Enna solrathunae teriyala ka..ungala mam nu koopida thoonala muthal muthala. Ella authors aayum mam nu koopittu thaan pesuvean..may be avanga sonna thaan akka nu koopiduvean but intha kathaiyaa padichathil irunthu ungala ennoda nerukkama paaka thoonuthu ka. Ennkum thamizh romba pidikkum. Mark vaanga mudiyaathu nu vera language eduthavangala paathu neenga aathangam thaan paduringa but naalaam kaanapinna nu manasukulla thittuvean...haha for example appuram yean inga porantha antha maathiri.. intha kathai ennoda heart aa over aa touch panni simavaasal aranmanai yaa paarthey aaganum gra alavuku veri vanthuduchi appuram unga karpanai nu sonnathum yaemaatrama poochu..paravalla athu maathiri yaethaiyoo namma oorulla iruku atha paathukurean..hats off to you for this story ka...முடிவுரை
அன்பிற்குரிய வாசக நண்பர்களே,
வணக்கம்
இந்த கதை அதற்கு பிண்ணனியில் உள்ள கருத்துக்களை நான் சொல்லாமலே பலருக்கும் புரிந்திருக்கும். இருந்தாலும் நான் சொல்ல நினைத்த சில விஷயங்களை இங்கே பதிவிட்டுவிடுகிறேன். என் கதையை பொறுமையாய் படித்தது போல இந்த முடிவுரையையும தயவு கூர்ந்து முழுவதுமாய் படித்துவிடுங்கள்.
அதுவே இந்த கதையை எழுதியதின் ஒரே நோக்கம்.
தமிழன் என்ற ஒரு இனம். அவனுக்கென்று பல்லாயிரம் பெருமைகளும் சிறப்புகளும் இருந்தன. இன்று இருக்கிறதா? நாளை இருக்குமா? அதெல்லாம் தெரியாது. ஆனால் அதை காக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.
நம் பழமையையும் பாரம்பரியத்தையும் எதுக்கு வேலை வெட்டியில்லாம காப்பாத்துகிட்டு.
ஒன்றே குலம் ஒருவனே தேவன் - ஆயிரம் வருடம் முன்பு திருமூலர் சொன்ன கருத்து.
யாதும் ஊரே யாவரும் கேளீர்..
கணியன் பூங்குன்றனாரின் வரிகள். இந்த பெருமைக்குரிய கருத்துக்களை என்றோ சொல்லப்பட்டுவிட்டது.
ஆனால் இதையெல்லாம் சொல்லிக் கொடுக்கத்தான் ஆளில்லாமல் போய்விட்டது. தமிழ் படித்தால் மார்க் எடுக்க முடியாதுன்னு பிரெஞ்ச் மற்றும் சமஸ்கிருதம் படிக்கிறேன் என பல மாணவர்கள் சொல்ல கேட்க அதீதமான வலி.
நாம எதை தொலைக்கிறோம்னு தெரியாமலே தொலைச்சிட்டிருக்கோம்.
இன்னைக்கான கல்வி முறை நம்மை எல்லாம் பணம் படைக்கும் ஒரு இயந்திரமாகவே உருவாக்குகிறது.
பண்புள்ளவனாய் உருவாக்குவதில்லை. ஒரு ஆசிரியையாக இதனை கண்கூடாய் பார்த்தவள் நான்.
நாம் எல்லோரும் இன்னைக்கு அறிவாளி குருடர்களாய் மாற்றப்பட்டிருக்கிறோம். ஆம் அறிவாளி குருடர்கள்தான்.
முதலில் தாய்மொழி கல்வி என்பது தாய்ப்பால். ஆனால் நாம் பருகி கொண்டிருப்பது புட்டி பால். பின் நம் சமுதாயம் எங்கிருந்து ஆரோக்கியமாய் கட்டமைக்கப்படும்.
ஒரு விஷயத்தை அழுத்தமாய் பதிவிடுகறேன்.
இலக்கியமும் செய்யுளும் படிச்சா போரடிக்கும்னு நாம படிக்காம விட்டுட்டோம். ஆனால் அதில் சொல்லப்படாத விஷயங்களே இல்லை.
வீரம் காதல் கொடை பக்தி அறிவியல் இயற்கை விவசாயம் அறம் என எல்லாமே அடங்கியது நம் தமிழ் மொழி.
தமிழ் இலக்கியங்களும் தமிழ் வரலாறும் சொல்லும் கருத்தில் பல அறிவியல் ரசியங்கள் இருக்கு. இயற்க்கையை காப்பதற்கான வழிமுறை இருக்கு. ஒவ்வொரு மனிதனும் ஆரோக்கியமாய் வாழ மருத்துவம் சொல்லப்பட்டிருக்கு. ஒருவன் அறம்சார்ந்து நடக்க எண்ணிலடங்கா கருத்துக்கள் இருக்கு. எல்லாமே இருக்கு. ஆனால் அதை துச்சமாய் தூக்கிப்போட்டுவிட்டு எங்கேயோ ஓடிக் கொண்டிருக்கிறோம்.
Hiroshima nagasaki அழிந்ததை சொல்லித்தரும் நம் கல்விமுறை First world war, second world war என இவற்றிற்கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்கும் நம் வரலாற்று புத்தகங்களில் பல்லாயிரம் வருட பழமையான நம் வரலாறுக்கு எத்தனை பக்கங்கள் இருக்கும்.
Revolt of 1857 முதல் சுதந்திர போராட்டம் னு சொல்லி கொடுப்பது உண்மையில்லை. ஆம் அது முதலில் தமிழகத்தில் ஆரம்பித்தது.
வேலூர் புரட்சிதான் முதல். வரலாற்றில் கூட நம் சிறப்பு மறைக்கப்பட்டு ஒரு பொய்யான வரலாறை நாம் படித்து கொண்டிருக்கிறோம்.
இதையெல்லாம் இனிமே தெரிந்து என்னவாகப் போகிறதுன்னு கேட்காதீங்க.
இழந்ததை மீட்க முடியாவிடிலும் இனி எதையும் இழக்காமல் இருக்க முற்படுவோமே!
நாம நம் வருங்கால சந்ததிகளுக்கு இதையெல்லாம் கொண்டு சேர்க்கனும்.
இயற்கையை நேசிச்சி காதலித்தவன் தமிழன்.
கல்லணையை கட்டிய கரிகாலன் பற்றி ஒரு சுவரஸ்யமான தகவல். காவிரி வீணாய் சென்று கடலில் சேரவிடாமல் அது விவசாயத்துக்கு பயன்பட வேண்டும் என நினைத்தான்.
கரிகாலன் கடற்கரையில் நின்று யோசித்திருந்த போது அவன் நின்றிருந்த இடத்தில் அலைகள் வந்து அடித்து அவன் கால்கள் மண்ணில் புதைந்ததாம். அப்போது தோன்றியது ஓர் யோசனை அவனுக்கு. பெரிய தூண்களை கட்டமைத்து ஓடும் நதி பிரவாகத்தில் நிறுத்தினால் அது நிச்சயம் மண்ணில் புதையுறும். அது கல்லணை கட்ட ஏதுவாய் இரூக்கும். இதுவே தமிழனின் புத்திக்கூர்மை. இயற்கையை செழிப்புற செய்ய நம் அறிவு பயன்ப்பட்டது என்பதற்கு சான்று.
நாமெல்லாம் தஞ்சை செல்லும் வழியில் திருப்பாலைதுறையில் பாலைவனநாத சுவாமி கோவிலுக்கு போக வேண்டும். கட்டிடக்கலைஞர்களை பிரமிக்க வைக்கும் பிரமாண்டமானை நெற்களஞ்சியம் சோழன் காலத்தில் கடட்மைக்கப்பட்டு இருக்கிறது.
தஞ்சை பெரிய கோவில். பிரமிப்பின் உச்சக் கட்டம். அங்கே வெளியே இருக்கும் துவாரபாலகர் சிலையை பார்த்ததுண்டா? யானையை விழுங்கும் பாம்பும், அதனை மிதித்த படிநிற்கும் துவார பாலகர்கள். யானையே பெரியது. அதை விழுங்கும் பாம்பு எத்தனை பெரியது. அதனை மிதிக்கும் துவாரபாலகன் எத்தனை பெரியவன். அத்தகைய துவார பாலகனை காவலனாய் கொண்ட மூலஸ்தல நாயகன் எத்தனை பெரியவன்.
அந்த சிற்பியின் சிந்தனையும் அறிவும் எத்தனை எத்தனை பெரியது. அங்கே நிற்கிறான் தமிழன்.
ஆனால் இன்று அடிமைப்பட்டு ஊழியம் செய்ய போய்விட்டோம். சில விஷயங்களை மாற்ற இயலாது எனினும் இதையெல்லாம் மொத்தமாய் மறந்துவிட கூடாது.
இன்று நம்முடைய நெற்களஞ்சியம் விரைவில் மீத்தேன் வாயுவால் பாலைவனமாய் மாறப் போகிறது.
நாம் நம் பழமையை இனியும் மறந்திருந்தால், அதன் விளைவு இன்னும் இதை விட மோசமான விபரீதங்களில் போய் முடியும்.
நான் இந்த கதையில் மூழ்கி போன சிலையென உரைப்பது நம் தமிழ் உணர்வை.
விலை மதிப்பில்லாத கீரிடம் என்று சொல்லியிருப்பது நம் தமிழ் மொழியை...
அந்த தமிழன் என்கிற உணர்வை எங்கயோ தொலைந்து
அடி ஆழத்தில் இருக்க, அந்த உணர்வு வெளிப்பட்டால் மட்டுமே அந்த கீரிடம் அதன் சிறப்பை பெற முடியும்.
அதாவது நம் மொழி அதன் பெருமைக்குரிய இடத்தை அடைய முடியும்.
நம் உணர்வும் மொழியும் அழிந்துவிடவில்லை. அதனை யாரும் அழிக்கவும் முடியாது.
அதை வெளிகொணர வேண்டியதும் பாதுகாக்க வேண்டியதும் நம் கடமையல்லவா ?!
சிம்மவாசல் மற்றும். ராஜ சிம்மன் அரண்மனை என் கற்பனைதான் எனினும் அதற்கு பிண்ணனியில் காவிரிபூம்பட்டினம் என்ற ஒரு நகரம் இருக்கிறது. 1500 வருடங்களுக்கு முன்பே நூறு போர்க்கப்பல்கள் நின்றிருந்ததாம். அங்கே இரவும் பகலும் அங்காடிகள் இருக்க ஏற்றுமதி இறக்குமதி என பொன்னும் பொருளும் குவிந்திருந்த செழிப்பான நகரம். அதோடு வியாபரத்திலும் அந்த நகரம் பெரும் பேறு பெற்றிருந்தது.
ஆனால் ஒரே ஒரு பேரலை அந்த நகரத்தையே கடலுக்குள் இழுத்து கொண்டது.
இது ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான மணிமேகலையில் சொல்லப்பட்டிருக்கிறது.
நீங்கள் நம் பழமையையும் பாரம்பரியத்தையும் காக்க எண்ணினால் நேரம் கிட்டும் போதெல்லாம் நம் நாட்டில் உள்ள பழமையான கோவில்களுக்கு உங்கள் பிள்ளைகளை அழைத்துச் செல்லுங்கள்.
கடவுளை தரிசிப்பதை தாண்டி அதன் பழமையையும் வரலாறையும் நீங்களும் கற்று அவர்களுக்கும் மறவாமல் சொல்லித் தாருங்கள்.
நாம் நினைத்தால் மீண்டும் தமிழன் என்ற உணர்வை மீட்டெடுக்க முடியும். நம் குழந்தைளை பண்பாளனாய் மாற்ற முடியும். தமிழனாய் உணர வைக்க முடியும்.
ஒரு சிறிய வேண்டுகோள்.
உங்களின் கருத்தின் உந்துதலும் உத்வேகமே என்னை இந்த கதை எழுதி முடிக்க வைத்தது. தேடல் போட்டியின் கால அவகாசம் இன்னும் ஒன்றரை மாதங்கள் இருக்க நம் கதை முதலில் முடிவுற்றது மகிழ்ச்சியெனினும் ஓட்டு போடும் தருணம் போது தமிழச்சியை மறந்துவிடாதீர்கள்.
முதலில் முடித்ததால் வாசகர்கள் இந்த கதையை தேர்ந்தெடுப்பதில் பின்னடைவு செய்துவிட மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.
வாடி என் தமிழச்சியின் வெற்றி உங்கள் கையில்...
ஒவ்வொரு முறையும் சிறப்பான முறையில் கருத்தை பகிர்ந்து கொண்ட அத்தனை வாசகர்களூக்கும் நன்றி மற்றும் லைக் போட்டவர்களுக்கும்
என் மனம்கனிந்த நன்றி நன்றி நன்றி
கதையை குறித்த உங்களின் நீண்ட அலசல்களையும் விமர்சனங்களையும் மறவாமல் பகிர்ந்து கொள்ளுங்கள்.
விரைவில் ஆதியே அந்தமாய் தொடராக வரும். அதே சமயம் தேடல் போட்டில் நான் அவள் இல்லை கதையும் வர இருக்கிறது என அறிவிக்கிறேன்.
நன்றியுடன்
மோனிஷா