• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Vaadi en thamizhachi - 36

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Sairam

மண்டலாதிபதி
Joined
Feb 17, 2018
Messages
327
Reaction score
392
Location
Tamilnadu
வீர் செய்ததில் தவறென்ன?அவன் அதிகம் நேசிக்கும் தொழிலுக்கு நேர்மையாக நடந்தான்.அது அவன் தொழில் தர்மம் தானே.கை ரேகை ஒத்துபோனாலும் என்ன நடந்தது என்று விசாரனையில் தெரிந்து இருக்கும்.இதில் அவன் காதலுக்கு எப்படி துரோகம் செய்ததாகும்.தமிழ் எல்லாவிஷயத்தையும் மனதில் வைத்து ரகசியம் காத்து விட்டு அடுத்தவர் மேல் வருத்தப்படுவதில் அர்த்தமென்ன?
 




lakshmiperumal

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
4,840
Reaction score
3,628
தமிழ் வீரை புரிந்து கொள்வாள்(y):)
 




AnithaKarmegam

இணை அமைச்சர்
Joined
Jan 21, 2018
Messages
711
Reaction score
1,865
Age
27
Location
Thiruvarur
வீரேந்திரன் தன் மனைவியின் முகத்தை நிமிர்த்தி பிடித்து "உன் கையில இருந்த பாம் மட்டும் வெடிச்சிருந்தது... நீ என்னஆயிருப்பன்னு தெரியுமா?!... துண்டு துண்டா சிதறி போயிருப்ப" என்று சொல்லும் போதே வேதனையோடு அவன் விழிகள் நீரை உகுத்தது.

அவன் கண்ணீரை துடைக்க உயிர்த்திய அவள் கரத்தை தடுத்துபிடித்து கொண்டு "ப்ளீஸ் தமிழ் என்னை அழ விடு... நான் அழனும்... என்னால இதுக்கு மேல முடியாது" என்று சொல்லி தான் கட்டுபடுத்தியிருந்த வேதனையெல்லாம் கண்ணீராய் கரைத்தபடி அவள் மார்பின் மீது முகம் புதைத்து கொண்டு ஒரு குழந்தையாய் மாறி அழத் தொடங்கியிருந்தான்.

அவனின் கம்பிரத்தையும் ஆணவத்தையும் தலைநிமிர்ந்திருக்கும் ஆளுமையையும் பார்த்தவளுக்கு அவனின் இந்த பரிமாணம் ரொம்பவும் புதிது.

அவன் தன் ஈகோவை எல்லாம் மொத்தமாய் விடுத்து அவளிடம் சரண்புகுந்துவிட்டான்.

அவள் தன் கரத்தால் அவன் கேசத்தை தடவியபடி அவனை சமாதானப்படுத்த எண்ண அது சாத்தியப்படவில்லை.

அவனின் பிடிவாதம் கோபத்தைதான் கட்டுபடுத்த இயலாது எனும் போது இந்த நிலையிலும் அவனை கட்டுக்குள் கொண்டு வர அவளால் முடியவில்லை.

அவனுக்குள் இருக்கும் குற்றவுணர்வு அவனை குத்தி கிழித்து கொண்டிருந்தது.

அவனின் கர்வமும் ஆணவமும் அவனின் கண்ணீரில் வழிந்தோட அவளால் அவன் அப்படி அழுவதை தாங்கி கொள்ளவே முடியவில்லை.

"ப்ளீஸ் வீர்... நீங்க அடிச்சா கூட தாங்கிக்கிறேன்... ஆனா நீங்க இப்படி அழறதை என்னால சத்தியமா தாங்கிக்க முடியல" என்று அவளும் சேர்ந்து அவனோடு கண்ணீர் வடிக்க அந்த வார்த்தையை கேட்ட நொடி தலையை நிமிர்த்தி அவள் முகத்தை பார்த்தான்.

"ப்ளீஸ் நீ இந்தளவுக்கு என்னை லவ் பண்ணாதடி... நான் உன் காதலுக்கு கொஞ்சங்கூட தகுதியானவன் இல்ல" என்று உரைத்தபடி அவன் எழுந்து நின்று கொள்ள அவளும் கோபத்தோடு அவன் முன்பு சென்றாள்.

"என்ன பேசிறீங்க வீர்? !... தகுதி அது இதுன்னு... இப்படி எல்லாம் பேசினிங்கன்னா எனக்கு ரொம்ப கோபம் வந்திரும் சொல்லிட்டேன்" என்றாள்.

"கோபப்படு தமிழ்... நான் செஞ்ச எல்லாத்துக்கும் கோபப்படு... நம்ம கல்யாணத்துக்கு உன்னை கட்டாயப்படுத்தி சம்மதிக்க வைச்சது.. காரணமில்லாம உன்னை அடிச்சது... டாமினேட் பன்றேன்னு சொன்னது... உன்னை கீழ விழவைச்சது... கொஞ்சமும் யோசிக்காம உன் ரூமை அடிச்சி உடைச்சதுன்னு... எல்லாத்துக்கும் சேர்த்து கோபப்படு... பைஃன்... அதை நான் ஏத்துக்கிறேன்... ஆனா நீ உன் உயிரை கொடுத்து காப்பாத்தற அளவுக்கு நான் என்னடி பண்ணேண் உனக்கு... அதை என்னால ஏத்துக்க முடியல... கில்டியா இருக்கு" என்று சொல்லியபடி அவள் முகத்தை ஏறிட்டு பார்க்க முடியாமல் கடல் அலைகளை வெறித்தபடி நின்று
கொண்டான்.


தமிழ் அவன் சொன்ன எந்த விஷயத்தையும் பொருட்படுத்தாமல் "வீர்... அதெல்லாம் முடிஞ்சி போன கதை... அதுவும் இல்லாம எல்லா சிட்டுவேஷன்லயும் என் தப்பும் இருக்கு... நீங்க இப்படி உங்களை மட்டும் தப்பு சொல்லிக்காதீங்க... " என்று அவனின் முகத்தை பாராமலே உரைத்தாள்.

அவனை பின்னோடு தன் கரத்தால் பிணைத்தவள் தன் மனதை நிறைத்திருந்த அவன் மீதான காதலை வார்த்தைகளால் கோர்த்தாள்.

"இந்த தமிழச்சி எத்தனை முறை மறித்தாலும்... அத்தனையும் முறையும் பிறந்து வருவாள்... உனக்காக... உன்னை சேர்வதற்காக... உன்னோட வாழ்வதற்காக... "

என்று சொல்லியவள் அவன் முதுகுபுறம் ஆதரவாய் தலைசாய்த்து விழிகளை மூடி இன்புற்றாள்.

அவளின் அணைப்பிலும் வார்த்தைகளிலும் அவன் மொத்தமாய் கிறங்கி போனான்.

அவள் காதலை சொன்ன விதத்தில் சிலாகித்து போனவன் மீளமுடியாமல் அவளோடு பிணைந்த தன் உணர்வுகளோடு கண்டுண்டு மயக்கத்தில் கிடந்தவன் சட்டென்று விழித்து கொண்டு அவனை சேர்த்திருந்த அவள் கரத்தை பிரித்து அவள் புறம் திரும்பி நின்றான்.

அவள் புரியாமல் பார்க்க அவன் தவிப்போடு "ஏன்டி இப்படி என்னை கொல்ற... நீ லவ் பண்ற அளவுக்கு நான் உன்னை லவ் பண்ணல தமிழ்... நீ எனக்காக உன் உயிரை கூட விட்டுகொடுக்க தயாரா இருக்கு... ஆனா நானோ என் வேலைக்கு முக்கியத்துவம் கொடுத்து உன்னை உதாசீனப்படுத்தி இருக்கேன் " என்றான்.

"அய்யோ இப்படி பேசிறதை நிறுத்திறீங்களா... எனக்குதான் நல்லா தெரியுமே.. நீங்க உங்க வேலையை ரொம்ப நேசிக்கிறீங்கன்னு... அதனால எல்லாம் உங்க காதல் குறைஞ்சி போயிடாது... புரிஞ்சிதா" என்று அதிகாரமாகவே உறைத்தாள்.

"அப்படியா.... அப்போ உனக்கு தெரியாம உன் கைரேகையை தர்மா கேஸ் எவிடன்ஸ்க்காக நான் செக் பண்ணேன்... அது தப்பில்லைன்னு சொல்ல வர்றியா?!" என்று கேட்க அத்தனை நேரம் அவனிடம் அவனின் காதலுக்காக வாக்குவாதம் புரிந்தவள் இப்போது மௌனமாய் நின்றாள்.

அவனே மேலும் "நான் ஒரு புருஷனா உன் பக்கம் இருக்கிற நியாயம் என்னன்னு கூட கேட்காம... உன்னை அரஸ்ட் பண்றளவுக்கு போக இருந்தேன்.. அது தெரியுமா? !" என்று தன் மனதை அழுத்திய விஷயத்தை அவன் வெளிப்படுத்திவிட்டான்.

அப்போது அவர்களுக்கு இடையில்
ஒரு நீண்ட மௌனம் தன் ஆளுமையை செலுத்த தொடங்கியது.


அவளோ அந்த அதிர்ச்சியை தாங்க இயலாமல் பின்னோடு சென்று தாமரை மண்டபத்தில் அமர்ந்து கொண்டாள்.

அவளின் உணர்வுகளும் காதலும் அவன் சொன்னதை கேட்டு அடிப்பட்டு போனதென்றே சொல்ல வேண்டும்.

Hi friends,
Thank u all for your great support


Tomo is vet prefinal epi

Pls share your comments and press like button

Love u all for your beautiful commentsView attachment 746
nyc episode oru sema romance scene ethir pathen..ipdi pandringale maa
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
மோனிஷா டியர்
 




Last edited:

Shamili

புதிய முகம்
Joined
Jan 22, 2018
Messages
3
Reaction score
5
Location
Chennai
இதுதான் அந்த தோழி அனுப்பிய Pvt msgஇதில் உள்ள கருத்துக்களும் வாசகர்கள் தெரிந்து கொள்வதன் அவர்களும் தெளிவுப்பெறலாம்.
mam,
neenga solli irukira information ai namakku kidaikaama seythathu vellai karan kondu vantha kalviya?
vellai karan namakku kalviyai kondu varum mun, Thamizhnaatil kurippitta irandu jaathikalai thavira yaarukum kalvi karkum urimaiye kidaiyaathu. Manusmirthi endra peyaril rajaraja cholan muthal pin pallava mannarkal, nayaka mannavarkal ena anaivarum thinitha satta amaipu athu.
kalvi karkum urimaiyai mattum alla, tamilargalathu unmaiyana arivu, kalvi anaithaiyum matham endra peyaril azhithu vada mozhi thaan uyarntha mozhi, athil irukum noolgal mattumey unmaiyil melanavai ena nam pazham thamizh noolkalai ellaam azhithu, namakku kidaikaamal seytha perumaiyum ippadi patta mannarkalaiye serum.
AD700m varutangal pakkam sundrapandiyan nam tamil noolkalai, mathathai kaaranam kaati azhitha kalvettukal irukindrana.
sitharthan enbathai thaan sithan ena makkal sonnaargal, namm makkal samnargalagavum bouthargalakavum irunthaargal, bouthamatham engu sendraalum muthalil avargal kondu selvathu maruthuvathai thaan, BC6m nootrandril irunthu tamilagathil ithu pulagathil irukirathu.
vadamozhi saarntha mathangal AD7m nootraandru thuvangi tamilagathirkul kondu vara pattapothu, (erathaazla 1300 varudangalukku pin)
manusmirithi padi andanan thavira maruthavam seyyum urimai entha jaathiyarukkum kidaiyathu endra vakaiyil, nam maruthuva seylbadugal yavatrukkum thadai vanthathu, sattathai meeruvor kollappattanar. sithargal enbavargal ragasiyamaay mattumey iyanga mudiyum ena nilai vanthathu,
athu saarntha noolgal azhikappattana
ippadi ethanaiyo varalatru koorukal kalvettukalaga nam naadu muzhuvathum pathivaakiththaan irukindrana.
jaathiyam endra peyaril kalvi urimaiye marukappatu kidantha namakku, antha vellaiyan thaan vanthu, ellorukum kalvi kodupen ena solla, namma naattu antha rendu jaathikaararakalum atharku ethiraaka aththanai poraadi, appothum iruthiyil, appadiye nee kalvi koduthaalum samaskirathil thaan athu tamil makkalukku iruka vendum ena sandaiyittu,
neengal sollum vellaiyan thaan pidivaathamaay avanavan thaaymozhiyilum aangilathilum kalvi ena kondu vanthavan.
Tamil ezhuthu naam payanpaduthuvathu kaalduvel (velaiyan) ezhuthu. avar tamil ai azhika athai kandu pidikavillai. ellorukum elithaay tamil poy sera vendum ena kandu pidithathu.
Tamilil muthan muthalil pazham puthagangalai ellaam thedi eduthu achedriyavar zeegan balgu (tharangambadiyil vanthu thangi iruntha oru germaniyar) (34 vayathil varumai matrum ovvatha thatpaveppam ithil iranthu ponar)
ippadiya periya atavanai podalaam avarkal namakku kalvi kidaika seytha muyarchi matrum thiyagangalai.
naan mela kuripitta oruvar kooda porulatha reethiyil vasathiyana vazhkaiyil irunthavarkal kidaiyaathu.
thangalin illaamai, thuyarangalukku mathiyil ithai ellam seythu koduthavarkal.
Thanjai periya koil kalvettai padithu raja raja cholan ena oru mannan aandaan ena namakku solli vaithavargal athey vellaiyargal thaan.
ippadi ovvoru koil kalvettaiyum thedi padithu nam pazham perumaiyai, vadamozhi varum munnum ingu tamil irunthathu, tamizhan vaalnthaan, avanukku kalacharam irunthathu ena ellaam namakkkey solliyavargal ithey vellaiyargal thaan.
antha koiliukkul kooda poga iyalaamal, koilkalai kattiyavarkaley antha koilukkul poka anumathi kooda ilamal nirkum samookathavargal thaan enbahthai kooda ariyamal, veliye nindravargal tamilargal.
(kolyai kattiyavan andanan kidaiyathu tamil mannargal ena namakku kandu pidithu sonnavan kooda vellaiyan thaan)
vellaiyargal varuvatharku 1000 varudam munneye vadamozhiyai athu saarnhtha matha tharmangalai namm meethu thinipathargaga, appothey namathu tamil noolgalai azhithaayidru.
ithil vellaiyar vanthu athai solli tharamal azhithaan ena solvathu eppadi?
ithellaam saatharana varalatru unmai.
google la 5 minutes thedinaa pothum ithellaam padika iyalum.
vellaiyargalai pukala naan ithai sollavillai.
en varalarai maraithu eppothum poyayaiye solli thara vendum?
14m nootraandil tamilgathukku vantha vadamozhi saarntha matham(vedangal ellaam samskiratham thaaney) ki.mu kala varalaaru ulla tamilnaatil aarambathil irunthu irunthathu ena innum nammidam soli kondirukum mathavaathigal vellaiyanai pazhi podukiraargal endraal avargal poiyyai kaapatha oru paliyaadu thevai padikirathu.
ulnokkam ethuvum illamal ezhuthum neengalum en athai seyya vendum.
thaviragalaamaey
kandipa ungalai hurt seyvathargaka ithai sollavillai mam.
author neenga, makkalukku unmaiya eduthutu ponga, ilaina kuraintha patcham poyyana thagavalai parapaatheenga.
 




Shamili

புதிய முகம்
Joined
Jan 22, 2018
Messages
3
Reaction score
5
Location
Chennai
ஒரு தோழியின் விருப்பத்திற்கு இணங்க இந்த பதிப்பை தமிழியில் மாற்றியுள்ளேன்


ஒரு சின்ன தெளிவுரை. அறிவு என்பது இவர்கள் சொல்லும் ஆங்கில கல்வி முறை அல்ல. நம்ம நாட்டுக்கு ஜாதி பெயரால் வந்த சோதனை ஆங்கிலேயனுக்கு முன்பே வந்த ஆரியர்களால் தவிர தமிழ்ர்களால் அல்ல. நம்ம அறிவு விவசாயம் செய்ய கற்று தந்தது, மருந்தையே உணவாய் உண்ண கற்று தந்தது, மனிதர்களை மனிதர்களை மதிக்க கற்று தந்தது.

முற் காலத்தில் ஜாதி பேதம் இன்றி அனைவரையும் சபை கூடி கதை காலேட்சபம் செய்வார்களே! வரலாற்றை கூறி மக்களுக்கு ஆறம் கற்பித்தனர். இது தான் குணம் வளர்க்கும் கல்வி.

கூழ்,கம்பு, தினை சாமை அருந்த வேண்டும் என செய்தது தான் ஊட்டச்சத்து கல்வி.

இந்த நேரத்தில் மழை வரும், இந்த நேரத்தில் வெயில் வரும், இந்த மண்ணில் இதை விதைத்தால் இப்படி வளரும் இந்த நேரத்தில் அறுவடை செய்யலாம் என்று கற்று கொடுத்தது தான் விவசாய கல்வி.

காயத்துக்கு மஞ்சள் தேய்க்க வேண்டும், எச்சிலை உபயோகிக்க வேண்டும், பெண்கள் மாதவிடாயில் என்ன உபயோகம் செய்ய வேண்டும்? என்ன உண்ண வேண்டும்? ஏன் கோவிலுக்கு செல்ல கூடாது , ப்ரிஸவ பெண்கள் என்ன உண்ண வேண்டும்? எப்படி ப்ரிஸவம் பார்க்க வேண்டும்? என்று புரிய வைத்தது தான் மருத்துவ கல்வி(சுக ப்ரிஸவம் என்ற வார்த்தை மறந்து போனதுக்கு கரணம் ஆங்கில கல்வி மறக்க வேண்டாம்)

மல்யுத்தம், கபடி, நொண்டி, சிலம்பாட்டம் போன்ற ஆட்டங்களினாலும் எத்தனை உடற் பயிற்சிகளுக்கு வழியாக்கி வகுக்கிறது. இதை போன்ற மூளையையும் உடலையும் உயிர் பிக்க விளையாடும் எத்தனையோ விளையாட்டை கற்றுத்தந்தது தான் விளையாட்டு கல்வி.
கும்மி அடித்தல், நாட்டு புறப்பாட்டு, கரகாட்டம் , ஒயிலாட்டம், மயிலாட்டம் வேலாட்டம் என காதுகளுக்கும் கண்களுக்கும் இனிமை கொடுத்து கலைஞர்களை வாழவைத்தது தான் கலை கல்வி. கலவியையும் பகுத்தறிவோடு கற்று கொத்தான் தமிழன். ஆங்கிலத்தில் "civilization" என்ற ஒரு வார்த்தை உண்டு. நாகரிகத்தை உலகிலேயே முதலில் கற்று வாழ்ந்த மனிதன் தமிழன்.

கதர் ஆடை அணிதல் தான் நம் நட்டு தட்ப வெப்பத்துக்கு ஏற்றது. அந்த கதரை உடுத்த கூடாது என்று ஆன் பெண் பேதம் பாராது ஆடைகளை முழுவதுமாக உருவி நெருப்பில் எரியவிட்டஆங்கிலேயரின் கல்வி தான் இன்று குழந்தை என்ற பேதம் பாராமல் கற்பழித்து ஈவு இரக்கம் இன்றி கொலை செய்து இருக்கிறது. இப்படி பட்ட கல்வியை பள்ளி கூடம் சென்று ஜாதி மத பேதம் இன்றி படித்தது பெருமைக்குரிய விஷயமாக தெரிய வில்லை.

பள்ளியில் புத்தகம் வெய்த்து ஆங்கிலம் படித்தால் தான் படிப்பா? நம் தாத்தா பாட்டியை விட நாம் அறிவில் சிறந்தவர்கள் என்று சொல்லிக்கொள்ள முடியுமா? பறக்கும் தட்டு இல்லாம வின் வெளியில் என்ன கிரகங்கள் இருக்கிறது எப்போ என்ன கிரகணம் வரும்? எப்பொழுது சூரிய கிரகணம் வரும்? எப்பொழுது அம்மாவாசை? எப்பொழுது பௌர்ணமி? இன்னும் ஆயிரம் வருடம் வாழும் மக்களுக்கு அறிவித்த அறிவித்து அறைய வைத்து கொண்டு இருக்கும் நம் முன்னோர்களை விட நாம் அறிவாளியா?போர்க்கு செல்லும் நாட்டுக்கு கூட உண்ண உணவு கொண்டு சென்ற தமிழனுக்கு இன்று அணு ஆயுதம் கொண்டு ஒரு நாட்டு மனித வளம் சேர்த்து மண் வளத்தையும் அழிக்க கற்று கொடுத்த ஆங்கில அறிவு சிறந்ததா?

ருத்ர வீணை கொண்டு மழை பெய்ய செய்த தமிழ் கலை, நவ பாஷாண சிலையில் உஷ்ணத்தை கொண்டு கொடிய நோயையை போக்கிய மருத்துவம், இன்னும் நூறாயிரம் வருடம் இந்த ஆங்கில கல்வியை படித்தாலும் நம்மக்கு கிடைக்க போவதில்லை. இழந்ததை மீட்க முடியவில்லை என்றாலும் பரவாயில்லை. அந்த மதிப்பை புரிந்து கொள்ள வில்லை என்றாலும் பரவாயில்லை. மனித நேயம் இன்றி ஒரு நாட்டை அடிமை படுத்தி நாடு வளத்தை சூறையாடி( கோவா அகோடா சிறை, அந்தமான் சிறையெல்லாம் பாத்து இருக்கீங்களா fan இல்லாம ஒரு நிமிஷம் இருக்க நம்மாள முடியல... அங்க தான் நம்ம மக்கள அடைச்சு கொடும பண்ணாங்க) நம்ம கல்வி முறையும் அறிவும் கண்டு பயந்து அதை பறித்து நமக்கு அடிமை கல்வியை புகட்டியவர்களை உயர்த்தி தமிழனை தரம் தாழ்த்தி தயவுகூர்ந்து பேச வேண்டாம்.... _/\_ வேண்டி கேட்டு கொள்கிறேன்.. உங்கள் கருத்தை மதிக்கிறேன். நீங்களும் மற்றவர்கள் உணர்வை மதிக்க வேண்டுகிறேன்
 




Last edited:

sivamalar

மண்டலாதிபதி
Joined
Feb 1, 2018
Messages
105
Reaction score
252
Location
chennai
தாய் தமிழ் மொழிக்கான உங்கள் விளக்கங்கள் ஆமோதிக்கிறேன் வரவேற்கிறேன் நன்றி
உண்மையை எங்கேயும் ஒளிக்கவோ ஒழிக்கவோ முடியாது அது இந்த உலகத்துக்கும் புரியும் மேகம் சூரியனை மறைக்கலாம் அதற்க்காக சூரியன் இல்லை என்று யாரவது சொல்லமுடியுமா அது போல் தான் நம் தமிழ் மொழி தமிழனின் அறிவு எல்லாம் குடத்தில் போட்ட மரகத கல்லாய் மூடப்பட்டு இருக்கிறது அறிவை செல்வதை கொள்ளை அடிதாய் நினைத்து கொள்ள முடியும் அடையாளத்தை அழித்துவிட்டதாய் நினைத்து கொள்ள முடியும் எவ்வ்ளவு சுற்றினாலும் ஆரம்ப புள்ளி முற்று புள்ளியில் வந்தது நிற்கத்தான் வேண்டும்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top