நீ எப்படி பட்டவன் தெரியுமா ...இந்த உலகத்தையே ஆள பிறந்தவன்....உன்னோட சக்தியால் எத வேணுனாலும் பண்ணலாம்...அப்படிபட்ட நீ ரெண்டு நாளா இப்படி சோர்ந்து போய் உட்கார்ந்து இருக்க...உனக்கு என்ன ஆச்சு......
இல்ல...அவளை என்னால கொல்ல முடியாது...நீங்க சொன்னதெல்லாம் பண்ணிட்டேன்...ஆனா இதுமட்டும் என்னால முடில....அதுதான் ஏன் ? என்ன காதலா....................ஹா ஹா ஆஹா .....உன்னக்கென்ன பைத்தியமா...
ஒரு சாதாரண பெண்ணிற்காக அபூர்வ சக்தி படைச்ச நீ , இவ்வளவு கோழை ஆயிட்ட....
உனக்கு எல்லாம் மறந்து போய்டுச்சா....விக்ரமா....நீ மறந்துருந்தா உனக்கு நான் ஞாபக படுத்துறேன் .. உன்னுடைய முன்னோர்கள் அந்த குடும்பத்துல பிறந்த ஒரு பொண்ணோட சாபத்தால பாதிக்க பட்டதால, அவுங்களும், அவுங்களுக்கு
பின் வந்த அவுங்களோட ஆண் வாரிசுகளும் கல்யாணம் ஆகி, முதல் குழந்தை பிறந்த ஒரு வருஷத்துல இறந்துடுவாங்க.... இது உங்க குடும்பத்துக்கு வந்த சாபம்....இத எந்த தெய்வத்தாலும் தீர்த்து வைக்க முடியல....அதுனால
உன்னோட முன்னோர்கள் மாந்த்ரீக சக்தியை நம்ப ஆரம்பிச்சாங்க.....என் கிட்ட நிர்கதி இல்லாம வந்து நின்னாங்க....நானும் இந்த சாபத்தை நீக்குறது சுலபம் இல்ல. அதுக்கு அந்த குடும்பத்துல இருக்கிற பொண்ண உங்க வீட்டு
மருமகளாக்கி அந்த பொண்ண கல்யாணம் ஆன அறுபதாம் நாள் என் தெய்வத்துக்கு முன் பலி குடுக்கணும் ...அப்போதான் அந்த சாபம் நீங்குமனு சொன்னேன் .. உன்னோட அப்பாவிற்கு நீ உருவான 6 மாசத்துல தான் இந்த உண்மை என்
மூலமா தெரிய வந்துது...உன்னோட தாத்தா இறந்த மாதிரி உன் அப்பாவும் இறந்திடுவாரோன்னு பயம் வந்துடிச்சி...அவர் உன்ன கருவிலே அழிக்க பாத்தாரு....ஆனா நாங்க தான் இந்த குழந்தையை அழிக்க வேண்டாம்....உங்களுக்கு
ஏற்கினவே கல்யாணம் ஆகிடிச்சி ..விதிப்படி இனி இந்த சாபத்தை அழிக்க இவனால் தான் முடியும்..உனக்கு திருமணம் ஆகி ஒரு வருடம் வரை உன் அப்பா உயிருக்கு ஆபத்து வராத மாதிரி அவர் கைல மாந்த்ரீக கயிறு கட்டி விட்டேன்
....உங்க பரம்பரைக்கு வந்த சாபம் போகணுனா ...நீ இதுக்கு காரணமான குடும்பத்துல இருக்கிற பொண்ண கல்யாணம் பண்ணி உன் கையாலையே அவளை உன் முன்னோர்களுக்கு பலி குடுக்கணுங்கிறது உனக்கு சிறு வயதிலிருந்தே
போதிக்கப்பட்டிருக்குது.....உன் அப்பா விருப்ப படி எல்லா மாந்த்ரீக வித்தைகளையும் உனக்கு கற்றுக்கொடுத்து விட்டேன் ....பலம் பொருந்தியவனாக்கி விட்டேன்......ஆனால் நீ ஒரு சாதாரண பெண்ணிற்காக உன் பரம்பரையை சாவிற்கு
கொடுக்க துணிந்து விட்டாய்......நீ எவ்வளவு பெரிய மாந்த்ரீக வாதியாக இருந்தாலும் உன்னால் இந்த சாபத்திலிருந்து உன் தந்தையை காக்க இயலாது...அந்த பெண்ணை உன் கையால் அழிக்காமல்.........
எதுவும் பண்ண இயலாத சூழ்நிலையில் இருந்தான்...விக்ரமன்...சிறு வயதிலேயே மற்ற குழந்தைகள் வளர்வது போல் அவன் வளர்க்கப்படவில்லை.....அவன் தந்தை தன் மகனை ஒரு மந்திரம், தந்திரம் தெரிந்தவனாக வளர்க்க
விரும்பினார். ராஜ பரம்பரை வெறும் பணத்தோடு இருந்தால் மட்டும் போதாது...தன் மகன் மந்திர வித்தைகளில் தெரிந்தவனாக வளர விரும்பினார்....அதன் படி அவனுக்கு கல்வியோடு, தீய சக்திகளின் படிப்பினையும் போதிக்க
பட்டது..தீய சக்திகளையே தெய்வமாக வணங்கினான்.....
ராஜ வம்சத்து அம்சம் , அறிவு,அழகு அனைத்தும் இருந்தும் அவன் எண்ணங்கள் நல்லவை எது, தீயது எது என்று தெரியாமல் தீய சக்திகளின் உருவமாய் வளந்தான்....
விக்ரமன் தன் இருபதாவது வயதில் அவனுக்கு ஏவப்பட்ட படி , சாதாரண குடும்பத்து பெண்ணான இந்துமதியை காதலிப்பது போல் நடித்து திருமணம் செய்து கொண்டான் ...இந்துமதியை காதலிப்பது போல் நடிக்க ஆரம்பித்தவன்
அவளின் குழந்தை தனம் மாறாத முகம், காவியம் பேசும் கண்கள், கள்ளமில்லா சிரிப்பு, அப்பாவித்தனம் மாறாத அவளின் இயல்பு இவைகளுக்குள் அவனையும் அறியாமல் தொலைய ஆரம்பித்தான் ....அவள் குடும்பத்தில்
இருப்பவர்களின் எதிர்ப்பை மீறி அவளை காதல் திருமணம் செய்து கொண்டான்...இந்துமதி வீட்டினர் அரண்மனையில் இருப்பவர்கள் தீய சக்திகளை வழிபடுகின்றனர் என்பதை அறிந்து மகளின் விருப்பத்தை நிறைவேற்ற மறுத்து
விட்டனர்....தெய்வ வழிபாட்டில் மிகுந்த ஈடுபாடு கொண்ட அவர்களால் மகளின் காதலுக்கு சம்மதம் சொல்ல இயலவில்லை...
திருமணத்திற்க்கு பின் விக்ரமன் அவளை மிகவும் நேசிக்க ஆரம்பித்தான்..... இந்துமதிக்கு அப்போது 16 வயது....அவளை கொல்ல வேண்டும் ..அதற்குத்தான் அவளை திருமணம் செய்தது என்ற எண்ணம் எல்லாம் அவனுக்குள் மறைய
,மறக்க ஆரம்பித்தது....நிலா போன்ற அவள் முகத்தை கண்டு கொண்டே இருக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்ற ஆரம்பித்தது.....
ஆனால் .....................இன்னும் 5 தினங்களில் அவளை பலி கொடுக்க வேண்டும் என்று மாந்த்ரீகன் கூறும் வரை அந்த நினைப்பே அவனுக்கு வரவில்லை.....அவன் நினைவு படுத்தியவுடன் அவனால் அவள் இல்லாமல் கற்பனை செய்து
கூட பார்க்க முடியவில்லை.....
நீ ஒரு சாதாரண மனுஷன் இல்ல....நாலு கிரங்கள் ஒரே நேர்கோட்டுல சந்திக்கிற நேரத்துல பொறந்தவன். உனக்கு உன் தந்தை மந்திர வித்தைகளை சொல்லிகுடுக்க சொன்னப்போ மறுப்பேதும் சொல்லாம நான் கற்று கொடுக்க காரணம்
நீ அபூர்வமானவன் அதுக்காக தான்....
ஆனா உன்ன அவ வழியா தெய்வ சக்தி திசை திருப்புது....அது உனக்கு புரியாத படி நீ அடிமையா இருக்க....அவள் மீது நீ கொண்ட காதல் உன்னோட இலக்கை அடைய விடாமல் தடுக்குது .
அவனால் எதையும் மறுத்து கூற முடியவில்லை...அது தான் நிஜம் என்பது அவனும் அறிந்ததே ..அவன் அனைத்து வித்தைகளை கற்றும் அவள் முன் தோற்று போனான்.... தெரிந்தே, விரும்பியே தான் தோற்று போனான்....
அதே சோகத்தோடு அரண்மனையில் தன் அறையில் நுழைந்தவன் மனைவி எதிரில் வந்ததை கவனிக்க வில்லை....
அத்தான் ! ...............என்ன மதி... " ஏன் உங்க முகம் வாடிருக்கு "....." அதெல்லாம் ஒன்னும் இல்ல மா"....
அவன் தன்னிடம் எதோ மறைப்பதாக தோன்றியது அவளுக்கு...அதன்பின் அவனிடம் எதுவும் கேட்டு கொள்ளவில்லை..உங்களுக்கு குடிக்க எதாவது எடுத்துட்டு வரட்டுமா....இல்ல வேண்டாம் ...எனக்கு கொஞ்சம்
தலைவலியாய் இருக்கு...நான் மேல போய் ஓய்வெடுத்துகிறேன்....
நான் தைலம் ஏதாது தேய்த்து விடவா அத்தான் ...."இல்ல மா கொஞ்ச நேரம் தூங்குனா எல்லாம் சரி ஆகிடும்..."
என்று கூறிவிட்டு மேலே சென்று விட்டான்...
எதோ சரில்லை என்று மட்டும் தோன்றியது அவளுக்கு....கோயிலுக்கு சென்று வருவோம் என்று எண்ணியவள் அருகில் உள்ள கோயிலுக்கு சென்று மனதுருக கணவனுக்காக வேண்டினாள்...."தாயே என் மேல் உயிரையே
வைத்திருக்கும் அன்பான கணவனை எனக்கு கொடுத்தாய்... என்னை பெற்ற்றவர்கள் பேச்சை மீறி நான் திருமணம் செய்து கொண்டேன்...அவர்கள் என் கணவரையும் அவர் குடும்பத்தாரையும் நல்லவர்கள் இல்லை எதோ ஒரு
காரணத்திற்காக தான் என்னை காதலிப்பது போல் நடிக்கிறார் என்று கூறினர்...ஆனால் இதை என மனம் ஏற்க மறுத்தது... அவரிடம் உண்மையான அக்கறையை உணர்ந்தேன்...நேசத்தை உணர்ந்தேன்...அவர் நினைத்திருந்தால் எந்த
நாட்டு இளவரசியையாவது விரும்பி மனந்திருக்கலாம்....ஆனால் எதுவும் இல்லாத என்னை விரும்பினார்...இவரே எனக்கு எல்லா ஜென்மத்திலும் கணவராக வேண்டும் தாயே ! அவரோட மனதில் ஏதோ கவலை இருப்பது போல்
தெரியுது...அது என்னனு எனக்கு தெரில.....அந்த பிரச்சனைகளை நீங்க தான் தீர்த்து வைக்க வேண்டும்..எனக்காக .. "வேண்டி முடித்தபின் மன நிம்மதியுடன் கணவன் வீட்டிற்கு திரும்பினாள்.விக்ரமன் அறையில் இருப்பது தெரிந்து
மாந்த்ரீகன் கீழே அவன் தந்தையுடன் சதித்திட்டம் தீட்டினான்....
உன் மகனை இனிமேல் நம்பி பயனில்லை.....அவன் அந்த பெண்ணை பலியிடுவான் என்பது முடியாத விஷயம்.....அவள் மீது கொண்ட காதல் அவன் கண்ணை மறைத்து விட்டது....இனி அவனை நம்பினால் உன் வம்சம் அழிந்துவிடும்
அவனுடன் சேர்ந்து.....
இப்போ என்ன பண்ணனும் னு சொல்லுங்க....ஏதாது பண்ணி என் உயிரை காப்பாத்துங்க.....இதுக்கு வேற வழியில்லையா ?
ம்....இருக்கு...ஒரே ஒரு வழி.. என்னது அது?
அவன் உடம்புக்குள்ள நான் நுழைந்து அவளை பலியிடுவது தான் ஒரே வழி.
அது எப்படி சத்தியம்....அவனும் உங்களை போல மாந்த்ரீக வித்தைகளை அறிந்தவன் தானே...
ஹா ஹா ஹாஹா ............நான் அவனுக்கு குரு...குரு அறியாத வித்தை உண்டோ.....அதையெல்லாம் நான் பார்த்துகிறேன்.....நீ நான் சொல்லுவதை போல் செய் என்று இருவரும் திட்டம் தீட்டினர்.
அறைக்குள் இருந்த விக்ரமன் நீண்ட யோசனையில் இருந்தான்....அவனால் தன் உயிருக்கு உயிரானவளை கொல்ல இயலாது என்பதில் தீர்மானமாய் இருந்தான்...அதற்கு பதில் அவளுடன் சிறுது காலம் வாழ்ந்து விட்டு மடிவதே
மகிழ்ச்சி என்று எண்ணினான்.தன்னுடைய தந்தை, தன் வம்சத்தவர் எதை பற்றியும் அவன் நினைக்கவில்லை.தன்னவளுடன் வாழ்ந்து பார்க்க விரும்பினான்....
விக்ரமா..........தந்தையின் அழைப்பில் எழுந்தவன் என்ன என்பது போல் பார்த்தான்....
உன்னோட உணர்ச்சி எனக்கு புரியுது.....நீ அவளை மிகவும் நேசிக்கிறனு தெரியுது....உன் குருவும் அதை பத்தி தான் பேசினார்....அப்பா என்னால அவளை எதுவும் பண்ண முடியாது...என் உயிர் அவ...என் உயிரே போனாலும் அவ நான்
பாதுகாப்பேன்......
ம்....புரியுதுப்பா....அதுனாலதான் அவரு இந்த சாபம் போக்க வேற வழி ஒன்றை சொன்னார்...
என்னது அதுனு சொல்லுங்க.....நான் என் உயிரை குடுத்தாது பண்றேன்....ஆனா அவளை என்னால் இழக்க முடியாது...அது ஒன்னும் இல்ல ..நீயும் உன் குருவும் அவர் சொன்ன அந்த 60 ம் நாள்ல ஒரு பூஜை பண்ணனும் தனியா....அதை
எப்படி பண்ணனும் னு அவரு சொல்லுவாரு உனக்கு...
அதை கேட்டவன் மிகவும் மகிழ்ந்தான் . தன்னவளுடன் எந்தத்தடையும் இல்லாமல் வாழ போவதை எண்ணி அவன் தந்தை கூறியதை ஆராய்ந்து பார்க்க தவறினான் ...
அறுபதாவது நாளும் வந்தது.....விக்ரமன் மனம் முழுக்க இந்துமதி நிறைந்திருந்தாள் ..அவள் முகத்தையே நோக்கியவாறு நின்றிருந்தான்....என்ன அத்தான் ஏன் என் முகத்தையே பார்த்துட்டு இருக்கீங்க? என்னைக்கும் விட அதிகமா
இன்னைக்கு உன் முகத்துல ஒரு பூரிப்பு தெரியுது..உன் கிட்ட எதோ ஒரு மாயம் இருக்கு...அது என்னனு கண்டு பிடிச்சிட்டு இருக்கேன்...சீக்ரம் உன் மாதிரியே எனக்கு ஒரு பெண் குழந்தை வேணும்.ம்கூம் .எனக்கு உங்கள மாதிரியே ஒரு
குட்டி இளவரசர் வேண்டும்....இல்ல முதலில் நான் கேட்டது தான்.
...சரி அது இன்னும் சில மாதங்களில் தெரிந்துவிடும்............
என்ன..............நீ............நான் அப்பா வாக போகிறேனா!!!!!!!!!!!!!நீ சொல்றது நிஜமா மதி...
ம்....ஆமாம் அத்தான் ...உங்க கிட்ட இந்த விஷயம் நாளைக்கு தான் சொல்றதா நினைத்தேன்..ஏன்?
நாளைக்கு தானே உங்களுடைய பிறந்த நாள்...உங்களுக்கு பரிசாக இதை சொல்லலானு நினைத்தேன்....
ஆனா உங்க கிட்ட என்னால எதையும் மறைக்க முடியல....
உனக்கு என்ன வேணுன்னு கேளு ..மதி நீ என்ன கேட்டாலும் பண்றேன்....நீ எனக்கு மிகப்பெரிய பரிசை குடுத்துருக்க.....
எனக்கு நீங்க தான் வேணும் என் கூட எப்பவும் இருக்கனும் ...எல்லா பிறவியிலும்!!!!!!!!! ஏனோ அவளையும் அறியாமல் கண்களில் கண்ணீர் வந்தது..ஏய் ! என்ன ஆச்சு எதுக்கு அழுற ..தெரில அத்தான் ..என் கூட எல்லா பிறவியிலும்
இருப்பீர்களா....என்ன இது இன்னும் நாம எவ்வளவோ வாழ வேண்டி இருக்கு...நம்ம குழந்தைங்க, அப்புறம் பேரன் , பேத்திகளை கொஞ்ச வேண்டி இருக்கு...நீ என்னனா நாம வாழ்ந்து முடிச்ச மாதிரி பேசுற...
நான்................கேட்டதுக்கு பதில் சொல்லுங்க......நீயே என்ன வெறுத்தாலும் உன்ன விட்டு நான் எங்கயும் போக மாட்டேன்.....நீ தான் எனக்கு எல்லா ஜென்மத்துலயும் பொண்டாட்டி..
நான் ஏன் உங்கள வெறுக்க போறேன்...விளையாட்டுக்கு கூட அப்படி சொல்லாதீங்க...நெருப்புனா சுட்டுடுமா என்ன............
அவர்கள் சொன்ன வார்த்தைகள் தான் அவர்களுக்கு நடக்க போகிறது என்று அவர்களுக்கு அப்போது தெரியவில்லை.....
இல்ல...அவளை என்னால கொல்ல முடியாது...நீங்க சொன்னதெல்லாம் பண்ணிட்டேன்...ஆனா இதுமட்டும் என்னால முடில....அதுதான் ஏன் ? என்ன காதலா....................ஹா ஹா ஆஹா .....உன்னக்கென்ன பைத்தியமா...
ஒரு சாதாரண பெண்ணிற்காக அபூர்வ சக்தி படைச்ச நீ , இவ்வளவு கோழை ஆயிட்ட....
உனக்கு எல்லாம் மறந்து போய்டுச்சா....விக்ரமா....நீ மறந்துருந்தா உனக்கு நான் ஞாபக படுத்துறேன் .. உன்னுடைய முன்னோர்கள் அந்த குடும்பத்துல பிறந்த ஒரு பொண்ணோட சாபத்தால பாதிக்க பட்டதால, அவுங்களும், அவுங்களுக்கு
பின் வந்த அவுங்களோட ஆண் வாரிசுகளும் கல்யாணம் ஆகி, முதல் குழந்தை பிறந்த ஒரு வருஷத்துல இறந்துடுவாங்க.... இது உங்க குடும்பத்துக்கு வந்த சாபம்....இத எந்த தெய்வத்தாலும் தீர்த்து வைக்க முடியல....அதுனால
உன்னோட முன்னோர்கள் மாந்த்ரீக சக்தியை நம்ப ஆரம்பிச்சாங்க.....என் கிட்ட நிர்கதி இல்லாம வந்து நின்னாங்க....நானும் இந்த சாபத்தை நீக்குறது சுலபம் இல்ல. அதுக்கு அந்த குடும்பத்துல இருக்கிற பொண்ண உங்க வீட்டு
மருமகளாக்கி அந்த பொண்ண கல்யாணம் ஆன அறுபதாம் நாள் என் தெய்வத்துக்கு முன் பலி குடுக்கணும் ...அப்போதான் அந்த சாபம் நீங்குமனு சொன்னேன் .. உன்னோட அப்பாவிற்கு நீ உருவான 6 மாசத்துல தான் இந்த உண்மை என்
மூலமா தெரிய வந்துது...உன்னோட தாத்தா இறந்த மாதிரி உன் அப்பாவும் இறந்திடுவாரோன்னு பயம் வந்துடிச்சி...அவர் உன்ன கருவிலே அழிக்க பாத்தாரு....ஆனா நாங்க தான் இந்த குழந்தையை அழிக்க வேண்டாம்....உங்களுக்கு
ஏற்கினவே கல்யாணம் ஆகிடிச்சி ..விதிப்படி இனி இந்த சாபத்தை அழிக்க இவனால் தான் முடியும்..உனக்கு திருமணம் ஆகி ஒரு வருடம் வரை உன் அப்பா உயிருக்கு ஆபத்து வராத மாதிரி அவர் கைல மாந்த்ரீக கயிறு கட்டி விட்டேன்
....உங்க பரம்பரைக்கு வந்த சாபம் போகணுனா ...நீ இதுக்கு காரணமான குடும்பத்துல இருக்கிற பொண்ண கல்யாணம் பண்ணி உன் கையாலையே அவளை உன் முன்னோர்களுக்கு பலி குடுக்கணுங்கிறது உனக்கு சிறு வயதிலிருந்தே
போதிக்கப்பட்டிருக்குது.....உன் அப்பா விருப்ப படி எல்லா மாந்த்ரீக வித்தைகளையும் உனக்கு கற்றுக்கொடுத்து விட்டேன் ....பலம் பொருந்தியவனாக்கி விட்டேன்......ஆனால் நீ ஒரு சாதாரண பெண்ணிற்காக உன் பரம்பரையை சாவிற்கு
கொடுக்க துணிந்து விட்டாய்......நீ எவ்வளவு பெரிய மாந்த்ரீக வாதியாக இருந்தாலும் உன்னால் இந்த சாபத்திலிருந்து உன் தந்தையை காக்க இயலாது...அந்த பெண்ணை உன் கையால் அழிக்காமல்.........
எதுவும் பண்ண இயலாத சூழ்நிலையில் இருந்தான்...விக்ரமன்...சிறு வயதிலேயே மற்ற குழந்தைகள் வளர்வது போல் அவன் வளர்க்கப்படவில்லை.....அவன் தந்தை தன் மகனை ஒரு மந்திரம், தந்திரம் தெரிந்தவனாக வளர்க்க
விரும்பினார். ராஜ பரம்பரை வெறும் பணத்தோடு இருந்தால் மட்டும் போதாது...தன் மகன் மந்திர வித்தைகளில் தெரிந்தவனாக வளர விரும்பினார்....அதன் படி அவனுக்கு கல்வியோடு, தீய சக்திகளின் படிப்பினையும் போதிக்க
பட்டது..தீய சக்திகளையே தெய்வமாக வணங்கினான்.....
ராஜ வம்சத்து அம்சம் , அறிவு,அழகு அனைத்தும் இருந்தும் அவன் எண்ணங்கள் நல்லவை எது, தீயது எது என்று தெரியாமல் தீய சக்திகளின் உருவமாய் வளந்தான்....
விக்ரமன் தன் இருபதாவது வயதில் அவனுக்கு ஏவப்பட்ட படி , சாதாரண குடும்பத்து பெண்ணான இந்துமதியை காதலிப்பது போல் நடித்து திருமணம் செய்து கொண்டான் ...இந்துமதியை காதலிப்பது போல் நடிக்க ஆரம்பித்தவன்
அவளின் குழந்தை தனம் மாறாத முகம், காவியம் பேசும் கண்கள், கள்ளமில்லா சிரிப்பு, அப்பாவித்தனம் மாறாத அவளின் இயல்பு இவைகளுக்குள் அவனையும் அறியாமல் தொலைய ஆரம்பித்தான் ....அவள் குடும்பத்தில்
இருப்பவர்களின் எதிர்ப்பை மீறி அவளை காதல் திருமணம் செய்து கொண்டான்...இந்துமதி வீட்டினர் அரண்மனையில் இருப்பவர்கள் தீய சக்திகளை வழிபடுகின்றனர் என்பதை அறிந்து மகளின் விருப்பத்தை நிறைவேற்ற மறுத்து
விட்டனர்....தெய்வ வழிபாட்டில் மிகுந்த ஈடுபாடு கொண்ட அவர்களால் மகளின் காதலுக்கு சம்மதம் சொல்ல இயலவில்லை...
திருமணத்திற்க்கு பின் விக்ரமன் அவளை மிகவும் நேசிக்க ஆரம்பித்தான்..... இந்துமதிக்கு அப்போது 16 வயது....அவளை கொல்ல வேண்டும் ..அதற்குத்தான் அவளை திருமணம் செய்தது என்ற எண்ணம் எல்லாம் அவனுக்குள் மறைய
,மறக்க ஆரம்பித்தது....நிலா போன்ற அவள் முகத்தை கண்டு கொண்டே இருக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்ற ஆரம்பித்தது.....
ஆனால் .....................இன்னும் 5 தினங்களில் அவளை பலி கொடுக்க வேண்டும் என்று மாந்த்ரீகன் கூறும் வரை அந்த நினைப்பே அவனுக்கு வரவில்லை.....அவன் நினைவு படுத்தியவுடன் அவனால் அவள் இல்லாமல் கற்பனை செய்து
கூட பார்க்க முடியவில்லை.....
நீ ஒரு சாதாரண மனுஷன் இல்ல....நாலு கிரங்கள் ஒரே நேர்கோட்டுல சந்திக்கிற நேரத்துல பொறந்தவன். உனக்கு உன் தந்தை மந்திர வித்தைகளை சொல்லிகுடுக்க சொன்னப்போ மறுப்பேதும் சொல்லாம நான் கற்று கொடுக்க காரணம்
நீ அபூர்வமானவன் அதுக்காக தான்....
ஆனா உன்ன அவ வழியா தெய்வ சக்தி திசை திருப்புது....அது உனக்கு புரியாத படி நீ அடிமையா இருக்க....அவள் மீது நீ கொண்ட காதல் உன்னோட இலக்கை அடைய விடாமல் தடுக்குது .
அவனால் எதையும் மறுத்து கூற முடியவில்லை...அது தான் நிஜம் என்பது அவனும் அறிந்ததே ..அவன் அனைத்து வித்தைகளை கற்றும் அவள் முன் தோற்று போனான்.... தெரிந்தே, விரும்பியே தான் தோற்று போனான்....
அதே சோகத்தோடு அரண்மனையில் தன் அறையில் நுழைந்தவன் மனைவி எதிரில் வந்ததை கவனிக்க வில்லை....
அத்தான் ! ...............என்ன மதி... " ஏன் உங்க முகம் வாடிருக்கு "....." அதெல்லாம் ஒன்னும் இல்ல மா"....
அவன் தன்னிடம் எதோ மறைப்பதாக தோன்றியது அவளுக்கு...அதன்பின் அவனிடம் எதுவும் கேட்டு கொள்ளவில்லை..உங்களுக்கு குடிக்க எதாவது எடுத்துட்டு வரட்டுமா....இல்ல வேண்டாம் ...எனக்கு கொஞ்சம்
தலைவலியாய் இருக்கு...நான் மேல போய் ஓய்வெடுத்துகிறேன்....
நான் தைலம் ஏதாது தேய்த்து விடவா அத்தான் ...."இல்ல மா கொஞ்ச நேரம் தூங்குனா எல்லாம் சரி ஆகிடும்..."
என்று கூறிவிட்டு மேலே சென்று விட்டான்...
எதோ சரில்லை என்று மட்டும் தோன்றியது அவளுக்கு....கோயிலுக்கு சென்று வருவோம் என்று எண்ணியவள் அருகில் உள்ள கோயிலுக்கு சென்று மனதுருக கணவனுக்காக வேண்டினாள்...."தாயே என் மேல் உயிரையே
வைத்திருக்கும் அன்பான கணவனை எனக்கு கொடுத்தாய்... என்னை பெற்ற்றவர்கள் பேச்சை மீறி நான் திருமணம் செய்து கொண்டேன்...அவர்கள் என் கணவரையும் அவர் குடும்பத்தாரையும் நல்லவர்கள் இல்லை எதோ ஒரு
காரணத்திற்காக தான் என்னை காதலிப்பது போல் நடிக்கிறார் என்று கூறினர்...ஆனால் இதை என மனம் ஏற்க மறுத்தது... அவரிடம் உண்மையான அக்கறையை உணர்ந்தேன்...நேசத்தை உணர்ந்தேன்...அவர் நினைத்திருந்தால் எந்த
நாட்டு இளவரசியையாவது விரும்பி மனந்திருக்கலாம்....ஆனால் எதுவும் இல்லாத என்னை விரும்பினார்...இவரே எனக்கு எல்லா ஜென்மத்திலும் கணவராக வேண்டும் தாயே ! அவரோட மனதில் ஏதோ கவலை இருப்பது போல்
தெரியுது...அது என்னனு எனக்கு தெரில.....அந்த பிரச்சனைகளை நீங்க தான் தீர்த்து வைக்க வேண்டும்..எனக்காக .. "வேண்டி முடித்தபின் மன நிம்மதியுடன் கணவன் வீட்டிற்கு திரும்பினாள்.விக்ரமன் அறையில் இருப்பது தெரிந்து
மாந்த்ரீகன் கீழே அவன் தந்தையுடன் சதித்திட்டம் தீட்டினான்....
உன் மகனை இனிமேல் நம்பி பயனில்லை.....அவன் அந்த பெண்ணை பலியிடுவான் என்பது முடியாத விஷயம்.....அவள் மீது கொண்ட காதல் அவன் கண்ணை மறைத்து விட்டது....இனி அவனை நம்பினால் உன் வம்சம் அழிந்துவிடும்
அவனுடன் சேர்ந்து.....
இப்போ என்ன பண்ணனும் னு சொல்லுங்க....ஏதாது பண்ணி என் உயிரை காப்பாத்துங்க.....இதுக்கு வேற வழியில்லையா ?
ம்....இருக்கு...ஒரே ஒரு வழி.. என்னது அது?
அவன் உடம்புக்குள்ள நான் நுழைந்து அவளை பலியிடுவது தான் ஒரே வழி.
அது எப்படி சத்தியம்....அவனும் உங்களை போல மாந்த்ரீக வித்தைகளை அறிந்தவன் தானே...
ஹா ஹா ஹாஹா ............நான் அவனுக்கு குரு...குரு அறியாத வித்தை உண்டோ.....அதையெல்லாம் நான் பார்த்துகிறேன்.....நீ நான் சொல்லுவதை போல் செய் என்று இருவரும் திட்டம் தீட்டினர்.
அறைக்குள் இருந்த விக்ரமன் நீண்ட யோசனையில் இருந்தான்....அவனால் தன் உயிருக்கு உயிரானவளை கொல்ல இயலாது என்பதில் தீர்மானமாய் இருந்தான்...அதற்கு பதில் அவளுடன் சிறுது காலம் வாழ்ந்து விட்டு மடிவதே
மகிழ்ச்சி என்று எண்ணினான்.தன்னுடைய தந்தை, தன் வம்சத்தவர் எதை பற்றியும் அவன் நினைக்கவில்லை.தன்னவளுடன் வாழ்ந்து பார்க்க விரும்பினான்....
விக்ரமா..........தந்தையின் அழைப்பில் எழுந்தவன் என்ன என்பது போல் பார்த்தான்....
உன்னோட உணர்ச்சி எனக்கு புரியுது.....நீ அவளை மிகவும் நேசிக்கிறனு தெரியுது....உன் குருவும் அதை பத்தி தான் பேசினார்....அப்பா என்னால அவளை எதுவும் பண்ண முடியாது...என் உயிர் அவ...என் உயிரே போனாலும் அவ நான்
பாதுகாப்பேன்......
ம்....புரியுதுப்பா....அதுனாலதான் அவரு இந்த சாபம் போக்க வேற வழி ஒன்றை சொன்னார்...
என்னது அதுனு சொல்லுங்க.....நான் என் உயிரை குடுத்தாது பண்றேன்....ஆனா அவளை என்னால் இழக்க முடியாது...அது ஒன்னும் இல்ல ..நீயும் உன் குருவும் அவர் சொன்ன அந்த 60 ம் நாள்ல ஒரு பூஜை பண்ணனும் தனியா....அதை
எப்படி பண்ணனும் னு அவரு சொல்லுவாரு உனக்கு...
அதை கேட்டவன் மிகவும் மகிழ்ந்தான் . தன்னவளுடன் எந்தத்தடையும் இல்லாமல் வாழ போவதை எண்ணி அவன் தந்தை கூறியதை ஆராய்ந்து பார்க்க தவறினான் ...
அறுபதாவது நாளும் வந்தது.....விக்ரமன் மனம் முழுக்க இந்துமதி நிறைந்திருந்தாள் ..அவள் முகத்தையே நோக்கியவாறு நின்றிருந்தான்....என்ன அத்தான் ஏன் என் முகத்தையே பார்த்துட்டு இருக்கீங்க? என்னைக்கும் விட அதிகமா
இன்னைக்கு உன் முகத்துல ஒரு பூரிப்பு தெரியுது..உன் கிட்ட எதோ ஒரு மாயம் இருக்கு...அது என்னனு கண்டு பிடிச்சிட்டு இருக்கேன்...சீக்ரம் உன் மாதிரியே எனக்கு ஒரு பெண் குழந்தை வேணும்.ம்கூம் .எனக்கு உங்கள மாதிரியே ஒரு
குட்டி இளவரசர் வேண்டும்....இல்ல முதலில் நான் கேட்டது தான்.
...சரி அது இன்னும் சில மாதங்களில் தெரிந்துவிடும்............
என்ன..............நீ............நான் அப்பா வாக போகிறேனா!!!!!!!!!!!!!நீ சொல்றது நிஜமா மதி...
ம்....ஆமாம் அத்தான் ...உங்க கிட்ட இந்த விஷயம் நாளைக்கு தான் சொல்றதா நினைத்தேன்..ஏன்?
நாளைக்கு தானே உங்களுடைய பிறந்த நாள்...உங்களுக்கு பரிசாக இதை சொல்லலானு நினைத்தேன்....
ஆனா உங்க கிட்ட என்னால எதையும் மறைக்க முடியல....
உனக்கு என்ன வேணுன்னு கேளு ..மதி நீ என்ன கேட்டாலும் பண்றேன்....நீ எனக்கு மிகப்பெரிய பரிசை குடுத்துருக்க.....
எனக்கு நீங்க தான் வேணும் என் கூட எப்பவும் இருக்கனும் ...எல்லா பிறவியிலும்!!!!!!!!! ஏனோ அவளையும் அறியாமல் கண்களில் கண்ணீர் வந்தது..ஏய் ! என்ன ஆச்சு எதுக்கு அழுற ..தெரில அத்தான் ..என் கூட எல்லா பிறவியிலும்
இருப்பீர்களா....என்ன இது இன்னும் நாம எவ்வளவோ வாழ வேண்டி இருக்கு...நம்ம குழந்தைங்க, அப்புறம் பேரன் , பேத்திகளை கொஞ்ச வேண்டி இருக்கு...நீ என்னனா நாம வாழ்ந்து முடிச்ச மாதிரி பேசுற...
நான்................கேட்டதுக்கு பதில் சொல்லுங்க......நீயே என்ன வெறுத்தாலும் உன்ன விட்டு நான் எங்கயும் போக மாட்டேன்.....நீ தான் எனக்கு எல்லா ஜென்மத்துலயும் பொண்டாட்டி..
நான் ஏன் உங்கள வெறுக்க போறேன்...விளையாட்டுக்கு கூட அப்படி சொல்லாதீங்க...நெருப்புனா சுட்டுடுமா என்ன............
அவர்கள் சொன்ன வார்த்தைகள் தான் அவர்களுக்கு நடக்க போகிறது என்று அவர்களுக்கு அப்போது தெரியவில்லை.....