அழுது கொண்டே நிமிர்ந்த வெண்பா முன்னால் நின்றனர் அவளது குட்டி நண்பர்கள்.
அழுது கொண்டிருந்த வெண்பாவின் கண்களைத் துடைத்து விட்ட அருண் "ஏன் வெண்பா அழுவுற? மிஸ் அடிச்சாங்களா?" என கேட்க இல்லையென தலையசைத்தாள் வெண்பா.
"அப்போ மஞ்சு ஆன்டி திட்டுனாங்களா?" என அம்மு கேட்கவும் அதற்கும் இல்லையென தலையாட்டினாள் வெண்பா.
"அப்போ ஏன் அழுவுற? நாங்க எல்லாரும் உன் கூட விளையாட வரலனு அழுவுறியா? உன் பேஸ், ஐஸ் எல்லாம் ரெட்டிஸா இருக்கு பாரு. நல்லாவே இல்ல" என்று விட்டு அபினவ் தன் கரங்களால் அவள் கன்னங்களைத் துடைத்து விட தன்னை சூழ நின்ற குழந்தைகளை அணைத்துக் கொண்டாள் வெண்பா.
சிறிது நேரத்தின் பின் அவர்களை அணைப்பிலிருந்து விடுவித்தவள் "ஸ்கூட்டில வரும் போது கண்ல தூசி விழுந்துடுச்சுடா குட்டீஸ். அதனால்தான் கண்லாம் ரெட்டிஸா இருக்கு. நான் அழலடா" என்று குழந்தைகளைப் பார்த்து சிரித்தாள் வெண்பா.
"ஹய்யா.....வெண்பா ஸ்மைல் பண்ணிட்டா" என குழந்தைகள் ஆரவாரமிட "ஸ்ஸ்ஸ்....சத்தம் போடக்கூடாது. மத்தவங்களுக்கு டிஸ்டர்பா இருக்கும்லே" என்று குழந்தைகளை அமைதிப்படுத்தினாள் வெண்பா.
"நான் போய் பேஸ் வாஷ் பண்ணிட்டு வரேன். சரியா?" என்று குழந்தைகளிடம் கூறி விட்டு சென்றவள் குளிர்ந்த நீரினால் முகத்தை அடித்துக் கழுவினாள்.
சற்று உடலுக்கும், மனதுக்கும் புத்துணர்ச்சி ஏற்பட்டது போல் இருந்தது.
குழந்தைகளோடு சிறிது நேரம் பேசி, விளையாடி விட்டு நேரத்தை பார்த்தால் மணி ஆறை நெருங்கி கொண்டிருந்தது.
"ஓகே பிரண்ட்ஸ் இன்னைக்கு இவ்வளவு போதும். சரியா? அகைன் இன்னொரு டே விளையாடலாம். இப்போ டைம் ஆச்சு. எல்லாரும் வீட்டுக்கு போங்க. அம்மா தேடுவாங்கலே. போய் ரெஸ்ட் எடுங்க. ஓகே வா?" என்று குழந்தைகளிடம் கூறி விட்டு வீட்டை நோக்கி சென்றாள் வெண்பா.
ஸ்கூட்டரை நிறுத்தி விட்டு வீட்டினுள் நுழைந்த வெண்பா மஞ்சுளாவுடன் பேசிக் கொண்டிருந்த இளமதியைப் பார்த்ததும் ஓடிச்சென்று அவளை கட்டிக் கொண்டாள்.
"ஏன் மதி இவ்வளவு நாளா எங்களை எல்லாம் பார்க்க வரல? அவ்வளவு பிஸியாகிட்டியா? அத்தான் உன்ன தனியா எப்படி விட்டாரு? கம் மாதிரி உன் கூட ஒட்டிட்டு தானே திரிவாரு" என்று கேலி பண்ணிய வெண்பாவின் தோளில் செல்லமாக தட்டினாள் இளமதி.
"போடி போக்கிரி. உன் வாய் இருக்கே அத எங்களால எல்லாம் சமாளிக்க முடியாது. உன்ன விட மேலா ஒருத்தன் வந்துதான் உன் வாய அடக்குவான். அப்போ நீ நல்லா மாட்டிக்கிட்டு முழிப்பேலே. அன்னைக்கு உன்ன கவனிச்சுக்குறன்" என இளமதி கூற வெண்பா ஒரு கணம் ஆதித்யாவை நினைத்துப் பார்த்தாள்.
"சேச்சே இனி அவனப் பத்தி யோசிக்கவே கூடாது. எப்படிலாம் பேசிட்டான்" என தனக்குள்ளேயே எண்ணிக் கொண்ட வெண்பா
"அது நடக்கும் போது பார்த்துக்கலாம் மதி. பிளவர் எங்க?" என கேட்கவும் "பிளவரா?" எனக் கேட்ட மஞ்சுளாவைப் பார்த்து சிரித்த வெண்பா
"பிளவர் னா பூ. அப்படினா பூங்குழலி" எனக் கூறியவளைப் பார்த்து தலையில் அடித்துக் கொண்டார் மஞ்சுளா.
"எவ்வளவு அழகான தமிழ் பேரு. அதப் போய் இப்படி பண்றியே" என மஞ்சுளா கூறவும் "நிக் நேம் தான் மஞ்சு இப்போ பெஷன்" எனக் கூறி சிரித்தாள் வெண்பா.
இளமதியோடு பேசிக் கொண்டும் பூங்குழலியோடு விளையாடிக் கொண்டும் இருந்த வெண்பா அந்த கணம் அவள் கவலை, மனக்குழப்பம் எல்லாவற்றையும் மறந்திருந்தாள். அது எல்லாம் ஒரு சில மணி நேரங்கள் தான் நீடித்தது.
இளமதி, பூங்குழலி சென்ற பின் வெண்பாவின் மனதை வெறுமை சூழ்ந்து கொண்டது. மனதின் ஆழத்திற்கு சென்றிருந்த அவளது கவலைகள் மீண்டும் மேலெழுந்து வந்து அவள் மனதை ரணப்படுத்தியது.
இரவுணவு கூட சாப்பிட பிடிக்காமல் அறைக்குள் வந்து நுழைந்தவள் அறைக் கதவை சாத்தி விட்டு அதன் மேலே சாய்ந்து நின்று அழத் தொடங்கினாள்.
கைப்பைக்குள் இருந்த பரிசை எடுத்து தூக்கி தூர வீசி எறிய நினைத்தவள் ஏனோ மனம் கேட்காது அதைக் கொண்டு சென்று அலமாரியில் வைத்தாள்.
கண்ணீர் மட்டும் நிற்காது அருவி போல வந்து கொண்டே இருந்தது. மேஜை மேல் இருந்த டைரியை எடுத்தவள் இன்று நடந்த நிகழ்வுகளை அனைத்தையும் ஒன்று விடாது எழுதியவள் தன் மனக்குமுறலை எல்லாம் டைரியிடம் கொட்டிக் கொண்டிருந்தாள்.
அழுது அழுது டைரி எழுதி கொண்டிருந்த வெண்பா அவளையறிமால் உறங்கிப் போனாள்.
அழுது கொண்டிருந்த வெண்பாவின் கண்களைத் துடைத்து விட்ட அருண் "ஏன் வெண்பா அழுவுற? மிஸ் அடிச்சாங்களா?" என கேட்க இல்லையென தலையசைத்தாள் வெண்பா.
"அப்போ மஞ்சு ஆன்டி திட்டுனாங்களா?" என அம்மு கேட்கவும் அதற்கும் இல்லையென தலையாட்டினாள் வெண்பா.
"அப்போ ஏன் அழுவுற? நாங்க எல்லாரும் உன் கூட விளையாட வரலனு அழுவுறியா? உன் பேஸ், ஐஸ் எல்லாம் ரெட்டிஸா இருக்கு பாரு. நல்லாவே இல்ல" என்று விட்டு அபினவ் தன் கரங்களால் அவள் கன்னங்களைத் துடைத்து விட தன்னை சூழ நின்ற குழந்தைகளை அணைத்துக் கொண்டாள் வெண்பா.
சிறிது நேரத்தின் பின் அவர்களை அணைப்பிலிருந்து விடுவித்தவள் "ஸ்கூட்டில வரும் போது கண்ல தூசி விழுந்துடுச்சுடா குட்டீஸ். அதனால்தான் கண்லாம் ரெட்டிஸா இருக்கு. நான் அழலடா" என்று குழந்தைகளைப் பார்த்து சிரித்தாள் வெண்பா.
"ஹய்யா.....வெண்பா ஸ்மைல் பண்ணிட்டா" என குழந்தைகள் ஆரவாரமிட "ஸ்ஸ்ஸ்....சத்தம் போடக்கூடாது. மத்தவங்களுக்கு டிஸ்டர்பா இருக்கும்லே" என்று குழந்தைகளை அமைதிப்படுத்தினாள் வெண்பா.
"நான் போய் பேஸ் வாஷ் பண்ணிட்டு வரேன். சரியா?" என்று குழந்தைகளிடம் கூறி விட்டு சென்றவள் குளிர்ந்த நீரினால் முகத்தை அடித்துக் கழுவினாள்.
சற்று உடலுக்கும், மனதுக்கும் புத்துணர்ச்சி ஏற்பட்டது போல் இருந்தது.
குழந்தைகளோடு சிறிது நேரம் பேசி, விளையாடி விட்டு நேரத்தை பார்த்தால் மணி ஆறை நெருங்கி கொண்டிருந்தது.
"ஓகே பிரண்ட்ஸ் இன்னைக்கு இவ்வளவு போதும். சரியா? அகைன் இன்னொரு டே விளையாடலாம். இப்போ டைம் ஆச்சு. எல்லாரும் வீட்டுக்கு போங்க. அம்மா தேடுவாங்கலே. போய் ரெஸ்ட் எடுங்க. ஓகே வா?" என்று குழந்தைகளிடம் கூறி விட்டு வீட்டை நோக்கி சென்றாள் வெண்பா.
ஸ்கூட்டரை நிறுத்தி விட்டு வீட்டினுள் நுழைந்த வெண்பா மஞ்சுளாவுடன் பேசிக் கொண்டிருந்த இளமதியைப் பார்த்ததும் ஓடிச்சென்று அவளை கட்டிக் கொண்டாள்.
"ஏன் மதி இவ்வளவு நாளா எங்களை எல்லாம் பார்க்க வரல? அவ்வளவு பிஸியாகிட்டியா? அத்தான் உன்ன தனியா எப்படி விட்டாரு? கம் மாதிரி உன் கூட ஒட்டிட்டு தானே திரிவாரு" என்று கேலி பண்ணிய வெண்பாவின் தோளில் செல்லமாக தட்டினாள் இளமதி.
"போடி போக்கிரி. உன் வாய் இருக்கே அத எங்களால எல்லாம் சமாளிக்க முடியாது. உன்ன விட மேலா ஒருத்தன் வந்துதான் உன் வாய அடக்குவான். அப்போ நீ நல்லா மாட்டிக்கிட்டு முழிப்பேலே. அன்னைக்கு உன்ன கவனிச்சுக்குறன்" என இளமதி கூற வெண்பா ஒரு கணம் ஆதித்யாவை நினைத்துப் பார்த்தாள்.
"சேச்சே இனி அவனப் பத்தி யோசிக்கவே கூடாது. எப்படிலாம் பேசிட்டான்" என தனக்குள்ளேயே எண்ணிக் கொண்ட வெண்பா
"அது நடக்கும் போது பார்த்துக்கலாம் மதி. பிளவர் எங்க?" என கேட்கவும் "பிளவரா?" எனக் கேட்ட மஞ்சுளாவைப் பார்த்து சிரித்த வெண்பா
"பிளவர் னா பூ. அப்படினா பூங்குழலி" எனக் கூறியவளைப் பார்த்து தலையில் அடித்துக் கொண்டார் மஞ்சுளா.
"எவ்வளவு அழகான தமிழ் பேரு. அதப் போய் இப்படி பண்றியே" என மஞ்சுளா கூறவும் "நிக் நேம் தான் மஞ்சு இப்போ பெஷன்" எனக் கூறி சிரித்தாள் வெண்பா.
இளமதியோடு பேசிக் கொண்டும் பூங்குழலியோடு விளையாடிக் கொண்டும் இருந்த வெண்பா அந்த கணம் அவள் கவலை, மனக்குழப்பம் எல்லாவற்றையும் மறந்திருந்தாள். அது எல்லாம் ஒரு சில மணி நேரங்கள் தான் நீடித்தது.
இளமதி, பூங்குழலி சென்ற பின் வெண்பாவின் மனதை வெறுமை சூழ்ந்து கொண்டது. மனதின் ஆழத்திற்கு சென்றிருந்த அவளது கவலைகள் மீண்டும் மேலெழுந்து வந்து அவள் மனதை ரணப்படுத்தியது.
இரவுணவு கூட சாப்பிட பிடிக்காமல் அறைக்குள் வந்து நுழைந்தவள் அறைக் கதவை சாத்தி விட்டு அதன் மேலே சாய்ந்து நின்று அழத் தொடங்கினாள்.
கைப்பைக்குள் இருந்த பரிசை எடுத்து தூக்கி தூர வீசி எறிய நினைத்தவள் ஏனோ மனம் கேட்காது அதைக் கொண்டு சென்று அலமாரியில் வைத்தாள்.
கண்ணீர் மட்டும் நிற்காது அருவி போல வந்து கொண்டே இருந்தது. மேஜை மேல் இருந்த டைரியை எடுத்தவள் இன்று நடந்த நிகழ்வுகளை அனைத்தையும் ஒன்று விடாது எழுதியவள் தன் மனக்குமுறலை எல்லாம் டைரியிடம் கொட்டிக் கொண்டிருந்தாள்.
அழுது அழுது டைரி எழுதி கொண்டிருந்த வெண்பா அவளையறிமால் உறங்கிப் போனாள்.