• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Unathu Vizhiyil Tholainthen Penne! - 17

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அத்தியாயம் – 17

காலையில் எழுந்ததும் பால்கனியில் நின்று தோட்டத்தைப் பார்க்கும் பழக்கம் அன்புவிற்கு ஆரம்பத்தில் இருந்தே உண்டு.. அன்னையின் பராமரிப்பில் இருந்த வரையில் தோட்டம் பொழிவுடன் இருந்தது..

சுமித்ரா கொஞ்சம் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததினால் தோட்டத்தைப் பராமரிக்க ஆள் இல்லாமல் போனது.. அதன்பிறகு தோட்டத்தை பார்க்கும் பொழுது எல்லாம் அன்பு மனம் வலிக்கும்..

அந்த தோட்டத்தை அவன் தொடர்ந்து பார்க்கவும் ஒரு காரணம் இருந்தது.. அங்கே இருக்கும் மல்லிகை கொடியைப் பார்க்கும் போது எல்லாம் அவனின் மனதில் அவளின் நினைவுகள் தென்றலாக வீசும்..

இன்றும் அது போலவே எழுந்ததும் அவளின் நினைவுகளுடன் உறவாட பால்கனிக்கு வந்து நின்றவன் கண்களில் அன்று எப்படி நித்தியமல்லி செடியுடன் பேசியது போல இன்று அந்த தோட்டத்தில் செடிகளுடன் பேசிக் கொண்டிருந்தவளைப் பார்த்தவன்,

“இவளுக்கு எப்பொழுதும் இதே வேலைதான்.. இன்னும் குழந்தை போல செடியுடன் பேசிட்டு இருக்கிறாள்..” என்று அவன் தன்னையும் மறந்து வாய்விட்டுக் கூறியவன் அவள் செய்யும் வேலையைப் பார்த்து,

“உன்னை யார் இப்படி செய்ய சொன்னது எழில்..? முதலிலேயே தோட்டத்தைப் பார்த்தால் உன்னோட நினைவுகள் வரும்.. இனிமேல் நீ சென்ற பிறகும் காலையில் நீ தோட்டத்தில் நிற்பது போல தோன்றுமே..” என்று தனியாக பேசிக் கொண்டிருந்தான்..

இதை பக்கத்து அறையின் பால்கனியில் நின்றிருந்த அறிவு, “இவன் யாருடன் பேசுகிறான்..?!” என்ற யோசனையில் பால்கனிக்கு வந்து பார்த்தான்..

அன்பு அவனை கவனிக்காமல் தோட்டத்தில் இருந்த எழிலைப் பார்த்து பேச, “இவன் காதலிக்கிறானா..? இல்ல காதலிக்கலையா..? ஒரே குழப்பாக இருக்கிறதே..” என்று தனக்கு தானே பேசியவன்,

“இவன் லவ் பண்ணுகிறான் என்றால் இவங்களை எப்படி தெரியும்.. இவங்க எந்த ஊர் என்று இவனுக்கு தெரியுமா..? இவங்க சந்திப்பு எத்தனை முறை நிகழ்ந்தது.. அண்ணா நல்ல படிப்பான்.. சோ அந்த நேரத்தில் இவன் காதலித்தான் என்று சொன்னால் யாரும் என்னை நம்ப மாட்டாங்க..” என்றவன் அவன் நிற்கும் பால்கனியைப் பார்த்தான்..

அன்பு அவனின் அறையின் சென்றிருக்க, “இவனிடம் கேட்டால் நீ கண்டிபிடி என்று சொல்கிறான்.. எழில் பற்றி யாரிடம் கேட்பது..?” என்று தனியாக புலம்பியவன் கொஞ்ச நேரம் அமர்ந்து யோசிக்க அவனின் மனதில் தோன்றினாள் ஆஷா..

“இவங்களைப் பற்றி கேட்க ஆஷாதான் கரெக்ட்டா இருப்பாங்க..” என்றவன் மணியைப் பார்த்துவிட்டு அன்றைய இருக்கும் மீட்டிங்கிற்கு செல்ல தயாரானான்..

இவன் மாடியில் நின்று அவளைப் பார்க்க எழில் அறையில் இருந்த சுமித்ரா எழிலைப் பார்த்து, ‘அவள் என்ன செய்கிறாள்..?’ என்று யோசிக்க, அம்மா பக்கத்து பால்கனியில் நிற்பது கண்டு அவனின் அறைக்குள் சென்றான் அன்பரசன்..

தியாகு, சுமித்ரா சென்று அவளை வீட்டிற்குள் அழைத்து வரும் வரையில் அமைதியாக நின்றிருந்தவன், அதன்பிறகே குளிக்க சென்றான்..

வீட்டிற்குள் வந்தவர் சோபாவில் அமர்ந்து காபியைக் குடிக்க, சுமித்ரா தரையில் அமர்ந்து தனது காபியைக் குடிக்க அவரின் அருகில் அமர்ந்தாள் எழில்.. இவளின் ஒவ்வொரு செய்கையும் அன்புவின் பெற்றோரைக் கவர்ந்தது..

அடுத்து சமையல் வேலையைக் கவனிக்க சென்ற சுமித்ராவின் பின்னோடு சென்றவள், “அம்மா நீங்க எந்தெந்த பொருள் எங்கே இருக்கிறது என்று சொல்லுங்கள் நான் சமையல் செய்கிறேன்..” என்று கூறினாள் எழில்..

அவளின் பக்கம் திரும்பியவர், “நீ எங்கள் வீட்டிற்கு வந்த விருந்தாளி மா.. உன்னிடம் வேலை வாங்குவதா..?! வேண்டாம் நீ போய் அங்கே உட்கார்ந்து இரு.. நான் கவனித்துக் கொள்கிறேன்..” என்று கூறினார்..

அவரைப் பார்த்து புன்னகை பூத்தவள், “விருந்தாளிகள் வேலை செய்ய கூடாது என்று சட்டசபையில் எதாவது புது ரூல்ஸ் கொண்டு வந்துடாங்களோ..? நமக்குதான் தெரியலையோ..?!” என்று தனக்கு தானே கேட்டுக் கொண்டு யோசிப்பது போல பாவனை செய்ய,

“உனக்கு எல்லாவற்றிலும் விளையாட்டு.. இப்பொழுது தான் தெரிகிறது.. இந்த ஆஷா எதுக்கெடுத்தாலும் எதற்கு ரூல்ஸ் பேசுகிறாள் என்று..” என்று சிரிக்க, எழிலும் சிரித்தாள்.

பிறகு அவர்களோடு சேர்ந்து அவளும் வேலை செய்ய சமையல் வேலை வழக்கத்தை விட அரைமணிநேரத்திற்கு முன்னாடியே முடிந்துவிட சுமித்ரா குளிக்க சென்றார்.. ஹாலில் அமர்ந்து இவர்கள் பேசுவதை அமைதியாகக் கேட்டவாறு செய்தி தாளை புரட்டியவர் அவள் அமைதியாக நிற்பதைப் பார்த்து,

“ஏன் எழில் நிற்கிறாய் வா வந்து இங்கே உட்காரு..” என்று சொல்லவும், அன்பு படிகளில் இறங்கி வரவும் சரியாக இருந்தது..

அவன் வந்ததும், “எழில் நீங்க என்ன கேஸ் விஷயமாக என்னைப் பார்க்க வந்தீங்க..?” என்று கேட்டு சோபாவில் அமர்ந்தவன்,

“இங்கே வந்து உட்கார்ந்து பதில் சொல்லுங்க..” என்று சொல்ல அவள் அங்கே இருந்த தரையில் அமர, “ஏய் என்ன பண்ணுகிறாய் எழில்..?” என்று கேட்டான் அன்பு..

இவன் அவளை ஒருமையில் அழைப்பதைப் பார்த்து அவர் யோசிக்க, அவனை நிமிர்ந்து பார்த்தவள், “தரையில் அமர போகிறேன் சார்..” என்று எதார்த்தமாக சொல்ல, “என்னோட அம்மா பழக்கம் உனக்கு வந்துவிட்டதா..?” என்று சிரிப்புடன் கேட்டான்..

“இல்லங்க சார் எனக்கு இதுதான் வசதி..” என்று கூறியவள் தரையில் அமர அன்புவிற்கு மனம் ஏனோ வலித்தது.. ‘இருவரின் இடையே ஏற்றத்தாழ்வு இந்த பணத்தால் வருமோ..?’ என்று கூட நினைத்தவன்,

“சொல்லுங்க எழில் என்ன விஷயம்..?” என்று அன்பு கேட்டதும், இவர்கள் பேசுவதைக் கவனிக்க ஆரமித்தார் தியாகு..

“நான் என்னோட சொத்து பிரச்சனை காரணமாக உங்களைப் பார்க்க வந்தேன்..” என்று சொல்ல, “சொத்து பிரச்சனையா..?!” என்று யோசித்தவன்,

“சொத்தில் என்ன தகராறு..?” என்று நேரடியாகக் கேட்டதும், “நான் முதலில் இருந்து தெளிவாக சொல்ல வேண்டுமா..? இல்ல காரணத்தை மட்டும் சொன்னால் போதுமா..?” என்று கேட்டவளின் துணிச்சல் கண்டு ஆச்சர்யமாக இருந்தது தியாகுவிற்கு!

அவளின் அமைதி எந்த அளவோ அதே அளவு அவளுக்கு துணிச்சல் கண்டு வியக்காமல் அவரால் இருக்க முடியவில்லை.. “முதலில் இருந்து தெளிவாக சொன்னால் மட்டும் தான் என்னால் ஒரு முடிவுக்கு வர முடியும்..” என்று அன்பு கூறியதும், அவனைப் பார்த்தவள்,

“என்னோட பிறந்தவங்க அண்ணா முத்துக்குமார் என்னோட ஐந்து வருடம் பெரியவன்.. எனக்கு அடுத்து பிறந்தது என்னோட தங்கை மஞ்சரி அவள் என்னோட பதினைந்து வருடம் சிறியவள்..” என்று சொல்ல,

‘இவளுக்கு அண்ணன் இருக்கும் விஷயம் எனக்கு தெரியும்.. அனால் தங்கை பிறந்தது எனக்கு தெரியாது..’ என்று அவன் யோசித்திக் கொண்டே அவள் சொல்வதைக் கவனிக்க இவர்களைப் பார்த்த படியே மாடியில் இருந்து இறங்கி வந்த அறிவு, “அப்பா நான் ஆபீஸ் போகிறேன்.. அம்மாவிடம் சொல்லி விடுங்கள்..” என்று சொல்ல,

“ம்ம் பத்திரமாகப் போய்ட்டு வா கண்ணா..” என்று கூறியதும் அவர்களுக்கு தொந்தரவு கொடுக்காமல் அந்த இடத்தை விட்டு அகன்றான் அறிவு..

“என்னோட அம்மா என்னோட தங்கை பிறந்ததும் இறந்துட்டாங்க..” என்று எழில் சொல்ல, தியாகு, அன்பு இருவருக்குமே வருத்தமாக இருந்தாலும் அவளை பேச வைக்க அமைதியாக இருந்தனர்..

அவள் அடுத்து சொல்ல ஆரமிக்கும் பொழுது அவளின் அருகில் வந்து அமர்ந்தார் சுமித்ரா.. அவரைப் பார்த்து புன்னகை செய்தவள் தொடர்ந்தாள்..

“என்னோட அப்பா ஐந்து ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்ய என்னோட அண்ணா விவசாயத்தில் ஈர்ப்பு இல்லாமல் ஊர் சுற்றிக் கொண்டிருக்க, என்னோட அண்ணனுக்கு திருமணம் நடந்தது..” என்று சொல்ல, “உன்னோட அண்ணி ரொம்ப கொடுமைக்காரியா..?!” என்று கேட்டார் சுமித்ரா..

அவரின் கேள்விக்கு கசப்பான புன்னகையுடன், “என்னோட அண்ணி ரொம்ப நல்லவங்க.. என்னோட அண்ணா மட்டும் தான் கெட்டவன்..” என்று கூறினாள் எழில்..

“என்னது கூட பிறந்த அண்ணன் உனக்கு எதிரியா..?” என்று அதிர்ச்சியுடன் கேட்டார் சுமித்ரா..

“என்னோட அண்ணாவை நான் எதிரியாகப் பார்க்கவில்லை.. அவன்தான் என்னை எதிரியாகப் பார்க்கிறான்.. அவனுக்கு சுயநல புத்தி.. அவனுக்கு அந்த நிலத்தில் தங்கைகளான எங்களுக்கு பங்கு இல்லை என்று சொல்லிட்டு இருந்தான்..” என்று கூறியவள்,

“அப்பா இருந்தவரையில் அண்ணாவால் எங்களுக்கு எந்த பிரச்சனையும் வரவில்லை.. அப்பா இறந்ததும் அந்த ஐந்து ஏக்கர் நிலத்தை அவனின் பெயருக்கு மாற்ற நினைத்தான்.. ஆனால் அப்பொழுது நான் மைனர் என்பதால் அவனால் ஒன்னும் செய்ய முடியவில்லை..” என்று கூறியவள் அமைதியாக இருந்தாள்..

அவளின் அமைதிக்கு காரணம் அவளின் வலியே என்று தெரிந்துக் கொண்டான் அன்பு.. அவனின் மனதில் இருக்கும் காதல் அவளுக்கு ஆறுதல் சொல்ல நினைத்தாலும் அவளின் இத்தனை கஷ்டத்தின் பொழுதும் நாம் அவளின் அருகில் இல்லையே என்று அவனின் மனம் வலித்தது..

அவள் அமைதியாக இருக்க தியாகு, சுமித்ரா இருவருக்கும் மனம் வலிக்கவே செய்தது.. அதற்கு காரணம் இனியா. இனியாவை என்னதான் அவர்களின் குழந்தையாக இருந்தாலும் அவளும் அந்த நிலையில் தான் இருக்கிறாள் என்று நினைத்த சுமித்ரா மனம் வலிக்க, தனது தம்பி அவரின் உடன் இல்லை என்ற மன வருத்தம் அவருக்கு இருந்துக் கொண்டே இருக்கிறது இன்று வரையில்..! அதில் அவரின் மனமும் வலித்தது..

உறவுகள் இருக்கும் பொழுது அவற்றின் அருமை யாருக்கும் தெரியாது.. அவை நம்மை விட்டு சென்றபிறகு அது கொடுக்கும் வலியை யாராலும் தாங்க முடியாது..!

அந்த அமைதியை முதலில் கலைத்தவள் எழில்தான், “அவர் இறந்த பிறகு அந்த நிலையத்தை கவனிக்க ஆள் இல்லாமல் வெள்ளாமைக் காடு தரிசாக போனது.. அப்பாவின் பிரிவில் இருந்து என்னை வெளிக்கொண்டு வர நான்தான் அந்த நிலத்தை உழுது மறுபடியும் அதை விவசாயம் செய்யும் நிலமாக மாற்றினேன்..” என்று கூறியவள் தொடர, மூவரும் அவள் சொல்வதை கவனிக்க அன்பு யோசனையில் இருந்தான்..

“என்னோட நிலத்தில் விவசாயம் செய்து காய்கறிகளை பல இயற்கை அங்காடிக்கு விற்பனை செய்து அப்பா விட்டு சென்ற நிலம் மட்டும் இல்லாமல் அதற்கு மேல் பத்து ஏக்கர் விவசாய நிலத்தை வாங்கி விவசாயம் செய்கிறேன்..” என்று சொல்ல அன்புவிற்கு ஆச்சர்யம் தாங்கவில்லை..

அவனிடம் தயங்கி தயங்கி பேசும் எழில் இத்தனை விஷயத்தையும் தனியாக நின்று சாதித்திருக்கிறாள் என்று நினைக்க ஒரு மனம் மகிழ்ந்தாலும், மற்றொரு மனம் வலிக்கவே செய்தது அன்புவிற்கு..
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
தியாகு – சுமித்ரா இருவரும் திகைப்பில் ஆழ்ந்தவர்கள் வெளிவரவே வெகு நேரமானது.. அவர்களைப் பொறுத்தவரையில் எழில்விழி ஒரு நல்ல பொண்ணு.. அவளை தனது மகனுக்கு திருமணம் செய்து வைக்க நினைக்கின்றனர் என்பது மட்டுமே அவர்கள் அறிந்த விஷயம்.. ஆனால் அவள் இத்தனை விஷயத்தை தனியாக நின்று சாதித்திருக்கிறாள் என்று அவர்களுக்கு வாயடைத்துப் போனது..

இவர்கள் மூவரும் திகைப்பில் இருப்பதை கவனிக்காமல், “இப்பொழுது என்னோட அண்ணா ஊரை சுற்றி கடன் வாங்கி சீட்டாட்டத்தில் தோற்று போய் கடனாளியாக இருக்கிறான்..” என்று சொல்ல அன்பைத் தவிர மற்ற இருவருக்கும் ஏதோ புரிவது போல இருந்தது..

“இப்பொழுது உன்னோட அண்ணா வக்கீல் நோட்ஸ் அனுப்பி இருப்பதன் காரணம்.. உன்னோட அப்பா விட்டு சென்ற நிலத்தை வைத்து தானே நீ இந்த சொத்துகளை வாங்கினாய்.. அதனால் அந்த சொத்துகளையும் எனக்கே கொடுக்க வேண்டும் என்றும், உனக்கும் உன்னோட தங்கைக்கும் இதில் பங்கு கொடுக்க முடியாது என்று சொல்லி உன் மீது கேஸ் போட்டிருக்கிறான்..” என்று சொல்ல அவள் மேலும் கீழும் தலையசைத்து ஆமாம் என்றாள்..

“உன்னோட வாதம் உனக்கு, உன்னோட தங்கைக்கும் அவன் எதுவும் செய்யவில்லை.. உன்னோட அண்ணிக்கு மட்டும் பங்கு தருவேன் அதுவும் அப்பாவின் சொத்தில் இருந்து மட்டுமே.. என்னோட சொத்தில் நான் யாருக்கும் பங்கு தர மாட்டேன் என்று சொல்கிறாய்..” என்று சொன்னதும்,

“அவனிடம் இருந்து என்னையும், என்னோட தங்கை, என்னோட அண்ணி மூவரையும் காப்பாற்றவே இந்த கேஸை நான் போடுகிறேன்..” என்று அவள் சொல்லவும், அனைத்தையும் கேட்ட தியாகு, “உனக்கு இப்படி ஒரு அண்ணன் இருப்பதும் ஒன்று இல்லாமல் இருப்பதும் ஒன்று..” என்று கூறிவிட்டு மகனின் பக்கம் திரும்பி,

“அன்பு என்ன ஆனாலும் இவள் பக்கம் இருக்கின்ற நியத்தை சொல்லி அவளை இந்த கேசில் வெற்றியடைய வைப்பது உன்னோட பொறுப்பு..” என்று சொல்லிவிட்டு அவரின் அறைக்கு எழுந்து செல்ல,

“அப்பா சொல்வது தான் கண்ணா சரியானது.. எழில் தான் இந்த கேஸில் வெற்றி பெற வேண்டும்..” என்று சொல்லிவிட்டு கணவனின் பின்னோடு சென்றார் சுமித்ரா

அவர்கள் எழுந்து சென்றதும் அவளின் விழிகளை மட்டும் பார்த்தவன், ‘உனக்கு நான் எதுவும் செய்யாமல் உன்னிடம் வந்து காதலைச் சொல்ல மாட்டேன் எழில்..’ என்று நினைக்கவும் ஆஷா வரவும் சரியாக இருந்தது..

“உன்னோட கேஸில் நான் ஆஜர் ஆகிறேன்.. நீ சொல்வது எல்லாம் சரியாக இருப்பதால் கேஸில் உனக்கு தான் வெற்றி..” என்று அவன் சொல்லவும் எழில் முகம் தானாக மலர அவளைப் பார்த்த படியே அமர்ந்திருந்தான் அன்பரசன்..

அவர்களின் நிலைக்கும் தங்களின் நிலைக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது என்பதால் அவள் எழில் தனது காதலை தனக்குள் புதைத்துக் கொண்டாள்.. அவனின் பார்வையில் உயிர் பெற்று எழும் தன்னோட காதல் தனக்குள் மட்டும் இருக்க வேண்டும் என்று மனதிற்கு கடிவாளம் இட்டு அவனின் முன்னே அமைதியாக அமர்ந்திருந்தாள் எழில்..

“ஹாய் எழில்.. அன்பு சார் நான் உள்ளே வரலாமா..?” என்று கேட்டதும், ஆஷாவைப் புன்னகையுடன் பார்த்தவள் எழுந்து அவளின் அருகில் செல்ல, “அதுதான் வந்து விட்டாயே.. இன்னும் என்ன கேள்வி உள்ளே வா..” என்று சொல்ல அவனின் குரலில் இருந்தே கோபத்தை அறிந்தவள்,

எழில் பக்கம் திரும்பி, “என்ன எழில் இருவரும் கேஸ் பற்றி பேசாமல் வெட்டி கதை பேசினீர்களா..?” என்று குறும்புடன் கண்சிமிட்ட எழில், “உனக்கு ரொம்பவே நக்கல் அதிகம் ஆஷா..” என்று கூறியவள், “நானும், சாரும் அமர்ந்து கேஸ் விஷயமாக பேசிட்டு இருந்தோம்.. நாங்கள் பேசி முடித்தும் நீயும் சரியாக வந்துவிட்டாய்..” என்று கூறியதும்,

அவள் சொன்னதை ஆஷாவினால் நம்பவே முடியவில்லை.. எழில் அன்புவை ‘சார்..’ என்று அழைத்ததில், கிட்டத்தட்ட மறுபடியும் ஒரு அதிர்ச்சியில் உறைந்தாள் அவள்.. அவள் அதிர்ச்சியில் பிரீஸ் ஆகி நிற்பதை பார்த்த அன்புவிற்கு, எழிலுக்கும் சிரிப்பை அடக்கவே முடியவில்லை..

இவர்கள் இருவரின் சிரிப்பு சத்தம் கேட்டு ஹாலிற்கு வந்த தியாகு – சுமித்ரா கண்களில் முதலில் பட்டது ஆஷா அதிர்ச்சியில் உறைந்த காட்சியே..

அவர்களுக்குமே அவளைப் பார்த்து சிரிப்பு வர அதிர்ச்சியில் இருந்து வெளியே வந்தவள் நின்று இடையில் கையூன்றி அவர்களை முறைக்க, “ஆஷா என்னம்மா வந்தவள் அதிர்ச்சியில் ப்ரீஸ் ஆகி அப்படியே நிற்கிறாய்..” என்று கேட்டார் தியாகு..

அவரை நிமிர்ந்து பார்த்த ஆஷா, உன்னோட மகனும், இவளும் கொடுக்கும் அதிர்ச்சியில் உறைந்து நிற்காமல் என்ன பண்ண சொல்றீங்க..? என்று மனதால் பரிதாபத்துடன் பாவமாக நினைத்தவள் தான் நினைத்தை மற்றவரிடம் சொல்லவில்லை..

அவள் அதிர்ச்சியில் இருந்து மீண்டு வந்து, “அடிக்கடி எனக்கு அதிர்ச்சி ஏற்றபடுகிறது.. நல்ல ஒரு டாக்டரைப் பார்க்க வேண்டும்..” என்று சொல்ல அன்புவும், எழிலும் அவளைப் பார்த்து சிரித்தனர்..

“சரிம்மா வா சாப்பிடலாம்..” என்று அழைத்த சுமதி, அனைவரையும் அமரவைத்து சாப்பாடு பரிமாற, முதலில் சாப்பிட்ட தியாகுவிற்கு உண்மை தெரியும் என்பதால், “எழில் ரொம்ப நல்ல சமையல் செய்திருக்கிறாய்.. அப்படியே கிராமத்து மணம்..” என்று கூறி சாப்பிட,

“எழில் நீயா சமைத்தாய்..?” என்று கேட்ட ஆஷாவும், “ரொம்ப நல்ல இருக்கிறது எழில்..” என்று சொல்ல அன்பு மட்டும் எதுவும் சொல்லாமல் சாப்பிட எழில் முகம் வாடிப்போனது.. அதை கவனித்த அன்புவின் பெற்றோர் அமைதியாக இருந்தனர்..

அவர்கள் சாப்பிட்டு முடித்துவிட்டு, “எழில் நீ இன்னைக்கு ஊருக்கு போகிறாய் இல்லையா..?” என்று அன்பு கேட்டதும் சுமித்ராவிற்கு அவளை அனுப்ப மனமே இல்லை..

“என்னடா அன்பு அந்த பெண்ணை விரட்டுகிறாய்.. அவள் இங்கே இரண்டு நாள் இருக்கட்டும்..” என்று மகனை அதட்ட, ஆஷா சுமித்ராவை அதிர்ச்சியுடன் பார்த்தாள்..

சுமித்ரா ஆஷா, ஆதி இருவரை தவிர மற்ற யாரையும் வீட்டில் தங்க வைக்கவே மாட்டார்.. அது அவருக்கு பிடிக்காது.. எழில் விஷயத்தில் எல்லாம் தலைகீழாகவே இருந்தது.. அவளைத் தங்கவைத்து, இப்பொழுது அவளை அனுப்ப மனம் இல்லாமல் தவிக்கும் சுமித்ரா ஆஷாவிற்கு முற்றிலும் புதிது!

“இல்லம்மா ஊரில் தங்கை தனியாக இருப்பாள்.. நான் இல்லாமல் எந்த வேலையும் நடக்காது அதனால் நான் ஊருக்கு போகிறேன்..” என்று எழில் பக்குவமாக அவரிடம் சொல்ல,

“அடுத்தமுறை வந்ததும் இங்குதான் வர வேண்டும் சரியம்மா எழில்..” என்று பாசத்துடன் கூறியவர் அவளின் தலையை வருடிக் கொடுத்து வாசல் வரை வந்து அவளை வழியனுப்பி வைத்தனர் அன்புவின் பெற்றோர்..

அவர்கள் பின்னோடு வாசலுக்கு வந்த ஆஷா, “அன்பு நீ ரயில்வே ஸ்டேஷன்ல பத்திரமாக ரயில் ஏற்றி விடு.. எழில் எனக்கு அவசரமாக ஒரு இடத்திற்கு போகவேண்டும் அதனால் நான் உன்னுடன் வர முடியவில்லை..” என்று கூறிய ஆஷா,

“ஊருக்கு போனதும் எனக்கு போன் செய்கிறாய்.. நான் உன்னோட போனை எதிர்பார்த்துடே இருப்பேன்..” என்று கூறியவள் அவளின் அருகில் சென்று தோளோடு அணைத்து,

“எழில் பத்திரமாக போய்ட்டு வாடா.. ஊரில் அம்மாவை ரொம்ப கேட்டதாக சொல்லு..” என்று கூறியவள் மற்ற மூவரின் பார்வைக் கண்டு, “நான் இவளின் அண்ணியை அம்மா என்று தான் சொல்வேன்..” என்று விளக்கம் கொடுத்தாள் ஆஷா..

அவளின் ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு ஆஷா கிளம்ப காரில் ஏறியவர்கள் ஆஷாவின் பின்னோடு கிளம்பினர்.. அவளை அனுப்பிவிட்டு வீட்டிற்குள் வந்த சுமித்ரா,

“இந்த எழில் இல்லாதது ஏதோ போலவே இருக்கிறது..” என்று கணவரிடம் சொல்ல, “எனக்கும் தான் சுமி..” என்று கூறினார் தியாகு..

அவள் ஊருக்கு செல்வது அவனுக்கு ஏதோ போல இருந்தாலும், இந்த பிரிவு நிரந்தரம் இல்லை என்று மனதை தேற்றிக்கொண்டு அமைதியாக காரை செலுத்த எழில் வெளியே வேடிக்கை பார்த்த வண்ணம் வந்தாள்.. அவளுக்கு இவனை விட்டு பிரிய மனம் இல்லை.. இருந்தாலும் அதை வெளிப்படுத்தாமல் அமைதியாக இருந்தாள்..

இந்த மௌனத்தைக் கலைக்காமல் இருவரும் வர அவர்கள் கார் பயணம் இனிதே முடிய, ரயில்வே ஸ்டேஷன் வந்ததும் காரைப் பார்க்க செய்துவிட்டு வந்தவனைப் புரியாமல் பார்த்தாள் எழில்..

அவளின் விழிகளைப் பார்த்தவன், “உன்னை டிரெயின் ஏற்றி விட்டு வர சொல்லி இருக்கிறாள் உன்னோட உயிர் தோழி ஆஷா..” என்று அவன் சொல்ல அவளின் கண்கள் கலங்குவதை மறைத்துக் கொண்டு,

“வேண்டாம் அன்பு நீங்க போங்க நான் போய் கொள்கிறேன்..” என்று அவள் சொல்ல அவளை முறைத்தான் அன்பு..

அவன் முறைப்பதைக் கண்டு, “ரயில்வே ஸ்டேஷன் வரை மட்டுமே உங்களால் என்னுடன் வர முடியும்.. இந்த பயணம் முழுவதும் நான் தனியாக தானே செல்ல வேண்டும்.. அதனால் நீங்க கிளம்புங்க..” என்று எதார்த்தமாக சொல்ல அவளின் கைகளை இறுகப்பற்றினான் அன்பு..

அந்த வலியைத் தாங்க முடியாமல், “கையை விடுங்க அன்பு..” என்று கூறியதும் அவளின் கைகளை விட்டான் அன்பு.. அவன் விட்டதும் அவள் கையைப் பார்க்க அவன் பிடித்திருந்த இடம் கன்றி சிவந்திருக்க அவள் அவனை நிமிர்ந்து பார்க்க அவன் எதுவும் சொல்லாமல் நின்றான்..

“சரிங்க சார் நான் கிளம்புகிறேன்..” என்று கூறியவள் ரயிலில் ஏறியதும் அறிவிப்புகள் வர ரயில் கிளம்பியது.. அன்பு அவள் ரயிலில் செல்வதைப் பார்த்துக் கொண்டே நின்றான்..
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top