அத்தியாயம் – 15
அவர்கள் சிரித்து முடித்ததும் ஆஷாவைப் பார்க்க அவளோ, அன்புவைப் பார்த்து, “அன்பு இவள் ஒரு கேஸ் விஷயமாக வந்திருக்கிறாள்.. அந்த கேஸ் பற்றி கொஞ்சம் பேச வேண்டும்..” என்று சொல்லவும்,
அவன் மணியைப் பார்த்துவிட்டு, “இப்பொழுது மணியைப் பார்த்தாயா..?” என்று கேட்டதும் மணியைப் பார்த்தவள், “என்னது மணி ஒன்பது ஆகப்போகிறதா..?” என்று அதிர்ச்சியுடன் கேட்டவள்,
“சரி அன்பு இப்பொழுது என்ன செய்வது..?” என்று கேட்டதும், “நீ இவங்களை உன்னோட வீட்டிற்கு அழைத்துப் போ ஆஷா.. மற்றதை காலையில் பேசிக்கொள்ளலாம்..” என்று மறதியில் கூறினான் அன்பு..
“அன்பு மறந்துவிட்டாயா..? அப்பாவிற்கு டிரான்ஸ்பர் ஆகிவிட்டது என்று போன வாரம் தான் ஹாஸ்டலில் சேர்ந்தேன்..” என்று சொல்ல, “அட ஆமாம் நான் மறந்தே விட்டேன் ஆஷா..” என்று கூறினான் அன்பு..
அவள் ஆதியின் பக்கம் திரும்பி வேண்டும் என்றே, “உன்னோட வீட்டிற்கும் எழிலை அழைத்துப் போக முடியாது.. இவளை இப்படியே ஊருக்கு அனுப்பவும் முடியாது.. இப்பொழுது என்ன செய்ய..?” என்று ஆதியிடம் கூறியவளை இடைமறித்தாள் எழில்..
“என்னால் யாருக்கும் எந்த சிரமமும் வேண்டாம் ஆஷா.. நான் ஊருக்கே போகிறேன். அடுத்தமுறை வந்து கேஸை பற்றி பேசிக்கலாம்..” என்று சொல்ல அன்பு எழில் பேசுவதைப் பார்த்து அமைதியாக இருந்தான்.
“நீ வாயை வைத்துக் கொண்டு சும்மா இருந்தால் எனக்கு அதுவே போதும் தாயே.. உன்னை இங்கிருந்து அனுப்பிவிட்டு நீ ஊருக்கு செல்லும் வரையில் இங்கே உட்கார்ந்து புலம்புவது யாரால் முடியும்..?” என்று கேட்டவள்,
அன்புவைப் பார்த்த ஆஷா, “என்ன அன்பு நீ ஒன்றும் பேச மாட்டேன் என்கிறாய்.. இப்பொழுது என்ன செய்ய..?” என்று அவனிடம் தீர்வு கேட்டவள்,‘என்னைப் புலம்ப விட்டிங்க இல்ல இருவரும்.. இருங்க உங்களை கவனித்துக் கொள்கிறேன்..’ என்று மனதில் நினைத்தவள்,
“அன்பு இன்னைக்கு ஒரு நாள் மட்டும் உன்னோட வீட்டிற்கு அழைத்து போடா.. நாளை நாம் இந்த கேஸை பற்றி பேசிவிட்டு இவளை நான் பத்திரமாக அனுப்பி வைக்கிறேன்..” என்று ஆஷா பவ்வியமாக கூற அவளை முறைத்தான் அன்பு..
அவனின் முறைப்பைப் பார்த்து, “எதுக்குடா இப்பொழுது என்னை முறைக்கிறாய்..?” என்று கேட்டவளிடம், “என்ன ஆஷா விளையாடுகிறாயா..? இவங்களை நான் அங்கே அழைத்துச் சென்றால் அவங்களுக்கு தான் கேட்ட பெயர் வரும்.. அதுவும் இந்த நேரத்தில்..” என்று சொல்ல,
“எனக்கு நீ சொல்வது புரிகிறது அன்பு.. ஆனால் இப்பொழுது இவளை தனியாக அனுப்புவது ஆபத்து..” என்று அவள் எடுத்துக் கூறினாள்..
அன்பு மனதில், ‘நான் இவளை தனியாக அனுப்புவேன் என்று நீ எதிர்பார்த்தாயா ஆஷா.. எனக்கு இவளின் பாதுக்காப்பு ரொம்ப முக்கியம்.. உன்னோட வாயில் இருந்து என்ன வருகிறது என்று பார்க்கத்தான் இப்படி அமைதியாக இருந்தேன்..’ என்று நினைத்தான்..
“இந்த பிரச்சனை எல்லாம் என்னால் தான் வந்தது.. காலையில் இவள் சாப்பிடும்போது நான் வாயை வைத்து சும்மா இருந்திருந்திருந்தேன் என்றால் இவங்க வந்த நேரத்திற்கு இந்நேரம் திரும்பவும் ஊருக்கு சென்று கொண்டிருப்பார்கள்..” என்று தனது வருத்ததை வெளியிட்டான் ஆதி..
“சரி நடந்தது எல்லாம் நடந்து முடிந்ததது.. இனி நடப்பதைப் பற்றி யோசிப்போம்..” என்று ஆஷா சொல்ல, “சரி ஆஷா நான் எழிலை எங்கள் வீட்டிற்கே அழைத்துச் செல்கிறேன்..” என்று அன்பு ஒரு வழியாக ஒப்புக்கொள்ள பெருமூச்சு ஒன்றை வெளியிட்டவள்,
“எழில் நீ இன்னைக்கு ஒரு நாள் மட்டும் அன்பு வீட்டில் இரு.. மற்றதை நாம் காலையில் பேசிக்கொள்ளலாம்..” என்று எழில்விழியிடம் கூறியவளை பார்த்து எழில் தயக்கமாக,
“வேண்டாம் ஆஷா எதுக்கு இந்த வீண் பிரச்சனை நான் ஊருக்கே போகிறேன்.. அடுத்தமுறை வந்து மற்றதைப் பார்த்துக் கொள்ளலாம்.. என்னை ரயிவே ஸ்டேஷன்ல கொண்டுபோய் விடு ஆஷா..” என்று எழில் பிடிவாதமாகச் சொல்லவும்,
“இங்கே பாரு எழில் நீ என்னை நம்பித்தான் சென்னை வந்தாய்.. உன்னை பத்திரமாக பார்த்துக் கொள்வது என்னோட பொறுப்பு.. உன்னோட வேலை முடியாமல் உன்னை அதுவும் இந்த ராத்திரி நேரத்தில் தனியே அனுப்ப எனக்கு விருப்பம் இல்லை.. சோ, நீ இன்னைக்கு அன்புவின் வீட்டில் இரு.. நாளை வந்த வேலை முடித்துவிட்டு ஊருக்கு உன்னை நானே அனுப்பி வைக்கிறேன்..” என்று ஆஷா சொல்லிவிட்டு மணியைப் பார்த்தாள்..
“ஐயோ அந்த வார்டன் உள்ளே விடமாட்டாளே..” என்று புலம்பியவள், “ஆதி என்னை ஹாஸ்டலின் முன்னால் இறக்கு விடுடா..” என்று சொல்ல, ஆஷாவின் முகம் பார்த்தவன்,“சரி வா ஆஷா..” என்று அழைத்துக் கொண்டு,
“எழில் சிஸ்டர் நீங்க அன்புவுடன் கிளம்புங்க.. மற்றவைகளை பற்றி நாம் காலையில் பேசுவோம்.. இவளை பற்றி நான் உங்களிடம் கம்ப்ளைண்ட் பண்ணனும் சிஸ்டர்..” என்று புன்னகையுடன் கூறியவன் ஆஷாவை உடன் அழைத்துச் செல்ல,
அவளின் பின்னோடு வாசல் வரை சென்ற எழில், “ஏய் ஆஷா உன்னிடம் கொஞ்சம் பேசவேண்டும் நில்லுடி” என்று அவள் கூப்பிட கூப்பிட காதே கேட்காதது போல சென்ற ஆஷா ஆதியுடன் வண்டியில் ஏறியமர்ந்தவள்,
“ஆதி சீக்கிரம் வண்டியை எடு..” என்று கூற பைக்கு மின்னல் வேகத்தில் பறக்க, “காலைப் பார்க்கலாம் எழில்..” என்று கூறியவள் எழில்விழியின் கண்ணை விட்டு மறைய, எழில்விழி தயக்கத்துடன் வாசலில் நின்றாள்..
அதற்குள் ஆபீஸை பூட்டிவிட்டு வந்த அன்பு, “வாங்க எழில்..” என்று அழைத்தவன் அவளின் முன்னே நடந்து செல்ல, அவனின் பின்னோடு அமைதியாக சென்றாள் எழில்விழி..
அன்பு காரில் டிரைவிங் சீட்டில் அமர, “எழில் முன்னாடி வந்து ஏறுங்கள்..” என்று கூறியதும் அவனைப் பார்த்து சரியென்று தலையசைத்துவிட்டு முன்னிருக்கை ஏறியமர்ந்தாள் எழில்விழி..
அன்பு காரை ஸ்டார்ட் செய்து செல்ல ஒரு திருப்பத்தில் நின்று இவர்களைப் பார்த்த ஆஷா, ஆதி இருவரும் ஹை – பை கொடுத்துக் கொண்டனர்..
அவர்கள் சென்ற பிறகு, “அன்புவின் மனதில் இந்த பொண்ணு தான் இருக்கிறாள் ஆஷா.. இவனை நானும் இத்தனை வருடம் பார்க்கிறேன் அவனின் மனதில் உள்ளதை சொல்லாமல் மறைத்துக்கொண்டு இருக்கும் காரணம் தான் எனக்கு புரியவில்லை..” என்றவன்,
“அவளுக்கு அவளின் தங்கை வாழ்க்கை முக்கியம் இவனுக்கு இவனின் காதல் முக்கியம், இது தவிர வேற என்ன காரணம் இருக்க போகிறது இருவருக்கும்..!” என்று சாதாரணமாக கூறினாள் ஆஷா..
அவள் கூறியதைக் கேட்டு அவளை நோக்கிய ஆதி, “அடிப்பாவி என்னமா பொய் சொல்கிறாய்.. அந்த வார்டனுக்கு தண்ணி காட்டுபவளே நீதான்.. வார்டனுக்கு பயந்த பிள்ளை போல என்னமாய் நடிக்கிறாய்..” என்றவன் பைக்கில் ஏறி வண்டியை ஸ்டார்ட் செய்ய அவனின் பின்னோடு அவள் ஏறியதும் வண்டியை எடுத்தான் ஆதி..
அவன் அப்படி சொல்லவும் சிரித்தவள், “எழிலை என்னோட அழைத்துச் செல்லத்தான் நினைத்தேன் ஆதி.. ஆனால் இருவரும் சேர்ந்து என்னை முட்டாள் ஆக்க பார்க்க அவர்கள் முன்னே சும்மா நடித்தேன் ஆதி..” என்று கூறியவள்,
“அன்புவும் – எழிலும் சந்தித்திருக்கின்றனர்.. ஆனால் அந்த சந்திப்பின்போது நான் எங்கே இருந்தேன் என்று தான் எனக்கே தெரியவில்லை..” என்று புலம்பியவளுக்கு தெரியாது.. அவர்கள் சந்திக்க காரணமே தான் தான் காரணம் என்பது..
ஆதி சீரான வேகத்தில் வண்டியை செலுத்த அவனின் பின்னோடு அமர்ந்திருந்த ஆஷா தீடிரென்று “ஆதி எனக்கு பயமாக இருக்கிறது டா..” என்று சொல்ல வண்டியை ஸ்லோ பண்ணியவன், “எதுக்கு பயப்படுகிறாய்..?” என்று கேட்டான்..
“இல்லடா அன்புவின் பெற்றோர் அவளை என்ன நினைப்பார்கள் என்று தெரியலடா.. எழில் இதுவரையில் சொந்தபந்தங்கள் வீட்டிற்கு கூட போனது கிடையாது.. இங்கே என்ன நிகழுமோ என்று பயமாக இருக்கிறது..” என்று தோழிக்காக அவள் பயத்துடன் சொல்ல,
“ஜெஸ்ட் ரிலாக்ஸ் ஆஷா.. அன்பு இருக்கும் பொழுது நீ நினைப்பது எதுவும் நடக்காது.. எல்லாவற்றையும் அன்பு பார்த்துக் கொள்வான்.. எல்லாம் நல்லபடியாக நடக்கும்..” என்று அவன் அன்புவை புரிந்து கொண்டு சொல்ல ஆஷா மனம் கொஞ்சம் சமாதானம் அடைந்தது..
அவன் அப்படி கூறியதும் அவளின் முகம் கொஞ்சம் தெளிய ஆதி வண்டியை எடுக்க, “ஆதி எனக்கு பசிக்கிறது இங்கே இருக்கும் ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு போகலாமா..?” என்று கேட்டதும்,
“அடியே காலையில் இருந்து உன்னை சமாதானம் செய்ய நான் செய்த செலவு என்ன தெரியுமா..? ஐயாயிரம் ரூபாய்.. இதற்கும் மேல் என்னிடம் எந்த காசும் இல்லடி..” என்று பரிதாபமாக அவன் கூறியதும் ஆஷாவின் முகத்தில் புன்னகை அரும்பியது..
“நான் உனக்கு வாங்குத் தருகிறேன் வா ஆது..” என்று கூறியவள் அவனை அழைத்துக் கொண்டு ஹோட்டலின் உள்ளே சென்றாள்..
அவர்கள் சிரித்து முடித்ததும் ஆஷாவைப் பார்க்க அவளோ, அன்புவைப் பார்த்து, “அன்பு இவள் ஒரு கேஸ் விஷயமாக வந்திருக்கிறாள்.. அந்த கேஸ் பற்றி கொஞ்சம் பேச வேண்டும்..” என்று சொல்லவும்,
அவன் மணியைப் பார்த்துவிட்டு, “இப்பொழுது மணியைப் பார்த்தாயா..?” என்று கேட்டதும் மணியைப் பார்த்தவள், “என்னது மணி ஒன்பது ஆகப்போகிறதா..?” என்று அதிர்ச்சியுடன் கேட்டவள்,
“சரி அன்பு இப்பொழுது என்ன செய்வது..?” என்று கேட்டதும், “நீ இவங்களை உன்னோட வீட்டிற்கு அழைத்துப் போ ஆஷா.. மற்றதை காலையில் பேசிக்கொள்ளலாம்..” என்று மறதியில் கூறினான் அன்பு..
“அன்பு மறந்துவிட்டாயா..? அப்பாவிற்கு டிரான்ஸ்பர் ஆகிவிட்டது என்று போன வாரம் தான் ஹாஸ்டலில் சேர்ந்தேன்..” என்று சொல்ல, “அட ஆமாம் நான் மறந்தே விட்டேன் ஆஷா..” என்று கூறினான் அன்பு..
அவள் ஆதியின் பக்கம் திரும்பி வேண்டும் என்றே, “உன்னோட வீட்டிற்கும் எழிலை அழைத்துப் போக முடியாது.. இவளை இப்படியே ஊருக்கு அனுப்பவும் முடியாது.. இப்பொழுது என்ன செய்ய..?” என்று ஆதியிடம் கூறியவளை இடைமறித்தாள் எழில்..
“என்னால் யாருக்கும் எந்த சிரமமும் வேண்டாம் ஆஷா.. நான் ஊருக்கே போகிறேன். அடுத்தமுறை வந்து கேஸை பற்றி பேசிக்கலாம்..” என்று சொல்ல அன்பு எழில் பேசுவதைப் பார்த்து அமைதியாக இருந்தான்.
“நீ வாயை வைத்துக் கொண்டு சும்மா இருந்தால் எனக்கு அதுவே போதும் தாயே.. உன்னை இங்கிருந்து அனுப்பிவிட்டு நீ ஊருக்கு செல்லும் வரையில் இங்கே உட்கார்ந்து புலம்புவது யாரால் முடியும்..?” என்று கேட்டவள்,
அன்புவைப் பார்த்த ஆஷா, “என்ன அன்பு நீ ஒன்றும் பேச மாட்டேன் என்கிறாய்.. இப்பொழுது என்ன செய்ய..?” என்று அவனிடம் தீர்வு கேட்டவள்,‘என்னைப் புலம்ப விட்டிங்க இல்ல இருவரும்.. இருங்க உங்களை கவனித்துக் கொள்கிறேன்..’ என்று மனதில் நினைத்தவள்,
“அன்பு இன்னைக்கு ஒரு நாள் மட்டும் உன்னோட வீட்டிற்கு அழைத்து போடா.. நாளை நாம் இந்த கேஸை பற்றி பேசிவிட்டு இவளை நான் பத்திரமாக அனுப்பி வைக்கிறேன்..” என்று ஆஷா பவ்வியமாக கூற அவளை முறைத்தான் அன்பு..
அவனின் முறைப்பைப் பார்த்து, “எதுக்குடா இப்பொழுது என்னை முறைக்கிறாய்..?” என்று கேட்டவளிடம், “என்ன ஆஷா விளையாடுகிறாயா..? இவங்களை நான் அங்கே அழைத்துச் சென்றால் அவங்களுக்கு தான் கேட்ட பெயர் வரும்.. அதுவும் இந்த நேரத்தில்..” என்று சொல்ல,
“எனக்கு நீ சொல்வது புரிகிறது அன்பு.. ஆனால் இப்பொழுது இவளை தனியாக அனுப்புவது ஆபத்து..” என்று அவள் எடுத்துக் கூறினாள்..
அன்பு மனதில், ‘நான் இவளை தனியாக அனுப்புவேன் என்று நீ எதிர்பார்த்தாயா ஆஷா.. எனக்கு இவளின் பாதுக்காப்பு ரொம்ப முக்கியம்.. உன்னோட வாயில் இருந்து என்ன வருகிறது என்று பார்க்கத்தான் இப்படி அமைதியாக இருந்தேன்..’ என்று நினைத்தான்..
“இந்த பிரச்சனை எல்லாம் என்னால் தான் வந்தது.. காலையில் இவள் சாப்பிடும்போது நான் வாயை வைத்து சும்மா இருந்திருந்திருந்தேன் என்றால் இவங்க வந்த நேரத்திற்கு இந்நேரம் திரும்பவும் ஊருக்கு சென்று கொண்டிருப்பார்கள்..” என்று தனது வருத்ததை வெளியிட்டான் ஆதி..
“சரி நடந்தது எல்லாம் நடந்து முடிந்ததது.. இனி நடப்பதைப் பற்றி யோசிப்போம்..” என்று ஆஷா சொல்ல, “சரி ஆஷா நான் எழிலை எங்கள் வீட்டிற்கே அழைத்துச் செல்கிறேன்..” என்று அன்பு ஒரு வழியாக ஒப்புக்கொள்ள பெருமூச்சு ஒன்றை வெளியிட்டவள்,
“எழில் நீ இன்னைக்கு ஒரு நாள் மட்டும் அன்பு வீட்டில் இரு.. மற்றதை நாம் காலையில் பேசிக்கொள்ளலாம்..” என்று எழில்விழியிடம் கூறியவளை பார்த்து எழில் தயக்கமாக,
“வேண்டாம் ஆஷா எதுக்கு இந்த வீண் பிரச்சனை நான் ஊருக்கே போகிறேன்.. அடுத்தமுறை வந்து மற்றதைப் பார்த்துக் கொள்ளலாம்.. என்னை ரயிவே ஸ்டேஷன்ல கொண்டுபோய் விடு ஆஷா..” என்று எழில் பிடிவாதமாகச் சொல்லவும்,
“இங்கே பாரு எழில் நீ என்னை நம்பித்தான் சென்னை வந்தாய்.. உன்னை பத்திரமாக பார்த்துக் கொள்வது என்னோட பொறுப்பு.. உன்னோட வேலை முடியாமல் உன்னை அதுவும் இந்த ராத்திரி நேரத்தில் தனியே அனுப்ப எனக்கு விருப்பம் இல்லை.. சோ, நீ இன்னைக்கு அன்புவின் வீட்டில் இரு.. நாளை வந்த வேலை முடித்துவிட்டு ஊருக்கு உன்னை நானே அனுப்பி வைக்கிறேன்..” என்று ஆஷா சொல்லிவிட்டு மணியைப் பார்த்தாள்..
“ஐயோ அந்த வார்டன் உள்ளே விடமாட்டாளே..” என்று புலம்பியவள், “ஆதி என்னை ஹாஸ்டலின் முன்னால் இறக்கு விடுடா..” என்று சொல்ல, ஆஷாவின் முகம் பார்த்தவன்,“சரி வா ஆஷா..” என்று அழைத்துக் கொண்டு,
“எழில் சிஸ்டர் நீங்க அன்புவுடன் கிளம்புங்க.. மற்றவைகளை பற்றி நாம் காலையில் பேசுவோம்.. இவளை பற்றி நான் உங்களிடம் கம்ப்ளைண்ட் பண்ணனும் சிஸ்டர்..” என்று புன்னகையுடன் கூறியவன் ஆஷாவை உடன் அழைத்துச் செல்ல,
அவளின் பின்னோடு வாசல் வரை சென்ற எழில், “ஏய் ஆஷா உன்னிடம் கொஞ்சம் பேசவேண்டும் நில்லுடி” என்று அவள் கூப்பிட கூப்பிட காதே கேட்காதது போல சென்ற ஆஷா ஆதியுடன் வண்டியில் ஏறியமர்ந்தவள்,
“ஆதி சீக்கிரம் வண்டியை எடு..” என்று கூற பைக்கு மின்னல் வேகத்தில் பறக்க, “காலைப் பார்க்கலாம் எழில்..” என்று கூறியவள் எழில்விழியின் கண்ணை விட்டு மறைய, எழில்விழி தயக்கத்துடன் வாசலில் நின்றாள்..
அதற்குள் ஆபீஸை பூட்டிவிட்டு வந்த அன்பு, “வாங்க எழில்..” என்று அழைத்தவன் அவளின் முன்னே நடந்து செல்ல, அவனின் பின்னோடு அமைதியாக சென்றாள் எழில்விழி..
அன்பு காரில் டிரைவிங் சீட்டில் அமர, “எழில் முன்னாடி வந்து ஏறுங்கள்..” என்று கூறியதும் அவனைப் பார்த்து சரியென்று தலையசைத்துவிட்டு முன்னிருக்கை ஏறியமர்ந்தாள் எழில்விழி..
அன்பு காரை ஸ்டார்ட் செய்து செல்ல ஒரு திருப்பத்தில் நின்று இவர்களைப் பார்த்த ஆஷா, ஆதி இருவரும் ஹை – பை கொடுத்துக் கொண்டனர்..
அவர்கள் சென்ற பிறகு, “அன்புவின் மனதில் இந்த பொண்ணு தான் இருக்கிறாள் ஆஷா.. இவனை நானும் இத்தனை வருடம் பார்க்கிறேன் அவனின் மனதில் உள்ளதை சொல்லாமல் மறைத்துக்கொண்டு இருக்கும் காரணம் தான் எனக்கு புரியவில்லை..” என்றவன்,
“அவளுக்கு அவளின் தங்கை வாழ்க்கை முக்கியம் இவனுக்கு இவனின் காதல் முக்கியம், இது தவிர வேற என்ன காரணம் இருக்க போகிறது இருவருக்கும்..!” என்று சாதாரணமாக கூறினாள் ஆஷா..
அவள் கூறியதைக் கேட்டு அவளை நோக்கிய ஆதி, “அடிப்பாவி என்னமா பொய் சொல்கிறாய்.. அந்த வார்டனுக்கு தண்ணி காட்டுபவளே நீதான்.. வார்டனுக்கு பயந்த பிள்ளை போல என்னமாய் நடிக்கிறாய்..” என்றவன் பைக்கில் ஏறி வண்டியை ஸ்டார்ட் செய்ய அவனின் பின்னோடு அவள் ஏறியதும் வண்டியை எடுத்தான் ஆதி..
அவன் அப்படி சொல்லவும் சிரித்தவள், “எழிலை என்னோட அழைத்துச் செல்லத்தான் நினைத்தேன் ஆதி.. ஆனால் இருவரும் சேர்ந்து என்னை முட்டாள் ஆக்க பார்க்க அவர்கள் முன்னே சும்மா நடித்தேன் ஆதி..” என்று கூறியவள்,
“அன்புவும் – எழிலும் சந்தித்திருக்கின்றனர்.. ஆனால் அந்த சந்திப்பின்போது நான் எங்கே இருந்தேன் என்று தான் எனக்கே தெரியவில்லை..” என்று புலம்பியவளுக்கு தெரியாது.. அவர்கள் சந்திக்க காரணமே தான் தான் காரணம் என்பது..
ஆதி சீரான வேகத்தில் வண்டியை செலுத்த அவனின் பின்னோடு அமர்ந்திருந்த ஆஷா தீடிரென்று “ஆதி எனக்கு பயமாக இருக்கிறது டா..” என்று சொல்ல வண்டியை ஸ்லோ பண்ணியவன், “எதுக்கு பயப்படுகிறாய்..?” என்று கேட்டான்..
“இல்லடா அன்புவின் பெற்றோர் அவளை என்ன நினைப்பார்கள் என்று தெரியலடா.. எழில் இதுவரையில் சொந்தபந்தங்கள் வீட்டிற்கு கூட போனது கிடையாது.. இங்கே என்ன நிகழுமோ என்று பயமாக இருக்கிறது..” என்று தோழிக்காக அவள் பயத்துடன் சொல்ல,
“ஜெஸ்ட் ரிலாக்ஸ் ஆஷா.. அன்பு இருக்கும் பொழுது நீ நினைப்பது எதுவும் நடக்காது.. எல்லாவற்றையும் அன்பு பார்த்துக் கொள்வான்.. எல்லாம் நல்லபடியாக நடக்கும்..” என்று அவன் அன்புவை புரிந்து கொண்டு சொல்ல ஆஷா மனம் கொஞ்சம் சமாதானம் அடைந்தது..
அவன் அப்படி கூறியதும் அவளின் முகம் கொஞ்சம் தெளிய ஆதி வண்டியை எடுக்க, “ஆதி எனக்கு பசிக்கிறது இங்கே இருக்கும் ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு போகலாமா..?” என்று கேட்டதும்,
“அடியே காலையில் இருந்து உன்னை சமாதானம் செய்ய நான் செய்த செலவு என்ன தெரியுமா..? ஐயாயிரம் ரூபாய்.. இதற்கும் மேல் என்னிடம் எந்த காசும் இல்லடி..” என்று பரிதாபமாக அவன் கூறியதும் ஆஷாவின் முகத்தில் புன்னகை அரும்பியது..
“நான் உனக்கு வாங்குத் தருகிறேன் வா ஆது..” என்று கூறியவள் அவனை அழைத்துக் கொண்டு ஹோட்டலின் உள்ளே சென்றாள்..