- Joined
- Jan 17, 2018
- Messages
- 1,547
- Reaction score
- 7,648
அத்தியாயம் – 9
இதுவரை இப்படி ஒரு வேகத்தில், அவன் வண்டியை ஒட்டியது இல்லை. அந்த அளவிற்கு, அவன் தன் காரை வேகமாக ப்ரீத்தியின் வீட்டிற்க்கு செலுத்திக் கொண்டு இருந்தான்.
“அவ, அப்படி ஒரு காரியத்தை செஞ்சு இருக்க கூடாது, இப்போ. கடவுளே! தயவு செய்து என்னோட இந்த வேண்டுதலை நிறைவேற்றி வைங்க” என்று ஒரு வேண்டுதலுடன், அவளின் வீட்டை நெருங்கினான்.
வீட்டின் முன் பெரும் சத்தத்துடன் நின்றது, அவனின் கார். கதவை தட்டும் அவசியமின்றி, அவனின் கார் சத்தத்தில் கதவை திறந்தாள் ப்ரீத்தி.
அந்த நேரத்தில், அவனை எதிர்பார்க்காதளால் அவனை வரவேற்க கூட முடியாமல் திகைத்து நின்றாள். அவனோ, வந்த வேகத்தில் அவளை தள்ளிக் கொண்டு வீட்டினுள் நுழைந்து இருந்தான்.
மேஜையில், அவன் நினைத்தது போல் அவளின் ராஜினாமா கடிதம் இருக்கவும், கோபத்துடன் அவளை பார்த்து முறைத்தான்.
“என்னது இது? இதுக்கு தான் உங்க பாட்டி, உன்னை அவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு வளர்த்தாங்களா?”.
“ஆமா, உனக்கு இப்போ என்ன பிரச்சனை? தூக்க மாத்திரை உனக்கு எதுக்கு? என்னமோ குடியே முழுங்கி போன மாதிரி, உலகத்தை விட்டே போகணும்ன்னு ஏன் நினைச்ச?”.
“எனக்கு இப்போ பதில் வேணும், உண்மையை சொல்லு. அன்னைக்கு நான் இங்க வந்துட்டு போன பின்னாடி, உனக்கும் இந்த வீடியோ வந்து இருக்கும்ன்னு சந்தேகம் வந்தது”.
“அதனால, வீட்டுக்கு பின்னாடி காரை நிறுத்திட்டு, நான் பின் பக்க வழியா வந்து உன் ரூம்க்கு தான் போனேன். அங்க தான் நீ அப்போ யார் கிட்டையோ பேசிகிட்டு இருந்த, வேலையை ரிசைன் பண்ண போறதை பத்தி”.
“வேற இடத்துல வேலை கிடைச்சு இருக்கும்ன்னு, நான் ஒரு நிமிஷம் நினைச்சேன். ஆனா நீ அப்போ அழுதுகிட்டு திரும்பும் பொழுது தான், வேற ஏதோன்னு புரிஞ்சது”.
“அப்புறம் பேசலாம் நினைச்சேன், ஆனா அதுக்குள்ள என்ன என்னமோ நடந்திடுச்சு. இப்போ சொல்லு, என்ன பிரச்சனை உனக்கு?” என்று அழுத்தி கேட்டான் வருண்.
என்ன பதில் சொல்லுவாள்? உன்னை மறக்க, வேறு வழி இல்லை என்றா? அல்லது, அந்த வீடியோவில் கூறியது போல், இவனுக்காக நானே சஞ்சனாவை கொன்றேன் என்று என்னை மறந்து உன்னை காதலித்த விஷயம் கூறினால், நீ அப்படி சந்தேகம் கொள்வாயோ என்ற கோபம் வருமே என்றா?
எப்படி இருந்தாலும், அவள் அவனை காதலித்த விஷயம் அவனுக்கு தெரியவே கூடாது என்று ஸ்திரமாக எண்ணினாள்.
“இங்க பாருங்க, சஞ்சனா என் பெஸ்ட் friend. உங்களுக்கே தெரியும், அவளுக்காக தான் நான் இதை எல்லாம் செய்தேன்னு. இப்போ நான் எடுத்து இருக்கிற முடிவு, என் சம்மந்தப்பட்டது, ப்ளீஸ் இதுல நீங்க வராதீங்க” என்று கூறிவிட்டு அறையினுள் திரும்ப போனவளை, கையை பிடித்து இழுத்தான்.
அவன் இழுத்த இழுப்பிற்க்கு, அவள் அவன் மேல் மோதி நின்றாள். முறைத்து பார்த்தவள் முன்பு, அவன் கையில் உள்ள டைரி அவளை திகைக்க வைத்தது.
“இது எப்படி உங்க கையில், அது என்னோடது” என்று அதை அவனிடம் இருந்து, கிட்டத்தட்ட பிடுங்க முயன்றாள்.
“எப்போ என் கைக்கு கிடைச்சதோ, அப்போவே இது என்னோடது ஆகிடுச்சு” என்று கூறி அவளிடம் இருந்து நகர்ந்து வந்து, சோபாவில் அமர்ந்து, படிக்க தொடங்கினான்.
“பார்க்க ஹீரோ மாதிரியே இருக்காங்க, அந்த அண்ணா” என்று பக்கத்தின் முதல் எழுத்தை வாசித்த பொழுது, அவனுக்கு சிரிப்பு வந்தது என்றால், அவளுக்கு கடுப்பாக இருந்தது.
“இப்போ கொடுக்க போறீங்களா, இல்லையா?” என்று அவனிடம் எகிறிக் கொண்டு இருந்தாள் ப்ரீத்தி.
“அந்த அண்ணா கிட்ட பேச, எனக்கு அவ்வளவு ஆசையா இருக்கு. ஆனா எப்படி பேச? என்ன பேச? பயமா இருக்கே!” என்று படித்தவுடன் குபீர் சிரிப்பு அவனுக்கு.
“பயமா! உனக்கா! ஹா ஹா! உன்னை பார்த்த முதல் நாள் ல இருந்து, நீ என்னை ஆட்டி வச்சுக்கிட்டு தான் இருக்க. உனக்கு பயம் என்னை பார்த்து சொன்னா, செம காமெடியா இருக்கு” என்று சிரித்தான்.
“அப்போ உள்ள நிலைமை அது, இப்போ தாங்க என் கிட்ட” என்றாள்.
“திரும்ப அந்த அண்ணாவை, இரண்டு வருஷம் கழிச்சு பார்த்தேன். அப்போ விட இன்னும் சூப்பரா இருந்தாங்க, பேச தோனுச்சு. உடனே, கூட்டத்தோட கூட்டமா போனேன் அவங்க கிட்ட பேச”.
“பாஸ்கட் பால் வின் பண்ணினதுக்கு, வாழ்த்துக்கள் சொன்னேன். சிரிச்சிகிட்டே தேங்க்ஸ் சொன்னாங்க, சொல்லிட்டு என் பாப் கட்டிங் பார்த்து நல்லா இருக்கு சொன்னாங்க” என்று அவன் வாசித்துக் கொண்டே, டைரி அவள் கைக்கு சிக்காமல் பார்த்துக் கொண்டான்.
“ஒ! அதான் அந்த போட்டோ பார்த்த உடனே, எனக்கு எங்கேயோ பார்த்த பீல் வந்ததா. ஆமா, இப்போ ஏன் முடி இவ்வளவு பெருசா வளர்த்து வச்சு இருக்க, அப்படியே பாப் கட்டிங்கே வச்சு இருக்கலாமே” என்றவனை பார்த்து இப்பொழுது அடிக்கலாமா என்று யோசித்தாள்.
“ஒழுங்கு மரியாதையா, டைரியை கொடுத்துடு டா எருமை. இல்லைனா, அடிக்க வந்திடுவேன் பார்த்துக்கோ” என்று மரியாதையை கைவிட்டு மிரட்ட தொடங்கினாள்.
“இப்போ எல்லாம், அந்த அண்ணா என் கனவுல அடிக்கடி வராங்க ஏன்னு தெரியல, ஆனா பிடிச்சு இருக்கு எனக்கு” என்று அவன் வாசித்த பின், இதற்கு மேல் படித்தால் ஆபத்து என்று உணர்ந்தவளாக, அவளுக்கு போக்கு காட்டிக் கொண்டு இருந்தவனை பிடிக்க ஓடினாள்.
அவளிடம் இருந்து தப்பிக்க, அவன் ஒரு பக்கம் ஓட, இவள் ஒரு பக்கம் ஓட என்று ஓடிக் கொண்டு இருந்தவர்கள், ஒரு கட்டத்தில் இருவரும் மோதிக் கொண்டு மூச்சு வாங்க சோபாவில் விழுந்தனர்.
அவனின் மேல் இருந்த ப்ரீத்தி, அவனிடம் இருந்து விலக நினைக்கையில் அவன் அவளை விலக விடாமல் பிடித்து இருந்தான்.
“டைரி ல படிக்கிறதை விட, நீயா சொன்னா நல்லது. ப்ளீஸ் சொல்லு, நான் தெரிஞ்சிக்க விரும்புறேன்” என்றான் அவள் கண்களை பார்த்து.
அவன் அப்படி கேட்ட பிறகு, அவளுக்கு முதல் முதலில் அவனை பார்த்த நாள் நினைவுக்கு வந்தது.
ஒன்பதாம் வகுப்பு முடிந்து, பத்தாம் வகுப்பு ஸ்பெஷல் கிளாஸ் ஆரம்பித்தது. அன்று காலை, ஸ்பெஷல் கிளாஸ்காக அவள் சீக்கிரம் பள்ளிக்கு வந்துவிட்டாள். அங்கு இவளுக்கு முன்பு, இவளது வகுப்பு தோழிகள் சிலர் வந்து இருந்தனர்.
எப்பொழுதும், பார்த்தால் ஒரு ஹாய் சொல்லிவிடும் அவர்கள் இன்று அது ஏதும் சொல்லாமல், அவர்கள் பார்வையை வகுப்பு ஜன்னலுக்கு வெளியே பதித்து எதையோ மும்முரமாக பார்த்துக் கொண்டு இருந்தனர்.
அப்படி என்ன மும்முரமாக பார்க்கின்றனர் என்று, இவள் அந்த ஜன்னல் வழியே எட்டி பார்த்தாள். அங்கே கல்லூரி மாணவர்கள் சிலர், கூடை பந்து பயிற்சி எடுத்துக் கொண்டு இருந்தனர்.
அதுவும் அங்கு இருப்பவர்கள் பார்க்க, நாங்கள் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்று சொல்லியது அவர்களின் தோற்றம். அதில் சற்று உயரமாக, வாட்டசாட்டமாக நம்மூர் பையன் போல் இருந்த வருண் தான் அவளுக்கு ஹீரோ போல் தெரிந்தான்.
வகுப்பு ஆரம்பிக்க கிளாஸ் டீச்சர் உள்ளே நுழைந்த பிறகு தான், அந்த ஜன்னல் கம்பிகளுக்கு விடுதலை கொடுத்து உள்ளே அவர்கள் இடத்தில் வந்து அமர்ந்தனர் எல்லோரும்.
வகுப்பு ஆரம்பித்தும், அவள் கண்கள் ஏனோ அன்று ஜன்னல் பக்கம் அடிக்கடி சென்று மீன்டது. அந்த பத்து நாட்கள் ஸ்பெஷல் கிளாஸ் இருக்கும் நாட்களில், அவள் சீக்கிரம் பள்ளிக்கு வந்து, ஜன்னல் வழியே அவனை வேடிக்கை பார்ப்பதை வழக்கமாக வைத்து இருந்தாள்.
அதன் பிறகு பாடம், அவளை இழுத்துக் கொள்ளவும், சற்று அவனை மறந்து போனாள். அதன் பிறகு மீண்டும் அவனை, அவள் பன்னிரெண்டாம் வகுப்பு முடிந்து அந்த லீவில் பாட்டியுடன் ஊரில் உள்ள ஒரு கல்லூரி அருகே, சிறிய பூ கடை போட்டு இருக்கும் பொழுது தான் அவனை சந்தித்தாள்.
அந்த கல்லூரியில், கூடை பந்து போட்டி ஒன்றிற்காக அவன் வந்து இருந்தான் அப்பொழுது. அவள் பாட்டியுடன் சேர்ந்து, பூ கடையை கவனித்துக் கொண்டு இருந்தவள், அப்பொழுது ஒரு பெண்மணி பாட்டியிடம் தனியாக பேச வேண்டும் என்று வந்தார்.
“நீ கொஞ்ச நேரம், அந்த காலேஜ்குள்ள இரு. அப்புறம் ஒரு அரை மணி நேரம் கழிச்சு வா, சரியா” என்று அவளை அங்கு அனுப்பி வைத்தார்.
கல்லூரிக்குள் நுழைந்தவுடன், சத்தம் வந்த திசையை நோக்கி சென்றாள் முதலில்.
அங்கே சென்றவள், பெண்கள் அதிகம் இருக்குமிடம் நோக்கி சென்று அங்கே நின்று கொண்டு, அந்த விளையாட்டை காண தொடங்கினாள்.
விளையாட்டில் கவனம் வைக்காமல், பார்வை முழுவதும் அப்பொழுது அவன் மீது மட்டுமே வைத்து இருந்தாள்.
“அப்போ விட இன்னும் கொஞ்சம் அழகாகிட்டாங்களே, அந்த அண்ணா” என்று வியந்து பார்த்துக் கொண்டு இருந்தாள் ப்ரீத்தி.
போட்டியில் அவர்கள் அணி வெற்றி பெறவும், இவள் அவனிடம் வாழ்த்து கூற எண்ணினாள். ஆனால் மனதிலோ சிறு பயம் வேறு, எப்படி வாழ்த்து தெரிவிக்க என்று அவள் எண்ணி இருந்த நேரம், அவனை சுற்றி பெண்கள் கூட்டம் கூட தொடங்கியது.
கூட்டத்தோடு, கூட்டமாக சென்று வாழ்த்து தெரிவித்து வரலாம் என்று அவள் அவனை நெருங்கினாள்.
“வாழ்த்துக்கள் அண்ணா” என்று இவள் தெரிவிக்க அவன் தேங்க்ஸ் என்றான்.
இதுவரை இப்படி ஒரு வேகத்தில், அவன் வண்டியை ஒட்டியது இல்லை. அந்த அளவிற்கு, அவன் தன் காரை வேகமாக ப்ரீத்தியின் வீட்டிற்க்கு செலுத்திக் கொண்டு இருந்தான்.
“அவ, அப்படி ஒரு காரியத்தை செஞ்சு இருக்க கூடாது, இப்போ. கடவுளே! தயவு செய்து என்னோட இந்த வேண்டுதலை நிறைவேற்றி வைங்க” என்று ஒரு வேண்டுதலுடன், அவளின் வீட்டை நெருங்கினான்.
வீட்டின் முன் பெரும் சத்தத்துடன் நின்றது, அவனின் கார். கதவை தட்டும் அவசியமின்றி, அவனின் கார் சத்தத்தில் கதவை திறந்தாள் ப்ரீத்தி.
அந்த நேரத்தில், அவனை எதிர்பார்க்காதளால் அவனை வரவேற்க கூட முடியாமல் திகைத்து நின்றாள். அவனோ, வந்த வேகத்தில் அவளை தள்ளிக் கொண்டு வீட்டினுள் நுழைந்து இருந்தான்.
மேஜையில், அவன் நினைத்தது போல் அவளின் ராஜினாமா கடிதம் இருக்கவும், கோபத்துடன் அவளை பார்த்து முறைத்தான்.
“என்னது இது? இதுக்கு தான் உங்க பாட்டி, உன்னை அவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு வளர்த்தாங்களா?”.
“ஆமா, உனக்கு இப்போ என்ன பிரச்சனை? தூக்க மாத்திரை உனக்கு எதுக்கு? என்னமோ குடியே முழுங்கி போன மாதிரி, உலகத்தை விட்டே போகணும்ன்னு ஏன் நினைச்ச?”.
“எனக்கு இப்போ பதில் வேணும், உண்மையை சொல்லு. அன்னைக்கு நான் இங்க வந்துட்டு போன பின்னாடி, உனக்கும் இந்த வீடியோ வந்து இருக்கும்ன்னு சந்தேகம் வந்தது”.
“அதனால, வீட்டுக்கு பின்னாடி காரை நிறுத்திட்டு, நான் பின் பக்க வழியா வந்து உன் ரூம்க்கு தான் போனேன். அங்க தான் நீ அப்போ யார் கிட்டையோ பேசிகிட்டு இருந்த, வேலையை ரிசைன் பண்ண போறதை பத்தி”.
“வேற இடத்துல வேலை கிடைச்சு இருக்கும்ன்னு, நான் ஒரு நிமிஷம் நினைச்சேன். ஆனா நீ அப்போ அழுதுகிட்டு திரும்பும் பொழுது தான், வேற ஏதோன்னு புரிஞ்சது”.
“அப்புறம் பேசலாம் நினைச்சேன், ஆனா அதுக்குள்ள என்ன என்னமோ நடந்திடுச்சு. இப்போ சொல்லு, என்ன பிரச்சனை உனக்கு?” என்று அழுத்தி கேட்டான் வருண்.
என்ன பதில் சொல்லுவாள்? உன்னை மறக்க, வேறு வழி இல்லை என்றா? அல்லது, அந்த வீடியோவில் கூறியது போல், இவனுக்காக நானே சஞ்சனாவை கொன்றேன் என்று என்னை மறந்து உன்னை காதலித்த விஷயம் கூறினால், நீ அப்படி சந்தேகம் கொள்வாயோ என்ற கோபம் வருமே என்றா?
எப்படி இருந்தாலும், அவள் அவனை காதலித்த விஷயம் அவனுக்கு தெரியவே கூடாது என்று ஸ்திரமாக எண்ணினாள்.
“இங்க பாருங்க, சஞ்சனா என் பெஸ்ட் friend. உங்களுக்கே தெரியும், அவளுக்காக தான் நான் இதை எல்லாம் செய்தேன்னு. இப்போ நான் எடுத்து இருக்கிற முடிவு, என் சம்மந்தப்பட்டது, ப்ளீஸ் இதுல நீங்க வராதீங்க” என்று கூறிவிட்டு அறையினுள் திரும்ப போனவளை, கையை பிடித்து இழுத்தான்.
அவன் இழுத்த இழுப்பிற்க்கு, அவள் அவன் மேல் மோதி நின்றாள். முறைத்து பார்த்தவள் முன்பு, அவன் கையில் உள்ள டைரி அவளை திகைக்க வைத்தது.
“இது எப்படி உங்க கையில், அது என்னோடது” என்று அதை அவனிடம் இருந்து, கிட்டத்தட்ட பிடுங்க முயன்றாள்.
“எப்போ என் கைக்கு கிடைச்சதோ, அப்போவே இது என்னோடது ஆகிடுச்சு” என்று கூறி அவளிடம் இருந்து நகர்ந்து வந்து, சோபாவில் அமர்ந்து, படிக்க தொடங்கினான்.
“பார்க்க ஹீரோ மாதிரியே இருக்காங்க, அந்த அண்ணா” என்று பக்கத்தின் முதல் எழுத்தை வாசித்த பொழுது, அவனுக்கு சிரிப்பு வந்தது என்றால், அவளுக்கு கடுப்பாக இருந்தது.
“இப்போ கொடுக்க போறீங்களா, இல்லையா?” என்று அவனிடம் எகிறிக் கொண்டு இருந்தாள் ப்ரீத்தி.
“அந்த அண்ணா கிட்ட பேச, எனக்கு அவ்வளவு ஆசையா இருக்கு. ஆனா எப்படி பேச? என்ன பேச? பயமா இருக்கே!” என்று படித்தவுடன் குபீர் சிரிப்பு அவனுக்கு.
“பயமா! உனக்கா! ஹா ஹா! உன்னை பார்த்த முதல் நாள் ல இருந்து, நீ என்னை ஆட்டி வச்சுக்கிட்டு தான் இருக்க. உனக்கு பயம் என்னை பார்த்து சொன்னா, செம காமெடியா இருக்கு” என்று சிரித்தான்.
“அப்போ உள்ள நிலைமை அது, இப்போ தாங்க என் கிட்ட” என்றாள்.
“திரும்ப அந்த அண்ணாவை, இரண்டு வருஷம் கழிச்சு பார்த்தேன். அப்போ விட இன்னும் சூப்பரா இருந்தாங்க, பேச தோனுச்சு. உடனே, கூட்டத்தோட கூட்டமா போனேன் அவங்க கிட்ட பேச”.
“பாஸ்கட் பால் வின் பண்ணினதுக்கு, வாழ்த்துக்கள் சொன்னேன். சிரிச்சிகிட்டே தேங்க்ஸ் சொன்னாங்க, சொல்லிட்டு என் பாப் கட்டிங் பார்த்து நல்லா இருக்கு சொன்னாங்க” என்று அவன் வாசித்துக் கொண்டே, டைரி அவள் கைக்கு சிக்காமல் பார்த்துக் கொண்டான்.
“ஒ! அதான் அந்த போட்டோ பார்த்த உடனே, எனக்கு எங்கேயோ பார்த்த பீல் வந்ததா. ஆமா, இப்போ ஏன் முடி இவ்வளவு பெருசா வளர்த்து வச்சு இருக்க, அப்படியே பாப் கட்டிங்கே வச்சு இருக்கலாமே” என்றவனை பார்த்து இப்பொழுது அடிக்கலாமா என்று யோசித்தாள்.
“ஒழுங்கு மரியாதையா, டைரியை கொடுத்துடு டா எருமை. இல்லைனா, அடிக்க வந்திடுவேன் பார்த்துக்கோ” என்று மரியாதையை கைவிட்டு மிரட்ட தொடங்கினாள்.
“இப்போ எல்லாம், அந்த அண்ணா என் கனவுல அடிக்கடி வராங்க ஏன்னு தெரியல, ஆனா பிடிச்சு இருக்கு எனக்கு” என்று அவன் வாசித்த பின், இதற்கு மேல் படித்தால் ஆபத்து என்று உணர்ந்தவளாக, அவளுக்கு போக்கு காட்டிக் கொண்டு இருந்தவனை பிடிக்க ஓடினாள்.
அவளிடம் இருந்து தப்பிக்க, அவன் ஒரு பக்கம் ஓட, இவள் ஒரு பக்கம் ஓட என்று ஓடிக் கொண்டு இருந்தவர்கள், ஒரு கட்டத்தில் இருவரும் மோதிக் கொண்டு மூச்சு வாங்க சோபாவில் விழுந்தனர்.
அவனின் மேல் இருந்த ப்ரீத்தி, அவனிடம் இருந்து விலக நினைக்கையில் அவன் அவளை விலக விடாமல் பிடித்து இருந்தான்.
“டைரி ல படிக்கிறதை விட, நீயா சொன்னா நல்லது. ப்ளீஸ் சொல்லு, நான் தெரிஞ்சிக்க விரும்புறேன்” என்றான் அவள் கண்களை பார்த்து.
அவன் அப்படி கேட்ட பிறகு, அவளுக்கு முதல் முதலில் அவனை பார்த்த நாள் நினைவுக்கு வந்தது.
ஒன்பதாம் வகுப்பு முடிந்து, பத்தாம் வகுப்பு ஸ்பெஷல் கிளாஸ் ஆரம்பித்தது. அன்று காலை, ஸ்பெஷல் கிளாஸ்காக அவள் சீக்கிரம் பள்ளிக்கு வந்துவிட்டாள். அங்கு இவளுக்கு முன்பு, இவளது வகுப்பு தோழிகள் சிலர் வந்து இருந்தனர்.
எப்பொழுதும், பார்த்தால் ஒரு ஹாய் சொல்லிவிடும் அவர்கள் இன்று அது ஏதும் சொல்லாமல், அவர்கள் பார்வையை வகுப்பு ஜன்னலுக்கு வெளியே பதித்து எதையோ மும்முரமாக பார்த்துக் கொண்டு இருந்தனர்.
அப்படி என்ன மும்முரமாக பார்க்கின்றனர் என்று, இவள் அந்த ஜன்னல் வழியே எட்டி பார்த்தாள். அங்கே கல்லூரி மாணவர்கள் சிலர், கூடை பந்து பயிற்சி எடுத்துக் கொண்டு இருந்தனர்.
அதுவும் அங்கு இருப்பவர்கள் பார்க்க, நாங்கள் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்று சொல்லியது அவர்களின் தோற்றம். அதில் சற்று உயரமாக, வாட்டசாட்டமாக நம்மூர் பையன் போல் இருந்த வருண் தான் அவளுக்கு ஹீரோ போல் தெரிந்தான்.
வகுப்பு ஆரம்பிக்க கிளாஸ் டீச்சர் உள்ளே நுழைந்த பிறகு தான், அந்த ஜன்னல் கம்பிகளுக்கு விடுதலை கொடுத்து உள்ளே அவர்கள் இடத்தில் வந்து அமர்ந்தனர் எல்லோரும்.
வகுப்பு ஆரம்பித்தும், அவள் கண்கள் ஏனோ அன்று ஜன்னல் பக்கம் அடிக்கடி சென்று மீன்டது. அந்த பத்து நாட்கள் ஸ்பெஷல் கிளாஸ் இருக்கும் நாட்களில், அவள் சீக்கிரம் பள்ளிக்கு வந்து, ஜன்னல் வழியே அவனை வேடிக்கை பார்ப்பதை வழக்கமாக வைத்து இருந்தாள்.
அதன் பிறகு பாடம், அவளை இழுத்துக் கொள்ளவும், சற்று அவனை மறந்து போனாள். அதன் பிறகு மீண்டும் அவனை, அவள் பன்னிரெண்டாம் வகுப்பு முடிந்து அந்த லீவில் பாட்டியுடன் ஊரில் உள்ள ஒரு கல்லூரி அருகே, சிறிய பூ கடை போட்டு இருக்கும் பொழுது தான் அவனை சந்தித்தாள்.
அந்த கல்லூரியில், கூடை பந்து போட்டி ஒன்றிற்காக அவன் வந்து இருந்தான் அப்பொழுது. அவள் பாட்டியுடன் சேர்ந்து, பூ கடையை கவனித்துக் கொண்டு இருந்தவள், அப்பொழுது ஒரு பெண்மணி பாட்டியிடம் தனியாக பேச வேண்டும் என்று வந்தார்.
“நீ கொஞ்ச நேரம், அந்த காலேஜ்குள்ள இரு. அப்புறம் ஒரு அரை மணி நேரம் கழிச்சு வா, சரியா” என்று அவளை அங்கு அனுப்பி வைத்தார்.
கல்லூரிக்குள் நுழைந்தவுடன், சத்தம் வந்த திசையை நோக்கி சென்றாள் முதலில்.
அங்கே சென்றவள், பெண்கள் அதிகம் இருக்குமிடம் நோக்கி சென்று அங்கே நின்று கொண்டு, அந்த விளையாட்டை காண தொடங்கினாள்.
விளையாட்டில் கவனம் வைக்காமல், பார்வை முழுவதும் அப்பொழுது அவன் மீது மட்டுமே வைத்து இருந்தாள்.
“அப்போ விட இன்னும் கொஞ்சம் அழகாகிட்டாங்களே, அந்த அண்ணா” என்று வியந்து பார்த்துக் கொண்டு இருந்தாள் ப்ரீத்தி.
போட்டியில் அவர்கள் அணி வெற்றி பெறவும், இவள் அவனிடம் வாழ்த்து கூற எண்ணினாள். ஆனால் மனதிலோ சிறு பயம் வேறு, எப்படி வாழ்த்து தெரிவிக்க என்று அவள் எண்ணி இருந்த நேரம், அவனை சுற்றி பெண்கள் கூட்டம் கூட தொடங்கியது.
கூட்டத்தோடு, கூட்டமாக சென்று வாழ்த்து தெரிவித்து வரலாம் என்று அவள் அவனை நெருங்கினாள்.
“வாழ்த்துக்கள் அண்ணா” என்று இவள் தெரிவிக்க அவன் தேங்க்ஸ் என்றான்.