• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Thulirvidum Nesamadi! - 43 Pre - Final

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அத்தியாயம் – 43

மரம் மண்ணில் சாயவில்லை

என் மனம் உன்னில் சாய்ந்தடி..

விண்ணில் இருந்து மண்ணை

விழும் மழைத்துளி போல

எனது நேசமும் உண்மைதானடி..

நான் வைத்த மரம் புயலையும்

கடந்து நிமிர்ந்து நிற்கிறதடி

எனது துளிர்விடும் நேசம்

அழியாத காவியமானதடி!

இதுதான் துளிர்விடும் நேசமோ..

அவன் கைகாட்டிய திசையில் மகிழம்பூ மீண்டும் கம்பீரமாக நின்றிருந்தது.. அவள் விழுந்துவிட்டது என்று நினைத்த மரம் மீண்டும் அதே இடத்திலே எந்த மாற்றமும் இன்றி நின்றிருப்பதை பார்த்து பிரமித்து நின்றவளின் கண்களில் கண்ணீர் வழிய அவள் ஓடிச்சென்று அந்த மரத்தைத் தொட்டுப்பார்த்தாள்.. அது எந்த மாற்றமும் இன்றி நின்றிருக்க மரத்தை நிற்க வைக்க நாலாபுறமும் கயிறை இழுத்துக் கட்டியிருந்தனர்.. அதன் அருகில் நின்றவளின் உதட்டில் புன்னகை அரும்ப அவளின் பார்வை மகிழனின் பக்கம் திரும்ப அவளின் செய்கைகளை சிரித்தபடியே பார்த்துக்கொண்டிருந்தேன்...

அவனின் கண்களில் தெரிந்த காதலில் அவளின் கண்களில் கண்ணீர் வந்துவிட, “மாமா இது மரம் இல்ல.. நம்ம காதல் மாமா.. எனக்காக எதுக்கு மகி இவ்வளவு செய்யற..” என்று கேட்டதும் அவன் முறைக்க அவளோ அவனைப் புரியாத பார்வைப் பார்த்தாள்.. அவளின் புரியாத பார்வையைக் கண்ட மகிழனோ அவளின் அருகில் செல்ல அவன் நெருங்கி வருவதில் அவளின் இதயம் படபடவென்று அடித்துக் கொண்டது..

அவளின் அருகில் வந்த மகிழனோ, “உனக்காக செய்யாமல் வேற யாருக்காக செய்ய..?” என்று கேட்டவனின் முகத்தை அவள் இமைக்காமல் பார்க்க, “உனக்கு பேரு வெச்சுட்டு நான் இங்கிருந்து போயிட்டேன் துளிரு.. கருவில் இருக்கும் தன்னுடைய காதலிக்கு பேரு வெச்ச காதலன் நானாகத்தான் இருப்பேன்.. நான் வளர வளர படிப்பு, வேலை என்று என்னோட பாதைகள் திசை மாறினாலும், உன்னோட நினைவு அடிமனதில் இருந்துடே இருந்தது.. எந்த பெண்ணை கடந்து சென்றாலும் அவளைப் பார்க்கணும் என்ற எண்ணமே எனக்கு வந்ததே இல்ல..” என்றவன் மடைதிறந்த வெள்ளமாக பேச ஆரம்பித்தான்..

அவன் சொல்வதை எல்லாம் ஆச்சர்யத்துடன் கேட்டுக்கொண்டே நின்றாள் வளர்மதி.. அவளின் மனமோ, ‘எனக்கு பெயர் வெச்சது நீன்னு எனக்கு நல்லாவே தெரியும்..’ என்றவள் மனதில் நினைக்க, “இந்த மஞ்சரி அடிக்கடி கேட்பா.. மாமா உனக்கு புடிச்ச பொண்ணு எப்படி இருக்கனுன்னு சொல்லு என்று அடிக்கடி என்னிடம் கேட்பா.. அப்போ எல்லாம் எனக்கு வரப்போற பொண்டாட்டி நல்ல வாய்பேச வாயாடியாக இருக்கணும் என்று சொல்வேன்..” என்றவன் சொல்ல அவளோ அவனைப் போய் கோபத்துடன் முறைத்தாள்..

அவளின் பார்வையைக் கவனித்த மகிழன், “எதுக்குடி முறைக்கிற.. நீ என்னோட செல்ல வாயாடித்தான்..” என்று குறும்புடன் கூறியவன் அவளின் கைபிடித்து இழுக்க அவனின் மார்பில் வந்து விழுந்தவளை ஒரு கையில் அணைத்துக்கொண்டு மற்றொரு கையில் அவளின் முடியை எடுத்து, “உன்னிடம் எனக்கு ரொம்ப பிடிச்சது இந்த முடிதான்..” என்று கூறிய மகிழன் அந்த முடியை எடுத்து அவளின் கன்னத்தில் குறுகுறுப்பு முட்டினான்.. அவளோ இமைகளை மூடிவிட, “அத்தை மகள் ரத்தினத்தை அத்தான் மறப்பேனோஅன்னநடை சின்னயிடை எல்லாம் வெறுப்பேனோ..” என்று குறும்புடன் அவளின் காதோரம் மெல்ல பாடியதும் அவளின் நினைவுகள் அவனை முதல்நாள் சந்திப்பில் அவளின் உதட்டில் புன்னகை அரும்பியது..

வானம் மெல்ல இருட்ட தொடங்க மேற்கே மறைய தொடங்கினான் கதிரவன்.. அதுவும் செந்நிற நிலவு போல மலையின் முகட்டில் மறைய ஆரம்பிக்கும் சூரியனை இமைக்காமல் பார்த்த வளரின் பார்வை சென்ற திசையைப் பார்த்த மகிழனோ, “துளிரு மறையும் முழு சூரியனை பார்க்காதே.. அப்புறம் உன்னோட பாடு பேரும் பாடுதான்..” என்று கூறினான்.. அவளோ அவன் சொன்ன அர்த்தம் புரியாமல் நிமிர்ந்து பார்க்க, “இதுக்கு விளக்கம் அப்புறம் சொல்றேன்..” என்று கண்சிமிட்டினான்..

“அதுசரி மீதியையும் சொல்லுங்க மகிமாமா..” என்றவள் கேட்டதும், “அதுக்கு அப்புறம் எல்லாம் உனக்கு தெரியும் இல்ல.. பாட்டிக்கிட்ட போய் சொல்லி உன்னை கட்டிட்டு வந்தேன்..” என்று சொன்னவனை அவள் நிமிர்ந்து பார்க்க, “என்ன கேட்கணும் கேளு..” என்றவன் கூறியதும், “அன்னைக்கு பாரியூர் சந்தைக்கு வந்து அத்தை மகளை சைட் அடிக்க வந்தேன்னு சொன்னீங்க.. அந்த அத்தை மகள் நான்தானே..” என்றவள் ஆர்வத்துடன் கேட்டாள்..

“ஆமா இந்த அத்தை மகள பார்க்கத்தான் வந்தேன்..” என்றவன் சொல்லி முடிக்க, “அப்போ அன்னைக்கு கவுந்தபாடிக்கு வழி தெரியலன்னு அத்தையும், மாமாவும் வந்து கேட்டாங்களே..? அதுயும் உங்க லீலைதானா..?” என்றவள் கேட்டதும், “எப்படி வளரு இவ்வளவு அறிவாக இருக்கிற.. அதுவும் இவ்வளவு சீக்கிரம் உண்மை கண்டு பிடிச்சுட்ட..” என்று ஆச்சர்யமாகக் கேட்டதும், “மகி நீ சரியான ஆளுடா.. உன்னை எல்லாம் மரத்துல கட்டிவெச்சு இதைக்கனும்..” என்று அவனின் நெஞ்சில் குத்தினாள்..

அவள் கொடுத்த அடிகளைத் தாங்கிய மகிழனோ, “அடிக்கிற கைதான் அணைக்கும்..” என்று பாடல் பாட, “மகி.. உன்னை என்ன பண்ணனும் தெரியுமா..” என்றவள் கேட்டதும், “நீ என்ன வேண்டுமானாலும் பண்ணிக்கோ இந்த மாமாவை வெச்சு செய்ய உனக்கு எல்லா உரிமையும் இருக்குடி..” என்றவன் சொல்லி முடிக்க அவனை இமைக்காமல் பார்த்தாள்.. வானம் நன்றாக இருட்டிவிட இருளில் நின்று அவனின் முகம் பார்த்தாள் துளிர்நிலா..

மேகங்களின் இடையே மறைந்து இருந்த வெண்ணிலவு வெளியே வந்து வெளிச்சம் கொடுக்க அதில் தெரிந்த தன்னுடைய கணவனின் முகத்தை இமைக்காமல் பார்த்தவள், “நான் உனக்கு என்ன செஞ்சேன்.. நீ எதுக்கு எனக்கு எல்லாம் செய்யற..” என்றவள் குறும்புடன் கேட்க அவளின் நிலவு முகத்தைப் பார்த்தவன், “உன்னால மட்டும் தான் பாட்டி எங்களை எல்லாம் ஏத்துகிட்டாங்க துளிரு..” என்றவன் சொல்ல அவள் ஏதோ இடையே சொல்ல வர, “இல்ல துளிரு.. பாட்டிக்கு எங்க மேல கோபம் இல்லை என்றாலும் எங்கள பார்க்க ஒரு நாள் கூட அவங்க எங்க வீட்டு வசப்படிக்கு வந்தது இல்ல..” என்று வருத்ததுடன் கூறினான்..

“இருபத்தி ஏழு வருடம் தாத்தா, அப்பா, சித்தப்பா எல்லோரும் முயற்சி செஞ்சும் செய்ய முடியாமல் போன ஒரே விஷயம்.. என்னோட பாட்டி எங்கள் மேல உள்ள கோபத்தை மறந்து நாங்க எல்லாம் ஒன்றாக இருக்கணும் என்ற ஒரே காரணம் நீ மட்டும் தான்...” என்று கூறியவன் ஒரு நொடி நிறுத்து அவளின் முகம் பார்த்துவிட்டு மீண்டும் தொடர்ந்தான்.. “உன்னோட இடத்தில வேற எந்த பொண்ணும் என்னை இந்த அளவுக்கு நேசிக்க மாட்டா தெரியுமா..?” என்று கூறியதும் அவளுக்கு என்னவோ போலானது..

“ஏன் மகிமா இப்படி சொல்ற..” என்று வருத்தத்துடன் கேட்டவளின் முகம் பார்த்து புன்னகைத்த மகிழனோ, “ஒரு பொய்யை மறைக்க எத்தனை போய் சொல்லிருப்பேன்.. அதுவும் உன்னிடம் நான் மகிழன் இல்லன்னு சொல்லி உன்னோட கழுத்தில் தாலி கட்டினேன்.. ஆனா அது எல்லாம் தெரிஞ்சும் நீ என்னை ஒரு நொடி கூட பிரியாமல் என்னோட வளர்ச்சிக்கு தடை சொல்லாமல் என்னை எனக்காக மட்டும் காதலிச்ச.. இந்த மாதிரி ஒரு மனைவி யாருக்கு கிடைப்பா..” என்று அவளிடமே கேட்டான்.. அவளால் பதில் சொல்ல முடியாமல் போனது..

அதற்குள் அங்கு வந்த மதிலன் இருவரும் நின்றிருப்பதைப் பார்த்து, “இருங்க பாட்டி வர சொல்றேன்..” என்று வீட்டை நோக்கிக் குரல் கொடுக்க அந்த குரலில் அதிர்ந்து விலகி நின்ற வளர்மதியின் பார்வை மகிழனின் பின்னோடு வந்த மிதிலனைப் பார்க்க அவள் பார்வை சென்ற திசையைத் திருப்பிப் பார்த்த மகிழனை நோக்கி வந்து கொண்டிருந்த மிதிலனோ, “அண்ணா, அண்ணி உங்களை வீட்டுக்குள் வரச்சொல்லி பாட்டி சொல்லி விட்டாங்க..” என்று சொல்ல மகிழனின் முகம் பார்த்த வளர்மதி மெளனமாக முன்னே நடந்தாள்..

அவளின் பின்னோடு நடந்தா மகிழனிடம், “அண்ணா இங்க இரண்டு நாளாகவே மழை பொழிய அப்போ எல்லாம் அண்ணி சந்தோசமாக இருந்தாங்க.. ஆனால் நேற்று இரவு வீசிய புயல் காற்றில் எல்லாம் மரங்களும் விழுந்ததைப் பார்த்தவங்க மகிழம்பூ மரம் மட்டும் விழுந்திருக்காதுன்னு முழுவதுமாக நம்பினாங்க.. ஆனால் அது விழுந்தும் அவங்களால் தாங்கவே முடியல.. அவங்க பயந்த ஒரே விஷயம் உனக்கு ஏதோ ஆகிருக்குமோன்னு தான்..” என்று மிதிலன் சொல்லிவிட்டு மகிழனின் முகம் பார்த்தான்..

“அவள் என்னை ஊருக்கு போன்னு சொன்னாலும் என்னை பிரிஞ்சி அவ இருக்க மாட்டான்னுதான் மிதிலா இவ்வளவு சீக்கிரம் என்னோட வேலை எல்லாம் முடிச்சுட்டு வந்தேன்.. இங்கே வந்து அவள் இருக்கும் நிலையைப் பார்த்ததும் ஏண்டா நம்ம இவள தனியாக விட்டுட்டு போனோம்னு தான் எனக்கு தோணுச்சு.. இனிமேல் அவள தனியாக விட்டுட்டு நான் எங்கயும் போக மாட்டேன்..” என்று கூறியவன் மிதிலனைப் பார்க்க அவன் சந்தோஷப்பட்டான்..

“மிதில் நீ ரஞ்சிதாவோட பேரன்ஸ் நம்பர் கொடு.. அவங்களோட அப்பா அம்மாவிடம் நான் பேசறேன்..” என்று சொல்லி வீட்டின் உள்ளே நுழைந்தான்.. அங்கே வளர்மதி எப்பொழுதும் போல பானுமாவின் அருகில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க பானுமாவின் மறுப்பக்கம் அமர்ந்தவன், “பாட்டி என்னை பற்றி உங்க பேத்தி என்ன கம்ப்ளைண்ட் கொடுக்கிற..” என்று கேட்ட மகிழனைப் பார்த்தபடி இன்னொரு சோபாவில் அமர்ந்தான் மிதிலன்..
 




Last edited:

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
வீட்டில் இருந்த எல்லோரையும் பார்த்தா பானுமா, “இனிமேல் நீ ஊருக்கு போறேன்னு சொன்ன போக கூடாதுன்னு சொல்ல சொல்ற மகிழா..” என்று வளர்மதியை வம்பில் மாட்டிவிட்ட பானுமாவைப் பார்த்த வளர்மதி, “பானுமா நான் எப்போ சொன்னேன்..” என்று சிணுங்கினாள்.. அவளின் சிணுங்கலைப் பார்த்த பானுமா, “எங்க உயிரை எல்லாம் வாங்கிட்டு இப்போ சின்ன புள்ள மாதிரி சிணுங்கற..” என்று கோபம் போல கூறினார் பானுமா..

அவர் சொன்னதைக் கேட்டு எல்லோருமே சிரிக்க லட்சுமியோ, “டேய் பாவம்டா புள்ள.. இந்த இரண்டு வாரமாக அவளோட முகத்துல நாங்க சிரிப்பையே பார்க்கல.. என்னதான் அவளைச் சுற்றி நாங்க இத்தனை பேரு அவளை பார்த்துகிட்டாலும் கூட அவள் என்னவோ தனிமையில் இருக்கிற மாதிரியே நினைக்கிற..” என்று வளரின் மனதை படித்து போலவே கூறினார்.. சக்தியோ, “நாங்க சென்னையில் இருந்து வந்து பார்த்தபோ இவளோட கண்ணில் ஒளியே இல்லடா.. இப்போ உன்னை பார்த்த பிறகுதான் அவளோட முகமே மலர்ந்திருக்கு..” என்று கூறினார்..

“இவள் வீட்டுக்குள் முடங்கியத்தைப் பார்த்து எனக்கு உன்மேல சரியான கோபம் மகிழா..” என்று கூறிய தாத்தாவைப் பார்த்த மகிழனோ, “என்னை ஊருக்கு போன்னு சொன்னவள் இப்போ நல்ல புள்ளயாட்டம் உட்காந்திருக்கா.. ஆனால் நான் எல்லோரிடமும் திட்டு வாங்கிட்டு இருக்கேன்.. எல்லாம் நான் வாங்கிட்டு வந்த வரம்..” என்றவன் சொல்ல எல்லோருமே மனம்விட்டுச் சிரித்தனர்..

“டேய் என்னடா இப்படி எல்லாம் சொல்ற..?” என்று சங்கரன் அவனை அதட்ட, “உங்க எல்லோருக்கும் அவள்தான் முக்கியம்.. என்னைப்பற்றி யாரு இங்கே கவலைப்படகிறாங்க..” என்று மகிழன் சோகம் போல முகத்தை வைத்துகொண்டு கேட்க, “நான் எதுக்கு மாமா இருக்கேன்..” என்று குறும்புடன் கூறினாள் வளர்மதி.. அவள் சொன்னதைக்கேட்டு, “ஊரில் இருந்து வந்தவனை படுத்தி எடுத்துட்டு பேசறீயா நீ.. உனக்கு இருக்குடி..” என்றவன் மிரட்டினான்..

இருவரும் பேசுவதைப் பார்த்த பெரியவர்களின் மனம், ‘இதே மாதிரி இவங்க எப்பவும் சந்தோசமாக இருக்கணும் என்று நினைக்க மிதிலனோ, ‘அண்ணா மாதிரியே நானும் என்னோட ரஞ்சிதாவை கண்ணுக்குள் வெச்சு பார்த்துக்கணும்..’ என்று நினைத்தான்.. அவனின் மிரட்டல் கண்டு பயந்து பானுமாவின் பின்னோடு மறந்தவள் மகிழனின் முகம் பார்த்து, “வெவ்வேவ்வா..” என்று பலிப்பு காட்ட, “அடிங்கு..” என்று கூறியதும் பானுமாவின் தோளில் சாய்ந்தவள்..

“என்னோட அம்மா கூட இருக்கும் வரைக்கும் உன்னால ஒன்னும் பண்ண முடியாது பனமரம்..” என்று குறும்புடன் கூறியவள் திடீரென நாக்கை கடிக்க, “நல்ல மாட்டிக்கிட்டியே செல்லம்..” என்று கூறியதும் பானுமா, “என்னோட பேரன் உனக்கு பனைமரமா..?” என்றவளின் காதைப் பிடித்து திருக, “பானுமா நீங்க எப்போ கட்சிவிட்டு கட்சி மாறினீங்க.. ஐயோ நீங்க கட்சி விட்டு போன ஆட்சியே கவிழ்ந்திரும்..” என்று கூறியவள், “அம்மா இனிமேல் உங்க பேரனை அப்படி சொல்ல மாட்டான்..” என்று சொல்லியதும் அவளின் காதை விட்டார் பானுமா..

அவள் காதைப் பிடித்துக்கொண்டே சிரிக்கும் பானுமாவின் முகம் பார்த்து, “உங்க பேரனை சொல்ல மாட்டேன்.. ஆனா என்னோட புருஷனை பனமரம் என்று சொல்வேன்.. அதுக்கு எனக்கு முழு உரிமை இருக்கு இல்ல மாமா..” என்று மகிழனைப் பார்த்தவள் குறும்புடன் கண்சிமிட்ட, “நீ ஒருத்தி போதும் என்னை காலைவாரிவிட.. வெளி ஆளுங்க எல்லாம் தேவையே இல்லடி..” என்றவன் சொல்லி முடிக்க வளர்மதி முதற்கொண்டு எல்லோருமே சிரித்தனர்.. அன்று இரவு எல்லோரும் சாப்பாட்டுவிட்டுத் தூங்க சென்றனர்..

அன்று இரவு அவனின் அறையில் நுழைந்த வளர்மதியைத் தூக்கி சென்று படுக்கையில் பட்டவன் அவளின் கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டு, “மகளே கீழே என்னை எந்த அளவுக்கு ஓட்டினா.. இப்போ உன்னை என்ன பண்ண போறேன்னு பாரு..” என்று சொல்ல உதட்டைச் சுளித்த வளர்மதி, “மாமா உனக்கும் எனக்கும் இடையே ஒரு கணக்கு இருக்கு ஞாபகம் இருக்கா..?” என்று கேட்டபடி கட்டிலில் எறியமர அவளின் முகத்தையே இமைக்காமல் பார்த்த மகிழன், “நீ என்னை சந்தேகப்படுகிறாயா துளிரு..?” என்று சுவற்றில் சாய்ந்து நின்று கேள்வியாக வளரின் முகம் பார்த்தான்..

அவனின் முகத்தில் சோகத்தில் இருக்க, “மாமா நீ ஷீலா அக்காவைப் பற்றி கேட்கிறீங்களா..? உன்மேல நம்பிக்கை இல்லாமல் இருந்ததான் மகி.. நான் உன்னை சந்தேகப்படனும்.. அன்னைக்கு உன்கூட பேச எந்தளவுக்கு முயற்சி பண்ணேன் தெரியுமா..? ஆனா நீ போன் எடுக்கவே இல்ல.. நீ போன் எடுத்ததும் என்னை திட்டின.. ஏன் மகிமா.. நான் என்ன தப்பு பண்ணினேன்.. உன்னோட பேசணும் என்ற ஆசையில தானே உனக்கு நான் கால் பண்ணினேன்..” என்று வருத்ததுடன் கேட்டாள்..

அவளின் முகம் பார்த்த மகிழன், ‘இவ இன்னும் என்னோட மெசேஜ் பார்க்கவே இல்லையா..?’ என்று யோசிக்க அவளோ, “மாமா நீ வந்ததில் இருந்து நானும் உன்ன பார்த்துட்டே இருக்கேன்.. ஆனா நீ நான் அனுப்பிய வாய்ஸ் மெசேஜ் கூட கேட்கவே இல்ல.. இன்னைக்கு வரைக்கும் உன்னிடம் இருந்து ஒரு போன் கூட வரல.. ஆனா இங்க வந்ததும் எனக்காக எல்லாம் பார்த்து பார்த்து செய்யற..” என்று அவனின் முகம் பார்த்து கூறியவளின் கண்களில் கண்ணீர் வழிந்தது..

அவளின் முகத்தைப் பார்த்த மகிழனோ, “உன்னோட பேசல என்று உனக்கு இந்தளவுக்கு மனம் வலிக்குதே துளிரு.. உன்னை இங்க விட்டுவிட்டு போயிட்டு நான் துடிச்சிருக்கேன்.. இரவும் பகலும் உனக்காக உன்னோட முகத்தை மட்டும் மனசில் நினைச்சு நினைச்சு வேலை செஞ்சு பலநாள் தூங்காமல் இருந்திருக்கேன்.. இது எல்லாம் உனக்காகத்தான்.. அது உனக்கு புரியல துளிரு..” என்றவன் சொல்ல சொல்ல, “நான் கடைசியாக போன் பண்ணி உன்னிடம் பேசணும்னு சொன்னேன்.. அதை அந்த அக்கா உன்னிடம் சொல்லவே இல்லையா மகி..” என்று மனதில் இருப்பதை அவனிடம் மறைக்காமல் கேட்டாள்..

அவளின் கண்களில் கண்ணீரைப் பார்த்த மகிழனோ அவளின் அருகில் வந்து அணைத்துக்கொண்டான்.. அவளோ அன்றைய நிலையில் அவனின் மார்பில் சாய்ந்து அழுக ஆரம்பித்த வளர்மதியை சமாதானம் செய்து தூங்க வைக்கவே அவனுக்கு நேசம் சரியாக இருந்தது.. அவள் அழுதபடியே அவனின் மடியில் படுத்து உறங்கிவிட, “நான் பக்கத்தில் இல்லாமல் எந்தளவுக்கு இவ தவிச்சு இருக்கிற..” என்று வாய்விட்டு கூறிய மகிழன் அவளை அணைத்தபடியே அவளின் அருகில் படுத்தான்..

அவனின் மார்பில் படுத்து ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்ற வளர்மதியோ, “மாமா நம்ம காதலுக்கு சாட்சியாக என்னோட வயிற்றில் குட்டி பூ ஒன்று பூத்திருக்கு மகி..” என்று கூறியவள், “ஐ லவ் யூ மாமா..” என்று கூறியவளின் நெற்றியில் காதலுடன் முத்தமிட்ட மகிழனோ, “ஐ லவ் யூ நிலாமா..” என்று அவளை அணைத்தபடியே தூங்கினான் மகிழன்.. மறுநாள் காலையில் கண்விழித்த வளர்மதி, “நீ அந்த வாய்ஸ் மெசேஜ் கேட்கும் வரைக்கும் மகனே உனக்கு தண்டனைதான்..” என்று சிரித்துக்கொண்டே கூறியவள் அவனின் முடியைக் கலைத்துவிட்டு எழுந்து சென்றாள்.. அவள் வேண்டுமென்றே அவனிடம் விளையாடுவது பாவம் மகிழன் அறியவில்லை..

காலையில் மகிழன் எழுந்ததும், “அப்பா, அம்மா நீங்க ஊருக்கு வரீங்களா..?” என்று கேட்டதும், “ஏண்டா காலையில் எழுந்ததும் போலாம் என்று சொல்ற..” என்று கேட்ட லட்சுமி, “நீ வேண்டுமென்றால் போப்பா மகிழா.. நான் என்னோட அம்மா, அப்பா கூட இங்கே ஒரு வாரம் இருந்துவிட்டு வருகிறோம்..” என்று சொல்ல மனைவியின் முகம் பார்த்தான் மகிழன்.. அவளோ, “மாமா. அத்தை இங்கே இருக்கட்டும் மாமா..” என்று கூறினாள்..

இத்தனை வருடத்திற்கு பிறகு புகுந்த வீடு வந்த மாமா அத்தையை அங்கே அழைத்துச் செல்ல மனம் வராவிட்டாலும் மகிழனின் பார்வை புரிந்து, “நம்ம மட்டும் போகலாம் மாமா..” என்றவள் சொல்ல எல்லோரிடமும் சொல்லிவிட்டு வளர்மதிக் கிளம்ப வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்தனர் பெரியவர்கள்..! எல்லோரிடமும் சந்தோசமாக விடைபெற மகிழன் காரில் என்ற நிலா காரில் ஏறியதும் கார் வேகமெடுத்து சென்றது..

நேசம் துளிர்விடும்..
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top