அத்தியாயம் -21
அவன் காரை நிறுத்திய இடம் கடற்கரை சாலையில் அமைத்திருக்கும் ஹோட்டல்.. அதைக் கண்டவள் அவனைக் கேள்வியாக பார்க்க, அவனோ பதிலே பேசாமல் காரைவிட்டு கீழிறங்கினான்.. அவனின் பின்னோடு காரைவிட்டு இறங்கிய பிரியா, “அத்து இங்கே எதுக்கு கூட்டிட்டு வந்திருக்கீங்க..??” என்று புரியாமல் கேட்டாள்..
அவளின் அழைப்பைக் காதில் வாங்காத சந்தோஷ், “எனக்கு ரொம்ப படிக்குது தேனு.. என்ன பேசுவதாக இருந்தாலும் சாப்பிட்டு முடித்துவிட்டு பீச்சில் போய் உட்கார்ந்து பேசலாம்..” என்றவன் அங்கிருக்கும் டேபிளில் அமர்ந்தான்..
“அத்து எல்லோரும் லவ் சொல்ல எங்கேயோ கூட்டிட்டு போவாங்க.. நீ ரொம்ப நல்லவன்டா.. உயிரே போவதாக இருந்தாலும் சாப்பிட்டு முடித்துவிட்டு போகட்டும் என்று ஹோட்டலுக்கு வந்து உட்கார்ந்து இருக்கிற..” என்றவள் அவனைக் கலாய்த்தாள்..
“தேனு தேனு.. நீ நெற்றில் இருந்து சாப்பிடவே இல்ல.. அது உனக்கு முதலில் ஞாபகம் இருக்கா..?” என்றவன் நக்கலாகக் கேட்டு சாப்பிட ஆடார் செய்ய, “நான் சாப்பிடாமல் இருந்தேன் என்று உனக்கு தெரியுமா..?” என்றவள் அவனைப் பார்த்து கேள்வியுடன் புருவம் உயர்த்தினாள்..
“எனக்கு நல்ல தெரியும் தேனு.. நேற்று முழுக்க கடந்த காலத்து நினைவில் மூழ்கி ஒரு வழியாகி இருப்ப.. நேற்று நைட் நீ சாப்பிட்டிருக்க மாட்டாய் என்பது என்னோட கணக்கு.. காலையில் எழுந்தும் மேடம் சென்னை கிளம்பியாச்சு.. இப்போ வரை பச்சை தண்ணிகூட குடிக்காமல் என்னோட வம்பு வளர்த்திட்டு இருக்கிற..” என்றவன் மனப்பாடம் செய்தது போல ஒப்பித்தான்..
அவனை ஆச்சரியமாக பார்த்தவள், “முதலில் சாப்பாடு.. அப்புறம் எல்லா பிரச்சனையையும் விலாவரியாக பேசலாம்..” என்றவன் சொல்ல, “அத்து எனக்கு பசிக்கல..” என்றவள் சிணுங்க அவளின் தலையில் நறுக்கென்று கொட்டியவன், “முதலில் சாப்பிடு..” என்றவனும் அவளோடு சாப்பிட ஆரம்பித்தான்..
அவள் சாப்பிட்டு முடித்ததும் ஹோட்டலுக்கு பில் கட்டிவிட்டு வெளியே வந்த சந்தோஷ் அருகில் இருந்த ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் உள்ளே நுழைய, “அத்து இங்கே என்னடா போற..” என்றவள் கேட்க, “இருடி வருகிறேன்..” என்றவன் வேகமாக உள்ளே சென்றான்..
“இவன் எந்த நேரம் என்ன பண்ணுகிறான் என்று ஒண்ணுமே புரியலையே ஆண்டவா.. எனக்கு இவனை புரிந்து கொள்ளும் சக்தியைக் கொடுப்பா..” என்றவள் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் வெளியே நின்று வேண்டிகொண்டிருக்க காம்ப்ளக்ஸ் உள்ளே சென்றவன் வெளியே வரும் பொழுது ஆளு உயரத்திற்கு ஒரு சிவப்பு கலர் டெடிபியருடன் வந்தான்..
“அத்து இது என்ன என்னோட உயரத்திற்கு வாங்கிட்டு வருகிற..” என்றவள் அவனிடம் இருந்து அந்த கரடி பொம்மையை வாங்க கைநீட்ட, “அப்போ அத்து சொல்றதுக்கு எல்லாம் நீ தலையாட்டனும்.. அப்போதான் தருவேன்..” என்றவன் அவளிடம் பேரம் பேசினான்.. அவனின் முகம் பார்த்த பிரியா கொஞ்சம் சுதாரித்து, “எனக்கு வேண்டாம் நீ எக்குதப்பாக எதாவது கேட்டு என்னோட உயிரை வாங்குவ..” என்றவளின் கன்னங்கள் இரண்டும் சிவந்தது..
அதை ரசனையோடு பார்த்த சந்தோஷ், “இதை காரில் வைத்து போகலாம்..” என்றவன் காரின் பின் சீட்டில் டெடிபியரை வைத்துவிட்டு பிரியாவுடன் கைகோர்த்த வண்ணம் கடற்கரை மணலில் மெல்ல நடக்க இருவரும் மனமும் காற்றைவிட லேசாகிவிட மனம் ஏதேதோ நினைவுகளுக்கு சென்று வந்தது..
மெல்ல அங்கே ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் சென்று மணலில் அமர்ந்தவன் பிரியாவின் பக்கம் திரும்பி, “வா தேனு.. இங்கே உட்காரு.. உன்னோட கொஞ்சம் பேசணும்..” என்றவன் சொல்ல அவளும் அமைதியாக அவனின் அருகில் அமர்ந்தாள்..
வானம் இருளாக மாறிவிட முழு நிலவு வானில் தன்னுடைய பயணத்தைத் தொடங்க கடற்கரை ஓரமாக வீசிய தென்றல் காற்று மனதில் ஒரு வகையான நிம்மதியை கொடுக்க கடலலைகளை வேடிக்கைப் பார்த்து கொண்டிருந்தாள் பிரியா..
“மையூ..” என்று அழைத்தவன் அங்கே நிலவிய அமைதியை முதலில்கலைக்க நிமிர்ந்து சந்தோஷ் முகம் பார்த்தாள் பிரியா.. அவனின் முகம் முழுவதிலும் சோகம் திரையிட்டு இருக்க, “அத்து..” என்றவனின் கரத்தை பிடித்து அழுத்தம் கொடுத்தாள்..
அவளின் கரம் மீது தன்னுடைய கரத்தை வைத்தவன், “நீ என்னைவிட்டு விலக ஆரம்பித்த நாளில் இருந்தே இந்த கடற்கரைதான் எனக்கு நிம்மதியைக் கொடுத்துட்டு இருக்கு..” என்றவன் அவளின் முகம் பார்க்க, “கடந்த காலம் பற்றி பேச வேண்டாம் அத்து..” என்றவள் மெல்லிய குரலில் கூறினாள்..
“இல்ல பேசணும்..” என்று பிடிவாதமாகக் கூறியவன், “நீ எனக்கு எப்போவும் ஸ்பெஷல் தேனு.. என்னோட மனசில் இருப்பதை நான் எப்பவோ சொல்லிருந்தால் நமக்கு இடையே இந்த பிரிவு வந்திருக்காது இல்ல..” என்றவனின் முகத்தை அமைதியாக பார்த்தாள் பிரியா..
“இது நம்ம பிடிவாதத்தால் வந்த பிரிவு அத்து..” என்றவள் சொல்ல, “ஒரு வகையில் நீ சொல்வது நிஜம்தான் நான் இல்ல என்று சொல்லவே இல்ல.. ஆனால் என் மீதும் தவறு இருக்கு.. நான் உன்னிடம் என்னோட காதலைச் சொல்லியிருந்தால் நமக்கு இடையே தீபிகா வர வழியே இல்லாமல் போயிருக்குமே..” என்றவனின் குரல் கரகரத்தது..
அவனின் பேச்சில் அவளின் உதட்டில் புன்னகை அரும்ப, “உனக்கு ஒரு விஷயம் புரியல அத்து.. தீபிகா வரவில்லை என்றால் நம்ம மனசில் இருந்த காதலை நாம் உணராமலே போயிருப்பபோம். என்றவள் வேறொரு கோணத்தில் யோசித்தாள்..
“உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும் பிரியா.. நீயும், மித்ராவும் சண்டை போடும் பொழுது எல்லாம் உங்களை சமாதானம் பண்ண நான் படும்பாடு எனக்கு தெரியும்..” என்றவனை அவள் இமைக்காமல் பார்த்தாள்..
“எந்த நொடி என்னோட மனதில் நீ காதலியாக மாறினாய் என்று எனக்கே தெரியல.. ஆனால் அதை காதல் என்று நான் உணர்ந்தது.. முதல் முறையாக நீ என்னை ஸார் என்று அழைத்த பொழுதுதான் தேனு..” என்றவன் சொல்ல புரியாத பார்வைப் பார்த்தாள்..
“நான் உங்களை எப்போ அத்து அப்படி கூட்டிட்டேன்..” என்றவள் புரியாமல் கேட்க, “தீபிகூட சண்டை போட்டுட்டு கோவிலில் இருந்து வெளியே வரும் பொழுது..” என்றவன் அந்த நாளை ஞாபகப்படுத்தினான்..
அன்றைய நாளின் தாக்கத்தில் அமந்திருந்திருந்த பிரியா, “அன்னைக்குதான் நானும் உணர்ந்தேன் அத்து.. என்னோட மனசில் இருந்த காதலை.. என்னவோ என்னால உன்னிடம் சொல்ல முடியல..” என்றவள் அவனின் தோள் சாய அவளின் தோளில் கைபோட்டான் சந்தோஷ்..
அவள் அமைதியாக இருக்க, “நீ என்னைவிட்டு விலக விலக என்னோட மனசில் உனக்கு இருக்கும் இடம் எனக்கு புரிய ஆரம்பித்தது தேனு.. ஆனால் அதை நான் உணரவே இல்ல..” என்றவன் சொல்ல அவளின் உதட்டில் குறும்பு புன்னகை மலர்ந்தது..
“அப்போ என்னோட மனசு உனக்கு நல்லாவே தெரியும் இல்ல அத்து..” என்றவள் நக்கலோடு கேட்க, “ஆமா நல்ல தெரியும்.. என்னோட மனசை நீ நல்லாவே புரிஞ்சி வைச்சிருக்க இல்ல.. எதை செய்யாதே என்று சொல்றோமோ அதை நான் சரியாக செய்வேன் என்று தெரிந்தே நீ மெளனமாக இருந்த இல்ல..” என்றவன் அவளைப் பார்த்து புருவம் உயர்த்தினான்..
“ஹா.. ஹா.. ஹா.. அத்து உன்னை நான் புரிந்து வைத்திருத்தால் தான் நானே உன்னைத் தேடி வந்திருக்கிறேன்..” என்றவள் அவனைக் குத்திகாட்டிட, “ஏய் நான் உன்னைத் தேடி வரல என்று என்னைக் குத்தி காட்டிற இல்ல..” என்றவன் அவளை முறைத்தான்..
“அது உண்மைதானே..??” என்றவள் அவனைப் பார்த்து புருவம் உயர்த்திட, “நான் வரவே இல்லை என்று உனக்கு தெரியுமா..?” என்றவன் கேட்டதும், “நீங்க வரவே இல்ல என்று எனக்கு நல்ல தெரியும்..” என்றவள் முகத்தைத் திருப்பினாள்..
“இவளுக்கு தெரிஞ்ச மாதிரியே பேசுவா..” என்றவன் முணுமுணுக்க, “என்ன அங்கே தனியாக புலம்பற..” என்றவள் அவனை அதட்டல் போட, “என்னோட மனசில் இருப்பது புரியாமல் தானே நீ நம்ம வீட்டில் இருக்கும் எல்லோரோட உயிரையும் வாங்கிட்டு இருக்கிற.. அதைதான் சொல்லிட்டு இருந்தேன்..” என்றவன் விளையாட்டாக சொல்ல அவளோ தலையைக் குனிந்து கொண்டாள்..
“தீபிகாவைக் காதலித்தேன் என்று நீ சொல்லும் பொழுது எல்லாம் எனக்கு எவ்வளவு கோபம் வரும் தெரியுமா..?” என்றவன் கேட்க அவளோ தெரியாது என்பது போல தலையசைத்தாள்..
அவன் காரை நிறுத்திய இடம் கடற்கரை சாலையில் அமைத்திருக்கும் ஹோட்டல்.. அதைக் கண்டவள் அவனைக் கேள்வியாக பார்க்க, அவனோ பதிலே பேசாமல் காரைவிட்டு கீழிறங்கினான்.. அவனின் பின்னோடு காரைவிட்டு இறங்கிய பிரியா, “அத்து இங்கே எதுக்கு கூட்டிட்டு வந்திருக்கீங்க..??” என்று புரியாமல் கேட்டாள்..
அவளின் அழைப்பைக் காதில் வாங்காத சந்தோஷ், “எனக்கு ரொம்ப படிக்குது தேனு.. என்ன பேசுவதாக இருந்தாலும் சாப்பிட்டு முடித்துவிட்டு பீச்சில் போய் உட்கார்ந்து பேசலாம்..” என்றவன் அங்கிருக்கும் டேபிளில் அமர்ந்தான்..
“அத்து எல்லோரும் லவ் சொல்ல எங்கேயோ கூட்டிட்டு போவாங்க.. நீ ரொம்ப நல்லவன்டா.. உயிரே போவதாக இருந்தாலும் சாப்பிட்டு முடித்துவிட்டு போகட்டும் என்று ஹோட்டலுக்கு வந்து உட்கார்ந்து இருக்கிற..” என்றவள் அவனைக் கலாய்த்தாள்..
“தேனு தேனு.. நீ நெற்றில் இருந்து சாப்பிடவே இல்ல.. அது உனக்கு முதலில் ஞாபகம் இருக்கா..?” என்றவன் நக்கலாகக் கேட்டு சாப்பிட ஆடார் செய்ய, “நான் சாப்பிடாமல் இருந்தேன் என்று உனக்கு தெரியுமா..?” என்றவள் அவனைப் பார்த்து கேள்வியுடன் புருவம் உயர்த்தினாள்..
“எனக்கு நல்ல தெரியும் தேனு.. நேற்று முழுக்க கடந்த காலத்து நினைவில் மூழ்கி ஒரு வழியாகி இருப்ப.. நேற்று நைட் நீ சாப்பிட்டிருக்க மாட்டாய் என்பது என்னோட கணக்கு.. காலையில் எழுந்தும் மேடம் சென்னை கிளம்பியாச்சு.. இப்போ வரை பச்சை தண்ணிகூட குடிக்காமல் என்னோட வம்பு வளர்த்திட்டு இருக்கிற..” என்றவன் மனப்பாடம் செய்தது போல ஒப்பித்தான்..
அவனை ஆச்சரியமாக பார்த்தவள், “முதலில் சாப்பாடு.. அப்புறம் எல்லா பிரச்சனையையும் விலாவரியாக பேசலாம்..” என்றவன் சொல்ல, “அத்து எனக்கு பசிக்கல..” என்றவள் சிணுங்க அவளின் தலையில் நறுக்கென்று கொட்டியவன், “முதலில் சாப்பிடு..” என்றவனும் அவளோடு சாப்பிட ஆரம்பித்தான்..
அவள் சாப்பிட்டு முடித்ததும் ஹோட்டலுக்கு பில் கட்டிவிட்டு வெளியே வந்த சந்தோஷ் அருகில் இருந்த ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் உள்ளே நுழைய, “அத்து இங்கே என்னடா போற..” என்றவள் கேட்க, “இருடி வருகிறேன்..” என்றவன் வேகமாக உள்ளே சென்றான்..
“இவன் எந்த நேரம் என்ன பண்ணுகிறான் என்று ஒண்ணுமே புரியலையே ஆண்டவா.. எனக்கு இவனை புரிந்து கொள்ளும் சக்தியைக் கொடுப்பா..” என்றவள் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் வெளியே நின்று வேண்டிகொண்டிருக்க காம்ப்ளக்ஸ் உள்ளே சென்றவன் வெளியே வரும் பொழுது ஆளு உயரத்திற்கு ஒரு சிவப்பு கலர் டெடிபியருடன் வந்தான்..
“அத்து இது என்ன என்னோட உயரத்திற்கு வாங்கிட்டு வருகிற..” என்றவள் அவனிடம் இருந்து அந்த கரடி பொம்மையை வாங்க கைநீட்ட, “அப்போ அத்து சொல்றதுக்கு எல்லாம் நீ தலையாட்டனும்.. அப்போதான் தருவேன்..” என்றவன் அவளிடம் பேரம் பேசினான்.. அவனின் முகம் பார்த்த பிரியா கொஞ்சம் சுதாரித்து, “எனக்கு வேண்டாம் நீ எக்குதப்பாக எதாவது கேட்டு என்னோட உயிரை வாங்குவ..” என்றவளின் கன்னங்கள் இரண்டும் சிவந்தது..
அதை ரசனையோடு பார்த்த சந்தோஷ், “இதை காரில் வைத்து போகலாம்..” என்றவன் காரின் பின் சீட்டில் டெடிபியரை வைத்துவிட்டு பிரியாவுடன் கைகோர்த்த வண்ணம் கடற்கரை மணலில் மெல்ல நடக்க இருவரும் மனமும் காற்றைவிட லேசாகிவிட மனம் ஏதேதோ நினைவுகளுக்கு சென்று வந்தது..
மெல்ல அங்கே ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் சென்று மணலில் அமர்ந்தவன் பிரியாவின் பக்கம் திரும்பி, “வா தேனு.. இங்கே உட்காரு.. உன்னோட கொஞ்சம் பேசணும்..” என்றவன் சொல்ல அவளும் அமைதியாக அவனின் அருகில் அமர்ந்தாள்..
வானம் இருளாக மாறிவிட முழு நிலவு வானில் தன்னுடைய பயணத்தைத் தொடங்க கடற்கரை ஓரமாக வீசிய தென்றல் காற்று மனதில் ஒரு வகையான நிம்மதியை கொடுக்க கடலலைகளை வேடிக்கைப் பார்த்து கொண்டிருந்தாள் பிரியா..
“மையூ..” என்று அழைத்தவன் அங்கே நிலவிய அமைதியை முதலில்கலைக்க நிமிர்ந்து சந்தோஷ் முகம் பார்த்தாள் பிரியா.. அவனின் முகம் முழுவதிலும் சோகம் திரையிட்டு இருக்க, “அத்து..” என்றவனின் கரத்தை பிடித்து அழுத்தம் கொடுத்தாள்..
அவளின் கரம் மீது தன்னுடைய கரத்தை வைத்தவன், “நீ என்னைவிட்டு விலக ஆரம்பித்த நாளில் இருந்தே இந்த கடற்கரைதான் எனக்கு நிம்மதியைக் கொடுத்துட்டு இருக்கு..” என்றவன் அவளின் முகம் பார்க்க, “கடந்த காலம் பற்றி பேச வேண்டாம் அத்து..” என்றவள் மெல்லிய குரலில் கூறினாள்..
“இல்ல பேசணும்..” என்று பிடிவாதமாகக் கூறியவன், “நீ எனக்கு எப்போவும் ஸ்பெஷல் தேனு.. என்னோட மனசில் இருப்பதை நான் எப்பவோ சொல்லிருந்தால் நமக்கு இடையே இந்த பிரிவு வந்திருக்காது இல்ல..” என்றவனின் முகத்தை அமைதியாக பார்த்தாள் பிரியா..
“இது நம்ம பிடிவாதத்தால் வந்த பிரிவு அத்து..” என்றவள் சொல்ல, “ஒரு வகையில் நீ சொல்வது நிஜம்தான் நான் இல்ல என்று சொல்லவே இல்ல.. ஆனால் என் மீதும் தவறு இருக்கு.. நான் உன்னிடம் என்னோட காதலைச் சொல்லியிருந்தால் நமக்கு இடையே தீபிகா வர வழியே இல்லாமல் போயிருக்குமே..” என்றவனின் குரல் கரகரத்தது..
அவனின் பேச்சில் அவளின் உதட்டில் புன்னகை அரும்ப, “உனக்கு ஒரு விஷயம் புரியல அத்து.. தீபிகா வரவில்லை என்றால் நம்ம மனசில் இருந்த காதலை நாம் உணராமலே போயிருப்பபோம். என்றவள் வேறொரு கோணத்தில் யோசித்தாள்..
“உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும் பிரியா.. நீயும், மித்ராவும் சண்டை போடும் பொழுது எல்லாம் உங்களை சமாதானம் பண்ண நான் படும்பாடு எனக்கு தெரியும்..” என்றவனை அவள் இமைக்காமல் பார்த்தாள்..
“எந்த நொடி என்னோட மனதில் நீ காதலியாக மாறினாய் என்று எனக்கே தெரியல.. ஆனால் அதை காதல் என்று நான் உணர்ந்தது.. முதல் முறையாக நீ என்னை ஸார் என்று அழைத்த பொழுதுதான் தேனு..” என்றவன் சொல்ல புரியாத பார்வைப் பார்த்தாள்..
“நான் உங்களை எப்போ அத்து அப்படி கூட்டிட்டேன்..” என்றவள் புரியாமல் கேட்க, “தீபிகூட சண்டை போட்டுட்டு கோவிலில் இருந்து வெளியே வரும் பொழுது..” என்றவன் அந்த நாளை ஞாபகப்படுத்தினான்..
அன்றைய நாளின் தாக்கத்தில் அமந்திருந்திருந்த பிரியா, “அன்னைக்குதான் நானும் உணர்ந்தேன் அத்து.. என்னோட மனசில் இருந்த காதலை.. என்னவோ என்னால உன்னிடம் சொல்ல முடியல..” என்றவள் அவனின் தோள் சாய அவளின் தோளில் கைபோட்டான் சந்தோஷ்..
அவள் அமைதியாக இருக்க, “நீ என்னைவிட்டு விலக விலக என்னோட மனசில் உனக்கு இருக்கும் இடம் எனக்கு புரிய ஆரம்பித்தது தேனு.. ஆனால் அதை நான் உணரவே இல்ல..” என்றவன் சொல்ல அவளின் உதட்டில் குறும்பு புன்னகை மலர்ந்தது..
“அப்போ என்னோட மனசு உனக்கு நல்லாவே தெரியும் இல்ல அத்து..” என்றவள் நக்கலோடு கேட்க, “ஆமா நல்ல தெரியும்.. என்னோட மனசை நீ நல்லாவே புரிஞ்சி வைச்சிருக்க இல்ல.. எதை செய்யாதே என்று சொல்றோமோ அதை நான் சரியாக செய்வேன் என்று தெரிந்தே நீ மெளனமாக இருந்த இல்ல..” என்றவன் அவளைப் பார்த்து புருவம் உயர்த்தினான்..
“ஹா.. ஹா.. ஹா.. அத்து உன்னை நான் புரிந்து வைத்திருத்தால் தான் நானே உன்னைத் தேடி வந்திருக்கிறேன்..” என்றவள் அவனைக் குத்திகாட்டிட, “ஏய் நான் உன்னைத் தேடி வரல என்று என்னைக் குத்தி காட்டிற இல்ல..” என்றவன் அவளை முறைத்தான்..
“அது உண்மைதானே..??” என்றவள் அவனைப் பார்த்து புருவம் உயர்த்திட, “நான் வரவே இல்லை என்று உனக்கு தெரியுமா..?” என்றவன் கேட்டதும், “நீங்க வரவே இல்ல என்று எனக்கு நல்ல தெரியும்..” என்றவள் முகத்தைத் திருப்பினாள்..
“இவளுக்கு தெரிஞ்ச மாதிரியே பேசுவா..” என்றவன் முணுமுணுக்க, “என்ன அங்கே தனியாக புலம்பற..” என்றவள் அவனை அதட்டல் போட, “என்னோட மனசில் இருப்பது புரியாமல் தானே நீ நம்ம வீட்டில் இருக்கும் எல்லோரோட உயிரையும் வாங்கிட்டு இருக்கிற.. அதைதான் சொல்லிட்டு இருந்தேன்..” என்றவன் விளையாட்டாக சொல்ல அவளோ தலையைக் குனிந்து கொண்டாள்..
“தீபிகாவைக் காதலித்தேன் என்று நீ சொல்லும் பொழுது எல்லாம் எனக்கு எவ்வளவு கோபம் வரும் தெரியுமா..?” என்றவன் கேட்க அவளோ தெரியாது என்பது போல தலையசைத்தாள்..