Hi mam
மலையேற்றத்தின்போது தங்களின் தற்போதய நிலை மறந்து இயல்பாக உரையாடுகின்றார்கள்,அது ஏதோ ஒருவித த்தில் ஈர்க்கப்பட்டுள்ளதைதான் காட்டுகின்றது, அவர்களுக்குள் புலப்படாத விடயம் என்னவென்றால் ஏதோ ஒருவித இலகுவான உணர்வு ஒருவர் மீது ஒருவருக்கு இருக்கின்றது,அதை அவர்கள் புரிந்துகொள்ள இன்னும் சந்தர்ப்பம் வரவில்லை, ஆபத்தில் அல்லது பணயக்கைதியாக இருக்கும் சூழலில் எல்லாவற்றிலும் நிதானம் வேண்டும் ,ஆனால் ஷ்யாம் விடயத்தில் மஹாவிடம் துளியளவு கூட இல்லை,தான் என்ற நிலையிலிருந்து ஒருபடி கீழே இறங்கி ஷ்யாம் மஹாவுக்காக யோசிப்பது கல்லுக்குள்ளும் ஈரம் இருப்பதை காட்டுகின்றது,இனிமேல் ஷ்யாமுக்கு பிரச்சனையே விஜய்தானா,விஜய் இனி உள்ளிருந்து கொல்லும் பகையா,ஷ்யாமுடன் இவ்வளவு காலமாக வேலை செய்த விஜய்க்கு ஷ்யாமின் நடவடிக்கைகள் எப்படி இருக்குமென்று கொஞ்சமாவது புரியும்,அதனால் அவரை வீழ்த்துவது குடைச்சல்கொடுப்பது கொஞ்சம் இலகுவாக இருக்கும்,ஆனால் விஜய் விஜயின் தற்போதய காதல் நட்பு காதலி கடத்தப்பட்டது கடத்தலுக்கான காரணகர்த்தா தான் என்றும், விஜயின் கோபம் தன்மேல் இப்போது திரும்பியிருக்கும் என்பதையும்,அதனால் அவர் நடவடிக்கை எப்படி இருக்குமென்றும் ஷ்யாம் ஊகித்து செயல்படுவார்தானே,இனி இவர்கள் இருவருக்கும் நேரடியாகவோ அல்லது திரைமறைகாயாக போர் நடக்குமென்று நினைக்கிறேன், கார்த்திக் போகுமிடமெல்லாம் கதவுகள் மறைமுகமாக ஷ்யாமின் கரங்களால் மூடப்படுகின்றது,இப்போது மஹா அம்மாவிற்கு தெரிந்துவிட்டது,அவர் எந்த வகையில் கார்த்திக்கு உதவி தன்பெண்ணை தன்னிடம் கொண்டு வரப்போகின்றார்,மஹா வேறு இப்போ ஷ்யாமை வெறுப்பேற்றி வைத்திருக்கின்றார் அங்கு இன்னும் என்ன பிரச்சனை வரப்போகின்றதோ தெரியவில்லை.
நன்றி