• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Then Sinthum Poovanam! - 18

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அத்தியாயம் – 18

சந்தோஷ் சொன்னது போலவே தீபிகாவால் அவனை ஒன்றுமே செய்ய முடியவில்லை.. அவன் இதுவரை பொய்யாக தன்னிடம் நடித்தான் என்று உணர்ந்தவளுக்கு கோபம் அதிகரித்ததே தவிர வேறு ஒன்றுமே செய்ய முடியவில்லை..

சந்தோஷ், பிரியா, மித்ரா மூவரும் காரில் ஏறியதும் காரை எடுத்தான்.. “அண்ணா உன்னிடம் இப்படியொரு செயலை நான் எதிர்பார்க்கவே இல்ல..” என்ற மித்ரா பிரியாவின் பக்கம் திரும்பி, “என்னோட அண்ணி..” என்று அவளின் கன்னத்தைக் கிள்ளிச் சிரிக்க அவளின் கையைத் தட்டிவிட்டாள் பிரியா..

அவளின் செயலில் மித்ராவின் முகம் வாடிபோக, “ஏய் தேனு என்ன பழக்கம் இது..” என்றவன் அவளை உரிமையோடு அதட்ட பிரியாவின் கோபம் அதிகரிக்க, “சந்தோஷ் நீ இப்போ என்ன பண்ணிட்டு இருக்கிற தெரியுமா..” என்றவள் கொலைவெறியுடன் கேட்டாள்..

“அண்ணா வண்டியை நிறுத்து நாங்க ஸ்கூட்டியில் வந்தோம்.. நான் அண்ணியோட ஸ்கூட்டி எடுத்துட்டு அதில் வருகிறேன்.. நீங்க இருவரும் காரில் வாங்க..” என்றவள் காரை நிறுத்த சொல்லி இறங்கிக் கொண்டாள்..

அவள் இறங்கும் வரை பொறுமையாக இருந்த சந்தோஷ், “நல்ல தெரியுமே உன்னோட கழுத்தில் தாலி கட்டியிருக்கேன்..” என்றவன் காரை எடுத்தான்..

“ஏண்டா நீ வீம்பிற்கு திருமணம் பண்ண நான் தான் கிடைத்தேனா..?” என்றவள் கோபத்தோடு கேட்டாள்.. அவளின் கேள்வியில் காரை நிறுத்திய சந்தோஷ், “ஏன் நீ வீம்பே பண்ணலையா..?” என்று கேட்டான்..

“நான் எப்போ உன்னிடம் வீம்பு பண்ணினேன்.. நான் உண்டு என்னோட வேலை உண்டு என்று இருப்பது உனக்கு வீம்பு பண்ணுவது போல இருக்கிறதா..?” என்றவனிடம் எகிறினாள் பிரியா..

“ஆமாண்டி நீ வீம்பிற்கு தான் பண்ணிட்டு இருக்கிற..” என்றவன் தொடர்ந்து, “இப்போ இல்ல கிட்டத்தட்ட நாலு வருசமாக இதையேதான் நீ பண்ணிட்டு இருக்கிற..” என்றவன் எரிச்சலோடு கூறினான்..

“யாரு நானா..?” என்றவள் கோபத்தோடு கேட்க, “ஆமாண்டி நீதான்..” என்றான் சந்தோஷ் திமிரோடு..

“ஏன் சந்தோஷ் என்னை கொண்டுபோய் புது புது பிரச்சனையில் சிக்க வைக்கிற.. அப்படி நான் உனக்கு என்னடா பாவம் பண்ணினேன்..” என்றவள் கேட்டதும் சந்தோஷ் கோபம் அதிகரித்தது..

“யாரு நான் உன்னை கொண்டுபோய் பிரச்சனையில் சிக்க வைத்தேனா..? அன்னைக்கு அவளிடம் பிரச்சனையை விலைக்கு வாங்கிட்டு வந்தது நீதான்.. நான் இல்ல..” என்றவன் கோபத்துடன்...

“என்னைக்கு நான் யாரிடம் பிரச்சனையை விலைக்கு வாங்கிட்டு வந்ததை நீ பார்த்த..?” என்றவள் மேலும் அவனின் கோபத்தை தூண்டிவிட்டாள்..

“ஏன் நீ வாங்கிட்டே வரல.. ஒருத்தி என்மேல் உனக்கு உரிமை இல்லன்னு சொன்னால் கண்ணைக் கசக்கிட்டு வந்தீயே.. அப்போ தெரியலையா பிரச்சனையை விலைக்கு வாங்கிட்டு வந்திருக்கிற.. அது புரியாமல் என்னவோ பேசற பேச்சு” என்றவன் கோபத்துடன் சொல்லியவன் ஸ்டேரிங்கை குத்தினான்..

அவன் சொன்னதைக் கேட்டு அதிர்ந்த பிரியாவோ, “சந்தோஷ் அன்னைக்கு தீபி பேசியது..” என்றவள் இழுக்க, “எனக்கு எல்லாமே தெரியும்..” என்றவன் வாக்கியத்தை முடித்தான்..

“எல்லாம் தெரிஞ்சிதான் நீ தீபிகாவை லவ் பண்ணிட்டு இருந்திருக்க இல்ல..” என்று கேட்டவளின் குரல் கரகரத்தது.. சந்தோஷ் நிமிர்ந்து பிரியாவின் முகம் பார்த்து, “ஆமாம் அதுக்கு இப்போ என்ன..?” என்றவன் கோபத்தின் உச்சியில் நின்று கேட்டான்..

“நீ செய்திருப்பது பெரிய பிழையென்று உனக்கு புரியல..” என்றவள் கேட்டதும், “அன்னைக்கு எனக்கு அவளுக்கு பதிலடி கொடுக்கணும் என்பதைவிட நீ ஏதாவது செய்து கொள்வாயோ என்ற பயம்தான் அதிகமாக இருந்தது..” என்றவன் அன்றைய மனநிலையை அவளிடம் கூறினான்..

“இன்னைக்கு நீ கொடுத்த இதே பதிலடியை நீயே அப்போ கொடுத்திருக்கலாமே..” என்றவள் கேட்டுகொண்டே அவனின் முகம் பார்க்க, “இதே கேள்வியை நான் உன்னிடம் கேட்டா..?” என்றவன் இடதுபுருவம் உயர்த்தி அவளைப் பார்த்தான் சந்தோஷ்..

“எனக்கு புரியல..” என்றவள் சொல்ல, “அன்னைக்கு அவள் சொன்ன பொழுது என்னோட அத்துவை நான்தான் திருமணம் செய்வேன்.. உன்னால் முடிந்ததைப் பாருடி என்று நீ சொல்லி இருக்க வேண்டியதுதானே..? நீ அப்படி சொல்லியிருந்தா பிரச்சனை அன்றோடு முடிந்திருக்குமே..” என்றவன் கேட்க அவனின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறினாள்..

“அது நீ யாரையோ திருமணம் செய்வதைப் பார்க்க என்னால முடியாது..” என்றவள் தலையைக் குனிந்துகொண்டு கண்ணீரோடு சொல்ல, “நான் யாரைத் திருமணம் செய்கிறேன் என்ற முடிவை நான் எடுப்பேன்.. ஆனால் அன்னைக்கு நீ அந்த இடத்தில் பேசி இருந்தா யாருக்கும் ஏதும் ஆகிருக்காதே..” என்றவன் அவளுக்கு அவளின் தவறைப் புரிய வைக்க முயன்றான்..

“எனக்கு அந்த உரிமை இல்ல..” என்றவள் சொல்ல, “உனக்கு உரிமை இல்லை என்று யார் சொன்னது..? நானா..? இல்ல என்னோட அம்மா, அப்பா சொன்னாங்களா..?” என்றவன் அவளிடம் கேட்டான்..

அதுவரை அவனின் மனதில் அடைத்து வைத்திருந்தது எல்லாம் வார்த்தையாக வெளியே வர, “யாரோ ஒருத்தி சொன்னால் என்று என்னை எந்தளவுக்கு சித்தரவதை பண்ணிருக்க தெரியுமா..?” என்றவனின் கோபம் அதிகரித்தது.. அவள் ஒவ்வொரு முறை விலகி செல்லும் பொழுதும், மெளனமாக இருக்கும் பொழுதும் அவளின் காதலை அவன் நன்றாக உணர்ந்திருந்தான்..

“அப்போவே நீ பதிலடி அவளுக்கு கொடுத்திருந்தால் இன்னைக்கு நம்ம இருவரும் எதற்காக சண்டை போட வேண்டிய அவசியமே வந்திருக்காதே..?” என்றவனின் கேள்விக்கு அவளிடம் பதில் இல்லை.. அவனுடைய ஒவ்வொரு வார்த்தையிலும் அவனின் காதலை அவள் உணர்ந்தாளா என்று கேட்டால் அதற்கான விடை அவளுக்கே தெரியாது என்றே சொல்லலாம்..

“சின்ன வயதில் இருந்து உன்னை எனக்கு தெரியும் பிரியா.. என்னோட தங்கைகளை விட உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும்.. அதெல்லாம் ஐ லவ் யூ என்ற மூன்று வார்த்தையில் சொல்ல முடியுமா..?” என்றவன் அவளின் முகம் பார்த்துவிட்டு தொடர்ந்தான்..

“அத்து என்று நீ என்னை அழைக்கும் போது எல்லாம் எனக்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கும் தெரியுமா..? ஆயிரம் பேர் என்னை சந்தோஷ் என்று கூப்பிட்டாலும் என்னோட சந்தோஷம் எல்லாம் நீ கூப்பிடும் அத்து என்ற அழைப்பில் இருக்கு அதை எனக்கே உணரவைத்தவள் நீ..” என்றவன் தொடர்ந்தான்..

அவனின் மனதில் பிரியாவை எந்த அளவிற்கு நேசிக்கிறான் என்று அவனின் வார்த்தைகளால் அவளுக்கு உணர்த்தும் முயற்சியில் இறங்கிவன், “எவளோ சொன்னதும் நீ அத்து என்று கூப்பிடுவது இல்ல.. அதோட விட்டாயா இல்லையே.. காலேஜ் சேரும் பொழுது என்ன அல்சாட்டியம் பண்ணினாய்..” என்றவன் சொல்ல பிரியாவின் துடிப்புதான் அதிகமானது..

அவள் மனதளவில் பட்ட காயத்திற்கு அவன் தன்னுடைய செயலில் மருந்திட்டுவிட்டான்.. ஆனால் காதலித்தவளோ அவனுக்கு காயத்தையே பரிசளித்திருக்கிறாள் என்று அவளே உணராத பொழுது நமக்கு எப்படி தெரியும் அவனின் வலி என்னவென்று..!

“அவள் வந்து எனக்கு பிரபோஸ் பண்ணும் பொழுது கூட நீ அமைதியாக இருந்தாய் இல்ல.. அதுக்கு பிறகு எத்தனை முறை அவள் வந்து உன்னை சீண்டி இருப்பா.. அப்பொழுது எல்லாம் மெளனமாக இருந்தாய்..” என்றவன் அவளின் முகத்தை நிமிர்ந்து பார்த்தான்..

அவள் முகத்தை மூடிக்கொண்டு கதறியழுக, “நல்ல அழு.. யாரோ செய்த தவறுக்கு என்னை குற்றவாளி ஆக்கியதோடு மட்டும் இல்லாமல் எனக்கு தண்டனை கொடுத்த இல்ல.. எனக்கு தண்டனைக் கொடுக்க நீ யாருடி..? பாவம் ஒரு பக்கம்.. அதோட பழியை மட்டும் நான் சுமக்கனுமா..?” என்றவன் ஒவ்வொரு வார்த்தையும் நிறுத்தி நிதானமாகக் கேட்டான்..

அப்பொழுதும் மெளனமாக இருக்க, “நான் விட்டு தந்தால்தான் நீ வாழ முடியும் என்று அவளிடம் நீ ஒருமுறை சொல்லி இருக்கலாமே பிரியா..” என்றவன் வருத்தத்தோடு கேட்க, “என்னால சொல்ல முடியல..” என்றாள் பிரியா தன்னுடைய மௌனத்தை உடைத்தெறிந்த வண்ணம்..!

“அமைதி, பொறுமை, மௌனம் எல்லாம் எந்த இடத்தில் பயன்படுத்த வேண்டுமோ அந்த இடத்தில் நீ பயன்படுத்தவே இல்ல.. இப்போ என்னவோ என்னிடம் வந்து வானத்திற்கு பூமிக்கும் குதிக்கிற..” என்றவனின் கோபம் தணியும் நேரத்தில் மீண்டும் ஆரம்பித்தாள் பிரியா..

“இப்போ கூட நீ செய்தது தப்பாக தெரியலையா சந்தோஷ்..” என்றவள் அவனின் முகத்தைப் பார்த்து கேட்க, “பிரியா நீ புரியாமல் பேசறீயா என்று எனக்கு புரியலடி.. உன்னோட மௌனம், உன்னோட விலகல் எல்லாம் புரிந்த எனக்கு நான் என்ன தவறு செய்தேன் என்று எனக்கு புரியல..” என்றான் அவன் வருத்தத்தோடு..

“எனக்காக இதுவரை நீ ஒரு வார்த்தைக்கூட பேசல சந்தோஷ்.. நீ தீபிகாவை விரும்பிகிறேன் என்று சொல்லும் பொழுது நான் ஏன் உங்களைப் பிரிக்க நினைக்கணும்.. இப்போ கூட அவளிடம் தோற்று போக கூடாது என்று என்னோட கழுத்தில் தாலி கட்டிருக்க என்ற உண்மை உனக்கு புரியுதா..?” என்றவள் கேட்டதும் அவனின் முகம் செந்தணலாக மாரிவிட்டது..

“அடியேய் உனக்கு என்ன பைத்தியமா..? உன்னோட மனசில் நீ பட்ட காயத்திற்கு அவளுக்கு நான் பதிலடி கொடுக்கணும் என்ற அவசியம் எனக்கு எதுக்குடி வந்தது.. பிரியா நீ அவள் முன்னாடி தோற்றுப்போக கூடாது என்று நான் பொறுமையாக இருந்தது என்னோட தவறா..?” என்றவன் அவளிடம் கேட்டதும் நொடிகூட யோசிக்காத பிரியா, “ஆமா..” என்றாள் அழுத்தத்துடன்..

“சின்ன வயதில் இருந்து கூட வளர்ந்த உனக்கு இல்லாத உரிமையா அவளுக்கு இருக்கு.. முதலில் ஒன்று மட்டும் புரிஞ்சிக்கோ பிரியா, நம்மளை மட்டம் தட்டும் பொழுதே அவங்களுக்கு உண்டான பதிலடி கொடுக்கணும்.. இல்லாட்டி இவள்தானே என்ற எண்ணம் வந்துவிடும்.. மறுபடி மறுபடி சீண்டிக்கிட்டே இருப்பாங்க..” என்றவன் சொல்லிவிட்டு காரை எடுத்தான்..

தன்னுடைய கழுத்தில் இருந்த தாலியைப் பார்த்தவள், “எனக்கு உன்னோட வாழ விருப்பம் இல்ல சந்தோஷ்..” என்றவள் பிடிவாதமாக சொல்ல, “சரிடி எனக்கும் ஒரு மனசு இருக்கு.. உனக்கு என்னோட வாழ விருப்பம் இல்லையென்றால் என்னைத் தூக்கி எறிஞ்சிட்டு போ..” என்றவன் காரை வீட்டின் முன்னாடி நிறுத்தினான்..

“அப்போ எதுக்குடா எனக்கு இந்த தாலியை என்னோட கழுத்தில் கட்டின..?” என்றவள் அவளிடம் கேட்டாள்.. உடனே காரைவிட்டு இறங்கிய சந்தோஷ், “இதே கேள்வியை வீட்டிற்குள் வந்து கேளுடி.. அதுக்கு உண்டான பதிலை நான் கொடுக்கிறேன்..” என்றவன் சொல்லிவிட்டு வீட்டின் உள்ளே நுழைந்தான்..

அவர்களுக்கு முன்னாடி வீட்டிற்கு வந்த மித்ரா எல்லோரிடமும் அவர்களின் திருமணத்தைப் பற்றி சொல்லிவிட்டாள்.. வீட்டில் இருந்த எல்லோருக்கும் ஒருபக்கம் மகிழ்ச்சியாக இருந்தது என்றால், இன்னொரு பக்கம் அதிர்ச்சியாகவும் இருந்தது இவர்களின் திருமணம்..!
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அப்பொழுது வீட்டின் உள்ளே நுழைந்த மகனைப் பார்த்த அபிநந்தன், “டேய் சந்தோஷ் நீ பிரியாவை விரும்புகிறாயா என்று கேட்ட பொழுது எல்லாம் அமைதியாக இருந்துவிட்டு இப்போ என்ன காரியம் பண்ணிட்டு வந்து நிற்கிற..” என்றவர் அவனிடம் கேட்டார்..

அவனின் பின்னோடு வீட்டின் உள்ளே நுழைந்த பிரியாவைப் பார்த்தவன், “நான் தீபிகாவைத்தான் அப்பா லவ் பண்ணினேன்.. இப்போ அவள் என்னைத் தூக்கி எறியும் பொழுது அவள் முன்னாடி தோற்று போய் நிற்க எனக்கு விருப்பம் இல்ல.. அதுதான் பிரியாவோட கழுத்தில் தாலிகட்டினேன்..” என்றவன் கொஞ்ச நேரத்திற்கு முன்னாடி பிரியா சொன்ன அதே வாக்கியத்தை அனைவரிடமும் சொல்லி பழியை அவன் மீதே போட்டுகொண்டான்..

அவன் சொல்லி முடிக்கும் பொழுது பிருந்தாவிற்கு கோபம் வந்துவிட மகனை ‘பளார்..’ என்று ஒரு அறைவிட்டவர், “ஒரு பொண்ணோட வாழ்க்கை என்றால் உனக்கு அவ்வளவு சாதாரணமா..? உன்னிடம் நான் இப்படியொரு செயலை எதிர்பார்க்கவே இல்ல சந்தோஷ்..” என்றார் வெறுப்போடு..

அம்மாவிடம் அடி வாங்கிய சந்தோஷ் அமைதியாக நின்றிருக்க, “அம்மா அண்ணா..” என்ற மித்ராவின் கையைப்பிடித்த சந்தோஷ், “நீ அமைதியாக இரு மித்ரா..” என்றவன் மெல்லிய குரலில் கூறினான்.. அவள் அண்ணனின் வார்த்தைக்கு கட்டுப்பாடு அமைதியாக இருந்தாள்..

அவனின் முன்னாடி வந்து நின்ற பிரியா, “இதை எதற்கு சந்தோஷ் என்னோட கழுத்தில் கட்டினாய்..? நேற்று நீ காதலிக்க தீபிகா.. இன்னைக்கு தாலிக்கட்ட நான்.. நாளை யாரு..” என்று கேட்க அவளை நிமிர்ந்து பார்த்த மகனைப் பார்த்த அர்ஜூன், “அவளுக்கு பதில் சொல்லு சந்தோஷ்..” என்றார்..

“இந்த கேள்விக்கு உனக்கே பதில் தெரியும்.. நான் விளக்கம் கொடுக்க விரும்பல..” என்றவன் விக்ரமின் அருகில் சென்று, “மாமா நீங்க என்னை தவறாக நினைத்தால் நாலு அடிகூட அடிச்சிகோங்க.. ஆனால் நான் இந்த செயலை வேண்டும் என்று பண்ணிருக்க மாட்டேன் என்ற வழியில் கொஞ்சம் யோசிங்க மாமா..” என்றவன் அவரின் கண்களைப் பார்த்து நெருக்கு நேர் பேசினான்..

அப்பொழுது விக்ரம் பிரியாவைப் பார்க்க, “எனக்கு உன்னோட வாழ விருப்பம் இல்ல சந்தோஷ்..” என்று பிரியா மீண்டும் சொல்ல சந்தோஷ் கோபம் அதிகரிக்க, “என்னோட வாழ பிடிக்கல என்றால் இப்பவே வீட்டைவிட்டு வெளியே போ..” என்றவள் வெறியோடு வாசலை நோக்கி கைக்கட்ட பிரியாவின் கண்களை கலங்க இப்பொழுது மகனை அறைந்தார் அபிநந்தன்..

“என்னடா நீயும் இப்படி பேசற.. அனைத்து தப்பும் செய்தவன் நீ.. அவளை சொல்ல உனக்கு எந்த உரிமையும் இல்ல..” என்றவர் அழுத்தத்தோடு சொல்ல, “அப்பா அவளோட கழுத்தில் தாலி கட்டிய புருஷன் என்ற உரிமையில் சொல்லும் பொழுது நீங்க எங்களுக்கு இடையே வராதீங்க அப்பா.. என்னோட விஷயம்.. நானே பார்த்து கொள்கிறேன்..” என்றவள் நிதானத்தோடு ஒவ்வொரு வார்த்தையிலும் அழுத்தம் கொடுத்து உச்சரித்தான்..

அவனின் வார்த்தையில் இருந்த உண்மையை உணர்ந்தவர், “ம்ம் என்னோட மகனை நான் ரொம்ப நல்ல வளர்த்திட்டேன் என்ற கர்வத்தில் இருந்தேன்.. இப்போ ரொம்ப பெருமையாக இருக்கு சந்தோஷ்..” என்றவர் அவனைவிட்டு விலகிச்செல்ல, “அப்பா..” என்று அழைத்தான் சந்தோஷ்..

“அப்பா என்னை மகன் என்ற முறையில் கண்டிக்க உங்களுக்கு அனைத்து உரிமையும் இருக்குப்பா.. ஆனால் அவளுக்கு புரியவைக்க என்னால முடியலப்பா.. அந்த கோபத்தில் பேசிட்டேன்.. என்னை மன்னிச்சிருங்க அப்பா..” என்றவன் அபிநந்தனின் தோளில் சாய்ந்து கலங்கினான்..

தோளிற்கு மேல் வளர்ந்தால் தோழன் என்று சொல்வதுண்டு.. தன்னுடைய மகன் சில்ல குழந்தைபோல தோள் சாந்து கலங்குவதைப் பார்த்தவர் அவனை இழுத்து அணைத்துக்கொண்டவரின் விழிகள் கூட கலங்கிட பிருந்தா கதறி அழுதார்.. அர்ஜுன், சந்துரு, மலர்விழி, மேகா, மீராவின் கண்களில் கூட கண்ணீர் எட்டிப்பார்த்தது.. .

“டேய் அப்பா உன்னோட நல்லதுக்குதான் சொன்னேன்.. மற்றபடி அப்பா உன்னை நல்லாத்தான் வளர்த்தி இருக்கிறேன்.. இந்த மாதிரி ஒரு மகன் யாருக்கும் கிடைக்க மாட்டான் சந்தோஷ்.. அந்த வகையில் நான் ரொம்ப பெருமைபடுகிறேன்டா சந்தோஷ்..” என்றவர் அவனைத் தேற்றினார்..

அவனை தன்னிடம் இருந்து பிரித்தவர், “உன்னோட வாழ்க்கை.. நீயே முடிவு செய்..” என்றவர் சொல்ல பிரியாவைத் திரும்பிப் பார்த்தான் சந்தோஷ்.. இப்பொழுது அவனிடம் ஒரு தெளிவு வந்திருக்க, “ஆனால் நீயாக என்னை தேடி வரும்வரை நான் உன்னைத் தேடி வரமட்டேன்..” என்றவன் பிடிவாதமாகக் கூறினான்..

அவனின் பிடிவாதததை நன்றாக அறிந்த பிருந்தா மீண்டும் மகனை அடிக்க செல்ல, “பிந்து நம்ம அவங்க இருவருக்கும் இடையே போகக்கூடாது.. அவங்களுக்குள் வேற பிரச்சனை இருக்கு.. நம்ம மகன் மீதும் தவறு இருக்கு.. பிரியா மீதும் தவறு இருக்கு பொறுமையாக இரு..” என்று மனைவியைக் கட்டுக்குள் கொண்டுவந்தார்..

‘பிரியா சின்னத்தில் இருந்து இப்படி இல்ல.. ஆனால் இப்போ ஏன் இப்படி பண்ற.. சரி தாலி கட்டியது சந்தோஷ்.. அவனை வேண்டாம் என்று மகளின் பக்கம் நின்றாள் பிருந்தாவின் மனம் என்ன பாடுபடும்..’ என்று நினைத்தவர் மெளனமாக மகளைப் பார்த்தார்..

அப்பொழுது அண்ணனின் எதிரே வந்த சஞ்சீவ், “அண்ணி கேட்பதில் என்ன தவறு இருக்கு அண்ணா..?” என்றவன் கேட்க, “நீ தீபிகாவை லவ் பண்ற என்றுதானே எங்களிடம் சொல்லிட்டு இருந்தாய்..?” என்றவன் கேட்டான்.. அவனுக்கு பிரியாவின் கேள்வி சரியாகப்பட்டது..

“அந்த தீபிகா யார் என்றும் உனக்கு சொல்லியிருக்கேனே..” என்றவன் தம்பிக்கு நினைவுபடுத்த அவன் மௌனமாகிவிட்டான்.. தீபிகாவால் பிரச்சனை வந்து என்று எல்லோருக்கும் புரிந்தாலும், ‘அந்த தீபிகா பிருந்தாவின் தம்பி மகள் என்று இவனும் யாரிடமும் சொல்லவில்லை.. மற்றவர்களையும் இந்த விஷயத்தை சொல்ல விடவில்லை..

அதற்கு ஒரு காரணம், ‘தன்னுடைய தாய் மனமுடைந்து போகவே கூடாது.. இந்த குருவிக்கூடு கொஞ்சம் கொஞ்சமாக சிதைவதைப் பார்க்க தன்னுடைய தாயால் முடியாது.. நாங்க ஒற்றுமையாக இருப்பதில் மட்டுமே அவங்களோட நிம்மதி இருக்கு..’ என்று நன்றாக உணர்ந்திருந்தான் சந்தோஷ்..

அப்பொழுது யாரையும் கவனிக்காத பிரியாவோ, “அப்பா, அம்மா வாங்க..” என்றவள் அழைக்க அவளின் பக்கம் திரும்பிய சந்தோஷ், “மாமா, அத்தை நீங்க யாரும் அவளோட போகக்கூடாது..” என்றவன் பிடிவாதத்தோடு கூறினான்..

“என்னோட அப்பா, அம்மாவை எனக்கு எதிரியாக மாற்றுகிறாய்..?” என்றவள் கோபத்தோடு கேட்க, “தூங்குபவர்களை எழுப்பலாம்.. தூக்குவது போல நடிப்பவர்களை எழுப்ப முடியாது.. நீ போ.. ஆனால் இந்த வீட்டு படியைத் தாண்டும் முன்னாடி ஒரு விஷயத்தை நல்ல தெரிஞ்சிக்கோ..” என்றவனை நிமிர்ந்து பார்த்தாள் பிரியா..

“எக்காரணத்தைக் கொண்டும் நான் உன்னைத் தேடி வரமாட்டேன்.. என்னோட வாழவேண்டும் என்றால் நீதான் என்னைத் தேடி வரணும்..” என்றவன் அழுத்துடன் கூறினான்..

மதுபாலா, சஞ்சனா இருவரும் அமைதியாக இருக்க அங்கிருந்து பிரியா வெளியே செல்ல, “நானும் அண்ணியோட போறேன்.. அண்ணியைத் தனியாக அனுப்ப எனக்கு மனசில்லை..” என்ற சஞ்சீவ் தன்னுடைய துணிகளை எடுத்துகொண்டு அவளின் பின்னோடு சென்றான்.. அவனை யாரும் அங்கே தடுக்கவில்லை..

சந்துரு – மலர்விழி, அர்ஜூன் மேகா இருவரும் அடுத்து என்ன நடக்கும் என்று பார்த்துக் கொண்டிருக்க, “மாமா நீங்க என்னோட பக்கம் நின்றது எனக்கு போதும் மாமா.. பிரியா வருவாள் மாமா.. அவளை யாருக்காகவும், எதற்காகவும் நான் விட்டுகொடுக்கவே மாட்டேன்..” என்றவன் உறுதியோடு கூறினான்..

“உன்மேல் எனக்கு நம்பிக்கை இருக்கு சந்தோஷ்..” என்று விக்ரம் – மீரா இருவரும் கூறினார்.. அப்பா அம்மாவின் பக்கம் திரும்பியவன், “ஸாரிப்பா.. ஸாரிம்மா..” என்றவன் சொல்ல, “ஏங்க அவனை என்கிட்ட பேசவேண்டாம் என்று சொல்லுங்க.. பிரியாவை போக வேண்டாம் என்று சொல்லுங்க..” என்றார் பிருந்தா..

“என்னால அது மட்டும் முடியாதும்மா..” என்றவன் வேகமாக படியேறி சென்றுவிட்டான்.. அன்று அந்த வீட்டில் இருந்து கண்ணீரோடு கிளம்பிய பிரியா இன்றுவரை அந்த வீட்டிற்கு செல்லவே இல்லை.

கடந்த காலத்தை விட்டு வெளியே வந்த பிரியாவிற்கு எல்லாமே புரிந்தது.. அவனின் காதல் மனதை அவன் சொல்லாவிட்டாலும் ஒவ்வொரு செயலும் தன்னை அவளுக்கு உணர்த்தியவனை உதறிவிட்டு வந்தாள்..

கடைசியாக அவன் தன்னை புரிந்து வைத்திருந்த அளவு கூட பிரியா அவனை புரிந்துகொள்ளவில்லை என்று அவள் உணர்ந்த பொழுது அவளுக்கு அழுகை மட்டுமே வந்தது.. காலையில் இருந்து கடந்த காலத்தின் தாக்கத்தில் இருந்தவள் மாலை வீடு திரும்பினாள்..
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
நானும் வந்துட்டேன்,
சந்தியா டியர்
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சந்தியா ஸ்ரீ டியர்
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top