ஹாய் பிரெண்ட்ஸ்
அடுத்த எபியோட வந்திட்டேன் படிச்சிட்டு உங்க கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் பிரெண்ட்ஸ்...
அந்த பகுதியில் பிரசித்தியான பிள்ளையார் கோவிலில் எந்தவிதமான ஆர்ப்பாட்டமும் இல்லாமல் நடந்துக் கொண்டிருந்தது ஆர்யவர்தன் சாருலதா திருமணம்.சாருலதாவின் சார்பாக அவளின் குடும்பத்தினர் வந்திருந்தனர்.ஆர்யவர்தனுக்கு வெங்கு ஒருவரே.
பிரச்சனைக்கு திருமணமே தீர்வு என்று வெங்கு யோசனைக் கூறியப் போது ஆர்யா சாரு இருவருமே முடியவே முடியாது என்று மறுத்தனர்.விவாதம் அதிகமாகவும் வெங்கு ஆர்யாவைத் தோட்டத்திற்கும் சாருவை குடும்பத்தவர் அவளின் அறைக்கும் அழைத்துச் சென்றனர்.
நட்சத்திரமில்லா வானை வெறித்த ஆர்யாவின் தோளை ஆதரவாக தட்டிக் கொடுத்த வெங்குவை,
"பாபாயா!ஏன் அப்படி சொன்னீங்க?எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பமில்ல...நம்ம பாப்புவ கூட்டிட்டு போய்டலாம்"
"நாயினா!இதுல என்ன தப்பு?!நீயும் எத்தனை நாள் தனியா இருப்ப?அம்மாயிய மாத்திரம் கூட்டிப் போனா உன்னால அவளை தனியா பாத்துக்க முடியுமா?உதினா ஆரோக்கியமா இருந்திருந்தா அவங்களே பாத்துக்குவாங்க...ஆனா இப்ப அவங்க இருக்கற நிலைமைல என்ன செய்ய முடியும்!பாப்பு சாருலதாவ தன் தாயா நினைக்குது...அவக்கிட்டேயிருந்து அத பிரிக்கறதும் தப்பு...எல்லா பிரச்சனைகளுக்கும் இது தான் நல்ல தீர்வு...உன் சங்கடமும் இதுனால தீரும்...நா சொல்றது உனக்கு புரியும்னு நினைக்கறேன்!"
அவரின் எல்லா வாதங்களை விட கடைசியாக அவர் கூறிய விஷயம் அவனை யோசிக்க வைத்தது.
அங்கே சாருவின் நிலையோ அந்தோ பரிதாபம்.அனைவரும் சேர்ந்து ஒரே மனதாக அந்த திருமணத்திற்கு ஒப்புக் கொள்ளும்படி அவளை வற்புறுத்தினர்.ஒரு கட்டத்தில் தாங்கமாட்டாமல்,
"ஸ்டாப் இட்...ஐகாண்ட்"என்று கத்திவிட்டாள்.
திகைத்து நின்றவரை தான் பார்த்துக் கொள்வதாக ஜாடைக் காட்டினான் சமர்த்.அறையை விட்டு அனைவரும் வெளியேறினர்.உறவில் மாமன் மகளானாலும் அவளை தன் தங்கையாகவேப் பார்த்தான் சமர்த்.அவள் வாழ்வு செழிக்க இது பொன்னான வாய்ப்பாக தோன்றியது.இங்கே பேச வரும் முன்பே விசாகப்பட்டினத்தில் அவனின் பிஸ்னஸ் பார்ட்னர் ஒருவரிடம் ஆர்யாவர்தனனைப் பற்றி விசாரித்து கூறும்படி கேட்டிருந்தான்.
அந்த நபருக்கே ஆர்யாவைப் பற்றி நன்றாகத் தெரிந்திருந்தது.அவர் விசாரித்த வரையிலும் கூட அவனைப் பற்றி நேர்மறையான தகவல்களே கிடைத்தது.அதைக் கொண்டு பரிசீலித்த சமர்த்திற்கு ஆர்யா சாருவிற்கு ஏற்ற கணவனே என்று திடமாகத் தோன்றியது.
"சாரு!பாரு ஆர்யாவர்தன் ரொம்ப நல்லவரு... உனக்கு கரெக்டான சாய்ஸ்!அம்முக்கும் அப்பா வேணும்...நீ இதுல மறுக்க என்ன இருக்கு?"
அவன் பேச்சில் கோபமடைந்த சாரு,
"ரொம்பபப நல்லவரா!அவ்ளோ நல்லவரு பெத்த பொண்ண ஏன் தொலைக்கனும்?ஏன் இத்தனை வருஷம் தேடல?"
"சாரு!குழந்தை தொலைஞ்சு போறது எத்தனையோ இடங்கள்ல நடக்கறது தான்..அதுக்காக ஒருத்தர குறை சொல்ல முடியுமா!தேடறதுன்னா அவர் இத்தன வருஷமா தேடிக்கிட்டு தான் இருந்திருக்காரு...அவருகிட்ட டிடெக்டிவ் ரிபோர்ட்ஸ் இருக்கு..."
"எல்லாம் நிஜமாவே இருக்கட்டும்... எனக்கு அவர கல்யாணம் பண்ணிக்க இஷ்டம் இல்லை.. அவ்ளோதான்"
"நீ உன்னைப் பத்தி மட்டும் யோசிக்கற சாரு!அமூல்யாவோட எதிர்காலத்தைப் பத்தி யோசிக்கவே மாட்டியா?நாளை அவ விவரம் தெரியற வயசு வரும் போது தன் அப்பா எங்கேன்னு கேள்வி கேப்பா..நீ அத சொல்ல மறுத்தா உன் மேல அவளுக்கு வெறுப்பு வரும்...தன் பொண்ணு கெடைச்சப்பரும் ஆர்யவர்தன் கண்டிப்பா அவளை கூட்டிட்டு போவாரு...நீ வேண்டாம்னா வேற பொண்ண அவருக்கு கல்யாணம் பண்ணி வைப்பாங்க...யாரோ ஒரு பொண்ணு அம்முவ நல்லபடியா பாத்துக்குவான்னு என்ன கேரண்டி...?அவ மனசு ஒடிஞ்சு போறது உனக்கு சம்மதமா?இவ்ளோ தான் நீ அவ மேல வெச்சிருக்கற பாசமா?"
பாசம் என்ற சொல் சாருவின் பிடிவாதத்தை அசைத்தது.என்ன ஆனாலும் தன் செல்ல மகளுக்காக எந்த தியாகம் செய்யவும் தயாரானாள்.
இருவரின் சம்மதத்தின் பேரில் நான்கு நாட்களில் ஆர்யவர்தன் சாருலதா திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது.ஆர்யாவின் அன்னை உடல்நலம் இல்லாததால் அவரிடம் போனிலேயே சம்மதம் பெற்றான் அவன்.மகன் தனிமரமாக நின்றுவிடுவானோ என கவலைக் கொண்டிருந்த அந்த தாயிக்கு இந்த செய்தி வயிற்றில் பால் வார்த்தது போல் ஆனது.
திருமண நாள் வரை ஆர்யா வெங்கு இருவரும் சமர்த் வீட்டில் தங்குவதாக முடிவானது.திருமண ஷாப்பிங் எதற்கும் சாருலதா வர மறுத்துவிட்டாள்.அதனால் அவளுக்கு தேவையானது எல்லாமே நியதி ஸ்ருதி சின்மயி இவர்களே வாங்கிக் குவித்தனர்.
திருமண விஷயம் அறிந்த நியதி கிடைத்த முதல் அவகாசத்தில் சாருவை தனியாக சந்தித்தவள்,
"சாரு! கரெக்ட் டிசிஷன் எடுத்திருக்கே!ஆனா ஆர்யவர்தன் கிட்ட எல்லா விஷயத்தையும் சொல்லிட்டியா?"
"இல்ல....எப்படி சொல்றது?அம்மு காணாம போகறதுக்கு இவரே காரணமா இருந்தா?...அதான் நா எதையும் இப்போதைக்கு சொல்லப் போறதில்ல... இந்த கல்யாணம் ஜஸ்ட் அம்முக்காக..."
அவள் பதிலில் திகைத்து விட்டாள் நியதி.குழந்தைக்காக திருமணமா?...பாட்டியின் ஆசைக்காக நடந்த தன் திருமணத்தை நினைத்துக் கொண்டாள்.அதே போன்றதொரு இந்த கட்டாய திருமணத்தின் எதிர்காலம் என்ன?
குறித்த முகூர்த்தத்தில் பெரியோர்கள் அட்சதை தூவி வாழ்த்த சாருலதாவின் கழுத்தில் மங்கல நாணை அணிவித்து அவளை தன் தன்னில் பாதி ஆக்கிக் கொண்டான் ஆர்யவர்தன்.
தாயின் உடல்நலத்தை காரணம் காட்டி அன்று மாலையேப் புறப்பட வேண்டும் என்று கூறிவிட்டான் ஆர்யா.
தன்னதும் அமூல்யாவதும் உடைமைகளை சரிப்பார்த்துக் கொண்டிருந்த சாருவின் அருகில் வந்த கேசவன் அவள் தலையை வாஞ்சையாக தடவிக் கொடுத்தார்.
"சாரும்மா!அப்பா மேல கோபமா இருக்கே இல்லையாடா!அப்பா உன் நல்லத்துக்கு தான்டா சொல்வேன்...வாழ்க்கைங்கறது நாம நினைக்கறபடி இருக்கறதில்ல...எப்ப என்ன எப்படி வேணா மாறும்.. அதுக்கு தகுந்தாற்போல வளைஞ்சுக் கொடுத்தா தான் நம்மளால நிம்மதியா வாழ முடியும்...அதுனால கிடைச்ச வாழ்க்கைய நீ நல்லபடியா வாழனும்டா! இந்த அப்பாவுக்கு அதுதான்டா வேணும்"என்று கண்கலங்கினார்.
அதுவரை திருமணத்திற்கு வற்புறுத்தினார் என்று கோபமாக அவரோடு பேசாமல் இருந்த சாரு அவர் கண்கலங்கவும்,
"அப்பா....!"என்று அவர் நெஞ்சில் சாய்ந்து அழுதாள்.
அடுத்த எபியோட வந்திட்டேன் படிச்சிட்டு உங்க கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் பிரெண்ட்ஸ்...
அந்த பகுதியில் பிரசித்தியான பிள்ளையார் கோவிலில் எந்தவிதமான ஆர்ப்பாட்டமும் இல்லாமல் நடந்துக் கொண்டிருந்தது ஆர்யவர்தன் சாருலதா திருமணம்.சாருலதாவின் சார்பாக அவளின் குடும்பத்தினர் வந்திருந்தனர்.ஆர்யவர்தனுக்கு வெங்கு ஒருவரே.
பிரச்சனைக்கு திருமணமே தீர்வு என்று வெங்கு யோசனைக் கூறியப் போது ஆர்யா சாரு இருவருமே முடியவே முடியாது என்று மறுத்தனர்.விவாதம் அதிகமாகவும் வெங்கு ஆர்யாவைத் தோட்டத்திற்கும் சாருவை குடும்பத்தவர் அவளின் அறைக்கும் அழைத்துச் சென்றனர்.
நட்சத்திரமில்லா வானை வெறித்த ஆர்யாவின் தோளை ஆதரவாக தட்டிக் கொடுத்த வெங்குவை,
"பாபாயா!ஏன் அப்படி சொன்னீங்க?எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பமில்ல...நம்ம பாப்புவ கூட்டிட்டு போய்டலாம்"
"நாயினா!இதுல என்ன தப்பு?!நீயும் எத்தனை நாள் தனியா இருப்ப?அம்மாயிய மாத்திரம் கூட்டிப் போனா உன்னால அவளை தனியா பாத்துக்க முடியுமா?உதினா ஆரோக்கியமா இருந்திருந்தா அவங்களே பாத்துக்குவாங்க...ஆனா இப்ப அவங்க இருக்கற நிலைமைல என்ன செய்ய முடியும்!பாப்பு சாருலதாவ தன் தாயா நினைக்குது...அவக்கிட்டேயிருந்து அத பிரிக்கறதும் தப்பு...எல்லா பிரச்சனைகளுக்கும் இது தான் நல்ல தீர்வு...உன் சங்கடமும் இதுனால தீரும்...நா சொல்றது உனக்கு புரியும்னு நினைக்கறேன்!"
அவரின் எல்லா வாதங்களை விட கடைசியாக அவர் கூறிய விஷயம் அவனை யோசிக்க வைத்தது.
அங்கே சாருவின் நிலையோ அந்தோ பரிதாபம்.அனைவரும் சேர்ந்து ஒரே மனதாக அந்த திருமணத்திற்கு ஒப்புக் கொள்ளும்படி அவளை வற்புறுத்தினர்.ஒரு கட்டத்தில் தாங்கமாட்டாமல்,
"ஸ்டாப் இட்...ஐகாண்ட்"என்று கத்திவிட்டாள்.
திகைத்து நின்றவரை தான் பார்த்துக் கொள்வதாக ஜாடைக் காட்டினான் சமர்த்.அறையை விட்டு அனைவரும் வெளியேறினர்.உறவில் மாமன் மகளானாலும் அவளை தன் தங்கையாகவேப் பார்த்தான் சமர்த்.அவள் வாழ்வு செழிக்க இது பொன்னான வாய்ப்பாக தோன்றியது.இங்கே பேச வரும் முன்பே விசாகப்பட்டினத்தில் அவனின் பிஸ்னஸ் பார்ட்னர் ஒருவரிடம் ஆர்யாவர்தனனைப் பற்றி விசாரித்து கூறும்படி கேட்டிருந்தான்.
அந்த நபருக்கே ஆர்யாவைப் பற்றி நன்றாகத் தெரிந்திருந்தது.அவர் விசாரித்த வரையிலும் கூட அவனைப் பற்றி நேர்மறையான தகவல்களே கிடைத்தது.அதைக் கொண்டு பரிசீலித்த சமர்த்திற்கு ஆர்யா சாருவிற்கு ஏற்ற கணவனே என்று திடமாகத் தோன்றியது.
"சாரு!பாரு ஆர்யாவர்தன் ரொம்ப நல்லவரு... உனக்கு கரெக்டான சாய்ஸ்!அம்முக்கும் அப்பா வேணும்...நீ இதுல மறுக்க என்ன இருக்கு?"
அவன் பேச்சில் கோபமடைந்த சாரு,
"ரொம்பபப நல்லவரா!அவ்ளோ நல்லவரு பெத்த பொண்ண ஏன் தொலைக்கனும்?ஏன் இத்தனை வருஷம் தேடல?"
"சாரு!குழந்தை தொலைஞ்சு போறது எத்தனையோ இடங்கள்ல நடக்கறது தான்..அதுக்காக ஒருத்தர குறை சொல்ல முடியுமா!தேடறதுன்னா அவர் இத்தன வருஷமா தேடிக்கிட்டு தான் இருந்திருக்காரு...அவருகிட்ட டிடெக்டிவ் ரிபோர்ட்ஸ் இருக்கு..."
"எல்லாம் நிஜமாவே இருக்கட்டும்... எனக்கு அவர கல்யாணம் பண்ணிக்க இஷ்டம் இல்லை.. அவ்ளோதான்"
"நீ உன்னைப் பத்தி மட்டும் யோசிக்கற சாரு!அமூல்யாவோட எதிர்காலத்தைப் பத்தி யோசிக்கவே மாட்டியா?நாளை அவ விவரம் தெரியற வயசு வரும் போது தன் அப்பா எங்கேன்னு கேள்வி கேப்பா..நீ அத சொல்ல மறுத்தா உன் மேல அவளுக்கு வெறுப்பு வரும்...தன் பொண்ணு கெடைச்சப்பரும் ஆர்யவர்தன் கண்டிப்பா அவளை கூட்டிட்டு போவாரு...நீ வேண்டாம்னா வேற பொண்ண அவருக்கு கல்யாணம் பண்ணி வைப்பாங்க...யாரோ ஒரு பொண்ணு அம்முவ நல்லபடியா பாத்துக்குவான்னு என்ன கேரண்டி...?அவ மனசு ஒடிஞ்சு போறது உனக்கு சம்மதமா?இவ்ளோ தான் நீ அவ மேல வெச்சிருக்கற பாசமா?"
பாசம் என்ற சொல் சாருவின் பிடிவாதத்தை அசைத்தது.என்ன ஆனாலும் தன் செல்ல மகளுக்காக எந்த தியாகம் செய்யவும் தயாரானாள்.
இருவரின் சம்மதத்தின் பேரில் நான்கு நாட்களில் ஆர்யவர்தன் சாருலதா திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது.ஆர்யாவின் அன்னை உடல்நலம் இல்லாததால் அவரிடம் போனிலேயே சம்மதம் பெற்றான் அவன்.மகன் தனிமரமாக நின்றுவிடுவானோ என கவலைக் கொண்டிருந்த அந்த தாயிக்கு இந்த செய்தி வயிற்றில் பால் வார்த்தது போல் ஆனது.
திருமண நாள் வரை ஆர்யா வெங்கு இருவரும் சமர்த் வீட்டில் தங்குவதாக முடிவானது.திருமண ஷாப்பிங் எதற்கும் சாருலதா வர மறுத்துவிட்டாள்.அதனால் அவளுக்கு தேவையானது எல்லாமே நியதி ஸ்ருதி சின்மயி இவர்களே வாங்கிக் குவித்தனர்.
திருமண விஷயம் அறிந்த நியதி கிடைத்த முதல் அவகாசத்தில் சாருவை தனியாக சந்தித்தவள்,
"சாரு! கரெக்ட் டிசிஷன் எடுத்திருக்கே!ஆனா ஆர்யவர்தன் கிட்ட எல்லா விஷயத்தையும் சொல்லிட்டியா?"
"இல்ல....எப்படி சொல்றது?அம்மு காணாம போகறதுக்கு இவரே காரணமா இருந்தா?...அதான் நா எதையும் இப்போதைக்கு சொல்லப் போறதில்ல... இந்த கல்யாணம் ஜஸ்ட் அம்முக்காக..."
அவள் பதிலில் திகைத்து விட்டாள் நியதி.குழந்தைக்காக திருமணமா?...பாட்டியின் ஆசைக்காக நடந்த தன் திருமணத்தை நினைத்துக் கொண்டாள்.அதே போன்றதொரு இந்த கட்டாய திருமணத்தின் எதிர்காலம் என்ன?
குறித்த முகூர்த்தத்தில் பெரியோர்கள் அட்சதை தூவி வாழ்த்த சாருலதாவின் கழுத்தில் மங்கல நாணை அணிவித்து அவளை தன் தன்னில் பாதி ஆக்கிக் கொண்டான் ஆர்யவர்தன்.
தாயின் உடல்நலத்தை காரணம் காட்டி அன்று மாலையேப் புறப்பட வேண்டும் என்று கூறிவிட்டான் ஆர்யா.
தன்னதும் அமூல்யாவதும் உடைமைகளை சரிப்பார்த்துக் கொண்டிருந்த சாருவின் அருகில் வந்த கேசவன் அவள் தலையை வாஞ்சையாக தடவிக் கொடுத்தார்.
"சாரும்மா!அப்பா மேல கோபமா இருக்கே இல்லையாடா!அப்பா உன் நல்லத்துக்கு தான்டா சொல்வேன்...வாழ்க்கைங்கறது நாம நினைக்கறபடி இருக்கறதில்ல...எப்ப என்ன எப்படி வேணா மாறும்.. அதுக்கு தகுந்தாற்போல வளைஞ்சுக் கொடுத்தா தான் நம்மளால நிம்மதியா வாழ முடியும்...அதுனால கிடைச்ச வாழ்க்கைய நீ நல்லபடியா வாழனும்டா! இந்த அப்பாவுக்கு அதுதான்டா வேணும்"என்று கண்கலங்கினார்.
அதுவரை திருமணத்திற்கு வற்புறுத்தினார் என்று கோபமாக அவரோடு பேசாமல் இருந்த சாரு அவர் கண்கலங்கவும்,
"அப்பா....!"என்று அவர் நெஞ்சில் சாய்ந்து அழுதாள்.