• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Thulirvidum Nesamadi! - 4

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அத்தியாயம் – 4

ஒரு நாள் மழையில் மனதினில்

விதையென வந்து விழுந்தவளே..

விதைகள் இன்னும் துளிர்விட

மறுப்பது ஏனோ நானறியேன்..

இந்த விதைகள் என்று துளிர்விடுமோ

வருடங்கள் ஓடுகிறதடி துளிரும் நிலவே..

அன்று காலையில் வேலைக்கு வந்த பொன்னுத்தாயை தன்னுடைய தனியே அழைத்த பானுமா தூங்கும் வளரின் நெற்றியை வரிடிவிட்டபடியே அமர்ந்தார்.. அவரின் முகத்தைப் பார்த்து பொன்னுத்தாய் அமைதியாக நிற்க, “வளருக்கு படிக்கிற வயசு ஆகிருச்சி.. அதனால நீ இவளை கொண்டு போய் பள்ளிகூடத்தில் சேர்த்துவிடு..” என்று சொல்ல பள்ளிக்கூடம் என்றதும் பொன்னுத்தாய்க்கு மனம் கருக்கென்றது..

அவரை நிமிர்ந்து பார்த்தவள், “அம்மா இவளை நீங்களே கொண்டு போய் சேர்த்துவிடுங்க..” என்று சொல்ல அவளின் முகத்தை நிமிர்ந்து பார்த்த பானுமா, “என்னடி இப்படி சொல்றவ.. புள்ளய பெத்தவ நீ இங்கே இருக்க நான் எதுக்கு கொண்டுபோய் சேர்த்தணும்..” என்று கேட்டார்.. அவரின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் கையைப் பிசைந்தப்படியே நின்றாள் பொன்னுத்தாய்..

அவளின் முகத்தையும் அவளின் செய்கையையும் சிலநொடி பார்த்த பானுமாவின் புருவம் சிந்தனையில் சுருங்க, “சரிடி நீ போ நானே இவள ஸ்கூல சேர்த்து விட்றேன்..” என்று சொல்லிவிட தன்னை விட்டால் போதுமேனே ஒரே ஓட்டமாக சமையலறைக்குள் சென்ற பொன்னுத்தாய்க்கு மனம் படபடத்தது..

அவள் பள்ளிக்கு செல்லும் பொழுது எல்லாம் அவள் பண்ணிய சேட்டை எல்லாம் இவளுக்கு நினைவு வரவே, ‘ஐயோ இந்த வளரை நான் இனி எப்படி சமாளிப்பேன்னு தெரியலையே..’ என்று மனதிற்குள் புலம்பியவள் கொஞ்சநேரத்தில் தன்னுடைய வேலையைப் பார்க்க ஆரம்பித்தாள்..

நாட்கள் நகர பானுமா சென்று வளரை ஸ்கூலில் சேர்த்துவிட்டு வந்தார்.. அன்றிலிருந்து வளர்மதி நன்றாக படிக்க ஆரம்பித்தாள்.. இதை எல்லாம் நல்லபடியாக நடக்க பொன்னுதாயும் பிள்ளையைப் பற்றிய கொஞ்சம் நிம்மதியாக இருந்தார்.. அது எல்லாம் வளர்மதி பதிநான்கு வயது வரையில்தான் நீடித்தது.. அதற்குபிறகு அவளை அடக்க ஆள் இல்லாமல் போனது..

வளர்மதியை ஸ்கூலுக்கு அனுப்பிவிட்டு பொன்னுத்தாய் தன்னுடைய வேலையைக் கவனிக்க அவளோ ஸ்கூலில் டெஸ்ட் என்றாலே ஸ்கூலுக்கு கட்டடித்துவிட்டு அங்கிருக்கும் சின்ன தோப்புகளில் சுற்ற ஆரம்பித்தாள்.. அவளின் இந்த சேட்டை அறியாத பானுமாவுக்கு அவள் சொல்வது எல்லாமே உண்மை போல தோன்றும் அளவுக்கு பொய் சொல்வாள்..

மாலையில் வீடு வந்து சேர்ந்ததும் பானுமா வளரை அருகில் அமரவைத்து, “வளரு இன்னைக்கு என்ன சொல்லி கொடுத்தாங்க..?” என்று கேட்டதும் வளரின் மனதில் அலாரம் அடிக்கும்.. ‘ஐயையோ பானுமா இப்போ என்ன சொல்றது..’ என்று யோசித்தவள், “எல்லாமே சொல்லி கொடுத்தாங்க பானுமா..” என்று சிரித்துக்கொண்டே அவள் சொல்லும் பொழுது பானுமாவின் மனம் மகிழும்..

“அப்படியா செல்லம் சரிடா நீ போய் கைகால் மூஞ்சி எல்லாம் கழுவிட்டு வா.. நானு உனக்கு சாப்பிட ரவாலட்டு பண்ணி வைச்சிருக்கேன் வா வா..” என்று சொல்லிவிட்டு அவளுக்கு பிடித்ததை செய்து கொடுப்பார்.. மகள் சொல்வதை சமையலறைக்குள் இருந்து கேட்கும் பொன்னுத்தாய்க்கு கொஞ்சம் சந்தேகம் வர ஆரம்பித்தது..

வளரின் நடவடிக்கை எல்லாம் பொன்னுதாயின் மனதில் சந்தேக விதையை விதைத்தது.. அது அறியாத வளர்மதி ஊரே முழுவதும் வலம்வர ஆரம்பித்தாள்.. அன்று காலையில் பானுமாவிடம் சொல்லிவிட்டு பள்ளிக்கூடம் செல்ல வந்தவள் சிவராமனின் முகத்தைப் பார்த்தாள்.. அவரோ சரியான தலைவலியில் சோபாவில் சாய்ந்து அமர்ந்திருந்தார்..

அதைப் பார்த்தவள் மெல்ல அவரின் அருகில் சென்று, “அப்பாரு..” என்று அழைக்க திரும்பிப் பார்த்த சிவராமன், “வளரு வாடி குட்டி..” என்று அவளைத் தூக்கி மடியில் அமரவைக்க அவரின் முகத்தையே பார்த்தாள் வளரு.. பிறகு, “அப்பாரு உங்களுக்கு என்ன ஆச்சு.. ஏன் இப்படி இருக்கீங்க..” என்று தலையில் தடவியிருந்த தைலத்தைத் தொட்டுக்காட்டி கேட்டாள்..

“அப்பாருக்கு தலை வலிக்குது செல்லம்.. அதுதான் அப்பாரு இப்படி இருக்கேன்..” என்று சொல்லவும், “அப்போ இப்போ வயலுக்கு யாரு காவலுக்கு போவா..” என்று கேட்டதும் சிரித்தவர் விளையாட்டாக, “ஏன் நீயே போயேன்..” என்று சொல்லிவிட அங்கு வந்த பானுமாவிடம் ஸ்கூலுக்கு போறேன் என்று சொல்லிவிட்டு ஒரே ஓட்டமாக வயக்காட்டு ஓடிவிட்டாள்..

அங்கே நாத்துநட வந்த எல்லோரையும் பார்த்தவள், “எல்லோரும் சீக்கிரம் வேலை செஞ்ச சாயந்திரம் சீக்கிரம் வீடு போலான்னு அப்பாரு என்னிடம் சொல்லி விட்டாக.. சீக்கிரம் வேலைய பாருங்க..” என்று சொன்னவள் அங்கிருந்த மாமரத்தின் மீது ஏறி அமர்ந்து அங்கிருக்கும் எல்லோரையும் பொழுதுவரை வேலை வாங்கிவிட்டு மாலைதான் வீடு வந்தாள்..

இது எதுவும் அறியாத சிவராமன் மில் வேலை விஷயமாக வெளியே கிளம்பிச் சென்றுவிட்டு அப்பொழுதுதான் வீடு வந்து சேர்ந்தார்.. அவரின் பின்னோடு வந்த வளரு, “அப்பாரு வயக்காட்டுல எல்லா வேலையும் முடிஞ்சிது..” என்று சொல்லிவிட்டு அங்கே நிற்காமல் ஒரே ஓட்டமாக ஓடிவிட்டாள்..

அவள் சொன்னது புரியாமல் அவர் யோசனையோடு நிற்க அந்த வழியாக வந்த ராக்காயி, “ஏனுங்க பெரிய வீட்டுகரம்மா..” என்று பானுமாவை அழைக்க அவரும் வெளியே வர, “இந்த வளரு இன்னைக்கு முழுவதும் எங்கள வேலை வாங்கியே கொன்னுட்ட போங்க.. பார்க்கத்தா கிள்ளு கீரையாட்ட இருக்க.. இவ பண்ற அலும்பு இருக்கே..” என்று புலம்பியபடியே சென்றதும் சிவராமனுக்கு எல்லாம் புரிந்தது..

இதையெல்லாம் கேட்ட பானுமா, “அடியே பொன்னுத்தாய் இவள ஸ்கூலுக்கு அனுப்பின இவ என்ன வேல பண்ற பாரு..” என்று சொல்ல தன்னுடைய வேலை எல்லாம் விட்டுவிட்டு ஓடிவந்த பொன்னுத்தாய், “நாந்தான் சொன்னேனம்மா இவ படிக்க எல்லாம் மாட்டான்னு..” என்று கூறினார்..

அவர் சொன்னதைக்கேட்டு, “என்னடி ஆத்தா சொல்ற நீ..” என்று கேட்டதும், “நான் எப்படியோ அப்படி வந்து பிறந்திருக்க.. இன்னும் என்னென்ன எல்லாம் பார்க்கணுமோ..” என்று சொல்ல பன்னீர் ரோசா செடியின் அருகே நின்ற வளரைப் பார்த்த பானுமா, “அடி கழுத உன்ன படிக்க சொல்லி அனுப்பின நீ வயக்காட்டில எல்லோரையும் வேலை வாங்கிட்ட வர..” என்று விறகு கட்டையை தூக்கிட்டு அவளைத் துரத்தினார்..

அதற்கு எல்லாம் பயந்தவள நம்ம வளரு, “பானுமா எனக்கு எது வருதோ அதை செய்யின்னு சொல்லிட்டு இப்போ கட்டை எடுத்துட்டு அடிக்க வரீங்களே இது உங்களுக்கே நியாயமா படுதா..” என்று சிரித்த வண்ணம் துள்ளிக்குதித்து ஓடிய வளரைப் பார்த்தவருக்கு சிரிப்பு வந்துவிட, “ஏண்டி பொன்னுத்தாயி இவளுக்கு என்னன்னு பால்வார்த்த... இப்போவே படிப்புக்கு முளுக்கு போட்டுடாலா...” என்று கேட்டவர் கணவனைப் பார்க்க அவரோ விழுந்து விழுந்து சிரித்தார்..

அவரின் அருகே வந்து நின்ற வளரு, “பானுமா எனக்கு இந்த வரலாறு மட்டும் மண்டையிலேயே ஏறல.. இனிமே நான் ஸ்கூலுக்கு போக மாட்டேன்..” என்று சொல்லிவிட்டாள்.. அவள் சொன்ன விஷயம் பானுமாவின் மனதை பாதித்தாலும் அவளை கண்டிக்க அவருக்கு ஏனோ மனம் இல்லாமல் போனது..

என்னதான் தன்னுடைய மகளென்று அவர் வளர்த்தாலும் கூட கண்டிக்கும் உரிமை எல்லாம் என்னவோ மரிமுத்துவிற்கும், பொன்னுதாய்க்கும் இருப்பதாகவே நினைத்தார் பானுமா.. பிறகு பானுமாவின் முகம் பார்த்த சிவராமன் சிரிப்பு மறைந்து யோசிக்க ஆரம்பித்தார்.. அவளுக்கு எது வருதோ அதை அவளுக்கு சரிவர கத்து கொடுக்க முயற்சி எடுக்க ஆரம்பித்தார்.. வளரின் பாதை விளையாட்டு பாதையாக மாறியது.. இதுவரை குழந்தை என்று இருந்தவள் பருவம் அடைந்தாள்..
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
இது எல்லாம் அறியாத மகிழனோ கல்லூரியில் தன்னுடைய முதல் டிகிரியை முடித்துவிட்டு அன்றுதான் வீட்டிற்கு வந்தான்.. அவன் ஊருக்குள் நுழைந்ததுமே அவன் வரும் விஷயம் தெரிந்தவர்களின் மூலம் வீட்டிற்கு தெரிந்துவிட்டது.. சிவசங்கரனும், லட்சுமியும் மகனின் வரவுக்காக வீட்டு வாசலில் காத்திருந்தனர்..

அவன் வரும் பொழுதே, “என்ன மாமா இந்த மாமன் மகள் ரதியை கண்டுக்காம போற..” என்று அவனை வம்பிழுத்தாள் மஞ்சரி.. அவனின் வழியை மறித்து நின்று கேள்வி கேட்கும் அவளைப் பார்த்தவன், ‘இவ என்னும் திருந்தலையா..?’ என்று மனதில் நினைத்தவன் அவளையே பார்த்தான்..

வெள்ளை நிறத்தில் சுடிதார் அணிந்து முடியை இந்த டிரண்டுக்கு தகுந்த வண்ணம் ஸ்டேப் கட்டிங் வெட்டிவிட்டு குதிரை வால் போட்டு நெற்றில் போட்டு வைக்காமல் காதில் பெரிய டிசைனர் கம்மல் போட்டு அதற்கு செட்டாகும் வண்ணம் கழுத்தில் சின்ன செய்ன் போட்டு தண்ணி குடத்துடன் வழியை மறித்து நின்றவளைப் பார்த்து அவனுக்கு சிரிப்புதான் வந்தது..

அந்த கிராமத்தில் இருக்கும் பெண்களுக்கும் இவளுக்கு உள்ள வேறுபாடு அதிகமாக இருக்க சிரித்தபடியே அவளைப் பார்த்த மகிழனோ, “ஓ நீதான் என்னோட மாமன் மக ரதியா..?” என்று கேட்டவன், “ரதி எல்லாம் சுடிதாரில் வந்தால் மனுஷனுக்கு எங்கே கண்ணு தெரியும்..?” என்று நக்கலாகக் கூறினான்..

அவன் சொன்னதைக் கேட்ட மஞ்சரி, “என்ன மாமோய் என்ன பார்த்த எப்படி தெரியுது..?” என்று கேட்டதும், “ஐயோ அதை என்னோட வாயில வேற சொல்லணுமா..” என்று சொன்னவன், “என்ன பண்ண இந்த மாமனோட கண்ணுக்கு இந்த ரதி தெரியலையே.. மாமன் மக படித்ததும் சுடிதார் போட்டுக்கிட்டு முன்னாடி வந்து நின்ன உன்னோட மாமனுக்கு எப்படிமா தெரியும்..” என்றவனை முறைத்தாள் முறைமாமன் மகள் ரதி..

அவளின் முறைப்பை எல்லாம் பார்த்த மகிழன் சிரித்துக் கொண்டே, “இப்போ முறைமாமனின் மகளை அடையாளம் தெரியுதே..” என்று அவளை மேலும் சீண்டிவிட, “ஏய் மாமா நல்ல நினைவில வெச்சுக்கோ இந்த மாமன் மகதான் உன்ன கட்டிக்க போறவ அதனால என்ன சீண்டி பார்க்காத மாமோய்.. அப்புறம் உன்னோட பாடு திண்டாட்டம் தான் பார்த்துக்கோ..” என்று அவளும் அவனுக்கு சரிக்கு சரி பதில் கொடுத்தாள்..

அதற்கு எல்லாம் மசியாத மகிழன், “அடியே போடி உங்கள மாதிரி எத்தனை மாமன் மகள எத்தன பேரு பார்த்திருப்போம்..” என்று கூறியவன், “அடியே நல்ல கேட்டுக்கோ நான் கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வரவ உன்னவிட வாய் பேசற வாயாடியாக இருக்கனும்.. அப்போதானே மாமனுக்கு நல்ல பொழுது போகும்..” என்றவன் சொல்ல மஞ்சரியின் முகம் மாறிப்போனது..

அது எல்லாமே நொடி பொழுதுதான் அடுத்த நொடியே, “ஏன் மாமோய் இப்படியெல்லாம் சொல்ற.. உன்ன கல்யாணம் பண்றவ எப்படி இருக்கணும் என்று மட்டும் சொல்லேன்..” என்று கேட்டதும், “ஏன் நீ அந்த மாதிரி மாற போறீயா..” என்று அவளை வம்பிழுத்தான் மகிழன்..

“அட இல்ல மாமோய் உன்னோட மனசில நீ என்ன கற்பனையில இருக்கிற என்று எங்களுக்கு எல்லாம் தெரிய வேணாமா..” என்று அவள் சிணுங்க, “தெரிய வேணாமே..” என்று சொல்லியவன் வீடு நோக்கி நடந்தான்..

மகிழன் வளர வளர நல்ல துடுக்கு பேசும் ஆளாகவே வளர்ந்தான்.. இந்த மஞ்சரி அவனுக்கு ஒரு வகையில் முறை பொண்ணு.. அதுக்காக இவ எல்லாம் இவங்க வாழ்க்கையில் புகுந்து குழப்பம் பண்ணுவ என்று நினைக்கக்கூடாது.. [அப்படியே அவள் குழப்பம் பண்ணினாலும் என்னை யாரும் கேட்க கூடாது..]

கள்ளம் கபடம் இல்லாமல் அவளோடு வம்பிளுத்துவிட்டு வீடு வந்த மகனைப் பார்த்த லட்சுமி, “மகிழா வந்துட்டியா தங்கம்.. உன்ன பார்த்து எத்தன நாள் ஆச்சு வாடா வா..” என்று வீட்டின் உள்ளே அழைத்து செல்ல வீட்டின் உள்ளே சென்றதும் அம்மாவை அணைத்துக் கொண்டவன்,

“அம்மா இப்போ உங்க உடம்பு எல்லாம் எப்படி இருக்கு..” என்று கேட்டதும், “நீ வர என்று சொன்னதும் இவளுக்கு எல்லாம் சரியாக போச்சுப்பா..” என்று சொல்ல, “அப்பா நீங்க எப்படி இருக்கீங்க..?” என்று அப்பாவின் முகத்தைப்பார்த்து கேட்டான் மகிழன்.. “நான் நல்ல இருக்கேன் மகிழா..” என்று சொன்னவர் அங்கிருந்த மர நாற்காலியில் அமர்ந்தார்..

அவரோடு அமர்ந்தவனைப் பார்த்த லட்சுமி, “டேய் முதலில் போய் குளிடா.. அப்புறம் வந்து அப்பாவோட பேசு..” என்று அதட்டிய அம்மாவைப் பார்த்தவன், “லட்சுமி உனக்கே உடம்பு சரியில்ல நீ ஏன்மா அவனை அதட்ற..” என்று சங்கரனை போலவே பேசிய மகனைப் பார்த்து வியந்தவர் அடுத்த நொடியே அவனை அடிக்க துரத்தினார்..

“அம்மா நான் சும்மா விளையாட்டுக்கு செஞ்சேன்.. அம்மா அம்மா..” என்று சொல்லிவிட்டு அடுத்த நிமிசமே அறைக்குள் ஓடிய மகனைப் பார்த்த சிவசங்கரன், “வந்ததும் உன்னோட வம்பு வளர்க்க ஆரம்பிச்சிட்டானா..இனி எல்லா பொழுது போகுமே..” என்று சொல்லிட்டு சிரித்தார்..

அவரின் முகத்தைப் பார்த்த லட்சுமி, “என்ன பண்றது அவன் இப்படி இருந்தால் தானே நமக்கு பிடிக்குது..” என்று சொல்லிவிட்டு, “என்னங்க இந்நேரம் ரசத்தியோட மகளும் வளர்ந்திருப்பா இல்ல..” என்றவர் ஏக்கத்தோடு சொல்ல, “பையனாக இருந்தால்..?” என்று மனைவியை வம்பிழுத்தார் சிவசங்கரன்..

அவர் சொன்னதைக் கேட்ட லட்சுமி, “அவனோட நீங்களும் சேர்ந்திட்டீங்களா..?” என்று சொன்னவர் சமையலை செய்ய சென்றார்.. மகிழன் வீட்டிற்கு வந்தாலே அந்த இடமே கலகலப்பாக இருக்கும்.. அவனின் பெயரில் இருக்கும் மகிழ்ச்சி அந்த வீட்டில் நிறைந்து நிற்கும்..

அவனின் அறைக்குள் சென்றவன் குளித்துவிட்டு வெளியே வந்தான்.. அதற்குள் அவனுக்கு வேண்டிய எல்லாவற்றையும் செய்து வைத்தார் லட்சுமி.. சாப்பிட்டுவிட்டு பின்வாசலில் வந்து அமர்ந்த மகிழன் அங்கிருந்த இயற்கை காட்சியையும், இயற்கை எழிலையும் பார்த்தவனுக்கு மனதில் ஏதோவொரு இனம் புரியாத உணர்வு.. அது என்ன என்று அவனால் சொல்ல முடியவில்லை..

இந்த உள்ளுணர்வு எப்பொழுதுமே அவனிடம் இருந்து கொண்டே இருந்தது.. ஆனால் அது என்ன சொல்ல வருகிறது என்ற விஷயம் மட்டும் அவனுக்கு புரிவதே இல்லை.. எத்தனை பெண்களை கடந்தாலும் அவனின் மனதில் எழாத ஒருவகை உணர்வு சில நேரங்களில் மட்டும் எழுந்தது.. அந்த உணர்வு என்ன சொல்கிறது என்று அவனுக்கு இதுவரை புரியவே இல்லை..

அடுத்து அவனுக்கு வெளிநாட்டில் படிக்கும் வாய்ப்பு அமைந்த விஷயத்தை எப்படி அப்பா, அம்மாவிடம் சொல்வது என்று இவன் இங்கே யோசிக்கும் முன்னாடியே அவனின் வேலைகளை எல்லாம் முடிந்துவிட்டார் சுகுமாறன்..

அவனின் அருகில் அமர்ந்த சிவசங்கரன், “என்னப்பா யோசனை..?” என்று கேட்டதும், “இல்லப்பா மனசுக்குள்ள என்னவோ இருக்குப்பா.. அது என்னான்னு புரியல.. சில நேரத்தில மட்டும் அந்த உள்ளுணர்வு எழுந்து மனசை கசக்கி பிழிகிறது..” என்று சொன்னவன் அப்பாவின் மடிமீது தலை வைத்து படுத்துவிட்டான்..

தலைக்கு மேல் வளர்ந்து விட்ட மகனின் தலையைக் கோதிவிட்ட சிவசங்கரன், “இந்த உணர்வு எல்லோருக்கும் வராது கண்ணா.. அந்த உணர்வு யாரையோ உனக்கு அடையாளம் காட்ட நினைக்குது கண்ணா.. அந்த உணர்வே உனக்கு அது யாருன்னு அடையலாம் காட்டும்..” என்று சொல்லிவிட அப்பாவின் முகத்தைப் பார்த்தவன் அமைதியாக இருந்தான்..

“சுகுமாறன் சித்தப்பா போன் பண்ணினார் கண்ணா.. நீ மேல படிக்க வெளிநாடு போக எல்லா ஏற்படும் ரெடியாக இருக்கிறதாம்.. நீ வருகிற சனிக்கிழமை ஊருக்கு கிளம்பனும் என்று சொன்னான்..” என்று சொல்ல, “ஏன்ப்பா என்னை வெளிநாடு அனுப்பி படிக்க வைக்கிறீங்க..” என்று கேட்டான்..

அதுக்கு சங்கரனோ, “நாந்தான் ஒழுங்கா படிக்கல கண்ணா.. நீயாவது நல்ல படிக்கணும்.. அதுமட்டும் இல்ல நாங்க எல்லோரும் சொல்லிய பொய்யை எல்லாம் உண்மையாக மாத்தணும் இல்ல..” என்று கேட்டதும், “நீங்க எல்லோரும் சொன்ன பொய்க்கு எல்லாம் பதில் சொல்ல போறவன் நானா..? மூவரும் சேர்ந்து ஆடும் ஆட்டத்தில் நான் பலியாடாக மாறிவிடுவேனோ என்று ரொம்பவே பயமாக இருக்கு..” என்று அப்பாவையே கேலி செய்தவனின் தலையில் கொட்டினார்..

“எப்பொழுது பார்த்தாலும் கேலி பண்றதே உன் வேலையாகப் போச்சுடா..” என்று சொல்லியவர் அவன் கிளம்புவதற்கு உண்டான எல்லாவற்றையும் ஏற்பாடு செய்தார்.. மகன் கிளம்பிகிறான் என்றதும் லட்சுமி கண்கள் கலங்கியது.. ஆனால் மஞ்சரியோ, “அத்தை அவரு படிக்கத்தான் போறாரு அதுக்கு இப்படியா அழுவது..?” என்று கேட்டு சமாதனம் செய்து மகிழனை ஊருக்கு அனுப்பி வைத்தாள்..

சென்னையில் இருந்து வழியனுப்ப சுகுமாரனும் ஜெயசக்தியும் வந்தனர்.. மகிழன் இவர்களின் திட்டபடியே வெளிநாட்டிற்கு படிக்க சென்றான்.. இவங்களோட திட்டம் எல்லாம் நிறைவேறுமா..?

துளிர்விடும் நேசம் தொடரும்....
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top