அத்தியாயம் – 4
அன்று காலையில் வேலைக்கு வந்த பொன்னுத்தாயை தன்னுடைய தனியே அழைத்த பானுமா தூங்கும் வளரின் நெற்றியை வரிடிவிட்டபடியே அமர்ந்தார்.. அவரின் முகத்தைப் பார்த்து பொன்னுத்தாய் அமைதியாக நிற்க, “வளருக்கு படிக்கிற வயசு ஆகிருச்சி.. அதனால நீ இவளை கொண்டு போய் பள்ளிகூடத்தில் சேர்த்துவிடு..” என்று சொல்ல பள்ளிக்கூடம் என்றதும் பொன்னுத்தாய்க்கு மனம் கருக்கென்றது..
அவரை நிமிர்ந்து பார்த்தவள், “அம்மா இவளை நீங்களே கொண்டு போய் சேர்த்துவிடுங்க..” என்று சொல்ல அவளின் முகத்தை நிமிர்ந்து பார்த்த பானுமா, “என்னடி இப்படி சொல்றவ.. புள்ளய பெத்தவ நீ இங்கே இருக்க நான் எதுக்கு கொண்டுபோய் சேர்த்தணும்..” என்று கேட்டார்.. அவரின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் கையைப் பிசைந்தப்படியே நின்றாள் பொன்னுத்தாய்..
அவளின் முகத்தையும் அவளின் செய்கையையும் சிலநொடி பார்த்த பானுமாவின் புருவம் சிந்தனையில் சுருங்க, “சரிடி நீ போ நானே இவள ஸ்கூல சேர்த்து விட்றேன்..” என்று சொல்லிவிட தன்னை விட்டால் போதுமேனே ஒரே ஓட்டமாக சமையலறைக்குள் சென்ற பொன்னுத்தாய்க்கு மனம் படபடத்தது..
அவள் பள்ளிக்கு செல்லும் பொழுது எல்லாம் அவள் பண்ணிய சேட்டை எல்லாம் இவளுக்கு நினைவு வரவே, ‘ஐயோ இந்த வளரை நான் இனி எப்படி சமாளிப்பேன்னு தெரியலையே..’ என்று மனதிற்குள் புலம்பியவள் கொஞ்சநேரத்தில் தன்னுடைய வேலையைப் பார்க்க ஆரம்பித்தாள்..
நாட்கள் நகர பானுமா சென்று வளரை ஸ்கூலில் சேர்த்துவிட்டு வந்தார்.. அன்றிலிருந்து வளர்மதி நன்றாக படிக்க ஆரம்பித்தாள்.. இதை எல்லாம் நல்லபடியாக நடக்க பொன்னுதாயும் பிள்ளையைப் பற்றிய கொஞ்சம் நிம்மதியாக இருந்தார்.. அது எல்லாம் வளர்மதி பதிநான்கு வயது வரையில்தான் நீடித்தது.. அதற்குபிறகு அவளை அடக்க ஆள் இல்லாமல் போனது..
வளர்மதியை ஸ்கூலுக்கு அனுப்பிவிட்டு பொன்னுத்தாய் தன்னுடைய வேலையைக் கவனிக்க அவளோ ஸ்கூலில் டெஸ்ட் என்றாலே ஸ்கூலுக்கு கட்டடித்துவிட்டு அங்கிருக்கும் சின்ன தோப்புகளில் சுற்ற ஆரம்பித்தாள்.. அவளின் இந்த சேட்டை அறியாத பானுமாவுக்கு அவள் சொல்வது எல்லாமே உண்மை போல தோன்றும் அளவுக்கு பொய் சொல்வாள்..
மாலையில் வீடு வந்து சேர்ந்ததும் பானுமா வளரை அருகில் அமரவைத்து, “வளரு இன்னைக்கு என்ன சொல்லி கொடுத்தாங்க..?” என்று கேட்டதும் வளரின் மனதில் அலாரம் அடிக்கும்.. ‘ஐயையோ பானுமா இப்போ என்ன சொல்றது..’ என்று யோசித்தவள், “எல்லாமே சொல்லி கொடுத்தாங்க பானுமா..” என்று சிரித்துக்கொண்டே அவள் சொல்லும் பொழுது பானுமாவின் மனம் மகிழும்..
“அப்படியா செல்லம் சரிடா நீ போய் கைகால் மூஞ்சி எல்லாம் கழுவிட்டு வா.. நானு உனக்கு சாப்பிட ரவாலட்டு பண்ணி வைச்சிருக்கேன் வா வா..” என்று சொல்லிவிட்டு அவளுக்கு பிடித்ததை செய்து கொடுப்பார்.. மகள் சொல்வதை சமையலறைக்குள் இருந்து கேட்கும் பொன்னுத்தாய்க்கு கொஞ்சம் சந்தேகம் வர ஆரம்பித்தது..
வளரின் நடவடிக்கை எல்லாம் பொன்னுதாயின் மனதில் சந்தேக விதையை விதைத்தது.. அது அறியாத வளர்மதி ஊரே முழுவதும் வலம்வர ஆரம்பித்தாள்.. அன்று காலையில் பானுமாவிடம் சொல்லிவிட்டு பள்ளிக்கூடம் செல்ல வந்தவள் சிவராமனின் முகத்தைப் பார்த்தாள்.. அவரோ சரியான தலைவலியில் சோபாவில் சாய்ந்து அமர்ந்திருந்தார்..
அதைப் பார்த்தவள் மெல்ல அவரின் அருகில் சென்று, “அப்பாரு..” என்று அழைக்க திரும்பிப் பார்த்த சிவராமன், “வளரு வாடி குட்டி..” என்று அவளைத் தூக்கி மடியில் அமரவைக்க அவரின் முகத்தையே பார்த்தாள் வளரு.. பிறகு, “அப்பாரு உங்களுக்கு என்ன ஆச்சு.. ஏன் இப்படி இருக்கீங்க..” என்று தலையில் தடவியிருந்த தைலத்தைத் தொட்டுக்காட்டி கேட்டாள்..
“அப்பாருக்கு தலை வலிக்குது செல்லம்.. அதுதான் அப்பாரு இப்படி இருக்கேன்..” என்று சொல்லவும், “அப்போ இப்போ வயலுக்கு யாரு காவலுக்கு போவா..” என்று கேட்டதும் சிரித்தவர் விளையாட்டாக, “ஏன் நீயே போயேன்..” என்று சொல்லிவிட அங்கு வந்த பானுமாவிடம் ஸ்கூலுக்கு போறேன் என்று சொல்லிவிட்டு ஒரே ஓட்டமாக வயக்காட்டு ஓடிவிட்டாள்..
அங்கே நாத்துநட வந்த எல்லோரையும் பார்த்தவள், “எல்லோரும் சீக்கிரம் வேலை செஞ்ச சாயந்திரம் சீக்கிரம் வீடு போலான்னு அப்பாரு என்னிடம் சொல்லி விட்டாக.. சீக்கிரம் வேலைய பாருங்க..” என்று சொன்னவள் அங்கிருந்த மாமரத்தின் மீது ஏறி அமர்ந்து அங்கிருக்கும் எல்லோரையும் பொழுதுவரை வேலை வாங்கிவிட்டு மாலைதான் வீடு வந்தாள்..
இது எதுவும் அறியாத சிவராமன் மில் வேலை விஷயமாக வெளியே கிளம்பிச் சென்றுவிட்டு அப்பொழுதுதான் வீடு வந்து சேர்ந்தார்.. அவரின் பின்னோடு வந்த வளரு, “அப்பாரு வயக்காட்டுல எல்லா வேலையும் முடிஞ்சிது..” என்று சொல்லிவிட்டு அங்கே நிற்காமல் ஒரே ஓட்டமாக ஓடிவிட்டாள்..
அவள் சொன்னது புரியாமல் அவர் யோசனையோடு நிற்க அந்த வழியாக வந்த ராக்காயி, “ஏனுங்க பெரிய வீட்டுகரம்மா..” என்று பானுமாவை அழைக்க அவரும் வெளியே வர, “இந்த வளரு இன்னைக்கு முழுவதும் எங்கள வேலை வாங்கியே கொன்னுட்ட போங்க.. பார்க்கத்தா கிள்ளு கீரையாட்ட இருக்க.. இவ பண்ற அலும்பு இருக்கே..” என்று புலம்பியபடியே சென்றதும் சிவராமனுக்கு எல்லாம் புரிந்தது..
இதையெல்லாம் கேட்ட பானுமா, “அடியே பொன்னுத்தாய் இவள ஸ்கூலுக்கு அனுப்பின இவ என்ன வேல பண்ற பாரு..” என்று சொல்ல தன்னுடைய வேலை எல்லாம் விட்டுவிட்டு ஓடிவந்த பொன்னுத்தாய், “நாந்தான் சொன்னேனம்மா இவ படிக்க எல்லாம் மாட்டான்னு..” என்று கூறினார்..
அவர் சொன்னதைக்கேட்டு, “என்னடி ஆத்தா சொல்ற நீ..” என்று கேட்டதும், “நான் எப்படியோ அப்படி வந்து பிறந்திருக்க.. இன்னும் என்னென்ன எல்லாம் பார்க்கணுமோ..” என்று சொல்ல பன்னீர் ரோசா செடியின் அருகே நின்ற வளரைப் பார்த்த பானுமா, “அடி கழுத உன்ன படிக்க சொல்லி அனுப்பின நீ வயக்காட்டில எல்லோரையும் வேலை வாங்கிட்ட வர..” என்று விறகு கட்டையை தூக்கிட்டு அவளைத் துரத்தினார்..
அதற்கு எல்லாம் பயந்தவள நம்ம வளரு, “பானுமா எனக்கு எது வருதோ அதை செய்யின்னு சொல்லிட்டு இப்போ கட்டை எடுத்துட்டு அடிக்க வரீங்களே இது உங்களுக்கே நியாயமா படுதா..” என்று சிரித்த வண்ணம் துள்ளிக்குதித்து ஓடிய வளரைப் பார்த்தவருக்கு சிரிப்பு வந்துவிட, “ஏண்டி பொன்னுத்தாயி இவளுக்கு என்னன்னு பால்வார்த்த... இப்போவே படிப்புக்கு முளுக்கு போட்டுடாலா...” என்று கேட்டவர் கணவனைப் பார்க்க அவரோ விழுந்து விழுந்து சிரித்தார்..
அவரின் அருகே வந்து நின்ற வளரு, “பானுமா எனக்கு இந்த வரலாறு மட்டும் மண்டையிலேயே ஏறல.. இனிமே நான் ஸ்கூலுக்கு போக மாட்டேன்..” என்று சொல்லிவிட்டாள்.. அவள் சொன்ன விஷயம் பானுமாவின் மனதை பாதித்தாலும் அவளை கண்டிக்க அவருக்கு ஏனோ மனம் இல்லாமல் போனது..
என்னதான் தன்னுடைய மகளென்று அவர் வளர்த்தாலும் கூட கண்டிக்கும் உரிமை எல்லாம் என்னவோ மரிமுத்துவிற்கும், பொன்னுதாய்க்கும் இருப்பதாகவே நினைத்தார் பானுமா.. பிறகு பானுமாவின் முகம் பார்த்த சிவராமன் சிரிப்பு மறைந்து யோசிக்க ஆரம்பித்தார்.. அவளுக்கு எது வருதோ அதை அவளுக்கு சரிவர கத்து கொடுக்க முயற்சி எடுக்க ஆரம்பித்தார்.. வளரின் பாதை விளையாட்டு பாதையாக மாறியது.. இதுவரை குழந்தை என்று இருந்தவள் பருவம் அடைந்தாள்..
ஒரு நாள் மழையில் மனதினில்
விதையென வந்து விழுந்தவளே..
விதைகள் இன்னும் துளிர்விட
மறுப்பது ஏனோ நானறியேன்..
இந்த விதைகள் என்று துளிர்விடுமோ
வருடங்கள் ஓடுகிறதடி துளிரும் நிலவே..
அன்று காலையில் வேலைக்கு வந்த பொன்னுத்தாயை தன்னுடைய தனியே அழைத்த பானுமா தூங்கும் வளரின் நெற்றியை வரிடிவிட்டபடியே அமர்ந்தார்.. அவரின் முகத்தைப் பார்த்து பொன்னுத்தாய் அமைதியாக நிற்க, “வளருக்கு படிக்கிற வயசு ஆகிருச்சி.. அதனால நீ இவளை கொண்டு போய் பள்ளிகூடத்தில் சேர்த்துவிடு..” என்று சொல்ல பள்ளிக்கூடம் என்றதும் பொன்னுத்தாய்க்கு மனம் கருக்கென்றது..
அவரை நிமிர்ந்து பார்த்தவள், “அம்மா இவளை நீங்களே கொண்டு போய் சேர்த்துவிடுங்க..” என்று சொல்ல அவளின் முகத்தை நிமிர்ந்து பார்த்த பானுமா, “என்னடி இப்படி சொல்றவ.. புள்ளய பெத்தவ நீ இங்கே இருக்க நான் எதுக்கு கொண்டுபோய் சேர்த்தணும்..” என்று கேட்டார்.. அவரின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் கையைப் பிசைந்தப்படியே நின்றாள் பொன்னுத்தாய்..
அவளின் முகத்தையும் அவளின் செய்கையையும் சிலநொடி பார்த்த பானுமாவின் புருவம் சிந்தனையில் சுருங்க, “சரிடி நீ போ நானே இவள ஸ்கூல சேர்த்து விட்றேன்..” என்று சொல்லிவிட தன்னை விட்டால் போதுமேனே ஒரே ஓட்டமாக சமையலறைக்குள் சென்ற பொன்னுத்தாய்க்கு மனம் படபடத்தது..
அவள் பள்ளிக்கு செல்லும் பொழுது எல்லாம் அவள் பண்ணிய சேட்டை எல்லாம் இவளுக்கு நினைவு வரவே, ‘ஐயோ இந்த வளரை நான் இனி எப்படி சமாளிப்பேன்னு தெரியலையே..’ என்று மனதிற்குள் புலம்பியவள் கொஞ்சநேரத்தில் தன்னுடைய வேலையைப் பார்க்க ஆரம்பித்தாள்..
நாட்கள் நகர பானுமா சென்று வளரை ஸ்கூலில் சேர்த்துவிட்டு வந்தார்.. அன்றிலிருந்து வளர்மதி நன்றாக படிக்க ஆரம்பித்தாள்.. இதை எல்லாம் நல்லபடியாக நடக்க பொன்னுதாயும் பிள்ளையைப் பற்றிய கொஞ்சம் நிம்மதியாக இருந்தார்.. அது எல்லாம் வளர்மதி பதிநான்கு வயது வரையில்தான் நீடித்தது.. அதற்குபிறகு அவளை அடக்க ஆள் இல்லாமல் போனது..
வளர்மதியை ஸ்கூலுக்கு அனுப்பிவிட்டு பொன்னுத்தாய் தன்னுடைய வேலையைக் கவனிக்க அவளோ ஸ்கூலில் டெஸ்ட் என்றாலே ஸ்கூலுக்கு கட்டடித்துவிட்டு அங்கிருக்கும் சின்ன தோப்புகளில் சுற்ற ஆரம்பித்தாள்.. அவளின் இந்த சேட்டை அறியாத பானுமாவுக்கு அவள் சொல்வது எல்லாமே உண்மை போல தோன்றும் அளவுக்கு பொய் சொல்வாள்..
மாலையில் வீடு வந்து சேர்ந்ததும் பானுமா வளரை அருகில் அமரவைத்து, “வளரு இன்னைக்கு என்ன சொல்லி கொடுத்தாங்க..?” என்று கேட்டதும் வளரின் மனதில் அலாரம் அடிக்கும்.. ‘ஐயையோ பானுமா இப்போ என்ன சொல்றது..’ என்று யோசித்தவள், “எல்லாமே சொல்லி கொடுத்தாங்க பானுமா..” என்று சிரித்துக்கொண்டே அவள் சொல்லும் பொழுது பானுமாவின் மனம் மகிழும்..
“அப்படியா செல்லம் சரிடா நீ போய் கைகால் மூஞ்சி எல்லாம் கழுவிட்டு வா.. நானு உனக்கு சாப்பிட ரவாலட்டு பண்ணி வைச்சிருக்கேன் வா வா..” என்று சொல்லிவிட்டு அவளுக்கு பிடித்ததை செய்து கொடுப்பார்.. மகள் சொல்வதை சமையலறைக்குள் இருந்து கேட்கும் பொன்னுத்தாய்க்கு கொஞ்சம் சந்தேகம் வர ஆரம்பித்தது..
வளரின் நடவடிக்கை எல்லாம் பொன்னுதாயின் மனதில் சந்தேக விதையை விதைத்தது.. அது அறியாத வளர்மதி ஊரே முழுவதும் வலம்வர ஆரம்பித்தாள்.. அன்று காலையில் பானுமாவிடம் சொல்லிவிட்டு பள்ளிக்கூடம் செல்ல வந்தவள் சிவராமனின் முகத்தைப் பார்த்தாள்.. அவரோ சரியான தலைவலியில் சோபாவில் சாய்ந்து அமர்ந்திருந்தார்..
அதைப் பார்த்தவள் மெல்ல அவரின் அருகில் சென்று, “அப்பாரு..” என்று அழைக்க திரும்பிப் பார்த்த சிவராமன், “வளரு வாடி குட்டி..” என்று அவளைத் தூக்கி மடியில் அமரவைக்க அவரின் முகத்தையே பார்த்தாள் வளரு.. பிறகு, “அப்பாரு உங்களுக்கு என்ன ஆச்சு.. ஏன் இப்படி இருக்கீங்க..” என்று தலையில் தடவியிருந்த தைலத்தைத் தொட்டுக்காட்டி கேட்டாள்..
“அப்பாருக்கு தலை வலிக்குது செல்லம்.. அதுதான் அப்பாரு இப்படி இருக்கேன்..” என்று சொல்லவும், “அப்போ இப்போ வயலுக்கு யாரு காவலுக்கு போவா..” என்று கேட்டதும் சிரித்தவர் விளையாட்டாக, “ஏன் நீயே போயேன்..” என்று சொல்லிவிட அங்கு வந்த பானுமாவிடம் ஸ்கூலுக்கு போறேன் என்று சொல்லிவிட்டு ஒரே ஓட்டமாக வயக்காட்டு ஓடிவிட்டாள்..
அங்கே நாத்துநட வந்த எல்லோரையும் பார்த்தவள், “எல்லோரும் சீக்கிரம் வேலை செஞ்ச சாயந்திரம் சீக்கிரம் வீடு போலான்னு அப்பாரு என்னிடம் சொல்லி விட்டாக.. சீக்கிரம் வேலைய பாருங்க..” என்று சொன்னவள் அங்கிருந்த மாமரத்தின் மீது ஏறி அமர்ந்து அங்கிருக்கும் எல்லோரையும் பொழுதுவரை வேலை வாங்கிவிட்டு மாலைதான் வீடு வந்தாள்..
இது எதுவும் அறியாத சிவராமன் மில் வேலை விஷயமாக வெளியே கிளம்பிச் சென்றுவிட்டு அப்பொழுதுதான் வீடு வந்து சேர்ந்தார்.. அவரின் பின்னோடு வந்த வளரு, “அப்பாரு வயக்காட்டுல எல்லா வேலையும் முடிஞ்சிது..” என்று சொல்லிவிட்டு அங்கே நிற்காமல் ஒரே ஓட்டமாக ஓடிவிட்டாள்..
அவள் சொன்னது புரியாமல் அவர் யோசனையோடு நிற்க அந்த வழியாக வந்த ராக்காயி, “ஏனுங்க பெரிய வீட்டுகரம்மா..” என்று பானுமாவை அழைக்க அவரும் வெளியே வர, “இந்த வளரு இன்னைக்கு முழுவதும் எங்கள வேலை வாங்கியே கொன்னுட்ட போங்க.. பார்க்கத்தா கிள்ளு கீரையாட்ட இருக்க.. இவ பண்ற அலும்பு இருக்கே..” என்று புலம்பியபடியே சென்றதும் சிவராமனுக்கு எல்லாம் புரிந்தது..
இதையெல்லாம் கேட்ட பானுமா, “அடியே பொன்னுத்தாய் இவள ஸ்கூலுக்கு அனுப்பின இவ என்ன வேல பண்ற பாரு..” என்று சொல்ல தன்னுடைய வேலை எல்லாம் விட்டுவிட்டு ஓடிவந்த பொன்னுத்தாய், “நாந்தான் சொன்னேனம்மா இவ படிக்க எல்லாம் மாட்டான்னு..” என்று கூறினார்..
அவர் சொன்னதைக்கேட்டு, “என்னடி ஆத்தா சொல்ற நீ..” என்று கேட்டதும், “நான் எப்படியோ அப்படி வந்து பிறந்திருக்க.. இன்னும் என்னென்ன எல்லாம் பார்க்கணுமோ..” என்று சொல்ல பன்னீர் ரோசா செடியின் அருகே நின்ற வளரைப் பார்த்த பானுமா, “அடி கழுத உன்ன படிக்க சொல்லி அனுப்பின நீ வயக்காட்டில எல்லோரையும் வேலை வாங்கிட்ட வர..” என்று விறகு கட்டையை தூக்கிட்டு அவளைத் துரத்தினார்..
அதற்கு எல்லாம் பயந்தவள நம்ம வளரு, “பானுமா எனக்கு எது வருதோ அதை செய்யின்னு சொல்லிட்டு இப்போ கட்டை எடுத்துட்டு அடிக்க வரீங்களே இது உங்களுக்கே நியாயமா படுதா..” என்று சிரித்த வண்ணம் துள்ளிக்குதித்து ஓடிய வளரைப் பார்த்தவருக்கு சிரிப்பு வந்துவிட, “ஏண்டி பொன்னுத்தாயி இவளுக்கு என்னன்னு பால்வார்த்த... இப்போவே படிப்புக்கு முளுக்கு போட்டுடாலா...” என்று கேட்டவர் கணவனைப் பார்க்க அவரோ விழுந்து விழுந்து சிரித்தார்..
அவரின் அருகே வந்து நின்ற வளரு, “பானுமா எனக்கு இந்த வரலாறு மட்டும் மண்டையிலேயே ஏறல.. இனிமே நான் ஸ்கூலுக்கு போக மாட்டேன்..” என்று சொல்லிவிட்டாள்.. அவள் சொன்ன விஷயம் பானுமாவின் மனதை பாதித்தாலும் அவளை கண்டிக்க அவருக்கு ஏனோ மனம் இல்லாமல் போனது..
என்னதான் தன்னுடைய மகளென்று அவர் வளர்த்தாலும் கூட கண்டிக்கும் உரிமை எல்லாம் என்னவோ மரிமுத்துவிற்கும், பொன்னுதாய்க்கும் இருப்பதாகவே நினைத்தார் பானுமா.. பிறகு பானுமாவின் முகம் பார்த்த சிவராமன் சிரிப்பு மறைந்து யோசிக்க ஆரம்பித்தார்.. அவளுக்கு எது வருதோ அதை அவளுக்கு சரிவர கத்து கொடுக்க முயற்சி எடுக்க ஆரம்பித்தார்.. வளரின் பாதை விளையாட்டு பாதையாக மாறியது.. இதுவரை குழந்தை என்று இருந்தவள் பருவம் அடைந்தாள்..