- Joined
- Jan 17, 2018
- Messages
- 1,547
- Reaction score
- 7,648
அத்தியாயம் – 3
கல்லூரி முடிந்து, மேட்(MAT) தேர்வும் எழுதி அதில் தேர்ச்சி பெற்று வேறு கல்லூரியில் M.B.A. படிக்க நினைத்த மதியை, கோமு அவளை அதே கல்லூரியில் தொடர்ந்து படிக்குமாறு கூறி அவளுக்கு வேப்பில்லை அடித்து இருந்தார்.
“இந்த கோமு மம்மி, பண்ணுறது கொஞ்சம் கூட சரியில்லை டாடி. இப்படி எப்போ பார்த்தாலும் ரூல்ஸ் போட்டுகிட்டே இருக்காங்க, நான் என்ன இன்னும் சின்ன குழந்தையா?” என்று தந்தையிடம் முறையிட்டுக் கொண்டு இருந்தாள் மதியழகி.
“உன் அம்மா உன் நல்லதுக்கு தான் எப்பொழுதும் சொல்லுவாங்க, அது உனக்கே தெரியும். அப்புறம் ஏன் டா, என் வீட்டுகாரியை குறை சொல்லிகிட்டே இருக்க?” என்று கேட்டார் அவளின் தந்தை.
“அதான பார்த்தேன்! நீங்க எப்படி எனக்கு சப்போர்ட் செய்வீங்க? எப்போவும் மம்மிக்கு தான் சப்போர்ட் செய்வீங்க” என்று முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டாள்.
“அங்க என்ன சத்தம்?” என்று அடுப்படியில் நின்று வேலை செய்து கொண்டு இருந்த கோமு, ஹாலை பார்த்து குரல் கொடுத்தார்.
“அங்க இருந்தாலும், இங்க ஹால் ல பேசுறது இந்த மம்மிக்கு காதுல விழுது. ஹ்ம்ம்.. இனி நான் வீட்டுல எப்போவும் பாட்டை அலற விட்டுகிட்டே இருக்க போறேன், பாருங்க” என்று சிலிர்த்துக் கொண்டு மாடி ஏறி சென்றாள் மதியழகி.
அதை பார்த்த பெற்றவர்கள் இருவருக்கும், சிரிப்பு வந்தது. என்ன தான் அவள் அப்படி முகத்தை தூக்கி வைத்து இருந்தாலும், செல்லம் கொஞ்ச அவளுக்கு எப்பொழுதும் தாய் வேண்டும்.
அது மட்டுமா! லீவ் நாட்களில், அவரை படுத்தி விட்டு தனக்கு ஊட்டி விட வேண்டும் என்று அடம் பிடிப்பாள். அதோடு விட்டேனா பார் என்பது போல், அவர் சோபாவில் அமர்ந்து இருந்தால் போதும், மடியில் தலை வைத்து படுத்து விடுவாள்.
அந்த அளவிற்கு அவள் அம்மா செல்லம், ஆனால் சண்டை பிடிப்பதும் தாயிடம் தான். அவளுக்கு வேண்டியதை கேட்டு பார்ப்பாள், தாய் அழுத்தி முடியாது என்று சொன்னால், அதை செய்யவே மாட்டாள். ஆனால் விளையாட்டாக தந்தையிடம், அதை பற்றி புகார் சொல்லி விட்டு தான் மறுவேலை பார்ப்பாள்.
அவளை பற்றி புரிந்த இருவரும், அவளை நினைத்து பெருமிதம் கொண்டாலும், தங்கள் மகள் இன்னும் சிறு பெண் போல் இருப்பதை நினைத்து வருத்தம் கொண்டனர்.
மேலே அவளது அறைக்கு வந்த மதி, அவளின் செல்பேசி அடிப்பதை பார்த்து எடுத்து யாரென்று பார்த்தாள். அழைப்பது கீர்த்தி அக்கா, ஆதியின் தங்கை எனவும் உடனே எடுத்து பேச ஆரம்பித்து விட்டாள்.
“கீர்த்தி அக்கா எப்படி இருக்கீங்க? அப்புறம் அடுத்த வாரம் கல்யாணம், சஞ்சய் மாம்ஸ் கூட டூயட் பாட போயிடுவீங்க, எங்களை எல்லாம் அப்போ நியாபகம் இருக்குமோ, என்னவோ?” என்று கிண்டல் அடிக்க தொடங்கினாள்.
“அடி! பேச்சை பாரு, நான் நல்லா இருக்கேன். உன் கிட்ட ஆரத்தி தட்டு ரெடி பண்ண சொன்னேனே, அதை செய்துகிட்டு இருக்கியா, இல்லையா?” என்று கேட்டாள் கீர்த்தி.
“அக்கா அது அல்மோஸ்ட் ரெடி, இன்னும் சில டிங்கரிங் வேலை மட்டும் பாக்கி. சோ கல்யாணத்துக்கு, மாப்பிள்ளை அழைப்புக்கு எல்லாம் ரெடியா இருக்கும். ஆமா ஆதி சார், என்ன செய்றார் அக்கா? போனே காணோம் அக்கா இப்போ எல்லாம்” என்று ஆதி பற்றி விசாரித்தாள்.
“அது ஏன் கேட்குற மதி, அண்ணா இப்போ எல்லாம் ரொம்ப பிஸி. ஆபிஸ் வேலையும் பார்த்துகிட்டு, சில கல்யாண வேலையும் பார்த்துகிட்டு ஓடிகிட்டே இருக்கார் எப்போவும். அண்ணா இப்படி ரெஸ்ட் எடுக்காம வேலை செய்றது, கொஞ்சம் கஷ்டமா இருக்கு மதி” என்று கூறியவளை எப்படி சமாதானப்படுத்த என்று தெரியவில்லை மதிக்கு.
ஆதியை பற்றி அவளுக்கு நன்கு தெரியும், ஒரு வேலையை எடுத்துக் கொண்டால் அதை பெர்பெக்ட்டாக முடிக்கும் வரை ஓய மாட்டான். யார் என்ன சொன்னாலும், அதை செய்து முடித்துவிட்டு தான் ஓய்வு எடுப்பது பற்றி யோசிப்பான்.
இப்பொழுது நடப்பதோ இரண்டு கல்யாணம், அதுவும் அவன் இப்பொழுது பெரிய தொழிலதிபன். இந்தியாவின் பத்து முக்கிய பணக்காரர்கள் பட்டியலில், இவர்கள் குடும்பமும் ஒன்று. ஆகையால், அதற்க்கு தகுந்தது போல் செலவு கூட செய்து தான் திருமணம் நடத்த வேண்டும்.
அதனால் தான் அவனின் உழைப்பும், ஓட்டமும் நிற்காமல் ஓடிக் கொண்டு இருக்கிறது. இந்நிலையில் யாரும் அவனை ஓய்வு எடுக்க சொல்லி கட்டாயப்படுத்தவே முடியாது.
“என்ன கீர்த்தி அக்கா, இதுக்கு போய் பீல் பண்ணிக்கிட்டு. ஆதியை பத்தி உங்களுக்கே நல்லா தெரியும் தானே, அப்புறம் ஏன் இப்படி புலம்புறீங்க? கல்யாணம் ஆன உடனே பாருங்க, சார் வீட்டுல தான் எப்போவும் இருக்க போறார், நீங்க தான் துரத்தி விட போறீங்க, போய் வேலையை பார்க்க சொல்லி” என்று கூறி சிரித்தாள்.
“ஹா ஹா! அது என்னமோ உண்மை தான் மதி. ஆமா அண்ணா என்னை விட மூத்தவங்க, என்னை அக்கான்னு கூப்பிட்டு, அவனை மட்டும் நீ பெயர் சொல்லி கூப்பிடுற?” என்று அதை பற்றி தெரிந்தாலும், மீண்டும் அவள் பதில் தெரிந்து கொள்ள கேட்டாள்.
“என்ன அக்கா உங்களுக்கு தான் தெரியும் ல, அவன் எனக்கு ஒரு நல்ல பிரண்டு மட்டும் கிடையாது, என்னோட விளையாட்டு பார்ட்னர் அவன் தான். சின்ன வயசுல இருந்தே, நான் ஹரி அண்ணாவோட இருந்ததை விட, இவனோட தான் அதிக நேரம் இருந்து இருக்கேன்”.
“எனக்கு எல்லாமே அவன் தான், அவன் எனக்கு ரோல் மாடல் அக்கா. என்னை அவன் தான் நல்லா பார்த்துகிட்டான், இப்போ வரைக்கும் காலேஜ் ல எனக்கு ஒரு பிரச்சனை வந்தா அவன் முன்னாடி இருந்து தீர்த்து வைப்பான்”.
“இப்போ வரைக்கும், என் பிரண்ட்ஸ் யாருக்குமே எனக்கு அவனை தெரியும் அப்படினே தெரியாது. அந்த அளவுக்கு வெளியிடத்தில், நாங்க ஒரு எல்லையில் நிப்போம். எங்க நட்பு எப்போவும் தொடரும் அக்கா, ஹி இஸ் மை பெஸ்டி ஆல்வேஸ்” என்று ஆதிக்கும் அவளுக்குமான உறவை விளக்கினாள்.
கல்லூரி முடிந்து, மேட்(MAT) தேர்வும் எழுதி அதில் தேர்ச்சி பெற்று வேறு கல்லூரியில் M.B.A. படிக்க நினைத்த மதியை, கோமு அவளை அதே கல்லூரியில் தொடர்ந்து படிக்குமாறு கூறி அவளுக்கு வேப்பில்லை அடித்து இருந்தார்.
“இந்த கோமு மம்மி, பண்ணுறது கொஞ்சம் கூட சரியில்லை டாடி. இப்படி எப்போ பார்த்தாலும் ரூல்ஸ் போட்டுகிட்டே இருக்காங்க, நான் என்ன இன்னும் சின்ன குழந்தையா?” என்று தந்தையிடம் முறையிட்டுக் கொண்டு இருந்தாள் மதியழகி.
“உன் அம்மா உன் நல்லதுக்கு தான் எப்பொழுதும் சொல்லுவாங்க, அது உனக்கே தெரியும். அப்புறம் ஏன் டா, என் வீட்டுகாரியை குறை சொல்லிகிட்டே இருக்க?” என்று கேட்டார் அவளின் தந்தை.
“அதான பார்த்தேன்! நீங்க எப்படி எனக்கு சப்போர்ட் செய்வீங்க? எப்போவும் மம்மிக்கு தான் சப்போர்ட் செய்வீங்க” என்று முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டாள்.
“அங்க என்ன சத்தம்?” என்று அடுப்படியில் நின்று வேலை செய்து கொண்டு இருந்த கோமு, ஹாலை பார்த்து குரல் கொடுத்தார்.
“அங்க இருந்தாலும், இங்க ஹால் ல பேசுறது இந்த மம்மிக்கு காதுல விழுது. ஹ்ம்ம்.. இனி நான் வீட்டுல எப்போவும் பாட்டை அலற விட்டுகிட்டே இருக்க போறேன், பாருங்க” என்று சிலிர்த்துக் கொண்டு மாடி ஏறி சென்றாள் மதியழகி.
அதை பார்த்த பெற்றவர்கள் இருவருக்கும், சிரிப்பு வந்தது. என்ன தான் அவள் அப்படி முகத்தை தூக்கி வைத்து இருந்தாலும், செல்லம் கொஞ்ச அவளுக்கு எப்பொழுதும் தாய் வேண்டும்.
அது மட்டுமா! லீவ் நாட்களில், அவரை படுத்தி விட்டு தனக்கு ஊட்டி விட வேண்டும் என்று அடம் பிடிப்பாள். அதோடு விட்டேனா பார் என்பது போல், அவர் சோபாவில் அமர்ந்து இருந்தால் போதும், மடியில் தலை வைத்து படுத்து விடுவாள்.
அந்த அளவிற்கு அவள் அம்மா செல்லம், ஆனால் சண்டை பிடிப்பதும் தாயிடம் தான். அவளுக்கு வேண்டியதை கேட்டு பார்ப்பாள், தாய் அழுத்தி முடியாது என்று சொன்னால், அதை செய்யவே மாட்டாள். ஆனால் விளையாட்டாக தந்தையிடம், அதை பற்றி புகார் சொல்லி விட்டு தான் மறுவேலை பார்ப்பாள்.
அவளை பற்றி புரிந்த இருவரும், அவளை நினைத்து பெருமிதம் கொண்டாலும், தங்கள் மகள் இன்னும் சிறு பெண் போல் இருப்பதை நினைத்து வருத்தம் கொண்டனர்.
மேலே அவளது அறைக்கு வந்த மதி, அவளின் செல்பேசி அடிப்பதை பார்த்து எடுத்து யாரென்று பார்த்தாள். அழைப்பது கீர்த்தி அக்கா, ஆதியின் தங்கை எனவும் உடனே எடுத்து பேச ஆரம்பித்து விட்டாள்.
“கீர்த்தி அக்கா எப்படி இருக்கீங்க? அப்புறம் அடுத்த வாரம் கல்யாணம், சஞ்சய் மாம்ஸ் கூட டூயட் பாட போயிடுவீங்க, எங்களை எல்லாம் அப்போ நியாபகம் இருக்குமோ, என்னவோ?” என்று கிண்டல் அடிக்க தொடங்கினாள்.
“அடி! பேச்சை பாரு, நான் நல்லா இருக்கேன். உன் கிட்ட ஆரத்தி தட்டு ரெடி பண்ண சொன்னேனே, அதை செய்துகிட்டு இருக்கியா, இல்லையா?” என்று கேட்டாள் கீர்த்தி.
“அக்கா அது அல்மோஸ்ட் ரெடி, இன்னும் சில டிங்கரிங் வேலை மட்டும் பாக்கி. சோ கல்யாணத்துக்கு, மாப்பிள்ளை அழைப்புக்கு எல்லாம் ரெடியா இருக்கும். ஆமா ஆதி சார், என்ன செய்றார் அக்கா? போனே காணோம் அக்கா இப்போ எல்லாம்” என்று ஆதி பற்றி விசாரித்தாள்.
“அது ஏன் கேட்குற மதி, அண்ணா இப்போ எல்லாம் ரொம்ப பிஸி. ஆபிஸ் வேலையும் பார்த்துகிட்டு, சில கல்யாண வேலையும் பார்த்துகிட்டு ஓடிகிட்டே இருக்கார் எப்போவும். அண்ணா இப்படி ரெஸ்ட் எடுக்காம வேலை செய்றது, கொஞ்சம் கஷ்டமா இருக்கு மதி” என்று கூறியவளை எப்படி சமாதானப்படுத்த என்று தெரியவில்லை மதிக்கு.
ஆதியை பற்றி அவளுக்கு நன்கு தெரியும், ஒரு வேலையை எடுத்துக் கொண்டால் அதை பெர்பெக்ட்டாக முடிக்கும் வரை ஓய மாட்டான். யார் என்ன சொன்னாலும், அதை செய்து முடித்துவிட்டு தான் ஓய்வு எடுப்பது பற்றி யோசிப்பான்.
இப்பொழுது நடப்பதோ இரண்டு கல்யாணம், அதுவும் அவன் இப்பொழுது பெரிய தொழிலதிபன். இந்தியாவின் பத்து முக்கிய பணக்காரர்கள் பட்டியலில், இவர்கள் குடும்பமும் ஒன்று. ஆகையால், அதற்க்கு தகுந்தது போல் செலவு கூட செய்து தான் திருமணம் நடத்த வேண்டும்.
அதனால் தான் அவனின் உழைப்பும், ஓட்டமும் நிற்காமல் ஓடிக் கொண்டு இருக்கிறது. இந்நிலையில் யாரும் அவனை ஓய்வு எடுக்க சொல்லி கட்டாயப்படுத்தவே முடியாது.
“என்ன கீர்த்தி அக்கா, இதுக்கு போய் பீல் பண்ணிக்கிட்டு. ஆதியை பத்தி உங்களுக்கே நல்லா தெரியும் தானே, அப்புறம் ஏன் இப்படி புலம்புறீங்க? கல்யாணம் ஆன உடனே பாருங்க, சார் வீட்டுல தான் எப்போவும் இருக்க போறார், நீங்க தான் துரத்தி விட போறீங்க, போய் வேலையை பார்க்க சொல்லி” என்று கூறி சிரித்தாள்.
“ஹா ஹா! அது என்னமோ உண்மை தான் மதி. ஆமா அண்ணா என்னை விட மூத்தவங்க, என்னை அக்கான்னு கூப்பிட்டு, அவனை மட்டும் நீ பெயர் சொல்லி கூப்பிடுற?” என்று அதை பற்றி தெரிந்தாலும், மீண்டும் அவள் பதில் தெரிந்து கொள்ள கேட்டாள்.
“என்ன அக்கா உங்களுக்கு தான் தெரியும் ல, அவன் எனக்கு ஒரு நல்ல பிரண்டு மட்டும் கிடையாது, என்னோட விளையாட்டு பார்ட்னர் அவன் தான். சின்ன வயசுல இருந்தே, நான் ஹரி அண்ணாவோட இருந்ததை விட, இவனோட தான் அதிக நேரம் இருந்து இருக்கேன்”.
“எனக்கு எல்லாமே அவன் தான், அவன் எனக்கு ரோல் மாடல் அக்கா. என்னை அவன் தான் நல்லா பார்த்துகிட்டான், இப்போ வரைக்கும் காலேஜ் ல எனக்கு ஒரு பிரச்சனை வந்தா அவன் முன்னாடி இருந்து தீர்த்து வைப்பான்”.
“இப்போ வரைக்கும், என் பிரண்ட்ஸ் யாருக்குமே எனக்கு அவனை தெரியும் அப்படினே தெரியாது. அந்த அளவுக்கு வெளியிடத்தில், நாங்க ஒரு எல்லையில் நிப்போம். எங்க நட்பு எப்போவும் தொடரும் அக்கா, ஹி இஸ் மை பெஸ்டி ஆல்வேஸ்” என்று ஆதிக்கும் அவளுக்குமான உறவை விளக்கினாள்.