• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

UVVP Episode 12

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Riha

SM Exclusive
Author
Joined
Feb 8, 2018
Messages
12,391
Reaction score
32,389
Location
Tamilnadu
Wow wow very nice ud aadhima??????

Ganesh pattaiya kelapparan...DCP ku oru velaiyum illa ???... Romba workout panrane.....idhula DCP ya kalaichu vera vidran...

Google aachariya... very nice nick name for our google aadhima..
????

Thaana porila sikkittana chandra kumar??....semma ippadiya moorthippa nu kooptu maatipa ..,Ganesh kitta ye va...??

Shanu ippa danger la irukkala????...ooruku poittu vara vazhila enna aachu...oru velai
Kaanama pona chandra kumar edhachum game aadraana...

Semma suspense aadhima..sry for late reply..little busy in diwali??...how was ur diwali celebration!!!!!
 




Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
Wow.. enna viruviruppu.. naa aduthathu padika pogiren doiiiii
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
வேறு வேறு கோணத்தில், வேறு வேறு சானல்களில் அதே செய்திகள், அதே நேரலை.... மீண்டும் மீண்டும் ஒளிபரப்பினார்கள்... போர் அடிக்கவே... ரிப்போர்ட்களை பார்ப்போம், என்ற முடிவுடன்... காரில் கிளம்பினான்..

எங்கோ எதுவோ நெருட மீண்டும் ஆழ்ந்து யோசித்தான் . சட்டென தலையில் பல்ப் எரிய, ஒரு கால் செய்து பேசி மெல்ல நிமிர்ந்தான்....சீட்டி அடித்துக் கொண்டே.... இப்போது உற்சாகமாய்... DCP அலுவலகம் நோக்கி...

உள்ளே நுழைந்த கணேஷின் பிரைட்-டான முகத்தை கண்டு.. "என்னப்பா ஏதாவது புதுசா கண்டு பிடிச்சியா?"...

"ம்ம்.. கரெக்ட்....ஓரு மாதிரி விடையை நெருக்கிட்டோம்-னு நினைக்கிறேன். வெல் , அதுக்கு முன்னால இதுவரை நமக்கு தெரிஞ்சதை, ஒரு முறை ரீகால் பண்ணலாமா?", என்றவன்...

"ம்ம். ப்ரொஸீட் "..

"விநாயக மூர்த்தி ..அமைச்சர் மணிவேல கொன்னு அவர் மாதிரி வேஷம் போட்டது, அக்கா ஆபீசுக்கே வந்து மிரட்டியது , ஸ்கேனர் உதவியோட அவரோட ஆள் மாறாட்டத்தை கண்டு பிடிச்சது, தொடர்ந்து அவர் கைது..., அவரோட ட்ரைவர், மகன் பூபேஷ் விபத்துல கொல்லப்பட்டது, இதெல்லாம் நமக்கு தெரிஞ்ச விஷயம்..."

"ம்ம். ஆமா"

"இப்போ நம்ம முன்ன இருக்கிற விடை தெரிஞ்சுக்க வேண்டிய கேள்விகளை பாக்கலாமா?"

"ட்ரைவரை, பூபேஷை கொன்னது யாரு ?"
"இந்த கொலைகளுக்கான காரணம் என்ன?"

"தெரியலையே , அது தெரிஞ்சுக்கலாம்னு ...", அவர் ஆரம்பிக்க..

"டிஸ்கஷன் அப்பறமா பாக்கலாம் ...இப்போ நம்ம கைல கிடைச்ச ஆதாரங்கள்..."

"ஹலோ.. நான்தாம்பா இங்க போலீஸ்.."

சிரித்துக் கொண்டே "இருந்துட்டு போங்க.. யார் வேணாம்னு சொன்னா?, நான் பத்திரிக்கைக்காரன்.உடம்பு முழுக்க கண்ணும் காதும் இருக்க பழகினவன்", என்று நிறுத்தியவன், "மோரோவர், உங்களுக்கு வயசாயிடுச்சு..."

"ஹா ஹா ஹா .. இதை உங்க அண்ணி இருக்கும் போது சொல்லிடாதே....", என்று சற்று கலகலத்து சிரித்து "ஓகே மேட்டருக்கு வா.." என..DCP கூற... அவரை ஆமோதித்து . கணேஷ் தொடர்ந்தான்..

"நவம்பர் 7 ஆம் தேதி, அமைச்சரும், பூபேஷும் அபுதாபி போறதுக்கு புக் பண்ணின சார்ட்டர் பிளைட்-டோட நம்பர் IX - 537", என்றவனை இடையிட்டு,

"சரிப்பா, இதெல்லாம் தான் ஏற்கனவே தெரியுமே?"

"எஸ்.. ஆனா இதை யாரு புக் பண்ணிருக்கா-ன்னு தெரியுமா?"

"பூபேஷ் தானே பண்ணி இருக்கணும் ?"

"நாம அப்படித்தான் நினைச்சோம், அல்லது அப்டி யோசிச்சோம்"

"இந்த நம்பரை சொல்லி, யாரு புக் பண்ணினா, பேமெண்ட் யாரு பண்ணினா-ன்னு கேளுங்க...", கணேஷ் துள்ளலுடன் சொல்ல...

"நீ கேட்டுட்டே தானே?"

"கண்டிப்பா..,சந்திர குமார் , சி.கே. இண்டஸ்ட்ரீஸ் , சிங்கப்பூர்"

"இவன் யாருப்பா புதுசா..."

"புதுசெல்லாம் இல்ல, ரெண்டு மூணு நாளா பாத்துட்டே இருக்கோம் .. தெரிஞ்ச ஆளு தான்.. பாக்கறீங்களா?", சொல்லிக்கொண்டே தொலைக்காட்சியை உயிர்பித்தான்..

"ஹேய்... இங்கதான் இருக்கானா ?"

"ஆமா , நம்ம மூக்குக்கு கிழேயே,",

டிவி யில், இரங்கல் வசனம் ஓடிக்கொண்டிருந்தது...."பூபேஷ்க்கு இந்த வயசுல இப்படி ஆகும்னு நினைக்கலையே மூர்த்திப்பா, உங்களுக்கு யாரும் இல்லன்னு நினைக்காதீங்க.. நான் இருக்கேன், உங்க புள்ளையா நான் இருப்பேன், கவலைப் படாதீங்க...",

"ம்ச் .. இவன்தான்-னு....... ", என்றவர் சட்டென நிறுத்தி... விழி விரித்தார்... "மூர்த்திப்பா "

"ய்யா ....புடிச்சிடீங்க.... நாம யாருக்கும் சொல்லாம இருக்கிற விஷயம் ... இவனுக்கு எப்படி தெரியும் ?", அத்தனை உற்சாகம் கணேஷ் குரலில்...

அடுத்தென்ன??

சந்திர குமாரை கைது செய்ய உத்தரவு வாங்க... அரை மணி நேரம் பிடித்தது..

அந்த நேர இடைவெளிக்குள், UV ரிப்போர்ட் வந்தது... அந்த எரிந்த காகிதத்தில் , கன்டைனர் ஒன்றை, திருவனந்தபுரத்தில் இருந்து அபுதாபிக்கு அனுப்பிய தகவலும் , மேலும் அனுப்பியது பூபேஷ், சென்று சேர்வது சி.கே. இண்டஸ்ட்ரீஸ்-க்கும் என்பதாய் கூறியது....

"சார், என்னிக்கு புக் ஆகி இருக்கு?", கணேஷ் வினவ..

"ப்ரோ, இந்த ஷிப், ஸீ ரூட் பாருங்க...", பக்கத்தில் இருந்த அதிகாரிக்கு கன்டைனர் எண்ணினை கொடுத்து, தெரிந்து கொள்ள சொன்னான் .

"சார் நாலு நாள் முன்னால புக் ஆகி இருக்கு.. கப்பல் KANDLA போர்ட்-க்கு நாளைக்கு போகும்..." [kandla போர்ட், gulf of kutch, குஜராத்]

கணேஷ் நிமிர்ந்து DCP யை பார்த்தான்..., அவரோ உதடு பிதுக்கி.. " கிளியரன்ஸ் கிடைக்கறது ரொம்ப கஷ்டம் .."

"பாம் வச்சிருக்காங்கன்னு சொல்லுங்க சார், உடனே டெக் ஆகும்... ", கூலாக கூறினான்... கணேஷ் , "அந்த கன்டைனர், குஜராத் தாண்டக் கூடாது..."

"கான்ஸ்டபிள்..சமீபத்துல தொலைஞ்சு போன குழந்தைங்க, தோராயமா ஒரு மாசத்துக்குள்ள தொலைஞ்சு போன குழந்தைங்க லிஸ்ட் ரெடி பண்ணுங்க...", DCP பாயின்டை பிடித்தார்...

அதே நேரம்..அவரின் .தொலைபேசி அலறியது... "சார் சந்திரகுமார் மிஸ்ஸிங்"....

"எதிர்பாத்தேன்... ஏர்போர்ட்டுக்கு அந்தாளோட பாஸ்போர்ட் அனுப்பி உடனே பிளாக் பண்ணுங்க.., சிட்டி போலீசுக்கு அவன் முகத்தை அனுப்பி வைங்க.. பாட்ரோல அலெர்ட் பண்ணுங்க...", DCP கேஸ் முடிப்பதில் மும்மரமானார்...

"எஸ் சார்"

ஜீப்பில் ஏறிக்கொண்டே "நானும் தேடறேன், ஹை வேஸ்...பாட்ரோல் கூட., ", DCP செல்ல,

அவரை அனுப்பி விட்டு, ஷானு-விற்கு தகவல் சொல்ல அழைத்தான்... "தி நம்பர் ஈஸ் நாட் ரீச்சபில் அட் தி மொமண்ட்.." , பதிலாய் வந்தது....

குழம்பினான்..., சென்னை வந்திருப்பாளே ?, தொலைபேசியில் அப்படித்தான் சொல்லி இருந்தாள்..

அலைபேசி அலற, "சார், நீங்க தானே கணேஷ் ?"

"ஆமா",

"எங்க டிபார்ட்மென்ட்-கு உங்களுக்கு தெரிஞ்ச பொண்ணோட மொபைல்லேர்ந்து SOS சிக்னல் வந்துருக்கு",

கணேஷின் இதயம் ரிக்டர் அளவு கோலில் ஒன்பதில் அதிர... "சார் அவங்க நம்பர் சொல்ல முடியுமா?"

ஷானுவின் அலைபேசி எண்ணை, தப்பில்லாது கூறினார், அக்காவலர்.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

ஆதியாஞ் சிவனுமவன் சோதியான சக்தியுந்தான்
அங்குமிங்கு மெங்குமுள வாகும் -- ஒன்றே
யாகினா லுலகனைத்தும் சாகும் -- அவை
யன்றியோர் பொருளுமில்லை, அன்றியொன்று மில்லையிதை
ஆய்ந்திடில் துயரமெல்லாம் போகும் -- இந்த
அறிவுதான் பரமஞான மாகும்.
நீதியா மரசுசெய்வர் நிதிகள்பல கோடிதுய்ப்பர்
நீண்டகாலம் வாழ்வர்தரை மீது -- எந்த
நெறியுமெய்து வர்நினைத்த போது -- அந்த
நித்தமுத்த சுத்தபுத்த சத்தபெருங் காளிபத
நீழலடைந் தார்க்கில்லையோர் தீது -- என்று
நேர்மைவேதம் சொல்லும் வழி யீது.

மகாகவி சுப்ரமணிய பாரதியார்
குட்டியா வந்தாலும் க்யூட்டா இருக்கு இவங்க லவ் ???
கணேஷ் பேசாமா நீ போலிஸ் வேலைக்கு போயி இருக்கலாம் என்னாம கண்டு புடிக்குற ஸ்மார்ட் மேன்??????
ஷன்மதிக்கு ஏதோ ஆபத்து துப்பறியுரேன்னு எங்கோ வசமா மாட்டி கிட்ட போல்யே??‍♀?
நைஸ் அதிமா?????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top