sakthipriya
SM Exclusive
இன்ஸ்பெக்டர் சண்முகத்துடன் போலீசார் அதிரடியாக உள்ளே நுழைந்தார்கள்.
அர்ச்சுனன் அய்யாவும், இளந்திரையனும் அவர்கள் பின்னால் வந்தார்கள்.
போலீசார் வருகையை எதிர்பார்க்காத வந்தனாவும், பிரித்வியும், பீரவீணாவும் அதிர்ந்து நின்றார்கள்
போலீஸ் படை அதிரடியாக நுழைந்து அனைவரையும் கைது செய்து விலங்கிட்டார்கள்
இளந்திரையனும், அர்ச்சுனனும் வந்து செளமியா,ஜெயகாந்தன் மற்றும் ஆதிரையன் கட்டுக்களை அவிழ்த்து விட்டனர்.
"இன்ஸ்பெக்டர்... எங்களை அரஸ்ட் செய்து இருக்கீங்க. ஒகே... எங்கள் கூடவே இருந்து எல்லா திட்டத்துக்கும் துணையாக இருந்த சரிகாவை ஏன் அரஸ்ட் செய்யவில்லை?" என்றாள் பிரவீணா.
"அவள் எங்களோட ஆளு. உங்களின் சதி திட்டத்தை எல்லாம் முறியடித்து உங்களை ஆதாரத்தோடு பிடிக்க டிடெக்டிவ் அன்பு மேடத்தால் டிபார்ட்மெண்ட் சம்மதத்தோடு அனுப்பி வைக்கபட்ட ஆளு." என்றார் இன்ஸ்பெக்டர்.
"உங்க குற்றங்களை எல்லாம் ஆதாரத்தோட நிருபிக்கத்தான் உங்கள் கூடவே இத்தனை நாள் இருந்தேன். நீங்கள் இப்பொழுது பேசினது எல்லாம் இதில் பதிவாகி இருக்கு" என்று பூளூடூத் செல்போன் வீடியோ ரிக்காடரை எடுத்து காண்பித்தாள் சரிகா.
"சரிகா... உன்னை..." என்று கோபத்தில் பிரித்வி முறைத்தான்.
"செளமியா மேடத்துக்கும், அன்பு செல்வி அக்காவுக்கும் துரோகம் செய்ய நான் உங்களை மாதிரி நன்றி கெட்டவள் இல்லை" என்றாள் சரிகா.
"அம்மா... நீங்க திருந்தவே இல்லையம்மா. நான் உங்கள் வயிற்றில் பிறந்தததுக்கு வெட்கப்படுகிறேன்" என்றாள் செளமியா.
"நீங்க இப்படித்தான் செய்வீங்கன்னு தெரிந்த காரணத்தினால்தான் நான் செளமியை உங்களிடம் விட கடைசிவரை சம்மதிக்கவே இல்லை." என்றான் ஆதிரையன்.
"என்னை கொல்ல துணிஞ்ச நீங்கள் என் அம்மா இல்லை. எனக்காக உங்களால் கத்திகுத்து வாங்கி ஹாஸ்பிடல்ல படுத்திருக்காங்களே அவங்கதான் என் அம்மா" என்ற செளமியாவின் வார்த்தைகளை காதில் வாங்கியபடி வந்தனா சென்றாள்.
அவள் பின்னால் பிரித்வி, பிரவீணாவும் சென்றார்கள். அவர்கள் அனைவரையும் ஏற்றிக் கொண்டு போலீஸ் வேன் சென்றது.
"செளமி... உன் அன்பக்கா கண்ணு முழிச்சிட்டாங்க. அவங்கதான் செளமியா ஆபத்தில் இருக்கிறாள். நீங்கள் ரெண்டுபேரும் சீக்கீரமாக போயி அவளை காப்பாத்துங்கன்னு எங்களை அனுப்பினாங்க" என்றான் இளந்திரையன்.
"அப்படியா! சீக்கீரம் வாங்க. நான் அக்காவை பார்க்க வேண்டும்." என்று அவசரமாக சொன்னாள் செளமியா.
கார்களில் அனைவரும் ஏறி மிஷன் ஹாஸ்பிடலை நோக்கி சென்றார்கள்.
செளமியாவுக்கு வரும் வழியில் நடந்தவைகளை எல்லாம் சொல்லிக் கொண்டு வந்தாள் சரிகா.
கார்கள் மிஷன் ஹாஸ்பிடலை அடைந்தது.
செளமியா காரிலிருந்து இறங்கி வேகமாக சென்று ஐசியூ வார்டை அடைந்தாள்.
ஐசியூ வார்டு கதவை திறந்து உள்ளே நுழைந்த செளமியா நேராக சென்று அன்பு செல்வியின் தலைபகுதிக்கு அருகில் சென்று மண்டியிட்டு அமர்ந்து கொண்டாள்.
இந்துமதி அவளை தடுக்காமல் ஒதுங்கி நின்று கொண்டாள்.
சரிகாவும் வந்து செளமியாவுக்கு அருகில் வந்து மண்டியிட்டு அமர்ந்து கொண்டாள்.
"அக்கா... அக்கா..." என்று அழுத செளமியாவின் தலையை வருடினாள்.
"செளமி... என்னடா ஏன் அழறே? அக்காவுக்கு ஒண்ணுமில்லையடா" என்றாள் அன்புசெல்வி.
"இந்து... செளமியை எப்படி அடிச்சிருக்காங்க பாரு" என்று கன்னத்தை தடவியபடி சொன்னாள் அன்புசெல்வி.
"அக்கா... நீங்க இல்லாமல் என்னை யார் யாரோ அடிச்சிட்டாங்க. இந்து கூட என்னை உங்களை பார்க்க விடவில்லை." என்றாள் செளமியா.
"சாரிடா... செளமியை ஏன் பார்க்க விடவில்லைன்னு இந்துவை நன்றாக திட்டிவிட்டேன்" என்றாள் அன்புசெல்வி.
Message…
அர்ச்சுனன் அய்யாவும், இளந்திரையனும் அவர்கள் பின்னால் வந்தார்கள்.
போலீசார் வருகையை எதிர்பார்க்காத வந்தனாவும், பிரித்வியும், பீரவீணாவும் அதிர்ந்து நின்றார்கள்
போலீஸ் படை அதிரடியாக நுழைந்து அனைவரையும் கைது செய்து விலங்கிட்டார்கள்
இளந்திரையனும், அர்ச்சுனனும் வந்து செளமியா,ஜெயகாந்தன் மற்றும் ஆதிரையன் கட்டுக்களை அவிழ்த்து விட்டனர்.
"இன்ஸ்பெக்டர்... எங்களை அரஸ்ட் செய்து இருக்கீங்க. ஒகே... எங்கள் கூடவே இருந்து எல்லா திட்டத்துக்கும் துணையாக இருந்த சரிகாவை ஏன் அரஸ்ட் செய்யவில்லை?" என்றாள் பிரவீணா.
"அவள் எங்களோட ஆளு. உங்களின் சதி திட்டத்தை எல்லாம் முறியடித்து உங்களை ஆதாரத்தோடு பிடிக்க டிடெக்டிவ் அன்பு மேடத்தால் டிபார்ட்மெண்ட் சம்மதத்தோடு அனுப்பி வைக்கபட்ட ஆளு." என்றார் இன்ஸ்பெக்டர்.
"உங்க குற்றங்களை எல்லாம் ஆதாரத்தோட நிருபிக்கத்தான் உங்கள் கூடவே இத்தனை நாள் இருந்தேன். நீங்கள் இப்பொழுது பேசினது எல்லாம் இதில் பதிவாகி இருக்கு" என்று பூளூடூத் செல்போன் வீடியோ ரிக்காடரை எடுத்து காண்பித்தாள் சரிகா.
"சரிகா... உன்னை..." என்று கோபத்தில் பிரித்வி முறைத்தான்.
"செளமியா மேடத்துக்கும், அன்பு செல்வி அக்காவுக்கும் துரோகம் செய்ய நான் உங்களை மாதிரி நன்றி கெட்டவள் இல்லை" என்றாள் சரிகா.
"அம்மா... நீங்க திருந்தவே இல்லையம்மா. நான் உங்கள் வயிற்றில் பிறந்தததுக்கு வெட்கப்படுகிறேன்" என்றாள் செளமியா.
"நீங்க இப்படித்தான் செய்வீங்கன்னு தெரிந்த காரணத்தினால்தான் நான் செளமியை உங்களிடம் விட கடைசிவரை சம்மதிக்கவே இல்லை." என்றான் ஆதிரையன்.
"என்னை கொல்ல துணிஞ்ச நீங்கள் என் அம்மா இல்லை. எனக்காக உங்களால் கத்திகுத்து வாங்கி ஹாஸ்பிடல்ல படுத்திருக்காங்களே அவங்கதான் என் அம்மா" என்ற செளமியாவின் வார்த்தைகளை காதில் வாங்கியபடி வந்தனா சென்றாள்.
அவள் பின்னால் பிரித்வி, பிரவீணாவும் சென்றார்கள். அவர்கள் அனைவரையும் ஏற்றிக் கொண்டு போலீஸ் வேன் சென்றது.
"செளமி... உன் அன்பக்கா கண்ணு முழிச்சிட்டாங்க. அவங்கதான் செளமியா ஆபத்தில் இருக்கிறாள். நீங்கள் ரெண்டுபேரும் சீக்கீரமாக போயி அவளை காப்பாத்துங்கன்னு எங்களை அனுப்பினாங்க" என்றான் இளந்திரையன்.
"அப்படியா! சீக்கீரம் வாங்க. நான் அக்காவை பார்க்க வேண்டும்." என்று அவசரமாக சொன்னாள் செளமியா.
கார்களில் அனைவரும் ஏறி மிஷன் ஹாஸ்பிடலை நோக்கி சென்றார்கள்.
செளமியாவுக்கு வரும் வழியில் நடந்தவைகளை எல்லாம் சொல்லிக் கொண்டு வந்தாள் சரிகா.
கார்கள் மிஷன் ஹாஸ்பிடலை அடைந்தது.
செளமியா காரிலிருந்து இறங்கி வேகமாக சென்று ஐசியூ வார்டை அடைந்தாள்.
ஐசியூ வார்டு கதவை திறந்து உள்ளே நுழைந்த செளமியா நேராக சென்று அன்பு செல்வியின் தலைபகுதிக்கு அருகில் சென்று மண்டியிட்டு அமர்ந்து கொண்டாள்.
இந்துமதி அவளை தடுக்காமல் ஒதுங்கி நின்று கொண்டாள்.
சரிகாவும் வந்து செளமியாவுக்கு அருகில் வந்து மண்டியிட்டு அமர்ந்து கொண்டாள்.
"அக்கா... அக்கா..." என்று அழுத செளமியாவின் தலையை வருடினாள்.
"செளமி... என்னடா ஏன் அழறே? அக்காவுக்கு ஒண்ணுமில்லையடா" என்றாள் அன்புசெல்வி.
"இந்து... செளமியை எப்படி அடிச்சிருக்காங்க பாரு" என்று கன்னத்தை தடவியபடி சொன்னாள் அன்புசெல்வி.
"அக்கா... நீங்க இல்லாமல் என்னை யார் யாரோ அடிச்சிட்டாங்க. இந்து கூட என்னை உங்களை பார்க்க விடவில்லை." என்றாள் செளமியா.
"சாரிடா... செளமியை ஏன் பார்க்க விடவில்லைன்னு இந்துவை நன்றாக திட்டிவிட்டேன்" என்றாள் அன்புசெல்வி.
Message…
Last edited: