அத்தியாயம் – 1
இருள் கொஞ்சம் கொஞ்சம் விலகி வானம் நிறம் மாறி நீல வானம் சிவப்புவண்ண பட்டுடுத்த வெள்ளை மேகங்கள் வானில் உலா வர கிழக்கே தனது பணியினைத் தொடங்கினான் கதிரவன்...!
திருப்பூர் மாவட்டம்.. இங்கே இருக்கும் மக்கள் ஒரு ஊரை சேர்ந்தவர்கள் கிடையாது.. இந்தியாவின் எந்த மாநிலத்து மக்களையும் வா என்று அரவணைத்துக் கொள்ளும்.. சொல்ல போனால், “வந்தோரை வாழ வைக்கும் தமிழ்நாடு!” என்ற பெயர்க்கு சின்ன எடுத்துக்காட்டு இந்த திருப்பூர் மாவட்டம்.. இந்த ஊரில் ஆண், பெண் இருவரும் சரிக்கு சமமாக வேலை செய்ய கூடியவர்கள்..
ஆனால் அந்த காலை வேளையிலேயே பரபரப்புடன் காணப்பட்டது வெள்ளியாங்காடு.. திருப்பூர் மாவட்டத்தில் தெற்கில் காணப்படும் ஒரு சின்ன வார்டு.. ஆனால் இங்கே பனியன் கம்பெனிகளுக்கு பஞ்சம் இல்லை.. அதே போல இங்கே கிடைக்காத பொருட்களும் இல்லை..
பல மாநிலத்து மக்கள், பலவிதமான ஜாதிகள், பலவிதமான கொள்கைகள் உள்ள மக்கள் ஒன்றாக இணைப்பது இந்த பனியன் தொழிற்சாலையே..! இவர்கள் வாழும் இந்த இடத்தில் தான் வாழ்கின்றனர் பிரதீபனும், பாரதியும்..! அந்த காலைப்பொழுதில் மிகவும் பரபரப்புடன் காணப்பட்டது அந்த இனியனின் புதிய இல்லம்..!
இந்த இல்லத்தில் இன்னும் சற்று நேரத்தில் கிரகபிரவேசம் நடக்க போகிறது.. அதற்குள் இந்த இல்லத்தில் இருக்கும் நபர்கள் பற்றி அறிந்துக் கொள்ள என்னுடன் வாங்க..
இது தான் இவர்கள் தங்கி இருக்கும் வாடகை வீடு.. வாங்க உள்ளே என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்..
“அம்மா இன்னும் உள்ளே என்ன பண்ணிட்டு இருக்கீங்க..? வெளியே வாங்க..” என்று அறையில் உள்ளே குரல் கொடுத்த படியே தனது வேலையைத் தொடர்ந்தாள் உதயா,
“எதுக்கு இப்படி கத்துவா..? கொஞ்சம் மெதுவாக பேசிப்பழகு என்று உன்னிடம் எத்தனை முறை சொல்வது..?” என்று அறையில் இருந்து குரல் கொடுத்தார் பாரதி..
“காலையிலேயே ஆரமித்து விட்டார்கள்..” என்று உதயா முணுமுணுக்க, “என்ன அங்க வாய்க்குள் முணகுவது போல தெரிகிறது..?” என்றார் பாரதி.
“ஒன்னும் முணுமுணுக்க வில்லை..” என்றவள் தனது வேலையைத் தொடர, அவளின் எதிரே வந்த இனியன், “சத்தியமாக சொல்லு நீ முணகவே இல்லை..” என்று கேட்க,
“நான் முணகவே இல்லை..” என்று சொல்ல, “வரவர நீ நிறையாக பொய் சொல்கிறாய்..” என்று இனியன் சொல்ல,
“அம்மா..” என்று கத்தினாள் உதயா.. “ஐயோ கத்த ஆரமித்துவிட்டாள்..” என்று இனியன் காதை அடைத்துக் கொள்ள,
“இவர்கள் இருவருக்கும் இதே வேலையாக போய்விட்டது..” என்று திட்டியவர், அறையை விட்டு வெளியே வந்து, “எதுக்கு இப்படி கத்துகிறாய்..?” என்று மகளிடம் கேட்டார்..
“என்னை வம்புக்கு இழுக்கிறான்..” என்று தம்பியைப் பற்றி புகார் வாசித்தாள் பெரியவள்..
“நீ எதுக்குடா அவளிடம் வம்புக்கு நிற்கிறாய்..?” என்று மகனிடம் கேட்டார் பாரதி..
“இவள் முனகியதைக் கேட்டது என்னுடைய தவறா..?” என்றவன் கோபமாக எழுந்து செல்ல, “நீ அவனை விட ஐந்து வருடம் பெரியவள் தானே, எதற்கு அவனிடம் வம்பிற்கு நிற்கிறாய்..” என்றவர்..
“இனியா நீ இவளை விட ஐந்து வருடம் சிறியவன், அவளுக்குத் தான் படித்தும் புத்தியே இல்லை” என்று சொல்லி சமாதானம் செய்தார்..
“அப்பாவை இங்கே அழைத்துவாடா..” என்று உதயா சொல்ல, “அவருக்கு இங்கே வர விருப்பம் இல்லையாம்..” என்று இனியன் சோகமாக சொல்ல,
“இவருக்கு இதே வேலைதான்..” என்று பாரதி தனது காலை மண்டகப்படியை ஆரமிக்க, “என்ன யாருக்கு மண்டகப்படி நடக்கிறது..?” என்ற கேள்வியுடன் அங்கே வந்து சேர்ந்தார் பிரதீபன்..
“ம்ம் வழக்கம் போல உங்களுக்கு தான்..” என்று உதயா சிரித்தபடியே சொல்ல,
“எனக்குதானே நடந்திருக்கும்.. இவளுக்கு என்னை பேசவில்லை என்றால் தூக்கமே வராது..” என்று பிள்ளைகளிடம் மனைவியை பேச,
“ஆமாம்! நீங்கள் நான் பேசும் படியே தான் நடக்கிறீங்க..?” என்று பாரதி, பிரதீபனைப் பார்த்து கேட்டார்..
“பாரதி நீ சொல்வது போல என்னால் நடக்க முடியாது.. நான் என் விருப்பபடி தான் இருப்பேன்!” என்று சொன்னார்
“நீங்கள் திருந்தி விட்டால், உலகமே அழிந்துவிடும்..” என்று பாரதி கோபமாக சொன்னார்..
“நான் என்ன திருந்தாமல் இருக்கிறேன்..? நீ என்ன திருத்த வந்து விட்டாய்..?” என்று பிரதீபன் சண்டைக்கு தயாராக, அதுவரையில் இருந்த விளையாட்டு மாறி, “அப்பா வாங்க அக்கா நீ அம்மாவை உள்ளே அழைத்துச் செல்..” என்று இனியன் கூறினான்..
“அம்மா வாங்க..” என்று அழைத்துச் சென்றாள் மகள்..
“இவர்கள் இருவரும் ஒரு இடத்தில் பத்து நிமிடம் இருந்தால், சண்டை வருவது நிச்சயம்..” என்று சொன்னான் இனியன்,
“அம்மா இன்னும் எதுக்கு இங்கே நிக்கிறீங்க.. வாங்க அம்மா இன்று நமது வீட்டில் கிரகபிரவேசம் அது உங்களின் எண்ணத்தில் இருக்கிறதா..?” என்று பாரதியை அறையின் உள்ளே அழைத்துச் சென்றாள் உதயா..
“அப்பா என்னப்பா நீங்க அவங்களைப் பற்றி தெரிந்தும் இன்னைக்கும் உங்களின் சண்டையை ஆரமித்து விட்டீர்களா..?” என்று இனியன் கேட்டான்
“நானா ஆரமித்தேன் அவள் தான் ஆரமித்தாள்..” என்று மனைவியைப் பற்றி மகனிடம் புகார் பத்திரம் வாசித்தார் தந்தை
“அப்பா நீங்க வயதில் தான் பெரியவர்.. ஆனால் பண்ணுவதைப் பார்த்தால், ஸ்கூல் பிள்ளைகளைவிட மோசம்!” என்று கூற
“நான் என்ன பண்ணினேன்..?” என்று மகனைப் பார்த்துக் கேட்டவர், அறையின் பக்கம் “உதயா இவன் லக்சர் எடுக்கிறான்..” என்று கூறினான்
“அவன் லக்சர் எடுத்த படித்து பாஸ் பண்ணுங்க.. இப்போ முதியோர் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர்..” என்று கூற, அதைக்கேட்டு பிரதீபன் முகம் ஒருவிதமாக மாற அதைப்பார்த்து இனியன் சிரிக்க,
அறையின் உள்ளே இருந்த பாரதிக்கு சிரிப்புதான் வந்தது, “உன்னோட அப்பா மட்டும் படித்திருந்தால், நான் அவ்வளவு தான் உதயா.. நம்மளை திருப்பூர் பக்கமே வரதே என்று சொல்லி விடுவார்..” என்று சொல்லி சிரிக்க அவருடன் சேர்ந்து சிரித்தாள் உதயா..
“அப்பா வீட்டைப் பூட்டி விட்டு வந்தீர்களா...?” என்று கேட்டாள் உதயா..
“ம்ம் பூட்டி விட்டுதான் வந்தேன் உதயா..” என்றார் பிரதீபன்..
“என்ன உதயா அதிசயமாக இருக்கிறது..? வெளியே மழை வருகிறதா..? என்று பார்..” என்று கூறி சிரிக்க, அன்னையைப் பத்திரம் காட்டினாள் மகள்..
இருள் கொஞ்சம் கொஞ்சம் விலகி வானம் நிறம் மாறி நீல வானம் சிவப்புவண்ண பட்டுடுத்த வெள்ளை மேகங்கள் வானில் உலா வர கிழக்கே தனது பணியினைத் தொடங்கினான் கதிரவன்...!
திருப்பூர் மாவட்டம்.. இங்கே இருக்கும் மக்கள் ஒரு ஊரை சேர்ந்தவர்கள் கிடையாது.. இந்தியாவின் எந்த மாநிலத்து மக்களையும் வா என்று அரவணைத்துக் கொள்ளும்.. சொல்ல போனால், “வந்தோரை வாழ வைக்கும் தமிழ்நாடு!” என்ற பெயர்க்கு சின்ன எடுத்துக்காட்டு இந்த திருப்பூர் மாவட்டம்.. இந்த ஊரில் ஆண், பெண் இருவரும் சரிக்கு சமமாக வேலை செய்ய கூடியவர்கள்..
ஆனால் அந்த காலை வேளையிலேயே பரபரப்புடன் காணப்பட்டது வெள்ளியாங்காடு.. திருப்பூர் மாவட்டத்தில் தெற்கில் காணப்படும் ஒரு சின்ன வார்டு.. ஆனால் இங்கே பனியன் கம்பெனிகளுக்கு பஞ்சம் இல்லை.. அதே போல இங்கே கிடைக்காத பொருட்களும் இல்லை..
பல மாநிலத்து மக்கள், பலவிதமான ஜாதிகள், பலவிதமான கொள்கைகள் உள்ள மக்கள் ஒன்றாக இணைப்பது இந்த பனியன் தொழிற்சாலையே..! இவர்கள் வாழும் இந்த இடத்தில் தான் வாழ்கின்றனர் பிரதீபனும், பாரதியும்..! அந்த காலைப்பொழுதில் மிகவும் பரபரப்புடன் காணப்பட்டது அந்த இனியனின் புதிய இல்லம்..!
இந்த இல்லத்தில் இன்னும் சற்று நேரத்தில் கிரகபிரவேசம் நடக்க போகிறது.. அதற்குள் இந்த இல்லத்தில் இருக்கும் நபர்கள் பற்றி அறிந்துக் கொள்ள என்னுடன் வாங்க..
இது தான் இவர்கள் தங்கி இருக்கும் வாடகை வீடு.. வாங்க உள்ளே என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்..
“அம்மா இன்னும் உள்ளே என்ன பண்ணிட்டு இருக்கீங்க..? வெளியே வாங்க..” என்று அறையில் உள்ளே குரல் கொடுத்த படியே தனது வேலையைத் தொடர்ந்தாள் உதயா,
“எதுக்கு இப்படி கத்துவா..? கொஞ்சம் மெதுவாக பேசிப்பழகு என்று உன்னிடம் எத்தனை முறை சொல்வது..?” என்று அறையில் இருந்து குரல் கொடுத்தார் பாரதி..
“காலையிலேயே ஆரமித்து விட்டார்கள்..” என்று உதயா முணுமுணுக்க, “என்ன அங்க வாய்க்குள் முணகுவது போல தெரிகிறது..?” என்றார் பாரதி.
“ஒன்னும் முணுமுணுக்க வில்லை..” என்றவள் தனது வேலையைத் தொடர, அவளின் எதிரே வந்த இனியன், “சத்தியமாக சொல்லு நீ முணகவே இல்லை..” என்று கேட்க,
“நான் முணகவே இல்லை..” என்று சொல்ல, “வரவர நீ நிறையாக பொய் சொல்கிறாய்..” என்று இனியன் சொல்ல,
“அம்மா..” என்று கத்தினாள் உதயா.. “ஐயோ கத்த ஆரமித்துவிட்டாள்..” என்று இனியன் காதை அடைத்துக் கொள்ள,
“இவர்கள் இருவருக்கும் இதே வேலையாக போய்விட்டது..” என்று திட்டியவர், அறையை விட்டு வெளியே வந்து, “எதுக்கு இப்படி கத்துகிறாய்..?” என்று மகளிடம் கேட்டார்..
“என்னை வம்புக்கு இழுக்கிறான்..” என்று தம்பியைப் பற்றி புகார் வாசித்தாள் பெரியவள்..
“நீ எதுக்குடா அவளிடம் வம்புக்கு நிற்கிறாய்..?” என்று மகனிடம் கேட்டார் பாரதி..
“இவள் முனகியதைக் கேட்டது என்னுடைய தவறா..?” என்றவன் கோபமாக எழுந்து செல்ல, “நீ அவனை விட ஐந்து வருடம் பெரியவள் தானே, எதற்கு அவனிடம் வம்பிற்கு நிற்கிறாய்..” என்றவர்..
“இனியா நீ இவளை விட ஐந்து வருடம் சிறியவன், அவளுக்குத் தான் படித்தும் புத்தியே இல்லை” என்று சொல்லி சமாதானம் செய்தார்..
“அப்பாவை இங்கே அழைத்துவாடா..” என்று உதயா சொல்ல, “அவருக்கு இங்கே வர விருப்பம் இல்லையாம்..” என்று இனியன் சோகமாக சொல்ல,
“இவருக்கு இதே வேலைதான்..” என்று பாரதி தனது காலை மண்டகப்படியை ஆரமிக்க, “என்ன யாருக்கு மண்டகப்படி நடக்கிறது..?” என்ற கேள்வியுடன் அங்கே வந்து சேர்ந்தார் பிரதீபன்..
“ம்ம் வழக்கம் போல உங்களுக்கு தான்..” என்று உதயா சிரித்தபடியே சொல்ல,
“எனக்குதானே நடந்திருக்கும்.. இவளுக்கு என்னை பேசவில்லை என்றால் தூக்கமே வராது..” என்று பிள்ளைகளிடம் மனைவியை பேச,
“ஆமாம்! நீங்கள் நான் பேசும் படியே தான் நடக்கிறீங்க..?” என்று பாரதி, பிரதீபனைப் பார்த்து கேட்டார்..
“பாரதி நீ சொல்வது போல என்னால் நடக்க முடியாது.. நான் என் விருப்பபடி தான் இருப்பேன்!” என்று சொன்னார்
“நீங்கள் திருந்தி விட்டால், உலகமே அழிந்துவிடும்..” என்று பாரதி கோபமாக சொன்னார்..
“நான் என்ன திருந்தாமல் இருக்கிறேன்..? நீ என்ன திருத்த வந்து விட்டாய்..?” என்று பிரதீபன் சண்டைக்கு தயாராக, அதுவரையில் இருந்த விளையாட்டு மாறி, “அப்பா வாங்க அக்கா நீ அம்மாவை உள்ளே அழைத்துச் செல்..” என்று இனியன் கூறினான்..
“அம்மா வாங்க..” என்று அழைத்துச் சென்றாள் மகள்..
“இவர்கள் இருவரும் ஒரு இடத்தில் பத்து நிமிடம் இருந்தால், சண்டை வருவது நிச்சயம்..” என்று சொன்னான் இனியன்,
“அம்மா இன்னும் எதுக்கு இங்கே நிக்கிறீங்க.. வாங்க அம்மா இன்று நமது வீட்டில் கிரகபிரவேசம் அது உங்களின் எண்ணத்தில் இருக்கிறதா..?” என்று பாரதியை அறையின் உள்ளே அழைத்துச் சென்றாள் உதயா..
“அப்பா என்னப்பா நீங்க அவங்களைப் பற்றி தெரிந்தும் இன்னைக்கும் உங்களின் சண்டையை ஆரமித்து விட்டீர்களா..?” என்று இனியன் கேட்டான்
“நானா ஆரமித்தேன் அவள் தான் ஆரமித்தாள்..” என்று மனைவியைப் பற்றி மகனிடம் புகார் பத்திரம் வாசித்தார் தந்தை
“அப்பா நீங்க வயதில் தான் பெரியவர்.. ஆனால் பண்ணுவதைப் பார்த்தால், ஸ்கூல் பிள்ளைகளைவிட மோசம்!” என்று கூற
“நான் என்ன பண்ணினேன்..?” என்று மகனைப் பார்த்துக் கேட்டவர், அறையின் பக்கம் “உதயா இவன் லக்சர் எடுக்கிறான்..” என்று கூறினான்
“அவன் லக்சர் எடுத்த படித்து பாஸ் பண்ணுங்க.. இப்போ முதியோர் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர்..” என்று கூற, அதைக்கேட்டு பிரதீபன் முகம் ஒருவிதமாக மாற அதைப்பார்த்து இனியன் சிரிக்க,
அறையின் உள்ளே இருந்த பாரதிக்கு சிரிப்புதான் வந்தது, “உன்னோட அப்பா மட்டும் படித்திருந்தால், நான் அவ்வளவு தான் உதயா.. நம்மளை திருப்பூர் பக்கமே வரதே என்று சொல்லி விடுவார்..” என்று சொல்லி சிரிக்க அவருடன் சேர்ந்து சிரித்தாள் உதயா..
“அப்பா வீட்டைப் பூட்டி விட்டு வந்தீர்களா...?” என்று கேட்டாள் உதயா..
“ம்ம் பூட்டி விட்டுதான் வந்தேன் உதயா..” என்றார் பிரதீபன்..
“என்ன உதயா அதிசயமாக இருக்கிறது..? வெளியே மழை வருகிறதா..? என்று பார்..” என்று கூறி சிரிக்க, அன்னையைப் பத்திரம் காட்டினாள் மகள்..