அத்தியாயம் – 18
ரயிலில் ஏறியவள் அவனைப் பார்த்த படியே சீட்டில் அமர்ந்து அவனைப் பார்த்தவள் விழிகளில் கண்ணீர் முத்துகள் அவளின் கன்னத்தோடு உறவாட, அதைப் பார்த்தவன் மனமும் சேர்ந்து கலங்கவே செய்தது..
இருவரும் ஒருவரை விட்டு ஒருவரை காணாமல் இருந்தாலும் வருடங்கள் பல கடந்தாலும் அவளின் விழிகள் சொன்னது அவனின் மீது வைத்திருக்கும் பாசம் மற்றும் உயிர் நேசத்தையும்..!
அவளின் விழிகளைப் பார்த்தவன் அவளின் கண்களில் கண்ணீரைப் பார்த்த மறுநொடியே,
‘உனது விழிகள் என்னிடம் பேசும்
மொழிகளை மற்றவர் அறிய முடியாது..
அந்த விழிகள் சொல்லும் மொழி
இருமனமும் இணைத்தே இருக்கும்
நமக்கு மட்டுமே தெரியும்..!
மௌனமொழி பேசுபவர்களுக்கு கூட
சந்தேகங்கள் ஏக்கங்கள் இருக்கும்..
எனக்கு இந்த இரண்டுமே
இன்று வரை இருந்ததில்லை..
இன்று உனது விழியில் இருந்து
வழியும் கண்ணீரில் உணர்கிறேன்
உனது மனதில் இருக்கும்
நமது பிரிவின் வலியை! என்று நினைத்தவன் அவளின் விழிகளைப் பார்க்க, அவன் தன்னை கவனிப்பதை உணர்ந்து விழிகளை அவள் தாழ்த்த அதில் சிதறிய கண்ணீர் துளிகள் அவனை உலுக்கியது..
இவை எல்லாம் நொடி பொழுதில் நடந்து முடிய ரயில் கிளம்பியது அவன் மெளனமாக நிற்க அவனிடம் விழியால் விடைபெற்று சென்றாள் அவனின் நினைவுகளை சுமந்த வண்ணம்..
அவளை அனுப்பிவிட்டு வந்தவனுக்கு அவளின் நினைவுகளே மனதில் எழ அவன் காரை கடற்கரையில் நிறுத்தி யோசிக்க அது அவள் எதார்த்தமாக சொன்ன வார்த்தை என்பது அவனின் அறிவுக்கு எட்டினாலும் கூட மனம் அந்த கருத்தை ஏற்க மறுத்தது..
சிறிது நேரம் கடற்கரையில் தனியாக நின்றவன் மனம் ஏதோ போல இருக்க கடல் காற்றை சுவாசித்தவன் மனம் சிறிது லேசாக மாறி காற்றில் பறக்க அந்த நிலையை மாற்றாமல் காரில் ஏறிச் சென்றான் அன்பரசன்..
அன்று மாலை அவள் திண்டுக்கல் ரயில் நிலையத்தை விட்டு தங்களின் ஊருக்கு பஸில் வந்தவள் பஸ் ஸ்டாப்பில் இறங்கி நடந்துவர அவளின் மனம் என்னமோ போல இருக்க நடந்தே வந்தவள் அமைதியாக நடந்து வந்தாள்..
அவளின் அமைதியை புரிந்த இயற்கை கூட அவளின் மனதிற்கு இதம் அளிக்கும் விதமாக தென்றாலாக மாறி அவளை வருடிச் சென்றது..
என்றும் இயற்கையை ரசித்த வண்ணம் வருபவள் முதல் முதலாக தனது மனதில் இருக்கும் அவனின் எண்ணங்களுடன் உறவாடிய வண்ணம் வந்தாள்..
வீட்டின் முன்னே விளையாடிக் கொண்டிருந்தாள் மஞ்சரி.. இரண்டு நாட்களாக அக்காவைப் பார்க்காமல் இருந்தவள் அவளைப் பார்த்த மறுநொடி, “அக்கா..” என்று பாசத்துடன் வந்து அவளின் காலைக் கட்டிக்கொள்ள எழிலுக்கு மறத்து எல்லாம் மறந்தே போனது..
அவளின் காலைப் பாசத்துடன் வந்து கட்டிக் கொண்ட தங்கையைப் பார்த்து, “என்னோட மஞ்சு குட்டி இரண்டு நாளாக எப்படி இருந்தீங்க..” என்று கேட்டவள் அவளுக்கு என்று வாங்கி வந்த பொருளை அவளுக்கு கொடுக்க, “நான் சமத்து பொண்ணாக இருந்தேன்..” என்று கூறியவள்,
எழில் ஊரில் இல்லாத இரண்டு நாளில் ஊரில் என்னனென்ன நடந்தது என்று அக்காவிடம் கதையளக்க, அவளும் தங்கையிடம் கதை கேட்ட படியே குளித்துவிட்டு வந்து வீட்டின் வேலைகளை முடித்து சமையலும் செய்து தங்கைக்கு ஊட்டிவிட அவளும் சாப்பிட்டாள்..
“அக்கா உனக்கு ஒரு விஷயம் தெரியுமா..?” என்று கேட்டாள் மஞ்சரி..
“என்ன விஷயம் அக்காவுக்கு தெரியாதுமா நீயே சொல்லுடா..” என்று கேட்டதும், “அண்ணாவைப் போலீஸ் பிடிச்சுட்டுப் போயிட்டாங்க..” என்று விளையாட்டு தனத்துடன் தங்கை சொல்ல இவளுக்கு தூக்கி வாரிப்போட்டது..
கடைசியில் அவள் நினைத்தது போலவே அவனின் அண்ணனை போலீஸ் பிடித்து சென்றுவிட்டது என்பதில் மன நிம்மதி அடையாமல் அப்படியே அமர்ந்திருந்தாள்..
தன்னோட வேலைகளை முடித்துவிட்டு மஞ்சரியைப் பார்க்க வந்த தனம் எழிலைப் பார்த்தும், “எழில் எப்பொழுது ஊரில் இருந்து வந்தாய்..? போன விஷயம் என்ன ஆச்சு..?!” என்று சாதாரணமாகக் கேட்டார்..
‘இது பற்றி அண்ணியிடம் கேட்கலாமா..? இல்ல வேண்டாமா..?’ என்று யோசித்தவள் அண்ணியின் கேள்விக்கும் பதில் சொல்ல மறக்கவில்லை..
“அதெல்லாம் நான் சாயந்திரமே வந்துவிட்டேன் அண்ணி..” என்று அவள் ஏதோ போல சொல்ல அவளின் அருகில் அமர்ந்த தனம், “என்னம்மா ஏன் ஒரு மாதிரியாக இருக்கிறாய்..?” என்று கேட்டார்..
“ஏன் அண்ணி உங்களிடம் நான் ஒன்று கேட்டால் என்னைத் தப்பாக நினைக்க மாட்டீர்களே..” என்று தான் மனதில் நினைத்தை கேட்டு விட நினைத்தவள் வாய்விட்டு கேட்க எழிலைப் புரியாமல் பார்த்தாள் தனம்..
“அண்ணாவை நீங்க ஏன் அண்ணி திருத்திக் கொண்டு வரவில்லை..?” என்று கேட்டதும், ‘அவள் எது பற்றி பேசுகிறாள்..’ என்று புரிந்துக் கொண்ட தனம்,
“உன்னோட அண்ணாவைத் திருத்த நான் என்ன மகானா..?!” என்று கேட்டதும் அண்ணியைப் புரியாமல் பார்த்தாள் எழில்..
“என்னம்மா இப்படி பார்க்கிறாய்..? என்னடா அண்ணி இப்படி பேசறாங்க என்று யோசிக்கிறாயா..? நானும் மற்றவர்களைப் போலத்தான் பல கனவுகளுடன் இந்த வீட்டிற்கு வந்தேன்.. உன்னோட அண்ணா ரொம்ப நல்லவர் என்று நம்பி வந்தேன்..” என்று கூறியவர்,
“என்னோட கனவுகள் எல்லாம் கனவாகவே போனததுதான் மிச்சம்.. அவரை திருத்தத்தான் நினைத்தேன் ஆனால் முடியல.. இப்பொழுதும் அவரைப் பிரிந்து போக எனக்கு மனசு வரலடா.. அதுதான் நான் இங்கேயே இருக்கிறேன்..” என்று சொல்ல தனத்தை வியப்புடன் பார்த்தாள் எழில்..
“அண்ணி..” என்று அவளின் கைகளை எழில் பற்றிக் கொள்ள, “எந்த பெண்களும் பிறந்த வீட்டில் இருந்து புகுந்த வீட்டிற்கு வந்தவள் அவள் தன்னை மாற்றிக் கொள்வாள்.. அதே போல கணவரும் எல்லாவிதத்திலும் மாறனும் என்று நாம் எதிர்ப்பார்க்க கூடாது.. ஆனால் நமக்கும் ஒரு குடும்பம் இருக்கிறது அவர்கள் சில விசயங்களை மாற்றிக் கொண்டால் எல்லா வீட்டிலும் பிரச்சனையே வராது..” என்று கூறியவர்,
“போன காரியம் என்ன ஆச்சு..?” என்று கேட்டதும், “அது நல்ல படியாக முடிந்தது அண்ணி.. வக்கீல் ஆஜர் ஆகிறேன் என்று சொல்லிவிட்டார்..” என்று சொல்லவும், “இந்த ஆஷா விளையாட்டு போல இருந்தாலும் காரியத்தில் படுசுட்டியாக இருக்கிறாள்.. சொன்னது போலவே வேலையை முடித்துவிட்டால் பாரு..” என்று வியந்தவர்,
“நீ சாப்பிட்டாயா எழில்.. மஞ்சு எங்கே..?” என்று கேட்டதும், “ம்ம் சாப்பிட்டேன் அண்ணி.. மஞ்சு பின்னாடி தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருக்கிறாள்..” என்று கூறினாள்.. எழில் அதன்பிறகு தனம் பேசியதைக் கவனிக்கவே இல்லை..
தனம் அவளைக் கவனிக்காமல் அவளிடம் பேசிக் கொண்டிருந்தாள், “ஜெயந்திம்மா ஊரில் இருந்து வந்ததும் உன்னைத்தான் கேட்டாங்க எழில்.. நம்ம இனியாவுக்கு நல்ல வரன் அமைத்திருக்கிறது.. இன்னும் மூன்று மாதத்தில் திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்திருக்காங்க..” என்று சொன்னவர் அப்பொழுதுதான் அவளைக் கவனிக்க, அவள் ஏதோ யோசனையில் இருப்பது கண்டு,
“ஏய் எழில் என்ன நினைவில் இருக்கிறாய்..” என்று அவளை பிடித்து உலுக்க, “என்ன அண்ணி சொல்லிட்டு இருந்தீங்க..?” என்று கேட்டதும்,
“உன்னை எதற்கோ ஜெயந்திம்மா பார்க்க வேண்டும் என்று சொன்னாங்க..” என்று சொல்லவும் தான் எழிலுக்கு ஜெயந்திம்மா தன்னிடம் கேட்ட விஷயத்திற்கு நாம் இன்னும் பதில் சொல்லவில்லை என்ற நினைவே வந்தது.. கொஞ்சம் முன்னாடியே கவனித்திருந்தால் இனியாவின் திருமணம் பற்றிய விஷயம் இவளுக்கு தெரிந்திருக்கும்.
அன்றைய இரவு பல யோசனையில் மனதைப் போட்டு குழப்பிக் கொண்ட எழில் நேரம் சென்றபிறகே உறங்க சென்றாள்.. மறுநாள் காலையில் மனதின் அமைதிக்காக பக்கத்தில் இருக்கும் அம்மன் கோவிலுக்கு சென்றாள்..
காலையில் எழுந்ததும் இனியாவிற்கு போன் வர, ‘யார்..?’ என்று எடுத்து பார்த்தவள், “சொல்லு இளா..” என்று கூறியதும், “நீ முதலில் கிளம்பி அம்மன் கோவில் குளத்தின் அருகே வா இனியா.. நான் உன்னிடம் கொஞ்சம் பேசவேண்டும்..” என்று கூறினான் இளா என்று அழைக்கப்படும் இளமாறன் இனியாவின் காதலன்..
“இரு நான் பாட்டியுடம் சொல்லிவிட்டு வருகிறேன்..” என்று கூறியவள் அவனது அழைப்பை துண்டித்து, “பாட்டி நான் கோவிலுக்கு போய்ட்டு வரும் வழியில் எழில் வீட்டுக்கு போயிட்டு வருகிறேன்..” என்று சொல்லிவிட்டு செல்ல,
அவள் கூறியதைக் கேட்டவர், “நீ வரும் பொழுது அவளையும் இங்கே அழைத்து வா இனியா அவளிடம் ஒரு விசயமாக பேச வேண்டும்..” என்று ஜெயந்திம்மா சொல்ல, “சரிங்க பாட்டி...” என்று சொன்னவள் கோவிலுக்கு சென்றாள்..
இனியாவிற்கு விவரம் தெரிந்த நாள் முதலாக அவள் இளமாறனை விரும்பி வருகிறாள்.. தனது ஸ்கூல் காலத்தில் இருந்து காதலித்தால் தான் அவள் சென்னை போக மறுத்தே..!
அன்று அன்பு பட்ட சந்தேகம் உண்மையே.. பாட்டியை காரணமாகக் கூறியவள் இங்கே இருந்து இளமாறனைக் காதலிக்க ஆரமித்தாள்.. அவள் காதலிப்பது அவனுக்கு தெரியாமல் இருந்தது.. அவள் அவன் படிக்கும் இஞ்சினியரிங் கல்லூரியில் சேர்ந்து படிக்க அவனின் பார்வை அவளின் மீது பட்டது..
இவளின் விளையாட்டு தனமும் குறும்பும் அவனை வெகுவாக கவர அவனும் அவளைக் காதலிக்க ஆரமித்தான்.. இந்த நேரத்தில் அவன் கல்லூரி படிப்பை முடித்துவிட்டுச் சென்றவன், மேலும் படித்து நல்ல இடத்தில் வேலையுடன் வந்து சேர்ந்த மகனுக்கு வரன் பார்க்க ஆரமித்தனர் அவனின் பெற்றோர்.. அது பற்றி பேசவே அவளை கோவிலுக்கு வரச்சொல்லி இருந்தான் இளமாறன்..
இவள் வருவதற்கு முன்னாடியே கோவிலுக்குள் வந்த எழில் அம்மன் சந்நிதி முன் நின்று, ‘அம்மா என்னோட மனதில் என்ன இருக்கிறது என்று எனக்கும் தெரியும்.. உனக்கும் தெரியும்.. ஆனால் ஆசைபடவும் ஒரு அளவு இருக்கு.. என்னோட மனதில் இருப்பது என்னோடு இருக்கட்டும்.. நடப்பது நல்லபடியாக நடக்கட்டும்..’ என்று வேண்டிக் கொண்டு வெளியே வரவும், இனியா இளாவை சந்திக்க வரவும் சரியாக இருந்தது..
ரயிலில் ஏறியவள் அவனைப் பார்த்த படியே சீட்டில் அமர்ந்து அவனைப் பார்த்தவள் விழிகளில் கண்ணீர் முத்துகள் அவளின் கன்னத்தோடு உறவாட, அதைப் பார்த்தவன் மனமும் சேர்ந்து கலங்கவே செய்தது..
இருவரும் ஒருவரை விட்டு ஒருவரை காணாமல் இருந்தாலும் வருடங்கள் பல கடந்தாலும் அவளின் விழிகள் சொன்னது அவனின் மீது வைத்திருக்கும் பாசம் மற்றும் உயிர் நேசத்தையும்..!
அவளின் விழிகளைப் பார்த்தவன் அவளின் கண்களில் கண்ணீரைப் பார்த்த மறுநொடியே,
‘உனது விழிகள் என்னிடம் பேசும்
மொழிகளை மற்றவர் அறிய முடியாது..
அந்த விழிகள் சொல்லும் மொழி
இருமனமும் இணைத்தே இருக்கும்
நமக்கு மட்டுமே தெரியும்..!
மௌனமொழி பேசுபவர்களுக்கு கூட
சந்தேகங்கள் ஏக்கங்கள் இருக்கும்..
எனக்கு இந்த இரண்டுமே
இன்று வரை இருந்ததில்லை..
இன்று உனது விழியில் இருந்து
வழியும் கண்ணீரில் உணர்கிறேன்
உனது மனதில் இருக்கும்
நமது பிரிவின் வலியை! என்று நினைத்தவன் அவளின் விழிகளைப் பார்க்க, அவன் தன்னை கவனிப்பதை உணர்ந்து விழிகளை அவள் தாழ்த்த அதில் சிதறிய கண்ணீர் துளிகள் அவனை உலுக்கியது..
இவை எல்லாம் நொடி பொழுதில் நடந்து முடிய ரயில் கிளம்பியது அவன் மெளனமாக நிற்க அவனிடம் விழியால் விடைபெற்று சென்றாள் அவனின் நினைவுகளை சுமந்த வண்ணம்..
அவளை அனுப்பிவிட்டு வந்தவனுக்கு அவளின் நினைவுகளே மனதில் எழ அவன் காரை கடற்கரையில் நிறுத்தி யோசிக்க அது அவள் எதார்த்தமாக சொன்ன வார்த்தை என்பது அவனின் அறிவுக்கு எட்டினாலும் கூட மனம் அந்த கருத்தை ஏற்க மறுத்தது..
சிறிது நேரம் கடற்கரையில் தனியாக நின்றவன் மனம் ஏதோ போல இருக்க கடல் காற்றை சுவாசித்தவன் மனம் சிறிது லேசாக மாறி காற்றில் பறக்க அந்த நிலையை மாற்றாமல் காரில் ஏறிச் சென்றான் அன்பரசன்..
அன்று மாலை அவள் திண்டுக்கல் ரயில் நிலையத்தை விட்டு தங்களின் ஊருக்கு பஸில் வந்தவள் பஸ் ஸ்டாப்பில் இறங்கி நடந்துவர அவளின் மனம் என்னமோ போல இருக்க நடந்தே வந்தவள் அமைதியாக நடந்து வந்தாள்..
அவளின் அமைதியை புரிந்த இயற்கை கூட அவளின் மனதிற்கு இதம் அளிக்கும் விதமாக தென்றாலாக மாறி அவளை வருடிச் சென்றது..
என்றும் இயற்கையை ரசித்த வண்ணம் வருபவள் முதல் முதலாக தனது மனதில் இருக்கும் அவனின் எண்ணங்களுடன் உறவாடிய வண்ணம் வந்தாள்..
வீட்டின் முன்னே விளையாடிக் கொண்டிருந்தாள் மஞ்சரி.. இரண்டு நாட்களாக அக்காவைப் பார்க்காமல் இருந்தவள் அவளைப் பார்த்த மறுநொடி, “அக்கா..” என்று பாசத்துடன் வந்து அவளின் காலைக் கட்டிக்கொள்ள எழிலுக்கு மறத்து எல்லாம் மறந்தே போனது..
அவளின் காலைப் பாசத்துடன் வந்து கட்டிக் கொண்ட தங்கையைப் பார்த்து, “என்னோட மஞ்சு குட்டி இரண்டு நாளாக எப்படி இருந்தீங்க..” என்று கேட்டவள் அவளுக்கு என்று வாங்கி வந்த பொருளை அவளுக்கு கொடுக்க, “நான் சமத்து பொண்ணாக இருந்தேன்..” என்று கூறியவள்,
எழில் ஊரில் இல்லாத இரண்டு நாளில் ஊரில் என்னனென்ன நடந்தது என்று அக்காவிடம் கதையளக்க, அவளும் தங்கையிடம் கதை கேட்ட படியே குளித்துவிட்டு வந்து வீட்டின் வேலைகளை முடித்து சமையலும் செய்து தங்கைக்கு ஊட்டிவிட அவளும் சாப்பிட்டாள்..
“அக்கா உனக்கு ஒரு விஷயம் தெரியுமா..?” என்று கேட்டாள் மஞ்சரி..
“என்ன விஷயம் அக்காவுக்கு தெரியாதுமா நீயே சொல்லுடா..” என்று கேட்டதும், “அண்ணாவைப் போலீஸ் பிடிச்சுட்டுப் போயிட்டாங்க..” என்று விளையாட்டு தனத்துடன் தங்கை சொல்ல இவளுக்கு தூக்கி வாரிப்போட்டது..
கடைசியில் அவள் நினைத்தது போலவே அவனின் அண்ணனை போலீஸ் பிடித்து சென்றுவிட்டது என்பதில் மன நிம்மதி அடையாமல் அப்படியே அமர்ந்திருந்தாள்..
தன்னோட வேலைகளை முடித்துவிட்டு மஞ்சரியைப் பார்க்க வந்த தனம் எழிலைப் பார்த்தும், “எழில் எப்பொழுது ஊரில் இருந்து வந்தாய்..? போன விஷயம் என்ன ஆச்சு..?!” என்று சாதாரணமாகக் கேட்டார்..
‘இது பற்றி அண்ணியிடம் கேட்கலாமா..? இல்ல வேண்டாமா..?’ என்று யோசித்தவள் அண்ணியின் கேள்விக்கும் பதில் சொல்ல மறக்கவில்லை..
“அதெல்லாம் நான் சாயந்திரமே வந்துவிட்டேன் அண்ணி..” என்று அவள் ஏதோ போல சொல்ல அவளின் அருகில் அமர்ந்த தனம், “என்னம்மா ஏன் ஒரு மாதிரியாக இருக்கிறாய்..?” என்று கேட்டார்..
“ஏன் அண்ணி உங்களிடம் நான் ஒன்று கேட்டால் என்னைத் தப்பாக நினைக்க மாட்டீர்களே..” என்று தான் மனதில் நினைத்தை கேட்டு விட நினைத்தவள் வாய்விட்டு கேட்க எழிலைப் புரியாமல் பார்த்தாள் தனம்..
“அண்ணாவை நீங்க ஏன் அண்ணி திருத்திக் கொண்டு வரவில்லை..?” என்று கேட்டதும், ‘அவள் எது பற்றி பேசுகிறாள்..’ என்று புரிந்துக் கொண்ட தனம்,
“உன்னோட அண்ணாவைத் திருத்த நான் என்ன மகானா..?!” என்று கேட்டதும் அண்ணியைப் புரியாமல் பார்த்தாள் எழில்..
“என்னம்மா இப்படி பார்க்கிறாய்..? என்னடா அண்ணி இப்படி பேசறாங்க என்று யோசிக்கிறாயா..? நானும் மற்றவர்களைப் போலத்தான் பல கனவுகளுடன் இந்த வீட்டிற்கு வந்தேன்.. உன்னோட அண்ணா ரொம்ப நல்லவர் என்று நம்பி வந்தேன்..” என்று கூறியவர்,
“என்னோட கனவுகள் எல்லாம் கனவாகவே போனததுதான் மிச்சம்.. அவரை திருத்தத்தான் நினைத்தேன் ஆனால் முடியல.. இப்பொழுதும் அவரைப் பிரிந்து போக எனக்கு மனசு வரலடா.. அதுதான் நான் இங்கேயே இருக்கிறேன்..” என்று சொல்ல தனத்தை வியப்புடன் பார்த்தாள் எழில்..
“அண்ணி..” என்று அவளின் கைகளை எழில் பற்றிக் கொள்ள, “எந்த பெண்களும் பிறந்த வீட்டில் இருந்து புகுந்த வீட்டிற்கு வந்தவள் அவள் தன்னை மாற்றிக் கொள்வாள்.. அதே போல கணவரும் எல்லாவிதத்திலும் மாறனும் என்று நாம் எதிர்ப்பார்க்க கூடாது.. ஆனால் நமக்கும் ஒரு குடும்பம் இருக்கிறது அவர்கள் சில விசயங்களை மாற்றிக் கொண்டால் எல்லா வீட்டிலும் பிரச்சனையே வராது..” என்று கூறியவர்,
“போன காரியம் என்ன ஆச்சு..?” என்று கேட்டதும், “அது நல்ல படியாக முடிந்தது அண்ணி.. வக்கீல் ஆஜர் ஆகிறேன் என்று சொல்லிவிட்டார்..” என்று சொல்லவும், “இந்த ஆஷா விளையாட்டு போல இருந்தாலும் காரியத்தில் படுசுட்டியாக இருக்கிறாள்.. சொன்னது போலவே வேலையை முடித்துவிட்டால் பாரு..” என்று வியந்தவர்,
“நீ சாப்பிட்டாயா எழில்.. மஞ்சு எங்கே..?” என்று கேட்டதும், “ம்ம் சாப்பிட்டேன் அண்ணி.. மஞ்சு பின்னாடி தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருக்கிறாள்..” என்று கூறினாள்.. எழில் அதன்பிறகு தனம் பேசியதைக் கவனிக்கவே இல்லை..
தனம் அவளைக் கவனிக்காமல் அவளிடம் பேசிக் கொண்டிருந்தாள், “ஜெயந்திம்மா ஊரில் இருந்து வந்ததும் உன்னைத்தான் கேட்டாங்க எழில்.. நம்ம இனியாவுக்கு நல்ல வரன் அமைத்திருக்கிறது.. இன்னும் மூன்று மாதத்தில் திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்திருக்காங்க..” என்று சொன்னவர் அப்பொழுதுதான் அவளைக் கவனிக்க, அவள் ஏதோ யோசனையில் இருப்பது கண்டு,
“ஏய் எழில் என்ன நினைவில் இருக்கிறாய்..” என்று அவளை பிடித்து உலுக்க, “என்ன அண்ணி சொல்லிட்டு இருந்தீங்க..?” என்று கேட்டதும்,
“உன்னை எதற்கோ ஜெயந்திம்மா பார்க்க வேண்டும் என்று சொன்னாங்க..” என்று சொல்லவும் தான் எழிலுக்கு ஜெயந்திம்மா தன்னிடம் கேட்ட விஷயத்திற்கு நாம் இன்னும் பதில் சொல்லவில்லை என்ற நினைவே வந்தது.. கொஞ்சம் முன்னாடியே கவனித்திருந்தால் இனியாவின் திருமணம் பற்றிய விஷயம் இவளுக்கு தெரிந்திருக்கும்.
அன்றைய இரவு பல யோசனையில் மனதைப் போட்டு குழப்பிக் கொண்ட எழில் நேரம் சென்றபிறகே உறங்க சென்றாள்.. மறுநாள் காலையில் மனதின் அமைதிக்காக பக்கத்தில் இருக்கும் அம்மன் கோவிலுக்கு சென்றாள்..
காலையில் எழுந்ததும் இனியாவிற்கு போன் வர, ‘யார்..?’ என்று எடுத்து பார்த்தவள், “சொல்லு இளா..” என்று கூறியதும், “நீ முதலில் கிளம்பி அம்மன் கோவில் குளத்தின் அருகே வா இனியா.. நான் உன்னிடம் கொஞ்சம் பேசவேண்டும்..” என்று கூறினான் இளா என்று அழைக்கப்படும் இளமாறன் இனியாவின் காதலன்..
“இரு நான் பாட்டியுடம் சொல்லிவிட்டு வருகிறேன்..” என்று கூறியவள் அவனது அழைப்பை துண்டித்து, “பாட்டி நான் கோவிலுக்கு போய்ட்டு வரும் வழியில் எழில் வீட்டுக்கு போயிட்டு வருகிறேன்..” என்று சொல்லிவிட்டு செல்ல,
அவள் கூறியதைக் கேட்டவர், “நீ வரும் பொழுது அவளையும் இங்கே அழைத்து வா இனியா அவளிடம் ஒரு விசயமாக பேச வேண்டும்..” என்று ஜெயந்திம்மா சொல்ல, “சரிங்க பாட்டி...” என்று சொன்னவள் கோவிலுக்கு சென்றாள்..
இனியாவிற்கு விவரம் தெரிந்த நாள் முதலாக அவள் இளமாறனை விரும்பி வருகிறாள்.. தனது ஸ்கூல் காலத்தில் இருந்து காதலித்தால் தான் அவள் சென்னை போக மறுத்தே..!
அன்று அன்பு பட்ட சந்தேகம் உண்மையே.. பாட்டியை காரணமாகக் கூறியவள் இங்கே இருந்து இளமாறனைக் காதலிக்க ஆரமித்தாள்.. அவள் காதலிப்பது அவனுக்கு தெரியாமல் இருந்தது.. அவள் அவன் படிக்கும் இஞ்சினியரிங் கல்லூரியில் சேர்ந்து படிக்க அவனின் பார்வை அவளின் மீது பட்டது..
இவளின் விளையாட்டு தனமும் குறும்பும் அவனை வெகுவாக கவர அவனும் அவளைக் காதலிக்க ஆரமித்தான்.. இந்த நேரத்தில் அவன் கல்லூரி படிப்பை முடித்துவிட்டுச் சென்றவன், மேலும் படித்து நல்ல இடத்தில் வேலையுடன் வந்து சேர்ந்த மகனுக்கு வரன் பார்க்க ஆரமித்தனர் அவனின் பெற்றோர்.. அது பற்றி பேசவே அவளை கோவிலுக்கு வரச்சொல்லி இருந்தான் இளமாறன்..
இவள் வருவதற்கு முன்னாடியே கோவிலுக்குள் வந்த எழில் அம்மன் சந்நிதி முன் நின்று, ‘அம்மா என்னோட மனதில் என்ன இருக்கிறது என்று எனக்கும் தெரியும்.. உனக்கும் தெரியும்.. ஆனால் ஆசைபடவும் ஒரு அளவு இருக்கு.. என்னோட மனதில் இருப்பது என்னோடு இருக்கட்டும்.. நடப்பது நல்லபடியாக நடக்கட்டும்..’ என்று வேண்டிக் கொண்டு வெளியே வரவும், இனியா இளாவை சந்திக்க வரவும் சரியாக இருந்தது..