• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

thedi vantha devathiye_05 part 02

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sakthipriya

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,855
Reaction score
5,222
Age
40
Location
coimbatore
“ஆமாம்… சௌமியா… வேலை பிசியில வரவே முடியலை. ஜெயாகிட்ட கேட்டுக்குவேன். இன்னிக்கு இந்து கண் முழிச்சதாக சொன்னான் அதுதான் பாக்கலாமுன்னு வந்துட்டேன்” என்றான் இளந்திரையன்.

“சரி வாங்க போகலாம்” என்று அனைவரும் கிளம்பிச் சென்று ஐ.சி.யூ வார்டுக்குள் சென்றனர்.

சௌமியா சென்று டாக்டராக பரிசோதித்து விட்டு வந்தாள். ஆதிரையனும், இளந்திரையனும் அருகில் சென்று பார்த்துவிட்டு வந்தனர்.

அன்பு செல்வி தன் தோழியின் அருகில் சென்று மண்டியிட்டு அமர்ந்து அவள் தலை வருடி விட்டு, கைகளையும் வருடி விட்டு கைகளை பிடித்து முத்தமிட்டாள்.

அவள் கன்னங்களில் அவள் முத்தமிட்டுவிட்டு தன் தோழியின் கரங்களை பிடித்தபடி சிறிது நேரம் கண்மூடி பிரார்த்தனை செய்தாள்.

“அன்பு… கூல்... உங்கள் பிரார்த்தனை வீண் போகாது. நிச்சயம் அவங்க கண் விழிப்பாங்க.” என்று சொல்லியபடி அருகில் வந்து தன் கைகளை அன்பு செல்வியின் தோள்களில் சௌமியா வைக்க அவள் “உங்க வாக்கு பலிக்கட்டும் மேடம்” என்றாள்.

அன்பு செல்வி தன் நிலையடைந்து தன் தோழியின் விடுவிக்க முயன்றபோதுதான் இந்துமதி தன் கைகளை இறுக்கி பிடித்திருந்ததை உணர்ந்தாள்.

“மேடம்… மேடம்… இந்து என் கையை பிடிச்சிருக்காள் பாருங்க” என்று அவள் சந்தோசத்தில் கத்த “ஆமாம் அன்பு” என்றாள் சௌமியா.

“சௌமியா… இங்கே பாரும்மா. இந்துவோட கை, கால் விரல்கள் நல்லா துடிக்குதம்மா” என்றான் அண்ணன்.

“சௌமியா… சௌமியா… அவங்க கண்னு இமைகள் துடிக்குது… அவங்க உதடுகள் துடிக்குது… பாரு” என்றான் இளந்திரையன்.

“அன்பு… பாருங்க… உங்க பிரண்டோட எல்லா உறுப்புகளும் பங்சன் ஆகுது.” என்று சௌமியா சொல்ல அவள் பார்க்க இந்துமதியின் எல்லா உறுப்புகளும் அசைந்தன.

“மேடம்… மேடம்… இந்துவை உடனே செக் பன்னுங்க.” என்று அவள் கேட்க “யெஸ் அன்பு” என்று அவள் கை பிடித்து பார்த்து பரிசோதித்தாள்.

“அன்பு… குட்… எல்லாம் நார்மலாகிட்டு வருது. அவங்க கண் முழிச்சால் போதும்.” என்று அன்பு செல்வியை பார்த்து சொல்லும் வேளையில் இந்துமதி கண் விழித்தாள்.

“சௌமியா… அங்கே பாரு… அவங்க கண்ணு முழிச்சு பாக்கிறாங்க.” என்று கத்தினான் இளந்திரையன்.

“ஆமா… சௌமியா… உண்மைதாம்மா… பாரு” என்றான் அண்ணன் ஆதிரையன்.

சௌமியாவும், அன்புசெல்வியும் ஒரு சேர பார்க்க அவள் தோழி இந்துமதி கண் விழித்து உலகத்தை பார்த்தாள்.
இந்துமதி சுற்றும் முற்றும் பார்த்தபின் அன்புசெல்வியை பார்த்த அவள் முகம் பிரகாசமாகியது.

இந்துமதி மெல்லியதாக புன்னகைத்தாள். இந்துமதி கண்களால் வா என்று அன்பு செல்வியை அழைத்தாள்.

அன்பு செல்வி அருகில் சென்று அவள் அருகில் அமர்ந்து “என்ன இந்து?” என்றாள்.

“அக்…கா” என்று அவள் கஷ்டப்பட்டு மெல்ல உச்சரிக்க “இந்து உனக்கு ஒண்ணுமில்லடா” என்று அவள் சொல்லி கைகளை பற்றிக் கொண்டாள். சரி என்பது போல் அவள் தலையசைத்தாள்.

“அன்பு… உங்க பிரார்த்தனை வீண் போகலை. அவங்க கண்ணு முழிச்சிட்டாங்க” என்ற சௌமியா திரும்பியும் கைகளை பிடித்து பார்த்து விட்டு “உங்க பிரண்டுக்கு இனி எந்த பிரச்சனையும் இல்லை. நாளைக்கு ஈவினிங் வரை இங்கே இருக்கட்டும் அப்புறமாக வார்டுக்கு மாற்றிடலாம்” என்றாள்.

“ரொம்ப தாங்க்ஸ் மேடம்” என்று அன்புசெல்வியை “அன்பு... உங்களை” என்று கடிந்துக் கொண்டாள்.

“அன்பு மேடம்… சௌமிக்கு அவளுக்கு நெருக்கமானவங்கள் தாங்க்ஸ் சாரி சொன்னால் பிடிக்காது” என்றான் இளந்திரையன்.

“அன்பு… உங்க பிரண்டு ரெண்டு நாளுக்கு மேலே படுத்தே இருந்தாங்க. சோ நீங்க அவங்களுக்கு பெட் சோர்ஸ் ஆகாமல் இருக்க லைட்டாக ஸ்பான்ச் பாத் பன்னி நைட்டியை மாத்திடலாம்.” என்றாள் சௌமியா.

“சரிகா… அன்புக்கு ஹெல்ப் செய்யுங்க.” என்று சௌமியா சொல்லும்போது ஆதிரையன் “வாப்பா நாம போகலாம்.” என்று அழைக்க ஆதிரையனும், இளந்திரையனும் வெளியேறினார்கள்.

அன்பு செல்வி கொதிக்க வைத்து நன்றாக விளாவிய தண்ணீர் வாளியுடன்தன் தோழிக்கு ஸ்பான்ச் பாத் தர ஆயுத்தமானாள்.

சௌமியா கதவை சாத்தி விட்டு அங்கேயே நிற்க சரிகா உதவியுடன் தன் தோழியின் முதுகை துடைத்து விட்டு மெல்லிய ஸ்பான்ச் பாத் தந்து நைட்டி மாற்றி விட்டு படுக்க வைத்தாள் அன்புசெல்வி.

“சரி அன்பு… நான் கிளம்பறேன்” என்று அவள் வெளியேறும்போது ஜெயகாந்தன் வர “இந்து கண்ணு முழிச்சிட்டாங்க” என்றாள் சௌமியா.

“இப்பதான் இளா போன் செஞ்சான் அதுதான் உடனே வர்றேன்.” என்று வந்தவன் இந்துமதியை டெஸ்ட் செய்து விட்டு “ஷி இஸ் ஒகே” என்றான்.

“சரி அன்பு… நீங்க இனி பாத்துக்கோங்க. நாங்கள் வருகிறோம்” என்று இருவரும் கிளம்பினார்கள்.

அவர்கள் சென்றபின் தோழியின் அருகில் அவள் வந்து மண்டியிட்டு அமர்ந்து அவளையே பார்த்தாள்.

“அக்கா… நான்…” என்று அவள் ஏதோ கேட்க முயன்றாள்.
 




Last edited:

sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
nice epi sis. indu kan mulithu vittal enna ketka ninaikiral........ waiting sis
 




mahathipriya

மண்டலாதிபதி
Joined
Mar 2, 2018
Messages
153
Reaction score
281
Location
jayankondam
ன்பு செல்வி தன் தோழியின் அருகில் சென்று மண்டியிட்டு அமர்ந்து அவள் தலை வருடி விட்டு, கைகளையும் வருடி விட்டு கைகளை பிடித்து முத்தமிட்டாள்.
அவள் கன்னங்களில் அவள் முத்தமிட்டுவிட்டு தன் தோழியின் கரங்களை பிடித்தபடி சிறிது நேரம் கண்மூடி பிரார்த்தனை செய்தாள்.
அன்பு செல்வி தன் நிலையடைந்து தன் தோழியின் விடுவிக்க முயன்றபோதுதான் இந்துமதி தன் கைகளை இறுக்கி பிடித்திருந்ததை உணர்ந்தாள்.
nice relationship
 




mahathipriya

மண்டலாதிபதி
Joined
Mar 2, 2018
Messages
153
Reaction score
281
Location
jayankondam
சௌமியா கதவை சாத்தி விட்டு அங்கேயே நிற்க சரிகா உதவியுடன் தன் தோழியின் முதுகை துடைத்து விட்டு மெல்லிய ஸ்பான்ச் பாத் தந்து நைட்டி மாற்றி விட்டு படுக்க வைத்தாள் அன்புசெல்வி.
nice
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top