lakshmi2407
அமைச்சர்
"ஒளச்", என்றவாறே நெட்டி முறித்த ஷானு-வ பார்த்திருந்தான், கணேஷ்..
"என்ன ஆச்சு ?"
"லைட்-ஆ முதுகு வலி, கார்ல உடம்பை குறுக்கி உட்கார்ந்து இருந்தேன்-ல்ல, அதான்.."
"ஆமா .., இந்த forensic டெக்னிக், டீடெயில்ஸ் -ல்லாம் எங்க தெரிஞ்சுக்கிட்ட?
"அடப்போங்க சார்.. எந்த காலத்துல இருக்கீங்க.. இப்போல்லாம் கூகிளாசார்யா கிட்ட கேட்டா பாயாசத்துல இருந்து பாம் வைக்கிற வரை சொல்லி குடுக்கும்.. இதெல்லாம் ஒரு மேட்டரா?", பதிலுரைத்தாள்...
"ஓகே அக்ரீட், வா.. எனக்கு பசிக்குது... சாப்டுட்டே பேசலாம்"
"சாரி பாஸ்... வேலை இருந்தா சாப்பாடு மறந்து போகும் எனக்கு...".
ஹோட்டல் பார்க்கிங் - ல் நிறுத்தி காரிலிருந்து இறங்கியவாறே, "நானுமே அப்படித்தான்... என்ன ஒன்னு .... எனக்கு 2 மணிக்கு ஒரு முறை பசிக்கும். எதையாவது வயித்துல தள்ளனும்... இல்லன்னா... சுத்தி இருக்கறவங்கள சாப்பிட ஆரம்பிச்சுடுவேன்..", என்று நிறுத்தியவன் ... அவள் திகைத்த முகம் கண்டு.., முறுவலித்த வாறே.., "நமக்கு முக்கியம் சோறு டாட்...," காரிலிருந்து இறங்கி அவளிடத்தில் நெருங்கி இருந்தான்...அது ஒரு பேஸ்மெண்ட் வளாகம், அரையிருளும், சிறு வெளிச்சமும், தனிமையும் போட்டி போட, விலக மனமில்லாமல், "யூ ஆர் வெரி பிரில்லியண்ட்... ஐ லவ் யு சோ மச்", என்று கூறி கன்னத்தில் ஒரு முத்திரை பதித்து..."என்னால ரொம்ப நாள் காத்திட்டு இருக்க முடியும்-னு தோணலை.... உங்க வீட்ல நம்ம விஷயத்தை சொல்லி கல்யாணத்துக்கு பர்மிஷன் வாங்கிடு.."என்றான்.. தலையை உருட்டிய ஷண்மதிக்கு இன்னும் மயக்கம் தெளியவில்லை... அவன் முகம் பார்க்க வெட்கி, தலை குனிந்திருந்தாள்.
"ஹேய் , வெக்கப்படறியே ?, தெரியாதோ-ன்னு நினச்சேன்....:,", பேசி இலகுவாக்கினான்...
"ஏன் அப்படி ?", சற்றே தெளிந்து கேட்டாள் ..
"ம்ம்ம்.. ரொம்ப அறிவு வாளியா இருக்கியா? வெக்கமெல்லாம் மூட்டை கட்டி போட்டுடியோ-ன்னு..", ஒரு முறைப்பை பதிலாய் பெற்று நிறுத்தினான்...
ஹோட்டல் உள்ளே நுழைந்து , தனியாய் ஓரமாய் இருந்த டேபிளை அணுகி... மெனு புக்-கை அவளிடம் கொடுத்து, :எனக்கும் சேர்த்து பண்ணிடு ", என்றான்...
அவ்வாறே செய்து முடிக்க , ஷானு-வின் போன் அழைக்க, "அம்மா ...", சொல்லி, ஆன் செய்தாள்.
"சொல்லும்மா.."
"ஷானுமா... எப்படி கண்ணா இருக்க?"
"நல்லா இருக்கேன், சொல்லு.. விஷயமில்லாம கூப்பிட மாட்டியே?"
"ஆமாடா கண்ணா... இங்க அப்பாக்கு கொஞ்சம் முடியல... இப்போ ஹாஸ்பிடல்ல இருக்கோம்.."
"என்னாச்சு ? நா உடனே கிளம்பி வர்றேன்....",
"எப்போவும் வர்றதுதான் .. ஹை பி பி .... திடீர்னு தல சுத்தி விழுந்திட்டாரு....முடிஞ்சா ஒரு எட்டு.. வாடா..., ஆனா நீ ஜாக்கிரதை மா , ", என்றார் அம்மாக்களுக்கே உண்டான வாத்சல்யத்துடன்.
போனை வைத்துவிட்டு, "கணேஷ் .. இன்னிக்கு நான் ஊருக்கு போறேன், ஒரு ரெண்டு மூணு நாள் அங்க ஸ்டே பண்ணிட்டு வர்றேன்..., அப்பாக்கு உடம்பு சரியில்லை.. என்னான்னு இருந்து பாத்துட்டு வர்றேன்"..
"ஓகே.. நோ டென்ஷன்.. ஒன்னுமாகாது... ", என்றவன் தொடர்ந்து, "போறது போற... நம்ம விஷயமும் சொல்லிடேன்", சிறிது தயக்கமுடன் கேட்ட கணேஷை, முறுவலுடன் பார்த்து, "டன் ", என்றாள்.
**************************
சொன்னவாறே ஷானுவை ஊருக்கு அனுப்பி, இன்றோடு மூன்று நாட்கள் ஆகி இருந்தது... மணிவேல் வழக்கில் எந்த முன்னேற்றமும் பெரிதாய் இல்லை... பூபேஷ் மரணம் விபத்தல்ல, மயக்கமருந்தினை ஏ சி யின் வழியாய் உள்ளே செலுத்தி இருப்பது தெரிந்து, கொலை என முடிவானது... கணேஷ் அவரின் மெயில்-களை துருவியதில் நவ. 7 தேதிக்கு, ஒரு தனி விமானம், அமைச்சரின் பெயரில் புக் செய்யப் பட்டு இருந்தது.. அபுதாபி வரை சென்று வருவதாய் அதில் விவரங்கள் இருந்தது... எத்தனை முறை கேட்டும் அவ்வாறு முன்பதிவு செய்திருப்பதே தனக்கு தெரியாது என்றார் விநாயக மூர்த்தி.... அவர் கண்கள் உண்மை கூறியது..
ஏனெனில், அவர் தளர்ந்திருந்தார். பூபேஷின் இறப்பு அவர் எதிர்பாராதது... பூபேஷின் இறுதி காரியங்களை செய்வதற்காக ஜாமீன் கேட்க, அரசு அவரை எந்நேரமும் கண்காணிப்புடன் வீட்டுக் காவலில் வைத்தது.
அமைச்சர் வீடு எரிந்தது, அவரது தம்பி மகனான[ ? ] பூபேஷின் மரணம், இறுதி சடங்கு இவையே பிரதான செய்தியாய் இருக்க.... பலரும் அவரவர் இரங்கல்களை ஜாமீனில் வெளிச்சென்றிருந்த அமைச்சருக்கு[வி. மூர்த்தி] கூறிக் கொண்டு இருந்தனர்... ஒருவன்[பெயர் சந்திரகுமார், பூபேஷின் பார்ட்னர்-என கீழே போட்டிருந்தது] ஆறுதலாய் தழுவி, "பூபேஷ்க்கு இந்த வயசுல இப்படி ஆகும்னு நினைக்கலையே மூர்த்திப்பா, உங்களுக்கு யாரும் இல்லன்னு நினைக்காதீங்க.. நான் இருக்கேன், உங்க புள்ளையா நான் இருப்பேன், கவலைப் படாதீங்க...", என்று மேலும் பல இரங்கல் வசனங்கள்.. உஷ்..... பார்த்துக்கொண்டிருந்த கணேஷ் , பெருமூச்சுடன்...இப்போதைக்கு DCP-யை பார்க்க செல்லலாம், என்ற முடிவுடன், அவரை தொலைபேசியில் அழைத்தான்....
"என்ன சார், மொத்தமா ஆபீஸ்லதான் குடி இருக்கீங்களா?", என்றான் கொஞ்சமாய் சிரிப்புடன்...
" ஓ .. கணேஷா ?, எஸ் எஸ்.. இது ஆளும் கட்சி மேட்டர்-ல்ல... . மேலிடத்துலேர்ந்து ப்ரெஷர்...
கேசைக் கூட ஈஸியா ஹாண்டில் பண்ணிடலாம்.. ஆனா இந்த அரசியல்வாதிங்க தொல்லை இருக்கே?, அரை மணிக்கு ஒரு கால்...எங்கயாவது காவி கட்டி ஓடிலாமான்னு இருக்கு..",
வாய் விட்டு சிரித்து , "அண்ணி தாளிக்கறாங்களோ?"
"அதெல்லாம் எப்பவும் உள்ளது தான்" என்றார் அவரும் சிரித்தவாறே... தொடர்ந்து "UV ரிப்போர்ட் இன்னும் ரெண்டு மணி நேரத்துல வரும் . free -யா இருந்தா வா..."
"எஸ் சார், மதியம் வர்றேன்", பேசி முடித்தவன், அலுவலகம் சென்றான்... இரண்டு மூன்று நாட்களாக குறைவான நேரமே அலுவலகத்தில் இருந்ததால்.. பல வேலைகள் அணிவகுத்து நிற்க... அவற்றுள் மூழ்கினான்... முழுதாய் இரண்டு மணித்துளிகளை தொலைத்த பின் .. அவன் அறையில் இருந்த டீ.வி.-யை உயிர்ப்பித்தான்...
"என்ன ஆச்சு ?"
"லைட்-ஆ முதுகு வலி, கார்ல உடம்பை குறுக்கி உட்கார்ந்து இருந்தேன்-ல்ல, அதான்.."
"ஆமா .., இந்த forensic டெக்னிக், டீடெயில்ஸ் -ல்லாம் எங்க தெரிஞ்சுக்கிட்ட?
"அடப்போங்க சார்.. எந்த காலத்துல இருக்கீங்க.. இப்போல்லாம் கூகிளாசார்யா கிட்ட கேட்டா பாயாசத்துல இருந்து பாம் வைக்கிற வரை சொல்லி குடுக்கும்.. இதெல்லாம் ஒரு மேட்டரா?", பதிலுரைத்தாள்...
"ஓகே அக்ரீட், வா.. எனக்கு பசிக்குது... சாப்டுட்டே பேசலாம்"
"சாரி பாஸ்... வேலை இருந்தா சாப்பாடு மறந்து போகும் எனக்கு...".
ஹோட்டல் பார்க்கிங் - ல் நிறுத்தி காரிலிருந்து இறங்கியவாறே, "நானுமே அப்படித்தான்... என்ன ஒன்னு .... எனக்கு 2 மணிக்கு ஒரு முறை பசிக்கும். எதையாவது வயித்துல தள்ளனும்... இல்லன்னா... சுத்தி இருக்கறவங்கள சாப்பிட ஆரம்பிச்சுடுவேன்..", என்று நிறுத்தியவன் ... அவள் திகைத்த முகம் கண்டு.., முறுவலித்த வாறே.., "நமக்கு முக்கியம் சோறு டாட்...," காரிலிருந்து இறங்கி அவளிடத்தில் நெருங்கி இருந்தான்...அது ஒரு பேஸ்மெண்ட் வளாகம், அரையிருளும், சிறு வெளிச்சமும், தனிமையும் போட்டி போட, விலக மனமில்லாமல், "யூ ஆர் வெரி பிரில்லியண்ட்... ஐ லவ் யு சோ மச்", என்று கூறி கன்னத்தில் ஒரு முத்திரை பதித்து..."என்னால ரொம்ப நாள் காத்திட்டு இருக்க முடியும்-னு தோணலை.... உங்க வீட்ல நம்ம விஷயத்தை சொல்லி கல்யாணத்துக்கு பர்மிஷன் வாங்கிடு.."என்றான்.. தலையை உருட்டிய ஷண்மதிக்கு இன்னும் மயக்கம் தெளியவில்லை... அவன் முகம் பார்க்க வெட்கி, தலை குனிந்திருந்தாள்.
"ஹேய் , வெக்கப்படறியே ?, தெரியாதோ-ன்னு நினச்சேன்....:,", பேசி இலகுவாக்கினான்...
"ஏன் அப்படி ?", சற்றே தெளிந்து கேட்டாள் ..
"ம்ம்ம்.. ரொம்ப அறிவு வாளியா இருக்கியா? வெக்கமெல்லாம் மூட்டை கட்டி போட்டுடியோ-ன்னு..", ஒரு முறைப்பை பதிலாய் பெற்று நிறுத்தினான்...
ஹோட்டல் உள்ளே நுழைந்து , தனியாய் ஓரமாய் இருந்த டேபிளை அணுகி... மெனு புக்-கை அவளிடம் கொடுத்து, :எனக்கும் சேர்த்து பண்ணிடு ", என்றான்...
அவ்வாறே செய்து முடிக்க , ஷானு-வின் போன் அழைக்க, "அம்மா ...", சொல்லி, ஆன் செய்தாள்.
"சொல்லும்மா.."
"ஷானுமா... எப்படி கண்ணா இருக்க?"
"நல்லா இருக்கேன், சொல்லு.. விஷயமில்லாம கூப்பிட மாட்டியே?"
"ஆமாடா கண்ணா... இங்க அப்பாக்கு கொஞ்சம் முடியல... இப்போ ஹாஸ்பிடல்ல இருக்கோம்.."
"என்னாச்சு ? நா உடனே கிளம்பி வர்றேன்....",
"எப்போவும் வர்றதுதான் .. ஹை பி பி .... திடீர்னு தல சுத்தி விழுந்திட்டாரு....முடிஞ்சா ஒரு எட்டு.. வாடா..., ஆனா நீ ஜாக்கிரதை மா , ", என்றார் அம்மாக்களுக்கே உண்டான வாத்சல்யத்துடன்.
போனை வைத்துவிட்டு, "கணேஷ் .. இன்னிக்கு நான் ஊருக்கு போறேன், ஒரு ரெண்டு மூணு நாள் அங்க ஸ்டே பண்ணிட்டு வர்றேன்..., அப்பாக்கு உடம்பு சரியில்லை.. என்னான்னு இருந்து பாத்துட்டு வர்றேன்"..
"ஓகே.. நோ டென்ஷன்.. ஒன்னுமாகாது... ", என்றவன் தொடர்ந்து, "போறது போற... நம்ம விஷயமும் சொல்லிடேன்", சிறிது தயக்கமுடன் கேட்ட கணேஷை, முறுவலுடன் பார்த்து, "டன் ", என்றாள்.
**************************
சொன்னவாறே ஷானுவை ஊருக்கு அனுப்பி, இன்றோடு மூன்று நாட்கள் ஆகி இருந்தது... மணிவேல் வழக்கில் எந்த முன்னேற்றமும் பெரிதாய் இல்லை... பூபேஷ் மரணம் விபத்தல்ல, மயக்கமருந்தினை ஏ சி யின் வழியாய் உள்ளே செலுத்தி இருப்பது தெரிந்து, கொலை என முடிவானது... கணேஷ் அவரின் மெயில்-களை துருவியதில் நவ. 7 தேதிக்கு, ஒரு தனி விமானம், அமைச்சரின் பெயரில் புக் செய்யப் பட்டு இருந்தது.. அபுதாபி வரை சென்று வருவதாய் அதில் விவரங்கள் இருந்தது... எத்தனை முறை கேட்டும் அவ்வாறு முன்பதிவு செய்திருப்பதே தனக்கு தெரியாது என்றார் விநாயக மூர்த்தி.... அவர் கண்கள் உண்மை கூறியது..
ஏனெனில், அவர் தளர்ந்திருந்தார். பூபேஷின் இறப்பு அவர் எதிர்பாராதது... பூபேஷின் இறுதி காரியங்களை செய்வதற்காக ஜாமீன் கேட்க, அரசு அவரை எந்நேரமும் கண்காணிப்புடன் வீட்டுக் காவலில் வைத்தது.
அமைச்சர் வீடு எரிந்தது, அவரது தம்பி மகனான[ ? ] பூபேஷின் மரணம், இறுதி சடங்கு இவையே பிரதான செய்தியாய் இருக்க.... பலரும் அவரவர் இரங்கல்களை ஜாமீனில் வெளிச்சென்றிருந்த அமைச்சருக்கு[வி. மூர்த்தி] கூறிக் கொண்டு இருந்தனர்... ஒருவன்[பெயர் சந்திரகுமார், பூபேஷின் பார்ட்னர்-என கீழே போட்டிருந்தது] ஆறுதலாய் தழுவி, "பூபேஷ்க்கு இந்த வயசுல இப்படி ஆகும்னு நினைக்கலையே மூர்த்திப்பா, உங்களுக்கு யாரும் இல்லன்னு நினைக்காதீங்க.. நான் இருக்கேன், உங்க புள்ளையா நான் இருப்பேன், கவலைப் படாதீங்க...", என்று மேலும் பல இரங்கல் வசனங்கள்.. உஷ்..... பார்த்துக்கொண்டிருந்த கணேஷ் , பெருமூச்சுடன்...இப்போதைக்கு DCP-யை பார்க்க செல்லலாம், என்ற முடிவுடன், அவரை தொலைபேசியில் அழைத்தான்....
"என்ன சார், மொத்தமா ஆபீஸ்லதான் குடி இருக்கீங்களா?", என்றான் கொஞ்சமாய் சிரிப்புடன்...
" ஓ .. கணேஷா ?, எஸ் எஸ்.. இது ஆளும் கட்சி மேட்டர்-ல்ல... . மேலிடத்துலேர்ந்து ப்ரெஷர்...
கேசைக் கூட ஈஸியா ஹாண்டில் பண்ணிடலாம்.. ஆனா இந்த அரசியல்வாதிங்க தொல்லை இருக்கே?, அரை மணிக்கு ஒரு கால்...எங்கயாவது காவி கட்டி ஓடிலாமான்னு இருக்கு..",
வாய் விட்டு சிரித்து , "அண்ணி தாளிக்கறாங்களோ?"
"அதெல்லாம் எப்பவும் உள்ளது தான்" என்றார் அவரும் சிரித்தவாறே... தொடர்ந்து "UV ரிப்போர்ட் இன்னும் ரெண்டு மணி நேரத்துல வரும் . free -யா இருந்தா வா..."
"எஸ் சார், மதியம் வர்றேன்", பேசி முடித்தவன், அலுவலகம் சென்றான்... இரண்டு மூன்று நாட்களாக குறைவான நேரமே அலுவலகத்தில் இருந்ததால்.. பல வேலைகள் அணிவகுத்து நிற்க... அவற்றுள் மூழ்கினான்... முழுதாய் இரண்டு மணித்துளிகளை தொலைத்த பின் .. அவன் அறையில் இருந்த டீ.வி.-யை உயிர்ப்பித்தான்...
Last edited: