Vasumathishiva
நாட்டாமை
எதிரில் கண்ட காட்சியில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக அதிர்ந்தனர்.பெற்ற பெண்ணை அந்த கோலத்தில் கண்ட சிவகாமி மணிவாசகத்தின் நெஞ்சில் நெருப்பு தணலைக் கொட்டியதைப் போல ஆனது.ராஜமாணிக்கம் முத்துசெல்விக்கோ மகன் இந்தளவு கீழெறங்கிவிட்டானே என்ற அவமானம்.மீனாட்சி ஜெயந்தனோ தம் பெண்ணின் திருமணத்தில் இப்படிப்பட்ட அசிங்கம் நடந்துவிட்டதே என மனம் வெதும்பினர்.ரமேஷின் நிலையோ அந்தோ பரிதாபம்.பல நாள் திட்டம் போட்டு அவன் ஆரம்பித்த நாடகத்தில் அவனே கதாநாயகன் என்று எண்ணி அவன் இறுமாந்திருந்த போது எவனோ ஒருவன் அவன் இடத்தில் அவன் திட்டத்தை அரங்கேற்றியதில் ஏகத்திற்கு காண்டாகியிருந்தான்.
இதற்கு மேலும் அந்த காட்சியைக் காண சகிக்காமல் சிவகாமியும் முத்துசெல்வியும் தங்கள் பிள்ளை செல்வங்களை எழுப்ப முயன்றனர்.ஆனால் இடியே விழுந்தாலும் எழாதவரைப் போல இருவரும் ஆழ்ந்த நித்திரையில் இருந்தனர்.பொறுக்க முடியாமல் பக்கத்தில் இருந்த டம்பளர் நீரை மகளின் முகத்தில் தெளித்தார் சிவகாமி.ஆனால் முத்துசெல்வி ஜக்கு நீரையும் மகனின் முகத்தில் ஊற்றி விட்டார்.
திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தனர் இருவரும்.தங்கள் இருந்த நெருக்கத்தில் பதறி இருவரும் பிரிந்து தங்கள் அன்னையரிடம் சென்று நின்றனர்.மகன் அருகில் வரவும் சப்பென அவன் கன்னத்தில் அறைந்தார் முத்துசெல்வி.இதுவரை தன்னை அதட்டி ஒரு வார்த்தை கூட கூறியிறாத தன் அன்னை இத்தனை பேர் எதிரில் தன்னை அடித்தது சொல்லமுடியாத வேதனை அளித்தது அவனுக்கு.
"அம்மா?!!"
"என்னடா அம்மா!சே சே நீயும் ஒரு மனுசனா?!!நீ எத்தன கெட்டழிஞ்சாலும் நா இதுவரை ஒரு வார்த்தை உன்ன வெஞ்சதில்ல...ஆனா இன்னிக்கு குடும்ப பொண்ணு மேலேயே கைய வெச்சிட்டே...இதுக்கு உனக்கு மன்னிப்பே கெடையாதுடா...படுபாவி...."
"அம்மா!நீ நெனைக்கிற மாதிரி எந்த தப்பும் இங்க நடக்கல... இந்த பொண்ணு எப்ப ரூமுக்குள்ள வந்துச்சுன்னு எனக்கு தெரியாதுமா...."
அவன் அப்படி சொன்னதும் விலுக்கென்று அவனை நிமிர்ந்துப் பார்த்தாள் நித்திலா.அவன் கூறியது ஏதோ அவளே அவன் படுக்கை வந்து அவனோடு படுத்ததுப் போல் இருந்தது.அதில் அவள் கோபம் தலைக்கேறியது.அதற்குள் அவள் தாய் சிவகாமி தலையில் அடித்துக் கொண்டு அழுதார்.
"ஐயோ வரமாட்டேன்னு சொன்னியே கட்டாயப்படுத்தி கூட்டி வந்தது இந்த அலங்கோலத்த பாக்கவா...கட்டி காத்த மானம் மரியாதியெல்லாம் போச்சே..."
அவர் கையைப் பிடித்துத் தடுத்த நித்திலா
"அம்மா! அப்படி எந்த தப்பும் ஆயிடலம்மா.... உன் பொண்ணு மேல உனக்கு நம்பிக்கை இல்லையா...நா அப்படியெல்லாம் செய்வேனா...நா அப்படிப்பட்டவளா?!!!"
"தப்பு ஆயிடுச்சோ இல்லியோ...ஒரே ரூம்புல ராத்திரி பூரா ஒரு ஆம்பளயோட இருந்த பின்னாடி உன் பேரு கெட்டது கெட்டது தான்...இனி குடும்பத்தோட நாண்டுகிட்டு சாகறது ஒண்ணு தான் நமக்கு வழி...."என்று கூறி ஹோவென அழுதார் சிவகாமி.
"அண்ணி... அப்படியெல்லாம் சொல்லாதீங்க"என முத்துசெல்வியும்
"தங்கச்சி! அப்படியெல்லாம் சொல்லக் கூடாதும்மா..."என்றார் ராஜமாணிக்கம்.
"வேற என்னதண்ணே பண்ணட்டும்... பொண்ணு வாழ்க்கை பாழா போச்சே...இனி இந்த சேதி தெரிஞ்சு யாரு இவள கட்டுவாங்க...பழிய சொமந்துகிட்டு வாழறத விட சாகறது எவ்ளோவோ மேலு"
"சே சே அப்பிடியெல்லாம் பேசாத தங்கச்சி....என்னமோ தெரிஞ்சோ தெரியாமலோ தப்பு நடந்து போச்சு...இப்ப என்ன பொண்ணு வாழ்க்கை கெட்டுப் போச்சோன்னு தானே நீ கலங்குற...யாரால இப்படியாச்சோ அவனே அவ கழுத்துல தாலிக் கட்டுவான்...என் பையன் கார்த்திகேயனுக்கும் உன் பொண்ணு நித்திலாவுக்கும் கல்யாணம்...யாரு தடுத்தாலும் இது நடந்தே தீரும்...."
"அப்பா....!"என்று கோபமாக ஏதோ கூற வந்த கார்த்தியை ஒரு முறைப்பில் அடக்கினார்.
"தங்கச்சி உனக்கு இதுல சம்மதம் தானேம்மா?"
"அம்மா!வேண்..."என்று ஆரம்பித்த நித்திலாவின் கையை அழுத்தி அவள் பேச்சை நிறுத்திய சிவகாமி
"அண்ணே! அதெல்லாம் சரிதாண்ணே...ஆனா உங்க அந்தஸ்தென்ன எங்களுது என்ன....ஏணி வச்சாலும் எட்டாதேண்ணே!!"
"அந்தஸ்து என்னம்மா... அந்தஸ்து... இன்னிக்கு இப்படி ஆனதால இப்பிடி கேட்டேன்னு நெனைக்காதே... எனக்கும் உங்க அண்ணிக்கும் முதல்ல இருந்தே நித்திலாவ கார்த்திக்கு கேக்கனும்னு கொள்ள ஆசை...அது இப்பிடி ஒரு அசம்பாவிததுல கேக்க நேந்தது நம்ம விதி தான்...நீ ஒண்ணும் யோசிக்காத... சரின்னு சொல்லு..."
"நீங்க இவ்ளோ சொன்னப்புறம் எங்களுக்கு என்னண்ணே... எங்களுக்கு பூரண சம்மததேன்"
"மச்சான் ஒண்ணும் சொல்லலையே...என்ன மச்சான் உங்க விருப்பத்த சொல்லுங்க..."
"நா சொல்றது என்ன மச்சான்...நல்லதனமா இது கூடி வரலையேங்கறத சங்கடத்த தவிர உங்க வீட்டுக்கு பொண்ணு கொடுக்க நாங்க குடுத்து வச்சிருக்கனும்"
"அப்புறம் என்ன இன்னும் ரெண்டு நாளைல நல்ல முகூர்த்தம் இருக்குன்னு ஜோசியர் ஐயா சொன்னாரு...சட்டுப்புட்டு அதுலயே முடிச்சிடுங்க...தள்ளிப் போட்டா சும்மா வேண்டாத பேச்சு கெளம்பும்... என்ன நா சொல்றது"என்றார் ஜெயந்தன்.
தந்தையை அடித்து நொறிக்கி விடும் ஆத்திரம் கிளம்பியது ரமேஷுக்கு.இது எல்லாம் அவன் போட்டத் திட்டம்.ஆனால் எப்படியோ தப்பி நித்திலா இப்போது வேற்றொருவன் சொத்தாவது அவனுக்கு உள்ளுக்குள் பற்றி எறிந்தது.ஏதாவது செய்து இந்த ஏற்பாட்டை நிறுத்தலாம் என்றால் அவன் தந்தையே அவர்கள் திருமணத்தை விரைந்து நடத்த யோசனை கூறுகிறார்.இதில் இப்போது தலையிட்டு இந்த ஏற்பாட்டிற்கு எதிராகப் பேசினால் அவனை எல்லோரும் சேர்ந்து வெட்டிப் பொலிப் போட்டு விடுவர்.அதனால் பொங்கிய கோபத்தை அடக்கிக் கொண்டு அங்கு நடப்பதை வெறித்தான்.
இதற்கு மேலும் அந்த காட்சியைக் காண சகிக்காமல் சிவகாமியும் முத்துசெல்வியும் தங்கள் பிள்ளை செல்வங்களை எழுப்ப முயன்றனர்.ஆனால் இடியே விழுந்தாலும் எழாதவரைப் போல இருவரும் ஆழ்ந்த நித்திரையில் இருந்தனர்.பொறுக்க முடியாமல் பக்கத்தில் இருந்த டம்பளர் நீரை மகளின் முகத்தில் தெளித்தார் சிவகாமி.ஆனால் முத்துசெல்வி ஜக்கு நீரையும் மகனின் முகத்தில் ஊற்றி விட்டார்.
திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தனர் இருவரும்.தங்கள் இருந்த நெருக்கத்தில் பதறி இருவரும் பிரிந்து தங்கள் அன்னையரிடம் சென்று நின்றனர்.மகன் அருகில் வரவும் சப்பென அவன் கன்னத்தில் அறைந்தார் முத்துசெல்வி.இதுவரை தன்னை அதட்டி ஒரு வார்த்தை கூட கூறியிறாத தன் அன்னை இத்தனை பேர் எதிரில் தன்னை அடித்தது சொல்லமுடியாத வேதனை அளித்தது அவனுக்கு.
"அம்மா?!!"
"என்னடா அம்மா!சே சே நீயும் ஒரு மனுசனா?!!நீ எத்தன கெட்டழிஞ்சாலும் நா இதுவரை ஒரு வார்த்தை உன்ன வெஞ்சதில்ல...ஆனா இன்னிக்கு குடும்ப பொண்ணு மேலேயே கைய வெச்சிட்டே...இதுக்கு உனக்கு மன்னிப்பே கெடையாதுடா...படுபாவி...."
"அம்மா!நீ நெனைக்கிற மாதிரி எந்த தப்பும் இங்க நடக்கல... இந்த பொண்ணு எப்ப ரூமுக்குள்ள வந்துச்சுன்னு எனக்கு தெரியாதுமா...."
அவன் அப்படி சொன்னதும் விலுக்கென்று அவனை நிமிர்ந்துப் பார்த்தாள் நித்திலா.அவன் கூறியது ஏதோ அவளே அவன் படுக்கை வந்து அவனோடு படுத்ததுப் போல் இருந்தது.அதில் அவள் கோபம் தலைக்கேறியது.அதற்குள் அவள் தாய் சிவகாமி தலையில் அடித்துக் கொண்டு அழுதார்.
"ஐயோ வரமாட்டேன்னு சொன்னியே கட்டாயப்படுத்தி கூட்டி வந்தது இந்த அலங்கோலத்த பாக்கவா...கட்டி காத்த மானம் மரியாதியெல்லாம் போச்சே..."
அவர் கையைப் பிடித்துத் தடுத்த நித்திலா
"அம்மா! அப்படி எந்த தப்பும் ஆயிடலம்மா.... உன் பொண்ணு மேல உனக்கு நம்பிக்கை இல்லையா...நா அப்படியெல்லாம் செய்வேனா...நா அப்படிப்பட்டவளா?!!!"
"தப்பு ஆயிடுச்சோ இல்லியோ...ஒரே ரூம்புல ராத்திரி பூரா ஒரு ஆம்பளயோட இருந்த பின்னாடி உன் பேரு கெட்டது கெட்டது தான்...இனி குடும்பத்தோட நாண்டுகிட்டு சாகறது ஒண்ணு தான் நமக்கு வழி...."என்று கூறி ஹோவென அழுதார் சிவகாமி.
"அண்ணி... அப்படியெல்லாம் சொல்லாதீங்க"என முத்துசெல்வியும்
"தங்கச்சி! அப்படியெல்லாம் சொல்லக் கூடாதும்மா..."என்றார் ராஜமாணிக்கம்.
"வேற என்னதண்ணே பண்ணட்டும்... பொண்ணு வாழ்க்கை பாழா போச்சே...இனி இந்த சேதி தெரிஞ்சு யாரு இவள கட்டுவாங்க...பழிய சொமந்துகிட்டு வாழறத விட சாகறது எவ்ளோவோ மேலு"
"சே சே அப்பிடியெல்லாம் பேசாத தங்கச்சி....என்னமோ தெரிஞ்சோ தெரியாமலோ தப்பு நடந்து போச்சு...இப்ப என்ன பொண்ணு வாழ்க்கை கெட்டுப் போச்சோன்னு தானே நீ கலங்குற...யாரால இப்படியாச்சோ அவனே அவ கழுத்துல தாலிக் கட்டுவான்...என் பையன் கார்த்திகேயனுக்கும் உன் பொண்ணு நித்திலாவுக்கும் கல்யாணம்...யாரு தடுத்தாலும் இது நடந்தே தீரும்...."
"அப்பா....!"என்று கோபமாக ஏதோ கூற வந்த கார்த்தியை ஒரு முறைப்பில் அடக்கினார்.
"தங்கச்சி உனக்கு இதுல சம்மதம் தானேம்மா?"
"அம்மா!வேண்..."என்று ஆரம்பித்த நித்திலாவின் கையை அழுத்தி அவள் பேச்சை நிறுத்திய சிவகாமி
"அண்ணே! அதெல்லாம் சரிதாண்ணே...ஆனா உங்க அந்தஸ்தென்ன எங்களுது என்ன....ஏணி வச்சாலும் எட்டாதேண்ணே!!"
"அந்தஸ்து என்னம்மா... அந்தஸ்து... இன்னிக்கு இப்படி ஆனதால இப்பிடி கேட்டேன்னு நெனைக்காதே... எனக்கும் உங்க அண்ணிக்கும் முதல்ல இருந்தே நித்திலாவ கார்த்திக்கு கேக்கனும்னு கொள்ள ஆசை...அது இப்பிடி ஒரு அசம்பாவிததுல கேக்க நேந்தது நம்ம விதி தான்...நீ ஒண்ணும் யோசிக்காத... சரின்னு சொல்லு..."
"நீங்க இவ்ளோ சொன்னப்புறம் எங்களுக்கு என்னண்ணே... எங்களுக்கு பூரண சம்மததேன்"
"மச்சான் ஒண்ணும் சொல்லலையே...என்ன மச்சான் உங்க விருப்பத்த சொல்லுங்க..."
"நா சொல்றது என்ன மச்சான்...நல்லதனமா இது கூடி வரலையேங்கறத சங்கடத்த தவிர உங்க வீட்டுக்கு பொண்ணு கொடுக்க நாங்க குடுத்து வச்சிருக்கனும்"
"அப்புறம் என்ன இன்னும் ரெண்டு நாளைல நல்ல முகூர்த்தம் இருக்குன்னு ஜோசியர் ஐயா சொன்னாரு...சட்டுப்புட்டு அதுலயே முடிச்சிடுங்க...தள்ளிப் போட்டா சும்மா வேண்டாத பேச்சு கெளம்பும்... என்ன நா சொல்றது"என்றார் ஜெயந்தன்.
தந்தையை அடித்து நொறிக்கி விடும் ஆத்திரம் கிளம்பியது ரமேஷுக்கு.இது எல்லாம் அவன் போட்டத் திட்டம்.ஆனால் எப்படியோ தப்பி நித்திலா இப்போது வேற்றொருவன் சொத்தாவது அவனுக்கு உள்ளுக்குள் பற்றி எறிந்தது.ஏதாவது செய்து இந்த ஏற்பாட்டை நிறுத்தலாம் என்றால் அவன் தந்தையே அவர்கள் திருமணத்தை விரைந்து நடத்த யோசனை கூறுகிறார்.இதில் இப்போது தலையிட்டு இந்த ஏற்பாட்டிற்கு எதிராகப் பேசினால் அவனை எல்லோரும் சேர்ந்து வெட்டிப் பொலிப் போட்டு விடுவர்.அதனால் பொங்கிய கோபத்தை அடக்கிக் கொண்டு அங்கு நடப்பதை வெறித்தான்.