிட்டு இருந்தேன் "என்றான் விஜய் .

"ஹ்ம்ம் பார்த்துட்டு தான் இருந்தேன் மாமு ....செமையா சைட் அடிச்சுட்டு தான் இருந்தேன் .....என் மாமு செம்ம figure .....ஏற்கனவே பிளாட் தான் ....நேர பார்த்ததும் கிளீன் போல்ட் ஆயிட்டேன் .....அப்போ தான் உங்க பரிசு பத்தி ப்ரின்ஸி சொன்னார்...நாங்க தான் ஏற்கனவே ரெஜிஸ்டர் பார்ம் பார்த்து போன் நம்பர் எல்லாம் சுட்டுட்டோம் இல்லை ...அதான் கால் செய்தேன் ....உன் குரலை கேட்கணும் போல் இருந்துதுடா ....."என்றவளை நீண்ட நேரம் அணைத்து பின் விட்டான்

"பிறகு தான் ஸ்டேஜ் ஏறி பாடினியா .....உன்னை ஓடி வந்து நச்சுன்னு ஒரு இச்சு கொடுக்கணும் போலே இருந்தது ....அவனுங்க வேற உசுப்பேத்தி காலேஜ் குயின் அது இதுன்னு கிளப்பி விட்டாங்க .....உனக்கு என் நினைப்பு இருக்கான்னு ஒரே டவுட் .....செம டென்ஷன் ."என்றாள் மதுரா .

"எப்படிடீ மறப்பேன் என் தேவதையை .....என் உயிரை ......உன்னை கண் தேடிட்டு தான் இருந்தது ...அங்கே அந்த அரங்கில் தான் இருக்கே என்று உள் மனசு சொல்லிட்டே இருந்தது .....குட்டியா பார்க்கும் போதே பச்சக்குனு மனதில் பெவிகால் போடாத குறையாய் ஓடிக்கிட்டே ...குமரியாய் கேட்கணுமா .....சான்ஸ் சே இல்லை .....உன்னை யாருக்கும் விட்டே கொடுக்க முடியாது ...நீ தான் என் மனைவி என்று முன்னரே முடிவூ செய்து வைத்து இருந்தது தான் ...."என்றவன் அவளோடு குழைய ,அவளும் அவனிடம் மயங்கினாள் .

"அப்போ தான் கதிரி டூர் போனோம் ...அங்கே சூர்யா தன் லவ் ப்ரொபோஸ் செய்வான் என்று நினைக்கவேயில்லை .....மனசு,மூளை ,என் ஒவ்வொரு அணுவும் நீ தான் இருக்கே மாமு ....அப்படி இருக்கும் போது அவனை நான் divert செய்யும் விதமாய் என்றுமே நடந்தது இல்லை ...எப்படி என்னை ......."என்று கலங்கிய மனைவியை தட்டி கொடுத்தான் .

"நீ பழுகும் விதம் ,உன் கேரக்டர் ,உன் குணம் ,உன் அழகு ...எப்படிபட்ட ஒரு பெண் ட்ரீம் கேர்ள் மனைவியாய் வந்தால் நன்றாய் இருக்கும் என்று ஆண்களுக்கு கனவூ இருக்கும் செல்லம் ....அந்த criteria மொத்தம் நீ முழுமை செய்யும் விதமாய் இருந்தால் கண் ,உயிர் உள்ள எல்லா ஆணும் உன்னிடம் ப்ரொபோஸ் செய்வான் தான் ....அதான் நான் இருக்கும் போதே எத்தனை ப்ரோபோசல் மாடமிற்கு வந்தது என்பதை ...."என்றவன் தலையில் நச்சென்று கொட்டினாள் மதுரா .

"சரி சரி ....மேக்னா லவ் ஸ்டோரி ஜொள்ளு ..."என்றவனை முறைத்த மதுரா அவன் பார்த்த பார்வையில் சிவந்து போனாள் .

"நான் கதிரியில் சூர்யா காதலை மறுத்த போது ,அவன் கிளம்பி விட்டான் இல்லை ...இவளும் கூடவே கிளம்பி இருக்கிறாள் ....அவன் வாழ்வே மாயம் ,உலகே மாயம் என்று நல்லா குடிச்சிட்டு அசிஸிடெண்ட் செய்து இருக்கிறான் ....எப்போ ஏதுன்னு எல்லாம் தெரியலை ....ஒரு லெவெலுக்கு மேல் அவங்க பிரைவசியில் மூக்கை நுழைக்க என்னால் முடியவில்லை . மேக்னா தேவியார் அவனை காப்பாத்தி அவன் வீட்டுக்கே கூட்டி போய் இருக்கிறாள் .செம்ம புலம்பல் போல் இருக்கு .தவிர ஜாவர் சீதாராமன் கதை போலே "இடி ,மின்னல் ,மழை ,மோஹினி "கான்செப்ட் ...பஞ்சும் நெருப்பும் பக்கம் பக்கம் ....தவிர அந்த லூசு என்னை பார்த்துட்டே இவளுக்கு மாங்கல்ய கயிறை பரிசாய் கொடுத்து இருக்கான் ...இவளும் கோயிலில் ராஜபுத்திர பெண்மணிகள் வாளுக்கு மாலை இடுவது போன்று தனுக்கு தானே தாலிகட்டி கொண்டு அவன் மனைவி என்று முடிவே செய்து விட்டாள் ....என் புருஷன் என்னை தொட்டார் ...அதற்கு எல்லாம் உனக்கு எதற்கு பதில் சொல்லணும் "என்று என் மேலேயே பாய்ந்தாள் . அந்த ஓர் இரவின் பரிசு க்ரிஷ் ,சுபத்ரா என்கிறாள் ."என்றாள் மதுரா .

"ஏண்டீ உனக்கும் எனக்கும் கதிரியில் திருமணம் ஆனதை யாரும் அவ கிட்டே சொல்லவே இல்லையா என்ன அவங்க வீட்டில் ?"என்றான் விஜய் .

"சொன்னார்களா ...சொல்லி இருக்கவில்லையா ..இல்லை இவள் சரியாக கவனிக்கவில்லையா என்று தெரியலை ....கோயிலில் நடந்த விஷயம் அப்படியே அமுங்கி போய் இருக்கிறது .தவிர ராமராஜு குடும்பத்தில் வேறு துக்கம் நடந்த சமயம் ....இவளும் தாய்மை அடைந்து ,அது யார் என்றே தெரியாது என்று சாதித்து ஆஸ்திரேலியா போய் இருக்கிறாள் .விஷயம் தெரிந்த தாத்தா ,பாட்டி பேத்தியின் வாழ்வை பற்றிய கவலையில் என்னை மறந்து விட்டார்கள் போல் இருக்கிறது ... ஏதோ நடக்கணும் என்று விதி ......நடந்து விட்டது ."'என்றாள் மதுரா .

"சூர்யா எப்படிடீ ரியாக்ட் ஆனான் ...அவனுக்கு ரெண்டு பிள்ளைகள் இருக்கு என்று சொன்னதற்கு ."என்றான் விஜய் .

"எதுக்கு உன் காதில் மீண்டும் புகை வருது மாமு ..."என்றாள் மதுரா நக்கல் குரலில் .

"இல்லடீ என்ன இருந்தாலும் உன்னை தான் கட்டுவேன் கட்டுவேன் என்று சவுண்ட் கொடுத்துட்டே இருந்தான் ...அதான் ."என்றான் விஜய் .

"இல்லை மாமு ...உன்னை சுமந்த இதயம் இதுடா ....மறந்து வேண்டும் என்றால் போய் இருக்கலாம் தான் ...ஆனா யார் விருப்பத்தோடு கிட்டே வந்தாலும் அது மனதிற்கு பிடிக்காமல் விலகி தான் போய் இருக்கிறேன் .....உன்னை பார்க்கும் முன்பு இருந்த பழையது கொஞ்சம் கொஞ்சமாய் நினைவுக்கு வந்துட்டே தான் இருந்தது ....நீ காரில் கிச் பண்ணே பாரு அப்பவே மறந்து போய் இருந்தது எல்லாம் நினைவுக்கு வந்துடுச்சு ....சூர்யா இடமும் அதை தான் சொன்னேன் ......அவன் என்றுமே எனக்கு தோழன் மட்டும் தான் ....மதுராக்ஷி என்ற பெண்ணின் காதல் விஜய் என்ற ஒருவனுக்கு மட்டும் தான் சொந்தம் என்று போட்டோ காட்டி வீடியோ காமித்தேன் ...ஹி இஸ் சோ பிராக்டிகல் ......உனக்கு என்று ஒரு இடம் என் இதயத்தில் என்றுமே இருக்கும் ....இது உடைந்து போன கண்ணாடி ..மீண்டும் சேர்க்க நினைத்தால் சேராது என்பதில் ஹி இஸ் சோ confident .உன் தோழன் ,வெல் விஷேர் நான் என்றும் மாறாது என்று சொல்லிட்டான் ...தவிர மேக்னா நிலையும் அவன் புரிந்து கொண்டான் ....கணவன் இல்லாமல் குழந்தை என்பது இந்த சமூகம் ஏற்காது ...அவளாகவே மாங்கல்யம் அணிந்து கொண்டால் அதை எல்லாம் சமூகம் ஏற்குமா என்ற நிலை வேறு .அவன் ரத்தம் தந்தை பேர் தெரியாம வளருவதா என்ற துக்கம் ......எல்லோர் காதலும் திருமணத்தில் முடிவது இல்லை தான் விஜய் ....இரு குழந்தைகளின் எதிர்காலம் வேறு இருக்கிறதே .....என்னை மனதில் வைத்து கொண்டு மேக்னாஉடன் வாழ மாட்டேன் என்ற பைத்தியக்காரத்தனம் எல்லாம் அவன் செய்யவில்லை ....வாழ்க்கை என்பதன் நிதர்சனம் தெரிந்தவன் சூர்யா ."என்றாள் மதுரா புன்னகையுடன் .

"வாஸ்தவம் தான் .....குடும்பமா ,குழந்தையா ,காதலா என்று வரும் போது காதல் பின்னுக்கு போய் விடும் தான் ......கண்ணதாசன் இதை தான்


என்று அவன் பாட அவன் குரலில் வழக்கம் போல் மெய் மறந்து நின்றாள் அவன் மனைவி.
 




Last edited:

anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை
முடிந்த கதை தொடர்வதில்லை இறைவன் ஏட்டினிலே
தொடர்ந்த கதை முடிவதில்லை மனிதன் வீட்டினிலே

(நினைப்பதெல்லாம்)

ஆயிரம் வாசல் இதயம் அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம்
யாரோ வருவார் யாரோ இருப்பார் வருவதும் போவதும் தெரியாது
ஒருவர் மட்டும் குடியிருந்தல் துன்பம் ஏதுமில்லை
ஒன்றிருக்க ஒன்று வந்தால் என்றும் அமைதியில்லை

(நினைப்பதெல்லாம்)

எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும்
இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது
பாதையெல்லம் மாறிவரும் பயணம் முடிந்துவிடும்
மாறுவதைப் புரிந்து கொண்டால் மயக்கம் தெளிந்துவிடும்

(நினைப்பதெல்லாம்)


"உத்தம் எதுக்குடீ எனக்கு மயக்க மருந்து கொடுத்தான் ?"என்றான் விஜய் .

"ஹ்ம்ம் நடுவே சார் எஸ்ஸாகி போனா ....அதுக்கு தான் ....அதற்குள் திருமணத்தை நிறுத்த சோனா விடீயோவை சூர்யா கிட்டே காட்டி பொறாமை கிளப்பாறலாம் ...செம காமெடி ......சூர்யா ஆள் என்று தெரியாம அந்த அறையில் cctv இருப்பதை ,நாங்க அவளை கவனிப்பது தெரியாம அது லூசு பிளான் போடறலாம் ...எனக்கு மயக்கமருந்து கொடுத்து உங்களை என் அறைக்கு வரவழைத்து ,மறுநாள் காலை "அவ புருஷனுக்கும் எனக்கும் affair ."என்று ஊரை கூடி நியாயம் கேட்பதாக அதுவாக நினைத்து கொண்டு இருந்தது ....உள்ளே நடப்பது வெளியே தெரியாத படி அந்த அறையை சூர்யா சவுண்ட் ப்ரூப் ரூம் ஆக்கி இருந்தான் ....ஒரே ஒரு டிவி வெளியே எல்லோரும் நாம்ம பேசுவது டெலிகாஸ்ட் ஆவது போலெ சும்மா ஷோ காட்டினோம் .....அது உண்மை என்று நம்பி ......மிச்சம் உங்களுக்கே தெரியும் ...."என்றாள் மதுரா .


"அவ லூசு மாதிரி பிளான் போட்டா நீங்களும் பலிகடா ஆகுவீங்களா ?'என்றான் விஜய் .

"நாங்க ஆகலை ...அது போட்டு கொடுத்த பிளான் வைத்து அவளுக்கே ஆப்பை திருப்பி அடிச்சுட்டோம் ....என்ன நைட் உங்க பக்கத்தில் வந்து படுத்துகிட்டேன் ...அவ்வளவூ தான் ....உங்களை கார்னெர் செய்வது போலே எல்லோரும் பேச ,சார் பொங்கி எழுந்து ,"நானும் உங்க மனைவி "என்பதை பெரிய மனம் வைத்து ஒத்துக்கிட்டிங்க ...."என்றவள் தலையில் நச்சென்று கொட்டியவன் ,"அது என்ன "நானும் உங்க மனைவி ".....உதை கேக்குதா ?...நீ மட்டும் தான் என் மனைவி மதுரா .....அன்றும் இன்றும் இந்த ஆறடி உனக்கு மட்டும் தான் ...என் மனதில் இருந்த ஒரே பெண்ணும் நீ மட்டும் தான் ..."என்றான் விஜய் .

"ஆமா இந்த தியாகச்செம்மல் ,கீழ்ப்பக்கம் கேஸுக்கு எல்லாம் என்னை போல் ஒருத்தி தான் மாட்டுவா .....ரோபோட் ....ரோபோட் ..."என்றாள் மதுரா .

"யாரடிடீ ரோபோட் என்று சொல்றே ...."என்றான் விஜய் கடுப்போடு .

"எல்லாம் உயர்திரு விஜய கருணாகரனை தான் ...ரோபோட் ....ஓரங்கொட்டான் ,..."என்றவளை வளைத்து பிடித்தவன் ,"இந்த ரோபோட் இப்போ உன்னை ,"நீ நிலா ,நான் சிபி "மாதிரி தூக்கி போக போகுது ...6 வருஷம் .....மவளே இருக்குடீ ...."என்றவன் அவளை தன் கரங்களில் ஏந்தி கொண்டு காதல் ,திருமணம் என்ற வரிசையில் இல்லறத்தில் ஆரம்பித்தான் .

அதே சமயம் அந்த கார் வெகு வேகமாய் சென்று கொண்டு இருந்தது .அந்த காரில் கஜா ,சோனா ,சொர்ணா ,அவர்கள் வக்கீல் .

"எப்படி நடந்தது இது."என்ற கஜாவின் குரலில் சுரத்தே இல்லை .

"கஜா இண்டஸ்ட்ரீஸ் "டேக் ஓவர் செய்து இருந்தார் சிவகாமி .மொத்த ஷேர் அவரிடம் இருந்தது ."கஜா இண்டஸ்ட்ரீஸ் "என்ற ஒன்று இருந்ததற்கான தடையமே இல்லாமல் போய் ,"சிவகாமி இண்டஸ்ட்ரீஸ் "உயிர்த்து எழுந்தது இவர் அழிவில் இருந்து .

அடுத்து சீனா டீல் ....அவர் கோடிகோடியாய் கொட்டி உருவாக்கி இருந்த 800 கோடி ரூபாய் ஆடைகள் ஒட்டுமொத்தமாய் மாயமாய் மறைந்து இருந்தது .துறைமுக தகவல் இவர் அனுப்பிய 10
கண்டைனர் சென்னையில் இருந்து கிளம்பி விட்டதாகவும் ,சீனா துறைமுகம் அந்த 10 கண்டைனர் வந்து விட்டதாகவும் காட்டியது .பொருளை இறக்கி விட்டு பணம் சீனா நிறுவனத்திடம் இருந்து பெற சென்றால் ,"வடிவேலு மாதிரி "அங்கே கிணத்தையே காணவில்லை .".அப்படி ஒரு சீன நிறுவனம் எங்குமே பதிவூ செயயப்படவில்லை .சரி ஆடைகள் மிஞ்சியதே என்று திறந்து பார்த்தால் அதில் இருந்தது பழைய நியூஸ்பெப்பேர் மட்டுமே .....ஆடை போன இடம் தெரியலை ...சீனா நிறுவனம் இருந்த இடம் தெரியலை .

அதே சமயம் ஆல்வின் ,பாலாஜி ,உத்தம் போர்ட்டிற்குள் நுழைந்தனர் .அங்கு சீரியல் நம்பர் மாற்ற பட்டு இருந்த 10 கண்டைனர் இவர்கள் வசம் ஒப்படைக்க பட்டது ...800 கோடி ரூபாய்க்கான இறக்குமதி ஆடைகள் .எல்லாம் ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்ய பட்டதாய் போர்ட் அறிக்கை சொன்னது .ஆக மொத்தம் அந்த அந்த ஆடைகள் இந்திய துறைமுகத்தை விட்டு கிளம்பவேயில்லை .

இங்கே இருக்கும் உடைகளை தான் கஜா ஆட்கள் சீனா துறைமுகத்தில் தேடி கொண்டு இருந்தனர் .

விஜய் அவரை கிளீன் போல்ட் ஆக்கி இருந்தான் .அவன் உழைப்பு ,அவன் டிசைன் .இதை நோகாமல் அவர் அடித்து கொண்டு போக அவன் விட்டுவிடுவானா என்ன ...இல்லாத ஒரு சீனா நிறுவனம் சிவகாமி உதவியால் ,உருவாக்கி அதற்கு சிவா கார்மெண்ட்ஸ் போட்டி இருப்பதாய் நம்ப வைத்து ,ஒரு ஆர்டர் 800 கோடிக்கு கொடுத்து ,அதற்கு முன்பணமாய் 30 லட்சம் மட்டும் கொடுத்து ,வீட்டை ,நகைகளை பிலேட்ஜ் செய்ய வைத்து ,பினாமி ,கருப்பு பணத்தை வெளியே கொண்டு வரவைத்து ,இப்போ அவரை பிச்சைக்காரன் ஆக்கி இருந்தான் விஜய் .

நாளை காலை வீட்டை ஜப்தி செய்ய பேங்க் அதிகாரிகள் வருவதாக வேறு சொல்ல பட்டது ...இனி யாரிடமும் உதவி என்று கேட்கவே முடியாது என்ற நிலை ....600 கோடி கொள்ளை ,கொலை ,அரசியல் வாதிகள் ,சினிமா நடிகர்கள் ,தொழில் அதிபர்கள் பணம் ...எல்லாம் ஹோகயா .....போயிந்தே ...இட்ஸ் காண் ....

அப்பொழுது தான் அது நடந்தது .எதிர் புறம் வேகமாய் வந்த கண்டைனர் லாரி நேர இவர்கள் காரில் மோத ,சோனா வந்த கார் அப்பளமாய் நொறுங்கி போனது .துடி துடித்து ஸ்பாட் டெத் .

அந்த லாரியில் இருந்து இறங்கியவன் அண்ட் கார் போட்டோ எடுத்து ,யாருக்கோ அனுப்பி விட்டு ,"பாஸ் முடிச்சாச்சு ...ஒருத்தரும் மிஞ்சலை ..."என்றான் .
1553496435156.png

அவன் பாஸ் என்று அழைத்து தகவல் சொன்னது ---விஜய்க்கா ,சூர்யாவிற்கா ,ஜெய் சிங்க்கிற்கா ,மேக்னா தந்தைக்கா ,இல்லை ராமராஜுவிற்கா .....கடவுளுக்கு தான் வெளிச்சம் .

ஆக மொத்தத்தில் பேய் ஆட்டம் போட்ட ஒட்டுமொத்த அரக்கர்களை வதம் செய்தாகி விட்டது .
யார் செய்தால் என்ன ?
 




Last edited:

anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
ஐந்து வருடங்கள் கழித்து

"ஏய் ...இவ எனக்கு மட்டும் தான் பிரின்ட் ....போ தூர .."என்றான் நான்கு வயது நந் கிஷோர் ---சூர்யா magnaவின் மூன்றாவது மகன் .

"ஏய் இல்லை இவ என் பிரின்ட் ....."என்றான் விஷ்வா ---ருத்ரா -ராஜியின் மகன் .

"இல்லை என் எங்க பிரின்ட் .."என்றனர் ஸ்ரீவட்சன் -கார்த்திக் பூரணி மகன் ,யது கிருஷ்ணா ---ரகு -சந்திரா மகன் .

இவர்களால் "என் பிரின்ட் "என்று அழைக்கபட்ட ஆராதியா இந்த சண்டையை தலையை சாய்த்து பார்த்து கொண்டு இருந்தாள் -----சொல்லவும் வேணுமோ மதுரா -விஜய் மகள் என்று .

ChMOsqEVEAAHNS4.jpg

1553496653329.png

3f4c0c776020a8e4046108a402a3fb9d.jpg
மதுரா-3 ,மேக்னா-4 ,பூரணி-2 ,ராஜி -2,சந்திரா -2, முறையாக கருவுற்று இருக்க ,அவர்களின் வளைகாப்பிற்கு தான் அனைவரும் சூர்யா வீட்டில் குழுமி இருந்தனர் .பெண்கள் அனைவரும் வந்து அமர அவர்களின் கணவன்மார்கள் கண்ணில் காதலோடு தங்கள் இதயராணிகளை சைட் அடித்து கொண்டு இருந்தனர் .

நிகழ்ச்சி சுபமாய் முடிய "பிருந்தாவனத்திற்கு "திரும்பி விஜய் ரொம்ப கோபமாய் இருந்தான் .எதற்கு என்று புரியாத மதுரா இரவூ அவனை கேட்டாள்.

"என்ன மாமு .....ரொம்ப கோபமாய் இருக்கே ....ஏதவாது பிரச்சனையா ..."என்றாள் .

ஆமா ரொம்ப கோபமாய் இருக்கேன் ...இந்த சூர்யா நாலாவது குழந்தை ரிலீஸ் செய்ய போறான் ...நாம் இன்னும் மூன்றில் தான் இருக்கிறோம் ...எப்போ அவனை ஓவர் டேக் செய்வது ...."என்றான் சிரியாமல் .

9d76d15227d47753d2ca6feb85351ff0.jpg

"இப்படியே பேசிட்டு இருந்தே மாமு ......வேலைக்கு ஆகாது."என்று குலுங்கி சிரித்த மனைவியை கண்களில் நிறைத்து மனதில் இருத்தி கொண்ட அவன் ,வாய் விட்டு சிரித்தான் .

44166789532_115ef4552e_b.jpg


இங்கு இவர்கள் வாழ்க்கை வரம் தான் .தவம் யார் செய்து இருந்தால் என்ன ....உண்மை காதல் என்னும் தவத்திற்கு நிச்சயம் வரம் கிடைக்கும் .விஜய்யால் மதுராவும் ,மதுராவால் விஜய்யும் ஒருவருக்கு ஒருவர் வரமாய் மாறி இருந்தனர் .

வாழ்க்கை யாரையும் வஞ்சிப்பது இல்லை


https://lyricstranslate.com/en/tujh-mein-rab-dikhta-hai-i-see-my-god-you.html

I see my god in you

you are my heaven, your are my passion
you are my wish, you are the peace of my soul
you are the coldness/calmness of my eyes, you are the heartbeat of my heart
i don't know anything else, i know only this
that i see god in you, what should i do
my head is bowing down in your worship, what should i do
that i see god in you, what should i do

what kind of distance is this, what helplessness
i have touched you with my eyesight
sometimes your fragrance/scent, sometimes your talks
without demanding i have got this world
you are the light of my heart, you are the wealth/treasure of my lives
i don't know anything else, i know only this
that i see god in you, what should i do
my head is bowing down in your worship, what should i do
that i see god in you, what should i do

whenever you come, it teases me
by teasing, your shadow kisses me
when you smile, when you shy
it seems like my god is dancing
you are my progress/growth, you are my worship

i don't know anything else, i know only this
that i see god in you, what should i do
my head is bowing down in your worship, what should i do
that i see god in you, what should i do


THE END
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top