அத்தியாயம் - 8
ஆஷாவைத் துரத்திக்கொண்டு அவர்களின் வயலுக்கு வந்த மகளின் முகத்தில் இருந்த புன்னகையைப் பார்த்த சுந்தரம் மனம் சந்தோசம் கொள்ள, “என்னம்மா உன்னோட தோழி வந்தும் அவ்வளவு சந்தோசமாக இருக்கிறாய்..?” என்று கேட்டதும் சிரித்தவளைப் பார்த்தவர்,
“இப்படியே இரும்மா.. எப்பொழுதும் சந்தோசமாக எதுவாக இருந்தாலும் அப்பா நான் பார்த்துக் கொள்கிறேன்..” என்று கூறியவர், மஞ்சுவை அவளின் கையில் கொடுக்க, அவளைத் தூக்கிக்கொண்டு வீட்டிற்கு வந்தனர் ஆஷாவும், எழில்விழியும்!
அவள் வீட்டிற்குள் நுழைத்தும் தான் அவளுக்கு ஜெயந்திம்மா கொடுத்துவிட்ட துணி ஞாபகம் வர, “ஆஷா நீ மஞ்சுவைக் கொஞ்சம் பார்த்துக் கொள் இதோ வருகிறேன்..” என்று கூறியவள் தென்னந்தோப்பில் தங்கள் வந்த வழியில் பையைத் தவற விட்டதைத் தேடி வந்தவள்,
அது எப்படியும் ஜெயந்திம்மா வீட்டில் இருக்கும் என்று அங்கே சென்று அதை வாங்கிக் கொண்டு விரைவாக வீட்டிற்கு வந்தாள்.. வீட்டிற்குள் வந்தும் ஒடிவந்து தண்ணீரைக் குடித்தவள்,
“ஸ்ஸ் இன்னைக்கு என்ன என்ன ஓட்டம் ஓடவைத்துவிட்டாய்..” என்று ஆஷாவின் அருகில் அமர்ந்தாள்..
அவளோ எழில் முகத்தைப் பார்த்துவிட்டு மஞ்சரிக்கு தட்டிக் கொடுக்க அவள் அவளின் மடியில் படுத்து உறங்கியதும் மஞ்சுவை கயிற்றுக்கட்டிலில் படுக்க வைத்த ஆஷா, எழில் அருகில் வந்தாள்..
அவளைப் பார்த்தும், “ஆஷா வா சாப்பிடலாம்..” என்று அழைக்க அவளோ மெளனமாக அவளின் கையைப் பிடித்து அவர்கள் வீட்டின் பின்னே இருந்த தோட்டத்திற்கு அழைத்துச் சென்றாள்..
அங்கே சென்று மாமரத்தின் அடியில் இருந்த கட்டிலில் அமர்ந்த இருவரின் மௌனம் கண்டு தென்றல் கூட அமைதியாக அவர்களை வருடிச் சென்றது அந்த மதியான வேளையில்...!
“எழில் நீ எப்படி இருக்கிறாய்..?” என்று மௌனத்தை முதலில் கலைத்தாள் ஆஷா..
அவளின் முகத்தை நிமிர்ந்து பார்த்த எழில், “எனக்கு என்ன ஆஷா..? மனதில் நினைப்பதை சொல்லாமலே வாங்கித் தர அப்பாவும், என்மேல் உயிரையே வைத்திருக்கும் அண்ணியும், அடுத்து மஞ்சு குட்டி என்று என்னோட வாழ்க்கை அப்படியே போகிறது..” என்று சிரித்தவள் எழில்விழி.. ஆஷாவிற்கு சொல்லாமல் சொல்லியது எழில்விழி படும் துன்பங்களை கூறியது அவளின் முகத்தில் இருந்த புன்னகை...!
அவளை தனது மடியில் படுக்க வைத்துக் கொண்ட ஆஷா, “உன்னோட சோகம் எனக்கு தெரியும் டா.. உன்னோட அந்த புன்னகை சொல்லிய சோகம் எனக்கு தெரியாத என்ன..?” என்று கேட்டவள்
அவளின் கூந்தலை வருடிக் கொடுக்க கண்கள் கலங்கிய எழில்விழி, “ஆஷா நீ போன பிறகு என்னோட வாழ்க்கையில் என்னென்னமோ நடந்துவிட்டது..” என்று கூறியவள்,
“அண்ணா எப்படிப்பட்டவன் என்பதை நான் முழுவதும் அறித்துக் கொண்டேன்.. அண்ணி ரொம்ப நல்லவங்க ஆஷா எனக்காக எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு அமைதியாக இருக்கிறாங்க..” என்று அவளிடம் நடந்தது அனைத்தையும் கூறியவள்,
அவளின் மடியில் படுத்து அழுக அவளைத் தாயாக மடிதாங்கினாள் ஆஷா.. அவளது கதறலை நிறுத்தாமல் தொடர அவளின் கதறல் பார்த்து அமைதியாக அமர்ந்திருந்தாள் ஆஷா..
இந்த கதறல் இரண்டு வருடம் இதயத்தில் அடக்கி வைத்திருந்தது.. மனதில் இருக்கும் சோகத்தை நமக்கு பிடித்தவர்களிடம் மட்டும் சொல்ல நினைக்கும் பொழுது அவர்கள் அதை நிராகரிக்கின்றனர்..
எல்லோரும் தனக்கு ஒரு தோழி இருந்தால் தனக்கு ஒரு தோழன் இருந்தால் என்று நினைப்பதை விடுத்து நானும் ஒரு தோழியே என்று மாறும் வேளையில் தான் அவள் அப்பா, அம்மா, இருவரையும் தாண்டிய ஒரு சொந்தமாக மாறுகிறாள்.. இது தான் தோழமை..
அந்த புரிதல் அனைவரிடமும் வராது.. நாம் யாரிடம் அதிகம் சண்டை போடுகிறோமோ அவர்கள் மீதும், ஒரு துக்கம் வந்த வேலை நமது மனம் முதலில் நினைப்பது தனது தோழன் அல்லது தோழியையே..!
ஏன் என்றால் அவளுக்கு தான் நம்மைப் பற்றி முழுவதும் தெரியும்.. காதலில் கூட சில இடத்தில் உண்மையை சொல்லாமல் மறக்க நினைக்கும் மனம், தோழமையில் என்று வந்தால் மனம் திறக்கவே நினைக்கும்..
அந்த புரிதல் தான் இவர்களைச் சேர்த்து வைத்திருக்கிறது.. இந்த இரண்டு வருடம் இருவர் வாழ்க்கையிலும் என்ன நடந்தது என்று இருவரும் அறியாமல் இருந்தாலும் கூட, தோழியின் சிரிப்பை வைத்தே அவளின் துக்கம் எத்தகையது என்று கண்டுகொள்ளும் தோழமை பலருக்கு கிடைப்பதில்லை..
அவள் கதறி முடித்தும், “எழில் இதெல்லாம் முதலில் அனுபவிக்கும் நீ ரொம்பவே லக்கி.. இதெல்லாம் பிறந்த வீட்டோடு முடிந்துவிடும் புகுந்த வீட்டில் உனக்கு சந்தோசம் என்ற சொர்க்க கதவுகள் திறக்க காத்திருக்கிறது..” என்று அவளிடம் சொல்லி அவளைத் தேற்றினாள் ஆஷா..
அவள் அப்படி கூறியதும் அவளின் மடியில் இருந்து எழுந்து, “புகுந்த வீடா..? எனக்கா..?” எழில்விழி முகத்தில் ஒரு கசப்பான புன்னகை தோன்றி மறந்தது..
“ஏன் எழில் தவறாக நினைக்கிறாய்.. உனக்கும் திருமணம் ஆகும்.. உனக்கும் ஒரு நல்ல குடும்பம் அமையும் அதுவரை காத்திரு..” என்று ஆஷா சொல்ல,
“என்னோட அண்ணி எவ்வளவு கனவுகளுடன் வந்திருப்பாங்க.. அவர்கள் நினைத்தா நடந்தது..?” என்று எதிர் கேள்வி கேட்டாள் எழில்விழி..
“உன்னோட வாழ்க்கையில் மற்றவரை வைத்து ஒப்பிடு பழகாதே.. அது கணக்கு வழக்குக்கு மட்டும் தான் சரிப்படும்.. நிஜ வாழ்க்கைக்கு எதுவும் சரிவராது.. உன்னோட எதிர்காலம் நல்ல படியாக அமையும் என்று நினைவில் வைத்துகொள் அது போதும்.. மற்றது தானாக நடக்கும்..” என்று கூறினாள் ஆஷா..
“ஆஷா உன்னிடம் ஒன்று கேட்கணும் என்று நினைத்தேன்.. என்னை இரண்டு வருடம் பார்க்காமல் இப்பொழுது எப்படி அடையாளம் கண்டுகொண்டாய்..?” என்று கேட்டாள் எழில்விழி..
“அது உன்னோட உனது விழிதான் எனக்கு உன்னை காட்டிக் கொடுத்தது..” என்று அவளின் கண்களைப் பார்த்துக் கூறியவள், “இந்த விழியில் தொலையப்போகும் அந்த அதிர்ஷ்டசாலி யார் என்று தான் தெரியவில்லை..” என்று குறும்பாகக் கூறினாள் ஆஷா..
அந்த கேலியில் முகம் சிவந்த எழில், “இப்பொழுது எங்கே இருக்கிறாய் ஆஷா..? அப்பா எப்படி இருக்கிறார்..?” என்று ஆஷாவிடம் கேட்டாள் எழில்விழி..
“சென்னையில் இருக்கிறோம் எழில்.. அப்பா ரொம்ப நல்ல இருக்கிறார்..” என்று கூறியவளின் முகம் பார்த்த எழில், “அடுத்து என்ன படிக்க போகிறாய்..?” என்று கேட்டதும், அவளைப் பார்த்து புன்னகை புரிந்தவள்,
“வக்கீலுக்கு படிக்கலாம் என்று இருக்கிறேன் எழில்..” என்று சொல்லவும் அவளின் மனத்திரையில் அன்புவின் முகம் மின்னி மறந்தது..
“எழில் நான் உன்னோட அண்ணியைப் பார்க்கலாமா..?” என்று கேட்பதற்கும் தனம் அவர்களை நோக்கி வரவும் சரியாக இருக்க,
“என்ன என்னோட பெயர் அடிபடுது..?” என்று கேட்ட தனத்தின் முகத்தைப் பார்த்த ஆஷா,
“அண்ணி..” என்று இடத்தை விட்டு எழுந்தவள் ஓடிவந்து தனத்தைக் கட்டிக் கொள்ள, “என்னம்மா..” என்று பாசமாகக் கேட்டார் தனம்..
அவரிடம் இருந்து விலகியவள், “எழில் அனைத்தையும் சொன்னாள்.. இவளுக்கு இன்னும் வெளி உலகம் தெரியாது.. இவளை இவ்வளவு கஷ்டத்திலும் பத்திரமாகப் பாதுகாக்கும் உங்களுக்கு ரொம்ப நன்றி..” என்று கூறியவளைப் பார்த்து,
“அவள் என்னோட மகள் ஆஷா.. என்ன கொஞ்சம் கொஞ்சம் வளர்ந்துவிட்டாள்.. அவளை நான் பார்த்துக் கொள்ள நீ எதுக்கு நன்றி என்று பெரிய வார்த்தை எல்லாம் சொல்கிறாய்..?” என்று கேட்டார்..
அவரின் முகத்தைப் பார்த்து, “நீங்க தப்ப நினைக்கவில்லை என்றால் நான் உங்களை அம்மா என்று கூப்பிடவா..?!” என்று கேட்டவளை இழுத்து தோளோடு அணைத்துக் கொண்டார் தனம்..
அவளின் தோழமையும் அவள் எழில்மேல் வைத்திருக்கும் பாசமும் கண்டு தனத்திற்கு மனம் நிறைந்து போனது.. “எனக்கு நீயும் மகள்தாண்டா..” என்று அவளின் உச்சியில் முத்தம் பதித்தவர்,
“இருவரும் வாங்க சாப்பிடலாம்..” என்று சொல்ல, “அம்மாவின் கைப்பக்குவம் சாப்பிட்டு வருடம் இரண்டு ஆகிறது..” என்று கூறியதில் மறுபடியும் எழில் மனதில் அன்புவின் முகம் மின்னி மறந்தது..
தோழிகள் இருவரும் சாப்பிட, தனம் அவர்களுக்கு பார்த்து பார்த்துப் பரிமாற வயிறார சாப்பிட்டவர்கள் முகம் பார்த்து தனத்தின் முகம் மலர்ந்தது..
அவர்கள் இருவரும் தங்களின் பள்ளி காலத்தைப் பற்றி பேசிகொண்டிருக்க அனைத்தும் எடுத்து வைத்த தனம், “ஆஷா நீ இங்கே இரும்மா ஊரில் திருவிழா முடிந்ததும் போகலாம்..” என்று தனம் சொல்ல,
“இல்லம்மா அப்பாவிடம் நாளை வருவதாக சொல்லி இருக்கிறேன்.. இங்கே என்னோட மாமா வீடு இருக்கு அவங்களைப் பார்க்க வருவதாக சொல்லிட்டு வந்தேன்.. அவங்க இன்னைக்கு ஊரில் இல்லமா.. அதுதான் இவளைப் பார்த்துவிட்டு அங்கே போகலாம் என்று இங்கேயே வந்துவிட்டேன்..” என்று கூறினாள் ஆஷா
அவளைப் பார்த்து சிரித்த தனம், “சரிம்மா நீ இங்கே இரு நான் வருகிறேன்..” என்று சொல்லிவிட்டு அவர்கள் வீடு நோக்கிச் சென்றாள்..
அவர்கள் வீட்டிற்கு அதிகம் தொலைவு இல்லை என்பதால் அடிக்கடி வந்து மஞ்சுவையும், எழிலையும் பார்த்து செல்வாள் தனம்..
ஆஷாவைத் துரத்திக்கொண்டு அவர்களின் வயலுக்கு வந்த மகளின் முகத்தில் இருந்த புன்னகையைப் பார்த்த சுந்தரம் மனம் சந்தோசம் கொள்ள, “என்னம்மா உன்னோட தோழி வந்தும் அவ்வளவு சந்தோசமாக இருக்கிறாய்..?” என்று கேட்டதும் சிரித்தவளைப் பார்த்தவர்,
“இப்படியே இரும்மா.. எப்பொழுதும் சந்தோசமாக எதுவாக இருந்தாலும் அப்பா நான் பார்த்துக் கொள்கிறேன்..” என்று கூறியவர், மஞ்சுவை அவளின் கையில் கொடுக்க, அவளைத் தூக்கிக்கொண்டு வீட்டிற்கு வந்தனர் ஆஷாவும், எழில்விழியும்!
அவள் வீட்டிற்குள் நுழைத்தும் தான் அவளுக்கு ஜெயந்திம்மா கொடுத்துவிட்ட துணி ஞாபகம் வர, “ஆஷா நீ மஞ்சுவைக் கொஞ்சம் பார்த்துக் கொள் இதோ வருகிறேன்..” என்று கூறியவள் தென்னந்தோப்பில் தங்கள் வந்த வழியில் பையைத் தவற விட்டதைத் தேடி வந்தவள்,
அது எப்படியும் ஜெயந்திம்மா வீட்டில் இருக்கும் என்று அங்கே சென்று அதை வாங்கிக் கொண்டு விரைவாக வீட்டிற்கு வந்தாள்.. வீட்டிற்குள் வந்தும் ஒடிவந்து தண்ணீரைக் குடித்தவள்,
“ஸ்ஸ் இன்னைக்கு என்ன என்ன ஓட்டம் ஓடவைத்துவிட்டாய்..” என்று ஆஷாவின் அருகில் அமர்ந்தாள்..
அவளோ எழில் முகத்தைப் பார்த்துவிட்டு மஞ்சரிக்கு தட்டிக் கொடுக்க அவள் அவளின் மடியில் படுத்து உறங்கியதும் மஞ்சுவை கயிற்றுக்கட்டிலில் படுக்க வைத்த ஆஷா, எழில் அருகில் வந்தாள்..
அவளைப் பார்த்தும், “ஆஷா வா சாப்பிடலாம்..” என்று அழைக்க அவளோ மெளனமாக அவளின் கையைப் பிடித்து அவர்கள் வீட்டின் பின்னே இருந்த தோட்டத்திற்கு அழைத்துச் சென்றாள்..
அங்கே சென்று மாமரத்தின் அடியில் இருந்த கட்டிலில் அமர்ந்த இருவரின் மௌனம் கண்டு தென்றல் கூட அமைதியாக அவர்களை வருடிச் சென்றது அந்த மதியான வேளையில்...!
“எழில் நீ எப்படி இருக்கிறாய்..?” என்று மௌனத்தை முதலில் கலைத்தாள் ஆஷா..
அவளின் முகத்தை நிமிர்ந்து பார்த்த எழில், “எனக்கு என்ன ஆஷா..? மனதில் நினைப்பதை சொல்லாமலே வாங்கித் தர அப்பாவும், என்மேல் உயிரையே வைத்திருக்கும் அண்ணியும், அடுத்து மஞ்சு குட்டி என்று என்னோட வாழ்க்கை அப்படியே போகிறது..” என்று சிரித்தவள் எழில்விழி.. ஆஷாவிற்கு சொல்லாமல் சொல்லியது எழில்விழி படும் துன்பங்களை கூறியது அவளின் முகத்தில் இருந்த புன்னகை...!
அவளை தனது மடியில் படுக்க வைத்துக் கொண்ட ஆஷா, “உன்னோட சோகம் எனக்கு தெரியும் டா.. உன்னோட அந்த புன்னகை சொல்லிய சோகம் எனக்கு தெரியாத என்ன..?” என்று கேட்டவள்
அவளின் கூந்தலை வருடிக் கொடுக்க கண்கள் கலங்கிய எழில்விழி, “ஆஷா நீ போன பிறகு என்னோட வாழ்க்கையில் என்னென்னமோ நடந்துவிட்டது..” என்று கூறியவள்,
“அண்ணா எப்படிப்பட்டவன் என்பதை நான் முழுவதும் அறித்துக் கொண்டேன்.. அண்ணி ரொம்ப நல்லவங்க ஆஷா எனக்காக எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு அமைதியாக இருக்கிறாங்க..” என்று அவளிடம் நடந்தது அனைத்தையும் கூறியவள்,
அவளின் மடியில் படுத்து அழுக அவளைத் தாயாக மடிதாங்கினாள் ஆஷா.. அவளது கதறலை நிறுத்தாமல் தொடர அவளின் கதறல் பார்த்து அமைதியாக அமர்ந்திருந்தாள் ஆஷா..
இந்த கதறல் இரண்டு வருடம் இதயத்தில் அடக்கி வைத்திருந்தது.. மனதில் இருக்கும் சோகத்தை நமக்கு பிடித்தவர்களிடம் மட்டும் சொல்ல நினைக்கும் பொழுது அவர்கள் அதை நிராகரிக்கின்றனர்..
எல்லோரும் தனக்கு ஒரு தோழி இருந்தால் தனக்கு ஒரு தோழன் இருந்தால் என்று நினைப்பதை விடுத்து நானும் ஒரு தோழியே என்று மாறும் வேளையில் தான் அவள் அப்பா, அம்மா, இருவரையும் தாண்டிய ஒரு சொந்தமாக மாறுகிறாள்.. இது தான் தோழமை..
அந்த புரிதல் அனைவரிடமும் வராது.. நாம் யாரிடம் அதிகம் சண்டை போடுகிறோமோ அவர்கள் மீதும், ஒரு துக்கம் வந்த வேலை நமது மனம் முதலில் நினைப்பது தனது தோழன் அல்லது தோழியையே..!
ஏன் என்றால் அவளுக்கு தான் நம்மைப் பற்றி முழுவதும் தெரியும்.. காதலில் கூட சில இடத்தில் உண்மையை சொல்லாமல் மறக்க நினைக்கும் மனம், தோழமையில் என்று வந்தால் மனம் திறக்கவே நினைக்கும்..
அந்த புரிதல் தான் இவர்களைச் சேர்த்து வைத்திருக்கிறது.. இந்த இரண்டு வருடம் இருவர் வாழ்க்கையிலும் என்ன நடந்தது என்று இருவரும் அறியாமல் இருந்தாலும் கூட, தோழியின் சிரிப்பை வைத்தே அவளின் துக்கம் எத்தகையது என்று கண்டுகொள்ளும் தோழமை பலருக்கு கிடைப்பதில்லை..
அவள் கதறி முடித்தும், “எழில் இதெல்லாம் முதலில் அனுபவிக்கும் நீ ரொம்பவே லக்கி.. இதெல்லாம் பிறந்த வீட்டோடு முடிந்துவிடும் புகுந்த வீட்டில் உனக்கு சந்தோசம் என்ற சொர்க்க கதவுகள் திறக்க காத்திருக்கிறது..” என்று அவளிடம் சொல்லி அவளைத் தேற்றினாள் ஆஷா..
அவள் அப்படி கூறியதும் அவளின் மடியில் இருந்து எழுந்து, “புகுந்த வீடா..? எனக்கா..?” எழில்விழி முகத்தில் ஒரு கசப்பான புன்னகை தோன்றி மறந்தது..
“ஏன் எழில் தவறாக நினைக்கிறாய்.. உனக்கும் திருமணம் ஆகும்.. உனக்கும் ஒரு நல்ல குடும்பம் அமையும் அதுவரை காத்திரு..” என்று ஆஷா சொல்ல,
“என்னோட அண்ணி எவ்வளவு கனவுகளுடன் வந்திருப்பாங்க.. அவர்கள் நினைத்தா நடந்தது..?” என்று எதிர் கேள்வி கேட்டாள் எழில்விழி..
“உன்னோட வாழ்க்கையில் மற்றவரை வைத்து ஒப்பிடு பழகாதே.. அது கணக்கு வழக்குக்கு மட்டும் தான் சரிப்படும்.. நிஜ வாழ்க்கைக்கு எதுவும் சரிவராது.. உன்னோட எதிர்காலம் நல்ல படியாக அமையும் என்று நினைவில் வைத்துகொள் அது போதும்.. மற்றது தானாக நடக்கும்..” என்று கூறினாள் ஆஷா..
“ஆஷா உன்னிடம் ஒன்று கேட்கணும் என்று நினைத்தேன்.. என்னை இரண்டு வருடம் பார்க்காமல் இப்பொழுது எப்படி அடையாளம் கண்டுகொண்டாய்..?” என்று கேட்டாள் எழில்விழி..
“அது உன்னோட உனது விழிதான் எனக்கு உன்னை காட்டிக் கொடுத்தது..” என்று அவளின் கண்களைப் பார்த்துக் கூறியவள், “இந்த விழியில் தொலையப்போகும் அந்த அதிர்ஷ்டசாலி யார் என்று தான் தெரியவில்லை..” என்று குறும்பாகக் கூறினாள் ஆஷா..
அந்த கேலியில் முகம் சிவந்த எழில், “இப்பொழுது எங்கே இருக்கிறாய் ஆஷா..? அப்பா எப்படி இருக்கிறார்..?” என்று ஆஷாவிடம் கேட்டாள் எழில்விழி..
“சென்னையில் இருக்கிறோம் எழில்.. அப்பா ரொம்ப நல்ல இருக்கிறார்..” என்று கூறியவளின் முகம் பார்த்த எழில், “அடுத்து என்ன படிக்க போகிறாய்..?” என்று கேட்டதும், அவளைப் பார்த்து புன்னகை புரிந்தவள்,
“வக்கீலுக்கு படிக்கலாம் என்று இருக்கிறேன் எழில்..” என்று சொல்லவும் அவளின் மனத்திரையில் அன்புவின் முகம் மின்னி மறந்தது..
“எழில் நான் உன்னோட அண்ணியைப் பார்க்கலாமா..?” என்று கேட்பதற்கும் தனம் அவர்களை நோக்கி வரவும் சரியாக இருக்க,
“என்ன என்னோட பெயர் அடிபடுது..?” என்று கேட்ட தனத்தின் முகத்தைப் பார்த்த ஆஷா,
“அண்ணி..” என்று இடத்தை விட்டு எழுந்தவள் ஓடிவந்து தனத்தைக் கட்டிக் கொள்ள, “என்னம்மா..” என்று பாசமாகக் கேட்டார் தனம்..
அவரிடம் இருந்து விலகியவள், “எழில் அனைத்தையும் சொன்னாள்.. இவளுக்கு இன்னும் வெளி உலகம் தெரியாது.. இவளை இவ்வளவு கஷ்டத்திலும் பத்திரமாகப் பாதுகாக்கும் உங்களுக்கு ரொம்ப நன்றி..” என்று கூறியவளைப் பார்த்து,
“அவள் என்னோட மகள் ஆஷா.. என்ன கொஞ்சம் கொஞ்சம் வளர்ந்துவிட்டாள்.. அவளை நான் பார்த்துக் கொள்ள நீ எதுக்கு நன்றி என்று பெரிய வார்த்தை எல்லாம் சொல்கிறாய்..?” என்று கேட்டார்..
அவரின் முகத்தைப் பார்த்து, “நீங்க தப்ப நினைக்கவில்லை என்றால் நான் உங்களை அம்மா என்று கூப்பிடவா..?!” என்று கேட்டவளை இழுத்து தோளோடு அணைத்துக் கொண்டார் தனம்..
அவளின் தோழமையும் அவள் எழில்மேல் வைத்திருக்கும் பாசமும் கண்டு தனத்திற்கு மனம் நிறைந்து போனது.. “எனக்கு நீயும் மகள்தாண்டா..” என்று அவளின் உச்சியில் முத்தம் பதித்தவர்,
“இருவரும் வாங்க சாப்பிடலாம்..” என்று சொல்ல, “அம்மாவின் கைப்பக்குவம் சாப்பிட்டு வருடம் இரண்டு ஆகிறது..” என்று கூறியதில் மறுபடியும் எழில் மனதில் அன்புவின் முகம் மின்னி மறந்தது..
தோழிகள் இருவரும் சாப்பிட, தனம் அவர்களுக்கு பார்த்து பார்த்துப் பரிமாற வயிறார சாப்பிட்டவர்கள் முகம் பார்த்து தனத்தின் முகம் மலர்ந்தது..
அவர்கள் இருவரும் தங்களின் பள்ளி காலத்தைப் பற்றி பேசிகொண்டிருக்க அனைத்தும் எடுத்து வைத்த தனம், “ஆஷா நீ இங்கே இரும்மா ஊரில் திருவிழா முடிந்ததும் போகலாம்..” என்று தனம் சொல்ல,
“இல்லம்மா அப்பாவிடம் நாளை வருவதாக சொல்லி இருக்கிறேன்.. இங்கே என்னோட மாமா வீடு இருக்கு அவங்களைப் பார்க்க வருவதாக சொல்லிட்டு வந்தேன்.. அவங்க இன்னைக்கு ஊரில் இல்லமா.. அதுதான் இவளைப் பார்த்துவிட்டு அங்கே போகலாம் என்று இங்கேயே வந்துவிட்டேன்..” என்று கூறினாள் ஆஷா
அவளைப் பார்த்து சிரித்த தனம், “சரிம்மா நீ இங்கே இரு நான் வருகிறேன்..” என்று சொல்லிவிட்டு அவர்கள் வீடு நோக்கிச் சென்றாள்..
அவர்கள் வீட்டிற்கு அதிகம் தொலைவு இல்லை என்பதால் அடிக்கடி வந்து மஞ்சுவையும், எழிலையும் பார்த்து செல்வாள் தனம்..