sakthipriya
SM Exclusive
View attachment 445
அத்தியாயம்-1
அத்தியாயம்-1
அதிகாலை ஆறு மணி. செல்போனில் செட் செய்திருந்த அலாரம் அடித்தது. சௌமியா பாதி உறக்கம் கலைந்த நிலையில் படுக்கையை விட்டு எழுந்து அமராமல், கண்களையும் திறக்காமல் அப்படியே தன் கைகளை வலது பக்கமாக நீட்டி அருகிலிருந்த செல்போனை எடுத்து கையில் வைத்துக் கொண்டு கண்களை திறந்தாள்.
செல்போன் திரையில் ஆதிரையன் முகம் தெரிய மலர்ந்த புன்னகையுடன் “குட் மார்னிங்” என்றாள்.
சௌமியா மீண்டும் செல்போன் திரையை பார்க்க சிரித்தபடி கம்பீரமாக அவளின் தோளின் மீது கையை போட்டபடி ஆதிரையன் நின்றிருக்க, பிங்க் நிற சுடிதாரில் அவனுக்கு மிக அருகில் சிரித்துக் கொண்டு நின்றிருந்தாள் செளமியா.
“சௌமியா கதவை திறம்மா” என்ற ஆதிரையன் குரல் கேட்டது.
சௌமியா செல்போனை வைத்து விட்டு “கதவு திறந்துதான் இருக்கு. நீ உள்ளே வா அண்ணா” என்று குரல் கொடுத்தாள்.
ஆதிரையன் கதவை திறந்துக் கொண்டு உள்ளே வந்த பொழுது கையில் அவன் பெரிய ரோஜாப் பூங்கொத்தை வைத்திருந்ததைப் பார்த்து புன்னகைத்தாள்.
சௌமியா எழுந்து படுக்கையில் அமர்ந்துக் கொண்டாள்.
“இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சௌமி குட்டி” என்று அவன் நீட்ட அவள் அதை வாங்கிக் கொண்டு “ரொம்ப தேங்க்ஸ் அண்ணா” என்றாள்.
ஆதிரையன் அவளை விட பன்னிரெண்டு வயது மூத்தவர். அகன்ற நெற்றி, கூர்மையான கண்கள், எடுப்பான நாசி, அகன்ற பெரிய தோள்கள், பரந்த மார்பு, அளவாக கத்தரிக்கப்பட்ட மீசை, தலைமுடியுடன் நல்ல உயரத்துடன் கம்பீரமான தோற்றம் உடைய அண்ணனின் சிரித்த அன்பான முகத்தை பார்த்தபடியே அவள் அமர்ந்திருக்க “என்ன சௌமி, அண்ணனை அப்படி பார்க்கின்றாய்?” என்று கேட்டான்.
“எனக்கு கிடைத்த மாதிரி ஒரு அண்ணன் யாருக்கும் கிடைக்க மாட்டாங்க. நீ ரொம்ப சோ ஸ்வீட் அண்ணா” என்று மிகுந்த புன்னகையுடன் சொன்னாள் சௌமியா.
“சரிம்மா நீ எழுந்திரிச்சு குளிச்சிட்டு வாம்மா. நம்ம எஸ்டேட் முருகன் கோயிலில் காலையில் எட்டு மணிக்கு பூஜைக்கு சொல்லியிருக்கேன்.” என்றான் ஆதிரையன்.
“சரி அண்ணா” என்று எழுந்து நின்றவள் “அண்ணா ஒரு நிமிசம்” என்றாள்.
“என்ன சௌமி” என்று அவன் பார்க்க “அண்ணா என் பர்த்டே டிரஸ்ஸை இன்னும் நீ தரவில்லையே” என்றாள்.
“நீ குளிச்சிட்டு வருவதுக்குள்ளே அது கட்டில் மேலே இருக்கும்மா”
“சரி அண்ணா” என்று அவள் முகம் கழுவ பாத்ரூம் நோக்கி செல்ல அவன் தன் அறையை நோக்கி சென்றான்.
சௌமியா முகம் கழுவி வந்து கட்டிலைப் பார்த்தாள். அங்கே எதுவும் இல்லை சரி குளிச்சிட்டு வந்து பார்க்கலாம் என்று தன் துணிகளை எடுத்துச் சென்று குளித்து விட்டு வந்து பார்த்தாள்.
அவளிடம் சொன்னபடியே கட்டிலில் சில பைகள் இருந்தன. என்னை சந்தோஷப்படுத்துகிற விஷயத்தில் உனக்கு நிகர் நீதான் அண்ணா என்று தன் அண்ணனை நினைத்து பெருமையடைந்தாள்
அதில் என்ன என்ன இருக்கிறது என்று அவள் பிரித்து பார்த்தாள். அவள் முகம் ஆனந்தத்தில் மலர்ந்தது.
சௌமியாவின் போன் அடிக்க எடுத்தவளிடம் “என்னம்மா பர்த்டே டிரஸ், கிப்ட் எல்லாம் ஒகேவா? உனக்கு பிடிச்சிருக்கா?” என்றான் ஆதிரையன்.
“ரொம்ப அண்ணா” என்று அவள் சொல்ல “சரிம்மா நீ ரெடியாகி வா. அண்ணா கிழே வெயிட் பன்றேன்” என்று போனை வைத்தான்.
சௌமியா அடுத்த அரை மணி நேரத்தில் தயாராகி மாடிப்படியில் இறங்கி தேவதை போல் இறங்கி வந்தாள்.
இருபத்தி மூன்று வயது தேவதையான அவள் மெல்லிய வெள்ளை கலரில் சின்ன சின்ன பூக்கள் போட்ட பிங்க் நிற டிசைனர் புடவையும், அதே நிறத்தில் ரவிக்கையும் அணிந்திருந்தாள். அவள் அடர்ந்து வளர்ந்திருந்த கருங்கூந்தலை அழகாய் கனமான பின்னலிட்டு அதில் சிறிய அளவில் மல்லிகை பூவையும் அணிந்திருந்தாள். சிறிய பிறை வடிவ நெற்றியில் கோபுர வடிவ பொட்டையும் இரு புருவங்களுக்கு நடுவே வைத்திருந்தாள். காதுகளில் அவள் மெல்லிய சிறிய ஜிமிக்கி கம்மலையும் அணிந்திருந்தாள். மெல்லிய மை தீட்டிய இரு பேசும் விழிகள், அளவாய் செதுக்கப்பட்ட இரு புருவங்கள், கூர்மையான சிறிய நாசி, புன்னகை தவழ்ந்த லிப்ஸ்டிக் படாத இரு உதடுகள், சிரித்தால் குழி விழும் இரு கன்னங்கள், மெல்லிய விரல்கள் கொண்ட கரங்களில் பிங்க் நிற கண்ணாடி வளையல், சேலையால் மறைக்கப்பட்ட மெல்லிய பூஞ்சையான தேகம் என அழகு தேவதையாய் ஜொலித்தாள். அவள் சங்கு கழுத்தில் மெல்லியதாக டி.ஏ.எஸ் என்று எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட இதய வடிவ டாலருடன் கூடிய ஒரு தங்கச் செயின் அணிந்திருந்தாள்.
சௌமியா மருத்துவத்திற்கு படித்துவிட்டு தன்னுடைய சொந்த எஸ்டேட்டான சௌமியா எஸ்டேட்டில் தன் தந்தையின் பெயரில் தர்மலிங்கம் நினைவு மருத்துவமனை என்று ஒரு பன்முக வசதி நிறைந்த அதிநவீன மருத்துவமனையை ஆரம்பித்து வைத்தியத்தை ஒரு சேவையாக செய்து வருகிறாள்.
பல ஏக்கர்கள் பரந்த விரிந்த அந்த தேயிலை எஸ்டேட்டின் நிர்வாக பொறுப்பு முழுவதும் ஆதிரையன் வசம் உள்ளதால் அவள் மருத்துவமனையை மட்டும் பார்த்து கொள்கிறாள். சௌமியாவிற்கு எது தேவை என்றாலும் அவன் உடனே அதை பெற்று தந்து விடுவதால் அவளுக்கு தேவை என்பதே இல்லை.
Last edited: