super sis...
தமிழ் உள்ளே நுழைந்த நொடி ரவிவர்மன் அவளை வழிமறித்து குரோதத்தோடு "அன்னைக்கு நான் குடிச்சிட்டு டிரைவ் பண்ணேண்ணு என்னை அடிச்ச... நீ செய்ற தப்புக்கெல்லாம் உன்னை யாருடி அடிக்கிறது" என்று கேட்டான்.
"டி போட்டு பேசின்னா பிச்சிடுவேன் ராஸ்கல்... நான் உனக்கு அக்காங்கிறதை மனசில வைச்சுக்கோ" என்றாள்.
"அக்காவா... நீ என்னடி எங்க அம்மா வயித்துல பிறந்தவளா...?" என்று கேட்டான்.
"வேண்டாம் ரகு... நீ உன் லிமிட்டை தாண்டி பேசிட்டிருக்க... "
"என்னடி பண்ணுவ" என்று திமிராய் கேட்க
அவள் கையை கட்டி நின்றபடி "மாப்பிள்ளை வீட்டுக்கு ரகுவும் நானும் சேர்ந்திருக்கிற போட்டோவை அனுப்பினது நீதான்னு அப்பாகிட்ட சொல்லுவேன்" என்றாள்.
அவன் பதட்டமடைந்தவனாய் "என்ன போட்டோ... எனக்கு எதுவும் தெரியாது ?" என்று தப்பிக்க முற்பட
"ஏன்டா நடிக்கிற... நீதான் அந்த போட்டோவை அனுப்பி இருப்பன்னு எனக்கு அன்னைக்கே தெரியும்... இந்த மாதிரி கீழ்தனமான வேலையை உன்னை தவிர வேற யாரு செய்ய முடியும்... நான் அப்பாகிட்ட அப்பவே சொல்லி இருப்பேன்... பட் தெரிஞ்சோ தெரியாமலோ நீயாவே எனக்கு ஒரு நல்லது செஞ்சிட்ட... அதனால போனா போதுன்னு உன்னை மன்னிச்சி விட்டுட்டேன்... ஆனா எப்பவுமே இப்படியே இருப்பன்னு மட்டும் நினைக்காதே" என்று அவள் சொல்ல அவன் பதில் பேச முடியாமல் அமைதியாய் நின்றான்.
தமிழ் அவனை கடந்து சென்றுவிட்டு மீண்டும் அவன் புறம் திரும்பி
"இத பாரு ரவி... நீ என் வாழ்க்கையை கெடுக்கிறன்னு என்ன வேணா பண்ணி தொலை... அதை பத்தி எனக்கு கவலை இல்ல... ஆனா என் ரூம்க்குள்ள மட்டும் நுழையற வேலை வைச்சுக்காதே..." என்றாள்.
ரவி யோசனையோடு தான்தான் இவள் ரூமுக்குள் நுழைந்து போட்டோவை எடுத்ததோம் என்பதை இவளா யூகித்தாளா அல்லது வேறு யாராவது சொல்லி இருப்பார்களா என சிந்தித்தவன் இது அந்த வேலையாள் கருணாவின் வேலையாக கூட இருக்கும் என்று சந்தேகித்தான்.
அந்த அறையில் ஏதேனும் ரகசியத்தை வைத்திருப்பாளோ என்ற எண்ணம் அவனுக்குள் அடிக்கடி தோன்றி கொண்டுதான் இருந்தது. ஆனால் இன்று அவள் பேசுவதை வைத்து பார்த்தால் நிச்சயம் ஏதோ ரகசியம் உள்ளே இருக்கும் என்றே அவன் உறுதி செய்தான்.
மன்னிப்பு
சென்னை பெசன்ட் நகரில் உள்ள எலியாட்ஸ் கடற்கரை. தங்க நிறத்தில் தகதகவென மின்னிக் கொண்டிருக்கும் கதிரவனின் பொன்கிரணங்கள் பட்டு கடல்நீரை எல்லாம் பொன்னாய் ஜொலிக்க செய்ய, அந்த அழகான விடியல் பொழுதில் ஜாகிங் உடையில் தமிழ் தன் சிரத்தை திருப்பி அப்படியும் இப்படியுமாய் வீரேந்திரனை தேடிக் கொண்டிருந்தாள்.
அவள் விழிகளும் சுழன்று சுழன்று அவனையே காண துடித்து கொண்டிருக்க இன்றும் மன்னிப்பு கேட்கும் வாய்ப்பு கிட்டாதோ என மனதளவில் நம்பிக்கை இழந்தாள்.
அந்த சமயத்தில் எதிர்பாராமல் அவள் தோள் லேசாய் இடிப்பட கடந்து போனவனை திட்ட யத்தனித்த சமயத்தில் ஒரு கம்பீரமான குரல் "சாரி" என்று சொல்லியபடி திரும்ப அப்போது அவர்கள் இருவரின் சந்திப்பும் இயல்பாகவோ அல்லது விதியின் வசத்தாலோ நிகழ்ந்துவிட்டது.
வீரேந்திரன் தமிழை பார்த்து சற்று ஸ்தம்பித்து நிற்க அவளுமே அந்த நொடி ஜாகிங் உடையில் அவனின் உயரமான கம்பீர உடலமைப்பை கண்டு வியந்து நின்றாள்.
உடனடியாய் அவன் விழிகள் கூர் வாளாய் மாறி அவளை கோபமாய் தாக்க முற்பட, அவளோ அவனை கண்டுவிட்ட களிப்பில் அழகாய் இதழ்கள் விரிய புன்னகையை உதிர்த்தாள்.
அந்த புன்னகையை கண்ட நொடி அவனின் கோபமெல்லாம் காணாமல் கறைந்து போவதை தடுக்க இயலாமல் சட்டென திரும்பி அவளை கவனிக்காதது போல் மீண்டும் அவன் ஓட்டத்தை தொடர்ந்தான்.
தமிழ் அவன் பின்னோடே போய் "ஹெலோ.. ஏசிபி சார்" என்று அழைக்க அவன் காதில் வாங்கிக் கொள்ளாமல் முன்னேறி சென்றான்.
அவளோ விடாமல் துரத்தியபடி "ஏசிபி சார் நில்லுங்க..." என்றாள்.
அவனும் பொருட்படுத்தாமல் ஓடிக் கொண்டிருக்க மீண்டும் மீண்டும் அவளின் அழைப்பு அவன் செவியை துளைத்து கொண்டு நுழைந்தாலும் அவன் மூளை கர்வமாய் அவளை மதிக்க வேண்டாமென கட்டளையிட்டு கொண்டிருந்தது.
அவளுக்கோ இப்படி வேண்டா வெறுப்பாய் தவிர்ப்பவனை பின்தொடர்வது எரிச்சலை ஏற்படுத்த மனதிற்குள் 'பெரிய இவன்னு நினைப்பு... கூப்பிட கூப்பிட கேட்காத மாறியே போறான்... அவ்வளவும் ஈகோ.....' என எண்ணி கொண்டவள் குரலை உயர்த்தி "ஒரு பொண்ணை நின்னு முகத்துக்கு நேரா பேஃஸ் பண்ண முடியாம தெறிச்சு ஓடிறீங்க... இதுதான் ஏசி சாரோட வீரமா?! நீங்கெல்லாமா நம் நாட்டோட சட்ட ஒழுங்கை காப்பாத்த போறீங்க... ஸோ ஸேட்" என்று ஏளனமாய் உரைக்க
அந்த வார்த்தைகள் அவன் ஈகோவை அழுத்தமாய் தூண்டிவிட அப்படியே தன் ஓட்டத்தை நிறுத்தியவன் அவளை நோக்கி சீற்றமாய் எழும்பிவரும் கடல் அலைகள் போல விறுவிறுவென வந்து எதிரே நின்றான். அவளுக்கு அவனின் உக்கிரமான பார்வை லேசாய் கிலியை உண்டுபண்ணியது.
இருந்தாலும் அவனை எதிர்நோக்கி திடமாய் அவள் நிற்க அவன் சினத்தோடு "இப்போ யாரு தெறிச்சு ஓடினது" என்று கேட்டான்.
அவள் அலட்சியமான புன்னகையோடு "வேற யாரு ஏசிபி சார்... நீங்கதான்" என்றாள்.
"முதல்ல ஒரு விஷயத்தை புரிஞ்சிக்க... நான் உன்னை பார்க்க பேச கூட விருப்பப்படல... அதனாலதான் ஒதுங்கி போறேன்... அதை நீ உனக்கு சாதகமா எடுத்துக்காதே... " என்றான்.
அவள் ஏதோ பேச யத்தனிக்க அவளை பேசவிடாமல் "நீ செஞ்ச வேலைக்கு உன்னை எல்லாம்... !" என்று சொல்லிவிட்டு அவன் கோபத்தை காட்ட முடியாமல் இயலாமையோடு நின்றவன், வெறுப்பை பார்வையிலேயே உமிழ்ந்துவிட்டு திரும்பி செல்ல யத்தனிக்க
அவளுக்கு கோபம் ஏற்பட்டாலும் அதை காட்டும் நேரம் இது இல்லை என பொறுமையோடு "ஏசி சார்... நான் சொல்றதை கேட்டிட்டு ஒரே நிமிஷம் போங்க" என்றாள்.
அவன் திரும்பி அவளை அதே மாறாத வெறுப்போடு நோக்க அவள் நிதானமாய் "எனக்கு உங்க கோபம் புரியுது... பட் நான் அப்படி ஒரு தப்பை தெரிஞ்சி செய்யல... இந்த மாதிரி தப்பை நான் என் கரியர்ல இதுவரையிலும் செஞ்சதே இல்ல.. ஏதோ மிஸ்அன்டர்ஸ்டேன்டிங்லதான் அப்படி ஒரு தப்பான நீயூஸ் பப்ளிஷ் பண்ணிட்டேன் ... எக்ஸ்ட்டிரீம்லி சாரி பாஃர் தட்... " என்று சொல்ல அவனின் கோபம் துளியளவும் குறைந்ததாகவே தெரியவில்லை.
அவன் அலட்சிய பார்வையோடு "குத்தி காயப்படுத்திட்டு சாரி கேட்டா சரியா போயிடுமா" என்றான்.
"நீங்க சொல்றது புரியுது... நான் மறுப்பு செய்தியும் கொடுத்திட்டேன்...அது நெக்ஸ்ட் வீக் மேகஸின்ல வந்திரும்" என்றாள்.
"அதெப்படி ?!... உங்க இஷ்டத்துக்கு நீங்க எழுதிடுவீங்க... அப்புறம் மறுப்பு செய்தி கொடுத்திட்டா முடிஞ்சிடுமா... எனக்கு இதனால ஏற்பட்ட அவமானத்திற்கு என்ன பதில்? " என்று கேட்டான்.
அவள் மௌனமாய் நிற்க அவனோ கூர்மையாய் நோக்கி "பதில் சொல்ல முடியல இல்ல" என்று கேட்க
அவள் ஏதோ சொல்ல யத்தனிக்க அவன் கையமர்த்தி
"நான் என்ன சொன்னாலும் உன்னால என் நிலைமையை புரிஞ்சிக்கவும் முடியாது... இப்ப நீ போடற உன் மறுப்பு செய்தியால எதையும் மாத்திடவும் முடியாது... நீ எனக்கு ஏதாவது செய்ய முடியும்னா... பெட்டர் டோன்ட் கம் இன் மை வே...யூ காட் இட்" என்று அதிகாரமாய் சொல்லிவிட்டு அவளை புறக்கணித்தபடி அவன் எதிர்புறத்தில் முன்னேறி வேகமாய் செல்ல அவள் மனமோ தவிப்புற்றது.
ஆனால் மீண்டும் ஏதோ எண்ணம் தோன்ற தூர சென்றவனை நோக்கி ஓடிவந்தவள் அவனை வழிமறித்து மூச்சிறைத்தபடி நின்றாள்.
அவன் புரியாமல் அவளை பார்க்க அவள் தன்னைத்தானே ஆசுவாசப்படுத்தி கொண்டுவிட்டு அவனை நோக்கி "திரும்பவும் சொல்றேன்... உங்க பேரை கெடுக்கனும்னோ... இல்ல உங்க டிக்னிட்டியை ஸ்பாயில் பண்ணனும்னோ நான் இப்படி எல்லாம் செய்யல... என்னை நம்புங்க...
ஒரு காலேஜ் பொண்ணு... நீங்க அவகிட்ட மிஸ்பிகேவ் பண்ணதா சொன்னா... நீங்க விடாம டார்ச்சர் பன்றதா வேற சொன்னா... நான் இதை பத்தி கமிஷ்னர்கிட்ட கம்பிளைன்ட் பண்ணலாம்னு சொன்னதுக்கு... போலீஸ்கிட்ட போனாலே என் கரியர் லைஃப் எல்லாம் ஸ்பாய்லாயிடும்னு பயந்தா.. அதான்" என்று நினைத்ததை பேசிவிட்டு அமைதியானவளை நோக்கி
குழப்பத்தோடு "யார் அந்த பொண்ணு... அவ டீடைல்ஸ் இருக்கா உன்கிட்ட" என்று கேட்க
"ம்ம்ம்" என்று சொல்லி அவள் கைப்பேசியில் இருந்த ஒரு பெண்ணின் புகைபடத்தை காண்பித்து அவள் பதிவு செய்து வைத்திருந்த அந்த பெண் பேசியதெல்லாம் அவனுக்கு போட்டு காண்பிக்க, அவன் அவற்றை எல்லாம் கேட்டு திகைப்புற்றான்.
அவன் அவளை நோக்கி "யாராச்சும் என்னை பத்தி இப்படி தப்பு தப்பா சொன்னா உடனே அதை நம்பி எதை வேணா எழுதிடறதா?" என்று மீண்டும் கோபமாய் கேட்க
"அப்படி இல்ல... நானே தனிப்பட்ட முறையில உங்களை பத்தி விசாரிச்சேன்"
"என்ன விசாரிச்ச ?"
"நீங்க காலேஜ் டேஸ்ல எல்லாம் பிளே பாயாமே ... நிறைய கேர்ள் பிரண்ட்ஸ் அப்படின்னு" என்று சொன்னவளை கோபமாய் முறைத்து
"ஸ்டாப் இட்... அதெல்லாம் என் பழைய கதை" என்று சொல்ல
"அப்போ அதெல்லாம் உண்மைதானா ?" என்று கேட்டு நம்ப முடியாமல் பார்த்தவளிடம்
"அது என் பெர்ஸன்ல்" என்றான்.
"சரி ஒகே ... அப்போ அந்த ராதா கேஸ்" என்று அவனை நோக்கி கேட்க
வீரேந்திரன் தன் முகவாயாய் தடவியபடி யோசித்தவன் மெல்ல தன் பாதையில் முன்னேறி நடக்க அவளும் அவனை பின்தொடர்ந்தாள். பின்னர் அவன் அவளை நோக்கி "அந்த கேஸ்ல... ராதாவோட ஹஸ்பென்ட் வீட்டில வேலை செய்ற பொண்ணுகிட்ட மிஸ்பிகேவ் பண்ணிருக்கான்... அவனை தடுக்க ராதா முயற்சிக்கும் போது கொஞ்ச பலமா அடிச்சதில அவன் இறந்துட்டான்... தற்காப்புக்காக கொலைன்னு பைஃல் பண்ணிரூக்கலாம்... ஆனா கோர்ட் கேஸ்னு அலையனும்... ராதா... அப்புறம் அந்த பதினெட்டு வயசு பொண்ணோட ப்யூச்சர்னு... எல்லாத்தையும் பத்தி யோசிச்ச போது... நேர்மையா இருக்கிறதை விட மனதாபிமானத்தோட நடந்துக்கனும்னு தோணுச்சு... ஸோ நான் அந்த கேஸ்ஸை ஆக்ஸிடென்ட்னு பைஃல் பண்ணேன்...இதுல என்ன தப்பு..." என்று அவன் கேட்கவும் அவளுக்கு அந்த நொடி அவனின் மீது அளவுகடந்த மரியாதை ஏற்பட்டது. அவனை போய் தவறாக சித்திரித்துவிட்டோமே என்ற கோபம் அவளுக்கு அவள் மீதே உண்டானது.
தமிழின் மனதில் அவன் மலையென உயர்ந்து நிற்க, வீரேந்திரனுக்கும் ஒருவாறு தமிழ் மீது ஏற்பட்ட தவறான பிம்பம் மாறியிருந்தது. இருவருமே மௌனமாய் அந்த மணற்பரப்பில் நடந்து கொண்டிருந்தனர்.
தமிழ் தன் மௌனத்தை கலைத்தபடி "நான் கேட்ட... விசாரிச்ச விஷயம் எல்லாம் உங்களை தப்பாவே காட்டிடுச்சா... இல்ல நான்தான் தப்பான கண்ணோட்டத்தில உங்களை பார்த்திட்டனான்னு எனக்கு தெரியல... பட் எப்படி பார்த்தாலும் நான் செஞ்சது பெரிய தப்புதான்... எனக்கு ரொம்ப கில்டியா இருக்கு... ப்ளீஸ் என்னை மன்னிச்சிடுங்களேன்" என்று கேட்டாள்.
அவன் அவளை பார்த்தபடி "தப்பு செய்றது எல்லோருமே பண்ணுவாங்க... பட் அந்த தப்புக்கு இறங்கி வந்து மன்னிப்பு கேட்கிற துணிச்சல்... அது நிறைய பேர்கிட்ட இருக்கிறதில்ல... யூ ஹேவ் தட் கட்ஸ்" என்று சொல்லியவன் அவனின் முகத்தின் இறுக்கத்தை தளர்த்தி புன்னகையை வீசினான்.
அவனின் அந்த காந்தமான புன்னகையில் இருந்த ஈர்ப்புவிசையில் தமிழ் மீளாமல் அப்போது சிக்கி கொண்டாள் என்றே சொல்ல வேண்டும். அந்த சமயத்தில் அவளின் நினைவெல்லாம் எங்கோ தொலைந்து போயிருக்க அவள் வழியில் இருந்த மேட்டை கவனிக்காமல் இடித்து சற்று தடுமாறி விழப்போக அவன் அவளை விழாமல் தன் கரத்தால் தாங்கி கொண்டான்.
அவனின் கரத்தின் பிடி கொஞ்சம் அழுத்தமாக அவள் தேகத்தில் படிந்திருக்க அச்சப்பட்டு அவசரமாய் விலகி நின்று முகத்தை வேறுபுறம் திருப்பி கொண்டாள்.
எத்தனையோ பேரை அவன் கரம் அறிந்து கொள்ளாமல் ஸ்வேதா நின்று கரவொலி எழுப்ப, அந்த சத்தம் திரும்ப...
உங்கள் கருத்துக்காக ஆவலோடு காத்திருக்கிறேன். அப்படி கருத்து தெரிவிக்க முடியாமல் பிடித்திருந்தால் லைக் பட்டனை அழுத்த மறந்துவிடாதீர்கள்.
அவளோ சரிந்து விழுந்த போது தாங்கி கொண்டவனிடமே மனமும் சரிய பார்ப்பதினை தடுக்க முடியாமல் தவிப்போடு நின்றாள்