அத்தியாயம் – 17
காலையில் எழுந்ததும் பால்கனியில் நின்று தோட்டத்தைப் பார்க்கும் பழக்கம் அன்புவிற்கு ஆரம்பத்தில் இருந்தே உண்டு.. அன்னையின் பராமரிப்பில் இருந்த வரையில் தோட்டம் பொழிவுடன் இருந்தது..
சுமித்ரா கொஞ்சம் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததினால் தோட்டத்தைப் பராமரிக்க ஆள் இல்லாமல் போனது.. அதன்பிறகு தோட்டத்தை பார்க்கும் பொழுது எல்லாம் அன்பு மனம் வலிக்கும்..
அந்த தோட்டத்தை அவன் தொடர்ந்து பார்க்கவும் ஒரு காரணம் இருந்தது.. அங்கே இருக்கும் மல்லிகை கொடியைப் பார்க்கும் போது எல்லாம் அவனின் மனதில் அவளின் நினைவுகள் தென்றலாக வீசும்..
இன்றும் அது போலவே எழுந்ததும் அவளின் நினைவுகளுடன் உறவாட பால்கனிக்கு வந்து நின்றவன் கண்களில் அன்று எப்படி நித்தியமல்லி செடியுடன் பேசியது போல இன்று அந்த தோட்டத்தில் செடிகளுடன் பேசிக் கொண்டிருந்தவளைப் பார்த்தவன்,
“இவளுக்கு எப்பொழுதும் இதே வேலைதான்.. இன்னும் குழந்தை போல செடியுடன் பேசிட்டு இருக்கிறாள்..” என்று அவன் தன்னையும் மறந்து வாய்விட்டுக் கூறியவன் அவள் செய்யும் வேலையைப் பார்த்து,
“உன்னை யார் இப்படி செய்ய சொன்னது எழில்..? முதலிலேயே தோட்டத்தைப் பார்த்தால் உன்னோட நினைவுகள் வரும்.. இனிமேல் நீ சென்ற பிறகும் காலையில் நீ தோட்டத்தில் நிற்பது போல தோன்றுமே..” என்று தனியாக பேசிக் கொண்டிருந்தான்..
இதை பக்கத்து அறையின் பால்கனியில் நின்றிருந்த அறிவு, “இவன் யாருடன் பேசுகிறான்..?!” என்ற யோசனையில் பால்கனிக்கு வந்து பார்த்தான்..
அன்பு அவனை கவனிக்காமல் தோட்டத்தில் இருந்த எழிலைப் பார்த்து பேச, “இவன் காதலிக்கிறானா..? இல்ல காதலிக்கலையா..? ஒரே குழப்பாக இருக்கிறதே..” என்று தனக்கு தானே பேசியவன்,
“இவன் லவ் பண்ணுகிறான் என்றால் இவங்களை எப்படி தெரியும்.. இவங்க எந்த ஊர் என்று இவனுக்கு தெரியுமா..? இவங்க சந்திப்பு எத்தனை முறை நிகழ்ந்தது.. அண்ணா நல்ல படிப்பான்.. சோ அந்த நேரத்தில் இவன் காதலித்தான் என்று சொன்னால் யாரும் என்னை நம்ப மாட்டாங்க..” என்றவன் அவன் நிற்கும் பால்கனியைப் பார்த்தான்..
அன்பு அவனின் அறையின் சென்றிருக்க, “இவனிடம் கேட்டால் நீ கண்டிபிடி என்று சொல்கிறான்.. எழில் பற்றி யாரிடம் கேட்பது..?” என்று தனியாக புலம்பியவன் கொஞ்ச நேரம் அமர்ந்து யோசிக்க அவனின் மனதில் தோன்றினாள் ஆஷா..
“இவங்களைப் பற்றி கேட்க ஆஷாதான் கரெக்ட்டா இருப்பாங்க..” என்றவன் மணியைப் பார்த்துவிட்டு அன்றைய இருக்கும் மீட்டிங்கிற்கு செல்ல தயாரானான்..
இவன் மாடியில் நின்று அவளைப் பார்க்க எழில் அறையில் இருந்த சுமித்ரா எழிலைப் பார்த்து, ‘அவள் என்ன செய்கிறாள்..?’ என்று யோசிக்க, அம்மா பக்கத்து பால்கனியில் நிற்பது கண்டு அவனின் அறைக்குள் சென்றான் அன்பரசன்..
தியாகு, சுமித்ரா சென்று அவளை வீட்டிற்குள் அழைத்து வரும் வரையில் அமைதியாக நின்றிருந்தவன், அதன்பிறகே குளிக்க சென்றான்..
வீட்டிற்குள் வந்தவர் சோபாவில் அமர்ந்து காபியைக் குடிக்க, சுமித்ரா தரையில் அமர்ந்து தனது காபியைக் குடிக்க அவரின் அருகில் அமர்ந்தாள் எழில்.. இவளின் ஒவ்வொரு செய்கையும் அன்புவின் பெற்றோரைக் கவர்ந்தது..
அடுத்து சமையல் வேலையைக் கவனிக்க சென்ற சுமித்ராவின் பின்னோடு சென்றவள், “அம்மா நீங்க எந்தெந்த பொருள் எங்கே இருக்கிறது என்று சொல்லுங்கள் நான் சமையல் செய்கிறேன்..” என்று கூறினாள் எழில்..
அவளின் பக்கம் திரும்பியவர், “நீ எங்கள் வீட்டிற்கு வந்த விருந்தாளி மா.. உன்னிடம் வேலை வாங்குவதா..?! வேண்டாம் நீ போய் அங்கே உட்கார்ந்து இரு.. நான் கவனித்துக் கொள்கிறேன்..” என்று கூறினார்..
அவரைப் பார்த்து புன்னகை பூத்தவள், “விருந்தாளிகள் வேலை செய்ய கூடாது என்று சட்டசபையில் எதாவது புது ரூல்ஸ் கொண்டு வந்துடாங்களோ..? நமக்குதான் தெரியலையோ..?!” என்று தனக்கு தானே கேட்டுக் கொண்டு யோசிப்பது போல பாவனை செய்ய,
“உனக்கு எல்லாவற்றிலும் விளையாட்டு.. இப்பொழுது தான் தெரிகிறது.. இந்த ஆஷா எதுக்கெடுத்தாலும் எதற்கு ரூல்ஸ் பேசுகிறாள் என்று..” என்று சிரிக்க, எழிலும் சிரித்தாள்.
பிறகு அவர்களோடு சேர்ந்து அவளும் வேலை செய்ய சமையல் வேலை வழக்கத்தை விட அரைமணிநேரத்திற்கு முன்னாடியே முடிந்துவிட சுமித்ரா குளிக்க சென்றார்.. ஹாலில் அமர்ந்து இவர்கள் பேசுவதை அமைதியாகக் கேட்டவாறு செய்தி தாளை புரட்டியவர் அவள் அமைதியாக நிற்பதைப் பார்த்து,
“ஏன் எழில் நிற்கிறாய் வா வந்து இங்கே உட்காரு..” என்று சொல்லவும், அன்பு படிகளில் இறங்கி வரவும் சரியாக இருந்தது..
அவன் வந்ததும், “எழில் நீங்க என்ன கேஸ் விஷயமாக என்னைப் பார்க்க வந்தீங்க..?” என்று கேட்டு சோபாவில் அமர்ந்தவன்,
“இங்கே வந்து உட்கார்ந்து பதில் சொல்லுங்க..” என்று சொல்ல அவள் அங்கே இருந்த தரையில் அமர, “ஏய் என்ன பண்ணுகிறாய் எழில்..?” என்று கேட்டான் அன்பு..
இவன் அவளை ஒருமையில் அழைப்பதைப் பார்த்து அவர் யோசிக்க, அவனை நிமிர்ந்து பார்த்தவள், “தரையில் அமர போகிறேன் சார்..” என்று எதார்த்தமாக சொல்ல, “என்னோட அம்மா பழக்கம் உனக்கு வந்துவிட்டதா..?” என்று சிரிப்புடன் கேட்டான்..
“இல்லங்க சார் எனக்கு இதுதான் வசதி..” என்று கூறியவள் தரையில் அமர அன்புவிற்கு மனம் ஏனோ வலித்தது.. ‘இருவரின் இடையே ஏற்றத்தாழ்வு இந்த பணத்தால் வருமோ..?’ என்று கூட நினைத்தவன்,
“சொல்லுங்க எழில் என்ன விஷயம்..?” என்று அன்பு கேட்டதும், இவர்கள் பேசுவதைக் கவனிக்க ஆரமித்தார் தியாகு..
“நான் என்னோட சொத்து பிரச்சனை காரணமாக உங்களைப் பார்க்க வந்தேன்..” என்று சொல்ல, “சொத்து பிரச்சனையா..?!” என்று யோசித்தவன்,
“சொத்தில் என்ன தகராறு..?” என்று நேரடியாகக் கேட்டதும், “நான் முதலில் இருந்து தெளிவாக சொல்ல வேண்டுமா..? இல்ல காரணத்தை மட்டும் சொன்னால் போதுமா..?” என்று கேட்டவளின் துணிச்சல் கண்டு ஆச்சர்யமாக இருந்தது தியாகுவிற்கு!
அவளின் அமைதி எந்த அளவோ அதே அளவு அவளுக்கு துணிச்சல் கண்டு வியக்காமல் அவரால் இருக்க முடியவில்லை.. “முதலில் இருந்து தெளிவாக சொன்னால் மட்டும் தான் என்னால் ஒரு முடிவுக்கு வர முடியும்..” என்று அன்பு கூறியதும், அவனைப் பார்த்தவள்,
“என்னோட பிறந்தவங்க அண்ணா முத்துக்குமார் என்னோட ஐந்து வருடம் பெரியவன்.. எனக்கு அடுத்து பிறந்தது என்னோட தங்கை மஞ்சரி அவள் என்னோட பதினைந்து வருடம் சிறியவள்..” என்று சொல்ல,
‘இவளுக்கு அண்ணன் இருக்கும் விஷயம் எனக்கு தெரியும்.. அனால் தங்கை பிறந்தது எனக்கு தெரியாது..’ என்று அவன் யோசித்திக் கொண்டே அவள் சொல்வதைக் கவனிக்க இவர்களைப் பார்த்த படியே மாடியில் இருந்து இறங்கி வந்த அறிவு, “அப்பா நான் ஆபீஸ் போகிறேன்.. அம்மாவிடம் சொல்லி விடுங்கள்..” என்று சொல்ல,
“ம்ம் பத்திரமாகப் போய்ட்டு வா கண்ணா..” என்று கூறியதும் அவர்களுக்கு தொந்தரவு கொடுக்காமல் அந்த இடத்தை விட்டு அகன்றான் அறிவு..
“என்னோட அம்மா என்னோட தங்கை பிறந்ததும் இறந்துட்டாங்க..” என்று எழில் சொல்ல, தியாகு, அன்பு இருவருக்குமே வருத்தமாக இருந்தாலும் அவளை பேச வைக்க அமைதியாக இருந்தனர்..
அவள் அடுத்து சொல்ல ஆரமிக்கும் பொழுது அவளின் அருகில் வந்து அமர்ந்தார் சுமித்ரா.. அவரைப் பார்த்து புன்னகை செய்தவள் தொடர்ந்தாள்..
“என்னோட அப்பா ஐந்து ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்ய என்னோட அண்ணா விவசாயத்தில் ஈர்ப்பு இல்லாமல் ஊர் சுற்றிக் கொண்டிருக்க, என்னோட அண்ணனுக்கு திருமணம் நடந்தது..” என்று சொல்ல, “உன்னோட அண்ணி ரொம்ப கொடுமைக்காரியா..?!” என்று கேட்டார் சுமித்ரா..
அவரின் கேள்விக்கு கசப்பான புன்னகையுடன், “என்னோட அண்ணி ரொம்ப நல்லவங்க.. என்னோட அண்ணா மட்டும் தான் கெட்டவன்..” என்று கூறினாள் எழில்..
“என்னது கூட பிறந்த அண்ணன் உனக்கு எதிரியா..?” என்று அதிர்ச்சியுடன் கேட்டார் சுமித்ரா..
“என்னோட அண்ணாவை நான் எதிரியாகப் பார்க்கவில்லை.. அவன்தான் என்னை எதிரியாகப் பார்க்கிறான்.. அவனுக்கு சுயநல புத்தி.. அவனுக்கு அந்த நிலத்தில் தங்கைகளான எங்களுக்கு பங்கு இல்லை என்று சொல்லிட்டு இருந்தான்..” என்று கூறியவள்,
“அப்பா இருந்தவரையில் அண்ணாவால் எங்களுக்கு எந்த பிரச்சனையும் வரவில்லை.. அப்பா இறந்ததும் அந்த ஐந்து ஏக்கர் நிலத்தை அவனின் பெயருக்கு மாற்ற நினைத்தான்.. ஆனால் அப்பொழுது நான் மைனர் என்பதால் அவனால் ஒன்னும் செய்ய முடியவில்லை..” என்று கூறியவள் அமைதியாக இருந்தாள்..
அவளின் அமைதிக்கு காரணம் அவளின் வலியே என்று தெரிந்துக் கொண்டான் அன்பு.. அவனின் மனதில் இருக்கும் காதல் அவளுக்கு ஆறுதல் சொல்ல நினைத்தாலும் அவளின் இத்தனை கஷ்டத்தின் பொழுதும் நாம் அவளின் அருகில் இல்லையே என்று அவனின் மனம் வலித்தது..
அவள் அமைதியாக இருக்க தியாகு, சுமித்ரா இருவருக்கும் மனம் வலிக்கவே செய்தது.. அதற்கு காரணம் இனியா. இனியாவை என்னதான் அவர்களின் குழந்தையாக இருந்தாலும் அவளும் அந்த நிலையில் தான் இருக்கிறாள் என்று நினைத்த சுமித்ரா மனம் வலிக்க, தனது தம்பி அவரின் உடன் இல்லை என்ற மன வருத்தம் அவருக்கு இருந்துக் கொண்டே இருக்கிறது இன்று வரையில்..! அதில் அவரின் மனமும் வலித்தது..
உறவுகள் இருக்கும் பொழுது அவற்றின் அருமை யாருக்கும் தெரியாது.. அவை நம்மை விட்டு சென்றபிறகு அது கொடுக்கும் வலியை யாராலும் தாங்க முடியாது..!
அந்த அமைதியை முதலில் கலைத்தவள் எழில்தான், “அவர் இறந்த பிறகு அந்த நிலையத்தை கவனிக்க ஆள் இல்லாமல் வெள்ளாமைக் காடு தரிசாக போனது.. அப்பாவின் பிரிவில் இருந்து என்னை வெளிக்கொண்டு வர நான்தான் அந்த நிலத்தை உழுது மறுபடியும் அதை விவசாயம் செய்யும் நிலமாக மாற்றினேன்..” என்று கூறியவள் தொடர, மூவரும் அவள் சொல்வதை கவனிக்க அன்பு யோசனையில் இருந்தான்..
“என்னோட நிலத்தில் விவசாயம் செய்து காய்கறிகளை பல இயற்கை அங்காடிக்கு விற்பனை செய்து அப்பா விட்டு சென்ற நிலம் மட்டும் இல்லாமல் அதற்கு மேல் பத்து ஏக்கர் விவசாய நிலத்தை வாங்கி விவசாயம் செய்கிறேன்..” என்று சொல்ல அன்புவிற்கு ஆச்சர்யம் தாங்கவில்லை..
அவனிடம் தயங்கி தயங்கி பேசும் எழில் இத்தனை விஷயத்தையும் தனியாக நின்று சாதித்திருக்கிறாள் என்று நினைக்க ஒரு மனம் மகிழ்ந்தாலும், மற்றொரு மனம் வலிக்கவே செய்தது அன்புவிற்கு..
காலையில் எழுந்ததும் பால்கனியில் நின்று தோட்டத்தைப் பார்க்கும் பழக்கம் அன்புவிற்கு ஆரம்பத்தில் இருந்தே உண்டு.. அன்னையின் பராமரிப்பில் இருந்த வரையில் தோட்டம் பொழிவுடன் இருந்தது..
சுமித்ரா கொஞ்சம் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததினால் தோட்டத்தைப் பராமரிக்க ஆள் இல்லாமல் போனது.. அதன்பிறகு தோட்டத்தை பார்க்கும் பொழுது எல்லாம் அன்பு மனம் வலிக்கும்..
அந்த தோட்டத்தை அவன் தொடர்ந்து பார்க்கவும் ஒரு காரணம் இருந்தது.. அங்கே இருக்கும் மல்லிகை கொடியைப் பார்க்கும் போது எல்லாம் அவனின் மனதில் அவளின் நினைவுகள் தென்றலாக வீசும்..
இன்றும் அது போலவே எழுந்ததும் அவளின் நினைவுகளுடன் உறவாட பால்கனிக்கு வந்து நின்றவன் கண்களில் அன்று எப்படி நித்தியமல்லி செடியுடன் பேசியது போல இன்று அந்த தோட்டத்தில் செடிகளுடன் பேசிக் கொண்டிருந்தவளைப் பார்த்தவன்,
“இவளுக்கு எப்பொழுதும் இதே வேலைதான்.. இன்னும் குழந்தை போல செடியுடன் பேசிட்டு இருக்கிறாள்..” என்று அவன் தன்னையும் மறந்து வாய்விட்டுக் கூறியவன் அவள் செய்யும் வேலையைப் பார்த்து,
“உன்னை யார் இப்படி செய்ய சொன்னது எழில்..? முதலிலேயே தோட்டத்தைப் பார்த்தால் உன்னோட நினைவுகள் வரும்.. இனிமேல் நீ சென்ற பிறகும் காலையில் நீ தோட்டத்தில் நிற்பது போல தோன்றுமே..” என்று தனியாக பேசிக் கொண்டிருந்தான்..
இதை பக்கத்து அறையின் பால்கனியில் நின்றிருந்த அறிவு, “இவன் யாருடன் பேசுகிறான்..?!” என்ற யோசனையில் பால்கனிக்கு வந்து பார்த்தான்..
அன்பு அவனை கவனிக்காமல் தோட்டத்தில் இருந்த எழிலைப் பார்த்து பேச, “இவன் காதலிக்கிறானா..? இல்ல காதலிக்கலையா..? ஒரே குழப்பாக இருக்கிறதே..” என்று தனக்கு தானே பேசியவன்,
“இவன் லவ் பண்ணுகிறான் என்றால் இவங்களை எப்படி தெரியும்.. இவங்க எந்த ஊர் என்று இவனுக்கு தெரியுமா..? இவங்க சந்திப்பு எத்தனை முறை நிகழ்ந்தது.. அண்ணா நல்ல படிப்பான்.. சோ அந்த நேரத்தில் இவன் காதலித்தான் என்று சொன்னால் யாரும் என்னை நம்ப மாட்டாங்க..” என்றவன் அவன் நிற்கும் பால்கனியைப் பார்த்தான்..
அன்பு அவனின் அறையின் சென்றிருக்க, “இவனிடம் கேட்டால் நீ கண்டிபிடி என்று சொல்கிறான்.. எழில் பற்றி யாரிடம் கேட்பது..?” என்று தனியாக புலம்பியவன் கொஞ்ச நேரம் அமர்ந்து யோசிக்க அவனின் மனதில் தோன்றினாள் ஆஷா..
“இவங்களைப் பற்றி கேட்க ஆஷாதான் கரெக்ட்டா இருப்பாங்க..” என்றவன் மணியைப் பார்த்துவிட்டு அன்றைய இருக்கும் மீட்டிங்கிற்கு செல்ல தயாரானான்..
இவன் மாடியில் நின்று அவளைப் பார்க்க எழில் அறையில் இருந்த சுமித்ரா எழிலைப் பார்த்து, ‘அவள் என்ன செய்கிறாள்..?’ என்று யோசிக்க, அம்மா பக்கத்து பால்கனியில் நிற்பது கண்டு அவனின் அறைக்குள் சென்றான் அன்பரசன்..
தியாகு, சுமித்ரா சென்று அவளை வீட்டிற்குள் அழைத்து வரும் வரையில் அமைதியாக நின்றிருந்தவன், அதன்பிறகே குளிக்க சென்றான்..
வீட்டிற்குள் வந்தவர் சோபாவில் அமர்ந்து காபியைக் குடிக்க, சுமித்ரா தரையில் அமர்ந்து தனது காபியைக் குடிக்க அவரின் அருகில் அமர்ந்தாள் எழில்.. இவளின் ஒவ்வொரு செய்கையும் அன்புவின் பெற்றோரைக் கவர்ந்தது..
அடுத்து சமையல் வேலையைக் கவனிக்க சென்ற சுமித்ராவின் பின்னோடு சென்றவள், “அம்மா நீங்க எந்தெந்த பொருள் எங்கே இருக்கிறது என்று சொல்லுங்கள் நான் சமையல் செய்கிறேன்..” என்று கூறினாள் எழில்..
அவளின் பக்கம் திரும்பியவர், “நீ எங்கள் வீட்டிற்கு வந்த விருந்தாளி மா.. உன்னிடம் வேலை வாங்குவதா..?! வேண்டாம் நீ போய் அங்கே உட்கார்ந்து இரு.. நான் கவனித்துக் கொள்கிறேன்..” என்று கூறினார்..
அவரைப் பார்த்து புன்னகை பூத்தவள், “விருந்தாளிகள் வேலை செய்ய கூடாது என்று சட்டசபையில் எதாவது புது ரூல்ஸ் கொண்டு வந்துடாங்களோ..? நமக்குதான் தெரியலையோ..?!” என்று தனக்கு தானே கேட்டுக் கொண்டு யோசிப்பது போல பாவனை செய்ய,
“உனக்கு எல்லாவற்றிலும் விளையாட்டு.. இப்பொழுது தான் தெரிகிறது.. இந்த ஆஷா எதுக்கெடுத்தாலும் எதற்கு ரூல்ஸ் பேசுகிறாள் என்று..” என்று சிரிக்க, எழிலும் சிரித்தாள்.
பிறகு அவர்களோடு சேர்ந்து அவளும் வேலை செய்ய சமையல் வேலை வழக்கத்தை விட அரைமணிநேரத்திற்கு முன்னாடியே முடிந்துவிட சுமித்ரா குளிக்க சென்றார்.. ஹாலில் அமர்ந்து இவர்கள் பேசுவதை அமைதியாகக் கேட்டவாறு செய்தி தாளை புரட்டியவர் அவள் அமைதியாக நிற்பதைப் பார்த்து,
“ஏன் எழில் நிற்கிறாய் வா வந்து இங்கே உட்காரு..” என்று சொல்லவும், அன்பு படிகளில் இறங்கி வரவும் சரியாக இருந்தது..
அவன் வந்ததும், “எழில் நீங்க என்ன கேஸ் விஷயமாக என்னைப் பார்க்க வந்தீங்க..?” என்று கேட்டு சோபாவில் அமர்ந்தவன்,
“இங்கே வந்து உட்கார்ந்து பதில் சொல்லுங்க..” என்று சொல்ல அவள் அங்கே இருந்த தரையில் அமர, “ஏய் என்ன பண்ணுகிறாய் எழில்..?” என்று கேட்டான் அன்பு..
இவன் அவளை ஒருமையில் அழைப்பதைப் பார்த்து அவர் யோசிக்க, அவனை நிமிர்ந்து பார்த்தவள், “தரையில் அமர போகிறேன் சார்..” என்று எதார்த்தமாக சொல்ல, “என்னோட அம்மா பழக்கம் உனக்கு வந்துவிட்டதா..?” என்று சிரிப்புடன் கேட்டான்..
“இல்லங்க சார் எனக்கு இதுதான் வசதி..” என்று கூறியவள் தரையில் அமர அன்புவிற்கு மனம் ஏனோ வலித்தது.. ‘இருவரின் இடையே ஏற்றத்தாழ்வு இந்த பணத்தால் வருமோ..?’ என்று கூட நினைத்தவன்,
“சொல்லுங்க எழில் என்ன விஷயம்..?” என்று அன்பு கேட்டதும், இவர்கள் பேசுவதைக் கவனிக்க ஆரமித்தார் தியாகு..
“நான் என்னோட சொத்து பிரச்சனை காரணமாக உங்களைப் பார்க்க வந்தேன்..” என்று சொல்ல, “சொத்து பிரச்சனையா..?!” என்று யோசித்தவன்,
“சொத்தில் என்ன தகராறு..?” என்று நேரடியாகக் கேட்டதும், “நான் முதலில் இருந்து தெளிவாக சொல்ல வேண்டுமா..? இல்ல காரணத்தை மட்டும் சொன்னால் போதுமா..?” என்று கேட்டவளின் துணிச்சல் கண்டு ஆச்சர்யமாக இருந்தது தியாகுவிற்கு!
அவளின் அமைதி எந்த அளவோ அதே அளவு அவளுக்கு துணிச்சல் கண்டு வியக்காமல் அவரால் இருக்க முடியவில்லை.. “முதலில் இருந்து தெளிவாக சொன்னால் மட்டும் தான் என்னால் ஒரு முடிவுக்கு வர முடியும்..” என்று அன்பு கூறியதும், அவனைப் பார்த்தவள்,
“என்னோட பிறந்தவங்க அண்ணா முத்துக்குமார் என்னோட ஐந்து வருடம் பெரியவன்.. எனக்கு அடுத்து பிறந்தது என்னோட தங்கை மஞ்சரி அவள் என்னோட பதினைந்து வருடம் சிறியவள்..” என்று சொல்ல,
‘இவளுக்கு அண்ணன் இருக்கும் விஷயம் எனக்கு தெரியும்.. அனால் தங்கை பிறந்தது எனக்கு தெரியாது..’ என்று அவன் யோசித்திக் கொண்டே அவள் சொல்வதைக் கவனிக்க இவர்களைப் பார்த்த படியே மாடியில் இருந்து இறங்கி வந்த அறிவு, “அப்பா நான் ஆபீஸ் போகிறேன்.. அம்மாவிடம் சொல்லி விடுங்கள்..” என்று சொல்ல,
“ம்ம் பத்திரமாகப் போய்ட்டு வா கண்ணா..” என்று கூறியதும் அவர்களுக்கு தொந்தரவு கொடுக்காமல் அந்த இடத்தை விட்டு அகன்றான் அறிவு..
“என்னோட அம்மா என்னோட தங்கை பிறந்ததும் இறந்துட்டாங்க..” என்று எழில் சொல்ல, தியாகு, அன்பு இருவருக்குமே வருத்தமாக இருந்தாலும் அவளை பேச வைக்க அமைதியாக இருந்தனர்..
அவள் அடுத்து சொல்ல ஆரமிக்கும் பொழுது அவளின் அருகில் வந்து அமர்ந்தார் சுமித்ரா.. அவரைப் பார்த்து புன்னகை செய்தவள் தொடர்ந்தாள்..
“என்னோட அப்பா ஐந்து ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்ய என்னோட அண்ணா விவசாயத்தில் ஈர்ப்பு இல்லாமல் ஊர் சுற்றிக் கொண்டிருக்க, என்னோட அண்ணனுக்கு திருமணம் நடந்தது..” என்று சொல்ல, “உன்னோட அண்ணி ரொம்ப கொடுமைக்காரியா..?!” என்று கேட்டார் சுமித்ரா..
அவரின் கேள்விக்கு கசப்பான புன்னகையுடன், “என்னோட அண்ணி ரொம்ப நல்லவங்க.. என்னோட அண்ணா மட்டும் தான் கெட்டவன்..” என்று கூறினாள் எழில்..
“என்னது கூட பிறந்த அண்ணன் உனக்கு எதிரியா..?” என்று அதிர்ச்சியுடன் கேட்டார் சுமித்ரா..
“என்னோட அண்ணாவை நான் எதிரியாகப் பார்க்கவில்லை.. அவன்தான் என்னை எதிரியாகப் பார்க்கிறான்.. அவனுக்கு சுயநல புத்தி.. அவனுக்கு அந்த நிலத்தில் தங்கைகளான எங்களுக்கு பங்கு இல்லை என்று சொல்லிட்டு இருந்தான்..” என்று கூறியவள்,
“அப்பா இருந்தவரையில் அண்ணாவால் எங்களுக்கு எந்த பிரச்சனையும் வரவில்லை.. அப்பா இறந்ததும் அந்த ஐந்து ஏக்கர் நிலத்தை அவனின் பெயருக்கு மாற்ற நினைத்தான்.. ஆனால் அப்பொழுது நான் மைனர் என்பதால் அவனால் ஒன்னும் செய்ய முடியவில்லை..” என்று கூறியவள் அமைதியாக இருந்தாள்..
அவளின் அமைதிக்கு காரணம் அவளின் வலியே என்று தெரிந்துக் கொண்டான் அன்பு.. அவனின் மனதில் இருக்கும் காதல் அவளுக்கு ஆறுதல் சொல்ல நினைத்தாலும் அவளின் இத்தனை கஷ்டத்தின் பொழுதும் நாம் அவளின் அருகில் இல்லையே என்று அவனின் மனம் வலித்தது..
அவள் அமைதியாக இருக்க தியாகு, சுமித்ரா இருவருக்கும் மனம் வலிக்கவே செய்தது.. அதற்கு காரணம் இனியா. இனியாவை என்னதான் அவர்களின் குழந்தையாக இருந்தாலும் அவளும் அந்த நிலையில் தான் இருக்கிறாள் என்று நினைத்த சுமித்ரா மனம் வலிக்க, தனது தம்பி அவரின் உடன் இல்லை என்ற மன வருத்தம் அவருக்கு இருந்துக் கொண்டே இருக்கிறது இன்று வரையில்..! அதில் அவரின் மனமும் வலித்தது..
உறவுகள் இருக்கும் பொழுது அவற்றின் அருமை யாருக்கும் தெரியாது.. அவை நம்மை விட்டு சென்றபிறகு அது கொடுக்கும் வலியை யாராலும் தாங்க முடியாது..!
அந்த அமைதியை முதலில் கலைத்தவள் எழில்தான், “அவர் இறந்த பிறகு அந்த நிலையத்தை கவனிக்க ஆள் இல்லாமல் வெள்ளாமைக் காடு தரிசாக போனது.. அப்பாவின் பிரிவில் இருந்து என்னை வெளிக்கொண்டு வர நான்தான் அந்த நிலத்தை உழுது மறுபடியும் அதை விவசாயம் செய்யும் நிலமாக மாற்றினேன்..” என்று கூறியவள் தொடர, மூவரும் அவள் சொல்வதை கவனிக்க அன்பு யோசனையில் இருந்தான்..
“என்னோட நிலத்தில் விவசாயம் செய்து காய்கறிகளை பல இயற்கை அங்காடிக்கு விற்பனை செய்து அப்பா விட்டு சென்ற நிலம் மட்டும் இல்லாமல் அதற்கு மேல் பத்து ஏக்கர் விவசாய நிலத்தை வாங்கி விவசாயம் செய்கிறேன்..” என்று சொல்ல அன்புவிற்கு ஆச்சர்யம் தாங்கவில்லை..
அவனிடம் தயங்கி தயங்கி பேசும் எழில் இத்தனை விஷயத்தையும் தனியாக நின்று சாதித்திருக்கிறாள் என்று நினைக்க ஒரு மனம் மகிழ்ந்தாலும், மற்றொரு மனம் வலிக்கவே செய்தது அன்புவிற்கு..